குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 23, 2023

தேவாரம் கூறும் சிவத்தியானம் – 01

 

கீழ்வரும் தேவாரத்தை ஒருமுறை படித்துவிடுங்கள்; பின்னர் அதன் கீழிருக்கும் பொருளை மெதுவாக வாசித்து கண்களை மூடி உங்கள் மனக்கண் திரையில் சிதாகாசத்தில் பாவனை செய்யுங்கள்!

தோடுடைய செவியன்விடை

யேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1

உள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்

தேத்தஅருள் செய்த

பீடுடையபிர மாபுரம்மேவிய

பெம்மானிவ னன்றே.

{ திரு ஞான சம்பந்தர் அருளிச் செய்த திருக்கடைக் காப்பு - 01; தலம் : சீர்காழி - 01-பிரமபுரம் ; திருமுறை : முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}

கண்களை மூடி புருவமத்தியில் இருத்தி சிதாகாச வெளியில் கீழ்வருமாறு பாவியுங்கள்!

நந்தியெம்பெருமானாகிய பெருத்த திமில் கொண்ட காளையின் மேல் அமர்ந்திருக்கும் பொன்னிற ஒளி வீசும் சிவபெருமானை நாம் இந்த தேவ ஆரத்தால் தியானிக்கப்போகிறோம்!

பொன்னிறத் தேகம் மலங்கள் நீங்கிய கண்ணிற்கே தெரியும்! என்னுடைய மும்மலங்களையும் பொடியாக்கும் வல்லமை சிவபெருமானுக்கே உள்ளதென்பதை நான் அவரது சுடலைப் பொடி பூசிய உடலைப் பார்த்து உணர்கிறேன்! எனது மும்மலங்களும் அவரது அருட்கடாட்சத்தால் பொடிப்பொடியாகிறது!

என்னுடைய மலங்கள் நீங்கிய ஆன்மா, மனம் என்பவை வெண்மதி போன்று பிரகாசிக்கிறது! சிவபெருமானின் சடையில் இருக்கும் சந்திரகலை எனது மனம், புத்தி இவற்றைத் தூய்மையாக்கி என்னை செம்மையுற வைக்கிறது!

இப்படி என்னைப் பற்றியிருந்த மலங்களை நீக்கியதான் எனது உள்ளம் முழுக்க சிவபெருமான் மேல் பற்றியதால் என் உள்ளம் கவர் கள்வனாகிய அந்தச் சிவபெருமானை அழகிய இதழ்களுடைய மலர் மாலைகளை அணிந்த அந்தப் பெருமானை தினம் தினம் பணிந்து என்னுள் பணிவு என்ற அகங்காரம், ஆணவம் அற்ற நிலையை ஏற்படுத்துகிறேன்!

ஏனென்றால் பெரும் பேடு அகங்காரம் முற்றிய பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து ஆணவமல நீக்கிய, பிரம்மனால் வணங்கப்பட்ட பெருமானே உம்மை நான் தியானிக்கிறேன்!

இந்தத் தேவாரத்தைப் பாடும் போது மனக்கண்ணில் இந்த உருவகத்தை அனுபவித்து காட்சிப்படுத்தி படித்து வாருங்கள்! மனதில் சிவ இன்பம் தோன்றும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...