குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 31, 2021

தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய 2022 புதுவருட வாழ்த்துக்கள்! 

இந்த ஆண்டு எம்மை மேலும் செதுக்கி புதிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஆண்டாக அனைவருக்கும் அமைய எனது மனமுவந்த பிரார்த்தனைகள்! 

இதைக் காணும் அனைவர் வாழ்விலும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று தேவியைப் பிரார்த்திக்கிறேன்!


தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய 2022 புதுவருட வாழ்த்துக்கள்! 

இந்த ஆண்டு எம்மை மேலும் செதுக்கி புதிய சிந்தனைக்கு இட்டுச்செல்லும் ஒரு ஆண்டாக அனைவருக்கும் அமைய எனது மனமுவந்த பிரார்த்தனைகள்! 

இதைக் காணும் அனைவர் வாழ்விலும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று தேவியைப் பிரார்த்திக்கிறேன்!


தலைப்பு இல்லை

நான் ஒரு தமிழ் மருத்துவ இலக்கியவாதி!    

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்பவை தமிழ் அறிஞர்களாலும், தமிழ் தெரியாச் சித்த வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட அனாதைப் பிள்ளை போன்றது! 

இவற்றைப் படிக்க தமிழறிவு மாத்திரம் போதாது மருத்துவ அறிவும் வேண்டும்; மருத்துவ அறிவு என்பதற்குள் கல்லூரியில் கற்ற anatomy, physiology போன்ற உடல் சார்ந்த அறிவு மாத்திரம் போதாது. பிராணன் என்ற உயிர்சக்தி எப்படி செயற்படுகிறது என்ற தத்துவம் விளங்க வேண்டும். இதற்கு மருத்துவன் சிவயோகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஆக கல்லூரியில் கற்ற சித்தமருத்துவர்கள் இந்த மருத்துவ இலக்கியத்தைத் தொடுவதில்லை. அவர்கள் தத்துவம் புரியாமல் evidence based medicine ஆக சித்த மருத்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். 

இப்படி ஊருப்பட்ட சிக்கல் நிறைந்த இலக்கியமே தமிழ் மருத்துவ இலக்கியம். யாழ்ப்பாணம் தமிழ் இலக்கியத்திற்கு பெயர் போனது; குறிப்பாக மருத்துவ இலக்கியத்தில் பரராசசேகரமும், செகராசசேகரமும் கிடைத்திருக்கும் முக்கிய நூல்கள். 

இந்தக் காணொளி செகராசசேகரத்தினைப் பற்றிய அறிமுகம்!


தலைப்பு இல்லை

நான் ஒரு தமிழ் மருத்துவ இலக்கியவாதி!    

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்பவை தமிழ் அறிஞர்களாலும், தமிழ் தெரியாச் சித்த வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட அனாதைப் பிள்ளை போன்றது! 

இவற்றைப் படிக்க தமிழறிவு மாத்திரம் போதாது மருத்துவ அறிவும் வேண்டும்; மருத்துவ அறிவு என்பதற்குள் கல்லூரியில் கற்ற anatomy, physiology போன்ற உடல் சார்ந்த அறிவு மாத்திரம் போதாது. பிராணன் என்ற உயிர்சக்தி எப்படி செயற்படுகிறது என்ற தத்துவம் விளங்க வேண்டும். இதற்கு மருத்துவன் சிவயோகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஆக கல்லூரியில் கற்ற சித்தமருத்துவர்கள் இந்த மருத்துவ இலக்கியத்தைத் தொடுவதில்லை. அவர்கள் தத்துவம் புரியாமல் evidence based medicine ஆக சித்த மருத்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். 

இப்படி ஊருப்பட்ட சிக்கல் நிறைந்த இலக்கியமே தமிழ் மருத்துவ இலக்கியம். யாழ்ப்பாணம் தமிழ் இலக்கியத்திற்கு பெயர் போனது; குறிப்பாக மருத்துவ இலக்கியத்தில் பரராசசேகரமும், செகராசசேகரமும் கிடைத்திருக்கும் முக்கிய நூல்கள். 

