குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 26, 2022

மந்திர சாதனை


எந்தவொரு மந்திரத்தினதும் ஆற்றல் வாழ்க்கையை நடாத்துவதற்குரிய அதன் (சூக்ஷ்ம) பகுதியிலிருந்து வருகிறது.

(எனவே) மந்திரங்கள் வெறுமனே இயந்திர கதியில் ஜெபிப்பதற்குரியது அல்ல. மந்திர சாதனையின் எண்ணக்கரு அதை வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்து அனுபவிப்பதற்கானது. உண்மையான சாதனை என்பது அந்த மந்திரத்தின் சத்தியத்தை அனைத்து நேரங்களிலும் உணர்ந்து கொண்டு செயலாற்றுவது.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

ஸ்ரீ ஸக்தி சுமனனின் சாதனை விளக்கம்

*****************************

மேற்கூறிய உபதேசத்தை விளங்கிக்கொள்ள ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை உதாரணம் எடுத்துக்கொண்டால், ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் ஆற்றல் ஸவிதா என்ற பேரொளி மண்டலத்தில் இருந்து சூரியன் மூலம் பூமிக்கு வருகை தருகிறது. இந்த ஆற்றல் எமது புத்தியைத் தூண்டுகிறது.

ஆகவே ஒருவன் காயத்ரி ஜெபத்தின் போதும், தினசரி சாதனையின் போதும் அந்தப் புத்தியைத் தூண்டும் பேரோளி எம்முள்ளும் புறமும் நிறைந்து எம்மை வழிகாட்டும் பாவனையை உணர வேண்டும். இப்படி தனக்குள்ளும், வெளியிலும் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளி நிறைவதை உணர்ந்து காயத்ரி சாதனை செய்பவன் தனது வாழ்க்கையை பிரபஞ்ச ஒழுங்கான ரிதம் பிரக்ஞைக்கு ஒத்திசைவாக்குவதால் பேரறிவினை அடைகிறான். காயத்ரி சாதகன் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலிலும் தான் அந்தப் புத்தியைத் தூண்டும் பேரொளியால் வழி நடாத்தப்படுகிறேன் என்ற உணர்வுடன் செயற்படுவது காயத்ரி மந்திர சித்திக்கு வழி வகுக்கும்.

எமது சாதனை உபதேசங்களில் காயத்ரி சித்த சாதனை என்ற பகுதி இதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு மந்திர சாதனையும் எமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியை ஒழுங்குபடுத்தும் சூக்ஷ்ம சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அவற்றைச் சாதனை செய்பவர்கள் இதை உணர்ந்து சாதனை செய்ய வேண்டும்.

Tuesday, January 25, 2022

தலைப்பு இல்லை


குருவிடம் செல்லும்போது சந்தேக மனதை தூக்கி வெளியே வைத்துவிட்டு தரப்பட்ட உபதேசத்தை பயிற்சிக்க வேண்டும். இது உங்களுடைய வழமையான கருத்துக்களுக்கு/ நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கலாம், என்றாலும் இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தெரிந்ததை மாத்திரமோ, பிடித்ததை மாத்திரமோ குரு உங்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் வளர மாட்டீர்கள்.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

********************************************

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு:

மேலே குறிப்பிட்டதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்; குருவிடம் கேள்வி கேட்கக் கூடாது என்றோ, சொல்வதை எல்லாம் நம்பிக்கொண்டு பகுத்தறிவு இன்றி செயற்படுவதையோ இது குறிக்கவில்லை. முதலாவது தரப்பட்ட பயிற்சியை முறைப்படி சுய அனுபவத்தைப் பெற வேண்டும். அதன் மேல் கேள்விகளைக் கட்டமைத்து தனக்குள் கேள்வி கேட்டு அவதானிப்பதன் மூலம் பதில் பெற வேண்டும்.

