குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 28, 2019

தலைப்பு இல்லை

#கவிதைChallenge

இந்தப் படத்திற்கு தம்பி சஜீதரனின் கவி....

நீங்களும் உரைக்கலாம்!

தூரத் தெரியும் வெளிமுழுதும் 

சுடரும் தேவி திருக்கோலம்

நேரில் காணும் விழிகளிலே 

நிறைந்து தீர தீட்சண்யம்

தீரக்கனவின் விதையாவாள் 

தெளிந்த அறிவின் வினையாவாள்

ஆரும் நாடும் காலவளை

அள்ளக் குறையா அருள் தருவாள்!

வரிகளுக்கு சொந்தக்காரர் இங்கே: Thava Sajitharan


தலைப்பு இல்லை

சித்தர்களின் ஸ்ரீ வித்யா பஞ்சாக்ஷர காயத்ரி உபாசனை சாதனை முறைக்கு மிகப் பொருந்தி வரக் கூடிய யோகமுறை தாவோப் பயிற்சியாகும். 

தாவோ என்பது சீன பண்டைய மறையியல் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த தத்துவத்தில் மனிதன் உடலே கோவில், உடலை செம்மைப்படுத்தி உபயோகப்படுத்துவதால் அண்டத்தின் நட்சத்திர சக்திகளை ஏற்று உயிரை வளர்த்து பேரொளி நிலை அடைய வைக்கலாம் என்பதே அடிப்படை தத்துவம். 

இதற்கு மனிதனிடம்  மூன்று சொத்துக்கள் காணப்படுப்படுகிறது. 

1) சீ எனும் பிராணன், இதை மூச்சால் ஒழுங்குபடுத்த வேண்டும். 

2) ஜிங்க் எனப்படும் விந்து அல்லது சுக்கிலம், இதை உடல் பயிற்சியால் ஒழுங்கு படுத்த வேண்டும். 

3) சென் எனப்படும் மனம், இதை விழிப்புணர்வால் எண்ணங்கள் அற்றதாக ஆக்க வேண்டும். 

இப்படி மூன்று நிதியங்களையும் சரியாக ஒழுங்குபடுத்தி தனது உடலிற்குள் ஒளி நிலைப்படுத்தக் கூடிய பயிற்சியை நீண்டகாலம் செய்து வரும் சாதகன் தனது ஒளியுடலை வளர்த்து மகாகாரண சரீரம் பெறுகிறான். 

இதை காயத்ரி சாதனையில் பஞ்ச பூத சாதனை, பஞ்சகோச சாதனை என்று கூறுகிறோம். இப்படி பஞ்ச பூத கோஸங்களை சுத்தி செய்த சாதகன் ஸ்ரீ வித்யா சாதனையூடாக உயர் மண்டலங்களின் சக்தியை ஈர்த்து தனது ஒளியுடலை பெருக்கலாம் என்பதே சித்தர்களின் வாசி சிவ யோகங்களில் அடிப்படை. 

பெரும்பாலான சித்தர்கள் பஞ்சாஷர மந்திர வித்தெழுத்துக்களையே இந்த சாதனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஐந்தெழுத்து பஞ்ச பூதங்களை உடலில் சமப்படுத்தி ஈர்த்து உயிரை அழியா நிலை ஆக்குவதால் - அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்!


தலைப்பு இல்லை

இன்று பலரும் சித்தர்கள் இப்படிக்கூறியுள்ளார்கள், அப்படிக் கூறியுள்ளார்கள் என்று ஆள் ஆளுக்கு பதிவு போட்டுக் கொண்டு தகவல் களஞ்சியமாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அனேகமானவை எவராவது எழுதுவதை கண்மண் தெரியாமல் பிரதி செய்து போடுவது. 

இப்படி மற்றொருவர் கூறியதை தகவலாக பகிர்ந்துக் கொண்டு இருக்காமல் நாம் இந்த சமூகத்திற்கு பிரயோசனமாக ஏதாவது செய்ய விரும்பினால் அர்ப்பணிப்புடன் ஏதாவது ஒரு சித்தரின் நூலை எடுத்து ஆழமாக கற்று, அதில் கூறிய பயிற்சிகளை அனுபவமாக கண்டு, தமது அனுபவத்துடன் விளங்க கூறுவது உபயோகமானது. 

மேலும் கருத்துக் கூறும் போது ஆழமாக கற்றபின்னர் கருத்துக் கூறுவதும், தமது அனுபவத்தினூடாக கருத்துக் கூறுவதும் அந்த துறைக்கு நன்மை பயப்பவை!

அதீத நம்பிக்கையின் அடிப்படையிலும், யதார்த்த மனதிற்கு ஒவ்வாத விதத்திலும், சுய அனுபவம் இன்றியும் கூறப்படும் கருத்துக்கள் அந்தத் துறையை வளரவிடாமல் தடுத்து விடும். 

இன்று சித்த மருத்துவத்தில் இத்தகைய ஒரு பிளவு நிலை காணப்படுகிறது. BSMS படித்த பட்டதாரிகள் சித்த மருத்துவத்தின் அடிப்படையை அதன் சூக்ஷ்மத் தன்மையினையும் தத்துவங்களையும் புரிந்து கொள்ளாமல் அவற்றை நவீன ஆய்விற்கு உட்படுத்தித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க, அடுத்த பக்கம் நாம் சித்தர் பரம்பரை என்று மனம்போன போக்கில் அந்த சித்தர் சொன்னார் இந்தச் சித்தர் சொன்னார், என்று ஒரு கூட்டம் கருத்து வீசிக் கொண்டு இருக்க, கடைசியில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விவாதத்தில் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாமல் காலம் கழிந்து கொண்டு போகும். 

சித்த மருத்துவத்தின் வேர்களைப் புரிய அது எழுதப்பட்ட தமிழ் மொழியின் நுணுக்கங்கள் புரிய வேண்டும், தமிழ் மொழியின் நுணுக்கம் புரிந்தாலும் அவை பிரயோகிக்கப்பட்ட நிலையின் குழூஉக் குறி தெரியவேண்டும், குழூஉக்குறி தெரிந்தாலும் பின்னர் காலத்திற்கு ஏற்ப எப்படி அதை பிரயோகிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு வேண்டும், இந்த அனுபவ அறிவு வந்தால் அது இக்காலத்து நவீன அறிவியலில் எங்கு பொருந்துகிறது, எங்கு பொருந்தவில்லை என்ற நுண்ணறிவினால் ஆய்தல் வேண்டும். இப்படி ஒரு முறைப்படுத்தப்பட்ட பலரின் ஒருங்கிணைந்த உழைப்புத்தான் அந்தத் துறையை முன்னேற்றும்!