இந்தக் காணொளி செகராசசேகரத்தினைப் பற்றிய அறிமுகம்!


ஆற்றல் மிக்க இளையோர் - 01

வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan

இந்தப் பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துக் கொள்வதற்காகவும் பகிர்ந்துக் கொள்கிறேன். 

இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும் போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும் போது அவர் எனக்குச் சொன்ன செய்தி! 

நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத் தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அது போல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்! 

இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும். 

PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார். 

மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. 

மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது. 

என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!


ஆற்றல் மிக்க இளையோர் - 01

வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan

இந்தப்பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துகொள்வதற்காகவும் பகிர்ந்துகொள்கிறேன். 

இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும்போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும்போது அவர் எனக்குச் சொன்ன செய்தி! 

நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத்தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அதுபோல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்! 

இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும். 

PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார். 

மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. 

மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது. 

என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!


Monday, December 27, 2021

தலைப்பு இல்லை

All Life is Yoga 

The secret of success in yoga is to regard it:

Not as one of the aims to be pursued in life, but as the one and only aim, Not as an important part of life but as the whole of life!


தலைப்பு இல்லை

All Life is Yoga 

The secret of success in yoga is to regard it:

Not as one of the aims to be pursued in life, but as the one and only aim, Not as an important part of life but as the whole of life!


தலைப்பு இல்லை

Hatha Yoga Pradipika in the light of Tamil Siddhas - English Classes 2022
if you like to join please comment below to get the details

தலைப்பு இல்லை

Hatha Yoga Pradipika in the light of Tamil Siddhas - English Classes 2022

if you like to join please comment below to get the details


Saturday, December 25, 2021

தலைப்பு இல்லை

Santa is available with white beard for today Christmas party! This is a version of Santa created by my daughter! 

Wish your happy Christmas   and enjoy the world holiday seasons! 

Let's spread the love and harmony


Friday, December 24, 2021

தலைப்பு இல்லை

சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப் பண்புகள் எப்படி இருக்க வேண்டும். 
சத்தியம் எனது தாய்; 
ஞானம் எனது தந்தை; 
தருமம் எனது சகோதரன்; 
கருணை எனது தோழன்; 
அமைதி எனது மனைவி; 
மன்னித்தல் எனது மகன்; 
இந்த ஆறு நற்பண்புகளே 
எனது உறவுகள்.
நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள் கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது. 
இறுதியாக மனதைப் புரிந்துக் கொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது. 
இதுப் போல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம். 
ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு. 
தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம். 
ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும். 
தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக் கொள்ள மாட்டான். 
உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுப் பெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம். 
தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப் புள்ளியில் இருந்து வெளி வந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுப் போல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம். 
ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது. 
பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும். 
ஆக இந்த ஆறு பண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.

தலைப்பு இல்லை

சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப்பண்புகள் எப்படி இருக்க வேண்டும். 

சத்தியம் எனது தாய்; 

ஞானம் எனது தந்தை; 

தருமம் எனது சகோதரன்; 

கருணை எனது தோழன்; 

அமைதி எனது மனைவி; 

மன்னித்தல் எனது மகன்; 

இந்த ஆறு நற்பண்புகளே 

எனது உறவுகள்.

நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள்கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது. 

இறுதியாக மனதைப் புரிந்துகொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது. 

இதுபோல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம். 

ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு. 

தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம். 

ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும். 

தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக்கொள்ள மாட்டான். 

உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுபெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம். 

தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப்புள்ளியில் இருந்து வெளிவந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுபோல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம். 

ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது. 

பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்கவேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும். 

ஆக இந்த ஆறுபண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.


Wednesday, December 22, 2021

தலைப்பு இல்லை

I did a small experiment with my students whom I teach, by posting the below quote and ask to tell their opinion; actually, I don't know this statement was said by Elon Musk or not; however, this helped me to open up their view. 

