குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 20, 2023

மாணவர்களின் மன நிலை வளர்ச்சியும் ஒழுக்கமும்!

 

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை கண்டபொழுது ஏற்கனவே சிந்திக்கப்பட்ட சில விஷயங்களையும் சேர்த்து இந்தப் பதிவை எழுதலாம் என்று எண்ணத் தோன்றியது!

அண்மையில் எனது நண்பர் குழுவொன்று உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது; அதன் முடிவில் பின்னூட்டம் பெறப்பட்ட போது ஒரு மாணவன் தமக்கு மதிய உணவிற்கு சிக்கர் பிரியாணி வழங்கப்படவில்லை என்று கடுமையாக விமர்சித்து பின்னூட்டம் எழுதியிருந்தான்! அதைப் படித்த போது அவன் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எழுதியது போல் தோன்றினாலும் அடிப்படையில் வாழ்க்கையில் அடுத்த மாதம் பரீட்சை எழுதி சித்திபெறவேண்டிய முக்கியமான ஒரு நிலையில் இருந்து கொண்டு இப்படிச் சிந்திக்கிறானே என்ற கவலையும் வந்தது!

அதுபோல் சாதாரண தரத்தில் மிக நல்ல பெறுபேற்றினைப் பெற்ற ஒருமாணவன் உயர்தரம் தொடராமல் வேலைக்குப் போகிறேன் என்று சொல்ல இன்னுமொரு நண்பன் உனக்கு என்ன பிரச்சனை வீட்டில் கல்விக்கு செலவழிக்க முடியாதா? நாங்கள் உதவுகிறோம் என்று கேட்க, அவன் சொன்ன பதில் பகீர் என்றது. தனது கல்விச் செலவு போக தனிப்பட தனக்கு எப்படியாவது மாதம் 20000/= தனிப்படச் செலவு இருக்கிறது; அதையும் நீங்கள் தருவீர்களா? என்று கேட்டு எனது நண்பனுக்கு தலையில் நெருப்பு அள்ளிக் கொட்டினான் அந்த மாணவன்! 20000/= தனிப்பட செலவு வைத்திருக்கும் பெரிய மனிதனாகிவிட்டன் அவன்!

இவையெல்லாம் பிள்ளைகளை சிறுவயதிலிருந்து நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கு என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால் வரும் வழுக்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இப்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்லும் ஒரு விஷயம் பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியாது என்பது! ஆனால் அது உண்மையல்ல! இப்போது உள்ள இளைஞர்களுக்கு நேரம் செலவழிக்க பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நேரம் இல்லை! அந்த நேரத்தை யூடியுப், பேஸ்புக், திரைப்படம் மாணவர்களது மனதிற்கு பெற்றோராகவும், ஆசிரியராகவும் இருந்து வழிகாட்டுகிறது என்பதே உண்மை!

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தமது ஆய்வுகளிலும் பட்டங்களிலும் வெளி நாட்டுப்பயணங்களிலும் குறியாக இருக்கிறார்கள்!

பாடசாலையில் ஆசிரியர்கள் தமது வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்ற கவலையில் இருக்கிறார்கள்

பெற்றோர்களுக்கு உழைப்பும், பணிச்சுமையும்!

ஆகவே ஒரு பிள்ளையின் value system இனை கட்டமைக்கும் பணியை சமூக ஊடகங்களும், திரைப்படங்களும், டிக் டொக் வீடியோக்களும் எடுத்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...