Friday, January 25, 2019

தலைப்பு இல்லை

இரவு உணவிற்கு பின்னரான உரையாடலின் முதல் பாகம் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் பற்றித் தொடங்கி கடைசியில் புலவரைப் பற்றியதுடன் முடிந்தது சுவாரசியம்.

தைப்பூசத்திற்கு முன்னர் அன்னை புவனேசுவரி மகா வித்யா பற்றி கவி எழுதிப் பதிவிட அதைப்பார்த்த நண்பர் கார்த்திகேயன் புவனேசுவரி மகாத்மியம் என்ற 1939ம் ஆண்டு பதிப்பிக்கப்பட நூலை அனுப்பி வைத்தார். 

அதன் இறுதியில் பார்த்தால் என்ன ஆச்சரியம் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எழுதிய 11 விருத்தப்பாக்கள் புவனேசுவரியம்மை திருவூஞ்சல் என்ற பாடல்கள் கிடைத்தன.


தலைப்பு இல்லை

இன்றைய இரவு உணவிற்கு பின்னரான நான், சின்னமாமா, தம்பிமார் சஜிதரனும் ஆதித்துடனுமான உரையாடலில் ஒரு பாகம் நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் பற்றி திரும்ப அவரது மகன் நடராசர் பற்றிக் கூறுகையில் இறுதியில் அவர் பௌத்தத்தை தழுவி துறவி ஆனார் என்று அம்மா சொல்ல, அதற்கு ஆதித்தன் வல்பொல ராகுல தேரரின் புத்தபகவான் அருளிய போதனை என்ற நூலை மொழிப் பெயர்த்த நடராசரா? என்று கேட்க அந்த நூலைப் பற்றி மேலதிகமாக தேட கடைசியில் நூலகம் தளத்தில் முழுப் புத்தகமும் கிடைத்தது. 

ஆதித்தன் கூறியபடி அதே வல்பொல ராகுல தேரரின் புத்தபகவான் அருளிய போதனை என்ற நூலை மொழிப் பெயர்த்தவர் நவாலியூர். சோ. நடராஜர் ஆகிய சோமசுந்தரப்புலவரின் மகன்தான். 

சோமசுந்தரப்புலவர் எமது தாயின் தாயான பாட்டியின் சித்தப்பா என்பது தான் இந்த தேடலில் ஆரம்பம். 

கடைசியில் கிடைத்தது போதிமாதவனின் போதனைகள். 

நல்ல நூல் ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறுக!

http://noolaham.net/project/19/1851/1851.pdf


Monday, January 21, 2019

போகரும் புவனேஸ்வரி தேவியும்


***********************************************
ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்ட தியானத்தின் பின்னர் அன்னை அண்டத்தின் இயக்கத்தையெல்லாம் காட்டி அண்டத்திலிருந்து சக்திகளை எல்லாம் தாவர வர்க்கமும், தாது வர்க்கமெல்லாம் எப்படி ஈர்த்து வளர்கிறது என்று போகனுக்கு காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்து தெளிந்துகொண்டிருந்த போகனுக்கு அன்னை தன் புன்சிரிப்புடன் கேட்டாள்
போகா, எனக்கு ஏன் புவனேஸ்வரி என்று பெயர்? உனக்கு ஏன் போகன் என்று பெயர்?
அதற்கு போகரோ,
அன்னையே, தாங்கள் அண்டத்தின் இயக்கத்தை பூமியில் வனங்கள் எனும் தாவர வர்க்கத்தின் மூலம் ஈர்த்து பூமியை வளப்படுத்தும் தலைவி என்பதால் பு + வன + ஈஸ்வரி, பூமியிலுள்ள வனங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரி,
இந்த ஞானத்தையெல்லாம் தங்கள் அருளால் போகித்து பேரின்பம் காண்பதால் எனக்குப் பெயர் போகன்.
அன்னையும் சிரித்துக்கொண்டு வனத்திலுள்ள மூலிகைகள் எல்லாம் எப்படி அண்டத்துடன் தொடர்புகொள்கிறது என்ற ஞானம் பெற்றாய் போகா, பெற்ற ஞானத்தை பாமரனும் பயன் பெற விஷத்தை அமிர்தமாக மாற்றி ஆறறிவு தத்துவத்தை விளக்கி நவபாஷாணச் சிலையை தயார் செய்து பிரதிஷ்டை செய்வாய் என்று ஆசி கூறி பேரொளியாய் மறைந்தாள்.
{அவரவர் மன நிலைக்குத் தக்க கதையாகவோ, கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்,  }

போகரும் புவனேஸ்வரி தேவியும்

ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக் கொண்டிருந்தார். நீண்ட தியானத்தின் பின்னர் அன்னை அண்டத்தின் இயக்கத்தையெல்லாம் காட்டி அண்டத்திலிருந்து சக்திகளை எல்லாம் தாவர வர்க்கமும், தாது வர்க்கமெல்லாம் எப்படி ஈர்த்து வளர்கிறது என்று போகனுக்கு காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்துக் கொண்டிருந்த போகனுக்கு அன்னை தன் புன்சிரிப்புடன் கேட்டாள்.

போகா, எனக்கு ஏன் புவனேஸ்வரி என்று பெயர்? உனக்கு ஏன் போகன் என்று பெயர்?

அதற்கு போகரோ,

அன்னையே, தாங்கள் அண்டத்தின் இயக்கத்தை பூமியில் வனங்கள் எனும் தாவர வர்க்கத்தின் மூலம் ஈர்த்து பூமியை வளப்படுத்தும் தலைவி என்பதால் பு + வன + ஈஸ்வரி, பூமியிலுள்ள வனங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரி,

இந்த ஞானத்தையெல்லாம் தங்கள் அருளால் போகித்து பேரின்பம் காண்பதால் எனக்குப் பெயர் போகன் என்றார். 

