குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 30, 2022

தலைப்பு இல்லை

இயற்கை விவசாயம் - இரசாயன விவசாயம்

கோட்பாட்டு வேறுபாடுகளை அறிவோம்

இன்று இயற்கை விவசாயம் என்பதை அவநம்பிக்கையுடன் தகுந்த பலனைத் தராத ஒன்றாக பலரும் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் இயற்கை விவசாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏற்கனவே நடைபெறும் இரசாயன விவசாயத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றிய சரியான புரிதல் இல்லாமல் களத்தில் செயற்படுவதாகும்.

இரசாயன விவசாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவை?

அவை எந்த அடிப்படையில் பிரயோகித்து விளைச்சலைப் பெறுகிறார்கள்?

இப்படி பிரயோகிக்கும் போது எடுத்துக்கொள்ளும் அனுமானங்கள் எவை?

இயற்கை விவசாயத்தின் கோட்பாடுகள் எவை?

இரண்டு விவசாய முறைகளுக்கும் இடையிலான பிரதான வேறுபாடுகள் என்ன?

இரசாயன விவசாயத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி உடனடியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடியுமா? அப்படி ஈடுபட முயலும் போது என்ன பிரச்சனை வரும்?

இயற்கை, சேதன விவசாயம் விளைச்சலைக் கொடுக்கவில்லை என்ற கூற்றின் அறிவியல் அடிப்படை என்ன?

இன்றைய சூழலில் அதிக உள்ளீடற்ற இயற்கை விவசாய முறை காலத்தின் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அறிவுத்தளத்தில் எமது புரிதலை மேம்படுத்துவது அவசியமாகும்.

Wednesday, June 29, 2022

நம்பிக்கை

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய சொத்து.

கணவன்- மனைவி

முதலாளி-தொழிலாளி

நண்பர்கள்

வியாபார பங்குதாரர்கள்

குரு - சிஷ்யன்

இப்படி எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறக்க முடியும்.

பொதுவாக நான் நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனால் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இப்படிச் சொன்னால் அதன் அர்த்தம் நம்பிக்கை என்றால் என்ன? உண்மையான நம்பிக்கையின் குறிகள் என்ன என்பதை அவர் அறியாமையே,

பலர் நம்பிக்கை என்றவுடன் வாயால் வடை சுட்டு மற்றவர்களை ஒத்திசையச் செய்வது என்று நம்புகிறார்கள். இது ஒருவகை ஏமாற்று வித்தை.

உண்மையான நம்பிக்கை என்பது பல குணம், தகுதி, நேர்மை, நோக்கம், அக்கறை, வெளிப்படைத்தன்மை, திறந்த மனம், திறன், அறிவு, அனுபவம், செயல்திறன், மதிப்பு போன்ற பல வேர்களைக்கொண்ட ஆலவிருட்சம் போன்றது. இப்படி முறையாக கட்டியெழுப்பப்படும் நம்பிக்கை ஆலவிருட்சம் போன்று பல ஆயிரம் பேரிற்கு நிழல்தரக்கூடியது.

நம்பிக்கையிற்கு இரண்டு பிரதான கைகள். எம்முடையதும், நாம் நம்பிக்கை கொள்ளுபவரின் குணமும், தகுதியும். இருவரும் ஒத்த குணமோ அல்லது ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் குணமோ இல்லை எனில் நம்பிக்கை வளர்வது கடினம். எடுத்ததெற்கெல்லாம் குறை கூறுவது, தவறாக பேசும் குணம் இருந்தால் அந்த நபர் மீது எவருக்கும் நம்பிக்கை வராது.

நாம் ஒருவரை குணத்தின் அடிப்படையில் நம்பினாலும் நாம் நம்பும் விஷயத்தை பூர்த்தி செய்யும் தகுதி அந்த நபரிற்கு இருக்கிறதா என்பது அவசியமான ஒன்று. பொதுவாக நல்ல குணமுள்ளவர் என்று எமது வியாபாரத்தில் அந்தப் பையனை வைத்தேன். இப்போது எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு பணம் சென்றது என்று தெரியவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டு, எப்படி என்றாலும் கள்ளம் கபடமில்லாத பையன் என்று கூறினால், அவர் தகுதியானவரை நம்பவில்லை என்று பொருள். குணத்தை மட்டுமே கருத்தில் எடுத்திருக்கிறார்.

அதேபோல் நன்றாக படித்திருக்கிறான், அறிவாளி என்று தகுதி எல்லாம் பார்த்து வேலைக்கு எடுத்த பையன் காசை சுருட்டிக்கொண்டு போய்விட்டான் என்றால் தகுதி இருந்தாலும் குணம் சரியில்லை என்று பொருள்.

ஆக நம்பிக்கை வளர குணமும், தகுதியும் மிக அவசியமான இரண்டு தூண்கள்.

குணத்தை எப்படி நல்ல குணம் என்றும், எமது நம்பிக்கைக்கு பாத்திரமாவான் என்றும் அறிவது, அவனது நோக்கத்தை அறிவதன் மூலம், நோக்கத்தை அறிவதற்கு மூன்று காரணிகள் உள்ளது. நாம் சொல்லும் விஷயத்தை அக்கறையுடன் கேட்கிறானா, வெளிப்படையாக தனது நடத்தையிலும் பேச்சிலும் இருக்கிறானா, கூறுபவற்றை திறந்த மனத்துடன் அணுகுகிறானா என்பதைக் கொண்டு ஒருவரின் குணத்தை அறியலாம்.

குணத்தின் அடுத்த குறியீடு நேர்மை, ஒரு விஷயத்தை அணுகும்போது நேர்மையுடன், பாரபட்சம் இன்றி, நம்பகத்தன்மையுடன் அணுகினால் அவனது குணம் நல்ல குணம் என்று அனுமானிக்கலாம்.

தகுதியை அறிவதற்கு இரண்டு விஷயங்களை அவதானிக்கலாம். குறித்த வேலைக்கான அவனது திறனும், அந்த வேலையில் இதுவரை பெற்ற பெறுபேறுகளும்.

குறித்த விஷயத்தில் திறன், அறிவு, அனுபவம் உண்டா என்பதைக்கொண்டு அவனது திறனை அனுமானிக்கலாம்.

பெறுபேறுகளை அவனது மதிப்பையும், அவன் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினைக் கொண்டும், செயல்திறன் கொண்டும் அறியலாம்.

நம்பிக்கை என்பது என்னவென்று அறிந்து நம்பிக்கை வளர்ப்போம்.

Reposting the old writing: 17th August 2018

Monday, June 27, 2022

Saturday, June 25, 2022

கலைஞர்களின் பிராணச் சிக்கல்

 

ஒரு சில கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்களைப் பார்த்தால் போதை, குடி, காமம் போன்ற தவறான பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையின் ஒரு பகுதி இருள் நிறைந்ததாக காணப்படுவார்கள்.

