குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 29, 2020

அகத்தியர் வைத்திய காவியம் - பாடல் 02

இணைக்கப்பட்டுள்ள படத்திலுள்ள பாடலை ஒரு தடவை படித்து விட்டு பதிவினை வாசிக்கவும்! 

இந்த வைத்திய காவிய நூல் எப்படி உருவாகியதென்றால் மைந்தனே புலத்தியா (அகத்தியரின் சீடர்)

எல்லாவற்றிற்கும் மூலமான கணபதியைப் பாதம் பணிந்து, 

நோய்க்குக் காரணமான மனதின் தமோ, சத்துவ ரஜோ குணங்கள் எப்படியெல்லாம் உடலைத் தாக்குகிறது என்பதை ஆராய்ந்து; 

இதற்கு முன்னர் தொகுத்த அனுபவங்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கும் வாகட நூற்களை எல்லாம் தொகுத்து, 

சிவனார் தன் வாயால் கூறிய ஆகம விதிகளின் படி பூமியில் அடர்ந்த நோய்கள் எவையென்பதையும் அவை போகும் வழிகளான நல் மருந்துகளும் இந்த நூலிற் சொல்வேன்! 

பாடல் சொல்லும் செய்தி;

1) வைத்தியன் தனக்கு மேலொரு சக்தி மூலமாக இருந்து நடாத்துகிறது என்ற எண்ணமுள்ளவனாக, அதன் பாதத்திற்கு பணிந்தவனாக இருக்க வேண்டும்.

2) நோய்க்குக் காரணம் மனதிலும், மனம் கொண்டிருக்கும் தமோ, ரஜோ, சத்துவம் என்ற முக்குணத்திலும் இருக்கும் என்பது அறிதல் வேண்டும்.

3) இதற்கு முன்னர் தொகுத்த வாகட நூற்களைக் தொகுத்துக் கற்க வேண்டும். 

4) இப்படித் தொகுத்து ஆராய்வதற்கு சிவனார் ஆகமத்தில் கூறிய 36 தத்துவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். 

5) இதன் மூலம் இந்தப்பூமியில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்கள் எல்லாம் என்னவென்று தெரிந்து அவற்றிற்குரிய மருந்துகளைத் தெரிந்துகொள்!


Sunday, June 28, 2020

தலைப்பு இல்லை

எமது எண்ணமே உலகை அனுபவிக்கிறது என்றால் நாம் பலருடன் கலந்து வாழ்கிறோம்; ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? அவர்களுக்கும் நமக்கும் ஒத்துவருவதில்லை அதை எப்படி நாம் பார்க்காமல் தவிர்ப்பது அப்படித் தவிர்த்தால் நாம் எப்படி இணைந்து பணியாற்றுவது?
இதற்குத் தான் இலக்கு என்பது நிர்ணயிக்கப்படவேண்டும். எமது வாழ்க்கையில் இலக்கு இருந்தால் அந்த இலக்குக்கு அமைவாக அதை அடையச் செய்விக்கும் எம்மைப் பிணைக்கும் விதிகள் தர்மம் எனப்படும். 
நாம் ஒருவருடன் உரையாடும் போது நாம் இருவரும் என்ன இலக்கினை அடைவதற்காக உரையாடுகிறோம் என்ற தெளிவு இருவருக்கும் இருக்குமானால் அங்கு வீண் ஆணவத்திற்கான விவாதம் இல்லாமல் போகும்! 
முரண்பாடுகள் என்பது புரிந்துணர்வுக் குறைவு என்பதையும் அதை நீக்க நாம் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எப்படி உரையாடலாம் என்ற ஆக்கப்பூர்வ சிந்தனையும் பெரிதும் உதவும்! 
ஆணும் பெண்ணும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வது என்பது இலக்கானால் வீணாக தம்மிருவரின் மகிழ்ச்சியைக் குலைக்கும் எண்ணத்தை, செயலை தாமாகச் செய்யாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ நாம் ஏற்றுக் கொண்ட மற்றவரின் மன அமைதியைக் குலைக்காத எண்ணத்தை, செயலை செய்யாமல் இருப்பதும் அவசியமாகிறது! இதற்கு இருவருக்கும் பொதுவான இலக்கு இருப்பது அவசியமாகிறது! 
இந்த இலக்கிற்கு அமைவான அர்ப்பணிப்பு முரண்பாடுகளைக் குறைப்பதில் உதவி செய்யும்! 
எமது வாழ்வின் இலக்கும், எம்மால் எமக்குத் தேவையான எண்ணத்தை வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற உறுதியும் எம்மை மகிழ்வுடையவர்களாக்கும்!

Saturday, June 27, 2020

தலைப்பு இல்லை

எனது மாணவிக்கு முதலாவது வைத்திய பாட கற்கை ஆரம்பம்; அகத்தியர் வைத்திய காவியம் 1500 இன் முதல் பாடல்!
அகத்திய வைத்தியம் படிக்க தமிழ் தேவை!

Friday, June 26, 2020

தலைப்பு இல்லை

இன்று ஒரு சாதகருடன் மனத் தூய்மை என்றால் என்ன என்பது பற்றி புத்தர் என்ன கூறியுள்ளார் என்பது பற்றிய கற்கையின் சுருக்கம். 
மனத் தூய்மை – சித்த விசுத்தி
1. ஏகாக்கிர மனதை அடைதல்
2. எண்ணங்களால் குழப்பமடையாத மனதினை அடைதல்
3. வேறு எந்த உணர்ச்சிகளால் குழப்பமடையாத மனதை அடைதல்
4.எடுத்துக் கொண்ட பொருளின் மீது தடையில்லாமல் கவனம் செலுத்தக் கூடிய ஒருமைப்பட்ட மனதினைப் பெறுதல்
இதுவே புத்தரின் உபதேசப்படி மனத்தூய்மை

Thursday, June 25, 2020

ஏழு மணி நேர தியானப்பயிற்சி மூளையில் ஏற்படுத்தும் மாற்றம்

தினசரி 30 நிமிடங்கள் இரண்டு வாரங்கள் தினசரி தியானிப்பதன் மூலம் மூளையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது என்கிறார் Dr. Richard Davidson. 

இரண்டாவது அவதானிப்பு தியானிப்பவர்களின் மூளையில் மிக நுண்ணிய ஒரு செக்கனுக்கு இடைப்பட்ட நேரத்தில் gamma wave அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த gamma wave மனிதனது உணர்வுப் பூர்வ அறிதலில் முக்கியமான ஒன்று! மூளையில் அறிதல் நிகழ்வதற்கு தேவையான அனைத்தையும் ஒன்றிணைப்பது இந்த gamma wave உருவாகுவதன் மூலம் தான் இருக்கிறது. 

இலக்குடன் கூடிய 07 மணி நேர தியானப் பயிற்சி மூளையை மீளமைக்கப் போதுமானது என்கிறார். 

சுவாசத்தைக் கவனித்தல், மந்திர ஜெபம் ஆகியவை கவனிப்பு தியான முறையில் (focus meditation method) அடங்கும். ஆகவே இத்தகைய தியானப் பயிற்சிகள் மூளையின் அறிதல் ஆற்றலை அதிகரிக்கிறது என்பது பெறப்படுகிறது.

ஆகவே தினசரி புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியைத் தியானிப்போம்!


எண்ணம் - உலகம் - அனுபவம்

நாம் என்ன நினைக்கிறோம்,

நான் இந்தப் பெண்ணை, பையனை, நண்பனை, எதிரியை என பலரைக் காண்கிறேன் என்று!

ஆனால் அது உண்மையா?

இல்லை, இல்லை நான் என்னையே இந்தப் பெண்ணாக, பையனாக, நண்பனாக, எதிரியாகக் காண்கிறேன்! 

அது எப்படி (சாத்தியம்) ?

நீங்கள் - அனுபவிப்பவர் (experiencer) இல்லாமல் எப்படி இந்த உலகத்தின் இருப்பு சாத்தியமாகிறது?

நீங்கள் இருப்பதற்கு முன்னர் இது எங்கிருந்தது? நீங்கள் மறைந்த பின்னர் எங்கிருக்கப் போகிறது?

உண்மையில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதோ? எதை அனுபவிக்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டே இல்லை! 

நீங்கள் காண்பதெல்லாம், அனுபவிப்பதெல்லாம் உங்கள் எண்ணங்களில் இருக்கிறது. நீங்கள் உங்களையே பார்க்கிறீர்கள். உங்களைத் (உங்கள் எண்ணங்களைத்) தவிர வேறு எதுவும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உலகில் இருப்பதில்லை. 

உண்மையை உணர்வது என்பது இந்த உலகை நாம் எமது எண்ணங்களால் அனுபவிக்கிறோம் என்பதாகும். அது வேறெங்கும் இருப்பதல்ல! 

எனவே நீங்களே இந்த உலகத்தைப் (எண்ணங்களால்) படைக்கிறோம் என்பது உண்மையாகிறது, நீங்களே (எண்ணங்களால்) அதைக் காக்கிறீர்கள்! நீங்களே அதை (எண்ணங்களால்) கரைக்கிறீர்கள்!

ஆகவே உங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கிறதா?

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

(Dr. N. Nishtala Prahlada Sastry - former Nuclear scientist of TIFR)


தலைப்பு இல்லை

மனம் என்பது நாம் வெளியே எம்மைப் பற்றி நாமே நினைத்துக் கொண்டிருப்பதல்ல!

எமது உண்மையான மனம் ? சித்தம் எனும் ஆழ் மனம்

(யோக) சாதனை செய்யும் போது வரும் குழப்பங்கள் எல்லாம் எமது ஆழ்ந்த பரிமாணங்களைப் புரிந்துக் கொள்ள உதவும் அரிய வாய்ப்புகள்!


Wednesday, June 24, 2020

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம்
--------------

குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை தொடர்ச்சியாக சாதனை செய்ய முடிந்ததே இல்லை. சில வேளைகளில் சாதனை ஆரம்பிக்கும் வைராக்கியம் 30 நாட்கள் தாண்டும் போதே இல்லாமல் போய் விடும். அதன் பின்னர் நாட்கணக்கில் / மாதக்கணக்கில் சாதனை செய்யாமல் இருப்பேன். திரும்பவும் சுமனன் அண்ணாவின் உந்துதலால் மீண்டும் சாதனை தொடங்கும். சில நாட்களிலோ சில வாரங்களிலோ அது மீண்டும் நின்று விடும். இவ்வாறாக, 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரொனா வைரஸ் காரணமாக, மார்ச் மாத இறுதியிலேயே அலுவலகம் மூடப்பட்டதுடன், வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது. (இன்றுவரை அத்தகைய நிலையே தொடர்கின்றது.) அந்தக் காலப்பகுதியிலேயே, சரியாக வசந்த நவராத்ரி வந்தது.

என்னைத்தொடர்பு கொண்ட சுமனன் அண்ணா, சாதனைக்கான இத்தகைய அரிய சூழ்நிலையை விட்டுவிட வேண்டாம் என்றும் சாதனையை மீள ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தினார். வசந்த நவராத்ரி சாதனைக்கு விண்ணப்பிக்குமாறும் கூறினார். அதன்படி, வசந்த நவராத்ரியில் நாளொன்றுக்கு 10 மாலை காயத்ரி ஜபம் செய்வதென்று தீர்மானித்து, விண்ணப்பத்தை அனுப்பினேன்.

நவராத்ரி காயத்ரி சாதனை நியதியின் படி, அந்த சாதனைக்கான சங்கல்பமாக “தேவி! என்னை நித்ய சாதகன் ஆக்கியருள வேண்டும்” என்பதையே முன்வைத்து சாதனையைத் தொடங்கினேன். வாழ்வில் நான் தொடர்ச்சியாக அடைந்து வரும் தோல்விகளில் முக்கியமானது சாதனையைத் தொடராமல் இருப்பதே. அதனால் தான் நித்ய சாதகன் ஆக வேண்டும் என்பதையே சங்கல்பமாக வைத்து சாதனையைத் தொடக்கினேன்.

சாதனை தொடங்கத் தீர்மானித்த அன்றே, எனது மிக நெருங்கிய உறவினர் மரணமடைந்த செய்தி வந்தடைந்தது. எனக்கு செய்யத் தீர்மானித்த சாதனையை கைவிட விருப்பம் இல்லை. எனினும், அந்தச் சூழ்நிலையில் சாதனையைச் செய்வது சரியானது தானா? என்ற எண்ணமும் வந்தது. கொரோனாவினால் ஏற்பட்ட விபரீதச் சூழல் காரணமாக, தொலைவில் இடம்பெற்ற சாவு வீட்டுக்குப் போகவும் முடியாதிருந்தது. இதனையடுத்து உடனடியாக, சுமனன் அண்ணாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சூழ்நிலையைத் தெரிவித்தேன். “சாவு உங்கள் வீட்டில் இடம்பெறவில்லை அல்லவா? எதையும் யோசிக்காமல் சாதனையைத் தொடருங்கள்” என்று குரு சொன்ன வார்த்தையை மனதில் இருத்தி, புத்தியை சாதனையில் குவித்து, எனது வசந்த நவராத்ரி சாதனையைத் தொடக்கினேன்.

10 மாலை ஜபம் செய்வது ஒரு மணிநேரத்துக்கு அதிகமான காலத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால் குடும்பத்தினருக்கு சிரமமாக இருக்கும் என ஆரம்பத்தில் நான் எண்ணியிருந்த போதும், நிஜத்தில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக, என் மனைவி மற்றும் சிறு குழந்தையான மகன் கூட சாதனைக்கு உதவியிருந்தனர்.

