குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Thursday, May 14, 2020

மகாபாரதமும் வாழ்க்கையும்

கதைகள் மனதிற்கு எம்மைச் சூழ நடப்பவற்றைப் புரிந்து கொள்ள இருக்கும் மாதிரியுருக்கள் (Metaphors). 
கதை சொல்லுதலும், கேட்டலும் ஒரு இன்பமான அனுபவம்! கொரோனா தொடக்கிய நற்செயல்களில் ஒன்று வீட்டில் மகளிற்கு கதை சொல்லுதல்! இது சித்தப்பாவிற்கு தினசரி சிறப்புக் கடமை! சித்தப்பா இல்லையென்றால் எமது கடமையாக்கப்படும்! 
மகாபாரதத்தை விஞ்சிய கதை எதுவும் இருக்க முடியாது; நடந்து முடிந்தது, நடக்கப்போவது அனைத்தையும் தொகுத்து எழுதப்பட்டது தான் மகாபாரதம்!
இது இப்படி நடந்தது என்று கூறுவது இதிகாசம்! மகாபாரதம் இதிகாசம்! 
அம்ருதவர்ஷினியின் கதை கேட்கும் படலத்திற்கு தேர்ந்தெடுத்த நூல் மகாபாரதம்! இதில் நான் சொல்ல வேண்டி வந்த கதை யுதிஷ்ரரின் துயரம், இந்திர லோகத்திற்குச் சென்ற அர்ஜுனனை எண்ணி யுதிஷ்டிரர் வீணாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க தௌம்ய முனிவர் வந்து அவரைத் தேற்றி வீணாக கவலைப்படாமல் இந்தக் காலப்பகுதியை அர்ஜுனன் பல்வேறு கலைகளை பயில பயன்படுத்துகிறான், நீங்கள் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று தபஸ் செய்யுங்கள் என்று வழிகாட்டுகிறார். அதன் படி யுதிஷ்டிரர் 12 நாட்கள் தபஸ் செய்து கிருஷ்ணனின் தரிசனம் பெறுகிறார். 
இந்தக்கதை முடிந்தவுடன் கதைக்குரிய நீதி என்னவென்பதை விளக்க வேண்டுமல்லவா? 
எமது அன்புக்குரியவர்கள் எம்மை விட்டுப்பிரிந்து சென்றால் அவர்களை எண்ணிக் கவலைப்படுவதை விடுத்து அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் அதேவேளை நாம் எம்மை முன்னேற்றிக்கொள்ளத் தேவையான பயிற்சிகளை, முயற்சிகளை செய்துகொண்டிருக்க வேண்டும், வீணாக கவலைப்படுவது சக்தியை விரயம் செய்யும் பயனற்ற செயல் என்பதுதான்! 
மகாபாரதம் பாரதத்தின் சமூக மனதைக் கட்டமைக்கும் கதைக்களஞ்சியம்!

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...