குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 29, 2022

தலைப்பு இல்லை

நான் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வேலை நிமித்தம் (அப்போது யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்) காரில் பயணித்துக் கொண்டு மிகிந்தலையில் ATM இல் காசு எடுத்துவிட்டு மின்னஞ்சலை பரிசோதித்தால் ஒரு மேற்கத்தேய நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. செய்தி இதுதான்; எனது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை முனைவர் திருமதி கீதா ஆனந் இனது மொழிபெயர்ப்பினூடாக தான் கற்றதாகவும் தனக்கு தமிழ் சித்தர் இலக்கியங்களில் உள்ள யோக நுணுக்கங்களைக் கற்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார். 

சரி, தனியே ஒரு நபரிற்கு கற்பிப்பது கடினம், ஒரு சிறுகுழுவாக ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள் என்று கூற அகத்தியர் குருகுலம் பிரேஸில் நாட்டில் உருவாகியது. 

சிரத்தையாக, பொறுமையாக இரண்டரை வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு விடயமாக கற்று வருகிறார்கள். மிகுந்த தேடல் உள்ளவர்கள்; கற்பவர்களில் பலர் ஆயுர்வேதம் முறையாகப் பயின்றவர்கள்; பல்கலைக்கழக விரிவுரையாளர், இசைக் கலைஞர், சூழலியலாளர் என்று பலவித துறைகளில் நிபுணர்கள். 

அவர்களுடன் உரையாடிய உரைத்தொகுப்பை சில மாணவர்களின் முயற்சியால் edited video ஆக ஒவ்வொரு வாரமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் ஹடயோக பிரதீபிகை உரை வெளிவருகிறது. 

யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஹடயோக சாதகர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பாருங்கள்! 

பார்த்தபின் like பண்ணுங்க, share பண்ணுங்க, இப்படி எல்லோரும் support பண்ணினாதான் channel வளர்ந்து இந்த வீடியோ செய்யும் முயற்சி எடுப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க முடியுமாம். 

ஆகவே மறக்க வேண்டாம். 

மூன்றாவது பாகம்: முதல் கொமெண்டில்


Tuesday, October 25, 2022

தலைப்பு இல்லை

பேராசிரியர் தேஷ்பாண்டே அவர்களை ஸ்ரீ அன்னை ஶ்ரீ அரவிந்தர் சன்னதியில் சந்திப்பு! 

அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர் - He worked as Scientist in Tata Institute of Fundamental Research, Mumbai (1955-57); at Bhabha Atomic Research Centre, Mumbai (1957-80); at the Lawrence Berkeley Laboratory, Berkeley, California USA (1964-65); headed several Atomic Energy and Space Projects in Advance Technology, apart from being the Examiner for a number of PhD thesis in the field of Solid State Physics.

தனது ஓய்விற்குப் பின்னர் பாண்டிச்சேரியை வசிப்பிடமாக்கிக்கொண்டு ஸ்ரீ அன்னையினதும், ஸ்ரீ அரவிந்தரது ஸாவித்ரி காவியத்தினையும் ஆராய்ந்து வருவதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். 

யோகத்தில் உடலில் நடைபெறும் மாற்றங்கள் - body transformation பற்றி ஸ்ரீ அரவிந்தரின் குறிப்புகளை தொகுத்து வருகிறார். நான் அவரது நூல்களைப் படித்திருக்கிறேன் என்று அது பற்றி உரையாடியபோது மிகவும் இரசித்துக் கேட்டார். பின்னர் நெகிழ்ந்து இரு நூல்களை அன்பளித்தார். 

வர இருக்கும் எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாக review செய்து தருவதாகவும் கூறினார். தன்னுடன் வந்து ஒரு வாரம் தங்கி தனது ஆய்வுகளை உரையாடும்படி அழைத்திருக்கிறார்.


Monday, October 24, 2022

தலைப்பு இல்லை

மனம் பற்றிய யோக விளக்கம் இரு வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையின் பதிவு. 

மொத்தமாக மானச யோக வித்யா என்ற தலைப்பில் YouTube இல் 05 பாகங்கள் தினசரி தரவேற்றப்படுகின்றன. இணைப்பு முதல் கொமெண்டில்...