ஒரு பயணத்தின் வரைபடத்தை வைத்துக்கொண்டு வழிகாட்டியை இந்த இடத்தில் என்ன இருக்கிறது? அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்டுத் துளைக்காமல், வழிகாட்டியிடம் வரைபடத்தைப் பெற்றுக்கொண்டு சுயமாக, கூர்ந்து கவனித்துக்கொண்டு தானாக பயணத்தை பயிற்சிக்க வேண்டும். அவதானிக்க வேண்டும். தன்னுடைய பயண அனுபவத்தைத் தொகுத்து ஏற்கனவே பயணித்து பயணத்தை பூர்த்தி செய்துள்ள வழிகாட்டியான குருவிடம்  உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த உபதேசத்தின் விளக்கம்.

தலைப்பு இல்லை

 

"எனது விழிப்புணர்வே எண்ணத்திற்கு ஆற்றலைத் தருகிறது. எனது விழிப்புணர்வு பூதக்கண்ணாடி போன்றது, அது எதில் ஏகாக்கிரம் கொள்கிறதோ அதைப் பெருக்குகிறது. அதை வெளிப்படுத்துகிறது. ஆகவே நான் எனது விழிப்புணர்வை தீய எண்ணங்களுக்குத் தரமாட்டேன்; அவை ஆடம்பரமாக ஒரு போதும் வாய்ப்பளிக்க மாட்டேன். ஏனென்றால் அவை விழிப்புணர்வினால் போசிக்கப்படுகின்றது, விழிப்புணர்வின் மேல் வளர்கின்றன, அவை எப்படி தன்னை குறிப்பிட்ட ஒன்றாக அடையாளப்படுத்தி வளர்கின்றனவோ அவற்றையே ஆகர்ஷிக்கின்றது".

அம்ருதோப நிஷத்

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

***************************************

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு;

விழிப்புணர்வு என்பது எம்மை ஒன்றுடன் அடையாளப்படுத்தி மனதை அதனுடன் தொடர்புடையவற்றுடன் ஈடுபடுத்தும் நிலை! நான் என்னை யோக சாதகன் என்று விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் மனம் யோக சாதனைக்குரிய எண்ணங்களில் கவனம் செலுத்தி அவற்றை விருத்தியாக்கி என்னை யோக சாதனையில் ஈடுபடுத்தும்.

நான் என்னை ஒரு தேவி உபாசகன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் என்னை தேவி உபாசனையில் ஈடுபடுத்தி தேவியின் ஆற்றலை ஆகர்ஷித்துத் தரும்.

நான் துன்பப்பட்டவன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுதினால் மனம் துன்ப அலைகளை எழுப்பி அவற்றை ஆகர்ஷித்து துன்பமான வாழ்க்கையைத் தரும்.

Saturday, January 22, 2022

எண்ணப்புரட்சி # 04

 

நம்பிக்கையை வளர்த்தல் என்பது ஆற்றலை ஒருங்கிணைக்கும் பொறிமுறை. பொதுவாக ஒரு குழுவாக இணைந்து எந்தத்துறையில் பணியாற்றும்போதும் ஒருவர் மற்றவரை நம்பாமல் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால் அந்தக் குழு இலக்கினை நோக்கிச் செல்வதை விட்டு விட்டு ஒருவரை ஒருவர் குறைகாணும் மனநிலையும், பேச்சும்தான் அதிகரிக்கும்.

இரண்டு மாடுகள் பூட்டிய வண்டிலில் இரண்டு மாடும் ஒரே திசையில் சென்றால்தான் பயணம் பூர்த்தியாகும். ஒரு மாடு நின்றுவிட்டால் மற்ற மாடு அந்த இடத்தைச் சுற்றித்தான் வரமுடியும். சமூகமோ பலமாடுகள் பூட்டிய வண்டில். இன்று சமூகத்தில் மலிந்து கிடப்பது நம்பிக்கையீனம். எதை உருப்படியாகச் செய்யலாம் என்ற விவாதமோ, திட்டமோ, மூலோபாயமோ இன்றி வெறுமனே தமக்குள் சண்டையிட்டு ஆற்றலை இழக்கும் முட்டாள்தனம்.