அன்னையும் சிரித்துக் கொண்டு வனத்திலுள்ள மூலிகைகள் எல்லாம் எப்படி அண்டத்துடன் தொடர்புக் கொள்கிறது என்ற ஞானம் பெற்றாய் போகா, பெற்ற ஞானத்தை பாமரனும் பயன் பெற விஷத்தை அமிர்தமாக மாற்றி ஆறறிவு தத்துவத்தை விளக்கி நவபாஷாணச் சிலையை தயார் செய்து பிரதிஷ்டை செய்வாய் என்று ஆசி கூறி பேரொளியாய் மறைந்தாள். 

{அவரவர் மன நிலைக்குத் தக்க கதையாகவோ, கருத்தாகவோ, கற்பனையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும்,  }


Sunday, January 20, 2019

தலைப்பு இல்லை

ஸ்ரீ புவனேஸ்வரி தரிசனம்

01 - 08 பாடல்கள், தைப்பூசம், பௌர்ணமி 

தாந்த்ரீக மரபில் பத்து பிரபஞ்ச மகா ஞான சக்தியில் நான்காவது சக்தி ஸ்ரீ புவனை, சித்தர் போக நாதரின் தாய் சக்தி, இவள் உபாசனை சித்தி தெளிவான ஞானத்தையும் பிரபஞ்ச இயக்கத்தின் அறிவினையும் தரும் என்பது மரபு.


தலைப்பு இல்லை

கவி எழுதும் முயற்சி....
சித்தர் பாடல்களுக்கு பொருள் எழுதுபவர் என்ற முத்திரையை பதிந்து விட்டதால், நாமாக கவி எழுதினாலும், இந்தப் பாடலைப் படித்து விட்டு அன்பர் ஒருவர் பழைய சித்தர் பாடலா என்று கேட்டார், ஆதலால் இதை எழுதியது நாம் என்று உறுதிப்பத்திரம் தருகிறோம்! 
   

Saturday, January 19, 2019

ரிஷி சிந்தனை - 01


மூலம்: பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யா
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
மனித சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பண்டைய ரிஷிகளின் ஞானத்தை எளிமைப்படுத்தி வழங்கியவரே பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா.  அவரது சிந்தனைகளை வாசகர்களின் சிந்தனைக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க குருவருள் கூடியுள்ளது.

மனிதன் செய்யும் செயல்களையும், ஒட்டுமொத்த சமூகமாக இயங்கும் நிலையையும் உற்று நோக்கினால், அவை அந்த மனிதர்களிலும் சமூகத்தினதும் மனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நம்பிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களும் அவர்களின் மனதில் அல்லது ஆழ்மனத்தில் உத்வேகங்களாக உருப்பெறுகின்றன. உருப்பெற்ற அந்த உத்வேகம், பின்னர் விருப்பமாக மாறி செயலுக்கு வருகிறது.

ஒரு மனிதன் தான் காணும் அல்லது செய்யும் செயல்கள் யாவற்றையும்,  தனது மனத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆழ்மன நம்பிக்கைகள் மூலமாகவே காண்கிறான். பலவித வாழ்க்கை முறைகளையும், பலவித செயல்களையும் உடைய வித்தியாசமான மனிதர்களை நாம் சமூகத்தில் காண்கிறோம்.
இவை அவர்களின் ஆழ்மன உணர்வில் ஆழமாக பதிப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளே! ஒருவனின் நல்லொழுக்கங்களும் அவனது மதிப்பீடுகளும் சமூகத்தில் அவனது செயல்களை கட்டுப்படுத்துகின்றன.

தத்துவவாதி செயிண்ட் எமர் சன் அவர்கள், ”எதிர்காலத்தில் உலகில் போர்கள் இல்லாமல் போய்விடும்எனக்குறிப்பிடுகிறார். ஏனெனில் போர்களுக்கான காரணம் மக்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் எதிரி, எதிர்ப்புணர்ச்சியுடன் கூடிய கொந்தளிப்பு, சண்டை, வெற்றி என்ற ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்பு பட்டுள்ளது.
இவை தற்போதைய உலக சமாதானம், உலக மதம், நாம் அனைவரும் உலகின் பிரஜைகள் என்ற கொள்கைகள் மூலம் மீள் நிரப்பப்படும்போது போர் புரியும் எண்ணம் அகற்றப்படும்.

உலகமே ஒரு குடும்பமாக எண்ணும் எண்ணம் வளரும். இந்த எண்ணம் வளரும்போது மக்கள் அனைவரும் சுய நலமற்று மனித குலத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு உயர்வார்கள். எனவே எதிரிகள் இல்லாமல் போய் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் மனநிலைக்கு மாறுவார்கள். 
(தொடரும்…..)



தலைப்பு இல்லை

குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யாவின் சிந்தனைகள் வாரந் தோறும் தினகரன் பத்திரிகையில் கடந்த மூன்று மாத வெளியீடுகள்.

தலைப்பு இல்லை

கிருஷ்ண வர்ணி முக்கண்ணி 

அருக்கன் தாய்சக்தி மகாராணி

யோகமாயா அநாகத த்வனி 

புவனத்தின் ஈஸ்வரி


Tuesday, January 15, 2019

குளத்தில் குப்பை போடும் மன நிலையும் குருவும்


*************************************
ஓரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்க்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருலில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத்தொட்டி ஆக்கி விடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.
குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக்கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத்தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப்போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தைத்தினை துளியாக பெற்று பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.

