குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 28, 2021

தலைப்பு இல்லை

 

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை (Department of Philosophy) ஒழுங்கு செய்திருந்த நிகழ்நிலை பேச்சுத்தொடரில் வெளிப்பார்வையாளனாக பங்குபெறும் அழைப்பினை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சிவகரன் அவர்கள் தந்திருந்தார்!

எனது மற்றைய பணிச்சுமை காரணமாக ஆறு உரைகளில் ஒன்றை மாத்திரமே கேட்கக்கூடிய வாய்ப்பும், காலநிலை மாற்றத்தினைப் பற்றிய உரைக்கு கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பும் அமைந்தது!

முதலாம் ஆண்டு மாணவி செல்வி வர்ஷாவின் உரை மிகுந்த மெய்ப்பாடுடன் அருமையாக இருந்தது!

யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மெய்யியலில் துறை இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் செயற்பாடு போற்றுதற்குரியது!

யாழ் பல்கலைக்கழகம் தனது மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பதும், திரு. சிவகரன் போன்ற விரிவுரையாளர்கள் தமது விரிவுரையுடன் நின்றுவிடாமல் மாணவர்கள் திறனை வளர்க்கும் இத்தகைய மேலதிக பணிகளைச் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதும் உற்சாகப்படுத்துவதும் அவசியமானது!

தலைப்பு இல்லை

 

பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும்போது கணிதம் கட்டாயம்! ஆனால் எமக்கு புகுத்தப்பட்டதோ, நீ உயிரியல்தான் படிக்கிறாய் கணிதம் படிக்கத்தேவையில்லை என்ற மனப்பாங்கு!

எனக்கோ எதைப்பார்த்தாலும் அதை அறியவேண்டும், புரியவேண்டும் என்ற ஆவல்! ஒரு விஷயத்தினை ஏன் செய்கிறோம்? எதற்காகச் செய்கிறோம் என்று புரியாமல் எதையுமே செய்ய மனம் இடங்கொடுக்காது! கணித வகுப்புகளில் விரிவுரையாளர் வகையீடு, தொகையீடு ஏதோ மாயாஜாலம் காட்டுவதுபோல் எழுதிக்கொண்டு போவதைப் பார்த்து வெறுத்துப்போய் கடைசியில் கணிதப்பாடத்தில் ஆப்பு வாங்கவேண்டியதாகிவிட்டது!

இப்படியிருந்த நான் தத்துவத்தில் இருந்த ஆர்வத்தில் நியுட்டனை வாசிக்கப்போய் எனக்கு குழப்பத்தைத் தந்த இந்த நுண்கணிதம் (calculus) நியுட்டன் உருவாக்கியது என்றும் பிரபஞ்சத்தின் இயக்கமெல்லாம் நுண்கணிதத்திற்குள் அடங்குகிறது என்றும் புரிய ஆரம்பித்தது.

நுண்கணிதம், குழப்பம் தரும் கணிதக்குறியீடுகள் இல்லாமல் அடிப்படைத் தத்துவங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்ற எனது பிரச்சனைக்கு இறுதியாகத் தீர்வு தந்த நூல் இது!

பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள ஒரு சுருக்க மொழி - abstract language - தேவை! அது நுண்கணிதம்!

Saturday, February 27, 2021

தலைப்பு இல்லை

சுவாமி விவேகானந்தரின் தியானமும் அதன் முறையும் என்ற நூலில் யோகசக்தி பெற்ற மனதின் மூலம் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்பதை தனக்கு பவாஹாரி பாபா என்ற யோகியுடன் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

உடம்பால் செய்கின்ற உதவி ஒன்றுதான் உதவி என்று நினைக்கின்றாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோகசக்தி பெற்ற ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன?

- யோகி பவாஹாரி பாபா - 

தலைப்பு இல்லை

 

சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கு எண்: 393

சரண் புக்ஸ் அரங்கில் எமது சிவயோக ஞானத்திறவுகோல் கிடைக்கிறது!

Thursday, February 25, 2021

தலைப்பு இல்லை

 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

எப்போதும் எண்ணும் எண்ணமெல்லாம் உயர்வானதாக மாத்திரம் இருக்க வேண்டும்; தள்ளாமை, துன்பம் வந்து எம்மைத் தள்ளினாலும் நாம் எண்ணுவது எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும்!

தலைப்பு இல்லை

 

நாளை ஆயில்ய நட்சத்திர நிகழ்வு! அகத்தியர் ஞானம் பருக அனைவரும் வருக!

Topic: அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் - 02

Time: Feb 26, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89601379972...

Meeting ID: 896 0137 9972

Passcode: 176403

Wednesday, February 24, 2021

தலைப்பு இல்லை

 

இன்று பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு சூழலியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்கள் கள ஆய்விற்காக எமது சாகம்பரா இயற்கை விவசாயப் பண்ணைக்கு வருகை தந்திருந்தார்கள்!

