குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 23, 2023

தேவாரம் கூறும் சிவத்தியானம் – 02

 

முற்றல் ஆமை இள நாகமோடு என

முளைக்கொம்பு அவை பூண்டு

வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது

உள்ளங்கவர் கள்வன்

கற்றல் கேட்ட உடையார் பெரியார்கழல்

கையால்தொழு தேத்தப்

பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய

பெம்மானிவ னன்றே.

{ திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருக்கடைக் காப்பு - 02; தலம் : சீர்காழி - 01-பிரமபுரம் ; திருமுறை : முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}

மேலேயுள்ள தேவாரத்தை ஒருதடவை மனமுருகிப் படித்த பின்னர் கீழ்வரும் விளக்கத்தைப் படித்து மனதில் ஏற்றிய பிறகு தியானத்தினைச் செய்யுங்கள். இந்த தியானம் சிவபெருமானிற்குள் அடங்கியிருக்கும் விஷ்ணுவின் சக்தியை விழிப்படையச் செய்து, ஆணவ மலத்தை நீக்கி நன்மை தரும்.

மகாவிஷ்ணு அனைத்தையும் நிலைத்து நிற்கச் செய்யும் சக்தி! அவற்றுள் கூர்மம் என்ற ஆமை அவதாரம் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற அச்சாணியாக பயன்பட்டது! சிவயோகத்தினை உடலில் சாதித்து அம்ருதம் பெற கூர்ம நாடியின் விழிப்பு அவசியம்! இந்தக் கூர்மம் சிவபெருமானின் மார்பில் இருக்கிறது என் கிறார் பெருமானார்!

அடுத்தது இள நாகம் என்பது எமக்குள் உறையும் பராசக்தி குண்டலினியாக இருக்கிறாள். கூர்மத்தின் துணைகொண்டு சிவயோகத்தால் பாற்கடலைக் கடைந்தால் அங்கிருந்து விஷத்தைக் கக்கும் பாம்பினை தன் கழுத்தில் அணிந்து யோகிகளைக் காப்பாற்றும் தன்மையையும் தனது அணிகலனாகக் கொண்டிருந்தார்!

அடுத்தது முளைகொம்பு கொண்ட மகாவிஷ்ணுவின் வராக அவதாரம்; இது யோகத்தில் மேலெழுந்து சஹஸ்ராரம் செல்லாமல் சித்தத்தில் இருக்கும் தீய விருத்திகளைத் மூலங்களைத் தோண்டி தோண்டி எடுக்கும் நிலை! சித்தத்தில் ஆழமாகப் பதிந்த வினைகளையும் நீக்கும் வராக அவதாரத்தின் ஆற்றலையும் முளைகொம்பினையும் தன்மார்பில் சிவபெருமான் அணிந்து வைத்திருக்கிறார்.

வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து என்பது பிரம்மா ஆணவத்தால் பைரவரிடம் தன் தலையை ஆணவ மலத்தை பைரவ மூர்த்தமாகிய பிக்ஷாடன மூர்த்தியில் கையில் சமர்ப்பித்து உயிர்பெறுகிறார்.

ஆகவே இந்தப் பாடல் சிவபெருமானை ஆமையோட்டினையும், இள நாகத்தினையும் ஆபரணமாகத் தரித்து கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவராக எமது மனக்கண்ணில் தியானிக்க வேண்டும்.

தியானம்

இந்த தேவாரத்தைப் பாடிய பின்னர்,

கண்களை மூடி உங்கள் சிதாகாசத்தில் ஆமையோட்டினையும், இள நாகத்தினையும் ஆபரணமாகத் தரித்து கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவராக தியானித்து எம்மில் ஆழமாகப் பதிந்திருக்கும் தீய சம்ஸ்காரங்கள், வினைகளை அவரின் மார்பிலிருக்கும் முளைக்கொம்பு தோண்டி நீக்குவதாகவும், நாம் சிவயோகம் செய்யும் போது வரும் விஷங்களை நீக்குவதாகவும், கையில் கபாலத்தினைக் கண்டு எமது ஆணவ மலம் நீங்குவதாகவும் பாவிக்க வேண்டும்.

இப்படி கற்றவர்களும், உண்மையை அறிந்த பெரியவர்களும் தொழுதேற்றும் சிவபெருமானின் திருவடிகளை தியானிக்கவேண்டும்!

இடபவாகனத்தில் எழுந்தருளும் பிரம்மபுரத்தில் உறையும் பெருமானை தியானிக்கிறேன்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...