இதற்குரிய காரணத்தை யோக சாத்திரத்தின் பிராண வித்தை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

இது அவர்களின் கலையின் செம்மையால் உருவாகும், அதிக பிராணனின் தவறான வழியில் செல்வதால் உருவாகும் பிரச்சனையாகும்!

எந்த ஒரு கலையிலும் நிபுணத்துவமும் என்பது மனதில் அந்தக்கலைக்குரிய செம்மையினை உருவாக்கி அதற்கு பிராணசக்தியைச் செலுத்தி உடலின் மூலம் வெளிப்படுத்துவதாகும்.

உதாரணமாக நன்றாகப் பாடுகிறோம் என்றால் மனதில் ஸ்வர நிலைகளை செம்மைப்படுத்தி குரல்வளையை இசைத்து பாட வேண்டும். இது செம்மையாக அவன் தனது மனதிற்கும், உடலிற்கும் பிராண சக்தியினைக் கொண்டுவர வேண்டும். இப்படி பிராண சக்தியினை அதீதமாகக் கொண்டு வருபவர்களே எல்லோராலும் சிறந்த பாடகர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள்

இப்படி ஒரு கலையில் செம்மையை அடையும் போது அதீத பிராண சக்தி வாய்க்கிறது. இப்படி அளவிற்கு அதிகமாக பிராண ஆற்றல் வாய்க்கும் போது அந்தக் கலையினை பிரயோகிக்காத போதும் அவர்களிடம் அதிக பிராணன் இருக்கும். அந்தப் பிராணன் அவர்களின் உடலையும், மனதையும் தன்னை வெளியேற்ற உந்தித்தள்ளும். இந்த உந்தலை சமப்படுத்திக்கொள்ள அவர்கள் தமது சித்தத்தில் ஏற்கனவே இருக்கும் காம சம்ஸ்காரங்களின் படி உந்தலாம்!

மனதில் அதிக அழுத்தம் உண்டாவதால் தற்காலிகமாக மூளையை சாந்தப்படுத்த குடிப்பழக்கம் உருவாகலாம்.

இதனால் தான் முற்காலத்தில் கலை பயில்பவர்களுக்கு அதிகமாக உருவாகும் பிராணனை இப்படி தாழ் நிலைக்குச் செல்லாமல் தடுக்க எல்லாக் கலைகளையும் உயர் உணர்வாகிய இறைவனை நோக்கியே இருக்க வேண்டும் என்று விதித்து வைத்தார்கள்.

நடனம் நடராஜருக்கு,

இசை தியாகராஜருக்கு,

என்றெல்லாம் அர்ப்பணித்து கலையை ஆராதிக்கச் சொன்னார்கள்.

இன்று கலையை மனதில், உடலில் செம்மைப்படுத்தும் கலைஞர்கள் தமது கலையால் பெறும் பிராண ஆற்றலை உயர் உணர்விற்கு செலுத்தத் தெரியாத போது தாழ் உணர்வுகளில் சிக்கிக்கொண்டு தடுமாறி விடுகிறார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் பிராணக் கல்வி முறை

 

ஒரு குழந்தை தனது பிராண ஆற்றலை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி சிறுவயதிலேயே சொல்லிக் கொடுப்பதன் மூலம் பல தவறான பழக்க வழக்கங்கள் தடுக்கப்படலாம்.

பிராணக் கல்விமுறையில் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் இருக்கிறது. இந்த இரண்டுமே அதன் நோக்கம், செயல் என்பவற்றில் வெவ்வேறாக இருந்தாலும் அவை இரண்டும் முக்கியத்துவத்தில் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லையே.

முதலாவது அடிப்படை, புலன் உறுப்புகளின் வளர்ச்சியும், பயன்படுத்துவதும் என்ற அறிவினைப் பெறுவது

இரண்டாவது அடிப்படை, எமது ஆளுமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது, விழிப்புணர்வில் முன்னேற்றமடைவது, ஆளுமையை தாழ் உணர்ச்சிகளிலிருந்து உருமாற்றமடையச் செய்வது என்ற அறிவினை, பயிற்சியினைப் பெறுவது.

வயதுடன் ஒரு பிள்ளையின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க அந்தப்பிள்ளைக்கு கலையின் சுவை அறியும் படியும், தன்னுடைய மனப் பிராண ஆற்றல்களை செம்மைப்படுத்தும் ஆற்றலாகவும், திறமையாகவும் உருமாற்றும்படி செய்விக்க வேண்டும். அவனை இயற்கையிலும் மனிதப் படைப்பிலும் உள்ள அழகான, உயரிய, ஆரோக்கியமான மற்றும் உன்னதமான விஷயங்களை நேசிக்கவும் பாராட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதுவே ஒரு உண்மையான அழகியல் கலாச்சாரமாகும், இது அவனை இழிவான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும்.

Wednesday, June 22, 2022

ஓஜஸ் என்றால் என்ன?

 

ஓஜஸ் அல்லது ஓஜா என்றால் உயிர், வீரியம், பளபளப்பு, சக்தி, உடல் வலிமை, ஆற்றல் என்று சமஸ்க்ருத அகராதி பொருள் தருகிறது. ஆயுர்வேதத்தில் உடலைக் கட்டமைக்கும் ஏழு தாதுக்களின் சாராம்சமான செறிவு ஓஜஸ் எனப்படுகிறது. ஆயுர்வேத அறிஞர்கள் ஓஜஸ் என்பது ஒரு தனிநபரின் வலிமை, வீரியம் மற்றும் உயிர்ச்சக்திக்கு பொறுப்பான, உடலின் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு தாதுவாகக் கருதுகிறார்கள். ஓஜஸின் குறிப்பிட்ட பண்புகள், அதன் சிறப்பியல்பு அம்சங்கள், அளவு, அதன் மூன்று நிலைகள், மருத்துவ அம்சங்கள் மற்றும் அதன் சிகிச்சை ஆகியவை சரக சம்ஹிதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் அடிப்படையில், ஆயுர்வேத மருத்துவர்கள் (வைத்யா) தற்போதைய மருத்துவ நடைமுறையில் ஓஜஸ் அசாதாரண நிலைகளுக்கு செல்லும் அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். இருப்பினும், நவீன விஞ்ஞானிகள் இன்னும் இதற்குரிய சரியான உடலியல் கூறுகளைத் தேடுகின்றனர்.