சூழலியல் பாதுகாப்பான விவசாய முறை எப்படிச் செயற்படுகிறது என்ற கள ஆய்வு

Monday, February 22, 2021

காயத்ரி உபதேசமும் பெண்களும்

 

தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரின் கருத்து! எது சரி என்பதற்கு ஆப்த பிரமாணம் - உண்மையை உணர்ந்த பெரியவர்கள் கூறுவது என்பது உயர்ந்த ஒன்று! இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். மந்திர சாதனை என்பது தானாக புத்தகங்களைப் படித்துக்கொண்டு அந்த மகான் இப்படிக் கூறியிருக்கிறார், இந்த மகான் இப்படிக் கூறியிருக்கிறார் என்று விதண்டாவாதம் செய்பவர்களுக்குரியதல்ல!

அவரவர் குரு முகமாகப் பெற்றுக்கொண்ட உபதேசத்தின் வழி பயிற்சிக்க வேண்டியது! ஆகவே கீழே உள்ள உபதேசம் குறித்த அந்த குருபரம்பரை கடைப்பிடிக்கும் நியதி என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சில குருபரம்பரை இந்த உபதேசம் இன்னாருக்கு மாத்திரம் என்று வகுத்திருக்கிறது. சில குருபரம்பரை அகத்தகுதியுள்ள அனைவருக்கும் என வகுத்திருக்கிறது. எனது குருநாதர் போன்றவர்கள் கேட்பவர்கள் அனைவருக்கும் என்ற நியதி வைத்திருந்தார்கள். இவை அவரவர் ஆன்ம சுதந்திரம்! இதைப் புரியாமல் அறியாமையில் ஒப்பிடுவது, வாதிடுவது சாதகர்களுக்குத் தேவையற்ற, பயனற்ற விஷயம்.

*******************************************************

உரையாடல்

காயத்ரி/உபநயனம் ஆண்களுக்கு மாத்திரம் உரியதா?

அப்படியானால் அப்படி ஏன் சொல்லப்படுகிறது?

ஸ்ரீ அம்ருதானந்த நாதர்: காயத்ரி (மந்திரம்) ஆண், பெண் இருவருக்கும் உரியது. பெண்கள் உபவீதத்தை சன்னவீரமாக (மாலையாக) அணிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது. நான் பல பெண்கள், சிறுமிகள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்களுக்கும் காயத்ரி உபதேசம் தந்துள்ளேன். பிரம்மத்தை அறியும் பிரம்ம உபதேசம் அனைவருக்கும் உரியது. இதுவே எனது நம்பிக்கை! நம்புவதற்கு மேலாக செயலில் அனைவருக்கும் உபதேசித்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் செய்வது பிழையாக இருந்தால்? (சாஸ்திர விரோதமாக இருந்தால்)

ஸ்ரீ அம்ருதானந்த நாதர்: நான் எவ்வளவு உயர்வடைந்திருக்கிறேன் என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த சிறிய அறிவிற்குள் இதைக் கூறுகிறேன். என்னுடைய பதில் பூரணமற்றதாக இருக்கலாம், அப்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

மகாகவி காளிதாசர் கூறுகிறார்: பிரபஞ்ச மாதாவாகிய அன்னை அனைத்திற்கும், அனைவருக்கும் அன்னை! அவன் மூடனோ, அறிவாளியோ! அனைவரும் அவளை அவர்கள் அறிந்த வகையில் வணங்கலாம். அனைத்தையும் ஏற்று, தவறுகளை மன்னித்து அவளை அடையும் பாதையில் செலுத்துபவள்.

இதை நாம் புரிந்துகொண்டு அன்னையின் மந்திரம், யந்திரம் (மேரு) காரண சரீரத்தில் இருப்பது; காரண சரீரம் பௌதீக உடலைத் தாண்டி குண்டலினி ரூபமாக இருப்பது; அங்கு ஆண், பெண், ஜாதி, மதம், நிறம் ஆகிய எவையும் இல்லை.

நான் கூறுகிறேன் என்று நம்ப வேண்டாம்; நான் பிழையாக இருக்கக்கூடும், பொதுவாக அனேகமானவை பிழையாகவும் இருந்திருக்கிறது. நீங்களே சாக்த உப நிஷதங்களைக் கற்றுக்கொண்டு உணர்ந்துகொள்வது சிறந்தது. திரிபுரதாபினி காயத்ரியிற்கும் ஸ்ரீ வித்தைக்கும் உள்ள தொடர்பினை ஆழமாக விளக்குகிறது.

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர்

Saturday, February 20, 2021

தலைப்பு இல்லை

 

சூழலியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு யதார்த்த தொழில் உலகில் எப்படி அவர்கள் அறிவைப் பயன்படுத்த முடியும் என்று அந்தந்த துறைகளில் அனுபவமுள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பினை பிரயோக விஞ்ஞான பீட தொழில் வழிகாட்டல் பிரிவினூடாக வடிவமைத்துள்ளோம்!