கொரோனா காலப்பகுதியில் வீட்டிலிருந்து அலுவலகப் பணி ஆற்ற வேண்டிய நிலையில், வழமையை விட அதிகப் பணிகள் அளிக்கப்பட்டன. அத்துடன், வேறு பல வேலைகளும் சேர்ந்து கொண்டன. எனினும், சரியான திட்டமிடலின் மூலம், அவை சாதனையைப் பாதிக்காத வண்ணம் செய்து கொண்டேன்.

தேவியின் அருளாலும் குரு மண்டலத்தின் அளவற்ற கருணையாலும், நவராத்ரி சாதனை இனிதே நிறைவேறியது. அதை சுமனன் அண்ணாவிடம் கூறிய போது, ’நாளொன்றுக்கு 10 மாலை காயத்ரி ஜபம்’ என்பதை தொடருமாறும், ஒரு லட்ச காயத்ரி ஜப இலக்கை அடையும் வரை 10 மாலை ஜபத்தை நிறுத்த வேண்டாம் என்றும், அவர் அறிவுறுத்தினார். இதனையடுத்து, அவ்வண்ணமே சாதனையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றேன். நேற்றைய தினத்துக்கான சாதனையுடன், குருவருளால் அந்த இலக்கு அடையப்பட்டது.

இந்த சாதனை நாட்களில், தேவியின் எல்லையற்ற கருணையால் எனக்குப் பின்வருவன உணர்த்தப்பட்டன:

1) சாதனையை தவிர்க்கும் மனநிலையை நம்மில் ஏற்படுத்துவதற்காக நமது விதி பல வகைகளில் முயல்கின்றது.

2) கோபம் என்பதே அதில் முதன்மையானது.

3) எரிச்சலுறுதல், கோபம் அடைதல் ஆவேசமாக கத்துதல் ஆகியவற்றால், நமது சக்தி அதி வேகமாக இழக்கப்படுகிறது, நாமும் களைப்படைகின்றோம். அதனால், சாதனை செய்ய இயலாமல் போகின்றது.

4) அவ்வாறாக வரும் கோபத்தின் மூலக் காரணத்தைத் தேடி ஆராய்ந்தால், அது ஓர் அற்ப விஷயத்துக்காக இருக்கும். மேலும், அந்த அற்ப விஷயம் சில நாட்களில் மறந்து போய் விடக்கூடியதாக இருக்கும்.

5) கோபத்தைப் போன்று, சாதனையைத் தடுக்கக்கூடிய இன்னொரு அம்சம் தான் தர்க்கம்;

6) நம்மைச் சுற்றியுள்ள சூழலில், அன்றாடம் நிகழும் தர்க்கங்கள் அனைத்தும், அறிவைப் பெறும் நோக்கத்துடன் செய்யப்படுபவை அல்ல. மாறாக, தம்முடன் கருத்து முரண்படுபவரை மனம் நோகச் செய்யவும், துன்புறுத்தவும், அவரை மறு வார்த்தை பேச விடாது முடக்கினோம் என நம் ஆணவத்துக்குத் தீனி போடவுமே, தர்க்கம் பயன்படுகின்றது.

7) தர்க்கத்தில் வென்றால் வெற்றி போதை உருவாகிறது. அதேவேளை இன்னொருவரை நோகடித்துவிட்ட குற்ற உணர்ச்சியும் உருவாகிறது. மேலும் தர்க்கமும் எமது சக்தியை உறிஞ்சிக் கொள்கின்றது. இவற்றால், சாதனை தடைப்படும்.

8) தர்க்கத்தில் தோற்றால், கடுமையான மன வலி உருவாகின்றது. பழிவாங்கும் உணர்ச்சி உருவாகின்றது. வெறி பிடித்துவிட்ட நிலை ஏற்படுகின்றது. இது சில நாட்களுக்கு நீடிக்கவும் செய்யும். மேலும் தர்க்கத் தோல்வியும் எமது சக்தியை பெருமளவு உறுஞ்சிக் கொள்கின்றது. இதனாலும் சாதனை தடைப்படும்.

9) கோபமும் தர்க்கமும் எம் சாதனையைத் தடைப் படுத்துவதால், அவை எம்மில் எப்போது தோன்றும் என நாம் விழிப்புடன் இருப்பதுடன், அவை தோன்றும் சூழலில், எதிர்வினையாற்றாது இருப்பதன் மூலம், அவற்றின் தோற்றத்தை இல்லாதொழிக்க முடிவதுடன், நமது மனச்சாந்தியையும் மனச் சமநிலையையும் பேண முடியும்.

10) சாதனையைத் தடைப்படுத்தும் இன்னுமொரு அம்சம்: எனது வீட்டுச்சூழல் சாதனைக்கு ஒத்துழைக்காது என நாமே மேற்கொள்ளும் முன்முடிவு.

11) இவ்வாறான முன்முடிவினால், நாமே நம் சாதனைக்கு தடையாக மாறுவோம். உண்மையில், நமது வீட்டுச் சூழல் அவ்வாறு இருக்காது. நமது கற்பனையே நம்மை சாதனை செய்ய விடாது தடுக்கும்.

12) தொடர்ச்சியான சாதனையை உடைத்து நிறுத்தும் பிரதான காரணி, மனம் சாதனையில் உற்சாகமற்றுப் போதல் ஆகும்.

13) நம் குழந்தைக்கு பல்வேறு கதைகள் கூறி, ஆர்வத்தை ஏற்படுத்தி சோறு ஊட்டுகின்றோம். அதைப் போல், மனம் என்ற குழந்தைக்கு, சாதனையில் தொடர்ச்சியாக ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, நாம் நடந்து கொண்டால், உற்சாகம் குறையாது. இன்ன செயலை / நடத்தையை மேற்கொண்டால், மனக்குழந்தையின் உற்சாகம் அதிகரிக்கும் என, அறுதியிட்டு கூறிவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரது மனக்குழந்தையும் தனித் தன்மை கொண்டவை. அவரர் மனக்குழந்தைக்கு உற்சாகத்தை அதிகரிப்பது எது என்று, அவரவரே கண்டு பிடித்து, அதன் மூலம் சாதனையில் தொடர்ச்சியைப் பேண வேண்டும்.

14) ’செடிக்குத் தான் வேலி; மரத்திற்கு அல்ல’ என்பதற்கமைய, இந்த மனக்குழந்தையை உற்சாகப்படுத்தும் வேலைகள், ஆரம்ப நிலைக்கு மட்டுமே என்பதை உணர்ந்து,  தளர்ந்து போகாதிருக்க வேண்டும்.

15) மேலும், சாதனைக்குத் தடையாக அமையும் பிற பிரச்சினைகள் அனைத்துமே, ‘கூடுதலாக எடுத்துக் கொண்டு, குறைவாக திருப்பிக் கொடுக்கும்’ நமது பழக்கத்தால் விளைபவையே.

16) வீட்டுக்கான பணிகளில் நாம் அதிகளவில் எடுத்துக் கொண்டு, அவற்றைச் செய்து முடிப்பதன் மூலம், வீட்டுச் சூழலில் பிரம்மிக்கத் தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

17) ஏற்கனவே எவ்வளவு வேலைகளைச் செய்கின்றேன்; இன்னும் எப்படி அதிக வேலைகளைச் செய்ய முடியும் எனக் கேள்வி எழுந்தால், அதற்காகத் தான் நாம் காயத்ரி சாதனைச் செய்கின்றோம் என்பதே பதில் என எனக்கு உணர்த்தப்பட்டது. தேவியின் பேரொளி எமது புத்தியைப் பிரகாசப்படுத்த, பிரகாசப் படுத்த,  வழிகள் கண்ணுக்குத் தெரியும் என்பதே நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
சிறு எடுத்துக் காட்டாக,
இந்த கொரோனா காலத்தில், மனைவியாரிடமிருந்து சமையல் கற்றுக் கொண்டு, அவரது பணிச்சுமையை சிறிதளவு குறைத்தேன். இதன் மூலம், நான் காயத்ரி சாதனை தவிர்ந்த புதியதொரு விடயத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். அத்துடன், எனது மனைவியாரும் இந்தக் காலப்பகுதியில் மிகச் சிறிய ஜப எண்ணிக்கையிலேனும், குரு அகத்திய - காயத்ரி சாதனையைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறாக, குருவருளினால், இந்த ஒரு லட்ச காயத்ரி சாதனையை முடித்துள்ளேன். குருவின் கருணையும் அன்பும் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை. 7 ஆண்டுகளில் முடியாதது இந்த 3 மாதங்களில் முடிந்தமை ஓர் அற்புதமேயன்றி வேறில்லை. குருநாதர் அகத்திய மகரிஷி உள்ளிட்ட குரு மண்டலத்துக்கு மீண்டும் மீண்டும் எனது நன்றியை இதயத்தால் செலுத்தி நிற்கின்றேன்.

Sunday, June 21, 2020

தலைப்பு இல்லை

ஐந்து வருடங்களுக்கு முன்னர் முதலாவது சர்வதேச யோகா தின நினைவுகள்!

புதுடெல்லி


மேதா சக்தி - 10

மேதா சக்தி பற்றி வேதங்களில் கூறப்பட்ட மேதா சூக்த விளக்கங்களைக் சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

சிவ ரூபங்களில் மேதா சக்தியின் இலக்கணமாக மேதா தக்ஷணாமூர்த்தி இருக்கிறார். 

இது மேதா சக்தி குருவின் வடிவில் ஒருவன் பெறலாம் என்பதை விளக்கும் உபாயம். மேதா தக்ஷிணாமூர்த்தி உபாசனை நுண்ணறிவு, ஞாபக சக்தி, உறுதியான மனம், கிரகிப்புத் திறன், புத்தியின் பிரகாசம், கற்றல் திறன் ஆகியவற்றைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேதா தக்ஷணாமூர்த்தி எமது நுண்ணறிவைத் தூண்டும், ஞாபக சக்தியைத் தரும், மனவுறுதியைத் தரும் குருவாக தியானிக்கப்படுகிறார். சுருக்கமாக மேதா சக்தியின் வடிவாக அறிவுத் திறனையும் சரியான முடிவு எடுக்கக் கூடிய ஆற்றலையும் தருபவராக தியானிக்கப்படுகிறார். ஒருவனுக்கு மேதா சக்தி கூடுவதால் அவன் புலன்கள் மூலம் உலகத்தைப் பற்றிப் பெறும் அறிவு சரியான முறையில் உள்வாங்கி ஞானத்துடன் நடக்கும் ஆற்றல் மேதா தக்ஷணாமூர்த்தி உபாசனையில் கிடைக்கும். 

மேதா சக்தி கிடைக்க உபாசிக்கக் கூடிய தெய்வ வடிவம் மேதா தக்ஷிணாமூர்த்தி. 

மேதா தக்ஷணாமூர்த்தியின் குணங்கள், ஆற்றல்கள் பற்றி அஷ்டோத்திரம், ஸ்தோத்திரம் ஆகியவற்றில் அறிந்துக் கொள்ளலாம்.


Saturday, June 20, 2020

மேதா சக்தி - 09

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் ஐந்தாவது ஆறாவது ஏழாவது மந்திரங்கள். 

முதல் இரு மந்திரங்களிலும் மேதா சக்தியின் உபசக்திகளான சரஸ்வதி, இந்திரன், அஸ்வினி குமாரர்கள், அப்ஸரஸ், கந்தர்வர்களைத் துதித்து அவர்களிடம் காணப்படும் சிறப்பு மேதா சக்திகளைப் பெற்றுக் கொள்ள பிரார்த்தனை செய்யப்பட்டது. 

ஐந்தாவது மந்திரம் இந்த மேதைத்துவம் என்னிடம் உருவாக வேண்டும் என்று சங்கல்பம் செய்விக்கிறது. மேதாசக்தி என்பது நறுமணம் போன்றது, இது பிரபஞ்சம் முழுமையையும் அறியும் ஆற்றலைத் தருகிறது. இது தங்க நிற அட்சரங்களால் எம்மிடம் வந்து சேருகிறது என்று மேதா சக்தியின் நிறம் பற்றிய குறிப்பினைத் தருகிறது. இது எல்லாவற்றையும் ஊடுருவக் கூடிய ஆற்றல் உடையது. மேதா சக்தி ஒருவனை பால் போன்று போசிக்கக் கூடியது. இதை அடைவதால் ஒருவன் திருப்தியுடன் கூடிய மனதை அடைகிறான் என்று இந்த மந்திரம் மேதா சக்தியின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறது. 

ஆறாவது மந்திரம் அக்னியைத் துதிக்கிறது. அக்னி என்பது உருமாற்றும் சக்தி. ஒருவன் முன்னர் குறிப்பிட்ட ஐந்து மேதா சக்திகளைப் பெற்றாலும் அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்து உருமாற்றித் திறமையைப் பெற அவனுக்கு அக்னித் தன்மை நிறைய இருக்க வேண்டும். பின்னர் அக்னித் தன்மையின் மேல் இருக்க வேண்டிய சூரிய ஆற்றலை அடுத்து துதிக்கிறது. மேதா சக்தி பெற்றவன் சூரியன் போல் தனது அறிவுக் கதிர்களைப் பரப்பி மற்றவர்களுக்கு ஒளிக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவன் ஆவான். இவற்றை சரிவரச் செய்ய அவனது மனம் தெய்வ மனமாகிய இந்திரனுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஆகவே இந்திரன் மீண்டும் இந்த மந்திரத்தில் துதிக்கப்படுக்கிறார். 

கடைசியாக ஹம்ஸ காயத்ரி மந்திரம் துதிக்கப்படுகிறது. இது மேதா சக்தி அடைந்த சாதகன் அன்னப் பறவை போல் சரியானதைத் தேர்ந்தெடுத்து பிழையானதை விலக்கி வாழ வேண்டும். ஹம்ஸம் என்பது சாதகனின் ஆத்மாவும், பரமஹம்ஸம் என்பது பரமாத்மாவும் ஆகும். மேதா சக்தியின் இறுதி இலக்கு பிரம்ம ஞானம். இது ஹம்ஸமும், பரமஹம்ஸமும் ஒன்றாதல் என்ற ஜீவான்ம பரமான்ம ஐக்கியத்தைக் குறிக்கும். 

