குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே

Wednesday, March 03, 2021
தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்
Friday, January 22, 2021
வள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்
வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்;
ச - உண்மையே சகரமாய்,
ர - விஷயநீக்கமே ரகரமாய்,
வ - நித்திய திருப்தியே வகரமாய்,
ண - நிர்விஷயமே ணகரமாய்,
ப - பாவ நீக்க ஏதுவே பகரமாய்,
வ - ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து.
சரவணபவ (குருமுகமாய் சரஹணபவ என்ற மந்திரபேதம் உண்டு) என்ற சடாட்சர மந்திர சாதனை செய்யும் சாதகன் உண்மை அறிவைக் கொண்டு, புலன் வழி விஷயங்களை நீக்கி, நித்திய திருப்தியுடன், புலன்களைக் கடந்த ஆன்மாவின் இயற்கையான தெய்வகுணத்தில் கவனம் வைத்து சாதனை செய்ய சித்தத்தில் பதிந்திருக்கும் பாவ சம்ஸ்காரங்கள் நீக்கம் பெற்று எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்குக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவினைப் பெறுவான் என்பது பெறப்படும்!
வள்ளலார் கூறும் சுப்பிரமணிய தத்துவம் - 01
சுப்பிரமணியன் என்பது யார் என்பதற்கு வள்ளலார் கீழ்வருமாறு விளக்குகிறார்:
- யோகசாதனையின் உயர்வில் புருவமத்தியில் தோன்றும் ஒளி ஆறுபட்டைகள் (முகங்கள்) கொண்ட உருண்ட ஒளி நிறைந்த மணியாக தோன்றும். இதை சண்முகம் என்பார்கள்.
- மூலதாரத்திலிருந்து மூன்று இடம் தாண்டி இருதயத்திற்கு இடதுபுறத்தில் ஆறுகிளைகள் உள்ள ஒரு நாடி இருக்கிறது. இதை சுப்பிரமணியம் என்பார்கள்.
- ஆறு அறிவுகளும் ஒன்று சேர்ந்து உருவாகும் சுத்த விவேக நிலையை சண்முகம் என்பார்கள்.
- ஆறு ஆதாரங்களிலும் உள்ள பிரகாசங்கள் ஒன்று சேர்ந்த நிலையை ஷண்முகம் என்பார்கள்
- மேலேயுள்ள எல்லாம் விளக்கமாக இருந்தாலும் எல்லாத்தத்துவங்களும் முடிவுற்று, மனமற்ற நிலை எனும் உன்மணிக்கு அப்பால், சாந்தமான அறிவு நிறைந்த ஆன்ம அறிவே சுப்பிரமணியம்.
Sunday, January 17, 2021
பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடல் - 03 யோக விளக்கம்
சிவயோகத்தின் படிகள் - தசகாரியம்
சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்
சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்
Posted in FB : https://www.facebook.com/tsumanenthiran/posts/10158138005541589
இலங்கையின் சித்த மருத்துவப் பாரம்பரியம்
அவுஸ்ரேலிய தாயகம் வானொலியில் பால விக்னேஸ்வரன் ஐயாவுடன் ஒரு உரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது!
தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்
தாவோ - (சம நிலையான) பாதை தி - அகவலிமை நூல் - நூல் அகவலிமையைப் பெறுவதற்கான பாதையைக் காட்டும் நூல் தாவோ தி ஜிங் தாவோ தி ஜிங் என்ற நூல் லாவோட்ஸ...

-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
சித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...