Friday, February 19, 2021

தலைப்பு இல்லை

 

ஸ்ரீ ஸக்தி சுமனனின் சூழலியல் தத்துவ சிற்றுரைத் தொடர் # 02

Environmental Philosophical Concept#02

genealogical bound

ஒவ்வொரு சமூகமும் தமது தோற்றம் பற்றிய பரம்பரைக் கதைகளைக் கொண்டிருக்கும்.

இந்தக்கதைகள் அவர்கள் வாழ்ந்த நிலம், சூழல் தொகுதிகளுடன் தொடர்புபட்டதாக இருக்கும்.

தமிழர்கள் பரம்பரைத் தோற்றுவாய் முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை என்ற ஐந்து சூழல் தொகுதிகளைக் கொண்டது. சங்க இலக்கியம் இந்த அடிப்படையிலேயே தமிழர்களின் வாழ்வியலைப் பிரிக்கிறது.

தலைப்பு இல்லை

 

வீரசிவாஜியாருடன் மும்பை ரயில் நிலையத்தில் ஒரு செல்பி!

இன்று சிவாஜி மகராஜாவின் பிறந்த நாள்,

சிவாஜி கணேசனாரினது அல்ல! ஏனென்றால் பலகாலம் நான் சிவாஜி கணேசனையே சிவாஜி மகாராஜா என்று நினைத்திருந்தேன்!

சிறுவயதில் கோகுலம் இதழில் சிவாஜி மகாராஜாவின் கதைகள் வரும். அதில் மூன்று கதைகள் என்றும் ஞாபகத்தில் இருப்பது!

ஒன்று, அவர் தனது குரு சமர்த்த ராமதாஸிடம் கருவில் உபதேசம் பெற்றார் என்பது, தாயின் கருவிலேயே வீரம் ஊட்டி வளர்க்கப்பட்டார் என்பது!

இரண்டாவது, சிவாஜி 16 வயதில் இருபது முப்பது பேருடன் தனியாக வாள்சண்டை போட்டு வென்றார் என்பது. இந்தக்கதையை வாசிக்கும்போது நான் சிவாஜி என்பது சிவாஜி கணேசன்தான் என்று பலகாலமாக நம்பிக்கொண்டிருந்தேன்.

மூன்றாவது, சிவாஜி நேரடியாக பெரிய கோட்டையைத் தாக்கித் தோல்வி அடைந்து கிராமப்புறமாக ஒரு மூதாட்டியிடம் உணவிற்காக கஞ்சி அருந்தும் போது கஞ்சியின் நடுப்பாகத்தை உடனடியாக அருந்தி சூட்டினால் வாயை சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அந்த மூதாட்டி அவரை சிவாஜியின் படைவீரர் என்ற நினைப்பில் நீயும் உன் மன்னன் போல் அவசரம் பிடித்தவனாக இருக்கிறாயே என்று கடிந்துகொள்ள, மன்னன் ஆச்சரியத்துடன் ஏன் பாட்டி அப்படிக்கூறுகிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு அந்த மூதாட்டி, கோப்பையின் கரையில் ஆறிய கஞ்சி இருக்கும் முதலில் அங்கிருந்து அருந்தத்தொடங்கினால் சற்று நேரத்தில் நடுவில் உள்ள கஞ்சி ஆறிவிடும், அதுபோல் எதிரிகளின் அரண்களை மெதுவாக உடைத்து எதிரி வலிமை குறைந்த பின்னர் மத்தியைத் தாக்க வேண்டும், இது தெரியாததால்தான் உனது மன்னன் தோல்வியைத் தழுவினான் என்றாள்.

இதைகேட்ட சிவாஜி தனது போர் உத்திகளை மாற்றினார் என்பதுதான் அந்தக்கதை!

இந்த நூல் வீரசிவாஜியின் வரலாறு கூறுகிறது! மும்பையில் வாங்கினேன்!

தலைப்பு இல்லை

 

யாழ்ப்பாணத்து மருத்துவ நூலான பரராசசேகரம் - பித்தரோக நிதானம் (?) நூலிற்கு உரை எழுதியது பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவு!

தலைப்பு இல்லை

 

அழகிய கடற்கரையில் இருந்தபடி சூழலியல் தத்துவம் பற்றி தமிழில் காணொளி மூலம் உரையாடும் ஒரு புதிய முயற்சி!

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்களேன்!

Thursday, February 18, 2021

தலைப்பு இல்லை

 

Every Human have the curiosity to know about them; astrology give some food for this curiosity!

Here you go!!!

About me {as my astrology reports}:

Just for fun, Anybody, who know me personally comment whether these statements are true?

You have the ability to seeing through anything or anyone, so it is very difficult to hide anything from you. This clarity of insight assists in the overcoming of opposition and the achievement of satisfaction. You have a quick grasp of any situation and the ability to solve any problem, for you go directly to the point.

Your career must offer you both intellectual stimulation and diversity. You will not be happy in any occupation that is humdrum and safe. As long as every day brings its fresh set of problems to be solved and surmounted, you will be satisfied. But anything with a spice of danger or intrepidity in it will please you even more. What we meant to say is that any job which require very high caliber and have some spice of danger is suitable for you.

