குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 30, 2020

தலைப்பு இல்லை

இலக்கினை நிர்ணயிப்பவன் அடைகிறான். இலக்கு எதுவென்று தெரியாதவன் தடுமாறுகிறான்! படிக்கும் பிள்ளைகளுக்கு தாம் அடைய வேண்டிய இலக்கு என்னவென்பதை மனதிற்குத் தெரியப்படுத்தாமல் படிப்பில் கவனம் செல்லாது! 

சாதாரண தரம் படிக்கும் பிள்ளைக்கு அதற்குப் பிறகு உள்ள அடைவுகளைப் பற்றி தெளிவிக்கும் போது கல்வியில் இன்னும் ஆர்வம் பிறக்கும்! 

இந்த அடிப்படையில் இன்று பாக்கியம் தேசிய கல்லூரி சாதாரண தர மாணவச்செல்வங்களுக்கு கல்வியின் அடுத்த நிலை என்ன என்பது பற்றிய எனது சிறிய உரை ஒன்று மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் "Digital education project" இன் ஒரு பாகமாக இன்று நடைபெற்றது. 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஆலோசகர் என்ற அடிப்படையில் FTGM என்ன இலக்கிற்காக பணிபுரிகிறது? FTGM என்ன வலிமையை மாத்தளை வாழ் தமிழ் மாணவர்களின் கல்வியில் செய்ய முடியும் என்பது பற்றிய விளக்கத்தையும் கூறினேன்! 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட சிரேஷ்ட விரிவுரியாளர் Dr. Nava Navaratnarajah zoom வழியாக கலந்துக் கொண்டு அருமையான ஒரு உத்வேக உரையை ஆற்றியிருந்தார்!

ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தன் திட்டத்தை எப்படி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற படிமுறைகளை விளக்கினார்! பொருளாளர் லக்ஷ்மிகாந் தொகுத்து வழங்கினார்!

ஆசிரியர்களுக்கும், அதிபரிற்கும் வலுச்சேர்க்கும், அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து மாணவர்கள் கல்வி மேம்பட உதவிசெய்யும், உத்வேகப்படுத்தும் ஒரு அமைப்பாக மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தனது இலக்கைக் கொண்டுள்ளது. சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தில் ஆழமான அக்கறை கொண்டுள்ளது!

நிசாந்தனும் குழுவினரும் உண்மையான செயலிலும், விளைவிலும் (action & impact) கவனம் செலுத்துகிறார்கள்! வழமையாக பாடசாலைக்கு உதவுகிறோம் என்றால் கணனி வாங்கிக்கொடுத்தோம், விளையாட்டு உபகரணம் வாங்கிக் கொடுத்தோம், படம் எடுத்தோம் என்ற மேலோட்டமான உதவி இல்லாமல் கொடுக்கப்படும் இலத்திரனியல் பாடங்களை எப்படிப் பயன்படுத்துவது? பெற்றோருக்குரிய அறிவுறுத்தல்கள்? அவர்களுக்குரிய தெளிவுபடுத்தல் என்ற வகையில் திட்டத்தை வடிவமைத்திருப்பது மிகச்சிறப்பு!


Sunday, November 29, 2020

தலைப்பு இல்லை

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்!

கார்த்திகை நட்சத்திரம் மனித குலத்தின் அறிவு வளர்ச்சிக்கு உரிய நட்சத்திரம்! கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அலைகள் பூமியில் கலப்பதால் உருவாகும் அலைகளால் பூமியில் மனித குல அறிவு தோற்றம் பெறுகிறது என்பது மறையியல் கோட்பாடு! 

ஆறுமுகனை கார்த்திகைப் பெண்கள் சேர்த்தெடுத்து வளர்த்தார்கள் என்பதன் விளக்கம் இது தான்! 

இன்று கார்த்திகை நட்சத்திரமும் கூடி வருகிறது. 

விளக்குகள் நட்சத்திரத்தின் குறியீடு! ஒளி பரம்பொருளின் தன்மைகளில் ஒன்று! 

அகத்தில் ஒளியேற்றி எண்ணம் உயர்ந்து அறிவு சிறப்புற கார்த்திகை தீபம்!


தலைப்பு இல்லை

சில நண்பர்கள் நான் பேஸ்புக் பக்கம் வருவதில்லை வேலை பாழாகிக் போகிறது என்று புலம்புவார்கள்! 
இதைப் போல் யோகம் பழகுகிறோம் நான் இந்த உணவு உண்ண மாட்டேன், அந்த உணவு உண்ணமாட்டேன் என்று தம்மை ஏதோ உயர்ந்தவர்களாக, இவற்றிலிருந்து ஒதுங்கியவர்களாக காட்டிக் கொள்வார்கள்! 
இப்படி ஒரு பிரச்சனை தான் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிள்ளைகள் படிக்க முடியாது என்று பழி போடுவது! வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிரச்சனையில்லை! பெற்றோரும், பிள்ளைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகியிருந்தால் தான் மிகப்பெரிய பிரச்சனை என்பது தான் உண்மை! 
ஆனால் தொலைக்காட்சியை படிப்பதற்கும் பாவிக்க முடியும்! Digital education இணைய இணைப்பு இல்லாத பெருந்தோட்டத்திற்கு எப்படி சாத்தியம் என்றெல்லாம் பாராளுமன்றத்தில் பொங்கிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருக்க இந்த இளைஞர்கள் குழு தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை என்பதை அறிந்துக் கொண்டு தொலைக்காட்சியில் Pen drive போடக் கூடிய தொலைக்காட்சிகள், இல்லாவிட்டால் DVD Player இல்லாத வீடுகள் இல்லை என்பதை ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ற வகையில் 100% மாணவர்களும் திட்டத்தால் பலன் பெற வேண்டும் என்று செயற்பட்டு சாதித்துள்ளனர்! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் 
தனியே pen drive, DVD கொடுப்பது என்பதுடன் நின்றுவிடாமல் அதை எப்படிப் பாவிப்பது என்ற வழிகாட்டல், மேலும் இந்த ஒரு மாதம் தமது சீரியல் பார்க்கும் வேண்டாத வேலையை ஒதுக்கி வைக்கும் படி பெற்றோரிடம் வேண்டுதல் என்ற அடிப்படையில் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளர்! 
நான் நிசாந்தன் PhD முடிக்கும் போது கூறியது, PhD என்பது தனிமனித வெற்றி! இந்த அறிவாற்றல் சமூகத்திற்கு பயன்பட்டு இன்னும் பல PhD கள் சமூகத்தில் உருவாகினால் தான் நாம் சமூகமாக வெற்றி பெறுவோம் என்று! அதற்கான களப்பணியை சாதாரணதர மாணவர்களை நெறிப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்திருக்கிறார்! 
இதேபோல் அண்மையில் நான் அறிந்துக் கொண்ட மலையக தமிழ் சமூகத்தின் கல்வியில் அக்கறை கொண்ட ஆளுமை கலாநிதி Nava Navaratnarajah, அறிவு மட்டத்தில் உயர் நிலை அடைந்த பின்னர் அதை மீண்டும் சமூகத்திற்கு மீள்சுழற்சி செய்து தம்மைப்போல் பலரையும் உருவாக்குவதே உண்மையான அறிவின் பெருமை! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மாத்தளையின் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்கும் பட்டதாரிகளைக் கொண்ட தன்னார்வக் குழுவாகும்! 
இந்த model of execution அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்று!