ஓஜஸ் என்பதை சுசுருதர் ஏழு தாதுகளிலிருந்தும் உருவான தூய்மையான, மிகச்சிறந்த சாரம் என வரைவிலக்கணப்படுத்துகிறார். (ஸுசுருத சம்ஹிதை, சூத்ர ஸ்தானம் 15/19); சரக சம்ஹிதை உடலில் இருக்கும் சமநிலை கெடாத கபம் ஓஜஸ் என்கிறது.

ஸுசுருத சம்ஹிதைப்படி ஒரு மனிதனின் அடிப்படை ஓஜஸ் சக்தி தந்தையின் சுக்கிலத்திலும், தாயின் சுரோணிதத்திலிருந்தும் கருவானது தனது ஆரம்ப ஓஜஸினைப் பெறுகிறது. இருவரும் அளிக்கும் ஓஜஸின் அளவிலிருந்தே கரு தனது உடல், அறிவு வளர்ச்சிக்கான ஆற்றலைப் பெறுகிறது. அதாவது கரு தாயின் உடலிலிருந்து போசனையைப் பெற்று நலமாக வாழ தந்தையும், தாயும் தமது சுக்கில் சுரோணித ஆற்றல்களில் தேவையான அளவு ஓஜஸ் சக்தியினைக் கொண்டிருக்க வேண்டும். பிறந்து உடல் வளரும் போது ஒவ்வொரு தாதிலிருந்தும் சாரமாக ஓஜஸ் சக்தி ஒவ்வொரு மனிதனிலும் உருவாவதாக ஸுசுருதர் போன்ற ஆயுர்வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். வாக்படர் போன்ற சில அறிஞர்கள் ஓஜஸ் என்பது சுக்கில தாதுவின் சாரம் என்று கருதுகிறார்கள்.

ஸுசுருதர் ஓஜஸினை விளக்க பாலிலிருந்து நெய் வருவதை உதாரணப்படுத்துகிறார்; பால் உறைகுத்தி தயிராகி, தயிரை கடைய மோராகி, மோரிலிருந்து வரும் நெய் போன்றது; சப்ததாதுக்களிலிருந்து சாரமாகி வரும் ஓஜஸ் எனும் தாது என்கிறார்.

சரகர் பூவில் வரும் தேன் போன்றது என்று இந்த ஓஜஸ் தாதுவினைக் குறிப்பிடுகிறார்.

ஓஜஸ் என்பது உடல் முழுவதும் ரக்த தாதுவில் நிறைந்து இதயத்தில் நிலைகொள்வதாக ஸுசுருதர் குறிப்பிடுகிறார். இதன்படி உடலில் இருவகையான ஓஜஸ் சக்தி இருக்கிறது.

1) பரா ஓஜஸ் - உயிரிற்கு ஆதாரமானது; தாய் தந்தையிடமிருந்து பெற்ற எட்டுத்துளிகள் இதயத்தில் இருப்பதாக ஸுசுருதர் குறிப்பிடுகிறார். இதை இழக்கும் போதே மரணம் ஏற்படுகிறதாக கூறுகிறார். உடல் பரா ஓஜஸினால்தான் சமநிலையில் ஆரோக்கியமாக இருக்கிறது.

2) அபரா ஓஜஸ் - இது நாம் உண்ணும் உணவு அன்ன ரஸமாகி அதிலிருந்து உடல் ரஸமாக சப்த தாதுக்களாக மாறி அவை ஒவ்வொன்றின் சாரமும் எமது இரத்தத்தைப் போசிப்பதால் எம்மில் உருவாகும் ஓஜஸ் சக்தி. இது ரத்தத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலை ஆரோக்கியமாகவும் ஒளிமிகுந்ததாகவும் வைத்திருக்கிறது.

வைத்யாச்சாரியார்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

22/06/2022

#ojas #ayurveda #ayurvedicmedicine #ayurvedalife #yoga #yogalife #yogapractice #sadhana #tantra #health

பற்றுக்களிலிருந்து விடுபட சிறந்த வழி

 

About the attachment to things, the physical rejection of them is not the best way to get rid of it. Accept what is given you, ask for what is needed and think no more of it—attaching no importance, using them when you have, not troubled if you have not. That is the best way of getting rid of the attachment.

ஒவ்வொன்றின் மீதும் பற்று வைத்திருத்தல் பற்றி: அதிலிருந்து விடுபடுவதற்கான மிகச்சிறந்த உபாயம் அதனைப் புறவயமாக மறுதலிப்பது அன்று. உங்களுக்குத் தரப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள்; பிறகு அதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்; எந்த முக்கியத்துவமும் தராதீர்கள். உள்ளபோது பயனடைவது; இல்லாதபோது கலக்கமுறாது இருப்பது. இதுவே பற்றிலிருந்து விடுபடுவதற்கான மிகச்சிறந்த வழி.

ஸ்ரீ அரவிந்தர்

Sri Aurobindo

Letters on Yoga IV

ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானியின் ஆன்மீக அனுபவம்

 

இருபது வருடங்களுக்கு மேல் ஒரு இயற்பியல் விஞ்ஞானியாக சந்தேகத்துடன் கேள்வி கேட்பதையே தனது மனப்பழக்கமாக வைத்திருந்த ஒரு இயற்பியலாளர் திடீரென ஒரு தேவி உபாசகராக மாறி அகவயப்படுவதற்கு சுய ஆன்மீக அனுபவம் தேவைப்படுகிறது.

இயற்பியல் விஞ்ஞானியாக எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் (Dr. N. Prahaladha Sastry) தனது பயணத்தில் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இறைவன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று கூறுவார். அத்தகைய ஒரு அனுபவம் இங்கே தமிழில்:

குருநாதரிற்கு தியான அனுபவங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் அவரது தியானத்தின் போது மனக்கண்னில் "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள் தோன்றியது. இதன் அர்த்தம் "பிரபஞ்சம் இறைவனால் வாழ்கிறது, இறைவனால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்தக் காட்சியின் சில நாட்களுக்குப் பிறகு, அவர் TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்) ஐச் சேர்ந்த சக ஆய்வாளரது வீட்டிற்குச் சென்றார், அவர் நிறைய ஆன்மீக புத்தகங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை பராமரிக்கிறார். அவரது புத்தக அலுமாரிகளை நோட்டமிடும்போது ஈஷோபநிஷத்தின் சிறுகுறிப்பு பதிப்பு ஒன்று கண்களிற்கு பட்டது. அந்த நூலைத் திறந்தபோது தான் தியானத்தின் காட்சியில் கண்ட "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள் அதில் அப்படியே இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்.