You stick to your aim and do not feel pressured easily. You will be renowned as a great intellectual in the society because of the knowledge and education you have pursued. Even if you renounce the other aspects of life, you should not abandon your knowledge. This priority will keep you ahead of others in life. You will receive the guidance of many learned people which will benefit your studies. The knowledge you have acquired is an innate talent, which is why you should try to imbibe some of it in your personal life in the process of becoming a better human being. The urge to acquire knowledge will keep you at the top and you will be listed

among great intellectuals.

Sometimes, your education can remain at stake because of your independent attitude {this is true, I am missing my PhD for many years due to so much of interest in many fields} which is why you should try to reform this aspect of your personality.

Wednesday, February 17, 2021

தலைப்பு இல்லை

 

இன்றைய சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் நிகழ்வு - 03

நாத விந்துக லாதீ நமோநம

வேத மந்த்ரசொ ரூபா நமோநம

ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம

போக அந்தரி பாலா நமோநம

நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம

கீத கிண்கிணி பாதா நமோநம

தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம

தூய அம்பல லீலா நமோநம

தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்

ஓத லுங்குண ஆசா ரநீதியும்

ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை

சோழ மண்டல மீதே மநோகர

ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை

சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

ஒவ்வொரு திருப்புகழும் ஒவ்வொரு தலத்தில் உறையும் முருகனைப் பற்றிப் பேசுகிறது. இதை உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவர் முருகன் மேல் இருக்கும் பக்தியாய் அந்த முருகனைப் போற்றிப் புகழ்கிறார் என்ற உணர்ச்சியில் கருதி வருகிறார்கள். ஆனால் அருணகிரிநாதர் குரு உபதேசித்த தனது சடாட்சர மந்திர உபாசனையை, யோக சாதனையை ஒவ்வொரு தலத்திலும் நிகழ்த்தி அங்கு தான் பெற்ற அனுபவம், யோக சித்திகளை அளித்த அந்த முருகன் என்பதைப் பாடிச் செல்கிறார்.

அந்த வகையில் இந்தப்பாடல் பழனி முருகன் அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடி முருகன் அவரிற்கு என்ன ஆன்ம யோக அனுபவத்தை அளித்தான் என்பதைப் பார்ப்போம்.

https://youtu.be/ZIyzo-Exqf4

தலைப்பு இல்லை

 

இன்று மாலை சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல்

Sri Sakthi Sumanan is inviting you to a scheduled Zoom meeting.

Topic: சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் - 03

Time: Feb 17, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88329249659...

Meeting ID: 883 2924 9659

Passcode: 082192

Tuesday, February 16, 2021

தலைப்பு இல்லை

 

நேற்றைய தினகரன் சைவ மஞ்சரியில் ஹம்ஸ யோகம் - 07வது வாரக் கட்டுரை,

ஒரு எளிய பிரணாயாமப் பயிற்சி விளங்கப்படுத்தப்பட்டுள்ளது! ஆர்வமுள்ளவர்கள் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்ளலாம்.

தலைப்பு இல்லை

அன்னையின் அருளால் சகலகலா வல்லிமாலையில் ஐந்துபாடலுக்கு பொருள் சொல்லியாயிற்று!

அதன் பொருள் சொல்லுதல் என்பதைப் பார்க்க Musing or reflection of though என்பதே சரியானது!

பாடலைப் படிக்கும் போது எனக்கு ஏற்படும் புரிதலின் சுருக்கம்!

இன்னும் ஐந்து பாக்கி!

என் எண்ணத்தை சீராக்கி மிகுதியும் முடித்துவிடுவாள்! 

தமிழ் அரசியலில் ஆட்டக்கோட்பாடு

 

தமிழ் சமூகத்தில் தேர்தல் என்பது தனிமனித வெற்றியாக - கட்சி வெற்றியாக பாராளுமன்றம் செல்வது மாத்திரம் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் பாராளுமன்றம் செல்வது என்பது அரசியல் ஆட்டத்தின் ஒரு பகுதி! அரசியல் ஆட்டத்திற்குள் நுழைவதற்குரிய முதல் நுழைவுச் சீட்டு!

பாராளுமன்றத்திற்குள் நுழைந்த உறுப்பினர்கள் அரசியல் ஆட்டத்தில் காய்களை நகர்த்தி உரிமைகளையும், அதிகாரத்தையும், வளங்களையும் தாம் சார்ந்த சமூகத்திற்கு எவ்வளவு கொண்டுவருகிறார்கள் என்பதே அரசியல் ஆட்டத்தின் உண்மையான இலக்கு! ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் ஆட்டத்திற்குள்ளேயே நுழைவதில்லை! அல்லது தாம் சார்ந்த ஆட்டம் மட்டும்தான் உண்மையானது என்ற அறியாமை இருக்கிறது.

