குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 22, 2023

காலபைரவ தியானம் – 21

 

ஒருவன் வாழ்வதற்கு எவ்வளவு செல்வம் தேவையோ அவ்வளவு செல்வம் அவன் பெற்றிருக்க வேண்டும். மூச்சு முட்டும் அளவிற்கு ஒருவன் சந்தோஷப்பட்டான் என்றால் அவனுடைய நுரையீரல் நிறையும் வரை என்று அர்த்தம்; செல்வம் எமக்கு தேவையான அளவு எமது வாழ்வை நடாத்தும் அளவிற்கு நிறைந்திருக்க வேண்டும்.

அதுபோல் ஒருவன் வாழ்க்கை மற்றவர்களோடு தொடர்பு பட்டு, இன்புற்று இருக்க வேண்டும் என்றால் அவன் வாழ்வில் மொழியறிவு அவசியம். எம் தாய்மொழியைப் பொறுத்தவரையில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் ஒருவன் வாழ்க்கையில் இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை இன்புற முடியாது.

பைரவர் சொர்ணாகர்ஷண பைரவராக எமக்கு பரிபூரண லக்ஷ்மி கடாக்ஷம் தரக்கூடியவர்! அதுபோல் அக்ஷரம் என்ற எழுத்துக்கதிபதியாகவும் இருக்கக்கூடியவர்.

இப்படி நாம் பெறும் கல்வியையும் செல்வத்தையும் மற்றவர்களுக்கு எள்ளளாவாவது கொடுத்து உண்டு இருக்க மனம் வேண்டும்.

பைரவ உபாசனையால் தேவையான அளவு செல்வமும், கல்வியும், அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து வாழும் தியாகப் பண்பும் வாய்க்கும் என்பது இந்தப் பாடலின் பொருளாம்.

முட்டுற வாழும் பெருஞ்செல்வமும்

மும்முத் தமிழ்க்கல்வியும்

எட்டுணை யேனுங் கொடுத்துண்

டிருக்க வெனக்கருள்வாய்

வட்ட மதிசடையானே சிகர

மலைக்கமர்ந்த

சட்ட முடையவனனே

காழி யாபதுத் தாரணனே

வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகும் அளவுக்குச் செல்வமும்,

வாழ்க்கை இன்பமுற தெளிவுற இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும்

இப்படிக் கிடைக்கும் செல்வத்தையும் கல்வியையும் எள்ளளவாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழும் பண்பும்

எனக்கருள்வீர் பைரவப் பெருமானே!

அழகிய வட்டவடிவ சந்திரனும், சடையும், கையிலாயச்

சிகரத்தில் அமர்ந்த தோற்றத்தில் இருக்கும் சட்டை நாதர் இருக்கும் சீர்காழிப் பதியில் இருக்கும்

ஆபத்து தாரண பைரவரே உம்மை நாம் தியானிக்கிறோம்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 08}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...