முதலில் சாத்தியமான அடையக்கூடிய இலக்கு எது என்பது பற்றிய தெளிவு,

இவற்றை அடைய முடியும் என்ற கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம், கூட்டுப்பொறுப்புடன் கூடிய தலைமைத்துவம் என்பது அனைவருமாக முடிவெடுக்கிறோம், வெற்றியோ, தோல்வியோ அனைவரும் ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்ற மனப்பாங்குடன் கூடிய தலைமத்துவம். தலைவர் என்றவுடன் அவர் சர்வவல்லமை வாய்ந்த கடவுள் என்று துதிபாடும் மனநிலை அறவே நீங்க வேண்டும்.

ஒரு பாடசாலையில் அதிபருக்கும் ஆசிரியருக்கும் ஒரே இலக்கில் சிந்தனையும், செயற்பாடும் இல்லாவிட்டால் பலன் எதுவும் இல்லை.

அரசியல் தலைமைகள் ஒரே திசையில் ஒன்றுபடாமல், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையீனம் விதைத்துக்கொண்டு சமூகத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்று நினைப்பது கோமாளித்தனம்.

எமக்குள் தன்னம்பிக்கையும், எமது சமூகத்திற்கு இடையில் நம்பிக்கையையும், நாம் வாழும் இடத்தில் பல்லின சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையையும் வளர்த்தல் என்பதை படிமுறையினூடான சிந்தனை (step by step thinking process) உருவாக்கப்பட வேண்டும்.

Friday, January 21, 2022

எண்ணப் புரட்சி #03

 

இன்று நாம் அதிகாரம், அரசியல், உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இவை எல்லாம் கிடைத்தால் எமக்குள் இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கிவிட்டு ஒன்றுபட்டு ஒரு இலக்கிற்கு பாடுபடுவோமா என்று எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கேட்டுக்கொள்ள வேண்டும்.

மைய நீக்க விசை என்பது ஒரு குழுவாகச் சேர்ந்து செயற்படும்போது தமது தனிப்பட்ட அபிலாசைகளை, சுயநலங்களை அடிப்படையாக வைத்துக் குழப்பி பிரிதல். நான் பெரிது, சரி என்று முரண்டு பிடித்தல் என்பவை.

பொதுவான ஒரு கோயில் நிர்வாகமாக இருந்தாலும் சரி, பாடசாலை பழைய மாணவர் சங்கமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இறுதியாக என் வழி தனி வழி என்று கூட்டத்தைக் குழப்பிவிட்டு வெளியே வருவது முதல் படி! பிறகு தலைமையிற்கு தெரிவு செய்யப்பட்டவரை வாழ்நாள் பூராக எதிர்த்துக்கொண்டு அவர் எப்போது கவிழ்வார்! திண்ணை காலியாகும் நாம் ஏறி உட்காரலாம் என்று போராடிக்கொண்டிருப்பது என்ற வகையிலேயே அதிகாரப் போட்டி நிகழ்கிறது,

இப்படி இல்லாமல் அனைவரையும் புரிந்து, ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இலக்கினை நிர்ணயிக்கத்தெரிந்தவர்களே உண்மையான தலைமைப் பண்பு கொண்டவர்கள். இப்படி இல்லாதவர்களது ஆக்கிரோஷமான மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களிலேயே நாம் கவர்ச்சியுறுகிறோம். இப்படி சினிமாத்தனமான தலைமைத்துவம் ஒரு போதும் சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதில்லை.