அரசை எதிர்த்துக்கொண்டிருக்கும் non co-operative game மாத்திரம்தான் சரியானது என்று ஆடுவதும், அரசினைச் சாராமல் எதுவும் நடக்காது என்று நிபந்தனை அற்று ஆதரவு தரும் ஒற்றைப்போக்கு co-operative game ஆட்டம் இரண்டுமே பலனற்றது. non co-operative game மைய நீக்கு விசையாக செயற்பட, co-operative game மைய நாட்ட விசையாகச் செயற்பட இரண்டினது சமநிலையே வெற்றி! இரண்டையும் இணைத்து கலப்புத் தந்திரோபாயமாக அரசியல் செய்யும் சாணக்கியத்துவம், ஒற்றுமை இன்னும் வாய்க்கவில்லை என்பதுதான் இங்கு பற்றாக்குறை!

Monday, February 15, 2021

தலைப்பு இல்லை

ஆட்டம் தொடர்கிறது...

                ஆட்டங்களில் தந்திரோபாய உத்திகள் (strategies) மிகமுக்கியமானவை. தந்திரோபாய உத்திகளை கோட்பாட்டு அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.

தூய தந்திரோபாய உத்தி - pure strategy

கலப்பு தந்திரோபாய உத்தி - mixed strategy

தூய தந்திரோபாய உத்தி என்பது அனைத்து நிபந்தனைகளும் மாறாமல் இருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு ஆட்டத்தினை வரையறுப்பது. பொதுவாக தமிழர்களின் அரசியல் இப்படித்தான் வடிவமைக்கப்படுகிறது. போராட்டம் செய்துவிட்டால் அமெரிக்காக்காரனும், வெள்ளைக்காரனும் அதைப் பார்த்து எமக்கு தீர்வு தருவான் என்று நம்புவதைப் போன்ற வெள்ளந்தியான தந்திரோபாயம். ஆனால் இயற்கையில், நிஜத்தில் எப்போதும் இப்படி இருப்பதில்லை!

ஒரு ஆட்டம் ஆரம்பித்தவுடன் எதிராளி அந்த ஆட்டத்திற்கெதிராக தர்க்கத்திற்கு உட்பட்டோ, தர்க்கம் எதிராளிக்குப் புரியாமலோ தனது எதிர் தந்திரோபாயத்தினைப் (counter strategy) பிரயோகிக்க ஆரம்பிப்பான்! எதிராளியை ஏளனம் செய்யும் மனம், முட்டாள் என்று சிந்திக்கும் மனம், எதிராளியைப் புரியாமல் சொந்த இன்பத்திற்காக மட்டும் விளையாடும் ஆட்டம் ஒரு போதும் சமநிலையை, வெற்றியைத் தராது!

ஆகவே ஒருவன் கலப்பு தந்திரோபாய உத்திகளை ஆட்டத்தின் ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப யதார்த்தமாக பிரயோகிக்கத் தெரிந்தால் மாத்திரமே ஆட்டம் பலனுள்ளதாக இருக்கும்!

ஆட்டத்தில் ஒத்திசைந்த கூட்டுறவு ஆட்டம், (co-operative game) ஒத்திசையாத கூட்டுறவற்ற எதிர்ப்பு ஆட்டம் (non co-operative game) இரண்டையும் எதிராளியின் தெரிவிற்கு ஏற்ப தேர்ந்து ஆடும் போதுதான் அதிகாரச் சமநிலை வரும்!

இப்படி இல்லாமல் எப்போதும் கூட்டுறவு ஆட்டம் என்றால் அடிமைகளாகவும், எப்போதும் ஒத்திசையாத கூட்டுறவு ஆட்டம் என்றால் எதிராளியாக மாத்திரமே ஆட்டத்தின் முடிவு இருக்கும்!

இதை ஆட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்! 

ஆட்டக்கோட்பாடு

 

நாம் இன்னொருவருடன் எண்ண ரீதியாக, பொருள் ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக ஏதாவது ஒரு பரிமாற்றத்தை ஆரம்பிக்கும்போது, செல்வாக்குச் செலுத்தும்போது நாம் ஆட்டத்திற்குள் (Game) நுழைகிறோம்.

ஆட்டத்திற்குள் நுழைந்தபின்னர் ஆட்ட விதிகளை (rules of the Game) புரிந்துகொண்டு அந்த ஆட்டத்தை நன்கு ஆடமுடிந்தால் மாத்திரமே ஆட்டம் சிறக்கும்!

வியாபாரம், அரசியல், சமூகத் தொடர்பாடல்கள், முரண்பாடுகள், காதல், உறவுகள் அனைத்தும் ஒருவித ஆட்டம்தான்!

கண்ணன் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை என்பதன் அர்த்தமும் அவன் ஒரு strategic game player என்பதுதான்! மகாபாரதம் பண்டைய ஆட்டவிதிகளுக்கான ஒரு கோவை என்று கூறலாம்!

ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் ஆட்டத்திற்குரிய தர்க்க விதிகளைப் புரிந்துகொண்டு அந்த விதிகளுக்கு அமைய ஆடுவோம் என்றால் மாத்திரமே ஆட்டம் இரசிக்கக்கூடியதாக, இன்பம் தரக்கூடியதாக இருக்கும்.

ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள், உத்திகள், ஆட்டத்தின் பலன் (players, strategies, and payoffs) இந்த மூன்றும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்!

