குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 29, 2023

அந்தர சதுரங்க சிவயோக விதானம்


ஒரு யோகியின் உயர்ந்த சிவயோக சாதனை என்ன என்று சிவயோக பிரதீபிகை கூறுகிறது. இந்த எளிய இரகசிய சாதனையினை விளக்கத்துடன் இங்கு அனைவரும் பயன்பெற வெளிப்படுத்துகிறோம்.

யோகம் பழகுபவர்கள் கட்டாயம் உடலை பிழிவதுடன் நின்று விடாமல் இந்தச் சாதனையையும் செய்யப் பழகுங்கள்.

உண்மையான சிவயோகம் என்பது இந்திர நிக்கிரகம் (புலனடக்கம்) தாரணை, தியானம், சமாதி என்று நான்கு அங்கங்களைக் கொள்கிறது. இதை அந்தர சதுரங்க சிவயோக விதானம் என்று சொல்லுவார்கள்.

இது ஆரம்ப நிலையில் பாஹிய சிவபூசை செய்பவர்களுக்கு கந்தம், புஷ்பம், தூபம், நைவேத்திய உபசாரங்களின் குறியீடாகத் தரப்பட்டுள்ளது.

சிவத்தை அடைய சிவயோக சாதனைக்கு நாற்றமெடுக்கும் புலன்கள் சந்தனம் போல் நறுமணமுடையதாக மாறவேண்டும். ஆகவே கந்தம் சமர்ப்பயாமி என்று சொல்லப்படும் பாஹ்ய பூஜை உபசாரம் புலன் கள் அடங்கி சிவத்தியானம் நோக்கிச் செல்லவேண்டும் என்பதன் குறியீடு!

அடுத்தது அலைந்துகொண்டிருக்கும் மனம் புகைபோல சலனித்துக்கொண்டிருக்காமல் ஒருமையாக ஏகாக்ரமடைந்து தைலதாரையாக எண்ணங்கள் சிவத்தின் மேல் சென்றால் அந்த தாரணை நிலையின் குறியீடு தூபம்.

மூன்றாவது தாரணை நிலையடைந்த சலனமற்ற மனம் மலரும்; ஆகவே பூக்கள் சமர்ப்பித்தல் தியானத்தின் குறியீடு!

நான் காவது இப்படி தியானம் தாண்டி ஸமாதி அடையும் போது ஆன்மா சிவத்திற்கு நைவேத்தியம் ஆகுவதால் நைவேத்தியம் ஸமாதி நிலையின் குறியீடு!

நீங்கள் யோக சாதனை புரிபவர்களாக இருந்தால் தினசரி இந்த நான்கு உபசாரங்களையும் இந்த அர்த்தத்துடன் சிவனுக்கு சந்தனம், தூபம், பூக்கள், நைவேத்தியம் மாத்திரம் வைத்து இந்த சாதானையைச் செய்யலாம்.

சந்தனம் சமர்ப்பிர்த்து ஓம் நமசிவாய எனது இந்திரியங்கள் புலன்கள் அடங்கி நான் யோகத்தில் சித்தி பெற அருள்புரிய வேண்டும்! என்று பிரார்த்திக்க வேண்டும்.

தூபம் சமர்ப்பித்து ஓம் சிவாயநம எனது மனம் ஒருமையடைந்து தாரணை ஆற்றல் பெற்று யோகசித்தி பெற அருள்புரிய வேண்டும்! என்று பிரார்த்திக்க வேண்டும்

பூக்கள் சமர்ப்பித்து ஓம் சிவயவசி நான் தியான நிலை கூடி யோக சித்தி பெற அருள்புரிய வேண்டும்! என்று பிரார்த்திக்க வேண்டும்

நைவேத்தியம் சமர்ப்பித்து ஓம் சிவசிவ நான் சிவார்ப்பணத்தால் ஸமாதி நிலை யோக சித்தி பெற அருள்புரிய வேண்டும்! என்று பிரார்த்திக்க வேண்டும்

பின்னர் கண்கள் மூடி சிவலிங்கம், சிவபெருமான் தியானத்திலிருக்கும் படம், சிவாலயத்திலிருந்து உங்கள் யோக சாதனையைச் செய்யலாம்!

இது மிகவுன் துரிதமாக உங்களை யோகசாதனையில் முன்னேற்றும்!

ஒருவன் புலனடக்கம், மன ஒருமை, தியான சித்தி, ஸமாதி ஆகிய நான்கு அங்கங்களையும் சதுரங்கயோகம் பெற்றால் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான சிவயோகி என்று சிவயோக பிரதீபிகை கூறுகிறது.

 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...