இந்த அனுபவத்தை அவர் இப்படி விபரித்தார்;

எனது தர்க்கத்துடன் கூடிய பகுத்தறிவு மனம் சற்றே சிதைந்து போனது; எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத ஒரு புத்தகத்திலிருந்து எப்படி நான் முதலே வாசித்திருக்க முடியும். அப்படியென்றால் இது ஏற்கனவே மரபணுக்களில் இருந்ததா? அந்தத் தகவலை எனது மனம் அணுக முடிந்ததா? உண்மையை அணுக (அறிவியலுடன் கூடிய) பகுத்தறிவு மாத்திரம் தான் வழி என்ற எனது புரிதல் படிப்படியாக உடைந்து கொண்டிருந்தது. உண்மையினை அறிவதற்கு தர்க்கத்துடன் கூடிய பகுத்தறிவற்ற, உணர்ச்சிகளால், தர்க்கமற்ற முழுமையான வழிகள் இருப்பதை நான் உணர ஆரம்பித்தேன்.

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி Homi J. Bhabha இனால் ஆரம்பிக்கப்பட்ட TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்) இனது அணு இயற்பியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். தனது அக அனுபவத்தின் பின்னர் தேவி உபாசகராக பலருக்கும் குருவாக உலகெங்கும் அறியப்பட்டவர், எனது குருநாதர்!

From The Goddess And The Guru A Spiritual Biography Of Sri Amritananda Natha Saraswathi by Michael Bowden

Tuesday, June 21, 2022

தலைப்பு இல்லை

இன்று சர்வதேச யோகா தினம்

எல்லோரும் யோகா தினம் கொண்டாடுகிறோம் என்று வகை வகையாக ஆசனங்கள் செய்து படம் போடுவதால் எமக்கு தெரிந்த பத்மாசனத்தில் படத்தையும் போட்டுவிட்டு ஸ்ரீ அரவிந்தர் கூறும் யோகம் என்பதன் விளக்கம் பற்றிப் பார்ப்போம்!

யோகம் என்றால் இணைவு என்று பொருள் சொல்லப்பட்டால் எதை இணைப்பது என்ற கேள்வி எழும். இதைப் புரிந்துகொள்ள நாம் கீழ்வரும் கூறுகளைப் புரியவேண்டும்.

1) ஆன்மா அல்லது உணர்வு

2) மனம்

3) உடல்

இவற்றையெல்லாம் இணைக்கும் தொடர்ச்சியான ஆற்றல் "பிராணன்"

ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார், “எமது யோகம் என்பது உணர்வின் ஆரோகணம் (ஏறுதல்) அவரோகணம் (இறங்குதல்) ஆகியவற்றின் இரட்டை இயக்கமாகும், ஒருவர் உயர்ந்த மற்றும் உயர்ந்த உணர்வு நிலைக்கு உயர்கிறார், ஆனால் அதே நேரத்தில் ஒருவர் தனது சக்தியை மனதிலும் வாழ்க்கையிலும் மட்டுமல்ல, இறுதியில் உடல் வாழ்க்கை வரை கீழே கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆரோகண அவரோகண நிலைகளில் மிக உயர்ந்த நோக்கம் அதிமானச தளத்தினை அடைதலாகும். அதை பூமிக்குரிய உணர்வில் கொண்டுவந்தால் மாத்திரமே தெய்வீக மாற்றம் சாத்தியமாகும். பூரண யோகமானது முழுமையான இருத்தலினதும் தெய்வீக மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 'சர்வமுக்தி' அல்லது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தெய்வ உருமாற்றத்தையும் உள்ளடக்கியது.

ஸ்ரீ அரவிந்தரின் அனுபவப்படி யோகம் என்பது ஒருவன் சாதனை மூலம் உணர்வினை தாழ் மனதிலிருந்து (Lower mind) உயர்மனம், ஒளி மனம், தெய்வ மனம், அனைத்தையும் கடந்த கூட்டு மனம், அதிமனம் (higher mind, illumined mind, intuition and overmind towards the supermind) ஆகிய உயர் மனத்தளங்களை அடைவிப்பதே!

உடம்பினை வளைப்பது மாத்திரம் யோகம் அல்ல! உடம்பினை வளைப்பதன் மூலம் மனதினை வளைத்து, மனதினால் உணர்வினை உயர்தளத்திற்கு கொண்டு செல்லுதலே யோகம்!

உலகெங்கும் இந்த யோக உணர்வு பெருக நாம் அனைவரும் செயல்படுவோம்!

படம்: அமிர்தவர்ஷினியின் காப்புரிமை.

Friday, June 17, 2022

புதிய உலக ஒழுங்கும் இளைய தலைமுறையும்

 

அமைதியின் இளவரசரும் அன்பின் போதகரும் இறந்து ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது இரத்தத்தை சிந்திய இலக்கு நிறைவேறுகிறது.

துப்பாக்கிக் குழலில் இருந்து அரசியல் அதிகாரம் வளர்கிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் போகிறது. உலக மக்கள், குறிப்பாக எதிர்காலச் சந்ததியினர் நாம் கொடுப்பதே எமக்கு திரும்பிக் கிடைக்கும் என்ற எளிய உண்மையை உணர்ந்துள்ளனர்.

வன்முறை வன்முறையைத் தூண்டுகிறது.

வெறுப்பு வெறுப்பைப் பிறப்பிக்கிறது.

கோபம் கோபத்தை உண்டாக்கும்.

பேரார்வம் பேரார்வத்தைப் பிறப்பிக்கிறது.

சுரண்டல் சுரண்டலாக மாறும்.

சண்டை சச்சரவு ஆகிவிடும்.

எந்த ஒன்றையும் சாதிக்க அந்த வன்முறை அவசியமில்லை. ஆக்கிரமிப்பு தேவையில்லை. மாற்றாக;

அன்பு அன்பைப் பிறப்பிக்கிறது.

ஒழுங்கு ஒழுங்கினை உருவாக்குகிறது.

நல்லிணக்கம் நல்லிணக்கத்தைப் பிறப்பிக்கும்.

அமைதி அமைதியைப் பிறப்பிக்கிறது.

நாம் உறவுகளை நேசிக்கும் கலையை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும், இந்தத் தலைமுறையில் அது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

தனிமை, அந்நியப்படுத்தி தண்டித்தல் மற்றும் தனிமை ஆகியவற்றின் அடிப்படையில் நமது காலாவதியான நடத்தை முறைகளை நாம் இந்தத் தலைமுறையிடம் புகுத்த வேண்டிய அவசியமில்லை.

உலகம் முழுவதற்கும் ஒவ்வொருவரும் அவர்களின் இதயங்களைத் திறக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். உலகம் செழுமையும் பன்முகத்தன்மையும் நிறைந்தது. அவர்களை அற்பமான பிராந்தியவாதம், தேசியவாதம் மற்றும் இது போன்ற கட்டுப்பாடான கருத்துக்களுக்குள் தள்ளாதீர்கள்.