மனம் பற்றிய யோக சாத்திர விளக்கம் வேண்டுபவர்கள் பார்வையிடுங்கள். 

மறக்காமல் Like பண்ணுங்க Subscribe பண்ணுங்க...


தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பண்டிகைகள் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்து மனித ஆற்றலை ஒன்றிணைக்கும் பொறிமுறைகள்! 

இதைக் காண்போர் அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என்று பிரார்த்தித்து எமது மக்கள், சமூகம், நாடு, உலகம் உயர எமது அறிவு, ஆற்றல், அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்ற சங்கல்பத்துடன் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்.


Sunday, October 23, 2022

தலைப்பு இல்லை

ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆற்றிய சுப்பிரமணிய யோக ஞானத் திறவுகோல் உரைகளின் தொகுப்பு அவரின் மாணவர்களின் முயற்சியால் இந்த இதழில் தொகுக்கப்பட்டுள்ளது. 

முருக உபாசனை பற்றிய பல அரிய கருத்துக்கள் வீடியோ கோப்புக்களாகவும் இணைக்கப்பட்டுள்ளன. 

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும் 

******************************************

திருப்புகழ் கூறும் சக்தி நிபாதம்

****************************************

திருப்புகழ் கூறும் அருணகிரி நாதரின் யோக நிலைகள்

************************************************

மந்திர சாதனைக்கு மகத்தான திருத்தலம் திருப்புகழ் போற்றும் ஆவினன் குடி

************************************************

முருகனின் உருவ யோக தத்துவத்தை விளக்கும் வள்ளலாரின் சுப்பிரமணியம் 

******************************************

கந்தக்குரு கவசம் மெய்ப்பொருள் விளக்கம்

************************************************** 

போன்ற சுவாரசியமான கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த மாத சிருஷ்டி இதழ்.

படிக்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் +94776271292/+917200081475 PDF கிடைக்கும்.


Sunday, October 16, 2022

தலைப்பு இல்லை

சென்னையில் நடிகர் ஜீவாவுடன் ஒரு சிறு சந்திப்பு! காமராஜர் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவராக மிகத்தீவிரமாக சமூக முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் செயலும் கொண்டிருக்கிறார். 

ஸ்ரீ அரவிந்தரின் மனிதச் சக்கரம் பற்றிய கோட்பாடுகள், சமூக மனம் எப்படி உருவாகிறது, மக்களின் தன்மைக்கு ஏற்பவே தலைவர்கள் உருவாகிறார்கள் என்பது பற்றி உரையாடினோம். 

மிகச்சிறிய உரையாடல், எனினும் பிரயோசனமாக இருந்தது!

மக்களின் மனதைக் கட்டியெழுப்புவதே மிக உயர்ந்த சமூகப்பணி!


Friday, October 14, 2022

தலைப்பு இல்லை

இந்த விஜயதசமி நாட்டியாச்சார்யா பாலச்சந்திர ராஜு ஐயா அவர்களிடம் நாதயோக சித்திக்காக இசைக்கருவிகளையும் நாட்டியத்தினையும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கற்றுக்கொண்டேன். 

கர்நாடக சங்கீதத்தில் கீதங்கள் வரை முன்னேறியிருக்கிறேன். 

நாட்டியாச்சார்யா பாலச்சந்திர ராஜு அவர்கள் யார் என்பதை அறிமுகப்படுத்த ருத்ர வீணை நாடகத் தொடரின் ஆரம்பத்தில் வரும் இராகம் பற்றிய விளக்கம் இவரது இராகபாவார்த்தம் என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. 32 இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய நிபுணர். நட்டுவாங்கத்தில் நிபுணர். மூகாம்பிகை - இராஜமாதங்கி உபாசகர்! 

இன்று இசை மருத்துவம், இசை எப்படி மனதை வசீகரித்து செயல் புரிகிறது போன்ற உண்மைகளை ஆழமாக உரையாடினோம். 