தலைப்பு இல்லை

புதிதாக உருவாகும் இன்னுமொரு ஐந்தடுக்கு உணவுக் காடு! 
முதலாவது உருவாக்கிய ஐந்தடுக்கு உணவுக் காட்டில் இருந்து பெறப்படும் வாழைக் குட்டிகளை பெயர்த்து இந்தத் ளத்தை உருவாக்கும் முயற்சியில் எமது குழு ஈடுபட்டுள்ளது. 
இதன் மூலம் நாம் ஏற்கனவே உருவாகிய உணவுக் காட்டிலிருந்து செலவில்லாமல் அடுத்த களத்தினை உருவாக்குவதற்கான உள்ளீட்டினைப் பெறுகிறோம்! 
இதனை இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் - Zero Budget என்பார். அவரது கோட்பாடு முதலாவது சுற்று விவசாயத்திற்கு பிறகு தோட்டத்திற்குள் உள்ளீடு (Input) எதுவும் வரக் கூடாது! அதே போல் தோட்டத்தில் இருந்து விளைச்சலைத் (Yield) தவிர வேறு எதுவும் வெளியே போகக் கூடாது! விளைச்சலின் பின்னர் வரும் தாவரக் கழிவுகளும், களைகளும் மண்ணுக்கு உரமாகவேண்டும்! மண்ணை வளப்படுத்த விவசாயியிடம் ஒரு நாட்டு மாடு இருக்க வேண்டும். தனது விளைச்சலின் ஒரு பகுதியில் இருந்த அடுத்த சுற்றிற்கான விதைகள், நாற்றுக்களை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். 
இப்படி இருப்பதால் விவசாயி சுயசார்புடையவனாகவும், வீணாக தனது பணத்தை உரம், பீடைக்கொல்லிகள் என்று செலவழித்து உற்பத்திச் செலவினைக் கூட்டாதவனாகவும், நட்டமடையாதவனாகவும் இருப்பான்!

Saturday, November 28, 2020

தலைப்பு இல்லை

எப்படி தெய்வீகத் தன்மையை அடைவது – be SIMHA
தெய்வீகத் தன்மையுடையவர்களாக மாற ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறும் இரண்டாவது பண்பு 
2) கடமைப்பட்டவர்களாக இருத்தல். – INDEBTEDNESS –
மனிதர்கள் எவருமே மற்றவர்கள் தமக்கு நன்றியுணர்வுடன் இல்லை என்றால் அவர்களைப் பற்றி மிகவும் விரக்தி அடைவார்கள். எவர் உங்களுக்கு உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றியுணர்வுடன் உங்களால் இயன்ற அளவு திருப்பிச் செலுத்துங்கள்! அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யப் பாருங்கள்! உங்கள் நன்றியுணர்வையும், கடப்பாடையும் எப்போதும் மாதா, பிதா, குரு, மனைவி/கணவன், நண்பர்கள் என உங்களது வாழ்க்கையின் தரத்தினை உயர்த்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யுங்கள்! இது உங்களை அகம் மலர்ந்தவர்களாக்கும்! தனியே ஒருவரிடமிருந்து எதையாவது பெற்றுவிட்டு அதற்குரிய மீள்செலுத்துகையைச் செய்யாமல் விடாதீர்கள்.
மூன்றாவது பண்பு : MANIFEST
எதிர்காலத்தில் பெறவேண்டிய நிலையை இப்போதே மனதில் அனுபவியுங்கள். எதிர்காலத்தை நிகழ்காலத்திற்கு கவர்ந்து இழுங்கள். இதுவே படைப்பதன் இரகசியம்.
வீடொன்று வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதை வரைந்து அங்கு நீங்கள் வாழ்வதை மனதில் அனுபவியுங்கள். உங்களுக்கு பில்லியன் கணக்கில் பணம் வேண்டுமென்றால் ஒரு ரூபாய் நோட்டிற்கு பின்னர் பூச்சியங்களைச் சேர்த்து அந்த பில்லியன்களை அடைந்துவிட்டதாகப் பாவியுங்கள். ஆரோக்கியம் வேண்டும் என்றால் நோயைப் பற்றி சிந்திப்பதை, ஆராய்வதைத் தவிருங்கள். அமைதி வேண்டும் என்றால் எங்கும் அமைதியைக் காணுங்கள்.
பிரச்சனைகளை கவனிக்காமல், ஆராயாமல் பிரச்சனைக்கான தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனைகளை கவனித்தால் பிரச்சனைகள் பெருகும். இதைத்தான் நாம் பொதுவாகச் செய்கிறோம். பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காமல் தீர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் மனதினை கட்டமைத்து எடுங்கள். பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுதல் சக்தியை உறிஞ்சிவிடும். பிரச்சனைகள் தீர்வதற்கு இது தான் படிமுறை என்று ஒரு ஒழுங்குமுறையில் சிந்திக்க வேண்டியதில்லை. அனேகமான சந்தர்ப்பத்தில் எமக்குத் தெரியாத ஒரு முறையில் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. பிரச்சனைகளின்போது உங்களுக்கு உதவக்கூடியவர்களின் உதவியைப் பெறுங்கள். உங்கள் இலக்கை மனதில் பாவித்தபடி நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள்!
தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதரின் 2007 ம் ஆண்டு விஜயதசமி உரையின் ஒரு பகுதி.
Dr. N. Prahalada Sastry (Sri Amritanandanatha Saraswati) - Nuclear physicist, was a scientist at Tata Institute of Fundamental Research.

தலைப்பு இல்லை

எமது இயற்கை விவசாயத் தோட்டத்திற்குள் உருவாகியிருக்கும் தேன் கூடு! 
இயற்கை எப்பொழுதும் தன்னைத் தானே சமநிலையாக வைத்துக் கொள்ளும். எமது ஐந்தடுக்கு முறை உணவுக்காடு ஆனது இயற்கையாகவே உருவாகிய காடுகளை ஒத்ததான அமைப்பிற்கு சாட்சியமாக எமது ஐந்தடுக்கு பயிர்ச் செய்கை உணவுக் காட்டில் தானாகவே உருவாகிய தேனிக்களின் கூடு இனி எமக்கு இந்த உணவு காட்டினுள் மகரந்த சேர்க்கை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இது எமது சாகம்பரா இயற்கை விவசாயப் பண்ணை முகாமையாளரின் இன்றைய பண்ணை முன்னேற்றம் பற்றிய அறிக்கை!
ஒரு விவசாயத் தொழில் நிபுணர் இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் எப்படிச் செயல் புரிகிறது என்பதைப் புரிந்து அதை தனக்குச் சாதகமாக்கும் மனதினை, பார்வையினைப் பெற்றிருக்க வேண்டும்! அந்த வகையில் தொழில் முறை விவசாய நிபுணர் ஒருவர் தேனிக்களின் சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்து விவசாயத் திட்டங்களை உருவாக்குவது என்பது மிக அத்தியாவசியமானது! 
இப்படியான இயற்கையைப் புரிந்து அதனுடன் ஒத்திசைந்து வாழும் தொழில் நிபுணர்களை உருவாக்குவதற்கே நாம் நேரத்தை செலவிடுகிறோம்! 
தோட்டத்திற்குள் தேனியும், சிலந்தியும் இருக்கிறது என்றால் நாம் பீடை கொல்லிகள் எதையும் விசிறவில்லை என்பதற்கான சான்றாதாரம்! இன்று சூழலியல் சான்றுப்பத்திரங்கள் வர்த்தகத்தில் பல இலட்சம் ரூபாய் கொடுத்து பெறப்பட்டு அதற்காக மக்களிடம் சேதன விவசாயப்பொருட்களுக்கு அதிகளவு கட்டணம் கோரப்படுகிறது. ஆனால் சில அடிப்படைச் சூழலியல் குறிகாட்டிகள் (environmental indicators) தெரிந்திருந்தால் அவற்றை இயற்கை விவசாய பூமி என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். 
1) சிலந்திக்கூடுகள்
2) தேன் கூடுகள்
இவை இருந்தால் அங்கு பீடைக்கொல்லி பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம். 
ஒரு சதுர அடி மண்ணில் 13 -15 மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் இரசாயன உரம் பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம்! 
அடுத்தது கத்தரி, வெண்டி போன்றவை அதீத சுவையுடன் இருக்கும். பாகல் ஆக இருந்தால் அது உச்ச பட்ச கசப்புடன் இருக்கும்! 
இப்படி எளிய குறிகாட்டிகளை (simple indicators) உருவாக்கி நாம் எமது கிராமத்திற்குள் நம்பிக்கையையும், சான்றாதாரங்களையும் உருவாக்கி இயற்கை விவசாயப்பொருட்களிற்கு மதிப்புக் கூட்ட வேண்டும்!