இப்படி சுதந்திரத்தைக் கொடுப்பதே உண்மையில் பழமையான மதம். இது அன்பின் மதம். நிபந்தனையற்ற, உலகளாவிய அன்பு, இது நிபந்தனையற்ற, உலகளாவிய அன்பைப் பெறுகிறது. எல்லோரையும், ஒவ்வொரு உயிரையும் நேசிப்பது உங்கள் இயல்பு. அன்பின் வெளிப்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் உன்னை நேசிக்க வேண்டும். நீங்கள் நேசிக்க வேண்டும், அன்பைப் பெற வேண்டும். இந்த இருவழி அன்பின் ஓட்டம் நிகழும்போது மட்டுமே, உங்கள் வேர்களிலிருந்து நீங்கள் ஊட்டமளிக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை ஆழமாக நேசித்தால், நீங்கள் மற்ற யாரையும் நேசிக்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். நேசிப்பது உங்கள் இயல்பு. அன்பைப் பெறுவது உங்கள் இயல்பு, அது உங்களை எல்லையின்றி வளர அனுமதிக்கிறது.

அன்பு என்பது உங்கள் துணையை எல்லையின்றி வளர வைப்பது. அன்பு என்பது விடுவிப்பதாகும். அன்பு பிணைக்காது, கட்டக்கூடாது.

அமிர்தானந்தா நாத,

தேவிபுர 1992

Thursday, June 16, 2022

தலைப்பு இல்லை

 

பதஞ்சலி யோகத்தில் ஈஸ்வரனைப் பணிதலால் மாத்திரமே யோகம் பூர்த்தியடைகிறது, எமது சித்த விருத்திகளை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார். பதஞ்சலி வெறுமனே நம்பிக்கைக்காக இறைவனைப் பணியச் சொல்லவில்லை.

ஏன் இறைவனைப் பணிய வேண்டும் என்பதற்கு மூன்று சூத்திரங்களில் காரணங்கள் சொல்கிறார்; யோகியானவன் தனது சித்தத்தின் விருத்திகளை அடக்க வேண்டும்; அந்த நிலையை அடைய வேண்டும் என்றால், அந்த நிலையில் இருக்கும் ஒரு ஆற்றலை எமக்கு reference point ஆக, இலக்காக வைத்திருக்க வேண்டும். இதனை திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றலரிது

ஆகவே;

1) கிலேசங்கள், கர்ம பலன்கள் ஆகிய மூன்றாலும் தீண்டப்படாத ஒரு ஆற்றல் இறைவன். இதுவே யோகி அடைய வேண்டிய நிலை.  

2) மனிதன் அறியக்கூடிய அறிவில் எல்லையும் இறைவன் என்கிறார்.

3) காலத்திற்கு கட்டுப்படாத ஆற்றல் இறைவன்.

4) பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தையும் வழி நடாத்தும் அகச்சக்தி இறைவன்

இந்த நான்கு பண்புகளும் கொண்ட இறைவனை எமது reference point ஆக வைக்காமல் எவருக்கும் யோகம் பூரணமாகும் சாத்தியம் இல்லை.

இதை எப்படி தேவி உபாசனையில் சாத்தியமாக்கலாம் என எனது குருநாதர் ஸ்ரீ யோகம் அல்லது ஸ்ரீ வித்யா என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளார். அது வருமாறு;

ஸ்ரீ யோகம் என்பது தெய்வீக அருளுடன் எம்மை இணைப்பது. நீங்கள் அவளுடன் ஒரு தாயாக, சகோதரியாக, குழந்தையாக, தோழியாக, சேவையாளராக அல்லது காதலனாக கூட இணையலாம்; எந்த உறவையும் அவள் ஏற்றுக்கொள்வாள்.

அவளுக்கு யோகம், எமக்கு எந்த எந்த வழி கவர்ச்சியாக இருக்கிறதோ அதன் மூலம் தன்னுடன் ஒன்றிணைக்க அவள் எங்களை அழைக்கிறாள். அல்லது, ஒரு சீடன் குருவுடன் இருப்பது போல அவளுடன் நெருக்கமாக இருங்கள். அல்லது அவளுடைய வேலைகளைச் செய்து அவளுக்குச் சேவை செய்யுங்கள். நான் எப்படி அவளிடம் பிரார்த்தனை செய்வது? தேவி உபாசனையில் கடவுளை பெண்ணாக வணங்குகிறோம். அவள் உனக்கு உயிர் கொடுத்தாள். அவளே உன் உயிர். உங்கள் வாழ்க்கையை அவளுக்கு வழங்குங்கள். ஒவ்வொரு நாளும் அவளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், அவளை உங்கள் வாழ்க்கையில் கீழ்க்கண்டவாறு அழைக்கவும்:

“தேவி, நீங்கள் மிக உயர்ந்த பரிசான இந்த வாழ்க்கையை எனக்குத் தந்துள்ளீர்கள். என்னை இவ்வுலகில் பார்க்கவும் அறியவும் செயல்படவும் செய்துள்ளீர்கள். எனக்கு இந்த வாழ்க்கை இல்லையென்றால் வேறு எந்த பரிசுக்கும் மதிப்பு என்ன? உங்கள் காலடியில் அனைத்தையும் மனப்பூர்வமாக சமர்ப்பிக்கிறேன். எனது உடல், உயிர், மனம், செல்வம் மற்றும் அழகை உங்கள் சேவையில் சமர்ப்பிக்கிறேன். எனது கடந்தகால பாவங்கள் எதுவாக இருந்தாலும், தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், என் பாவங்களையும் புண்ணியங்களையும் தழுவி, என்னை உங்களில் இணைக்கவும். இந்த உலகத்தை பெரும்பாலான மக்கள் பாடும், நடனமாடும், வாழ்க்கையை அனுபவிக்கும், சுதந்திரமாக, எல்லா இடங்களிலும் சேவை செய்யும் இடமாக, நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்ந்து அனைவருடனும் இன்பத்தை, நன்மையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாற்றுவதற்கான உங்கள் திட்டங்களுக்கு என்னை உங்கள் கருவியாக ஆக்குங்கள். நான் உங்கள் முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். என்னுள் இருங்கள், ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்துங்கள்.