Definition of Intelligence is the ability to learn, emotional knowledge, creativity, and adaptation to meet the demands of the environment effectively.

All the degree holders are actually meet their demands of exams and obtain the degree; so they are intelligent, but the problem is how they do consistently after their degree and contribute to developing the social, economical, political systems of the world. 

here are the comments: 

******************************************************************

Yeah that is true sir if we just do our education just for marks, we can get a good degree but if cant apply relevant points to relevant consequences that act as an educated fool

*****************************************************************

Most people are mistaken in thinking that having a degree makes perfect. But there are many people and entrepreneurs who have done extraordinary things without even having a degree. And also we are all different and each of us must make our own way in life

******************************************************

Education not just fulfills all the things of us. To deal with society in a greater way we need to get many more experiences as well as need to learn simple tricks.

*******************************************************************

Absolutely true sir, Due to the current education system all compete with each other, and as a result, humanity and other human qualities are lost. There are persons who completed Master and can't work in a company successfully without the sense of human. They have no interaction among their co-workers. So my opinion is everyone has to balance their educational and social life.

**************************************************

I agree education and intelligence both are different. To succeed in our life, we must not need a degree. But a person who has a bachelor's degree not be an idiot. There are some qualifications for a degree.

***********************************************************************


தலைப்பு இல்லை

I did a small experiment with my students whom I teach, by posting the below quote and ask to tell their opinion; actually, I don't know this statement was said by Elon Musk or not; however, this helped me to open up their view. 

Definition of Intelligence is the ability to learn, emotional knowledge, creativity, and adaptation to meet the demands of the environment effectively.

All the degree holders are actually meet their demands of exams and obtain the degree; so they are intelligent, but the problem is how they do consistently after their degree and contribute to developing the social, economical, political systems of the world. 

here are the comments: 

******************************************************************

Yeah that is true sir if we just do our education just for marks, we can get a good degree but if cant apply relevant points to relevant consequences that act as an educated fool

*****************************************************************

Most people are mistaken in thinking that having a degree makes perfect. But there are many people and entrepreneurs who have done extraordinary things without even having a degree. And also we are all different and each of us must make our own way in life

******************************************************

Education not just fulfills all the things of us. To deal with society in a greater way we need to get many more experiences as well as need to learn simple tricks.

*******************************************************************

Absolutely true sir, Due to the current education system all compete with each other, and as a result, humanity and other human qualities are lost. There are persons who completed Master and can't work in a company successfully without the sense of human. They have no interaction among their co-workers. So my opinion is everyone has to balance their educational and social life.

**************************************************

I agree education and intelligence both are different. To succeed in our life, we must not need a degree. But a person who has a bachelor's degree not be an idiot. There are some qualifications for a degree.


Friday, December 17, 2021

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத்திறவு கோல் முதல் பாடல் அறிமுகம்.
எனது பாட்டனாரின் பழைய பிரதியும் புதிய நூலும்.
இப்படி சிறிய அறிமுக காணொளி செய்யலாம் என்பது திட்டம்.
பயனுள்ளதாக இருக்குமா?
காணும் அனைவருக்கும் எமது அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை காணொளியில் உள்ள ஒளிக்கீற்றுக்கள் உருவகப்படுத்துகிறது!

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் முதல் பாடல் அறிமுகம்.

எனது பாட்டனாரின் பழைய பிரதியும் புதிய நூலும்.

இப்படி சிறிய அறிமுக காணொளி செய்யலாம் என்பது திட்டம்.

பயனுள்ளதாக இருக்குமா?

காணும் அனைவருக்கும் எமது அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை காணொளியில் உள்ள ஒளிக்கீற்றுக்கள் உருவகப்படுத்துகிறது!


Thursday, December 16, 2021

தலைப்பு இல்லை

Mindset பற்றிய வாசிப்பிற்கு மாணவர்களுக்கு உருவாக்கிய காணொளி, பலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால் இங்கு பகிரப்படுகிறது. 