Friday, November 27, 2020

தலைப்பு இல்லை

எப்படி தெய்வீகத்தன்மையை அடைவது – be SIMHA

S -SERVE: சேவை

அன்பும் சேவையும் நீங்கள் பறப்பதற்குத் தேவையான இரண்டு இறக்கைகள். அன்பு நீங்கள் அன்பு செலுத்துபவரை உங்களுடன் இணைக்கும். சேவை உங்களை பலருடன் இணைக்கும். சேவையின் மூலமாக நீங்கள் ஆயிரம் மனங்களையும், ஆயிரம் கரங்களையும் பெறமுடியும். நீங்கள் மக்களுக்கு சேவை செய்தால் தான் அவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். ஆகவே தெய்வீகத் தன்மை அடைவதற்குரிய முதல் தத்துவம் அன்புடன் அனைவருக்கும் சேவை செய்தல்.

கணபதியை திருப்திப்படுத்த வயிறு நிறைக்கும் நைவேத்தியம் வேண்டும்; கிருஷ்ணனுக்கு பழம், மலர், நீர் வைக்க வேண்டும். சிவனுக்கு சுத்த ஜலமே திருப்தி தரும்! ஆனால் தேவியோ அன்னையைப் போல் நாம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே அவள் திருப்தியுறுவாள்! தேவியை வழிபட நிறைய சடங்குகள் தேவையா? இல்லை! 

எப்படி அவளை திருப்திப்படுத்துவது! வாழும் உயிர்கள் மேல் அன்பு செலுத்துதலும், சேவை செய்தலுமே அவளிற்கான நைவேத்தியம்! சடங்குகளுக்காக வீணாக்கும் பணத்தை எம்மைச் சூழ இருப்பவர்களது வாழ்வை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். அப்படி நாம் செய்யும் சேவை எப்போதும் பல மடங்காக எமக்குத் திரும்பி வரும்!

இது ஒருவன் தெய்வீகத் தன்மை அடைவதற்குரிய முதல் விதி!

தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதரின் 2007 ம் ஆண்டு விஜயதசமி உரையின் ஒரு பகுதி.

Dr. N. Prahalada Sastry (Sri Amritanandanatha Saraswati) - Nuclear physicist, was a scientist at Tata Institute of Fundamental Research.


தலைப்பு இல்லை

இன்று ஏற்றுமதி விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் (Central Research Station of the Department of Export Agriculture) வாசனைத் திரவியங்களுக்கான அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பத்திற்கு பொறுப்பான அதிகாரியுடன் சந்திப்பு!

அவர் குறிப்பிட்ட மிக முக்கியமான விடயம் மிளகு, கராம்பு, கறுவா, ஏலக்காய், சாதிக்காய் போன்ற எமது நாட்டில், குறிப்பாக மாத்தளையில் விளையும் வாசனைத் திரவியங்களின் வாசனைக்கான இரசாயனவியல் தன்மை மிக அதிகமானது! ஆனால் எம்மால் உலகத்தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுடன் அவற்றை பொதி செய்ய முழுமையாக முடியவில்லை. 

உயர் பொருளாதாரம் கொண்ட மேலைத்தேய நாடுகளின் தரக்கட்டுப்பாட்டிற்கு அமைய எமது வாசனைத்திரவியங்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியைப் பெறலாம். 

உயர் தர மிளகினை உற்பத்தி செய்தல்

உயர்தர கோப்பியினை உற்பத்தி செய்தல்

உயர் தர கறுவாப்பட்டை உற்பத்தி செய்தல் 

என்பன நல்ல வாய்ப்புள்ள துறைகள்! ஆனால் அவர் கவலைப்பட்டுக் கொண்ட விஷயம் நாம் எமது கல்வி முறை மூலம் படித்துவிட்டு எங்காவது வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் கூடிய பிள்ளைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

பிள்ளைகள் இப்படியான புத்தாக்க உணர்வுடன் ஏற்றுமதி விவசாயத்தை ஒரு துறையாகத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய ஆற்றலுள்ளவர்களை உருவாக்கும் "பிரச்சனையைத் தீர்க்கும் கல்வி முறை” (problem solving education method) உள்வாங்கப்பட வேண்டும் என்பதே! 

We need problem solvers; not only job seekers!


தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"

அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.

ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்.


Wednesday, November 25, 2020

தலைப்பு இல்லை

இன்று ஆசிரியர் ஒருவரிடம் உரையாடும் போது தன்னிடம் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கற்றலில் ஆர்வம் இல்லாமலிருக்கிறார்கள் என்று கூறினார். 

மனித நடத்தையில் ஒருவர் ஏன் இப்படி நடக்கிறார் என்பதற்கு இரண்டு விதமான காரணிகள் இருப்பதாக நவீன உளவியல் கூறுகிறது. 

1. extrinsic motivators - புற உத்வேகக் காரணிகள்; பரிசுகள் வழங்குவது, தண்டணைக்கான பயம் என்பன காரணமாக அமைகிறது. படித்தால் நல்ல பாராட்டுக் கிடைக்கும், பல்கலைக்கழகம் கிடைக்கும் என்ற பரிசு மனோபாவம் அல்லது சமூக அந்தஸ்துக் குறையும், வாழ்க்கை எப்படிச் செல்லும் என்ற பயம். 

2. intrinsic motivation - அக உத்வேக காரணிகள் - தனக்குள்ளே இதை அடைய வேண்டும் என்ற இலக்கு உடையவன் இலகுவாக உத்வேகமடைகிறான். தான் படித்து இப்படி வரவேண்டும் என்ற இலக்கு வைத்தவனுக்கு அக உத்வேகம் கிடைக்கிறது. 