ஆட்டக்காரர்கள் தகுந்த தர்க்க விதிகள் இன்றி மனம் பிறழ்ந்த நிலையில் ஆட்டம் ஆடுவது எப்போதும் குழப்ப நிலையிலேயே (Chaotic state) ஆட்டத்தினை வைத்திருக்கும்!

ஆட்டம் இரு வகைப்படும். ஒத்திசைந்த கூட்டுறவு ஆட்டம் (co-operative game) ஒத்திசையாத கூட்டுறவற்ற எதிர்ப்பு ஆட்டம் (non co-operative game) என இரு வகைப்படும்!

எனக்கும் வெற்றி - உனக்கும் வெற்றி என்பது கூட்டுறவு ஆட்டம்! எனக்கு வெற்றி - உனக்குத் தோல்வி என்பது எதிர்ப்பு ஆட்டம்.

ஆட்டம் தொடரும்....

#எனதுகோட்பாடுகள்

Sunday, February 14, 2021

#காதலர்தினம்

 

காதலின் நோக்கம் மனதிற்கு சிருங்கார அனுபவம் பெறுதல், சிருங்கார அனுபவம் என்பது அன்பும் ஆனந்தமும் மனதில் நிறைவது!

ஆனால் மனம் வக்கிரப்பட்டுப் போனதால் இந்த சிருங்கார அனுபவம் என்னவென்பது தெரியாததால் பலரும் Tom & Jerry வாழ்க்கை வாழ்வதுதான் காதல் என்று எண்ணத் தொடங்கியதே வாழ்க்கை கசப்பதற்குக் காரணம்!

காதல் வாழ்க்கைக்கான role model

ரதியும் மன்மதனா?

Tom & Jerry யா?

தலைப்பு இல்லை

 

காதலர் தினம் கொண்டாடும் அனைத்துக் காதலர் மனமும் சிருங்கார ரசம் நிறைய அந்த காமனும் ரதியும் அருளட்டும்!

காதலர் தினத்தை வேலண்டைன்ஸ் டே என்று மாத்திரம் கொண்டாடத் தேவையில்லை! நாளை மறு நாள் வரும் வசந்த பஞ்சமியும் காதலர் தினம்தான்!

வசந்தகாலம் மன்மதனாகிய காமனுக்கு உரிய காலம். வசந்தன் என்பது காமனின் நண்பன்! வசந்தகாலத்திற்குரிய உணர்ச்சி சிருங்காரம்! சிருங்காரம் என்பது சிணுங்கலுடன் கூடிய காதலுக்குரிய உணர்ச்சி! சிருங்காரத்தின் விரிவினை வள்ளுவன் ஏழு அதிகாரங்களில் தகையணங்குறுத்தல்.

குறிப்பறிதல், புணர்ச்சிமகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல், நாணுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல் என்று விரித்துக் கூறுவான். சிருங்கார ரசம் பயில வள்ளுவனை விட வேறு குரு இல்லை!

சிருங்கார ரசம் மனதில் அனுபவிக்கப்பட்டால் மனம் அன்பு, ஆனந்தம் இரண்டும் கலந்து அனுபவிக்கப்பட்டிருக்க வேண்டும். இருவர் காதலித்தால் இருவர் மனமும் அன்பாலும், ஆனந்தத்தினாலும் நிறைந்திருந்தால் மாத்திரமே அங்கு சிருங்கார ரசம் நிறையும்.

ஆகவே காதலின் நோக்கம் பொருட்கள் பரிசளிப்பதும், ஊர் சுற்றுவதும் அல்ல! அவற்றினைக் கருவியாகப் பாவித்து சிருங்கார அனுபவத்தை மனதில் பெறுதல்!

#காதலர் #காதலர்தினம் #காதல் #காமன்

தலைப்பு இல்லை

 

அடுத்த நிகழ்வு திருப்புகழில் ஆர்வமுள்ள அனைவரும் யோக உரை கேட்க வருக!

Topic: சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் - 03

Time: Feb 17, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88329249659...

Meeting ID: 883 2924 9659

Passcode: 082192

Friday, February 12, 2021

தலைப்பு இல்லை

 

மனிதன் உண்மையினை நேருக்கு நேர் அறிய பயமுடையவன்! நேருக்கு நேர் உண்மையை அறிய அவன் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதனால்தான் திகம்பரமான உருவத்திற்கு அலங்காரம் செய்வித்து அழகுபடுத்தி வணங்குகிறான்!


பைரவர் என்றால் பயத்தைப் போக்குபவர் என்று பொருள்! அதனால் பயமற்று உண்மையை நேருக்கு நேர் அறியச் செய்யும் விழிப்புணர்வினைத் தருபவர் என்பதால் பைரவர் திகம்பரராகவே வணங்கப்படுகிறார்!

தலைப்பு இல்லை

 

தேவிக்கு அவ்யாஜ கருணாமூர்த்தி என்று பெயர்!

காரணம் இல்லாமல் கருணை காட்டுபவள் என்று பொருள்!

