குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 15, 2023

அகத்தீசர் - புலத்தீசர் - திரணதூமாக்கினி - தொல்காப்பியர்

 

தொல்காப்பியத்தின் முதல் அச்சுப்பதிப்பு 

தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், சகலகலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரால் பரிசோதிக்கப்பட்டுக் கல்விக்கடல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, பிலவங்க ஆவணி கி. பி 1847 ஆண்டு பதிப்பிக்கப்பட்டது!

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால்

தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும் ஜமதக்னி முனிவரின் மகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமதக்னி முனிவருக்கு ஐந்து மகன்மார்; இதில் ஐந்தாவது மகனாகிய பரசுராமரே அனைவருக்கும் அறியப்பட்டவர். தொல்தமிழ் சேர தேசமாகிய கேரளத்தின் பல்வேறு மரபுகளின் தந்தையாக பரசுராமர் போற்றப்படுகிறார்.

தொல்காப்பியர் என்பது தொல்காப்பியம் இயற்றியதால் வந்த காரணப்பெயர்; அவரது இயற்பெயரை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் திரணதூமாக்கினி என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த விடயம் அகத்தியரின் மாணாக்கார் என்பது! தமிழ் சித்த மரப்பில் அகத்தியரின் பிரதான மாணாக்கராக பல மருத்துவ யோக நூல்களில் மாணவனை விளிக்க "புலத்தியனே" என்று விளிப்பதைக் காணலாம்.

அகத்தீ - திரண தூம அக்கினி - புல அகத் தீ என்ற இந்த மூன்று சொற்களும் ஒரு இடைத்தொடர்பு உடையவர்.

அகத்தியர் அகத்தில் தன் தவத்தால் அக்கினி வளர்த்ததால் அகத்தீசர் எனப்பட்டார்!

அந்த அகத்தில் உருவாகிய அறிவுக் கனல் அகத்தியரிலிருந்து வெளிப்பட அதை தனது புலன் களால் ஏற்று தன்னில் தீயை வளர்ந்த மாணவன் புலத்தீசன் எனவும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

அகத்தில் அறிவும் ஆற்றலும் கனலாய், தீயாய நிறைந்தவர் அகத்தீசர், ஆசிரியர், குரு!

அதைப் புலன்களால் ஏற்று வளர்க்கும் நன் மாணாக்கன் புலத்தீசன்!

அகத்தீசர் குரு - புலத்தீசர் மாணவன்; இதே அர்த்தத்தில்தான் திரண தூமாக்கினியாரும் வருகிறார்.

திரண என்றால் அற்ப, தூம என்றால் புகை, அக்கினி என்றால் தீ! திரண தூம அக்கினி என்றால் அற்பமான புகையைக் கொண்ட அக்கினி என்று அர்த்தம்! யாகத்தில் புகை குறைந்து பிரகாசிக்கும் அக்கினியை நாம் திரண தூம அக்கினி என்று சொல்லலாம்! தனது மனக்குழப்பங்கள், சித்த விருத்திகளைக் குறைத்து ஆசிரியரிடமிருந்து அறிவுக்கனலைப் பெறத் தயாராக இருக்கும் மாணவனை நாம் திரண தூம அக்கினி என்று சொல்லலாம்! அகத்தியரிடம் அப்படிப்பட்ட சிறந்த ஒரு மாணவனாக இருந்ததால் அவருக்கு அப்படிப்பட்ட பெயர் வந்திருக்கலாம்! He is a bright - அக்னி - student of Agasthiya maharishi

அறிவை ஆற்றலை எம்மை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றும் அனைத்தையும் அக்கினியாக - தீயாக பாவிப்பதுவே எமது பழந்தமிழ் மெய்யியல் மரபு!

இந்த வகையில் அகத்தீசர் - புலத்தீசர் - திரண தூம அக்கினியார் இந்தப் பெயர்கள் மூன்றும் தமிழ் சித்த மெய்யியல் மரபின் மிக முக்கியமானவை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...