ஆசிரியர் ஒருவர் மாணவனின் இந்த இரண்டு உத்வேகங்களையும், அதற்கான காரணிகளைக் கூர்ந்து கவனித்து அதற்குரிய காரணங்களை அடையாளம் கண்டு, கவனக் கலைப்பான் காரணிகளை நீக்கி மாணவனை பாடத்தில் கவனிக்கச் செய்ய வேண்டும்.

அக உத்வேகத்திற்குரிய இலக்கினை உருவாக்கி அதை அடைவது எப்படி என்ற தெளிவினை மாணவன் மனதிற்கு உருவாக்கி பின்னர் அவன் மனது சிதறிவிடாமல் இருக்க புற உத்வேகங்களான பரிசு - தண்டணை இரண்டையும் சரியாக உபயோகித்து கல்வியில் கவனத்தைச் செலுத்த வேண்டும்! 

ஆசிரியர் மாணவனின் ஆதர்சன நாயகனாக இருக்கும் பண்பு இருக்க வேண்டும்! ஆசிரியன் மாணவன் மனதைச் செலுத்தும் சிற்பி என்ற பொறுமை அவசியமானது!


தலைப்பு இல்லை

Thrill Driving ...Zero visibility..Sub effect of Nivar..Mihinthala Sri Lanka

Monday, November 23, 2020

தலைப்பு இல்லை

இவ்வளவு நாளாகவும் விதம் விதமாக புட்டை சாப்பாடாக பார்த்தவர்களுக்கு, சித்த மருத்துவ அகமருந்தாக புட்டுப் பற்றி மருத்துவர் ஆதவன் தொகுத்துத் தருகிறார்! 

பிரம்பு அடிவாங்கிச் சாப்பிட்ட புட்டின் பெருமை அறியச்செய்ய வழக்காடு மன்றம் ஏற்படுத்தினாரோ எம்பெருமான்!   

மேலதிக குறிப்பு:

சிவப்பரிசி ஊறவைத்து முள்முருக்கமிலை இடித்துச் சலித்த மாவில் செய்யும் புட்டு தேங்காய்ப் பாலூற்றி உண்ண மாதர் ரோகம் எல்லாம் தீர்க்கும், இரத்த சோகை போக்கும்; வயிற்றுப் பூச்சி நீக்கும்! 


தலைப்பு இல்லை

நானும் கலாநிதி நிசாந்தனும் பயண நண்பர்கள்; கடந்த ஐந்தாண்டுகளில் நாம் இருவரும் இலங்கையை வாரா வாரம் சுற்றி வந்திருக்கிறோம்! 
இருவரது பேச்சும் சுயமுன்னேற்றம், சமூக மேம்பாடு பற்றியதாகவே இருக்கும்! அதில் நிசாந்தனின் தனதும், மலையக மக்களின் - மாத்தளை சார் பெருந்தோட்ட கல்வி முன்னேற்றம் பற்றிய ஈடுபாடும் மிக உத்வேகமானது! 
இப்படியான உத்வேகத்துடன் அதே போல் உத்வேகம் கொண்ட பட்டதாரி இளைஞர்களான தட்சணேஷ் (விரிவுரையாளர்), லக்ஷ்மி காந், ரவிசங்கர், தனுஷா, சுஜந்தி, சரிதா என்று இன்னும் பல என்னுடன் பரிட்சையமில்லாத, பெயர் ஞாபகமில்லாத ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்களுடன் தானாச் சேர்ந்த கல்வியாளர் கூட்டம்;
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்.
நான் அடிக்கடி சொல்வது எம்மைக் கட்டுப்படுத்தும், வலிமையை இழக்கச் செய்யும் பலவீனக் காரணிகளை எமக்கு பலம் தருவதாக மாற்ற வேண்டும் என்பது! 
அவர்களுடைய புதிய யோசனை; மலையகத்தில் கல்வியை சீரழிப்பது தொலைக்காட்சி எனும் அரக்கன்! இந்த அரக்கனை கல்வியை முன்னேற்ற எப்படிப் பயன்படுத்தலாம் என்ற யோசனை - 
படம் பார்க்கும் DVD இல் பாடங்களைக் கொடுப்போம்! 
பாட்டுப் பார்க்கும் Pen Drive இனை நோட்டுப் புத்தகம் ஆக்குவோம் என்பது! 
வீடெல்லாம் தொலைக்காட்சி நிறைந்து பிள்ளைகளின் படிப்பைக் கெடுக்கிறது என்றால் தொலைக்காட்சி எல்லாம் பாடங்களை நிரப்பி பிள்ளைகளைப் படிக்க வைப்போம் என்ற mission இனை முன்னெடுத்துள்ளார்கள்! 
இந்த mission இற்கான அடிக்கல்லை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி Nava Navaratnarajah தனது உரையில் தொடக்கி வைத்திருக்கிறார்! பெற்றோர்கள் அனைவரும் செவிமடுக்க வேண்டிய உரை! https://www.facebook.com/JUGAvictoria/videos/1303247833342865
ஆர்வமுள்ள பெற்றோர்கள், கல்வியலாளர்கள் அவர்கள் திட்டங்களுக்கு நிதி நல்குங்கள்! ஒரு திட்டத்தை எப்படி நடத்தவேண்டும் என்ற தெளிவான சிந்தனையும், செயலும் உள்ள இளைஞர்கள்! அவர்களிடம் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!

தலைப்பு இல்லை

நீங்கள் எல்லாம் புட்டுப் பற்றி போட முன்னர் ஆவணி மூலத்திற்கே புட்டுப் பதிவு போட்டவன் நான் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொண்டு.....

புட்டு என்பது எம்பெருமான் சிவபெருமானே மண்சுமந்து மகிழ்ந்து உண்டது என்பதையும் சொல்லிக் கொண்டு....

என் பங்கிற்கு புட்டுப் புராணத்திற்கு ஒரு சொட்டு....   


Sunday, November 22, 2020

தலைப்பு இல்லை

இளமை...
ஆசனம்.. யோகம் என்றெல்லாம் உடம்பைப் போட்டு வாட்டிய காலம்!   

Saturday, November 21, 2020

தலைப்பு இல்லை

SRISHTI contributed to "Digital Education" project of Forum for Tamil Graduates of Matale in collaboration with E-Kalvi Charity Fund Inc. also known as JUGA - Victoria designed to help Matale Tamil School students.
Great Job Team FTGM

Thursday, November 19, 2020

தலைப்பு இல்லை

புதிய சவாலுக்கான நேரம் இது! வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்! 

வாழ்க்கையில் சவால்களும், புதியதைத் தேடுதலும், அதற்காக எதையாவது இழந்துவிடுவோமா என்ற பயம் இன்றி முயற்சிப்பதும் மிக உச்சகட்டமான இன்பம்! 

மற்றவர்கள் செல்லாத, செல்வதற்கு பயப்படும் பாதைகளில் நாம் இறங்கி நாமே செதுக்கிச் செல்வது மிகச் சிலிர்க்கும் அனுபவம்! 

நான் ஒவ்வொரு முறையும் எனது அகத்தில் உருவாகும் பயத்திற்கு பயம் காட்டும் சவாலான பாதைகளைத்தான் தேர்ந்தெடுக்க விரும்பியிருக்கிறேன்! 

வெற்றி என்பது அதி உச்சத்தை தொடுவதை விட சமநிலையாக இருத்தல் என்பதே எனது அகப்புரிதல்! ஏனென்றால் உச்சி என்பதை அடைந்தால் அதைத் தாண்டும் போது அடுத்து விழ வேண்டியது அதலபாதாளம் என்பது இயற்கையின் விதி! ஆகவே வெற்றி என்பதை உச்சத்தைத் தொடுவது என வரைவிலக்கணப்படுத்துவது பிழையானது! 