ஜனநாயக அரசியலின் அடிப்படை குடித்தொகையின் எண்ணிக்கை - வாக்கு எண்ணிக்கை; ஜனநாயக அரசியலில் அதிகாரத்தைப் பெற தன் சமூகம் சார்ந்த குடித்தொகையை ஒரு மையத்தில் குவிக்கும் தலைமைத்துவ ஆற்றல் வேண்டும். அதைவிடுத்து ஒன்றுபடாமல் ஒவ்வொன்றாகப் பிளந்தால் ஆற்றல் சிதறும்.

ஒரு குழு அதிகாரத்தை அடைய முடியாமல் இருப்பதற்குக் காரணம் தமக்குள் இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கி பொது இலக்கை நிர்ணயித்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய மனம் - எண்ண ஓட்டம் - thought process - இல்லை என்பதாகும்.

யோகியும் வேடம் தரித்தலும்

யோகம் என்பது எமது எண்ணம், செயல், சிந்தனை, ஆளுமைகளை தெய்வ குணமுடையதாக உருமாற்றம் செய்யும் அகச்சாதனை; இதில் புறவேடங்களுக்கு வேலையில்லை. யோகம் பயிலும் பல சாதகர்கள் உண்மையான இலக்கினை அடைய முன்னர் மனதின் பிடியில் சிக்கி maslow's hierarchy of needs இன் Love and social belonging needs மற்றும் Esteem needs இற்குள் சிக்கி மக்களைக் கவர வேடங்கள் இட்டுக்கொள்வது உண்டு.

உண்மையான யோகியின் பண்புகள் பற்றி குருதேவர் பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யாவின் கருத்து வருமாறு:

"ஒரு உண்மையான யோகி தன்னை நாடிவருபவர்களின் வாழ்க்கையை உயர்த்தவே தனது ஆற்றல்களை உபயோகிப்பான். அவன் எந்தவிதமான மாயா ஜாலங்களையும், வேடங்களையும் காட்டி மக்களை வசியம் செய்ய நினைப்பதில்லை. அப்படியானவர்கள் யோகிகள் அல்ல; மாயாஜாலக்காரர்கள். இப்படியானவர்களுடைய செயல்கள் தன்னையறிய செய்யப்படும் உண்மை யோகசாதனையையும் கேலிக்குரியதாக்குகிறது, ஏனென்றால் இந்த மாயாஜாலங்களில் எந்தவொரு ஆன்மீகத்தன்மையும் இருப்பதில்லை."

பண்டிட் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா 

Thursday, January 20, 2022

எண்ணப்புரட்சி - 01


எண்ணம் (thought) - செயல் (action) - மனப்பாங்கு (attitute) ஆளுமை (personality) ஆகியவற்றை உள்ளிருக்கும் ஆன்மாவின் ஒளியில் தூய்மைப்படுத்தி செயலாற்றுவதே உண்மை ஆன்மீக சாதனை.

*****************************************

                இன்று மக்கள் ஆன்மீகம் என்பதை மந்திரம் ஜெபிப்பது, பூஜைகள் செய்வது, கோயிலில் விக்கிரகங்களுக்கு இலஞ்சமாக பிரசாதம் கொடுப்பது, காணிக்கை கொடுப்பது என்று தவறாக நம்புகிறார்கள். ஆனால் மக்கள் ஒருபோதும் தமது எண்ணங்கள், ஆளுமை, மனப்பாங்கு ஆகியவற்றை எப்போதும் உள்ளிருக்கும் ஆன்மாவின் ஒளியில் தெய்வீகமானதாக உருமாற்ற விரும்புவதில்லை. நேர்மையான ஆன்மீகம் என்பது இதுவே.

பண்டிட் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா -

தலைப்பு இல்லை


சித்தர்கள் உலகில் உள்ள அனைத்தும் பொருட்களும் நாதம், விந்து என்ற இரண்டாலும் ஆக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளார்கள். இந்த நாதமும் விந்துவும் கலந்தால் கலை என்ற பிராணன் உருவாகும். இதையே நாத விந்து கலாதி நமோ நம என்றார்கள்.