தலைப்பு இல்லை

Mindset பற்றிய வாசிப்பிற்கு மாணவர்களுக்கு உருவாக்கிய காணொளி, பலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால் இங்கு பகிரப்படுகிறது.

Wednesday, December 15, 2021

தலைப்பு இல்லை

Latin American Siddha Ayurveda Study Group

Today learning - Decoding the Charaka Samhitha Sutrastana.

Getting the knowledge to mind has three stages:

1) Tackling your lower mind with confusion and questions.

2) Developing your higher mind to receive the superior knowledge 

3) Connect your cultivated higher mind with over mind.

This process is given in Charaka Samhitha to achieve;

1) learning the Samhitha with appropriate questions to over come the lower mind

2) reciting the sloka and learning every day to cultivate the higher mind.

3) Connect the higher mind to Rishi, in the context of Charaka Samhitha Bharathwaja, Indra, Ashwini Kumara, Dakshaprajapathi, and Bhramha. 

This was explained in today session.

Here the summary video! 

Sharing with lot of love  

Monthly two sessions are going on, if anyone interested please register.


தலைப்பு இல்லை

Latin American Siddha Ayurveda Study Group

Today learning - Decoding the Charaka Samhitha Sutrastana.

Getting the knowledge to mind has three stages:

1) Tackling your lower mind with confusion and questions.

2) Developing your higher mind to receive the superior knowledge 

3) Connect your cultivated higher mind with over mind.

This process is given in Charaka Samhitha to achieve;

1) learning the Samhitha with appropriate questions to over come the lower mind

2) reciting the sloka and learning every day to cultivate the higher mind.

3) Connect the higher mind to Rishi, in the context of Charaka Samhitha Bharathwaja, Indra, Ashwini Kumara, Dakshaprajapathi, and Bhramha. 

This was explained in today session.

Here the summary video! 

Sharing with lot of love  

Monthly two sessions are going on, if anyone interested please register.


Tuesday, December 14, 2021

தலைப்பு இல்லை

I am extremely happy that I am contributing my knowledge to another part of the world! 

Conference organizers send some appreciation. 

Very mindblowing comment "You changed the energy of the audience and all of us. Raised it to another level". This is the very usual comment I receive from many people. 

I replied to them "because I have a Shakti in my name"

Inspiring, helping, and developing people is a wonderful service to God!


தலைப்பு இல்லை

I am extremely happy that I am contributing my knowledge to another part of the world! 

Conference organizers send some appreciation. 

Very mindblowing comment "You changed the energy of the audience and all of us. Raised it to another level". This is the very usual comment I receive from many people. 

I replied to them "because I have a Shakti in my name"

Inspiring, helping, and developing people is a wonderful service to God!


Sunday, December 12, 2021

தலைப்பு இல்லை

இன்று எமது திருமண நாள்! 
தாரமும் குருவும் தலைவிதிப் பயன் என்பதை பொதுவாக புலம்பலாகவே நாம் சொன்னாலும் இருவரும் ஒருவனை வாழ்க்கையில் செம்மைப்படுத்துவதில் நிகரற்றவர்கள். ஒருவனின் பலம், பலவீனம் அறிந்தவர்கள்.
என்னைப் போன்ற வானத்தில் சஞ்சரிக்கும் ஆசையுள்ள ஆணிற்கு ஆதாரமாக பூமியில் மையம் கொள்ள, சடுதியாக எடுக்கும் முடிவுகளை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருக்காலும் கேட்காமல் எடுக்கும் முடிவுகள் சரியென நம்பும் மனைவி கிடைப்பது வரம் தான்.
அன்பும் அறனும் சரியாக இருந்தால் வாழ்க்கை எனும் சக்கரம் சரியாக ஓடும் என்பது அனுபவ பாடம்; இதை குரு போதித்தால் இல்லறம் அதன் பரீட்சைக்களம்!
அனைவருக்கும் எமது அன்பும் பிரார்த்தனைகளும்!

Friday, December 10, 2021

தலைப்பு இல்லை

Some of the English speaking students requested to explain the meaning of Thirumantra song of pinda linga in English. 