விஞ்ஞான இளமானி படித்தால் ஆசிரியராகத்தான் போகலாம் என்று எல்லோரும் நம்பவில்லை. நான் படித்தது சூழலியல் விஞ்ஞானம். நான் ஆலோசகன் ஆகவேண்டும் என்று அப்போது முன்னணியில் இருந்த சூழலியல் கம்பனியில் சேர்ந்து யுத்தம் நடந்துக் கொண்டிருக்க வாராவாரம் பயணத்துடன் முதுமாணி முடித்தேன்! 

பிறகு காலநிலை மாற்றமும், நீடித்து நிலைத்திருக்கும் வள ஆலோசனை வழங்கும் ஆலோசகராக உலகப்புகழ்பெற்ற கணக்காய்வு நிறுவனத்தில்....

உள்ளே இருந்து ஒரு குரல் சிறுவயதிலிருந்து நீ கற்கும் வைத்தியமும் பரம்பரையும் தொடரவேண்டும், சித்த ஆயுர்வேத வைத்தியப் பதிவுடன் மருத்துவராக ஒரு அவதாரம்! 

எவ்வளவு காலத்திற்குத்தான் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பது என்று சலித்து உலகின் மிகப்பெரிய விவசாயக் கம்பனியில் சூழலியல் முகாமைத்துவத்திற்கான அதிகாரி! சவால் நிறைந்த பணி! ஆனால் பெற்ற அனுபவம் பெரிது!

நீ தொழில்நுட்பத்தை விட நன்றாக குழுவை வழி நடத்துகிறாய், நிர்வகிக்கிறாய் என்று துணை இயக்குனர் ஆக்கினார் எனது மேற்பார்வையாளர்! 

அதில் மக்களையும், அதிகாரத்தையும் எப்படி இயக்குவது என்ற பாடம்! 

அதற்குப் பிறகு உள்ளிருந்து குரல், பணம், பணம் என்று ஓடிக் கொண்டிருக்காதே! மனதிற்குப் பிடித்ததை மாத்திரம், மற்றவர்களுக்குத் தேவையானதைச் செய், திருப்தியும் சந்தோஷமும் தராத எதையும் வலுக்கட்டாயமாக செய்வதில்லை, எதற்குப் பின்னாலும் ஓடுவதில்லை என்ற முடிவு! 

உணவு உற்பத்தி ஆனால் சூழலிற்கு பாதிப்பில்லாத உணவு உற்பத்தி முறை என்றார் நண்பர் ஒருவர்! படித்த சூழலியல் விஞ்ஞானத்திற்கு ஒத்திசைவான இயற்கை விவசாயம்! புதர் வெட்டி, மண் கொத்தி இயற்கை விவசாயம்! எப்படி இலங்கைச் சூழலுக்கு உகந்த பண்ணை இயற்கை விவசாய மாதிரியை (farming model) உருவாக்குவது என்ற முயற்சி! இந்தத்திட்டத்தில் யானைகளும், மாடுகளும், மனிதர்களும் தந்த விரக்தி ஒருகட்டத்தில் எல்லாம் சூனியம் என்ற நிலை! பெரிய கம்பனியில் வசதியாக இருப்பதை விட்டு விட்டு விசர் வேலை என்ற பேச்சு! 

ஒருவனுக்கு உதவக்கூடிய அதியுயர் உதவி அவனிற்கு அவனைப் புரியவைக்கக்கூடிய அறிவினைத் தருவது! அது யோகத்தத்துவம்! மனதை, உடலை, எம்மை இயக்கும் பிராணசக்தியைப் பற்றிப் புரிந்து கொள்வது! இதை சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் தேவையான வகையில் அறிவைப் பகிர சிருஷ்டி என்ற நிறுவனம்! 

இப்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்துவிட்டு அடுத்து என்ன என்று சிந்திக்கும் இளையவர்களை சரியான இடத்திற்கு சேர்க்கும் வழிகாட்டியாக புது அவதாரம்! 

கடைசியாக யாராவது என்னைப்பற்றிக் கூறுங்கள் என்று கேட்டால் ஒருகணம் குழம்பிப் போய் எதைச் சொல்லுவது என்று சில நிமிடங்கள் யோசித்து அவர்களுக்கு ஏற்ற வகையில், 

நான் ஒரு சூழலியலாளன்

நான் ஒரு சித்த ஆயுர்வேத வைத்தியன்

நான் ஒரு நிறுவன இயக்குனர்

நான் ஒரு இயற்கை விவசாய ஆராய்ச்சியாளன்

நான் ஒரு வியாபார ஆலோசகன் 

நான் ஒரு யோக ஆசிரியன் 

நான் ஒரு எழுத்தாளன் 

நான் ஒரு குருபரம்பரையைச் சேர்ந்த சாதகன்

நான் ஒரு தேவி உபாசகன் 

பட்டதாரிகள் ஒன்றியத்திற்கு ஆலோசகனாக இருக்கிறேன்

இன்னும் பல....

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி கடந்து போகப் பார்க்கிறேன்! இப்படிச் சொல்லும் போது உள்ளே சிரித்துக்கொள்வேன் அடுத்த சில வருடங்களில் இந்தப்பட்டியலில் வேறு சிலது சேர்ந்திருக்கும் என்று!


Tuesday, November 17, 2020

தலைப்பு இல்லை

Visited University of Jaffna After very long time, last I visited for my first degree convocation.

Sunday, November 15, 2020

தலைப்பு இல்லை

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கஜாபுயல் வீசும் போது மேற்குத் தொடர்ச்சி மலையோரமாக இயற்கை விவசாயம் 02 ஏக்கர் பண்ணை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று மண்ணில் இறங்கி கற்றுக் கொண்டிருந்தோம்! 

இரண்டு வருடங்களின் பின்னர் இங்கு மல்லாவியில் அதைப்போல் ஒரு பண்ணையை அமைத்துள்ளோம். 

கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக


Saturday, November 14, 2020

தலைப்பு இல்லை

தீபாவளி...

தீபாவளி...

தீபாவளி...

கொண்டாடுவோம்


தலைப்பு இல்லை

Best wishes

to Prabhu Nadaraja and Climathon team

https://climathon.climate-kic.org/en/


தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விஷயங்களின் சுருக்க வடிவம், அவர்கள் மாத்தளை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலை, சமூகத்தின் கல்வியில் அக்கறை செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கான உதவிகளை எப்படி நாம் அனைவரும் சமூகமாகச் செய்யலாம் என்ற நோக்கம் கருதி இங்கு பொதுவில் பதிவிடப்படுகிறது. 

எப்படி சமூக நன்மைக்காக ஒன்றிணைந்து செயற்படுவது?

முதல் அடிப்படை நாம் தனியனாக இருந்துக் கொண்டு எதையும் நிறைவேற்ற முடியாது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது.

நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைப் புரிந்துக் கொள்வது. அனைவருடனும் சேர்ந்து இயங்குவதால் மட்டுமே நன்மையைத் தரமுடியும். 

இரண்டாவது நமக்குள்ளேயே போட்டி போடாமல் ஒருவருக்கு ஒருவர் எப்படி பலமாக இயங்குவது என்பதைக் கண்டறிவது. 