சங்கீத ரத்னாகாரம், அபிநவபாரதி, பரத சாஸ்த்திரம், கூத்த நூல், பஞ்ச மரபு, அபிநய தர்ப்பணம் ஆகிய நூல்களை, தமிழிசைப் பண்களையும் இராகங்களையும் சிறுகுறிப்பாக தமிழில் எழுதச்சொல்லி ஆசி கூறியுள்ளார். 

நான் ஒரு இசைக்கலைஞன் இல்லை! கற்றல் என்பது ஒரு தீராத ஆர்வம்! வாழ்வே யோகம் என்றபடி இசை - நாட்டியம் இவற்றிலுள்ள யோகத்தின் கூறுகளை ஆராயப்போய் பற்றிக்கொண்ட தீராத ஆர்வமாக சங்கீதமும் நாட்டியமும் ஆகிவிட்டது.


Wednesday, October 12, 2022

காளி சித்தர்

காலையில் திரையலிங்கர் அதிஷ்டானத்தில அன்னையின் தரிசனம்; 

சேந்நா, ஐம்பத்து ஒரு முண்டமாலை, காளியின் பாதார விந்தம்; 

திரையலிங்கர் உன்னை உபாசித்து இரு சத ஆயுளுக்கு மேல் பெற்ற இரகசியம் என்ன? என்றேன்.

அன்னை கூறினாள்;

உன் சுவாசமும் நானே

அதன் வழி உட்புகும் பிராணன் நானே,

பிராணன் இயக்கும் மனமும் நானே, மனம் இயங்கும் உடலும், உடலின் அணுவும் நானே!

சுவாசம் தீர்க்கமானால் கும்பகம் சித்திக்கும், கும்பகம் சித்தித்தால் பிராணன் பலமாகும், பிராணன் பலமானால் சுழுமுனையைத் துளைத்து மூலாதாரத்தில் உறைந்து நிறையும், பிராண பிலமாகி உறைந்தால் பதுமங்கள் மலரும்; பதுமங்கள் மலர்ந்தால் குண்டலினியால் நான் ஊர்த்துவமாவேன்; என் ஊர்த்துவ முகம் ஐம்பது இதழுக்குள் அட்சரங்கள் நிரப்பும்; தட்சிண மார்க்கமாய் எழுந்து இதை நான் செய்வதால் நான் தட்சிண காளி, 

எழுந்த குண்டலினி இராஜபாட்டையில் சென்று ஆயிரம் இதழ் சேர்ந்தால் காலம் காலி, இதனால் நான் காலசங்கர்ஷினி;

தட்சண மார்க்கமாய் தொடங்கி காலத்தைக் காலி செய்தால் என் பணி செய்து முடியும் வரை உடலில் இருக்கலாம்.

இதை சாதித்த காளி புத்திரன் திரையலிங்கன்! அவன் உபதேசம் பெற்று விட்டகுறை தொட்ட குறையாய் என்னை இராஜ கௌல வாம பாதையில் இரு துவி தஸ மண்டலம் பரவைராக்கியமாய் உபாசிக்க காயசித்தி! என்னை நீ உபாசித்து அகத்தியன் பணி செய்ய ஆசிகள் என்றனல் அன்னை!

இதைச் சாதிக்க தட்சணத்தில் தொடங்கி காலசங்கர்ஷனத்தில் முடி என்றால் கருணை மிகு கண்ணால்!

ஶ்ரீ ஸக்தி சுமனன்

த்ரைய லிங்க சுவாமிகள் அதிஷ்டானம்

கங்கா காட், காசி

12 oct 2022


தலைப்பு இல்லை

நமப் பார்வதி பதயே நமஹ

ஹர ஹர மஹாதேவ்....

மஹாதேவர் ஸ்ரீ விஸ்வ நாதரிற்கு ஸப்த ரிஷி பூஜை

ஸ்ரீ அன்னப்பூரணிதரிசனம்

விசாலாட்சி அம்மாவிற்கு அபிஷேகம்

தர்ம ராஜர் யம பதவி பெற்ற தர்ம குண்டத்தில் ஹவனம்

ஸ்ரீ மகா கால பைரவருக்கு துரிய சந்திபூஜை

ஸ்ரீ அகத்திய லிங்கத்திற்கு கைகளால் அபிஷகம்

மணிகர்ணிகையில் ஜெப சாதனை 

தண்டபாணி தரிசனம்

திரையலிங்க ஸ்வாமிகள் அதிட்டானத்தில் சாதனை

சார் நாத் புத்தபகவான் தனது தர்மச்சக்கரத்தை சுழற்றிய இடத்தில் உள் செல்லும் - வெளிச்செல்லும் மூச்சைக் கவனித்து...