I tried but unable to record full because of disk space!


தலைப்பு இல்லை

Some of the English speaking students requested to explain the meaning of Thirumantra song of pinda linga in English. 

I tried but unable to record full because of disk space!


Thursday, December 09, 2021

தலைப்பு இல்லை

ஓ திருமந்திரம் படிக்க இவ்வளவு ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்களா? கீழே ஆர்வத்தைத் தெரிவியுங்கள்!

தலைப்பு இல்லை

ஓ திருமந்திரம் படிக்க இவ்வளவு ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்களா? கீழே ஆர்வத்தைத் தெரிவியுங்கள்!

தலைப்பு இல்லை

திருவாகிய சிவம் என்ற செல்வத்தின் மூலம் காட்டும் திருமூலரின் திருமந்திரத்தின் பிண்டலிங்கம் என்ற பாடல்களின் விளக்கம். - 02

பிண்டம் என்ற உடலின் குறியீடு பற்றிய விளக்கம் - பிண்ட லிங்கம். 

லிங்கம் என்றால் குறியீடு என்று அர்த்தம். மறைந்திருக்கும் சூக்ஷ்மமான ஒன்று வெளிப்படும் போது அது தனக்கே உரிய குறியீட்டினை வெளிப்படுத்தும்; ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அது ஆண்குழந்தை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் குறியீடு அதன் ஆண் குறி. அவன் ஆண் என்பதைக் குறிக்கும் குறியீடு! 

அதுப் போல் சிவமாகிய பரம்பொருள் தனது தன்மைகளை எல்லாம் வடித்தெடுத்து சுருக்கி விலகி ஓடும் ஐம்பூதங்களையும் ஒன்றுபடுத்தி ஸ்தூல உடலாக்கி தன்னை அறிவதற்கான குறியீட்டினை இந்த மனித உடலிற்குள் வைத்திருக்கிறது. இதை அறியும் படிமுறைகளைக் கூறுவதுதான் திருமூலரின் பிண்ட லிங்கப் பாடல்களின் நோக்கம்; 

முதல் பாடலில் சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து ஆகிய நான்கு இரகசியங்களை உடலினை அறிவதன் மூலம் அறியலாம் என்பதைக் கூறி இரண்டாவது பாடலில் மரணத்தைப் புரிந்துக் கொள்வதன் மூலம் எப்படி ஐம்பூதங்களும் சிவம் இருப்பதால் ஒருங்கிணைந்து இயங்குகிறது என்பதை விளக்குகிறார். 

இந்தப் பாடல் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் ஆதாரமான தத்துவத்தையும் கூறுகிறது. 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

உடல் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்

நிலமும், நீரும் ஆக்கிய ஊன் மட்டுமே நீங்குகிறது

ஒன்றோடு ஒன்று சேராத பூதங்கள் ஐந்தும் ஒன்றாகச் சேர்வது

வல்லமை தரும் தேவராகிய சிவத்தை வந்தனை செய்யவே 

உடல் ஏன் அழிகிறது? ஏன் தோன்றுகிறது? என்ற விளக்கம் இந்தப் பாடலில் கூறப்படுகிறது. மரணம் என்பது நீராலும், நிலத்தாலும் ஆன ஸ்தூல உடலை விட்டு உயிர் நீங்குவதே! உலந்தல் என்றால் அழிவு என்று பொருள்; ஆகவே உடல் அழிந்தாலும் நீங்கள் இருக்கத் தான் செய்கிறீர்கள். இந்த ஐந்து பூதங்களும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்க மாட்டாதவை; ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடும் தன்மை உடையவை. இவை ஐந்தும் ஒன்றாக சேர்த்து இயங்குவதற்கான ஒரேயொரு நோக்கம் உடலிற்குள் எல்லா வல்லமையையும் தரும் தேவராகிய சிவம் உள்ளே இருப்பது, அவரை வணங்கவே!