விந்து என்றால் ஒளி என்றும்

நாதம் என்றால் அதிர்வு என்றும்

கலை என்றால் அசைவு என்றும் அர்த்தம்.

இசை என்பது நாதமும் கலையும் உடையது; அதாவது அதிர்வும் பிராணனும் உடையது. இதனாலேயே நல்ல இசையைக் கேட்டவுடன் உடல் அசைவும், உற்சாகமும் உண்டாகிறது.

நாதத்தின் மூலம் ஓம் என்ற ஓங்காரம், இந்த ஓங்காரத்தின் விரிவு சப்தசுரம், சப்தசுரங்களுக்குள் அடங்கும் இசையை மனதை ஒடுக்கும் யோகமாகப் பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.

Wednesday, January 19, 2022

தலைப்பு இல்லை


எமது அன்பு எம்மை பலவீனமாக்கவோ, குருடாக்கவோ, அறிவற்றதாகவோ ஆக்கக் கூடாது. எமது பலம் எம்மை கடினமானவனாகவோ, பயங்கரமானவனாகவோ எம்மை மாற்றக்கூடாது. எமது கொள்கைகள் வெறித்தனமானதாகவோ, உணர்ச்சிவயப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. எப்போது அமைதியாகவும், பொறுமையாகவும், பாரபட்சமின்றியும் சிந்திக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். முழுமையாகவும், தீவிரமாகவும் அன்பு செலுத்துபவர்களாக இருக்கும் அதேவேளை ஞானமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்; வலிமையுடனும், ஆற்றலுடனும், பெருந்தன்மையுடனும் செயற்படுபவர்களாக இருப்போம்.

- ஸ்ரீ அரவிந்தர் - 

"Our love must not make us weak, blind or unwise; our strength must not make us hard and furious; our principles must not make us fanatical or sentimental. Let us think calmly, patiently, impartially; let us love wholly and intensely but wisely; let us act with strength, nobility and force."

-Sri Aurobindo

via : Dr Sampadananda Mishra Thank you

Saturday, January 15, 2022

தலைப்பு இல்லை

அண்மையில் மாத்தளையில் முதல் 20 இடங்களுக்குள் உயர்தரத்தில் மூன்று A சித்திபெற்ற ஒரு மாணவி எமக்கு அருகில் இருக்கும் ஊரில் வசிப்பவர்கள். அவரின் தாய் தனது மகளிற்கு படிப்பதற்கு மடிக்கணணி தேவை என்று வங்கிக்கு கடனுக்காக விண்ணப்பித்து கடன் எடுப்பதற்கு கூட வங்கிக்கணக்கு இல்லாத ஒரு விவசாயக் குடும்பம்! அந்த மாணவியின் ஊக்கமும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைப்பவை! தாய் பிள்ளையின் படிப்பிற்கு காட்டிய அக்கறை நிச்சயமாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த எனது நண்பர்கள் வட்டத்திற்குள் செய்தி அனுப்பினோம்!

இரண்டு நண்பர்கள் உடனடியாகப் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றுள் எமது பாடசாலைத் தோழர் Kalimuththu Naguleshwaran அவர்களது நிறுவனம் StudyBuddy உடனடியாக புதிய கணனியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இன்று பாடசாலை அதிபரூடாக குறித்த மாணவிக்கு கையளித்தோம்!

Kalimuththu Naguleshwaran மற்றும் இன்னுமொரு இளைஞரும் சேர்ந்து StudyBuddy என்றொரு கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஒரு SDT card இல் சாதாரண தரத்திற்கு தேவையான அனைத்துப் பாடங்களும் பல்வேறு ஆசிரியர்களை வைத்து காணொளி ஆக்கி தயார்படுத்தியுள்ளார்கள். இலங்கையில் நிகர் நிலைக் கல்வி என்பது உண்மையில் சாத்தியம் இல்லை என்பதை புள்ளி விபரவியல் மூலம் ஆராய்ந்து அதற்கு மாற்றாக இதை உருவாக்கி உள்ளார்கள்.