அவளிடம் உங்கள் பிரார்த்தனை இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

தலைப்பு இல்லை

இன்று (16 ஜூன் 2022, காலை 0550 – 0745) பதஞ்சலி யோக சூத்திர சாதனா பாத வகுப்பில் நாம் கற்றவை;

மனதில் ஏற்படும் குழப்பங்களை ஆராய்வதற்கு பதஞ்சலி ஐந்து காரணங்கள் (roots) கிலேசங்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு சித்த சம்ஸ்காரமும் நான்கு நிலைகளில் இருப்பதாகவும் ஒரு அழகிய (5+4 = 9) 09 factor வரைபடத்தைத் தருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் தமது மனம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

1. ஐந்து கிலேசங்கள்

a. கிலேசம் – 01: அவித்தை - அறியாமை

b. கிலேசம் – 02: அஸ்மிதை - அகங்காரம்

c. கிலேசம் – 03: ராகம் - விருப்பு

d. கிலேசம் – 04: துவேசம் - வெறுப்பு

e. கிலேசம் – 05: அபினிவேசம் – பயம்

2. சித்த சம்ஸ்காரங்களின் நான்கு நிலைகள்

a. சித்த சம்ஸ்கார நிலை – 01 : பிரஸுப்தம்

b. சித்த சம்ஸ்கார நிலை – 02: தனு

c. சித்த சம்ஸ்கார நிலை – 03: விச்சின்னம்

d. சித்த சம்ஸ்கார நிலை – 04: உதாரம்

3. வரைவிலக்கணங்கள்

a. பிரஸுப்தம் – வேரூன்றிய விதை, சித்த விருத்திக்கு மூலம்

b. தனு – அடக்கக் கூடிய சித்த சம்ஸ்காரம்

c. விச்சின்னம் – சில வேளைகளில் அடக்கலாம், சில வேளைகளில் அடக்க முடியாதது.

d. உதாரம் – சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும் போது கட்டாயம் வெளிப்பட்டே தீர்வது.

4. பதஞ்சலி கிரியா யோகத்தின் நோக்கம் உதார, விச்சின்ன நிலைகளில் இருக்கும் சித்த சம்ஸ்காரங்களை மெலிவித்து தனு, பிரஸுப்த நிலைகளுக்கு கொண்டுவருதல்.

இந்தச் சொற்களை சித்தத்தில் நன்கு பதிவித்துக்கொண்டு வகுப்பில் கூறப்பட்ட உதாரணங்களை உள்வாங்கி உங்களுடைய சித்த விருத்திகளை ஆராயுங்கள்.

மனதைப் புரிந்துகொண்டவர்களாவீர்கள்!

#yoga

#yogachallenge

#yogapractice

#patanjali

Monday, June 13, 2022

தலைப்பு இல்லை

இதோ வந்துவிட்டது ஆனிப் பௌர்ணமி இதழ்....

குப்த ஜோதிடம் எனும்  அரிய கோள்கள், நக்ஷத்திரம் பற்றிய விளக்கங்கள் அடங்கிய ஒரு கட்டுரை  இருக்கிறது.

இந்த இதழில் cover page model நான் தான்! 😁😁😀

வரைந்தவர், வடிவமைத்தவர், தொகுத்தவர்கள், வெளியிடுபவர்கள் என்று உழைத்தவர்கள் விபரம் எல்லாம் பக்கம் - 03 இல் இருக்கிறது! அவர்களுக்கு பேரன்புகளும் நன்றிகளும்!

வாசகர்கள் பெருகப் பெருக இன்னும் சுவாரசியமான இதழாக விரியும்.

Sunday, June 12, 2022

தலைப்பு இல்லை

சுவாமி விவேகானந்தரின் தியானமும் அதன் முறையும் என்ற நூலில் யோகசக்தி பெற்ற மனதின் மூலம் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்பதை தனக்கு பவாஹாரி பாபா என்ற யோகியுடன் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

உடம்பால் செய்கின்ற உதவி ஒன்றுதான் உதவி என்று நினைக்கின்றாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோகசக்தி பெற்ற ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன?

- யோகி பவாஹாரி பாபா - 

Thursday, June 09, 2022

தலைப்பு இல்லை

 

இன்று கிரியா யோகம் என்பது பிரபலமான சொல்! பலரும் கிரியா யோக தீட்சை பெற்றுள்ளோம் என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம்.

பதஞ்சலி, கிரியா யோகத்தை அனைத்து யோக சாதனைக்கும் உரிய ஒரு முழுமையான படிமுறையாக வரைவிலக்கணப்படுத்துகிறார்.

மனம், வாக்கு, உடல் எனப்படும் திரிகரணங்களினால் செய்யப்படும் எந்தவொரு செயலும் பதஞ்சலி மகரிஷி சொல்லும் இந்த நான்கு விஷயங்களைக் கடைப்பிடிப்பதால் கிரியா யோகமாக மாற்றலாம்.

|| தப: ஸ்வாத்யாய - ஈஸ்வர - ப்ரணிதானானி க்ரியா யோக: ||

1. தவம்

2. படிப்பு

3. செயல்

4. செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் ஆகிய நான்கும் கொண்டது கிரியாயோகம் என்கிறார்.

இங்கு தவம் என்றால் காட்டிற்கு போய் கண்களை மூடி தாடி வளர்த்து, சடை வளர்ப்பதல்ல;

தபஸ் அல்லது தவம் என்றால் ஒரு இலக்கை எடுத்துக்கொண்டு அதை நோக்கி மனதைச் செலுத்தினால் எமது  ஐம்புலன்களில் இருந்து வரும் தூண்டுதல்களால் எந்த குழப்பமும் மனதிற்கு வராமல் வைத்திருக்கும் வைராக்கியத்துடன் கூடிய பயிற்சி. தவம் பழகுவதற்கு இறைவன் போன்ற உயர்ந்த தத்துவங்களை ஆரம்பத்தில் எடுக்காமல் சிறிய மனதிற்கு பிடித்த விஷயங்களில் கூட இதைச் செய்து பழகலாம். சிறப்பாக காப்பி போடுவதைக் கூட தபஸாக மாற்றலாம்.

எப்படி தவம் பழகலாம் என்பதை சரியாக, முறையாக கற்றுக்கொள்ளும் செயலுக்கு ஸ்வாத்யாயம் என்று பெயர்.    

இதை செயலுக்கு கொண்டுவந்து செயற்படுத்துவது மூன்றாவது நிலை. இப்படிச் செயற்படும் போது, நாம் இதை செய்து முடிக்கிறோம் என்ற அகங்காரம் வரும் போது எம்மால் அதற்கு மேல் மனதை ஆர்வத்துடன் செலுத்த முடியாமல் போய்விடும். ஆகவே செய்யும் செயலால் வரும் அனைத்துப் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் அகங்காரம் உருவாகி எமது ஆற்றல் தடைப்படுவது தடுக்கப்படுகிறது.

மேற்குறித்த பண்புகளுடன் செய்யப்படும் எந்த செயல்களும் எமது சித்தத்தில் ஆழமாகப் பதிந்து விருத்திகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்காது! ஆகவே சாதகன் வெகுவிரைவில் சித்த சுத்தி பெறுவான்!

இந்தப் பண்புடன் செய்யப்படும் பிராணாயாமங்களையே கிரியா பிராணாயாமம் என்று சொல்கிறோம்.

