குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label கொள்கைகள். Show all posts
Showing posts with label கொள்கைகள். Show all posts

Wednesday, May 17, 2023

எனது கொள்கைகள் சில

நண்பர்களே, இந்தக் கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
கொடுப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதும் நான் கடைப்பிடிக்கும் விதிகளில் ஒன்று. 
பெறுவது குறைவாக இருக்க வேண்டும் என்றால் எமக்காக தேவை என்று நாம் நினைத்து தேவையற்றவற்றைப் பற்றிக்கொண்டிருக்கக் கூடாது. 
நாம் செய்பவற்றிற்கு உடமை கொண்டாடக் கூடாது என்பது இரண்டாவது விதி; ஆரம்ப காலத்தில் நாம் எழுதுவதை பிரதி செய்து - சுய சிந்தனை இல்லாமல் பிரதி செய்வதையே தொழிலாகச் செய்து பெரும் அறிஞர்களாக மக்களை நம்பவைக்கும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் பேராசிரியர் ஒருவர் கூட தனது பதிவுகளை நன்றி கூறாமல் பிரதி செய்வதாக வருத்தப் பட்டு எழுதியிருந்தார்; எனது குரு நாதர் ஒரு விஞ் ஞானி தனது சேவைக்கால கண்டுபிடிப்புகள் எல்லாமே தேச நலனிற்கான பொதுப் புலமைச் சொத்திற்காகவே பணி புரிந்ததாகச் சொன்னார்; தன்னுடைய கண்டுபிடிப்பு என்று தனியாக உரிமை கொண்டாடும் திட்டங்களில் அவர் ஆர்வம் காட்டியதில்லை; அதே மனப்பாங்கை ஸ்ரீவித்யா கற்பிப்பதிலும் காட்டினார்; அறிவு, ஞானம், ஆற்றல் எல்லோருக்குமானது; காற்று, நீர், சூரிய ஒளிக்கெல்லாம் patent செய்தால் மனிதனோ, உயிர்களோ வாழ முடியுமா? என்பார். ஆகவே எத்தனை பேர் எம்மிடமிருந்து எமது சிந்தனைகளைப் பிரதி செய்து அதைத் தம்முடையதாக்குகிறார்களோ அவ்வளவிற்கு அந்த அறிவும், ஞானமும் பெருகும். பிரதி செய்தலே கற்றலின் முதல் படி - copiying and mimicking is the first step of learning. 
எவரையும் முத்திரை குத்தாமல், அவர்கள் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரச்சனைகள், துன்பத்திலிருந்து வெளிவருவதற்கு நாம் என்ன உதவி செய்ய முடியும் என்ற செயலை மாத்திரம் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும்; மற்றவர்களை தாழ்மைப் படுத்த, தண்டிக்க நாம் இங்கு வரவில்லை; எம்மால் இயன்ற உதவிகளைச் செய்து மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்!

எனது கொள்கைகள் சில

நண்பர்களே, இந்தக் கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
கொடுப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதும் நான் கடைப்பிடிக்கும் விதிகளில் ஒன்று. 
பெறுவது குறைவாக இருக்க வேண்டும் என்றால் எமக்காக தேவை என்று நாம் நினைத்து தேவையற்றவற்றைப் பற்றிக்கொண்டிருக்கக் கூடாது. 
நாம் செய்பவற்றிற்கு உடமை கொண்டாடக் கூடாது என்பது இரண்டாவது விதி; ஆரம்ப காலத்தில் நாம் எழுதுவதை பிரதி செய்து - சுய சிந்தனை இல்லாமல் பிரதி செய்வதையே தொழிலாகச் செய்து பெரும் அறிஞர்களாக மக்களை நம்பவைக்கும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் பேராசிரியர் ஒருவர் கூட தனது பதிவுகளை நன்றி கூறாமல் பிரதி செய்வதாக வருத்தப் பட்டு எழுதியிருந்தார்; எனது குரு நாதர் ஒரு விஞ் ஞானி தனது சேவைக்கால கண்டுபிடிப்புகள் எல்லாமே தேச நலனிற்கான பொதுப் புலமைச் சொத்திற்காகவே பணி புரிந்ததாகச் சொன்னார்; தன்னுடைய கண்டுபிடிப்பு என்று தனியாக உரிமை கொண்டாடும் திட்டங்களில் அவர் ஆர்வம் காட்டியதில்லை; அதே மனப்பாங்கை ஸ்ரீவித்யா கற்பிப்பதிலும் காட்டினார்; அறிவு, ஞானம், ஆற்றல் எல்லோருக்குமானது; காற்று, நீர், சூரிய ஒளிக்கெல்லாம் patent செய்தால் மனிதனோ, உயிர்களோ வாழ முடியுமா? என்பார். ஆகவே எத்தனை பேர் எம்மிடமிருந்து எமது சிந்தனைகளைப் பிரதி செய்து அதைத் தம்முடையதாக்குகிறார்களோ அவ்வளவிற்கு அந்த அறிவும், ஞானமும் பெருகும். பிரதி செய்தலே கற்றலின் முதல் படி - copiying and mimicking is the first step of learning. 
எவரையும் முத்திரை குத்தாமல், அவர்கள் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரச்சனைகள், துன்பத்திலிருந்து வெளிவருவதற்கு நாம் என்ன உதவி செய்ய முடியும் என்ற செயலை மாத்திரம் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும்; மற்றவர்களை தாழ்மைப் படுத்த, தண்டிக்க நாம் இங்கு வரவில்லை; எம்மால் இயன்ற உதவிகளைச் செய்து மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்!

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...