விஞ்ஞான மதம் - Scientific Religion


*************************
இன்று பலரும் அறிவியலால் நிருபிக்கப்பட்டது என்ற வாசகத்தில் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களாக இருக்கக் காணுகிறோம். அவர்கள் அறிவியலால் நிருபிக்கப்பட்டதை மட்டும் நம்புகிறோம் என்ற மதத்தை சார்ந்தவர்கள். ஒரு மதவாதி தனது புனித நூற்களையும், போதகரின் உபதேசத்தையும் எப்படி கேள்விக்குட்படுத்தாமல், சுயஅனுபவத்திற்கு வராமல் நம்புகிறானோ, அதைபோல் அறிவியல் கூறுவது மட்டும் உண்மை என்ற வாதத்தை வைக்கும் அறிவியல் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
அறிவியல் என்பது பௌதீகப் பொருட்களின் அமைப்பு, இயக்கம் என்பவற்றை குறைந்த அளவு வழுவுடன் (lower error), அதிக உறுதியுடன் (higher confidence) அறிவினை பெறுவதற்குரிய ஒரு முறை மாத்திரமே! மேலும் பௌதீகம் தாண்டிய நுண்மையினை சூக்ஷ்மத்தை புரிவதற்கு அறிவியல் இன்னும் மாதிரியுருக்களையும் (Models) சுருக்க விஞ்ஞானம் (abstract science) எனப்படும் கணிதத்தையுமே பயன்படுத்துகிறது

எண்ணப்புரட்சி - சிந்தனைப் புரட்சி


நாம் எண்ணும் எண்ணமும், நம்மைச்சூழ உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களின் எண்ணமும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது எண்ணமும் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் அடைந்த விளைவுதான் எம் எல்லோரது வாழ்க்கையும்!
எண்ணம் உருவாகும் எம் மனதையும், எம்மைச் சூழ உள்ளவர்கள் மனத்தையும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்களது மனதையும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களது மனத்தையும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது மனத்தையும் மாற்றாமல் எமது வாழ்வு மாறாது!
எண்ணத்தில் சிந்தனையில் புரட்சிதான் உண்மைப் புரட்சி

உண்மை சாதனை

உண்மை சாதன
**********************

Image may contain: drawing
சிரத்தையுள்ள மாணவன் தனது குருவிடம் தியானம் பயின்று வந்தான். கடுமையான பயிற்சிக்குப் பின்னர்
குருவிடம் மகிழ்ச்சியுடன் வந்து
குருவே, எனக்கு தியானம் சித்தித்து விட்டது, இன்று தியானம் அருமையாக இருந்தது, நல்ல அனுபவம் என்றான்.
அதற்கு குரு, நல்லது அன்பனே இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய் என்றார்.
அதற்கு சீடன் " நான் ஆன்மீகத்தில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன், மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, மூச்சு ஆழமாக செல்கிறது, தெய்வீக அனுபவங்கள் வருகிறது, ஆகவே நிச்சயமாக நான் முன்னேறி விட்டேன் குருவே என்றான் உறுதியாக.
அதற்கு மீண்டும் குரு " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
சீடனுக்கு பெரிய ஏமாற்றமாகிப்போகிவிட்டது. குரு தனது முன்னேற்றத்தை பெரிதாக எடுக்காமல் தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்று மனம் வருந்திக்கொண்டான். இரண்டொரு வாரம் செல்ல மன உணர் ச்சிகளும், உடல் சோம்பலும் வர தியானம் தடைப்பட்டது. தியானத்திற்கு உட்கார முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்ய முடியவில்லை என்றவுடன் தனது குரு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று மனம் புலம்பி வருத்தப்பட்டு விரக்தி அடையத்தொடங்கினான். வீட்டில் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தொடங்கி விட்டது.
நேரே குருவிடம் சென்று, குருவே என்னால் எனது சாதனையை தொடரமுடியவில்லை, மனம் ஒருமைப்படவில்லை என்றான்
அதற்கு குரு அதே பழைய தொனியில் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய்" என்றார்.
அதற்கு சீடனே குருவே என்னால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை என்றான்,
அதற்கு மீண்டும் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று கூறிவிட்டு தனது வேலையைப்பார்க்க சென்றுவிட்டார்.
கதையின் நீதி தியானம் சாதனை என்பது கணியன் பூங்க்குன்றனார் கூறியது போல் "வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே" என்பது போல் நன்றாக நடக்கிறது என்று மனம் மகிழ்ந்துகொண்டிருப்பதும், நன்றாக நடக்கவில்லை என்று துன்ப படுவதையும் விடுத்து தொடர்ந்து பயிற்சியை செய்வது மட்டுமே தேவையானது.

தைப்பொங்கலும் அண்டத்தின் குண்டலினி இயக்கமும்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்!

தைத்திரு நாளிற்குரிய காரணங்கள் உழவர் திருநாள் என்பது சமூகவியல் காரணியாக இருக்க வானியலிலும் மனித உடலிலும் இது எதைக்குறிக்கிறது என்று ஆராய்வோம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. பிண்டத்தில் பிரக்ஞைக்கு (Consciousnesses) இற்கு காரணம் உயிர், உயிர் எப்படி உடலில் மூலாதாரம் தொடக்கம் ஆகஞா சக்கரம் வரை எப்படி பயணித்து உடலை போசிக்கிறதோ அதைப்போல் சூரியன் அண்டத்தின் ஆதாரங்களான ராசி மண்டலங்களில் பயணித்து பயணித்து புவியை வளப்படுத்துகிறது.
பூமியின் ஆறு ஆதாரங்கள் வருமாறும்
மூலாதாரம் - மகரம், கும்பம்
சுவாதிஷ்டானம் - மீனம், தனுசு
மணிப்பூரகம் - மேஷம், விருட்சிகம்
அனாகதம் - ரிஷபம், துலா
விசுத்தி - மிதுனம், கன்னி
ஆக்ஞா- கடகம், சிம்மம்
தக்ஷிண அயனம் என்பது சூரியன் தனுசிலிருந்து மகரத்திற்கு செல்வதுடன், தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கிறது. அதாவது அண்டத்தில் உயிராகிய சூரியன் மகரமாகிய மூலாதரத்தில் பிரவேசிக்கிறது. இனி வரும் ஆறு மாதங்களுக்கு கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக மேலே ஏறிச்செல்லும்.
இதை மனித உடலில் குண்டலினி மேலெறுகிறது என்று குறிப்பிடுவார்கள், குண்டலினி மேலேறுவது என்பது எமது பிரக்ஞை உயர்ந்த நிலையை அடைவதைக்குறிக்கும். பிரக்ஞை உயர்ந்தால் மனம் விரிவுறும், மனம் விரிவுற்றால் வாழ்வு உயரும்.
தக்ஷிண அயனம் தொடங்கும் போது சூரியனாகிய உயிர் அண்டத்தின் ஆக்ஞா சக்கரமான கடகத்தில் புகுந்து கீழிறங்கத் தொடங்கும்.
இப்படி சூரியனின் இயக்கமும், மனித உடலில் உயிரின் இயக்கமும் ஒன்றாக இருப்பதை அறிந்தே அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஞானியர்கள் கூறி அதன்மூலம் பயன்பெறுவதற்கு வழிகளாக பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.
அண்டத்தில் சூரியன் மகர ராசியில் புகும் இந்த வேளையில் எமது மூலாதரத்தில் உயிரை ஒளி நிலைப்படுத்தும் சூரியனின் பிரகாசத்திற்கு மூலகாரணமான அந்த ஸவிதாவின் பேரொளியை எமது மூலதாரத்தில் இருத்தி ஓம் பூர் புவ: ஸ்வ; தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்று காயத்ரியால் தியானித்து, இதைக்காண்போர் யாவருக்கும்,
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச்செய்வாயம்மா, ஆயுள் ஆரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்பா என்று பிரார்த்திக்கிறோம்.

தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !

தைத்திரு நாளிற்குரிய காரணங்கள் உழவர் திருநாள் என்பது சமூகவியல் காரணியாக இருக்க வானியலிலும் மனித உடலிலும் இது எதைக் குறிக்கிறது என்று ஆராய்வோம். 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. பிண்டத்தில் பிரக்ஞைக்கு (Consciousnesses)  காரணம் உயிர், உயிர் எப்படி உடலில் மூலாதாரம் தொடக்கம் ஆக்ஞா சக்கரம் வரை எப்படி பயணித்து உடலை போசிக்கிறதோ அதைப் போல் சூரியன் அண்டத்தின் ஆதாரங்களான ராசி மண்டலங்களில் பயணித்து புவியை வளப்படுத்துகிறது. 

பூமியின் ஆறு ஆதாரங்கள் வருமாறும்,

மூலாதாரம் - மகரம், கும்பம்

சுவாதிஷ்டானம் - மீனம், தனுசு

மணிப்பூரகம் - மேஷம், விருட்சிகம்

அனாகதம் - ரிஷபம், துலா

விசுத்தி - மிதுனம், கன்னி

ஆக்ஞா - கடகம், சிம்மம்

உத்தரஅயனம் என்பது சூரியன் தனுசிலிருந்து மகரத்திற்கு செல்வதுடன், தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கிறது. அதாவது அண்டத்தில் உயிராகிய சூரியன் மகரமாகிய மூலாதரத்தில் பிரவேசிக்கிறது. இனி வரும் ஆறு மாதங்களுக்கு கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக மேலே ஏறிச்செல்லும். 

இதை மனித உடலில் குண்டலினி மேலேறுகிறது என்று குறிப்பிடுவார்கள். குண்டலினி மேலேறுவது என்பது எமது பிரக்ஞை உயர்ந்த நிலையை அடைவதைக் குறிக்கும். பிரக்ஞை உயர்ந்தால் மனம் விரிவுறும், மனம் விரிவுற்றால் வாழ்வு உயரும். 

தக்ஷிண அயனம் தொடங்கும் போது சூரியனாகிய உயிர் அண்டத்தின் ஆக்ஞா சக்கரமான கடகத்தில் புகுந்து கீழிறங்கத் தொடங்கும். 

இப்படி சூரியனின் இயக்கமும், மனித உடலில் உயிரின் இயக்கமும் ஒன்றாக இருப்பதை அறிந்தே அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஞானியர்கள் கூறி அதன் மூலம் பயன் பெறுவதற்கு வழிகளாக பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். 

அண்டத்தில் சூரியன் மகர ராசியில் புகும் இந்த வேளையில் எமது மூலாதரத்தில் உயிரை ஒளி நிலைப்படுத்தும் சூரியனின் பிரகாசத்திற்கு மூலகாரணமான அந்த ஸவிதாவின் பேரொளியை எமது மூலதாரத்தில் இருத்தி ஓம் பூர் புவ: ஸ்வ; தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்று காயத்ரியால் தியானித்து, இதைக்காண்போர் யாவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுள் ஆரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்பா என்று பிரார்த்திக்கிறோம்.


Monday, January 14, 2019

தலைப்பு இல்லை

நேற்று ஒரு காரியம் நடைபெறுவதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய ஐந்து நிபந்தனைகளை பதிவிட்ட போது தம்பி Nirosh Shanthan 05 வது காரணியான விதி சரியாக இருந்தால் மிகுதி நாலு காரணியும் சரியாகத்தானே வேண்டும் என்ற ஒரு சிந்தனைப்பூர்வமான கேள்வியை கேட்டிருந்தார். 

இது விதி என்பது என்ன என்பதை சரியாக சிந்திப்பதற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்தை சரியாக புரிவதற்குமுரிய நல்ல கேள்வி. 

ஒரு செயலின் வெற்றியில் 80% பங்கு செய்பவனில் கட்டுப்பாட்டிலும் 20% பங்கு செய்பவனின் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கிறது. 80% எமது கைகளில் இருக்கிறது எனும் போது நாம் அந்த செயலில் ஊக்கமுடன் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற உறுதியைத்தரும், இந்த 80% முயற்சி இல்லாமல் செயலில் வெற்றி இல்லை, அதேவேளை 80% முயற்சி செய்தாலும் 20% விதி என்பதுதான் வெற்றியை தீர்மானிக்கிறது. 

ஆகவே 20% ஆகிய விதி மட்டும் வெற்றியை தீர்மானிப்பதில்லை, காரியத்தை செய்வதற்குரிய முறையை அறிந்து தெரிந்து செய்தல் - Correct approach, காரியத்தை செய்வதற்குரிய உங்களுடைய மன நிலை - your attitude and mindset, காரியம் சித்தியாவதற்கு தேவையான வளங்கள் - Human and financial resources, உங்கள் முயற்சி - effort ஆகிய 80% பூர்த்தியானால் மட்டுமே விதி பலனைத் தருவதாகிறது. 

விதி மட்டும் பலனைத் தருகிறது என நம்பும் போது எமது இச்சா சக்தி (Will power) இனால் செய்யக் கூடிய 80% வாய்ப்பினை தவறவிடுகிறோம். 

எமது 80% உழைப்பு மட்டும் தான் பலனைத் தருகிறது எனும் போது அது நடைபெறாமல் போகும்போது மனச் சோர்வடைந்து அடுத்த வாய்ப்பினை தவற விடுகிறோம். 