சன்னியாசி போஜனம் இவற்றுடன் காசி தரிசனம் கால பைரவர் அருளாசியுடன் பூர்த்தியானது....

காண்போர் அனைவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என இவை அனைத்தும் கிடைக்கப் பிரார்த்தனைகள்!


Tuesday, October 11, 2022

தலைப்பு இல்லை

Bodhi Tree in Sarnath - Branch of Anuradhapura Maha Bodhi Tree.

Sarnath - where lord Buddha started his Dharma (Dhamma) chakra.

 SARNATH

SARNATH IS ONE AMONGST THE FOUR HOLY PLACES ASSOCIATED WITH THE LIFE OF LORD BUDDHA. THIS IS THE PLACE WHERE BUDDHA AFTER ATTAINING ENLIGHTENMENT AT BODHGAYA, PREACHED HIS FIRST SERMON TO HIS FIVE ERSTWHILE COMPANIONS. THIS EVENT IN BUDDHIST LITERATURE, IS KNOWN AS DHARMA CHAKRA-PRAVARTANA OR THE TURNING OF THE WHEEL OF LAW. FOUNDATION OF THE VERY FIRST BUDDHIST SANGHA WAS ALSO LAID OVER HERE BY LORD BUDDHA HIMSELF IN BUDDHIST TEXTS THE PLACE IS RECORDED AS RISHIPATAN OR ISSIPATANA AND MRIGADAVA OR MRIGADAYA. THOUGH ITS MODERN NAME SEEMS TO BE A CONTRACTION OF SARANGANATH (LORD OF DEERS), STILL BORNE BY THE MAHADEVA ENSHRINED IN A TEMPLE NEARBY. THE PLACE IS HELD EQUALLY HOLY BY THE JAINAS, AS BEING THE VENUE OF THE AUSTERITIES OF SREYANSANATHA, THE ELEVENTH TIRTHANKARA. THE ARCHAEOLOGICAL IMPORTANCE OF THE SITE WAS FIRST BROUGHT TO LIGHT BY MR. DUNCAN AND COL. E MACKENZIE DURING 1798.A.D WHICH WAS FOLLOWED BY A SERIES OF EXCAVATIONS BY ALEXANDER CUNNINGHAM (1835-36), MAJOR KITTOE (1851-52), MR. F. O. OERTEL (1904-05), SIR JOHN MARSHALL (1907), M.H. HARGREAVES (1914-15) AND LASTLY BY DAYARAM SAHANI, THESE EXCAVATIONS HAVE UNEARTHED A NUMBER OF MONASTERIES, STUPAS, TEMPLES, INSCRIPTIONS, SCULPTURES AND OTHER ANTIQUITIES DATING FROM THIRD CENTURY B.C TO TWELFTH CENTURY AD. NOTEWORTHY AMONG THEM ARE DHARMARAJIKA STUPA, DHAMEKH STUPA, MULGANDHA KUT, AN ASOKAN PILLAR WITH. LION CAPITAL DHARMA-CHAKRA-JIN-VIHARA OTHER MONASTERIES, CLUSTER OF VOTIVE STUPAS AND A LARGE NUMBER OF SCULPTURES. THE ARCHAEOLOGICAL SURVEY OF INDIA HAS MAINTAINED A SITE MUSEUM CLOSEBY, WHICH HOUSES THE SCULPTURES, INSCRIPTIONS AND OTHER OBJECTS OF INTEREST RECOVERED FROM THE EXCAVATIONS.


