குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 25, 2023

தேவாரம் கூறும் சிவத்தியானம் – 04

 

சிவபெருமானின் திருவிளையாடல்கள் என்று சொல்லப்படுவது அனைத்துமே மனிதனில் ஆணவ மலம் மிகுதியால் உருவாக்கும் அசுரத்தனத்தை நீக்கும் மல நீக்கமே! இந்தப்பாடலில் தாரகாசுரன் மகன்மார் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்தார். இவர்கள் ஆணவ மிகுதியால் செய்த அசுரத்தனங்களை அழித்ததுடன், அந்த வரத்தைக் கொடுத்த பிரம்மாவின் தலையைக் கொய்து அதில் பலியேற்ற தன்மையும் இங்கு குறிப்பிடப்படுகிறது.

முதல் இரண்டு வரிகள் சிவபெருமானின் ஆணவ மலம் நீக்கும் அருளும் பெருமையும் கூறி அடுத்த இரண்டு வரிகள் மனதில் தியானிக்கக் கூடிய உருவத்தின் தன்மை கூறப்படுகிறது.

இங்கு கூறப்படும் புராணக்கதைகள் எல்லாம் ஒருவன் தனது சிவயோக சாதனையில் முன்னேறும் போது அவனது மனதின் படைப்பாற்றல் மலங்களால் உருவாக்கும் ஆணவத் தன்மைகளை சிவ ஒளியால் நீக்கும் தன்மைகளைக் கூறுகிறது என்ற உண்மை அறிவு பெறவேண்டும். புராணனகள் ஆழமான தத்துவங்களின் குறியீடுகள்.

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி

விளங்குதலை யோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென

துள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை

மலிந்தவரை மார்பிற்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய

பெம்மானிவ னன்றே. 4

{ திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருக்கடைக் காப்பு - 04; தலம் : சீர்காழி - 01-பிரமபுரம் ; திருமுறை : முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}

விண்ணில் பறந்து ஆணவத்தால் தெய்வகுணத்தை வளரவிடாமல் செய்த விண்ணில திரிந்த அந்த அசுரர்களின் கோட்டைகளை சிரிப்பால் அழித்ததுமன்றி! அந்த அசுர்களிற்கு வரம் தந்த பிரம்மா ஆணவமுற்ற போது ஒரு தலையைக் கொய்து அந்தக் கபாலத்தில் பலியும் ஏற்று உண்டு மகிழ்ந்த உள்ளம் கவர் கள்வனே உம்மை நான்

மண்ணில் மகிழ்ந்து ஊர்ந்து தெரியும் அரவத்தையும், கொன்றை மலரை கழுத்தில் அணிந்து, மார்பில் உமையம்மையரை மகிழ்ந்த நிலையில் அணைத்த வண்ணம் இருக்கும் பிரம்மாபுரத்தில் உறையும் இந்தப் பெருமானாரை தியானிக்கிறேன்!

தியானம்:

கழுத்தில் நாகமும், கொன்றை மாலையும், உமையம்மையை இடதுபுற மார்பில் அணைத்த வண்ணம் மகிழ்ந்த நிலையில் இருப்பதாக கண்களை மூடி மனக்காட்சியில் கண்டு தியானிக்கவும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...