அறிவும் திறமையும் ஒருவனிடம் இருக்கிறது, என்னிடம் பணம் இருக்கிறது. அறிவு, திறமை, பணம் மூன்றும் ஒன்றாகினால் ஒரு காரியம் நடைபெறும் என்பதை சரியாகப் புரிந்துக் கொண்டு நான் அந்தத் திட்டத்தில் பணத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும்; அவன் காரியத்தை சரியாக நிறைவேற்றுவான் என்று நம்பிக்கை வைத்து அறிவுள்ளவனை நம்ப வேண்டும். இப்படி இல்லாமல் நான் பணம் தருகிறேன்; அதனால் நான் சொல்லுவதன் படி நீ கேட்க வேண்டும், நீ பணத்தை சரியாக பயன்படுத்த மாட்டாய் என்று அவநம்பிக்கை வைப்பது போன்ற சிறுபிள்ளைத்தனச் சிந்தனைகளை வைத்துக் கொண்டு பெரிய காரியத்தைச் சாதிக்க முடியாது. 

அவன் திறமையானவன் என்பதைக் கூறும்போது நாம் என்ன அவனைவிடக் குறைந்தவனா என்றும், அவன் செய்தால் நான் ஏன் செய்யக் கூடாதா போன்ற போட்டிச் சிந்தனைகளை உருவாக்கினால் ஆகவேண்டிய காரியத்தைக் குழப்பியவர்கள் ஆவோம். 

மூன்றாவது சிறுபிள்ளைத் தனமான குறை கூறல், சந்தேகம் கிளப்புதல்! எவராவது நல்ல காரியம் செய்துவிட்டால் அவர்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது, இந்த நோக்கம் இருக்கிறது! என்று தமது மனதிலுள்ள அசூயைக் கொட்டுவது இவை தவிர்க்கப்பட வேண்டும். 

ஆக, 

1) நாம் எல்லோரும் குழுவாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும். 

2) குழுவில் உள்ள ஒவ்வொருவருடைய திறனையும் அறிந்து அவர்களை அவர்கள் செய்யத்தகுந்த செயலில் முன்னிறுத்த வேண்டும். 

3) உள்ளகப் போட்டியை (internal competition) இனை முழுமையாக இல்லாமல் ஆக்கி நாம் ஒருவருக்கு ஒருவர் எப்படி பலமாக இயங்க முடியும் என்று சிந்திக்கவேண்டும். 

4) இணைந்து செயலாற்றும்போது எல்லோருடைய பங்களிப்பும் தகுந்த முறையில் அடையாளம் காணப்பட்டு மதிப்பளிக்கப்படவேண்டும். 

5) குழுவிற்குள் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவது, நம்பிக்கையீனம் ஏற்படுத்துவது நடைபெறக்கூடாது. 

6) நிதி, செயற்பாடு சரியாக நிர்வகிக்கப்பட வேண்டிய பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதனால் திட்டமும், நிதியும் சரியாக நடைபெறுகிறது என்ற உறுதி அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும். 

7) இவற்றை அனைத்து அங்கத்தவர்களிடமும் திறந்த மனதுடன் உரையாடி புரிந்துணர்வினைப் பெற வேண்டும்.


Friday, November 13, 2020

தலைப்பு இல்லை

அனைவரது அகத்திலும் ஒளி பெருகி , அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா எனப் பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தலைப்பு இல்லை

பல்பயிர் இயற்கை விவசாயத் தோட்டம் இருந்தால் அது அனேக வகை காய்கறிகளைத் தரும்! அதேபோல் பயிர்கள் ஒன்றுடன் ஒன்று ஒன்றிய வாழியாக மண்ணுக்கு வளத்தையும், பீடை குடித்தொகையையும் கட்டுப்படுத்தும். 
விவசாயம், வியாபாரம் என்ற எண்ணம் மாறி, உணவு உற்பத்தியில் ஒவ்வொரு குடும்பமும், கிராமமும் தன்னிறைவு அடையவேண்டும் என்ற இலக்குக்குரியதாக இருந்தால் விவசாயத்திற்கு உள்ளீட்டிற்கு என்று நாம் பெரிதாக செலவழிக்கத் தேவையில்லை. சரியான இயற்கைச் சூழலை (eco system) உருவாக்கினால் சூழல் தன்னைத் தானே (self regulating) முகாமைத்துவம் செய்துகொள்ளும். 
இப்போது உள்ள விவசாய முறை "அதிக உற்பத்தி, அதிக இலாபம் " என்ற பேராசை மனதிற்கு ஆசையைத் தூண்டும் இரசாயன விவசாயம். 
நாம் எமக்குரியதும், எம்மைச் சார்ந்து இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்குரிய உணவினை தேவையான அளவு உற்பத்தி செய்ய என்பதற்காக விவசாயம் இருக்குமாக இருந்தால் இந்த இயற்கை விவசாய ஐந்தடுக்கு உணவுக்காடு சிறந்த ஒரு மாதிரியுரு. 
எமது விளைச்சல்!

Thursday, November 12, 2020

தலைப்பு இல்லை

இன்று தன்வந்திரி ஜெயந்தி

ஆயுர்வேதத்தின் மூலசக்தி தன்வந்திரி! 

அம்ருத கலசங்களிக் கையில் ஏந்தியவரும்

ஸர்வ ஆமங்களை நாசம் செய்பவரும் 

மகாவிஷ்ணுவின் வடிவினருமான 

தன்வந்திரியை வணங்குகிறோம்!


Wednesday, November 11, 2020

தலைப்பு இல்லை

சுவாமி விவேகானந்தரின் தியானமும் அதன் முறையும் என்ற நூலில் யோகசக்தி பெற்ற மனதின் மூலம் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்பதை தனக்கு பவாஹாரி பாபா என்ற யோகியுடன் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். 

உடம்பால் செய்கின்ற உதவி ஒன்றுதான் உதவி என்று நினைக்கின்றாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோகசக்தி பெற்ற ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன? 

- யோகி பவாஹாரி பாபா -


தலைப்பு இல்லை

மாத்தளை வாழ் நல்லுள்ளங்கள் அனைவரும் மனமுவந்து இந்தச் சமூகப் பணிக்கு உதவும்படி வேண்டுகிறோம்! 
மாத்தளையில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலை O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு உதவும் முகமாக வீட்டில் இருந்தபடியே கற்கும் E-Kalvi Charity வீடியோ பாடங்களை வசதிகள் குறைந்த பெருந்தோட்டப்புற பாடசாலை மாணவர்களுக்கு வழங்க மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியம் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது! 
COVID - 19, பாடசாலைகள் நடக்கவில்லை, வகுப்புகள் நடைபெறவில்லை என்ற எந்தக் காரணமும் மாணவர்கள் படிக்க முடியவில்லை என்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது! 
மேலும் E-Kalvi நம்பிக்கை நிதியம் தொலைக்காட்சி இருந்தால் சீரியல், திரைப்படம் தான் பார்க்க முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இல்லை ஒரு மாணவன் வீட்டில் டீவி இருந்தாலே அந்த மாணவன் படிக்கவும் முடியும் என்று மாற்றி யோசித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது!
சமூகம் முன்னேற கல்வி அடிப்படை! 
ஆக மாத்தளை வாழ் நல்லுள்ளங்கள் அனைவரும் மனமுவந்து இந்தச் சமூகப் பணிக்கு உதவும் படி வேண்டுகிறோம்!