Sunday, October 09, 2022

பைரவ தரிசனம் - பைரவ ஸித்தி

துரியசந்தியில் காசிகாபுராதி நாத தரிசனம் 

சுரபானம் என் கையால் ஏற்று அனுக்கிரகம்

அதிரும் உடுக்கைச் சத்தம் கர்மமெல்லாம்

உதிர்வித்து மூலாதார பைரவியை விழிப்பித்து

சகஸ்ராரம் சேர்ப்பித்து தூங்காமல் தூங்கும் நிலை

தந்தீர் ஆனந்த பைரவா 

கோடிப் சூரியப் பிரகாச ரூபம் 

தேடியும் கிடைக்காத ஜோதியாக 

விஸ்வரூபம் கொள்ளும் விஸ்வ நாதர்

ஸப்த ரிஷிகள் பூஜை ஏற்கும் நேரம் 

அகஸ்திய குலம் தழைக்க அகத்தில் 

ஒளியாக நிலைத்து நிற்பீர்

அதிர்வுறும் பிரபஞ்சம் உம்மிருப்பு

இதையறியும் ஞானம் உம் கருணை

சிவரூப பைரவா நீயே என் ஆத்மா 

எம்குரு சித்த நாகரை பைரவ சித்தராக்கினீர்

உம் கருணையால் பைரவ சித்தி அருளுவீர்

எமக்கு, 

கர்மத்தால் மனதில் எழும் விருத்தியை

உமக்கும் சம்ஸான புருவமத்தியில் ஆகுதியாக்குகிறேன்

நீரே பிரபஞ்சத்தில் எல்லாமாக இருக்கும் போது

ஆரிங்கு பயம் தரமுடியும் எனக்கு

காசி எனும் புருவமத்தியில் 

வாசி எனும் கயிறு கொண்டு

அக்ஷங்கள் இரண்டையும் நிறுத்தி

பிராணன் எனும் நெய்யூற்றி

எண்ணம் எனும் சமித்து இட்டு 

பைரவ ஒளியில் ஆகுதியிட 

பைரவ ஸித்தி எனும் அனுக்கிரகம் தந்தீர்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

துரிய சந்தி, வாரணாசி

09-Oct-2022


விசாலாக்ஷி அருளால் சிவ ஒளி காணல்

பிரம்ம முகூர்த்தத்தில் அகண்ட கண்ணுடையாள் தரிசனம்,

பாலும் சுத்த ஜலமும் ஆதிபீடத்திற்கு அபிஷேகம்,

காசி என்றால் சிவத்தின் ஒளி பரவும் இடமென்றாய் அம்மா

நகரமே சிக்கலும் விக்கலும் எச்சிலுமாய் இருக்கிறதே என்றேன். 

சிரித்தாள்; ஸ்தூலமுண்டு, சூக்குமம் உண்டு, அதி சூக்குமமும் உண்டு, இவை தாண்டிய காரணமும் உண்டு; அதற்கு மேல் மகாகாரணமும் உண்டு; கேள்வி கேட்டால் மகாகாரணம் ஏறும் வரை அப்பியாச வைராக்கியம் உனக்கு உண்டென்றால் அனைத்திற்கும் பதிலும் உண்டென்றாள் அன்னை! 

சிறியேன் யான் உனது பஞ்சபூத ஆட்டத்தில் மயங்காமல் இருப்பது எப்படி, நீதான் அப்பியாச வைராக்கியம் தந்து வழி கூறவேண்டும் அம்மா! என்றேன். 

மந்தகாசப் புன்னகை உமிழ்ந்தாள்

கலி என்பது மகா குழப்பம், நேரற்ற தன்மை! 

இதுவே காசியின் ஸ்தூல அமைப்பு.

ஸ்தூலம் என்பது அழுக்கு. அதற்குள் சிவ ஒளியை அறியும் நுட்ப ஆற்றல் பெறவேண்டும் மகனே என்றாள்! 

காசி ஸ்தூல அமைப்பே உள்ளிருக்கும் சிவத்தின் ஒளியை அறியமுடியா உன்மனதினதும் உடலினதும் குழப்பம்! 

தெய்வத்தைக் காணவென்று வழியெங்கும் ஸ்தூலக் கண்கொண்டு கவனம் இழந்தால் அழுக்கும், அசுத்தமும் என்று மனம் கலங்கும்! 