இத்துடன் நாராயண உபநிஷத மேதா சூக்தம் முடிவுற்றது. மற்றைய மேதா சூக்த விளக்கங்களை இந்தத் தொடரில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. எதிர்காலத்தில் யாராவது ஆழமாகப் படிக்க எண்ணினால் அவர்களுடன் தனிப்பட உரையாடலாம். 

தொடரும்...


தலைப்பு இல்லை

மேதா சக்தி பதிவுகள் ஆச்சரியமாக அனேகர் படித்து கருத்திடுகிறீர்கள்! இன்னும் எழுத ஆர்வமூட்டுகிறது. தற்போது இது பற்றிய விளக்கங்கள் எழுதப்படுகிறது. இறுதியில் மூலிகைப் பிரயோகங்களும் தொகுக்கப்பட்டு பதிவிடப்படும். 

ஆர்வமுடன் உற்சாக மூட்டுபவர்கள் இந்தத் தொடர் வேகமாகச் செல்வதற்கு காரணம் என்று நினைக்கிறேன்! 

படித்தவர்கள் தொடர் பற்றிய உங்களது அனுபவம், கருத்துக்களைப் பகிருங்கள்! 

உற்சாகமாகத் தொடர்வோம்! பயணிப்போம்!


மேதா சக்தி - 08

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் மூன்றாவது நான்காவது மந்திரங்கள். 

இந்த மந்திரங்கள் ஒருவன் பெற வேண்டிய மேதா சக்திகள் எவை, அவற்றிற்கு அதிபதிகள் யார் என்பதைக் கூறுகிறது. 

1) இந்திரன்

2) சரஸ்வதி

3) அஸ்வினி குமாரர்கள்

4) அப்ஸரா

5) கந்தர்வர்கள்

ஆகிய ஐவரிடமிருந்தும் மேதா சக்தியை நாம் பெற வேண்டும் என்று இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. 

இது மேதா சக்தியைப் பற்றிய சில இரகசியங்களைக் கூறுகிறது. இங்கு தேவர்களாகக் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒவ்வொன்றும் மனிதன் பூரண இன்பத்துடன் வாழ்வதற்குத் தேவையான சக்திகள். 

இந்திரன் தெய்வ மனதின் அதிபதி, இந்த தெய்வ மனதிலிருந்தே மனித மனம் தோற்றம் பெறுகிறது. தெய்வ மனதின் அதிபதியுடன் மனித மனம் தொடர்புபட்டால் அந்த மனம் நுணுக்கமான விஷயங்களைப் புரியும் ஆற்றல் பெறும். 

சரஸ்வதி மனம் கற்க வேண்டிய பரா - அபரா வித்தைகளுக்கு அதிபதி. சரஸ்வதியின் அருள் வாய்ப்பதால் ஒருவன் பரா - அபரா வித்தைகளில் நிபுணத்துவம் பெறுவான். 

முதலின் தெய்வமனமாம் இந்திரன் அருள் பெற்று பின்னர் மனித மனம் கொண்டு வித்தைகளைக் கற்க வேண்டும் என்ற சூக்ஷ்மத்தை இந்த மந்திரம் கூறுகிறது. 

அடுத்தது அஸ்வினி குமாரர்கள் - அஸ்வினி குமாரர்கள் ஆயுள் வேதத்தின் அதிபதிகள். எதை உண்ண வேண்டும் என்ற பதார்த்த குண இரகசியத்தையும், உணவை மருந்தாக்கும் இரகசியங்களையும் பெறலாம். இவர்களிடமிருந்து ஒருவன் உணவையும், மருந்தையும் பற்றிய இரகசியங்களை தனது அறிவிற்குச் சேர்த்துக் கொண்டால் அவன் வாழ்க்கை பூரணத்துவம் அடையும். 

அடுத்து அப்ஸரஸ், அப்ஸரஸுகள் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும் மனதை மூளையை ஆற்றலைத் தருபவர்கள். நடனம் இவர்களின் அடிப்படை, அப்ஸரஸுகளின் அமிசம் உள்ளவர்கள் நடனத்தில் சிறந்து விளங்குவர். அப்ஸரஸுகள் உடலை எப்படி யோகத்திற்கு பயன்படுத்துவது என்ற இரகசிய அறிவினைத் தருவார்கள். 

கந்தர்வர்கள் இசைக்கு அதிபதி, ஒருவனுக்கு நாதம், இசையை உணரும் தன்மை பெறுவதற்கு கந்தர்வ அறிவு இருக்க வேண்டும். தலைச் சிறந்த இசை மேதைகள் அனைவரும் கந்தர்வ அமிசமாகவும் கந்தர்வ மேதாசக்தி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த இரண்டு மந்திரங்களும் மேதா சக்தியின் ஐந்து உபசக்திகளைக் குறிக்கிறது. 

1) சரஸ்வதி மேதா சக்தி - பரா அபரா வித்தைகள்

2) இந்திர மேதா சக்தி - தெய்வ மனத்திற்கான அறிவு

3) அஸ்வினி மேதா சக்தி - உணவு, மருந்து பற்றிய ஆயுர்வேத மேதா சக்தி

4) அப்ஸர மேதா சக்தி - நடனம், உடலை ஆளும் ஆற்றல், இன்பத்தை அனுபவிக்கும் சக்தி

5) கந்தர்வ மேதா சக்தி - இசை, நாதத்தை உணரும் சக்தி. 

இந்த ஐந்து சக்திகளின் விரிவு அனேகம், இந்தக் கட்டுரையின் நோக்கம் இவை பற்றிய அறிமுகம் மட்டுமே, ஆகவே இந்த நோக்கத்தைத்தாண்டி இதை நாம் உரையாடப் போவதில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இது பற்றிப் பார்ப்போம். 

மேதா தேவியின் ஐந்து வகை உப மேதா சக்திகள் இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பூரண மேதா சக்தி வேண்டுபவன் இவற்றை படிப்படியாகப் பெறவேண்டும். 

தொடரும்...


மேதா சக்தி - 07

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் இரண்டாவது மந்திரம்

இந்த மந்திரம் மேதா சக்தியால் ஒருவன் அடைய வேண்டியவற்றைப் பற்றி மனதிற்கு கட்டுரைக்கிறது. கட்டுரைத்தல் என்றால் suggestion என்று அர்த்தம் {பாருங்களேன் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது}

மேதா தேவியை துதிக்கும் சாதகன் எதை அடைவான் என்ற விபரத்தைத் தருகிறது. அவன் அடையக் கூடியவை மூன்று விஷயங்கள்;

1) ரிஷித்தன்மை

2) பிரம்ம ஞானம்

3) செல்வம்

இந்த மூன்றும் மேதா சக்தியை அடைபவனிடம் வந்து சேரும் என்று இரண்டாவது மந்திரம் சொல்கிறது. 

ரிஷி என்றால் உலகைத் துறந்த துறவிகளோ, ஆடைகளால் வேஷமிட்டுத்திரியும் ஆன்மீகவாதிகளோ அல்ல. ரிஷிகள் என்றால் யார் என்பது பற்றி ஸ்ரீ அரவிந்தர் இப்படிக் குறிப்பிடுகிறார். ரிஷிகள் மற்றவர்களுக்கு ஊக்கம் தரக் கூடிய சிந்தனாவாதிகள். அவர்கள் புலன்கள் மூலம் பெறப்படும் பகுத்தறியும் (deductive reasoning) பௌதீக அறிவாளிகள் அல்ல. அவர்களுடைய ஆற்றல் அளவிட முடியாது. அளவிட முடியாத தியானசக்தியின் மூலம் ஆன்ம ஆற்றலும் உள்ளுணர்வும் (Intuitive) பெற்றவர்கள். 

முற்காலத்தில் சமூகத்தை வடிவமைப்பவர்களாக, வழிகாட்டிகளாக, கல்வியாளர்களாக, பண்டிதர்களாக, நீதிமான்களாக, அரசர்களாக இருந்திருக்கிறார்கள். ரிஷிகள் தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டு சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டவர்கள் அல்ல; மனிதகுலம், தாம் வாழும் சமூகத்திற்கு தாம் பெற்ற பிரம்ம ஞானத்தின்படி வழிகாட்டி அவர்களை உயர்த்தும் வல்லமை உள்ளவர்கள். 

ஆகவே ரிஷி என்ற சொல்லை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் பார்த்த நாடகங்களை வைத்துக் கொண்டு ரிஷித் தன்மையைப் புரிய முற்படக் கூடாது. 

ரிஷி என்றால் பிரபஞ்ச உண்மையை நேருக்கு நேராக அறிந்தவர் (த்ருஷ்டா) என்று பொருள். அவர்கள் அறிந்த உண்மைகளை நாம் அனுபவிப்பதற்காக சொற்கள், வார்த்தைகளைத் தகுந்த சந்தஸில் கோர்த்து மந்திரங்களாகத் தந்திருக்கிறார்கள். அந்த மந்திரங்களை உபாசிப்பதால் அவர்கள் பெற்ற அனுபவத்தை எமக்குப் பெறச் செய்பவர்கள் ரிஷிகள்! ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதனை பிரபஞ்சத்திலிருந்து கண்டறிந்த ரிஷி இருப்பார். 

இப்படி உண்மையை நேருக்கு நேர் அறியும் அனுபவத்தால் வருவது பிரம்ம ஞானம். 

இப்படி ரிஷித் தன்மையால் தெளிந்த ஞானம் வாய்க்கும் ஒருவனுக்கு எல்லாச் செல்வமும் வந்து சேரும் என்பது இங்கு பெறப்படுகிறது. 

இவற்றையெல்லாம் நாம் பெற மேதாதேவியின் அருளால் எமக்கு மேதா சக்தி வேண்டும் என்பதை இந்த இரண்டாவது மந்திரம் கூறுகிறது. 

இதைப் படிப்பவர்கள் எல்லோரும் மேதா தேவி அருள் பெற்று ரிஷித் தன்மை, பிரம்ம ஞானம், எல்லாச் செல்வங்களும் பெற குருமண்டலத்தைப் பிரார்த்திப்போமாக!


மேதாசக்தி - 06 :மஹாநாரயண உபநிஷத மேதா சூக்த விளக்கம்

மஹா நாரயண உபநிஷத மேதாசூக்தம் மேதா தேவி பற்றிக் கூறும் குறிப்புகளை அறிந்துக் கொள்வது மேதா சக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். இந்த சூக்தத்தில் ஆறு மந்திரங்கள் இருக்கின்றது. 

முதல் மந்திரம் மேதா தேவியின் பிரபாவம் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

1) பிரபஞ்சம் எங்கும் பரந்தவளாக, 

2) மங்களமானவளாக, 

3) மனதின் அடிப்படைக் காரணியாக உருவகிக்கிக்கப்படுகிறது. 

நாம் பெற வேண்டியது/தியானிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய விபரம் இதனால் பெறப்படுகிறது. 

எங்கும் பரந்தவளாக மேதா தேவியை உருவகிப்பதால் எங்கிருந்தாலும் மேதா சக்தியைப் பெறலாம் என்ற உறுதி பெறப்படுகிறது. 

மங்களகரமானவள் என்று உருவகிப்பதால் எமக்கு மங்களம் வந்து சேர்கிறது. மனதின்/புத்தியின் மூல சக்தி அவள் என்று உருவகிப்பதால் அவளின் அருளால் நாம் புத்தியை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகிறது. நாம் பெற வேண்டிய சக்தி எங்கிருக்கிறது? பிரபஞ்சம் எல்லாம் பரவியிருக்கிறது. 

இப்படிப்பரவிய மேதா சக்தி எனக்கு நன்மையை, மங்களத்தை தரக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் அடிப்படையில் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும், பயமுறும் மனிதன் தைரியமாக மேதா சக்தியைப் பெற முனைவான். இறுதியாக அந்த மேதா சக்தி எங்கு வந்து சேர வேண்டும் என்று இலக்கினைக் குறிக்க, அவளை மனதின்/புத்தியின் மூல சக்தி என்று குறிப்பிடுகிறது. 

இப்படி முதல் வரிகளில் மேதா தேவியின் பண்புகளை விபரித்து பிறகு அந்தப் பண்புகளைப் பெற வேண்டிய சாதகன் எப்படி இருக்க வேண்டும், அவன் எதை மேதா தேவி தனக்குத் தர வேண்டும் என்பதைக் கூறுகிறது; மேதா தேவியின் அருள் வேண்டுபவன்

1) பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும்

2) பிரம்மத்தை அடையும் இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும். 

3) வீரமுள்ள மக்கட் செல்வங்களையும் மாணவச் செல்வங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். 

பயனற்ற பேச்சுக் குறைந்தால், பயனற்ற எண்ணங்கள் குறையும், பயனற்ற எண்ணங்கள் குறைந்தால் மனதின் சலனம் குறையும். மனதின் சலனம் குறைந்தால் சித்தத்தின் விருத்தி குறையும். சித்தத்தின் விருத்தி குறைந்தால் சித்தத்தில் (ஆழ் மனதில்) சித் என்ற அறிவு விழிப்படையும். இந்த ஆற்றலே மேதா சக்தி. 

பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும் என்றால் இலக்கு உயர்வாக இருக்க வேண்டும். இலக்கு உயர்வாக இருந்தால் அதை அடைவதற்கே எமது நேரம் செலவாகும். இலக்கு தாழ்வாக இருந்தால் நாம் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதிலும், செயலாற்றாமல் வம்பளப்பதிலும் செலவழித்துக் கொண்டிருப்போம். ஆகவே பரா வித்யாவின் மிக உயர்ந்த இலக்கான பிரம்மத்தை அடைதலை இலக்காக கொண்டவனுக்கே மேதா சக்தி அடையக் கூடியதாக இருக்கும். 