எவரும் உதவி என்று கேட்க முன்னர் உதவும் மனமுடைய மனித சமுதாயம் இருந்தால் உலகில் எவரிற்கும் துன்பமில்லை!

இந்தப் பதிவு எம்மிடம் பணமில்லாவிட்டாலும் உதவும் உள்ளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உதவலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் பகிர்வதற்கான ஒரு பதிவு

Monday, January 10, 2022

தலைப்பு இல்லை

 ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியமான ஸாவித்ரி காவியம் ஆங்கிலத்திலிருக்கும் மிகப்பெரிய காவியம்!

இதைத் தொடுவதற்கு என்ன அருகதை எனக்கு இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தால் ஸ்ரீ அன்னையின் அருள் மாத்திரமே!

மகாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்ரி கதையை வைத்துக்கொண்டு ஸ்ரீ அரவிந்தர் பெரிய யோக இரகசியங்களை விபரித்து விட்டுச் சென்றிருக்கிறார்.

இதை தமிழில் அறிமுகப்படுத்த அகத்திலிருந்து ஸ்ரீ அரவிந்தரும் ஸ்ரீ அன்னையும் உத்தரவிட்டதால் இதை ஒரு கடமையாக எடுத்துக்கொண்டு வீரகேசரியில் தொடராக எழுத வாய்ப்புக் கூடியது.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமும் மனமுவந்து தமது ஸாவித்ரியின் மீதான எனது புரிதலையும் எழுதுவற்கு ஸாவித்ரி காவியத்தை பயன்படுத்தவும், ஸ்ரீ அரவிந்தரின் படங்களை இதற்காக பயன்படுத்தும் அனுமதியைத் தந்துள்ளது!

இதுவரை வெளிவந்த அத்தியாயங்கள்

பகுதி-1: https://www.virakesari.lk/article/120155

பகுதி-2: https://www.virakesari.lk/article/120537

பகுதி-3: https://www.virakesari.lk/article/120852

பகுதி-4: https://www.virakesari.lk/article/121280

பகுதி-5: https://www.virakesari.lk/article/121604

பகுதி-6: https://www.virakesari.lk/article/122039

பகுதி-7: https://www.virakesari.lk/article/122437

தலைப்பு இல்லை

இன்றிலிருந்து தினகரன் பத்திரிகையில் புதிய மொழிபெயர்ப்பு கட்டுரைத் தொடர்.

இசை பற்றிய யோக நுணுக்கங்கள் இந்தத் தொடர் அலசி ஆராயும்.

இசை என்பது மனதைச் செம்மைப்படுத்தும் ஒரு யோக சாதனை; அதை எப்படி ரிஷிகள் பாடல்களுடன் பயன்படுத்தி ஆனந்தம் அடைந்தார்கள் என பல சுவாரசியமான கருத்துக்கள் பகிரப்படும்.

Wednesday, January 05, 2022

தலைப்பு இல்லை

நேற்றைய சக்தி தொலைக்காட்சி உரையாடல், கிழே comment இல்!

youtube காணொளியை பகிர்ந்தால் மார்க் சுக்கப்பனுக்கு பிடிக்காது! பலருடைய கண்களில் இருந்து மறைத்துவிடுகிறான்.

நன்றி தம்பி Hari Arul

Tuesday, January 04, 2022

தலைப்பு இல்லை

இன்று காலை 0700 மணிமுதல் சக்தி தொலைக்காட்சியில் இலங்கையின் விவசாயத்துறைப் பிரச்சனைகளைப் பற்றிய என்னுடைய உரையாடலை கேட்டவர்கள் யார்?

உங்கள் அபிப்பிராயம் பகிருங்கள்!