Tuesday, November 10, 2020

தலைப்பு இல்லை

சாகம்பரா ஐந்தடுக்கு உணவுக்காடு பல்பயிர் (Multicrop) என்பதால் தினசரி எமக்கு விளைச்சல் இருந்துகொண்டிருக்கும்! 
இவற்றின் சுவை எப்போதும் இரசாயனம் பாவிக்கும் மரக்கறிகளை விட உயர்ந்தது என்பது உண்டு பார்த்தவர்களின் கருத்து! 
உங்கள் வீட்டில் 1/4 ஏக்கர் - 04 பேர்ச் - 04 பரப்புக் காணி இருந்தால் இந்த மாதிரியை உங்கள் வீட்டைச் சுற்றி உருவாக்கலாம். 
தினசரி கீரை, மரக்கறிகள், பூக்கள் எமது வீட்டுத்தேவைகளுக்கு இருக்கும்! 
வீட்டுச் சூழல் ஆரோக்கியமான உணவைத்தரும் அதேவேளை கோடைக்காலத்தில் குறைந்த நீர்ச் செலவுடன் வீடு (air condition) குளிரூட்டப்பட்டிருக்கும்  
இதை நீங்களே பராமரிக்கிறீர்கள் என்றால் உங்களுத்தேவையான உடலுழைப்பு, மன அமைதி, இயற்கையான சூழல் கிடைக்கும்! 
இயற்கை விவசாயத்தில் செலவு குறைந்த, விளைச்சல் கூடிய, வாழ்விற்கு நன்மை தரும் ஒரு தோட்ட மாதிரி (farming model) இந்த ஐந்தடுக்கு இயற்கை விவசாயத் தோட்டம்!

Monday, November 09, 2020

தலைப்பு இல்லை

See our experience.. converting bare land to food forest...
பல தடவைகள் யானைகள் அழித்து, கட்டாக்காலி மாடுகள் மேய்ந்து, இது சாத்தியமில்லை என விவசாயம் மெத்தப் படித்தவர்கள் நம்பிக்கையீனத்துடன் பார்க்க, விரக்தியின் உச்சத்திற்கான அனைத்தும் நடந்தும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியனாக கடைசியில் வெற்றி பெற்றிருக்கிறோம்! 
ஒரு தோட்டத்தை இயற்கையுடன் இயைந்து உருவாக்குவது என்பது படைத்தல்.

Sunday, November 08, 2020

தலைப்பு இல்லை

அன்னம் பஹுகுர்வீத| தத் வ்ரதம்
Annam bahu kurveet tad vratam
உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள். இது உங்கள் கடமை...
தைத்திரீய உபநிஷத் 3.9
இதுவே எமது இயற்கை வேளாண்மை முயற்சிக்குரிய உத்வேகம்! மந்திரம்! குறித்த மந்திரம் உணவு உற்பத்திக்குரிய இரகசியத்தையும் சொல்லித்தருகிறது. 
உணவினது இரகசியம் அறிந்தவன் உணவுச் செல்வமும் உடையவனாகி புனிதப் பேரொளி மிக்கவனாக, மகிமை மிக்கவனாக ஆகிறான்!

தலைப்பு இல்லை

மழையால் சிலிர்த்து நிற்கும் எமது ஐந்தடுக்கு உணவுக் காடு, மழை நேரத்தில் உள் நுழையவே ஆச்சரியமான உணர்வும் பல ஆண்டுகளாக இருக்கும் காட்டில் நுழைவது போன்ற உணர்வு - இது எமது விவசாய பண்ணை முகாமையாளரின் கருத்து! 
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெற்றிச் செல்வனுடன் ஆரம்பித்த இயற்கை விவசாயத்திற்கான ஐந்தடுக்கு உணவுக்காடு உருவாக்கும் பணி தம்பி ஜெனோஜனின் அயராத உழைப்பினால் இன்று உருப்பெற்றுள்ளது. 
ஆர்வமுள்ளவர்களுக்கு இலங்கை முழுவதும் இப்படியான இயற்கை விவசாய உணவுக்காடுகளை உருவாக்கித்தர எமது சாகம்பரா நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. 
பீடைகளை இயற்கைச் சூழலே கட்டுப்படுத்தும்.
பல்லுயிர்த் தன்மையுடைய விவசாயச் சூழல்
இரசாயன உரம் எதுவும் இல்லை
இரசாயனப் பீடை கொல்லி இல்லை
உள்ளூட்டுச் செலவு மிகக் குறைவு
எப்போதும் விளைச்சல்!
சிறிய காணிகள் வைத்திருப்பவர்களுக்கு அருமையான இயற்கைச் சூழல் 
இயற்கையுடன் இணைந்து உணவு உற்பத்தி செய்ய விரும்பும் அனைவருக்கும் வீட்டுத் தோட்டமாக செய்யக் கூடிய ஒரு மாதிரியுரு இது! 

Friday, November 06, 2020

Wednesday, November 04, 2020

தலைப்பு இல்லை

இன்று யோகம் பயிலும் பலரும் ஸ்தூல உடலை செம்மைப்படுத்துவதிலேயே யோகப் பயிற்சியை நிறுத்திக் கொள்கிறார்கள்! ஆனால் இந்த ஸ்தூலத்திற்கு ஆதாரமான மனம், பிராணன் இவற்றைப் பற்றி ஆழமாகக் கற்பதில்லை!

பிராணாயாமம் என்றால் பிராணனை கட்டுப்படுத்துவது என்ற அர்த்தத்தினை உடைய மூச்சுப் பயிற்சியை மாத்திரம் பயிற்சிக்கிறார்கள்; ஆனால் பிராணாயாமத்தின் உயர் நிலை பிராணனை விரிவுபடுத்தி உயர் உணர்வுத் தளங்களை அடையும் இரகசியம், இது பற்றி எவரும் உரையாடுவதில்லை!

இது போல் மனம் என்பதை மேலோட்டமாகத் தான் உரையாடுகிறோம்! ஆனால் யோகதத்துவம் அதன் ஆழமான பகுதிகளையும், செயலையும் பற்றி உரையாடுகிறது!

அகத்தியர் வழி யோகம் மனதை ஆழமாகபுரிந்து எப்படி எமக்கு நண்பனாக்குவதன் மூலம் செம்மையடைவதைக் கூறுகிறது. 

அகத்தில் ஈசன் ஒளிரும் மகாகுருவான அகத்தீசரை மூலகுருவாகக் கொண்டது சிருஷ்டியின் குருபரம்பரை!

இவையனைத்தையும் சிருஷ்டியின் இரண்டு அடிப்படைக் கற்கை நெறிகளான,

1) மானச யோக வித்யா : https://forms.gle/mZQQKFdgEMjPAyup6

2) அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் : https://forms.gle/U47pD8yYLFzPoof69

ஆகிய இரு கற்கைகளிலும் விரிவாகக் கற்க முடியும்!


Tuesday, November 03, 2020

State of Mind & Inner evolution

State of mind is cyclic and travel through time; inner evolution is purely based on our state of mind; which is obviously cyclic with time; 

mind can focus to its higher self (God) and positive thoughts, then sustain in its higher state (raise of above graph) or focus in to lower nature (hate, anger, attachment) and stay in lower state (sink of the graph) ; also mind is travelling through time; 

mind influenced by three guna (Sattva, Rajo, Thamo) based on persons Guna dominance path of Yoga will be defined; and no person cannot stay in one Guna forever, mind will fall and up with time! 