பைரவரின் அருள் தரும் விழிப்புணர்வுடன் ஸ்தூலத்தில் இருக்கும் அழுக்கையும் பெருங்குழப்பத்தையும் தாண்டி, எனது அருளால் விசாலமான கண் பெற்றால் அழுக்கான ஸ்தூலத்திற்குள்ளேயே சூக்குமம், அதிசூக்குமமும், காரணமும், மகா காரணமும் காணும் ஆற்றல் பெறலாம்.

மலமும் சதையும் மூத்திரமும் நிறைந்த உடலுக்குள்ளே இறையின் அருள் பிரவாகிக்கும் சூக்கும நாடிகள் உண்டு. அந்த நாடிகளின் வழி உள்ளே சென்றால் புருவமத்தியில் காரணமான ஆன்ம ஒளி உண்டு; அது இன்னும் நுண்மையானால் மகாகாரணமான சிவத்தின் ஒளியும் உண்டு. 

உனது கண் எப்போதும் புலன் வழி புறவயமாகப் பார்த்து பழகும்போது ஸ்தூலமே உணர முடியும். அதைத்தாண்டி பார்க்க உன் முயற்சி வேண்டும்! முயற்சி சிரத்தையானால் எனது அருளால் மற்றவை சித்திக்கும்; கவலை வேண்டாம்! 

கண்ணை நேரே புறவயமாய் செலுத்தி புலன் வழி அழியும் நிலை போகம், அகமுகமாய் திரிபுடியில் செலுத்தினால் அது சிவயோகம். 

இட, பிங்கலை மூலாதாரம் தொடங்கி திரிபுடியில் இணைய மீனாக ஓடும் பிராண ஓட்டத்தை நடத்துவதால் நான் மீனாக்ஷி.

இந்த ஓட்டம் சிவத்தை அடையும் வரை சிவகாமத்தை உண்டுபண்ணுவதால் நானே காமாக்ஷி - சிவகாமி!

இந்த யோகத்தை நீ செய்ய விசாலமான சூக்கும அறிவைப் பெறச் செய்வதால் நான் விசாலாக்ஷி! 

இதுவே அகவிழிப்பு பெற்றவனுக்கு நான் காட்டும் யோக வழி!

குரு காட்டிய வழியில் காசியில் எட்டுத்திக்கும் பைரவர் இருக்க அகங்காரம் அழிந்து அவரருளால் விழிப்புணர்வு பெற்றால் நான் உனக்கு விசாலமான அகக்கண்ணைத் தருவேன்; அந்தக்கண் கொண்டு பார்த்தால் ஸ்தூல அழுக்கிற்கு அப்பால் இருக்கும் சூக்குமமாகவும், அதிசூக்குமமாகவும், காரணமாகவும், மகா காரணமாகவும் இருக்கும் சிவத்தின் ஒளி உள்ளிருப்பதைக் காண்பாய் என்றாள் அன்னை!

இது உன்னுடலிற்குள் நடக்கிறது; இதை அறியும் பக்குவம் இல்லா மானிடர் அவரவர் பரிணாமத்திற்கு தக்க விளங்க காசித் தெருவில் நடந்து குழம்பி என் பீடம் வந்தால் சிரத்தையுள்ள சாதகனில் கோடியில் ஒருவனுக்கு விசாலமான அகக்கண்ணைத் தந்து சிவஒளி காணும் வழியை அருளுகிறேன் என்றாள் அன்னை விசாலாட்சி. 