மூன்றாவது வீரமுள்ள மக்கட் செல்வங்களும், மாணவச் செல்வங்களும் இருக்க வேண்டும் ஏன்? உயர்ந்த அறிவைப் பரப்பும் பரம்பரையை உருவாக்கினால் தான் பெற்ற மேதா சக்தியால் உலகம் பயனுறும். ஆகவே மேதா சக்தி பெற்ற ஒருவனுக்கு மக்கட் செல்வங்களும், மாணவர்களும் கட்டாயம் இருந்தால் தான் அந்த மேதைத்துவத்திற்கு விலாசம் ஏற்படும். மக்களும், மாணவர்களும் பெற்றோரைப் போல், ஆசிரியரைப் போல் மேதா சக்தியை பெறக் கூடிய மன ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே வீரமுள்ள மக்கட்  செல்வமும், மாணவச் செல்வமும் என்று கூறப்பட்டது. 

ஒரு மந்திரமுமே இவ்வளவு அழகாக மேதா சக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது, இந்தத் தொகுப்பில் இன்னும் ஐந்து மந்திரங்களுக்கும் விளக்க எழுதுவோம்! 

இதைப் படிப்பவர்கள் எல்லாம் மேதாசக்தி பெற்று குருமண்டலத்தின் மாணவச் செல்வங்கள் ஆக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!


மேதாசக்தி - 06 :மஹாநாரயண உபநிஷத மேதா சூக்த விளக்கம்

மஹா நாரயண உபநிஷத மேதா சூக்தம் மேதா தேவி பற்றிக் கூறும் குறிப்புகளை அறிந்துக் கொள்வது மேதா சக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். இந்த சூக்தத்தில் ஆறு மந்திரங்கள் இருக்கின்றது. 
முதல் மந்திரம் மேதா தேவியின் பிரபாவம் கீழ்வருமாறு கூறப்படுகிறது.
1) பிரபஞ்சம் எங்கும் பரந்தவளாக, 
2) மங்களமானவளாக, 
3) மனதின் அடிப்படைக் காரணியாக உருவகிக்கிக்கப்படுகிறது. 
நாம் பெறவேண்டியது/தியானிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய விபரம் இதனால் பெறப்படுகிறது. 
எங்கும் பரந்தவளாக மேதா தேவியை உருவகிப்பதால் எங்கிருந்தாலும் மேதா சக்தியைப் பெறலாம் என்ற உறுதி பெறப்படுகிறது. 
மங்களகரமானவள் என்று உருவகிப்பதால் எமக்கு மங்களம் வந்து சேர்கிறது. மனதின்/புத்தியின் மூலசக்தி அவள் என்று உருவகிப்பதால் அவளின் அருளால் நாம் புத்தியை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகிறது. நாம் பெற வேண்டிய சக்தி எங்கிருக்கிறது? பிரபஞ்சம் எல்லாம் பரவியிருக்கிறது. 
இப்படிப்பரவிய மேதா சக்தி எனக்கு நன்மையை, மங்களத்தை தரக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் அடிப்படையில் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும், பயமுறும் மனிதன் தைரியமாக மேதா சக்தியைப் பெற முனைவான். இறுதியாக அந்த மேதா சக்தி எங்கு வந்து சேர வேண்டும் என்று இலக்கினைக் குறிக்க, அவளை மனதின்/புத்தியின் மூல சக்தி என்று குறிப்பிடுகிறது. 
இப்படி முதல் வரிகளில் மேதா தேவியின் பண்புகளை விபரித்து பிறகு அந்தப் பண்புகளைப் பெற வேண்டிய சாதகன் எப்படி இருக்க வேண்டும், அவன் எதை மேதா தேவி தனக்குத் தரவேண்டும் என்பதைக் கூறுகிறது; மேதா தேவியின் அருள் வேண்டுபவன்
1) பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும்
2) பிரம்மத்தை அடையும் இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும். 
3) வீரமுள்ள மக்கட் செல்வங்களையும் மாணவச் செல்வங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். 
பயனற்ற பேச்சுக் குறைந்தால், பயனற்ற எண்ணங்கள் குறையும், பயனற்ற எண்ணங்கள் குறைந்தால் மனதின் சலனம் குறையும். மனதின் சலனம் குறைந்தால் சித்தத்தின் விருத்தி குறையும். சித்தத்தின் விருத்தி குறைந்தால் சித்தத்தில் (ஆழ்மனதில்) சித் என்ற அறிவு விழிப்படையும். இந்த ஆற்றலே மேதா சக்தி. 
பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும் என்றால் இலக்கு உயர்வாக இருக்க வேண்டும். இலக்கு உயர்வாக இருந்தால் அதை அடைவதற்கே எமது நேரம் செலவாகும். இலக்கு தாழ்வாக இருந்தால் நாம் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதிலும், செயலாற்றாமல் வம்பளப்பதிலும் செலவழித்துக் கொண்டிருப்போம். ஆகவே பரா வித்யாவின் மிக உயர்ந்த இலக்கான பிரம்மத்தை அடைதலை இலக்காக கொண்டவனுக்கே மேதா சக்தி அடையக்கூடியதாக இருக்கும். 
மூன்றாவது வீரமுள்ள மக்கட் செல்வங்களும், மாணவச் செல்வங்களும் இருக்க வேண்டும் ஏன்? உயர்ந்த அறிவைப் பரப்பும் பரம்பரையை உருவாக்கினால் தான் பெற்ற மேதா சக்தியால் உலகம் பயனுறும். ஆகவே மேதா சக்தி பெற்ற ஒருவனுக்கு மக்கட் செல்வங்களும், மாணவர்களும் கட்டாயம் இருந்தால் தான் அந்த மேதைத்துவத்திற்கு விலாசம் ஏற்படும். மக்களும், மாணவர்களும் பெற்றோரைப் போல், ஆசிரியரைப் போல் மேதாசக்தியை பெறக் கூடிய மனஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே வீரமுள்ள மக்கட் செல்வமும், மாணவச் செல்வமும் என்று கூறப்பட்டது. 
ஒரு மந்திரமுமே இவ்வளவு அழகாக மேதா சக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது, இந்தத் தொகுப்பில் இன்னும் ஐந்து மந்திரங்களுக்கும் விளக்க எழுதுவோம்! 
இதைப் படிப்பவர்கள் எல்லாம் மேதாசக்தி பெற்று குருமண்டலத்தின் மாணவச் செல்வங்கள் ஆக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

மேதாசக்தி - 05

மேதா என்பது அறிவு அல்ல, அறிவைப் பெறுவதற்கு எம்மிடம் இருக்கவேண்டிய திறன். நாம் பெறவேண்டிய அறிவுகள் இரு வகையானது. 

1) பராவித்யா - எம்மை அறிவதன் மூலம் இறைவனையும் பற்றிய முழுமையான அறிவு

2) அபராவித்யா - எல்லா விதமான உலக அறிவுகளும். 

இந்த இரண்டிலும் சிறந்து விளங்க எமக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். இன்று நாம் பல்கலைக்கழகங்களில் கற்கும் கல்வி எல்லாம் அபராவித்யாக்களே! 

இப்படி வித்தைகளை அறிந்துக் கொள்ள எம்மில் (எமது மூளையில்) சிலவித பிராண ஓட்டங்கள் - நாடிகள் உருவாக வேண்டும். இதை இன்றைய மூளை அறிவியல் Neural network என்று சொல்லும். இவற்றை நாம் மனதால் எம்மில் உருவாக்க வேண்டும். 

இப்படி மூளையில் நாடிகளை - பிராண ஓட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டினை மனனம் என்று பண்டைய கல்வி முறையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

குறித்த ஒலியமைப்புச் சொற்கள் இது மூளையில் குறித்த அறிவினைப் பெற தகுந்த நாடிகளை - Neural network உருவாக்கக் கூடிய பாடல்களை ஒரு ஒழுங்கில் எழுதி வைத்தார்கள். இப்படியான பாடல் ஒழுங்குகளை சந்தஸ் அல்லது சந்தம் என்றும் இதற்கான விதிகளை யாப்பு என்றும் கூறி வைத்தார்கள். 

இப்படி குறித்த சந்தஸில் உள்ள மந்திரங்களையும், பாடல்களையும் மீண்டும் மீண்டும் நாம் மனனம் செய்யும் போது மூளை குறித்த அறிவைப் பெறும் தகுதியை அடைகிறது. 

இப்படி மேதா சக்தியை அடைவதற்கு வேதங்களில் காணப்படும் மந்திரத் தொகுப்பு மேதா சூக்தம் எனப்படுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று அர்த்தம். மேதா சூக்தம் என்றால் மேதாவைப் பற்றிய நன்றாகச் சொல்லப்பட்ட தொகுப்பு என்று அர்த்தம். இவற்றில் எமக்குக் கிடைப்பது

1) மஹாநாராயண உபநிஷத மேதா சூக்தம்

2) ரிக்வேத மேதா சூக்தம்

இந்த இரண்டு சூக்தங்கள் மேதா சக்தியை எப்படிப் பெறுவது என்பது பற்றிய விளக்கங்களைத் தருகிறது.


அறிவும் நதியும் வழிகாட்டலும்

பலர் வழிகாட்டுங்கள், உதவுங்கள் என்று கேட்கிறார்கள்! எப்படி ஒருவர் இன்னொருவருக்கு வழி காட்டுவது! ஒருவர் இன்னொருவருக்கு வழிகாட்டுவது என்பது பொய்யானது! 

வழிகாட்டுவது என்பது அறிவுடன் தொடர்புடையது! ஒரு விஷயம் புரியவில்லை தெளிவுபடுத்துங்கள் என்று கேட்கும் போது அது ஏன் எனக்குப் புரியவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் இது புரியும். 

அறிவை நதியாக எடுத்துக் கொண்டால் நதிக்கு வழிகாட்ட முடியாது, பள்ளத்தை ஏற்படுத்தினால் தானாகப் பாயும்! அது போல் நாம் மேடாக இருந்து கொண்டு நதியைப் பாயச் சொல்ல முடியாது. அது போல் நாம் பலவற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு மனதையும் புத்தியையும் மேடாக்கி வைத்துக் கொண்டு அறிவைப் பாயச் சொல்லிக் கேட்க முடியாது! 

காற்று வெற்றிடத்தில் புகும், காற்றை இந்த இடத்திற்குள் புகுந்து கொள், இங்கே ஓடி வா என்று கேட்க முடியாது. அது போல் வெற்றிடம் இருந்தால் காற்றுச் சுழலும்!

ஒவ்வொன்றிற்கும் உள்ள நிபந்தனைகள் சரியாகப் பூர்த்தி செய்தால் மற்றவை தானாக நிகழும்! நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒன்றைப் பெற வேண்டும் என்று உத்வேகப்படுவது எந்தப் பலனையும் தராது!


மேதா க் - 04

சென்ற பதிவில் Cognitive ஆற்றல் தான் மேதா சக்தி என்பதைப் பார்த்தோம். முற்காலத்தில் பாரதீய ரிஷிகள் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு ஒருவனுக்கு இந்த மேதா ஆற்றல் இருக்க வேண்டும் என்று கருதியிருந்தார்கள். 

இந்த மேதா ஆற்றலைப் பெற என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் மனித சமூகம் குழப்பம் குறைவான, வாழ்க்கையின் இலட்சியம் தெளிவாக அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தம் கொண்ட இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த காலத்தில், பூரண உடல் ஆரோக்கியம் இருந்த காலத்தில் அத்தகைய மனிதனிற்கு தனது மனதைப் பயன்படுத்தி மந்திர பாராயணம் போன்றவை இந்த ஆற்றலைப் பெற பயன்படுத்தினார்கள். 

இந்த வகையில் மேதா சூக்தம் எனப்படும் வேத மந்திரத்தொகுதி இந்த ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று பொருள்படும். மேதா சக்தி பற்றி நன்றாகச் சொல்லப்பட்டது மேதா சூக்தம் எனப்படும். இது பிரம்மத்தை அடைந்து ரிஷியாகும் நோக்கம் உள்ள மாணவர்கள் தாம் மேதா சக்தியை அடையவேண்டும் என்று மேதாவினை அடையத் துதிப்பதாக இருக்கின்றது. 

மேதா சக்தியின் நோக்கம் ஒருவன் பிரம்மத்தை அடைந்து ரிஷியாவதற்குரிய ஆற்றலைப் பெறுவதற்கே என்பது பெறப்படுகிறது. 

வேதங்களில் மேதா சூக்தம் மூன்று காணப்படுகிறது. 

மகா நாராயண உபநிஷதத்தில் காணப்படும் சூக்தம் மேதாவினை அடைய இந்திரன், அக்னி, அஸ்வினி குமாரர்கள், சூரியன், மேதா தேவி ஆகியோரைத் துதிப்பதாக வரும். 

ரிக் வேதத்திலும் வரும் மந்திரங்கள் அங்கிரஸ் முதலான சப்த ரிஷிகள், இந்திரன், அக்னி, பிரம்மா, வருணன், அஸ்வினி குமாரர், சரஸ்வதி ஆகியோரைத் துதிப்பதாகவும், அதர்வண வேத மந்திரங்களில் இந்திரன், அக்னி, வருணன், வாயு, மேதா தேவி ஆகியவர்கள் துதிக்கப்படுகிறார்கள். 

இந்தத் தெய்வங்கள் எங்கோ இருப்பதாக எண்ணத் தேவையில்லை. அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற தத்துவத்திற்கு அமைய எமது மனம் எளிதாக ஒடுங்குவதற்கு இவற்றை வெளிமுகப்படுத்தி புலன் வழி அனுபவமாகப் பெற தெய்வங்களாக வழிபடுகிறோம். அந்த ஆற்றல்களை எமது ஆற்றல்களாக்கிக் கொள்வதே இத்தகைய வழிபாட்டின் நோக்கங்களாகும். 