இதைத்தான் வள்ளலார் அருட்பெரும் ஜோதியின் மூல அமிசம், காரணமற்ற ஜீவகாரூணியம், மற்ற உயிர்களின் மீதான தயை என்றார்!

எமது உடலில் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று காரணமற்று பின்னிப் பிணைந்து மனிதனாக உருப்பெறுவது இந்தக் கருணை என்ற இயல்பினால்தான்!

காரணம் அற்ற கருணை என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்வது, கருணை செய்வது! அவ்யாஜ கருணா மூர்த்தத்தினை உபாசிக்கும் உபாசகன் அந்தப்பண்பினை "யத் பாவம் தத்பவதி" என்ற அடிப்படையில் பெறுகிறான்.

#ஸக்திசாதனைக்குறிப்புகள்

Thursday, February 11, 2021

இன்றைய அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நிகழ்வு - 01

 

இன்றைய பாடல்

ஞானம் – 01 : உண்மையின் சுருக்க விளக்கம்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;

புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்

பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;

பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்

பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;

சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்

சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே. 1

இந்தப்பாடல் சித்தர்களின் கொள்கையை, தத்துவ விளக்கத்தைச் சுருக்கமாக கூறி, மோட்சம் பெற வழியான யோகத்தின் செயல்முறை என்னவென்று விளக்குகிறது. சித்தர்களின் மொழியில் சக்தி என்பது இந்த பிரபஞ்சத்தினை எது இயக்குகிறதோ அதுவே ஆகும். இதனையே உபநிடதங்கள் பிராணன் என்று கூறுகின்றன.

இதன் விரிவான உரையை இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/qnHl2cTOufY

தலைப்பு இல்லை

 

இன்னும் இரு மணி நேரத்தில்...

Sri Sakthi Sumanan is inviting you to a scheduled Zoom meeting.

Topic: அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் - 01

Time: Feb 11, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86511190085...

Meeting ID: 865 1119 0085

Passcode: 508574

தலைப்பு இல்லை

சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை! பேஸ்புக் இருப்பதால் இவற்றை அறியக்கூடியதாக இருக்கிறது.
சரியாக மூன்று வருடத்திற்கு முன்னர் இதே தினத்தில் சிவயோக சுவாமிகள் திருவடி நிலையத்திற்குச் சென்று எனது முதல் நூலான அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை சமர்ப்பித்து வந்திருக்கிறேன்!
சரியாக மூன்று வருடங்கள் கழித்து, அச்சிட்ட சிவயோக ஞானத்திறவுகோல் நூல் கைகளுக்கு வரும் போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் ஒன்றிற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் மனம் உந்த திருவடி நிலையம் செல்வோம் என்று செல்கிறேன்!
இது எதேச்சையானதா அல்லது திருவருளின் திட்டமா என்பது பற்றி எனக்கு எந்த வியப்போ கவலையோ இல்லை! ஆனால் இந்த நுண்மையான ஒழுங்கினை அறியும்போது மிக உணர்ச்சியான மகிழ்வான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
யோகத்தில் சிறந்த யோகரின் திருவடி வழி நடாத்துகிறது!

Tuesday, February 09, 2021

தலைப்பு இல்லை

 

2018 ம் ஆண்டு ஒரு அன்பர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு சாதனை குரு அகத்திய காயத்ரி சாதனை செய்து வருகிறேன்; பொதிகை மலை ஏறி அகத்தியரை தரிசிக்கப் போகிறேன் என்ன வழி முறை என்றார்.


சரி, குரு அகத்திய காயத்ரி சாதனா புத்தகம் எடுத்துச் சென்று, வரும் அன்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள் என்று சொன்னோம்!


100 புத்தகங்களை காடு, மேடு, மலை எல்லாம் எடுத்துச் சென்று உச்சியில் அகத்தீசர் பாதத்தில் வைத்து அனைத்தையும் விநியோகித்துவிட்டு வந்தார்.


பொதிகையில் குருநாதர் பாதத்தில் குரு அகத்திய காயத்ரி சாதனா உபதேச நூல் வைத்து மூன்று ஆண்டுகள்!

Monday, February 08, 2021

தலைப்பு இல்லை

 

பிராணாயாமம் பொதுவாக மூச்சுப்பயிற்சி என்று இன்று கற்பிக்கப்படுகிறது. ஆனால் சங்கல்ப சக்தி இல்லாமல் பிராணாயாமத்தின் முழுச் சித்தியையும் பெறமுடியாது.

இந்தக்கட்டுரை இன்றைய தினகரன் சைவமஞ்சரியில் பிரசுரமாகியுள்ளது. படித்துவிட்டு உரையாடலாம்.

Saturday, February 06, 2021

தலைப்பு இல்லை

 

மூன்று வருடங்களுக்கு (2018) முன்னர் ஒவ்வொரு வாரமும் குழுவாக கொழும்பில் அகத்தியர் ஞானம் கற்று வந்தோம்;

இப்படிக் கற்றவையின் முதல் பகுதி நூலாகி அகத்தியர் யோக ஞானத்திறவுகோலாக வெளிவந்தது.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் கற்றோம்.