ஆக இந்த நிபந்தனைகளை சரியாக புரிந்து நடப்பது மிக அவசியமானது.


Sunday, January 13, 2019

தலைப்பு இல்லை

குருவின் கருவியாக இருந்து படைக்கப்பட்ட நூல் இன்று பலரும் அங்கீகரிக்கப்படும் நூலாக மாறி இருப்பது அந்த மகா குரு அகத்தியரின் கருணையே!

தமிழகத்தின் மிக முக்கிய பேச்சாளரும், எழுத்தாளரும், காமராசரால் தமிழை அருவிப் போல் பேசுபவர் என்பதால் தமிழருவி என்று அழைக்கப்பட்ட தமிழருவி மணியன் ஐயா அவர்கள் தமது புதிய நூலில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை யோகம், பிரணாயாமம் பற்றிய புரிதல் வேண்டுபவர்கள் கற்க விரும்புவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

குறித்த நூல் வாழ்வியல், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றில் தேடலுக்கான கேள்வி பதிலாக அமைந்துள்ளது. எதிர்வரும் 16ம் திகதி, புதன் மாலை 6 மணிக்கு சென்னை புத்தகக் கண்காட்சி (நந்தனம் YMCA மைதானம்) கற்பகம் புத்தகாலய அரங்கம் (36&37) இல் நடைபெற உள்ளது. தமிழருவி அய்யா, திரு. சைதை துரைசாமி, இயக்குனர் தங்கர் பச்சான், இயக்குனர் லிங்குசாமி, கவிஞர் இளம்பிறை, கவிஞர் பிருந்தா சாரதி, துக்ளக் ரமேஷ், நடிகர் மயில்சாமி, நடிகர் ஜீவா, இயக்குனர் சுப்ரமணிய பாரதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழருவி மணியன் ஐயா அவர்கட்கு நூலை தந்த Krishna Kumar அவர்கட்கு நன்றிகள் பல....


தலைப்பு இல்லை

ஒரு காரியம் வெற்றிப் பெறுவதற்குரிய நிபந்தனைகள் என்ன?

1) அதனை செய்வதற்குரிய முறையை அறிந்து தெரிந்து செய்தல். - Correct approach

2) காரியத்தை செய்வதற்குரிய உங்களுடைய மன நிலை - your attitude and mindset 

3) காரியம் சித்தியாவதற்கு தேவையான வளங்கள் - Human and financial resources

4) உங்கள் முயற்சி - effort 

5) விதி/கர்மா - Destiny 

இந்த ஐந்தில் நான்கு பங்கு எமது கரங்களில் இருக்கிறது. இந்த நான்கினையும் சரியாகச் செய்தால் அதற்குரிய விதி இருந்தால் காரியம் நடக்கும் என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன்.


Saturday, January 12, 2019

உண்மை சாதனை

சிரத்தையுள்ள மாணவன் தனது குருவிடம் தியானம் பயின்று வந்தான். கடுமையான பயிற்சிக்குப் பின்னர் குருவிடம் மகிழ்ச்சியுடன் வந்து குருவே, எனக்கு தியானம் சித்தித்து விட்டது, இன்று தியானம் 

அருமையாக இருந்தது, நல்ல அனுபவம் என்றான். 

அதற்கு குரு, நல்லது அன்பனே இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய் என்றார். 

அதற்கு சீடன் " நான் ஆன்மீகத்தில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன், மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, மூச்சு ஆழமாக செல்கிறது, தெய்வீக அனுபவங்கள் வருகிறது, ஆகவே நிச்சயமாக நான் முன்னேறி விட்டேன் குருவே என்றான் உறுதியாக.

அதற்கு மீண்டும் குரு " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

சீடனுக்கு பெரிய ஏமாற்றமாகிப் போய்விட்டது. குரு தனது முன்னேற்றத்தை பெரிதாக எடுக்காமல், தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்று மனம் வருந்திக் கொண்டான். இரண்டொரு வாரம் செல்ல மன உணர்ச்சிகளும், உடல் சோம்பலும் வர தியானம் தடைப்பட்டது. தியானத்திற்கு உட்கார முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்ய முடியவில்லை என்றவுடன் தனது குரு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று மனம் புலம்பி வருத்தப்பட்டு விரக்தி அடையத் தொடங்கினான். வீட்டில் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தொடங்கி விட்டது. 

நேரே குருவிடம் சென்று, குருவே என்னால் எனது சாதனையை தொடரமுடியவில்லை, மனம் ஒருமைப்படவில்லை என்றான்.

அதற்கு குரு அதே பழைய தொனியில் "நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய்" என்றார். 

அதற்கு சீடன், குருவே என்னால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை என்றான்,

அதற்கு மீண்டும் "நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று கூறிவிட்டு தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார். 

கதையின் நீதி, தியானம் சாதனை என்பது கணியன் பூங்க்குன்றனார் கூறியது போல் "வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே" என்பது போல் நன்றாக நடக்கிறது என்று மனம் மகிழ்ந்துக் கொண்டிருப்பதும், நன்றாக நடக்கவில்லை என்று துன்பப்படுவதையும் விடுத்து தொடர்ந்து பயிற்சியை செய்வது மட்டுமே தேவையானது.


Friday, January 11, 2019

தலைப்பு இல்லை

வீட்டில் தினசரி கூட்டு தியானம் வழி நடாத்துவதால் எனக்கு எமது மகள் கொடுத்த பட்டம் 

"தியான மாஸ்டர்"

தியான மாஸ்டர் வருகிறார் வழி விடுங்கோ....


Wednesday, January 09, 2019

Biocentrism

தமிழில் அறிவியலை எழுதாமல் எங்காவது எவரையாவது நையாண்டி செய்துக் கொண்டு, உயிர், உடல், உணர்வு, இயற்கைகளின் தொடர்பு பற்றி புரிதலுக்கு முயலாமல், அறிவியல் என்று எதையாவது நம்பிக் கொண்டு உளறும் "so-called" அறிவியலாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். 

சென்ற நூற்றாண்டு இயற்பியலால் ஆளப்பட்டு அதன் புரிதலில் அதி உச்ச எல்லைக்கு வந்துள்ள நிலையில் இந்த நூற்றாண்டு உயிரியலால் ஆளப்படப்போகிறது என்பது பற்றி அறிவியல் விதிகளின் அடிப்படையில் உரையாடுகிறது. 