ஆகவே தனித்த இயல்பின் ஒன்றுடன் ஒன்று சேராத ஐம்பூதங்களும் ஒன்றாக சம நிலையடைந்து உடலை பெறுவது வல்லமை தரும் சிவம் இந்த உடலினுள் இருப்பதாலேயே என்பது பெறப்படுகிறது. அதை உடலில் அறிந்து உணர வேண்டும். 

உண்மையை அறிய விளையும் சாதகன் தனக்கு உடல் எப்படிக் கிடைத்தது என்ற இரகசியத்தை முதலில் அறிய வேண்டும். மேலும் தனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் எதனால் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதையும் அறிய வேண்டும். உடலிற்குள் இருக்கும் வல்லமை தரும் தேவராகிய சிவம் இருப்பதாலேயே இவை எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன. 

சிவம் இருப்பதால் மனமும், பிராணனும் அதிலிருந்து கதிர்க்க, அதனால் ஐந்துபூதங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறுதியான இந்த உடலை உருவாக்குகிறது. இந்த உண்மையைப் புரியாமல் வாசியை எழுப்புகிறேன், பிராணனைக் கட்டுகிறேன் என்று முயற்சிப்பதெல்லாம் அறிவிலித்தனம்! ஆகவே பிண்டத்தில் சிவம் இருப்பதால் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். 

மனித உடலிற்குள் சிவம் வடித்த, செறிந்த – essence and concentrate form – நிலையில் இருக்கிறது என்பதை சாதகன் புரிந்துக் கொள்ள வேண்டும். 

இந்த உண்மையை மரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என்பது இந்தப் பாடலின் சாராம்சம். இறந்த பின்னரும் நாம் இருக்கிறோம் என்பதை யோகத்தின் சூக்ஷ்ம சரீர யாத்திரை மூலம் அனுபவமாக அறியலாம். இந்த சூக்ஷ்ம யாத்திரை செய்ய நில, நீர் பூதங்களின் ஆளுகையிலிருந்து வெளிவரும்படி பிராணனையும், மனத்தினையும் இயக்க வேண்டும். இதை முறையான ஆசானிடம் நேரில் பயில்க!

மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள் கேள்விகளால் உரையாடலைத் தொடர்க!


தலைப்பு இல்லை

திருவாகிய சிவம் என்ற செல்வத்தின் மூலம் காட்டும் திருமூலரின் திருமந்திரத்தின் பிண்டலிங்கம் என்ற பாடல்களின் விளக்கம். - 02

பிண்டம் என்ற உடலின் குறியீடு பற்றிய விளக்கம் - பிண்ட லிங்கம். 

லிங்கம் என்றால் குறியீடு என்று அர்த்தம். மறைந்திருக்கும் சூக்ஷ்மமான ஒன்று வெளிப்படும் போது அது தனக்கே உரிய குறியீட்டினை வெளிப்படுத்தும்; ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அது ஆண்குழந்தை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் குறியீடு அதன் ஆண் குறி. அவன் ஆண் என்பதைக் குறிக்கும் குறியீடு! 

அதுபோல் சிவமாகிய பரம்பொருள் தனது தன்மைகளை எல்லாம் வடித்தெடுத்து சுருக்கி விலகி ஓடும் ஐம்பூதங்களையும் ஒன்றுபடுத்தி ஸ்தூல உடலாக்கி தன்னை அறிவதற்கான குறியீட்டினை இந்த மனித உடலிற்குள் வைத்திருக்கிறது. இதை அறியும் படிமுறைகளைக் கூறுவதுதான் திருமூலரின் பிண்ட லிங்கப் பாடல்களின் நோக்கம்; 

முதல் பாடலில் சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து ஆகிய நான்கு இரகசியங்களை உடலினை அறிவதன் மூலம் அறியலாம் என்பதைக் கூறி இரண்டாவது பாடலில் மரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் எப்படி ஐம்பூதங்களும் சிவம் இருப்பதால் ஒருங்கிணைந்து இயங்குகிறது என்பதை விளக்குகிறார். 