எனது பணி கொழும்பை விட்டு நீங்கியதால் நின்றுபோன அகத்தியர் ஞானம் கற்றல் zoom இனூடாக புதுவடிவம் பெறுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் பரிணாமத்தில் உயர நாம் அதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த சிறு செயல்களை விட வேண்டும் என்பார்; அதுபோல் முன்னர் ஒரு சிறிய குழு மாத்திரமே நேரில் கற்றுக்கொண்டிருந்த இதை இப்போது குரு நாதர் open source ஆக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு நிகழ்வுகள் நிகழ் நிலையாக நடைபெறும்.

அகத்தியர் மூல குரு மந்திர உபாசனை தொடங்க உகந்த நாளான அமாவாசையும், குருபூசை தினமான ஆயில்ய நட்சத்திர நாளும்,

எமது நிகழ்வின் சிறப்பியல்புகள் கலந்துரையாடல், கேள்வி பதில்கள், யோக மார்க்கத்தில் சந்தேகம் தெளிய விரும்புபவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு கேள்வி பதிலில் பங்கு பற்றலாம்!

Friday, February 05, 2021

விஞ்ஞான பைரவ தந்திரம் - 11

பைரவா (வைரவர் என்பது தமிழ்ப்படுத்திய சொல்) என்பதன் பொருள் என்ன?

சமஸ்க்ருத அடிச்சொல்லின் படி

பயத்தை நீக்குபவர்

அனைத்தையும் சித்திக்கச் செய்பவர்

முழுமையான விழிப்புணர்வின் ரூபம் - விழிப்புணர்வினைத் தருபவர்

அனைத்தையும் முடித்து வைப்பவர்

பலவீனங்களை நீக்குபவர்

சிவத்தினை நிரப்புபவர்

ஒருவன் விஞ்ஞான பைரவ தந்திரப் பயிற்சிக்களின் படி,

முழுமையான விழிப்புணர்வும்

மனதின் பலவீனங்கள் நீங்கிய நிலையும்

பயமற்ற நிலையும்

எண்ணியகாரியத்தை முடிக்கும் இச்சாசக்தியும் கொண்ட

பைரவத்துவம் வாய்க்கும்.

சாதகனை சிவத்துவம் நோக்கிச் செலுத்துபவர்!

Wednesday, February 03, 2021

தலைப்பு இல்லை

 

இன்னும் 15 நிமிடங்களில் ஆரம்பமாகிறது இரண்டாவது நிகழ்வு நேரமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். Topic: சுப்பிரமணிய யோக ஞானத் திறவுகோல்

Time: Feb 3, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82226443782...

விஞ்ஞான பைரவ தந்திரம் - 10

 

விஞ்ஞான பைரவ தந்திரத்தினை யார் பயிற்சிக்கலாம் என்பதற்குரிய வரைவிலக்கணமாக இதன் புராதன உரையாசிரியர் க்ஷேமராஜர் கூறுவது,

"யார் தீவிர சக்தி நிபாதத்தினால் தூய்மையுற்றவர்களோ" அவர்களே! இவற்றைப் பயிற்சிக்க முடியும் என்கிறார்.

தீவிர சக்தி நிபாதம் என்பதற்கு ஏதோ அடையமுடியாத எட்டாக்கனி என்று விளக்கம் கொடுக்கத்தேவையில்லை! இதைச் சிறு உதாரணம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

இந்த நூலைப் பார்த்த, கேட்டவுடன் யாருக்கு கற்கவேண்டும், பயிற்சிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ அது அந்த பைரவரின் ஆயிரத்தில் ஒரு கதிர்ப்பு சக்தி நிபாதமாக எம்மில் மின்னுவதால் ஏற்படுவது.

நூலைப்படிக்க வேண்டும், பயிற்சிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம், உத்வேகம் ஏற்படுவது மந்தமான சக்தி நிபாதம்.

படித்தே தீருவேன் என்று விடாமுயற்சியாய் எண்ணம் ஏற்பட தீவிர சக்தி நிபாதமும், கற்பிக்கும் குருவும் எமக்கு அண்மையில் தோன்றுவார்கள்!

அதன் பின்னர் அதிதீவிர சக்திநிபாதம் வாய்க்க கற்பது மாத்திரமல்ல, தடையுறாத தீவிர சாதனையும் கைக்கூடி அனுபவமும் வாய்க்கும்!

பொதுவாக 90% ஆனவர்கள் கற்க விருப்பம் என்ற எண்ணத்துடன் மாத்திரம் நின்றுவிடுவார்கள்! சிலருக்கு குருவிடம் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும், ஆனால் பயிற்சிக்கும் உத்வேகம் அமையாது! இப்படி அனைத்தையும் தாண்டி அதி தீவிர சக்தி நிபாதமாக யோகத்தில் இந்தப்படிகளூடாக முன்னேறும் சாதகன் கோடியில் ஒருவன் என்கிறார் அகத்தியர் பெருமான்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...