குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 20, 2023

சைவ சித்தாந்தம்

 

சைவ சித்தாந்தம் ஒருவனின் உள் நோக்கிய - சிவத்தை நோக்கிய பயணத்தை பத்து படிகளாகப் பிரித்துள்ளது.

96 தத்துவங்களுடன் பிணைக்கப்பட்டு தெளிவற்று இருக்கும் ஆன்மா இந்த 96 தத்துவங்களையும் மூன்று நிலைகளில் சித்தி - mastery செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தத்துவத்தினதும் ரூபம், செயல் அறியவேண்டும்.

பின்னர் அந்த தத்துவங்களை அனுபவமாக அறிந்து தரிசிக்க வேண்டும்.

பின்னர் அந்த தத்துவங்களை தான் யார் என்பதை அறிய சுத்தி செய்து பளிங்கு போல் ஆக்க வேண்டும்!

இப்படி 96 தத்துவங்கள் சுத்தியானால் பயணம் இன்னும் அகவயப்பட்டு ஆத்மாவின் ரூபம் என்ன என்ற அறிவும், அதை நேரடி அனுபவமாக அனுபவிக்கும் தரிசனமும் பெற்று ஆன்மா பற்றுக்கள் நீங்கி ஆன்ம சுத்தி நிலையை சாதகன் பெறுவான்.

இந்த நிலை பெற்ற பிறகு தான் அவனுக்கு சிவத்தைப் பற்றிய அறிவு அகத்தில் உதிக்க ஆரம்பிக்கும். இந்த அறிவு முதலில் சிவ ரூபம் எனும் சிவத்தின் இலட்சணங்கள் என்ன என்று புரிந்து சிவ தரிசனம் கிட்டும்! பிறகு சாதகன் தனது மனம் என்ற கருவியை ஏகாக்ர நிலைக்கு பழக்கி ஸமாதி என்ற நிலையை எட்டும் சிவயோக சாதனை புரிந்தால் இறுதியில் தானும் சிவமும் வேறல்ல என்ற இரண்டற கலந்த சிவபோக நிலை அனுபவமாக வாய்க்கும்!

எவருக்காவது இந்த தத்துவ விளக்கங்கள், தசகாரியங்களின் ஒவ்வொரு நிலையையும் அனுபவ விளக்கமாக படிக்க விருப்பமாக இருந்தால் கீழே பதிவிடுங்கள்! உரையாடல் ஆரம்பமாகும் போது இணைத்துக்கொள்ளலாம்!

May be an image of text that says 'சர்வ ஞான உத்தர ஆகமப்படி தசகாரியம் எனும் சிவயோகத்தின் படி நிலைகள் சிவ போகம் சிவ யோகம் சிவ ரூபம் சிவ தர்சனம் ஆத்ம சுத்தி ஆத்ம ரூபம் ஆத்ம தரிசனம் தத்துவ சுத்தி தத்துவ தர்சனம் தத்துவ ரூபம் SRISHTI SRI SHAKTI SUMANAN INSTITUTE'

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...