நானும் இதையடைய ஆசி வேண்டுகிறேன் என்று பணிந்தேன். நானே அகஸ்தியமயியாக நின்று உணர்த்துவிப்பேன் என்று ஒளிர்ந்தாள் விசாலாட்சி.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

பௌர்ணமி, பிரம்ம முகூர்த்தம் 

காசி விசாலாட்சி சக்தி பீடம்

09-அக்டோபர்-2022


Saturday, October 08, 2022

தலைப்பு இல்லை

    மணிகர்ணிகை ஸக்தியவள் பீடம் 

    அணிசெய்யும் மரணத்தின் விழிப்புணர்வு 

    கரணத்தில் ஞான அனுபவமாகு மிடம்

    நிரந்தரம் இல்லா வாழ்வில் ஆங்காரம் 

    அழிந்து உணர்வு தெளிந்து அருள்

    பொழிந்து அமரத்துவம் பெற வழி கூறும்

    காசியின் ஞான பீடம்.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

07- அக்டோபர் -2022

மணிகர்ணிகை, வாரணாசி


Thursday, October 06, 2022

பைரவ ஸ்துதி

அசையும் அசையாப் பொருளில் 

இசைவாய் நிறையும் 

விசேஷ உணர்வின் இருப்பே!

எங்கும் நிறையும் 

ஏகமாய் ஆதியும் அந்தமும் இல்லா மூலப்பொருளே!

மஹா கால பைரவரே

திக்கற்றவர்களின் துணையே 

என் சித்தத்திலும் ஹ்ருதயத்திலும் இருத்தி 

உம்மை நான் தியானிக்கிறேன்

ஸ்ரீ ஸக்தி சுமனன் 

காலபைரவ ஸன்னதி

வாரணாசி

06- OCT - 2022


Wednesday, October 05, 2022

தலைப்பு இல்லை

சில நாட்களுக்கு காசி வாசி!

பைரவப் ப்ராதுர்பாவம் வாசிப்புடன் காசியில்! 

ஓம் காலகாலாய காலாதீதாதாய காசிகாபுராதிநாத காலபைரவாய நமஹ


தலைப்பு இல்லை

Day of Victory over senses & mind 

விஜயதசமி 

காண்போர் அனைவருக்கும் அன்னையின் அருள் பெருக, வளம் பெருக பிரார்த்தனைகள்! பூரண யோகம் சித்திக்க ஒளி பெருகட்டும்.


Tuesday, October 04, 2022

தலைப்பு இல்லை

French institute of Pondicherry- சைவ ஆகமங்கள் பாதுகாக்கப்படும் மிகப்பெரிய இடம். அரிய பல சூழலியல் ஆய்வுகளும் நடைபெறுகிறது.

சிறிது நேர பார்வையிடல், வாசிப்பு


தலைப்பு இல்லை

இன்று சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் சன்னதியில் எம்பெருமானுக்கு அர்ப்பணித்து ஆடிய ஒரு அழகிய நடனத்தைக் கண்டோம். 

பரதசாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாயம் ரசாத்யாயம்; இது இரசானுபவம் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. இரசானுபவம் என்பது நடனத்தைக் காணும்போது மனதிற்கு ஏற்படும் இன்பம். இந்த அனுபவம் இல்லாமல் எந்தக்கலையையும் இரசித்து அனுபவிக்க முடியாது. 

ஸ்ரீ அபிநவகுப்தர் இரசசித்தாந்தம் பற்றி விரிவாக உரையாடுகிறார். பரத சாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாய உரையில் நாட்டியத்தின் பதினொரு அங்கங்களைக் குறிப்பிட்டு அதில் முதன்மையானது இரசம். 

பரதமுனி இரசம் என்பது ஒரு நாட்டிய மங்கை வெளிப்படுத்தக்கூடிய மொத்தக் கலை உணர்ச்சி என்கிறார். இரசம் இல்லாமல் எந்தப் புலனும் இன்பத்தை அனுபவிக்க முடியாது. 

நல்ல நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்த மனம் சிவபெருமானின் ஆனந்த கூத்தினை காணும் அனுபவத்தை திருமூலர் இப்படிச் சொல்லுகிறார்.

சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்

சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார் அறிவாரே


Monday, October 03, 2022

தலைப்பு இல்லை

சிதம்பரம் 

செஞ்சடைக் கற்றை முற்றத் 

திளநிலா எறிக்குஞ் சென்னி

நஞ்சடைக் கண்ட னாரைக் 

காணலா நறவ நாறும்

மஞ்சடை சோலைத் தில்லை 

மல்குசிற் றம்ப லத்தே

துஞ்சடை இருள் கிழியத் 

துளங்கெரி யாடு மாறே.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...