இந்த மூன்று மேதா சூக்தங்களும் ஒருவன் மேதா சக்தியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதையும், அந்த மேதா சக்தி தன்னையறிந்து தனக்கு மூலமான சக்தி எதுவென்பதை அறிந்து மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படும் ரிஷியாக வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. 

இதற்கு பிறகு வரும் காலத்தில் குருமுகமாய் தந்திர மார்க்கத்தில் இன்னும் பல உபாசனைகள் ஏற்படுத்தப்பட்டது. 

அவைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...


மேதா சக்தி - 03

மேதா என்ற சொல்லின் விஷேஷ அர்த்தம் பற்றி உரையாடுவதானால் ஆயுர்வேதம், மேதா சூக்தம் ஆகிய இரண்டிலும் இந்தச் சொல் பாவிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். 

ஆயுர்வேதத்தின்படி மேதா என்பது அறிவினை சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிவின் ஒரு வகை ஆற்றல் என்றும், சுசுருத சம்ஹிதைப் பிரகாரம் புத்தியின் எந்தப்பகுதி ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரே நேரத்தில் பல விஷயங்களை அவதானித்து, முழுமையாக, தடையில்லாமல், மிக நுணுக்கமாக, ஆழமாக அறிந்துகொள்ளும் புத்தியின் ஆற்றல்களின் ஒன்றே மேதா எனப்படுகிறது. 

அஷ்டாங்க ஹ்ருத்யத்தின் உரை மேதாவை அறியப்படும் பொருளின் அனைத்து அமிசங்களையும் தடையில்லாமல், தெளிவாக அறிந்து அவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் அறிவு எனப்படுகிறது. 

இது எமது புத்தியின் விஷேஷ அமிசம். அனைவராலும் எல்லா விஷயங்களையும் புலன்களால் அறிய முடியும். அதுபற்றி முழுமையான அறிவினைப் பெறுவதற்கு ஒருவனுக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். 

இதை நவீன மூளை - உளவியல் அறிவியலில் புரிந்து கொள்வதானால் Cognition என்று சொல்லப்படும். 

Cognition என்பது ஒருவன் தனது புலன்கள், சிந்திப்பது, ஏற்கனவே பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஆகிய மூன்றின் மூலமும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்/உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனப்படும். 

மனிதனின் இந்த cognition ஆற்றல் 

1) உணர்வுடன் புரிதல்: ஏன் ஒரு விஷயம் நடக்கிறது என்ற தெளிவுடன் நாம் புரிந்துகொள்வது. 

2) உணர்வில்லாமல் புரிதல்: ஏதோ நடக்கிறது, ஆனால் அது ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்ற தகவல் எமது ஞாபகத்தில் இருப்பதில்லை.

3) தெளிவாகப் புரிதல்: ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான புரிதல்

4) சுருக்கமாகப் புரிதல்: கணிதச் சமன்பாடுகள் ஒருவித abstraction 

5) அக உணர்வுடன் புரிதல்: Intuition எனப்படுவது, 

6) மாதிரியுருக்கொண்டு புரிதல்: Model and designs 

என்ற பல நிலைகளில் செயற்படுகிறது. 

மேதா என்பதைப் புரிந்துக் கொள்ள நவீன உளவியல் - மூளை அறிவியலில் Cognition என்ற சொல் பொருந்துகிறது.


Friday, June 19, 2020

மேதா சக்தி - 02

தமிழ் - சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளிலுமே ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது தரும் பலன், கருத்து, அர்த்தம் இவற்றை அது கட்டாயம் குறித்துக்காட்டும். 

தகுந்த காரணம் இல்லாமல் எந்தச்சொல்லும் பயன்படுத்தப்படுவதில்லை. 

ஆகவே சொற்களுக்கு பொருள் காண நான்கு வகை அர்த்தங்கள் பயன்படுத்தப்படும். 

1) வேர்ச்சொல்

2) பொதுப்பயன்பாட்டு அர்த்தம்

3) விஷேட அர்த்தம்

4) சம்பிரதாய அர்த்தம்

இதன் படி மேதா என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். 

1. வேர்ச் சொல்: மேதா என்றால் முழுமை என்பது சமஸ்க்ருத அடிச் சொல்லின் விளக்கம், ஒன்றைப்பற்றிய முழுமையான அறிவு என்று பொருள்; ஒரு விஷயத்தில் மேதை என்றால் அந்த விஷயத்தில் முழுமையான அறிவு உடையவர் என்று அர்த்தம். 

2. பொதுப் பயன்பாட்டு அர்த்தம்:

ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்கும் ஞாபசக்தியுடையவனை மேதை என்று கூறுவர். அவன் பெரிய மேதாவி என்று கூறுவோமல்லாவா! 

3. விஷேட அர்த்தம்:

இந்தச் சொல் மிக நுணுக்கமாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சொல்லிற்கான பொருள் இங்கு விஷேட அர்த்தம் என்று சொல்லப்படும். இந்த விளக்கப் பிரகாரம்தான் வரும் பதிவுகள் காணப்படும். 

அதுபோல் மஹா நாராயண உபநிஷத்தில் வரும் மேதா சூக்தத்தின் பொருள் காணும் போது அதன் ஆழ்ந்த பொருள் அறிய விஷேட அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். 

4. சம்பிரதாய அர்த்தம்:

அறிவு அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தலை முறையிலும் குருபாரம்பரியமாக சேகரிக்கப்படும். இந்த அறிவு அந்த சம்பிரதாயத்திற்குள் கவனமாக இருக்கும். அனேகமாக தகுதி அற்றவர்களுக்கு உபதேசிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சம்பிரதாயத்திற்குள் தீக்ஷை பெற்றவர்களுக்கு உபதேசிக்கப்படுவது. 

மேதா சூக்தத்திற்கு சம்பிரதாய அர்த்தமும் இருக்கும்.

இந்தப் பதிவுத் தொடர் வாசகர்கள் எந்தளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மேதா சக்தி பற்றிய ஆயுர்வேத, மேதா சூக்த விஷேட அர்த்த அடிப்படையில் விளக்கலாம் என்று எண்ணியுள்ளோம். 

வெறுமனே Like போட்டு விட்டு கடந்து விடுபவர்களுக்காக எழுத முடியாது, ஆர்வமுள்ளவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி Comment இட்டால் அது தரும் தூண்டலில் அடுத்த பதிவு வரும்!


மேதா சக்தி - 01

மேதா சக்தியே பண்டைய ரிஷிகளின் அடிப்படை இலக்காக இருந்தது என்பது ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவத்தின் மூலம் அறியப்படுகிறது. 
புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்ற பொருளில் பரம்பொருள் எமது புத்தியைத் தூண்டும் ஒளியாகவே அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது தான் காயத்ரி சாதனை. 
சூரியன் எப்படி தனது கதிர்களை நுண்மையாக செலுத்தி அனைத்தையும் ஊடுருவுகின்றதோ அது போல் அனைத்தையும் நுண்மையாக ஊடுருவி அறிவினைப் பெறும் வகையில் எமது புத்தி இருக்க வேண்டும் என்பது அவசியம். 
இந்த மேதா சக்தி இல்லாமல் போவதால் தான் மனிதன் துன்பம் தரும் செயல்களைச் செய்து துன்பமடைகிறான். 
அறிவினை சேகரித்து மனதில் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் மேதா சக்தி எனப்படுகிறது. 
காயத்ரி மந்திரத்தில் தீமஹி இல் வரும் தீ என்பது புத்தி என்று பொருள் கொள்ளப்பட்டாலும் அது உண்மையில் புத்தியின் முடிவெடுக்கும் ஆற்றலைக் (deciding factor of knowledge) குறிப்பிடுகிறது. 
இப்படியான மேதா சக்தியைப் பெறுவதற்கு ஆதிகாலத்தில் வேத மந்திரங்களும், மந்திர உட்சாடானங்களும் பயன்பட்டது. 
பின்னர் இந்த ஆற்றலை தரும் தாவர வர்க்கங்களை, மூலிகைகளை பக்குவம் செய்து உண்ணும் மருத்துவ முறை உருவாகியது. 
இப்படியான மூலிகைகள் மேதா மூலிகைகள் என்றும் மேதா சக்தியைத் தூண்டும் மருந்துகள் மேதா இரசாயனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 
இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.... 
அறிய வேண்டிய ஆர்வம் உள்ளவர்கள் கீழே உங்கள் விருப்பத்தைப் பதியுங்கள்!

தலைப்பு இல்லை

மலையகத்தின் முக்கியமான குளவி/தேனிப் பாதிப்பு பற்றி தனது அவதானங்களை தம்பி Thilojan VM பதிவிட்டுள்ளார். 

பொதுவாக தேனி கொட்டி இறப்பது என்பதற்குரிய நிபந்தனைகளைப் பற்றிய அறிவியல் காரணத்தை இத்துடன் சேர்த்துப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். 

ஒரு தேனியின் விஷம் எப்போது மரணத்தை ஏற்படுத்தும் என்றால் மனிதனின் ஒவ்வொரு கிலோ கிராம் நிறையிற்கு 2.8 மில்லி கிராம் தேனிக் கொடுக்கின் விஷம் ஏறியிருக்கும் சந்தர்ப்பத்தில். 

ஒரு மனிதனின் நிறை 80 கிலோ என்றால் அவன் தேனி கொட்டிச் சாவதற்கு 80 x 2.8 = 224 மில்லி கிராம் தேனி விஷம் அவனது உடலில் ஏறினால் அவன் இறப்பான். 

சராசரியாக ஒரு தேனியின் கொடுக்கில் இருக்கும் விஷம் 0.059 மில்லி கிராம், 

ஆகவே 80 கிலோ உள்ள ஒருவன் தேனி கொட்டி இறக்க வேண்டுமானால் அவனைக் கொட்ட வேண்டிய தேனிக்களின் எண்ணிக்கை 224/0.059 = 3796 தேனிக்கள், 

ஒரு தேன் அடையில் சராசரியாக இருக்கும் தேனிக்களின் அளவு 75000

ஆகவே ஒரு தேன் அடை கொல்லக் கூடிய 80 கிலோ நிறை உடைய மனிதர்களின் எண்ணிக்கை 19. 

மேலும் தேனிகள் சுவாரசியமான நடத்தை உடையவை. தனது பின்கொடுக்கை உடலில் செலுத்தி apitoxin என்ற விஷத்தை செலுத்தும்  இது, உடலில் கொடுக்கினை செலுத்தி விட்டு உடைத்துக் கொள்ளும். இது 10 நிமிடங்களுக்கு விஷத்தை செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. அனேகமான தேனிக்கள் (தேன் சேர்ப்பவை) தற்கொலைப் படைதான், கொடுக்கை எவ்வளவு ஆழமாக உடலில் செலுத்திவிடுவதில் உத்வேகமாக இருந்து அவற்றை வெளியே எடுக்கும். அவை உடையும்போது இறந்து விடும்! சிலது மென்மையான தோலுள்ளவர்களில் பிழைத்துக்கொள்ளும். அவற்றின் கொடுக்கின் அமைப்பு உடலிற்குள் நீண்ட நேரம் இருந்து விஷத்தைக் கக்கும்படி அமைந்துள்ளது. தேன் சேர்க்கும் honey bee க்களின் நடத்தை!

ஆகவே தோட்டங்களில் தேனிக்களை முகாமைத்துவம் செய்வது கவனமாகக் கையாளப்பட வேண்டிய அதிமுக்கிய பிரச்சனை! 

இதைவிட குளவிகள் ஆபத்தானவை! 


சூரியக்கிரகண அனுஷ்டானம்

வரும் ஞாயிற்றுக்கிழமை சூரியக்கிரகணம். சூரியக்கிரகணம், சந்திரக்கிரகணம் சார்ந்து பலவித மாய எண்ணங்கள் கலாச்சார ரீதியாக இருக்கிறது. 

இதற்குரிய சரியான விளக்கம் சித்த - தாந்திரீக மரபில் தரப்பட்டுள்ளது. 

எமது உடல் ஆக்கப்பட்டிருப்பது சூரிய, சந்திர, அக்னி கலைகளால், "அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு" என்ற கோட்பாட்டின் படி அண்டத்தில் சூரியன், சந்திரன், பூமி (அக்னிகுழம்புதானே!) ஆகிய மூன்றின் இயக்கம்தான் எமது பிராணனின் இயக்கம் என்ற தத்துவம் பெறப்பட்டது. 

இந்த மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும் போது அந்த நேரம் ஒருவித சமநிலையைத் தரும் என்றும் அந்த நேரத்தை சரியாக மனதை ஒன்றினால் உயர் உணர்வை (Higher consciousness) அடையலாம் என்பதே சூரியக் கிரகண மந்திர சாதனையின் அடிப்படை. 

சாதரண நாட்களில் சூரியனும், சந்திரனும், பூமியும் வெவ்வேறு கோணத்தில் நிற்கும் போது நாம் எமக்குள் இவற்றை (சூரிய, சந்திர, அக்னி கலைகளை) ஒழுங்குபடுத்த எமது மந்திர சாதனையால் முயற்சிக்கிறோம். இதில் வெற்றி கிடைப்பதற்கு அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் கிரகண நாட்களில் பிரபஞ்சம் இந்த ஒழுங்கிற்குள் வருவதால் சிறிய முயற்சியிலேயே இதை அடைந்து விடலாம். ஆகவேதான் சூரியக் கிரகண நாளில் மந்திர சாதனை செய்தால் 10000 மடங்கு பலன் என்று கூறினார்கள்.


Thursday, June 18, 2020

தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"

அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.

ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்!


கூஷ்மாண்டம் - நீற்றுப்பூசணி

இது தேவ அமுதாகப் படைக்கப்படுவது. ஈஸ்வர சம்ஹிதையின் படி மகாவிஷ்ணுவிற்கு கூஷ்மாண்ட நைவேத்தியம் செய்யும் முறை; 

நன்றாக கரையும்படி அவித்த கூஷ்மாண்டத்திற்கு நிறையப் பசு நெய், கருமிளகுப் பொடி, சீரகப்பொடி சேர்த்து நன்றாக கரண்டியால் கிண்டி நெய் மணக்க படைக்க வேண்டும் என்று கூஷ்மாண்ட அமுது கூறப்பட்டுள்ளது. 

இது ஆயுர்வேதத்தில் மேதா இரசாயன வகைப் பொருள். மேதை என்றால் அறிவாளி என்று பொருள், புத்தியைத் தூண்டும் பதார்த்தம் இந்தக் கூஷ்மாண்டம். இதை அறிவியலில் Nootropic herbs (improve cognitive function, particularly executive functions, memory, creativity, or motivation, in healthy individuals) என்று சொல்வார்கள். கூஷ்மாண்டத்தின் Nootropic functionality பற்றி அனேக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. 

சித்தத்தில் எழும் விருத்திகளைக் குறைப்பதில் இந்த கூஷ்மாண்டம் நல்ல பலனைத் தரும். இது Anxiety Disorder களிற்குரிய மருந்தாக கூஷ்மாண்ட இரசயானம் ஆயுர் வேதத்தில் பயன்படுகிறது.

இது தியானம் செய்பவர்கள் தமது மனச் சலனத்தினைக் குறைப்பதற்குரிய உணவுப் பொருளாக சரியாக பக்குவப்படுத்தி உண்ண முடியும்!


தலைப்பு இல்லை

அட கடவுளே! பூசணி சமைத்து படம்போட்டால் மூன்று வருடத்திற்கு முன்னர் மாங்காய் சமைத்து படம் போட்டிருக்கிறாய் மடையா என்கிறது பேஸ்புக்!

மார்க் சுக்கப்பர் நான் சமையல் செய்வதை கவனமாக கவனிக்கிறான்! 

    


தலைப்பு இல்லை

நேற்றுக் காலை 03:30 இற்கு எழுந்து எமது கையால் சக்கரைப் பூசணிச் சமையல்! பின்னர் பண்ணைக்கு விஜயம்; கறியின் சுவை பற்றி மூவர் Review தருவார்கள்! {Nishānthan Ganeshan Thava Sajitharan & Jenojan Kanthasamy}

பூசணியை சுவையாகச் சமைப்பதில் நுட்பம் இருக்கிறது! அது சமையல் இரகசியம்  அம்மாவுடன் போட்டி போடுவதற்காக இன்னும் அதை தனிப்பட்ட இரகசியமாகவே வைத்திருக்கிறேன். 

பூசணி தாவரங்களில் மிகப்பெரிய காயைத் தரும் தாவரம். இதனால் காய்களில் உயிர் சக்தி (பிராணன்) நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால் சடங்குகளில் உயிர் பலிக்குப் பதிலாக பாவிக்கப்படுகிறது. 

சித்தாயுர் வேதத்தில் பூசணியின் குணத்தை அதன் சுவை, வீரியம், விபாகம் என்ற அடிப்படையில் முத்தோஷங்களிலும், எப்படி தாதுக்களிலும் வேலை செய்யும் என்ற விளக்கத்தை கீழே தருகிறோம். 

இது இயற்கை விவசாயத்தில் விளைந்த சக்கரைப் பூசணி 

பூசணிக்காயின் குணம் பற்றி பதார்த்த குணம் கூறுவது! 

இயற்கை விவசாயத்தில் விளைந்த பூசணி என்றால் நீங்கள் சித்த ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த காலத்தில் உரமும், பீடை கொல்லிகளும் தெளிக்கவில்லை! 


பெரும்பூசனிக் காய்க்குப் பித்தமோடு காய்ச்ச

லருஞ்சார நீர்க்கட் டருமே - மருந்திடுதற்

பித்தசுர மஸ்திசுரம் பேற்வறட்சி மேகமும் போம்

மெத்த வனிலமூறும் விள்


அனலழலை நீக்கு மதிபித்தம் போக்குங்

கனலெனவே வன்பசியைக் காட்டும் - புனலாகு

மிக்கவைய முண்டாக்கு மென் கொடியே யெப்போதுஞ்ச்

சக்கரப் பறங்கிக்காய் தான்

மென் கொடியாளே! 

(எமது அனேக சாஸ்திரங்கள், சிவனார் தனது மனைவியான பார்வதிக்கு உபதேசித்ததாகவே எழுதப்பட்டுள்ளது}


பூசணிக்காய் பித்தத்தைத் தணிக்கும், உட்காய்ச்சல், உடல் சூடு இருந்தால், மூத்திர எரிச்சல் இருந்தால் நீக்கும்.  உடலில் விஷங்கள் இருந்தால் அவற்றை நீக்கும். பித்தம் அதிகரிப்பதால் வரும் காய்ச்சல், எலும்பு தாது வலுவிழப்பதால் வரும் காய்ச்சல், உடல் வரட்சி என்பவை நீங்கும்! 

உடல் சூட்டைக் குறைக்க பூசணி நல்ல மரக்கறி! 

அதைச் சுவையாக சமைத்து - பக்குவமாக்கி உண்பது நோய் தீரும் மருந்து! 

இறுதியாக அறிவியல் பிரியர்களுக்கு, 

health benefits of pumpkin என்று Google செய்யுங்கள்; தேவையான தகவல் கிடைக்கும்.


Wednesday, June 17, 2020

தலைப்பு இல்லை

இன்று யானை - மனித முரண்பாடு, விவசாயத்தில் யானைப்பாதிப்பு, அவற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக சிறு கள ஆய்வு! 

கலாநிதி. விஜயமோகன், கலாநிதி. நிசாந்தன், விவசாய ஆலோசகர். திரு. ரஜிந்தன், பண்ணை மேற்பார்வையாளர். திரு. ஜெனோஜன், வனவிலங்கு இலாக்கா உதவி இயக்குனர். திரு எதிரிசிங்க, GTZ நிறுவனத்தின் குழு ஆகியவர்களுடன்....

யானைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம், அவற்றின் Behavioral pattern இனை ஆராய்ந்து அறிவதற்குரிய சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.


Tuesday, June 16, 2020

ஆச்சார்யன் + பட்டாரகர் + தேசிகர் = குரு

இன்று காண்பவர்கள் எல்லாரையும், பேஸ்புக்கில் எழுதுபவர்கள் எல்லாரும், அறிவுரை கூறுபவர்கள் எல்லோரையும் "குரு" என்று விளிப்பது ஒரு fashion!

இது முற்காலத்தில் எல்லோருக்கும் கடவுளின் பெயரான சுப்பிரமணியன், பரமசிவன் என்று பெயர் வைப்பது அந்த உயர்ந்த தத்துவத்தை நாளாந்தம் நினைவில் வைத்திருக்க ஏற்படுத்திய ஏற்பாடு என்ற நிலை போய் கொலையும், களவும் செய்யும் சுப்பிரமணியனும், வில்லன் பரமசிவமும் அதன் தத்துவங்களாக மாறிப் போனது போன்ற முட்டாள் தனம் இது. 

என்.டி ராமராவ் கிருஷ்ணன் வேடம் போட்டார் என்பது மறந்து போய் என். டி ராமராவ் தான் கிருஷ்ணன் என்று நம்பும் மடையர் கூட்டம் போன்றது. 

குரு என்ற தத்துவம் தந்திர சாஸ்திரத்தில் எப்படிப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை உபாச சிரேஸ்டர் அருட்சக்தி நாகராஜ ஐயா அவர்கள் தனது ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் என்ற நூலில் விளக்கியுள்ளார். 

ஆச்சார்யன் = யார் தனது நடத்தையாலும், பண்பாலும், செயலாலும் வழிகாட்டுகிறாரோ அவர் ஆச்சார்யன். 

பட்டாரகர் = யார் உலக பந்தங்களில் இருந்து எம்மை விடுவித்து, எம்மைத் துன்பங்களிலிருந்து ரட்சித்து கவருபவர். 

தேசிகர் = சீடனின் உபாசனா தெய்வத்தின் ரூபத்தில் கருணையைப் பொழிந்து வணங்கத்தக்க தகுதியுள்ளவர். 

மேற்குறித்த மூன்று வடிவங்களின் சேர்கையே குரு என்ற தத்துவம். யார் ஒருவரிடம் எமது ஆணவம், அகங்காரம் கரைந்து பரிபூரண சரணாகதி ஏற்படுகிறதோ, ஆன்ம முன்னேற்றத்தைத் தருகிறாரோ, அதனூடாக தன்னை உணர வைத்து பிரபஞ்ச உணர்வினை அடையச் செய்விக்கிறாரோ அவரே குரு எனப்படுவார். 

இப்படியில்லாமல் தகவல் களஞ்சியங்கள், அறிவாளிகள் எல்லோரையும் குரு என்று அழைப்பது அதன் உண்மையான பொருளிற்கு மாறானது. எம்மில் குழப்பத்தை தந்து உண்மை ஆன்ம முன்னேற்றத்தை தடுத்து விடும்.


Sunday, June 14, 2020

வாழ்க்கையை, எமது இருப்பை எது தீர்மானிக்கிறது?

நாம் எதற்காக வாழ வேண்டும் என்ற எமது எண்ணம்!
இதை ஜப்பானியர்கள் Ikigai (生き甲斐) இக்கி காய் என்று கூறுகிறார்கள். 
இதை எமது கலாச்சாரம் வாழ்விற்கான நோக்கம் அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுகிறது. 
அறம் எமது இருப்பிற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். 
பொருள் நாம் வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள்!
இன்பம் வாழும் காலத்தில் நாமும், எம்மைச் சூழ உள்ளவர்களும் இந்த உலகமும் இன்பமாக வாழ செய்ய வேண்டிய செயல்கள். 
வீடு எங்கிருந்து வந்தோம், எது எமது உண்மையான வீடு என்பதை அறிந்து அங்கு செல்வதற்குரிய வழியை வாழும் காலத்தில் ஒழுங்காகச் செய்து வைத்து விட்டு இறுதியாக சந்தோஷமாக மன அமைதியுடன் உடலை விடுதல். 
இதைச் சொல்லிக்கொடுப்பதை விட்டு விட்டு மருத்துவர் ஆவது தான் எமது இலக்கு என்று முட்டாள் தனமாக பள்ளிக் கூடத்தில் உசுப்பேத்தி விட்டால், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று முதாலாண்டில் நான்கு பாடம் சித்தியடையாவிட்டால் வாழ்க்கை இருண்டு சாகவேண்டும் என்று எண்ணம் வந்துவிடும். 
அல்லது மருத்துவனாகிவிட்டோம் என்ற ஆணவம் வந்து விடும்; இரண்டும் ஆபத்தானது. 
ஏன் மருத்துவன் ஆகவேண்டும் என்ற எண்ணம் தெளிவாக்கப்பட வேண்டும்; 
மருத்துவனாவது என்பது என்னையும், என்னைச் சூழ உள்ளவனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, அது பெருமையல்ல, கடமை என்ற எண்ண எண்ணத்தை, அறத்தை விதைக்காமல் விடும் போதே எமது இருப்பிற்கான தேவையைக் குறுக்கி கொள்கிறோம்.
அதிலிருந்து வரும் பொருள் எனது வாழ்க்கையை இன்பமாக வாழப்போதுமானது மட்டுமே எனும் போதும் வாழ்க்கைக்கான இருப்பினை குறைத்துக்கொள்கிறோம். 
இறுதியாக வாழ்க்கை என்பது எல்லையற்ற ஒன்றை அடைவதற்கு என்ற எண்ணம் இல்லாதபோது வரும் சிறு சிறு துன்பங்கள் எல்லாம் நாம் எதற்காக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். 
ஒருவன் தான் எதற்காக வாழ்கிறோம் என்ற தனது வாழ்க்கையின் பெறுமதியை நிர்ணயிக்காமல் விடும்போது தனது வாழ்க்கைக்கான இருப்பினைத் தொலைத்து விடுகிறான்.

தற்கொலை

திடீரென முக நூல் பிரபலங்கள் சிலர் தற்கொலை பற்றி பதிவிடுகிறார்கள்; என்ன காரணம் என்று உரையாடினால் அவர்களுடைய நண்பன் ஒருவன் அதுவும் மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற சோகமான செய்தி கிடைத்தது. 

தற்கொலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதற்கு நவீன அறிவியல் உளவியல் பிரச்சனை என்று பல கதைகள் சொல்லும். 

யோக மனவியல் தனது ஆங்காரம் சார்ந்த பிரச்சனை என்று விளக்கம் சொல்லும். ஆங்காரம் என்றால் மனம் உருவாகுவதற்குரிய மையம் (center) என்று பொருள். 

உதாரணமாக நான் மருத்துவன் என்ற ஆங்காரத்தை - மையத்தை உருவாக்கினால் அந்த மையம் சார்ந்து எனது எண்ணங்கள், ஆழ்மனம், புத்தி என்பன உருவாகத் தொடங்கும். இப்படி உருவாகத் தொடங்கியதை மனம் இறுகப் பற்றிக்கொள்ள களிம்பாக ஆணவம் தொற்றிக் கொள்ளும். பிறகு இந்தக் களிம்பினைக் காப்பாற்ற யதார்த்தத்தை மீறி செயல்பட ஆரம்பிக்கும் போது அது வெற்றி பெறவில்லை என்றவுடன் துக்கம் வரும்.