மகாவதார் பாபாஜி தன்னுடைய யோகத்தினை கிரியா பிராணாயாமம், கிரியா ஆசனம், கிரியா தியானம் என்று பெயரிட்டதன் காரணம் ஆசனம், பிராணாயாமம், தியானம் செய்யும் போது மேற்குறித்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்பதாலேயே!

ஆசனம் செய்யும் போது செய்யப்படும் ஆசனத்தின் உடல் நிலையின் மீது முழுக்கவனத்துடன் சுவாசத்தை இணைத்தல் தவம்.

அதைச் சரியாக செய்வது எப்படி என்று ஆசிரியரிடம் கற்றல் ஸ்வாத்யாயம்.

அதைப் பயிற்சித்தல் கிரியா.

இறுதியாக பயிற்சி முடிவில் குருவினதும், இறைவனது அருளினாலும் நான் எனது பயிற்சியை செம்மையாக முடித்து அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று எண்ணுவது ஈஸ்வரப்ரணிதானம்.

இப்படிச் செய்தால் இது சித்த சுத்தி தரும் கிரியா யோகம்!

இப்படி காய்கறி வெட்டுவது, பயிர் செய்வது, கற்பது, தொழில் செய்வது என்று வாழ்வில் உள்ள அத்தனை செய்கையையும் கிரியா யோகமாக மாற்றும் வரைவிலக்கணத்தை பதஞ்சலி மகரிஷி விளக்குகிறார்.

வாழ்வே யோகம்.

Tuesday, June 07, 2022

தலைப்பு இல்லை

 

ஜோதிடம் பார்க்கிறோம், படிக்கிறோம் எனும் எல்லோரும் அதனுடைய ஆழமான விதிகளைப் புரிந்துகொள்வதில்லை! பெரும்பாலும் ஜோதிடம் கற்கவேண்டும் என்பதோ, எந்தக்கலையைக் கற்க நினைப்பவர்களதும் உளவியல் மற்றவர்களை விட தன்னிடம் ஒரு சிறப்புத் தகுதி இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கும்!

எந்தவொரு கலையிலும் கற்று முடித்துவிட்டோம் என்ற நிலை இல்லை; கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை!

ஜோதிடம் கற்பவர்கள் பெரும்பாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியவோ, தமக்கு ஏதாவது தவறாக நடந்துவிடும் என்ற சிந்தனையுடனேயே ஜோதிடத்தை அணுகுகிறார்கள். ஆனால் பராசர மகரிஷி எப்போது மனச் சமநிலையுடையவனும், குருபக்தி மிகுந்தவனும், சத்தியத்தை மாத்திரம் பேசுபவனும், கடவுளில் நம்பிக்கையுள்ளவனுக்கு மாத்திரமே ஜோதிடம் கற்பிக்கப்பட வேண்டியது என்கிறார்.

சந்தேகபுத்தியுள்ளவனும், குதர்க்கம் நிறைந்தவனும், கடவுள் மீதோ, குருமீதோ நம்பிக்கையில்லாதவனுக்கும் இந்த வித்தை மேலும் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்.

உண்மையில் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை அறிய வேண்டுமானால் அதன் மூல நூல்களைத் தொட வேண்டும்!

எனது தனிப்பட்ட தேடல்களில் ஒரு கலையினைப் பற்றி அறிய வேண்டும் என்றால் வேர்வரை சென்று புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான்!

ஜோதிடத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்பவர்கள் ஜோதிடம் எமது கண்களுக்குப் புலனாகாத சக்திகள் எமது மனதின் சித்தம் என்ற பகுதிக்கூடாக எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பது பற்றிய ஒரு மறையியல் கலை என்பதை ஜோதிட மூல நூலான ப்ருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் படிப்பதன் மூலம் புரிந்துகொள்வார்கள்.

பராசர ஹோர சாஸ்த்திரம் ஒருவனுடைய கர்மம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கும் சுலோகத்தில் இப்படிச் சொல்லுகிறது.

ஒருவன் பிறக்கும் போது கிழக்கு வானில் இருக்கும் ராசி - லக்கினமும் - அது சார்ந்து நவக்கிரகங்களும் இருக்கும் நிலை அவனுடைய கர்மங்களை செயற்படுத்தும் குறிகாட்டிகளாக இருக்கிறது என்கிறார்.

இதுபோல் 86 வது அத்தியாயத்தில் கிரகங்களின் ஆற்றல் குறைவதை தியான சாதனைகள் மூலம் ஈர்க்கலாம் என்று விளக்குகிறார்கள்.

இந்த நூல் பராசர முனிவர் தனது மாணவனாகிய மைத்திரேயருக்கு கூறிய வடிவில் இருக்கிறது. ஜோதிட சாஸ்த்திரத்தை ஆழமாக கற்க விரும்பவர்கள் கற்க வேண்டிய நூல்!

Saturday, June 04, 2022

முள்ளந்தண்டும் ஆறாதாரமும்

 

யோக தந்திர சாஸ்திரத்தில் முள்ளந்தண்டும் மூளையும் மனித உடலின் உயர் பரிணாமத்தின் விளைவாகக் குறிப்பிடப்படுகிறது. மனிதனுக்கு மாத்திரமே முள்ளந்தண்டு பூமிக்கும் செங்குத்தான புவியீர்ப்பினை வென்று அண்டத்தினை நோக்கி விருத்தியடைந்துள்ளது. அதுபோல் Cerebrum என்ற விருத்தியடைந்த மூளையும் இருக்கிறது. இதனால் மனிதனால் தெய்வ சக்திகளை கவர முடியும் என்பது தாந்திரீக மறையியலின் விளக்கம்.

குண்டலினி சக்தி பற்றி விரிவாக எழுதிய ஆர்தர் அவலோன் நவீன உடற்கூற்றியலிற்கும் தாந்திரீக உடற்கூற்றியலுக்குமிடையிலான ஒப்பீட்டினை தனது நூலில் முன்வைக்கிறார்.

தாந்திரீக மறையியலில் பௌதீகமான முள்ளந்தண்டினை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஸக்தியானவள் ஆறு ஆதாரங்களாகவும் ஆற்றலாகவும் மனித உடலில் வெளிப்படுகிறாள். ஆறு ஆதாரச்சக்கரங்கள் என்பவை பராசக்தி தன்னை பஞ்சபூத பிரக்ருதியாக வெளிப்படுத்தும் இடங்கள். ஏழாவது சக்கரம் சஹஸ்ராரம் என்பது எல்லாச் சக்கரங்களினதும் ஆற்றல் உறையும் பரமசிவம் பராசக்தியின் இருப்பிடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சுவாரசியமாக முள்ளந்தண்டு நவீன உடற்கூற்றியலில் ஐந்து பகுதிகளாக cervical, Thorasic, Lumber, Sacrum, Coccyx என்று பகுக்கப்படுகிறது. இந்த ஐந்துபகுதிகளும் தாந்திரீக உடற்கூற்றியலில் பஞ்ச பூத தத்துவங்களாக குறிப்பிடப்படுகிறது.