உயிர்களிற்கு பிரக்ஞை உண்டு என்பது உயிரியலாளர்களின் பிரச்சனை மட்டும் அல்ல, இயற்பியலாளர்களின் பிரச்சனையும் கூட, எனும் வாதத்தை முன்வைக்கிறது. நவீன இயற்பியல் மூளையிலுள்ள இரசாயன அணுக்கள் எப்படி பிரக்ஞையை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் இதுவரையும் தரவில்லை. சடத்திலிருந்து எப்படி பிரக்ஞை உருவாகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் நவீன இயற்பியல் இன்றுவரை முன்வைக்கவில்லை. ஏன் இயற்பியல் இதை தனது பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமலே தனது ஆய்வுகளை முன்னெடுக்கிறது. 

குவாண்டம் இயற்பியல் தனது கோட்பாடுகள் அனைத்தையும் அருவ விஞ்ஞானமான (abstract science) கணிதத்தின் மூலமே தனது அறிவை முன்வைக்கிறது. பிரக்ஞை பற்றிய எதையும் கருத்தில் கொள்ளாமலே ஆய்வுகளை முன்னெடுக்கிறது போன்று மிக சுவாரசியமான விஷயங்கள் பலதை முன்வைக்கிறது. 

இந்த நூலின் ஆசிரியர்கள் :

Robert Lanza, MD, is one of the most respected scientists in the—a U.S. News & World Report cover story called him a “genius” and “renegade thinker,” even likening him to Einstein. 

Bob Berman is the most widely read astronomer in the world. Author of more than one thousand published articles, in publications such as Discover and Astronomy magazine,

Thank you Roshan Akther for Introducing this wonderful book!


தலைப்பு இல்லை

எண்ணப்புரட்சி - சிந்தனைப் புரட்சி

நாம் எண்ணும் எண்ணமும், நம்மைச்சூழ உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்கள் எண்ணும் எண்ணமும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களின் எண்ணமும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது எண்ணமும் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் அடைந்த விளைவு தான் எம் எல்லோரது வாழ்க்கையும்!

எண்ணம் உருவாகும் எம் மனதையும், எம்மைச் சூழ உள்ளவர்கள் மனத்தையும், நாம் வாழும் வீட்டில் உள்ளவர்களது மனதையும், நாம் வாழும் நாட்டில் உள்ளவர்களது மனத்தையும், நாம் வாழும் இந்த பூமியில் உள்ளவர்களது மனத்தையும் மாற்றாமல் எமது வாழ்வு மாறாது! 

எண்ணத்தில் சிந்தனையில் புரட்சி தான் உண்மைப் புரட்சி


Tuesday, January 08, 2019

Monday, January 07, 2019

தலைப்பு இல்லை

பலருக்கு மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும், அறிவுரை கூறவேண்டும், வழி நடாத்த வேண்டும் என்று ஆவல்! 

உண்மையில் ஒருவன் தான் எப்போது கற்கும் மன நிலையில் இருந்துக் கொண்டு, கற்றுக் கொண்டு அதை நிபந்தனை இன்றி பகிர்வதன் மூலம் தான் இதனை சாத்தியமாக்க முடியும். 

இன்று ஆசிரியர்கள் பலருக்கும் மாணவர்களை வழி நடாத்தவும் கட்டுப்படுத்தவும் முடியாமல் இருப்பது அவர்களுடைய அறிவினை, அனுபவத்தினை விஸ்தரிக்க முடியாமல் இருப்பதுவும் ஒரு காரணம். 

மனம் என்ற அக உறுப்பு பற்றி அடிப்படைப் புரிதல் இன்றி கற்றலோ கற்பித்தலோ சரியாக நடைபெற முடியாது. 

கற்பிப்பவரது மன நிலையும், கற்பவரது மன நிலையும் மிக அத்தியாவசிய நிபந்தனை.

கற்பிப்பவரது மன உணர்ச்சி மாணவன் முட்டாள் என்ற நினைப்பிருந்தால் கற்பவன் புத்திசாலியாக இருந்தாலும் முட்டாளாவான்.

கற்பவனது மன உணர்ச்சி ஆசிரியரில் குறை கண்டால் ஆசிரியன் எவ்வளவு திறமையாக இருந்தாலும் கற்றல் தடைப்படும். 

இன்றைய கல்வி நிலை குறை காணும் மன நிலையை விருத்தி செய்து குறையையே விதைத்து, குறைகளையே வளர்த்து குறையுள்ள சமூகமாக மாறவே எத்தனிக்கிறது. 

கற்பிப்பவன் தன்னை ஒரு தாய், தந்தை ஸ்தானத்திலிருந்து தான் மாணவனை உயர்த்த வந்தவன், மாணவன் எவ்வளவு கற்றலில் ஆர்வம் இல்லாதவனாக இருந்தாலும் எப்படி ஆர்வத்தை உண்டு செய்வது என்ற நோக்கமும் ஆர்வமும் உள்ளவனாக இருத்தல் வேண்டும். 

கற்பவன் ஆசிரியனில் குறைகளை பார்க்காமல் தன் இலக்கான அறிவினை பெற முயற்சிக்க வேண்டும். தனக்கு தேவையான அறிவு கிடைக்கவில்லை என்றால் குறை எதையும் காணாமல் வேறு ஆசிரியனிடம் கற்க செல்ல வேண்டும். ஏனென்றால் குறைகாணும் மன நிலை மாணவனுக்குள் வளர்ந்து விட்டால் கற்றல் என்ற செயல் நின்று விடும். ஆணவம் கூடிவிடும்.


Saturday, January 05, 2019

தலைப்பு இல்லை

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே 

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.

மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.

நன்மை தீமைகளைக் கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.

சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.

வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.

பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.

வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.

பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.

வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)

வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக் கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.

நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர் படகைச் செலுத்தும் துடுப்பு)

இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திற

http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=192...