இது social status இனை முதன்மையாகக் கொண்ட சமூகங்களில் வீட்டிற்கொரு வைத்தியர், பொறியியலாளர் உருவாக வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கும் சமூகங்களில் காணலாம். இந்த அழுத்தத்தால் உருவாக்கப்படும் பிம்பத்தை காப்பாற்ற முடியாத போது வேறு என்ன செய்வது என்று தெரியாமல் மனம் ஸ்தம்பித்துப்போய் தற்கொலையாக முடியலாம். 

அடிப்படையில் சந்தோஷமாக வாழ்வது என்பது தான் வாழ்வின் இலக்கு என்று சொல்லிக் கொடுக்காமல், முயற்சிப்பதில் தோல்வி அடைவது இயல்பானது என்பதை சொல்லிக் கொடுக்காமல் போட்டி போடுவதற்கும், தற்பெருமை பேசுவதை, பணச் செருக்கை தம்பட்டம் அடிப்பதை, சாதிச் செருக்கை ஊட்டி வளர்க்கும் சமூகங்களில் இப்படியான ஆணவங்கள் உடைபடும் சந்தர்ப்பங்களில் கொலையும், தற்கொலையும் நடைபெறுவதை அவதானிக்கலாம். 

தாவோயிசத்தின் மூன்று நியதிகளில் ஒன்று வெற்றியின் அபாயம்; அதீத வெற்றி என்பது உச்சி; உச்சிக்குச் சென்றால் விழாமல் இருக்க முடியாது என்பது தான் நியதி. 

இன்று இளைஞர்களிற்கு தேவை அக வாழ்க்கை! மனம் எப்படி இயங்குகிறது? எது உண்மையான வாழ்க்கையின் இலக்கு? இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்ற தெளிவு?

சமூகம் திணித்த வீண் பிம்பங்களுக்காக விலைமதிப்பற்ற உயிரை வீணாக்குவதல்ல!


Saturday, June 13, 2020

தலைப்பு இல்லை

நான் நூல்களைப் பற்றி நிறையப் பதிவு போடுவதால் நான் நூலறிவு நிரம்பப் பெற்றவன் என்ற நினைப்பில் என்னிடம் அந்தப் புத்தகம் இருக்கிறதா, இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்;

நான் அடிப்படையில் பிரயோக அறிவை எல்லாத் துறைகளிலும் தேடுபவன்; அதைத் துரிதமாகப் பெற ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள அறிவைப் படித்தறிந்து கொள்ள வேண்டும், அல்லது நேரம் வீணாகிவிடும் என்பதற்காக நூல்களை துணை நாடுகிறேன். 

வாழ்க்கையினை செம்மைப்படுத்தாத, பிரச்சனைகளைத் தீர்க்க உதவாத எதுவும் தேவையற்ற அறிவு தான்! அவை வீணான குப்பைகள்! 

மனதிற்கு வேலை கொடுக்காவிட்டால் அது ஒரு குரங்காக அல்லது பேயாக மாறி விட்டால் ஆபத்து என்பதால் அதற்கு ஒரு நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி ஒழுங்கிற்குள் வைக்க வேண்டும் என்ற பயிற்சிக்காக நூல் படிப்பதை முதல் தெரிவாக வைத்திருக்கிறேன். 

இதுதவிர இந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது என்று உரையாடும் வகை அறிவாளி நான் அல்ல! 

எனது தனிப்பட்ட அனுபவத்தினை அறிவாக மாற்றி அழகு சேர்க்கும், உறுதிபடுத்தும் அறிவினைப் பெறுவதே நான் நூற்கள் படிப்பதன் நோக்கம். 

படிக்கும் விஷயங்களில் எனது புரிதலை அனைவருக்குமாக பகிர்ந்து கொள்கிறேன். 

ஆகவே என்னை ஒரு நூலகராக எண்ணிக் கொண்டு அந்த நூல் இருக்கிறதா? இந்த நூல் இருக்கிறதா என்று கேட்பதை நீங்கள் தாராளமாகக் கேட்கலாம், தவறில்லை, ஆனால் பதிலளிப்பது எனது சுதந்திரம் என்பதை அறிந்திருப்பது அவசியம் என்பதற்கே இந்தப்பதிவு!


சமையல் என்றால் என்ன?

சமப்படுத்தும் இயல் சமையல்; அதாவது சமப்படுத்தும் கலை சமையல்; நாம் உணவு சமைக்கிறோம் என்று கூறுகிறோம். உணவில் போடும் பதார்த்தங்களை அதன் குணங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்தி உண்ண வேண்டும் என்ற அறிவு தான் சமையல். 

இன்று சமையற் கலை என்பது வாய்க்கு ருசியாக உண்பது என்பது; கண்கள் காட்டும் விளம்பரம் மனதைத் தூண்ட மனம் அதுவே நல்ல உணவு என்று நம்பும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவை நல்ல உணவு என்று எண்ணுகிறோம். 

ஆனால் எமது உடல் ஆக்கப்பட்டுள்ள பொருட்களும், அந்த உடலுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய பொருட்களும் நாம் வாழும் இடம், காலநிலை, எமது  உடலின் ஆரோக்கியம் அறிந்து அதற்கு சமப்பட உண்ண வேண்டும் என்பதே சமையற் கலை. 

இதற்கு முற்காலத்தில் தினசரி உணவை சமைத்து புசிக்கும் முறையை நான்கு விதமாகக் கூறியுள்ளார்கள். 

சித்த பாகம் - யோகிகளுக்கும் சாதகர்களுக்குமுரிய தமது யோக சாதனை கெடாத உணவு முறை

வீமபாகம் - பஞ்ச பாண்டவர்களில் வீமன் இயற்றிய பொதுவான சைவ, அசைவ உணவு முறைகள்

நளபாகம் - பொதுவான சைவ அசைவ உணவு முறைகள்

தேவபாகம் - தெய்வங்களுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகள்

இவற்றில் குருநாதர் கூறிய ஒரு சித்த பாக உணவு உதாரணத்தைக் கூறி இந்தக் கட்டுரையை முடிப்போம் . 

பொதுவாக வெங்காயம் யோக சாதகர்களுக்கு ஒவ்வாத தாமஸ-ராஜச உணவு; தியானம் செய்யும் அனேகர் வெங்காயம் உண்ணக் கூடாது என்று கூறுவதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் இந்த தாமஸத்தை முறிக்கும் ஒரு இரகசியம் சித்த பாகத்தில் இருக்கிறது. அதுவேறொன்றும்  இல்லை - பசுத்தயிர்/மோர்; பசுத்தயிரில் சேர்த்துச் சாப்பிடப்படும் வெங்காயம் தமோ ராஜஸ குணத்தை உண்டு பண்ணாது. பசுத்தயிர் (எருமைத் தயிர் அல்ல!) வெங்காயத்தின் குணத்தை முறிக்கும்! 

இப்படி சித்த பாகம் அறிந்த யோகி தனது இக்கட்டான காலத்தில் பொதுவாகப் புசிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட உணவுகளை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புசித்து அதன் குணத்தால் தனக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக இப்படியான அறிவினை பெற்றிருக்க வேண்டும்.


தலைப்பு இல்லை

எனது அப்பப்பா (தந்தையின் தந்தை) ஒரு சித்த ஆயுள்வேத வைத்தியர். ஆம் இப்போது உள்ளவர்கள் பாகுபடுத்தி நான் சித்த வைத்தியர் நீ ஆயுள்வேத வைத்தியர் என்ற பாகுபாடு எல்லாம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை, அவரைப் பொறுத்தவரை மனிதனைக் குணப்படுத்த, ஆரோக்கியமாக வைத்திருக்கத் தேவையான அறிவினை பெற வேண்டும் என்ற அடிப்படையில் சரக சம்ஹிதையில் உள்ளவற்றையும், அகத்தியர் வைத்திய காவியத்தையும் குரு முகமாகப் படித்திருந்தார். நாடி நிதானத்திலும், மரணக் குறியிலும் வல்லவர்; வேதாரண்யம் சோமஸ்கந்த குருக்களிடம் முறையாக குரு குலவாசம் செய்து வைத்தியம் பயின்றவர்; சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை ஆயுர்வேத சட்டம் வந்த போது மருத்துவ சபையின் பரீட்சை எழுதி சித்தி பெற்ற வைத்தியர். 

அவரிடமிருந்த யோக, வைத்திய நூற்களில் போர்ச் சூழல் அழித்தது போக எனது கையில் வந்து சேர்ந்தவை மிகச்சிலது. 

அவற்றில் இரண்டு 

போகர் சப்த காண்டத்தின் பழைய பதிப்பு

பதார்த்த குண சிந்தாமணி


Wednesday, June 10, 2020

வார்த்தைகளும் உணர்ச்சிகளும்

வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை அறிய முடியாத மனிதர்களுடன் வார்த்தைகளால் உரையாடுவது மிகக் கடினமானது! இறுதியில் தர்க்கத்தில் போய் முடிந்து பகையாகும்! 

ஒரே சொல் பலருக்கு அவரவர் அனுபவத்திற் கேற்ப வெவ்வேறு அக அனுபவங்களை ஏற்படுத்தி பலவித அர்த்தங்களைக் கற்பித்திருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் சரி என்று நினைத்துப் பிரயோகிக்கும் வார்த்தை அவர்களுக்குப் பிழையாகத் தெரியும்! 

எம்மை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரியாமல் அவர்களுக்கு நாம் உதவுகிறோம்; உபதேசிக்கிறோம்; வழிகாட்டுகிறோம்; நன்மை செய்கிறோம் என்று ஏதாவது செய்வதும் தவறாக முடியும். அவரவர் தம்மைச் சிறப்பாக தாமே நினைக்கும் போது நாம் அவர்களுக்கு உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்று நினைப்பது அவர்களை எரிச்சலூட்டும், சங்கடத்திற்குள்ளாக்கும். 

மனிதன் வார்த்தைகளால் தனது உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளவே தன்னைப் பழக்கப்படுத்தியிருக்கிறான். 

கொடுப்பதை வாங்கிக் கொள்ளவும், கூறுவதை ஏற்றுக் கொள்வதுமான மனநிலை இருக்கும் போது மாத்திரமே நாம் உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்பது ஆக்கத்தை உண்டு பண்ணும். 

அப்படி இல்லாவிட்டால் கல்லின் மேல் தெளிக்கும் நீர்ப் போல் இறுகிய மனத்துடன் உரையாடும் போது எண்ணங்கள் தெறித்து விழும்! 

ஆனால் மனிதனாகப் பிறந்த யாரும் பூரணமானவர்கள் இல்லை! அனைவரும் குறைகளுடன் பிறந்து தமது குறைகளைச் செம்மைப்படுத்தவே இந்த வாழ்வு என்ற புரிதலும் மற்றவர்கள் எம்மைச் செம்மைப்படுத்த உதவுகிறார்கள் என்ற புரிந்துணர்வும் எமது வாழ்வை சரியான கோணத்தில் பார்க்க உதவி செய்யும்!


தலைப்பு இல்லை·

Balkumar Marthi had tagged me to post covers of seven books, one a day each for a week. No reviews, just the cover page. Each day, I will ask a friend of mine to do the same. Today, I nominate Imith Udara to carry the fun forward  

Day#01


Friday, June 05, 2020

இலங்கையும் யானைகளும்

இலங்கை, இந்திய கலாச்சாரத்தில் யானை தெய்வீகத்தின் அடையாளமாகவும், மன்னர் காலத்தில் பலத்தின் அளவீடாகவும் காணப்படுகிறது.

இலங்கை யானைகள் Elephas maximus maximus எனப்படும் இலங்கைக்கே தனித்துவமான உப இனமாகும். 

உலகில் வாழும் யானைகளில் இலங்கை 04 வது முக்கியத்துவமான இடமாக இருக்கிறது. மொத்தம் 2000 - 3000 காட்டு யானைகள் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. 250 - 300 வளர்ப்பு யானை இருப்பதாக தரவுகள் கூறுகிறது. இதை விட அதிகமாக இருக்கலாம் என்பது அனுமானம், 

ஒரு யானைக்கு 01 சதுர கிலோ மீற்றர் என்றால் மொத்த காட்டு யானைகளுக்கு 3000 சதுர கிலோமீற்றர் பரப்பு இவற்றிற்கு தேவைப்படுகிறது. இது இலங்கையின் மொத்த வனத்தின் 15% பரப்பு தேவைப்படுகிறது. 

ஆனால் இந்த மொத்த வனப் பரப்பு என்பது யானையின் நடமாட்டத்தை உள்ளடக் ககூடிய வனப்பகுதி இல்லை. இது சிறு சிறு தீவுக் காடுகளினதும் கணக்கு. யால, உடவளவை, லுணுகம்வெகர, மின்னேரியா, வில்பத்து, வன்னிக் காடுகள் என்ற ஆறு வனப் பரப்புகளில் காணப்படுகிறது. இவற்றில் வசிக்கும் யானைக் கூட்டத்தின் அளவு அதிகமாகவும் வனத்தின் அளவு மிகக் குறைவாகவும் இருப்பதால் யானைகள் ஊரினைக் கடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 

ஆசியாவில் யானைகள் அடர்த்தியான குடித்தொகை கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. 

ஆகவே யானை - மனிதர் முரண்பாடும் இலங்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.


Thursday, June 04, 2020

யானைகளும் மனிதர்களும்

சூழலியல் விஞ்ஞானத்தில் மிருக நடத்தையியல் பயின்றவன் என்ற அளவிலும், இலங்கையின் வடபகுதி யானைகள் பற்றிய ஆய்வில் பங்கு பற்றியவன் என்ற வகையில் யானைகள் பற்றி தனித்த ஆர்வம் உடையவன். 