Monday, January 03, 2022

தலைப்பு இல்லை

 Hatha Yoga Pradipika Study Group

English & Portuguese

Interested people please contact

Every Monday 0515 AM - 0700 AM Indian Tima Zone/Sri Lanka

Saturday, January 01, 2022

தலைப்பு இல்லை

 மனிதனது முன்னேற்றத்திற்கு, உயர்விற்குத் தடை தனது அனுபவங்களைத் தொகுத்து அறிவாக்கி அவற்றைப் பார்த்துப் பூரிதம் அடைந்து தன்னை அதே நிலையில் தேங்கிய குட்டையாக்கிக் கொள்வது!

சுருங்கச் சொன்னால் நான் சாதித்துவிட்டேன் என்று நினைப்பது முன்னேற்றத்திற்குத் தடையானது! சாதித்தோம், அடைந்தோம் என்பது குறித்த காலத்தில் மாத்திரமே அடையப்பட்ட நிலை; காலம் மாறும் போது அது அற்றுப் போகிறது.

இப்படித்தான் பலரை நாம் பார்க்கிறோம்; குறிப்பாக எனது அனுபவத்தில் இளமானிப்பட்டம் படித்த பல மாணவர்கள் தாம் பெரிதாக வெட்டிப் பிடுங்கியதாகவும், தமக்கு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்குடன் வேலை தேடிவந்து அரசாங்கம், நிறுவனம் கொடுக்கும் என்று கனவு காணும் வலிமையற்றவர்களைத்தான் பார்க்கிறோம்.

இன்னுமொரு சாரார் எப்படியாவது பென்ஷன், வாழ்க்கை settle ஆகிவிட வேண்டும்; வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது.

செயல் புரிவதில் சலிப்பு இருக்கக்கூடாது; புதுப்புது அறிவினைத் தேட வேண்டும்! அவற்றின் மூலம் எம்மை உற்சாகப்படுத்தி புதுப்புது நிலையை அறிவு, செல்வம், ஆற்றல், அதிகாரத்தில் அடையவேண்டும். நாம் செய்தவற்றை check & Balance பார்ப்பது அடுத்த வருடம் அதைவிட பல மடங்கு அதிகமாக செயல் புரிவதற்குரிய அடித்தளத்தினை உருவாக்குவதற்காக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் நாம் எமது அகத்திலும் புறத்திலும் புதிய நிலையை, முன்னைய ஆண்டை விட உயர்ந்த நிலையை அடைய சங்கல்பம் கொள்வோம்!

ஆகவே சென்ற வருடம் சாதித்தது, அடைந்தது என்ன என்பதை கணக்குப் பார்த்து சமப்படுத்தி பூச்சியமாக்கிவிட்டு இந்த வருடம் முன்னைய வருடத்தை விடப் பலமடங்கு எப்படி உழைப்பது, உயர்வை அடைவது என்பதைப் பற்றி இன்றிலிருந்து சிந்திப்போம்.

தலைப்பு இல்லை

 நண்பர் ஒருவர் நடிகரும், இயக்குனரும், எழுத்தாளருமான திரு. பாக்கியராஜ் அவர்களுக்கு எமது "யோகமும் இயற்கையும்" நூலை புத்தாண்டு பரிசாக அளித்துள்ளார். ஆர்வமாக 

பொருளடக்கத்தை உடனே புரட்டிப்பார்த்து "content நல்லா இருக்கே, கட்டாயம் படிக்கிறேன்" என்றாராம்!

புத்தாண்டில் பிரபலங்கள் கையில் யோகமும் இயற்கையும்.

தலைப்பு இல்லை

 2021 ஆம் ஆண்டின் 53 வாரங்களும் தினகரன் சைவ மஞ்சரியில் ஹம்ஸ யோகம் என்ற நூலின் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

பிரணாயாமம், வாசி யோகம் பயில்கிறேன் என்று சொல்லுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொடர் இது. 

அனைத்துக்கட்டுரைகளும் Album ஆக வாசகர்களிற்கு புத்தாண்டுப் பரிசாக இங்கே!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...