குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 06, 2023

சென்னை ஏன் மூழ்கியது?

  



சிங்காரச் சென்னை உலகின் மிகப்பெரிய அறிவாளிகளை உருவாக்கிய நகரம்! ஆனால் அடிப்படையில் அரசியலால் நகர திட்டமிடலில் கோட்டை விட்ட நகரம்!

பெய்யும் மழை முதலில் மண்ணிற்குள் ஊடுவுருவி நிறையும், இப்படி மண்ணின் துளைகளையெல்லாம் நிறைத்து நிலத்தடி நீராக மாறும்! கனதியான மழையை உள்ளே உறுஞ்சி நிலத்தில் பொசிய விடும் வேலையை அங்கு உள்ள காடு, பயிர்கள் செய்யும்!

மண் தன்னை நிரப்பியவுடன் வெள்ள ஓட்டத்தை ஆரம்பிக்கும்! இப்படி ஓடும் வெள்ளமெல்லாம் மேற்பரப்பில் மனிதன் உருவாக்கி வைத்த கழனி - வயல், குளம், ஏரி இவற்றில் நிறைந்து வெள்ளம் வராமல் தடுக்கும்!

ஆக நகரமைப்பில் மழை வேகமாக மண்ணைத் தாக்கி வெள்ளம் வராமல் இருக்க காடும், குளம், ஏரிகளும் அவசியம்! இவை இரண்டுமே flood buffer. இவை இரண்டும் தனது கொள்ளளவினை அடைந்தவுடன் வடிகால் அமைப்பு மிகுதி நீரை கடலிற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

நாம் எல்லாம் முன்னேறிய ஜென்மங்கள், அதிகரித்த சனத்தொகைக்கு வீடு கட்டி சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு நிலத்தைக் கொங்கிரீட் காடு ஆக்கும் போது நிலத்தடி நீரிற்கு செலுத்தக்கூடிய பொறியல் அமைப்பும், குளம் அற்றுப் போவதால் வரப்போகும் வெள்ளத்தினை வெளியேற்றும் வடிகால் எல்லாம் சிந்தித்து மீள் கட்டமைக்க வேண்டும்.

கடலோடு சமவுயரத்தில் அல்லது சிறிய சாய்வில் இருக்கும் நகரத்திற்கு பெருமழையில் வரும் வெள்ளத்தைக் கொண்டு செல்ல நுண்மையான பொறியியல் உழைப்புத் தேவை!

சென்னைக்கு ஏன் வெள்ளம் வந்தது என்றால் மழை அதிகமாகப் பெய்தது என்பது சரியான காரணம் அல்ல! மழையை அதிகமாக் பெய்யவோ, குறைவாகப் பெய்ய வைக்கவோ மனிதனால் இன்னும் முடியவில்லை! மனிதன் தனது பகுத்தறிவினைப் பயன்படுத்தி அறிவியலைப் பயன்படுத்தி சரியாக இயற்கையின் இயக்கவியலைப் புரிந்துகொண்டு திட்டமிட்டு தனது பிரச்சனைகளைக் குறைக்க வேண்டும்!

உண்மையான பகுத்தறிவு என்பது மற்றவர் நம்பிக்கையைக் கேலி செய்வதல்ல! ஒரு பிரச்சனையின் காரணத்தை பகுத்து ஆராய்ந்து தெளிவை அடைவது!

மேலே சொன்ன உண்மையை வேளச்சேரி ஏரி எப்படிச் சுருங்கியது என்பதை படத்தைப் பார்த்து அறிவதன் மூலமும் அங்கு சென்று வெள்ளத்தைக் குறைக்க வேண்டிய நீரே ஊரெல்லாம் திரிந்து ஆடியது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்! இப்படிப் பல ஏரிகள், வயல்கள் எல்லாம் கொங்கிரீட் காடாகியதை அறிந்தால் வெள்ளம் ஏன் வந்தது? சென்னை ஏன் மூழ்கியது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...