Thursday, January 03, 2019

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சுயகற்கை நெறி (Self-learning course)



அகத்திய மகரிஷியின் படம் அல்லது விளக்கு அவர் மனதிற்கு பிடித்த படி { குருநாதர் உயிரை ஒளியாக்கி நஞ்சினை வென்று பேரொளி நிலையை அடைந்த மகாகுரு, உருவம் என்பது எமது மனதிற்கு புரிதலுக்கு இலகுவான குறியீடே அன்றி இதுதான் அறுதி வடிவம் என்று முடிவு செய்யக்கூடாது}

படத்திற்கு முன்னால் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலினை ஒரு சிறிய மரப்பலகை அல்லது தட்டில் வைத்து நூலை குருவாக எண்ணி

“குருதேவா என் அகத்தில் ஈசனாக இருந்து இந்த நூலில் கூறப்பட்ட பேருண்மைகள் எனக்கு புரியும் ஞான ஒளி பெற வழிகாட்ட வேண்டும்” என்று பிரார்த்தித்து விட்டு கண்களை புருவமத்தியில் வைத்து ஒளி மண்டலத்தை மனக்கண்ணில் பார்த்து, அந்த ஒளி எமது உடலில் சேர்வதாக பாவித்து கீழ்வரும் அகத்தியர் மூல குரு மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவேண்டும். இடையில் வேறு சிந்தனைகள் வந்தால் அதுபற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

அகத்தியர் மூலகுரு மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ
மந்திர உச்சரிப்பினை இந்த ஆடியோவில் கேட்கவும்: https://soundcloud.com/sumanenthiran-thava/voice-003

இப்படி தினசரி 108 தடவை ஜெபித்து வரும் வேளை வாரத்தில், உங்களுக்கு வசதியான ஒரு நாளை உங்கள் கற்கைக்குரிய நாளாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

அன்றைய தினம் ஒரு மணி நேரம் கற்கைக்கு ஒதுக்கி அந்தக்குறித்த நேரத்தில் முதல் பாடலை வரியாக படித்து விட்டு, அதன் பொருளை வாசித்து புரிய முயற்சி செய்யுங்கள். அடுத்து வரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போது அந்த வாரத்திற்குரிய பாடலின் பொருளை மீண்டும் மீண்டும் படித்து மனதில் சிந்தித்து வாருங்கள். படித்து விட்டேன் பொருள் விளங்கி விட்டது என்ற நினைவை எடுக்காதீர்கள். எவ்வளவு பொருள் விளங்கிவிட்டது என்று மனம் கூறினாலும் மீண்டும் மீண்டும் தினசரி அந்த ஒரு பாடலை மாத்திரம் அந்த வாரம் படியுங்கள்.  ஒரு நோட்டுப்புத்தகத்தில் உங்கள் சந்தேகங்களை குறித்துக்கொள்ளுங்கள். அவற்றிற்கு பதில் உடனடியாக கிடைக்கவேண்டும் என்று மனப்பதற்றம் அடையாமல் அவற்றிற்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கற்கையை தொடருங்கள். இப்படி 30 வாரங்களில் நூல் முழுமையையும் படித்து முடியுங்கள்.

இப்படிக் கற்கும்போது அரிய பல யோக இரகசியங்கள் உங்கள் ஆழ்மனமாகிய சித்தத்தில் புலப்படும். மெதுவாக உங்கள் ஆழ்மனத்தில் குருவின் பேரொளி துலங்கத்தொடங்கும். இதன் பயனாக நீங்கள் குருமண்டலத்தின் வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கத்தொடங்கும். உங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், கவலைகள் மெதுவாக நீங்கத்தொடங்கி உயர் யோக சாதனை செய்யக்கூடிய பண்பு உங்களில் உருவாகும்.

இதை செய்யத்தொடங்குவதற்கு எந்த நேர காலமும் பார்க்கத்தேவையில்லை. உங்கள் மனதில் செய்ய வேண்டும் என்று தோன்றியவுடன் செய்யத்தொடங்கவும். அந்த எண்ணமே குரு நாதரின் ஈர்ப்பு, அதை தவறவிட்டால் மற்றைய எண்ணங்கள் எமக்குள் வந்து இதை வலுவிழக்கச்செய்து எமது ஆன்ம முன்னேற்றத்தைத் தடுக்கும்.  

இப்படி கற்றலில் போது உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை ஆசிரியர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுடன் இந்த மின்னஞ்சலில் (sithhavidya@gmail.com) தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.

Wednesday, January 02, 2019

விஞ்ஞான மதம் - Scientific Religion

இன்று பலரும் அறிவியலால் நிருபிக்கப்பட்டது என்ற வாசகத்தில் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களாக இருக்கக் காணுகிறோம். அவர்கள் அறிவியலால் நிருபிக்கப்பட்டதை மட்டும் நம்புகிறோம் என்ற மதத்தை சார்ந்தவர்கள். ஒரு மதவாதி தனது புனித நூற்களையும், போதகரின் உபதேசத்தையும் எப்படி கேள்விக்குட்படுத்தாமல், சுயஅனுபவத்திற்கு வராமல் நம்புகிறானோ, அதைப் போல் அறிவியல் கூறுவது மட்டும் உண்மை என்ற வாதத்தை வைக்கும் அறிவியல் மதத்தைச் சேர்ந்தவர்கள். 

அறிவியல் என்பது பௌதீகப் பொருட்களின் அமைப்பு, இயக்கம் என்பவற்றை குறைந்த அளவு வழுவுடன் (lower error), அதிக உறுதியுடன் (higher confidence) அறிவினை பெறுவதற்குரிய ஒரு முறை மாத்திரமே! மேலும் பௌதீகம் தாண்டிய நுண்மையினை சூக்ஷ்மத்தை புரிவதற்கு அறிவியல் இன்னும் மாதிரியுருக்களையும் (Models) சுருக்க விஞ்ஞானம் (abstract science) எனப்படும் கணிதத்தையுமே பயன்படுத்துகிறது.


Tuesday, January 01, 2019

குளத்தில் குப்பை போடும் மன நிலையும் குருவும்


*************************************
ஓரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்க்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருலில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத்தொட்டி ஆக்கி விடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.

குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக்கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத்தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப்போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தைத்தினை துளியாக பெற்று பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.

குளத்தில் குப்பை போடும் மனநிலையும் குருவும்

ஒரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருகில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத் தொட்டி ஆக்கிவிடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது. 

குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக் கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத் தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான். 

இதைப் போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தினை துளியாக பெற்று, பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள். 

ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...