நவீன உடற்கூற்றியல், தாந்திரீக ஆதாரச் சக்கரம், பஞ்சபூதம் முறையே கீழே தரப்பட்டுள்ளது.

Cervical - விசுத்தி - ஆகாயதத்துவம்

Thoracic - அனாகதம் - வாயு தத்துவம்

Lumber - மணிப்பூரகம் - அக்கினி தத்துவம்

Sacrum - சுவாதிஷ்டானம் - அப்பு (நீர்) தத்துவம்

Coccyx - மூலாதாரம் - ப்ருதிவி (நில) தத்துவம்

Medulla to Pineal gland - ஆக்னை - மனத்தத்துவம்

above Pineal gland to Cerebrum - சஹஸ்ராரம் - பரமசிவ பராசக்தி தத்துவம்.

இப்படி ஸ்தூல உடலுடன் பொருத்தி அந்தப்பகுதிகளின் மேல் நுண்மையான ஏகாக்கிர மனதினால் ஸமாதி பழகுவதால் யோகி தனது நுண் ஆற்றல்களை விழிப்பிக்க முடியும் என்பதே யோக தந்திர சாத்திரத்தின் அடிப்படை.

இந்த அடிப்படையிலேயே ஸ்ரீ காயத்ரி யோக சாதனை, ஸ்ரீவித்யா தந்திரங்கள், மற்றெல்லா தந்திரசாஸ்திரங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

Thursday, June 02, 2022

தலைப்பு இல்லை

 

அகத்தியர் சௌமிய சாகரம் போர்த்துக்கீசிய மொழி வகுப்புகள்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னிரென் றானே.

உலகம் அகச் சமநிலை குன்றும் போதெல்லாம் ஈசனின் ஆணையில் அகத்தில் தீயாக இருந்து நடு நிலைப்படுத்தி மக்களின் மனதைச் சீராக்கி சமப்படுத்தும் உணர்வு ஆற்றல் அகத்தியம்.

தமிழ் சித்தர் மரபு போர்த்துக்கீச மொழியிலும் பரவ திருவுளம் வகுத்தார் போலும்...

தமிழில் இதைப் படிக்க எத்தனை பேர் வருவார்கள்?

உலகை வளமாக்கும் ஸ்ரீ அரவிந்தரின் மூன்று பைத்தியக்காரத்தனங்கள்

 

எனக்கு மூன்று பைத்தியக்காரத்தனங்கள் உள்ளன. முதலாவது இதுதான். கடவுள் எனக்குக் கொடுத்த சாதனைகள், மேதைத்துவம், உயர்கல்வி மற்றும் கற்றல், செல்வம் ஆகியவை அவருடையது என்று நான் உறுதியாக நம்புகிறேன். குடும்பப் பராமரிப்பிற்குத் தேவையானதை மட்டும் எனது சொந்த நோக்கங்களுக்காகச் செலவழிக்க எனக்கு உரிமை உண்டு. மீதமுள்ளவை கடவுளிடம் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். எனக்காக, என் இன்பத்திற்காக, ஆடம்பரத்திற்காக அனைத்தையும் செலவழித்தால், நான் திருடன். கடவுளிடம் இருந்து செல்வத்தைப் பெற்று, அதைத் திரும்பக் கொடுக்காதவன் திருடன் என்று எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவரை, இரண்டு அணாக்களை கடவுளுக்குக் கொடுத்தேன், மற்ற பதினான்கு அணாக்களை என் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தினேன்; இவ்வுலக இன்பங்களில் மூழ்கி நான் கணக்கைத் தீர்த்துவிட்டேன். என் வாழ்வில் பாதி வீணாகிவிட்டது - மிருகம் கூட நிறைவடைகிறது.

தனது சொந்த வயிற்றையும், தன் குடும்பத்தாரின் வயிற்றையும் அடைத்து, அவர்களின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்வதில்.

இந்தக் கருத்தின் இறுதியில் கடவுளுக்கு அர்ப்பணித்தல் என்பதை தனது தேசத்தையும், மக்களையும் பாரத மாதாவாக, பராசக்தியாகக் கருதி அவர்கள் நலனுக்கு பாடுபடுதலையே கடவுளுக்கு அர்ப்பணித்தல் என்று பொருள்படுத்துகிறார்! பூஜை செய்வதோ, கோயில் கட்டுவதையோ ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடவில்லை!

ஒவ்வொருவரும் நமது குடும்பத்தின் நலனுக்கு மேல் இருக்கும் செல்வம், நேரம், அறிவு ஆகியவற்றை மற்றவர்களை முன்னேற்றப் பயன்படுத்த ஆரம்பித்தோம் என்றால் இங்கு எவருக்கும் குறையிருக்காது!

 

Wednesday, June 01, 2022

தலைப்பு இல்லை

 

நீங்கள் பதஞ்சலியைப் பின்பற்றினால் எந்த ஒரு கணிதச் சமன்பாடும் (தரவுகளைப் பிரதியிட்டால்) விடையைத் தருவதைப் போல் அவர் சொல்லுவதை துளியும் பிசகாமல் பின்பற்றினால் மனம் பற்றிய விதிகளை அறிந்துகொள்வீர்கள். புவியில் பதஞ்சலிக்கு நிகராக ஒரு மனிதர் இருக்கவில்லை!

(கிருஷ்ணர், புத்தர், மகாவீரர், முகமது ஆகிய) மற்றைய எல்லோரும் மனித மனதின் கட்டமைப்பினை மாற்றுவதற்கு செயல் புரிந்தார்கள். அவர்களால் மனதைப் பற்றிய அறிவியல் விதிகள் தெளிவாகக் கூறப்படவில்லை.

ஆனால் பதஞ்சலியோ மனதைப் பற்றிய அறிவியலில் ஒரு ஐன்ஸ்டீன் போன்று இருக்கிறார். ஒரு செம்மையான அறிவியல் முறையை மனம் பற்றிய கண்ணோட்டமாக வைக்கிறார்.

மற்றைய அனைவரும் கவிதை மொழியைப் பின்பற்றினர்; ஆனால் பதஞ்சலியோ அறிவியலில் சுருக்க விதிகளைச் சொல்லும் சூத்திர முறையை (formula) பயன்படுத்தியிருக்கிறார்.

பதஞ்சலி யோக சூத்திரம் பற்றி பகவான் ஓஷோ.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...