Then we need all four tools (Karma, Bhakthi, Gnana, Raja Yoga) to tackle the situation as per the situation! as proposed scheme of Yoga proposed by Swami Vivekananda, in all above four paths Yoga is constant, prefix is changing! constant factor is our ultimate aim, that is yogam! prefix are changing as per inner evolutions of seeker! Karma, Bhakthi, Raja, Jnana are tools as per the inner evolution of Sadhaka to reach his ultimate goal of Yogam !

Tamil Siddha's have different working scheme of yoga - mind, body & Prana! and inner evolution can be stabilize by mastering the Prana!


Monday, November 02, 2020

தலைப்பு இல்லை

சித்தர் பாடல்கள் வாழ்வியலுக்குத் தேவையான அத்தனை பொக்கிஷங்களையும் கொண்டிருக்கிறது! சாமானியன் எப்படி தன்னை மேம்படுத்த முடியும் என்ற எளிய வழியை உள்ளங்கை நெல்லிக் கனியாகக் காட்டுகிறது! 

சித்தர்கள் பக்குவமுற்றவனுக்கு மாத்திரம் புரிய வேண்டும், ஆனால் எல்லோரிற்கும் கிடைக்கும் வகையில் பொதுவில் இருக்க வேண்டும் என்பதற்காக பாடியவற்றை எளிய தமிழில் பரிபாஷயில் பாடினார்கள்! இப்படிப் பாடியதில் பொது நலமிருந்தாலும் அதைப் புரிவதற்கு ஒருவன் சிரத்தையுடன் முயற்சிக்க வேண்டும்! 

உயர்ந்த ஞானம் பெறுவதற்குரிய தகுதி பிறப்பாலோ, இன, மதப் பாகுபாட்டாலோ தீர்மானிக்கப்படுவதில்லை; ஆனால் உள்ளத்தின் அகத்தகுதி முதன்மையானது! அதில் முதல் தகுதி சிரத்தையாகக் கற்றல்! 

சித்தரிலக்கியங்களைக் கற்பதற்கான இந்த சிரத்தையுடன் கற்கும் பண்பினை, பண்பாட்டினை சிருஷ்டியின் முதல் முயற்சி அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் கற்கை!


தலைப்பு இல்லை

ஸ்ரீ அரவிந்தரின் சூக்ஷ்ம உலக விளக்கம்
ஸ்தூல சூக்ஷ்ம உலகங்களைப் பற்றிய புரிதலைப் பற்றி இப்படிக் கூறலாம். 
எல்லா உலகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்த இயக்கமாக காணப்படுகிறது. உயர்ந்த உலகங்கள் கீழ் உலகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. கீழ் உலகங்கள் மேலுலகங்களின் ஆதிக்கத்திற்கேற்ற எதிர் விளைவுகளின் மூலம் தமது உலகின் இயக்கத்திற்குரிய சூத்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது. உதாரணமாக ஸ்தூல உலகத்தின் இயக்கத்திற்கான விதிகள் பிராண உலகின் ஆதிக்கத்தால் உருவாக்கப்படுகிறது. மனதின் இயக்கம் மானச உலகின் ஆதிக்கத்தால் உருவாக்கப்படுகிறது. 
தற்காலத்தில் அதிமன (விஞ்ஞான மய) உலக ஆதிக்கத்தால் புவியில் அதிமன விதிகள் உருவாக்கப்படுகிறது. 
இப்படி புவியில் உருவாகும் அனைத்தும் புவிக்கு அப்பாற்பட்ட சூக்ஷ்ம உலகின் ஆதிக்கத்தாலும் அதன் விளைவுகளாலும் உருவாக்கப்படுகின்றது. 
இதைப் போல் சூக்ஷ்ம உலகசக்திகள் தம்மை புவிக்கு இறக்கிக் கொள்வதன் மூலமும் புவியின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இங்கு உருவாகும் அனைத்தும் சூக்ஷ்ம உலகத்துடன் தொடர்பு பட்டிருக்கும். 
மனிதனானவன் தனது ஸ்தூல உடல் தவிர்ந்த மற்றைய உடல்களினால் இந்த சூக்ஷ்ம உலகங்களுடனும் அதன் உணர்வுகளுடன் தொடர்பு கொண்டு அதன் ஆற்றல்களை, இயக்கங்களை அறியக் கூடியவன்.
 

தலைப்பு இல்லை

Now Sri Shakthi Sumanan books are in Amazon India too...

தலைப்பு இல்லை

இன்னும் இளைஞன் என்பதால் இந்தப் படம் மிக இளமைக் காலத்தில் எடுக்கப்பட்டது எனலாம்!

Sunday, November 01, 2020

தலைப்பு இல்லை

இன்று யோகம் பழகவேண்டும் என்றவுடன் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும் என்று பயந்துபோய் விடுகிறார்கள்! உலக இன்பம் கெட்டு விடும் சன்னியாசியாகி விடுவோம் என்று பயந்து ஓடுபவர்கள் அனேகர்! இப்படி இவர்கள் வெருள்வதற்கும் உண்மையான யோக சாதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! 

இந்த உண்மையை சித்தத்தில் பதியவைக்கவே காயத்ரி மந்திரத்துடன் ம்ருத்யுஞ்ஜெய மந்திரமும் கற்பிக்கப்படுகிறது. இந்த மந்திரத்தின் பொருள் வருமாறு;

ஓம் 

யார் நல்ல சுகந்தம் நிறைந்த வாழ்வைப் புஷ்டியாக்கும், செம்மையாக்கி வளர்ச்சியைத் தரும் அந்த முக்கண்ணனை நாம் வணங்குகிறோம்!

அவன் வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறதோ அப்படி விடுவித்து அமரத்துவத்தைத் தரட்டும்!

இதில் முக்கியமான வரி "வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறதோ" என்பது! வெள்ளரிப்பழம் முற்றியதும் தனது கொடியிலிருந்து விடுபட்டுவிடும்! அதுவரை அது கொடியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும்! அது போல் உலகில் இருக்கும் வரை எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்க்கை, தொழில், மனைவி, பிள்ளைகள் இவற்றை நன்கு கவனித்துக் கொண்டு எமது உடலையும், மனதையும் நன்கு போசித்துக்கொண்டு,  ஆன்மாவைப் போசிக்கும் சாதனையையும் செய்து கொண்டிருக்கும் சாதகனுக்கு ம்ருத்யுஞ்ஜெய தேவனான அந்த சிவபெருமான் வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறதோ அப்படி பலனை வழங்குவார்! 

அதுவரை பிஞ்சிலே வெம்பாமல், ஆன்மீகம் என்று வாழ்க்கையைக் குழப்பாமல் இன்பமாக வாழ வேண்டும்! மனதில் ஆன்மீகம் என்ற பேராசை வளர்ந்து வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது! அது போல் எமக்கு மேல் ஒரு உண்மை இருக்கிறது என்பதை உணராமல் நாம் தான் என்று ஆணவம் கொள்ளவும் கூடாது!


தலைப்பு இல்லை

ஆசிரியர் - கற்றல் - மாணவர் – புரிதல்

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...