குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label முயல். Show all posts
Showing posts with label முயல். Show all posts

Saturday, January 11, 2020

யாழ்ப்பாணத்து முயலும் ஈராக் சண்டையும்

ஒரு குட்டிக்கதை! ஒரு ஆழமான உளவியல் விஷயத்தை கதை மூலம் புரிய வைக்கலாம் என்று முயற்சித்துள்ளேன். புரிந்தவர்கள் பதிவிடுங்கள்! உரையாடுவோம்!

யாழ்ப்பாணத்தில் ஒரு முயல் வசித்துவந்தது! கடந்த முப்பத்தைந்து வருடங்களாக யுத்தத்தில் குண்டு வீச்சு விமானச் சத்தத்தைக் கேட்டவுடன் நிலத்திற்கு கீழ் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டிருந்தது. 

அந்த முயலைப்போலவே மக்களும் பங்கர் அமைத்து பதுங்கப்பழகியிருந்ததால் முயலிற்கு மனிதர்களும் தம்மைப்போன்றே இருக்கிறார்கள் என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தது. 

இப்படியே பழக்கப்பட்டிருந்த முயல் மெதுவாக யதார்த்தத்தை சிந்திக்கும் பழக்கத்தை இழந்து எப்போது போர்ச்சூழலில் குண்டு விழுந்து விடுமோ என்ற பயத்தில் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள தனது வலையில் நிறைய கரட்டுகளை (Carrot) சேமித்துப் பாதுகாத்து வந்தது! 

இப்படியே பழக்கப்பட்ட மனம் சிறிது காலத்தில் பட்டாசு வெடித்தாலும் குண்டு வெடித்தது என்று எண்ணிப் பயம் கொள்ள ஆரம்பித்தது! இன்னும் தனது வலையினை விட்டு வெளியே வந்து பயம் இன்றி உலாவ மறுத்தது! 

இப்போது யுத்தம் முடிந்துவிட்டது! அதன் வசிப்பிடமான வலை இருக்கும் இடத்திற்கு மேல் நல்ல செம்மண்! காணிக்காரன் பூசணித்தோட்டம் போட்டுவிட்டார்! முப்பதாண்டு தோட்டம் செய்யாத மண் என்பதால் நல்ல வளமான மண்! ஒவ்வொரு பூசணியும் பத்து பதினைந்து கிலோ நிறையில் காய்த்திருந்தது! இதற்கு கன்னம் வைத்த கள்ளன் காணிக்காரன் இல்லாத நேரம் பார்த்து பூசணியைப் பிய்த்துக்கொண்டு தோளில் கொண்டு செல்லும் போது காணிக்காரன் வந்து விட்டான்! அவனைக்கண்ட கள்ளன் தடார் என்று தோளிலிருந்த பூசணியை நிலத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டான். 

பூசணி விழுந்ததோ முயலின் வலைக்கு மேல்! பூசணி விழுந்த சத்தம் கேட்ட முயலிற்கு யுத்த ஞாபகம் வர தனது யுத்தகால ஞாபகம் விழித்தெழ, ஐயோ குண்டு வெடித்துவிட்டது, நான் சாகப்போகிறேன் என்ற பயத்தில் வலையை விட்டு ஓட ஆரம்பித்தது! 

முயல் இருந்த காணி மல்லாகம் சந்தியில் இருந்த எரிபொருள் நிலையத்திற்கு அருகில்! வலையை விட்டு ஓடிவந்த முயலிற்கு கிடைத்தது பேரதிர்ச்சி! 

எல்லா மனிதரும் பெற்றோல் நிரப்ப வாகனத்துடன் ரோட்டு நிறையக் காத்திருந்தthaip பார்த்தவுடன் முயலிற்கு பேரதிர்ச்சி! 

அங்கிருந்த மனிதன் ஈராக்கில் சண்டையாம்! அமெரிக்காக்காரன் குண்டு போடுகிறானாம்! என்றான்!

இன்னொருவன் ஈராக்கில் இல்லையடா ஈரானில்தான் அமெரிக்கா குண்டு போடுதாம் என்றான்! 

அவனை இடைமறித்த புத்திசாலி, இல்லையடா: ஈராக்தான் அமெரிக்காக்காரனுக்கு அடிச்சிட்டானாம் என்றான்! 

மல்லாகத்து காணியில் உள்ள தனது வலையைத் தாண்டி அளவெட்டி என்று ஒரு ஊர் மாத்திரம்தான். கேள்விப்பட்ட முயலிற்கோ பெருங்குழப்பம்! ஈராக்கும் ஈரானும் அளவெட்டிக்கு அங்காலதான் இருக்குதுபோல! தனது வலைக்கு மேல் தான் கேட்ட வெடிகுண்டுச் சத்தத்துக்கு ஈராக் - ஈரான் - அமெரிக்ககாரன் தான் காரணம் என்று மேலும் பயந்துகொண்டு, விஷயம் வெகு சீரியஸ் என்று நினைத்துக்கொண்டு இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தது! 

ஓடும் ரோட்டெங்கும் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் வாங்க மக்கள் கூட்டம்!


ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...