எனது விலங்கு நடத்தையியல் ஆசிரியர்களான காலஞ் 

சென்ற யானை பற்றிய ஆய்வாளர் பேராசிரியர் சந்தியாப்பிள்ளை மற்றும் கலாநிதி விஜயமோகன் அவர்களுடன் யானை பற்றிய களஆய்வுகளையும் எமது பண்டைய கஜசாஸ்திரம் பற்றிய ஆய்வுகள் மேற் கொண்டவன் என்ற அளவில் யானைகள் பற்றி சில தகவகளைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

யானை மிகவும் புத்திசாலியான முலையூட்டி; அதன் மூளை விருத்தி மனிதன், குரங்கு, டொல்பின் என்ற வரிசையில் புத்திக் கூர்மையில் மனிதனுக்கு நெருக்கமானது! கற்றல் ஆற்றல் உள்ளது; ஆகவே தனது வழித் தடங்கள், உணவு உள்ள இடங்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும். இது தான் மனிதனுக்குப் பெரும் சவாலான விஷயம். மனிதனைப் போலவே தானும் கற்று சிந்தித்து செயலாற்றக் கூடியது. 

பூமியில்  இருக்கும் விலங்குகளில் மிகப் பெரியது; சாதாரணமாக கூட்டமாக உள்ள யானைகளில் Home rage எனப்படும் அதன் வதிவிட எல்லை 35 - 45 சதுர கிலோமீற்றர். ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளது. தனியன்களது வதிவிட எல்லை 50 சதுர கிலோமீற்றர். 

ஒரு யானை காட்டில் வசிப்பதற்கு குறைந்தது 01 சதுர கிலோமீற்றர் எல்லை தேவைப்படும். ஒரு இடத்தில் 2000 யானைகள் இருந்தால் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பு நிலம் யானைகளுக்குத் தேவைப்படும். 

இந்த அடிப்படையில் இன்று நடக்கும் பிரச்சனை அவற்றின் வாழ்விடங்களான காடுகள் குறைய அவை உணவிற்காக நாட்டிற்குள் படையெடுக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை கூடக் கூட பிரச்சனை அதிகமாகும். 

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களில் குறிப்பாக வன்னியில் குட்டி யானை கொல்லுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  உள்ளக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

படத்தில் இருப்பவர் எனது முன்னைய பணிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உடவளவை நீர்த்தேக்கத்தில் சந்திக்கும் குட்டி யானை நண்பர்!


தலைப்பு இல்லை

நாளை உலக சூழல் தினத்திற்காக திரையில் தோன்றுகிறார்,  சூழலியலாளர் ஸ்ரீ ஸக்தி சுமனன்! 

சக்தி தொலைக்காட்சி Good morning Sri Lanka 0700 - 0830 AM. 

காத்திருங்கள்! 

     


Wednesday, June 03, 2020

தலைப்பு இல்லை

விடுபட்டுப் போன நூல் அறிமுகம்! மீண்டும் தொடங்குவோம்! 

ஸ்ரீ தந்திரலோக 

தந்திரம் என்றால் கபடத்தனம் என்று பொது வழக்கில் கூறப்பட்டாலும் உண்மையில் தந்திரம் என்றால் விரிவடைதல் என்று பொருள். 

புலன்களால் சிறைபட்டிருக்கும் மனம் விரிவடையும் உத்தி தந்திரம்! 

அறியாமையால் சிறைபட்டிருக்கும் புத்தி விரிவடைதல் தந்திரம்!

எமது சுயம் எல்லையற்ற ஆற்றலை உணர்வதற்கு தன்னை விரித்துக் கொள்ளுதல் ஸ்வத்தந்ரேயம் இதுவே சிவம் என்கிறார் அபிநவ குப்தர்!

பாரதத்தில் உள்ள அனைத்து தந்திர மார்க்கங்களையும் தொகுத்து தனது magnum opus ஆக அபிநவகுப்தர் தந்த நூல் தான் ஸ்ரீ தந்திரலோக. 

37 அத்தியாயங்களில் அனைத்தையும் தொகுத்து விளக்கியுள்ள இந்த நூலிற்காக உரையை நண்பர் Giriratna Mishra ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்! முழுமையாக முடியவில்லை.

இதுவரை 08/37 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளது! 

குறிப்பு: இந்த நூற்களை வாங்கிப் படிப்பதால் ஒருவன் தந்திர மார்க்கத்தில் செல்ல முடியாது; குரு முகமாய் அறிய வேண்டியவை அனேகம்! எனினும் அறியவேண்டிய ஆவல் உள்ளவர்களுக்கான பதிவு!


தலைப்பு இல்லை

நீயே நான் - ஆத்மன்!

மனமே எனது சக்தி

பிராணனே எனது பணியாட்கள்

உடலே உன் கோயில்

எனது புலன் அனுபவங்கள் அனைத்தும் உனது வழிபாடு!

எனது உறக்கம் உனது சமாதி

நான் நடத்தல் உன்னை பிரதட்சிக்கிறேன்

நான் பேசும் சொற்கள் எல்லாம் உன்னைப் புகழும் கவிகள்!

நான் செய்யும் செயல்கள் எல்லாம் உன்னை வணங்குவதே! 

ஹே கருணாமூர்த்தி! 

ஸ்ரீ ஸக்தி சுமனன் கவிதைகள்

03/06/2020


தலைப்பு இல்லை

எனது சமையலுக்கு மகள் மனமிக மகிழ்ந்து உவந்த பாராட்டுப்பத்திரம்.

சமையல் ஒரு நுணுக்கமான கலை, சுவையாகச் சமைக்க மனதில் சுவையை உருவாக்கி உணர வேண்டும், பின்னர் மனம் சொல்லும்படி பொருட்களை சேர்த்து அக்னியில் பதப்படுத்தினால் சுவையான உணவு தயார்! அந்த உணவு நாம் நினைத்த சுவையில் வந்திருந்தால் வெற்றி! அந்தச் சுவையை மற்றவர்களும் உணரக் கூடியதாக இருந்தால் பெரும் வெற்றி! 

சமையல் நாவின் வழி மனதிற்கு இன்பம் அளிக்கும் ஒரு அரிய கலை!


Tuesday, June 02, 2020

தலைப்பு இல்லை

ஒரே தத்துவப் பதிவுகளாக போடுகிறேனாம்! சிலரது மனக்குமுறல்கள்! 

எமது இயற்கை விவசாய வெண்டித் தோட்டம்! உரம் போடாமல், மருந்து தெளிக்காமல் உண்டாக்கி அமோக விளைச்சல்! ஆனால் கொரோனா கட்டிப் போட்டதால் விற்கமுடியாமல் முற்ற விட்டு விதை எடுக்க வேண்டியதாயிற்று!


பரதமும் சிவயோகமும்

பரதநாட்டியம் வெறுமனே கண்ணுக்கு இன்பம் தரும் உடல் அசைவு இல்லை! உணர்வைப் பேருணர்வாக்கக்கூடிய வித்தை என்பதை பரதமுனிவரின் பரத சாஸ்திரத்திற்கு அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி என்ற விளக்கவுரை விளக்குகிறது! 
நாட்டியத்தினை எப்படி யோகமாக்கலாம் என்பதை விளக்கியுள்ளார். 
இசை, நடனம், கவிதை, நாடகம் இந்த நான்கும் மனதை துரிதமாக தன்பால் இழுப்பவை. அதனால் மனதின் சலனத்தைக் குறைத்து மந்த நிலையைப் போக்கி உற்சாகத்தை தருபவை. 
இதனாலேயே நல்ல இசை, நடனம், கவிதை, நாடகம் - சினிமா பார்த்தால் மனம் உற்சாகமடைகிறது. இந்த உற்சாகமடைதல் சலனமடையும் மனதை உள்முகமாக திருப்பி உயர் உணர்வு அடைவது எப்படி என்ற இரகசியமே பரத சாஸ்திரம், ஓசை நயம் மிகுந்த கவிதை, இன்னிசை, விறுவிறுப்பான திரைக்கதை உள்ள நாடகம் எல்லாம்! 
இதற்கு இந்தக்கலைகள் உணர்ச்சியைத் தூண்டாமல் மனதை இன்பமடையச் செய்து, உற்சாகமுறச் செய்யக் கூடியவையாகவும் உணர்வை அகமுகமாகத் திருப்பக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. 
இரண்டாவது ஒரு நடனத்தை மெய்மறந்து பார்க்கும் உணர்வு ஆங்காரத்திலிருந்து (ego) விலகி நிற்கும். ஒரு சினிமாப் படத்தைப் பார்க்கும் அந்தக் கதையில் நாமும் ஒருவராக இணைந்திருக்கும் நிலை! ஆகவே நல்ல கலையை இரசிக்கும் போது ஆணவம் அற்ற நிலையை நாம் அனுபவிப்போம்! மூன்றாவது இந்தக் கலைகளை ரசிக்கும் போது நாம் எமது மனக் கண்ணில் உருவகித்து அனுபவிப்போம். இப்படி மனம் உருவகம் செய்வதால் உணர்வு படைப்புத் திறன் பெறுகிறது. இப்படி கற்பனையின் மூலம் அனைத்தையும் மனதிலேயே உருவகிக்கக் கூடிய ஆற்றல் பெறுவதால் அவன் தனது நடத்தையில் வீணான செயல்களைக் கொண்டு வருவதைத் தடுக்கும் படைப்பாற்றலைப் பெறுகிறான். உணர்வை தனது அகவயமாக்கும் ஆற்றலைப் பெறுகிறான். 
இதனாலேயே கலைஞர்கள் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே கலைஞர்களை நாம் கடவுளாகக் கொண்டாடுகிறோம். 
இந்த அடிப்படையில் அபி நவகுப்தர் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் 36 அத்தியாயங்களையும் 36 சைவ தத்துவங்களுடன் ஒப்பிட்டு அபிநவபாரதி என்ற உரை எழுதியிருக்கிறார். பரதசாஸ்திரத்தின் 36 அங்கங்களும் சைவத் தத்துவத்தின் 36 தத்துவ சுத்திகளைக் குறிப்பதை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

தலைப்பு இல்லை

இன்று அபிநவகுப்தரின் ஜெயந்தி! இந்திய தத்துவ ஞானத்தின் சாரம் அபிநவகுப்தர். 

அபிநவகுப்தரின் தந்திரசாரம் முதல் அத்தியாயத்தில் கூறுகிறார். 

அபிநவகுப்தர் சிவம் பூர்ணப்ரதா என்கிறார். பூரண அறிவே சிவம் என்றார். சிவம் ஸர்வதந்திரய என்ற பூரண ஆன்ம சுதந்திரம் உடையது. ஆணவ மலத்தால் இந்த ஆற்றலை மறந்த ஆன்மா தனது சிவத் தன்மையை மறந்து துன்பத்தில் உழல்கின்றது. 
அபிநவகுப்தர் நேரடி சாதனா அனுபவம் இல்லாமல் நூலறிவால் மட்டும் சிவத்தை அறிந்துக் கொள்கிறோம் என்ற ஆணவ மலமுடையவர்களை இரண்டுவித பிரச்சனையை எதிர்க் கொள்வார்கள்  என்று கூறுகிறார்.
முதலாவது அனிச்சஸ்வபாவம்; நிச்சயமாக/தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத நிலமை என்று பொருள் , இரண்டாவது விபரீத நிச்சயம் என்பது முரணாக முடிவெடுக்கும் நிலையைக் குறிக்கும். 
இந்த இரண்டு குணமும் ஒருவனை தனது ஸ்வத்தந்திரய சக்தி என்ற ஆன்ம சுதந்திரத்தை தடுத்து உண்மை இயல்பை அடைவதை தடுக்கும். 
பெரும்பாலும் சைவம் காக்கிறோம், மதம் வளர்க்கிறோம் என்பவர்களில் அனேகர் ஆணவமலத்தின் இந்த இரண்டு பண்புகளால் வீண்விவாதம் செய்துகொண்டு தமது உண்மை இயல்பினை அறியாமல் சாதனையில் முன்னேற முடியாமல் இருப்பார்கள்.

Monday, June 01, 2020

தலைப்பு இல்லை

இன்று காயத்ரி ஜெயந்தி 

தென்னாட்டிலும் பொதுவான சம்பிரதாயப்படி காயத்ரி ஜெயந்தி என்பது ஆவணி அவிட்டம்!

ஆனால் வைகாசி சுக்லபக்ஷ தசமி முடிந்து ஏகாதசி ஆரம்பிக்கும் நேரம் விஸ்வாமித்ர மகரிஷி பூமிக்கு காயத்ரியின் பேருணர்வினை (Super consciousnesses) தனது மந்திர திருஷ்டியால் மந்திரப் பூர்வமான காயத்ரி தேவி பூமிக்கு வந்த நாள், ஆகையால் இந்தத் தினம் காயத்ரி சாதகர்களுக்கு சிறப்பானது. 

சென்ற நூற்றாண்டின் இணையற்ற காயத்ரி சாதகர் {24 வருடங்களில் வருடத்திற்கு 24 லட்ச புரச்சரணங்கள் 24 செய்து முடித்த} யுகரிஷி குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சர்யா இந்த நாளை தனது ஸ்தூல உடலை விட்டு காயத்ரி பேருணர்வில் கலக்க தேர்ந்தெடுத்தார்!

இன்றைய தினத்தில் எமது பிரசுரக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர் (2017) சாதர்களுக்காக வெளியிட்ட ஸ்ரீ காயத்ரி யக்ஞ விதிகள் என்ற சிறு பிரசுரத்தை மின்னூலாக வெளியிடுகிறார்கள். 

ஆர்வமுள்ளவர்கள் இங்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள்: https://imojo.in/blm1tj

விலையென்று எதுவும் இல்லை! நீங்கள் விரும்பினால் பிரசுரப் பணிகளுக்கு விரும்பிய தொகை தரலாம்! தராவிட்டாலும் தரவிறக்கி படிக்கலாம்!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...