இந்தப்பாடல் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் ஆதாரமான தத்துவத்தையும் கூறுகிறது. 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

உடல் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்

நிலமும், நீரும் ஆக்கிய ஊன் மட்டுமே நீங்குகிறது

ஒன்றோடு ஒன்று சேராத பூதங்கள் ஐந்தும் ஒன்றாகச் சேர்வது

வல்லமை தரும் தேவராகிய சிவத்தை வந்தனை செய்யவே 

உடல் ஏன் அழிகிறது? ஏன் தோன்றுகிறது? என்ற விளக்கம் இந்தப்பாடலில் கூறப்படுகிறது. மரணம் என்பது நீராலும், நிலத்தாலும் ஆன ஸ்தூல உடலை விட்டு உயிர் நீங்குவதே! உலந்தல் என்றால் அழிவு என்று பொருள்; ஆகவே உடல் அழிந்தாலும் நீங்கள் இருக்கத்தான் செய்கிறீர்கள். இந்த ஐந்து பூதங்களும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்க மாட்டாதவை; ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடும் தன்மை உடையவை. இவை ஐந்தும் ஒன்றாக சேர்த்து இயங்குவதற்கான ஒரேயொரு நோக்கம் உடலிற்குள் எல்லா வல்லமையையும் தரும் தேவராகிய சிவம் உள்ளே இருப்பது, அவரை வணங்கவே!

ஆகவே தனித்த இயல்பின் ஒன்றுடன் ஒன்று சேராத ஐம்பூதங்களும் ஒன்றாக சம நிலையடைந்து உடலை பெறுவது வல்லமை தரும் சிவம் இந்த உடலினுள் இருப்பதாலேயே என்பது பெறப்படுகிறது. அதை உடலில் அறிந்து உணர வேண்டும். 

உண்மையை அறிய விளையும் சாதகன் தனக்கு உடல் எப்படிக் கிடைத்தது என்ற இரகசியத்தை முதலில் அறிய வேண்டும். மேலும் தனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் எதனால் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதையும் அறிய வேண்டும். உடலிற்குள் இருக்கும் வல்லமை தரும் தேவராகிய சிவம் இருப்பதாலேயே இவை எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன. 

சிவம் இருப்பதால் மனமும், பிராணனும் அதிலிருந்து கதிர்க்க, அதனால் ஐந்துபூதங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறுதியான இந்த உடலை உருவாக்குகிறது. இந்த உண்மையைப் புரியாமல் வாசியை எழுப்புகிறேன், பிராணனைக் கட்டுகிறேன் என்று முயற்சிப்பதெல்லாம் அறிவிலித்தனம்! ஆகவே பிண்டத்தில் சிவம் இருப்பதால் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். 

மனித உடலிற்குள் சிவம் வடித்த, செறிந்த – essence and concentrate form – நிலையில் இருக்கிறது என்பதை சாதகன் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த உண்மையை மரணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்பது இந்தப்பாடலின் சாராம்சம். இறந்த பின்னரும் நாம் இருக்கிறோம் என்பதை யோகத்தின் சூக்ஷ்ம சரீர யாத்திரை மூலம் அனுபவமாக அறியலாம். இந்த சூக்ஷ்ம யாத்திரை செய்ய நில, நீர் பூதங்களின் ஆளுகையிலிருந்து வெளிவரும்படி பிராணனையும், மனத்தினையும் இயக்க வேண்டும். இதை முறையான ஆசானிடம் நேரில் பயில்க!

மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள் கேள்விகளால் உரையாடலைத் தொடர்க!


தலைப்பு இல்லை

திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு. 

நேற்றுப் பதிந்த இந்தப் பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன். 

பிண்ட லிங்கம் - பாடல் 01

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால், 

மனிதரின் உடல் அமைப்பு

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக் கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம். 

ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது. 

சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இது பற்றி உரையாடுவோம்.


தலைப்பு இல்லை

திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு. 

நேற்றுப் பதிந்த இந்தப்பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன். 

பிண்ட லிங்கம் - பாடல் 01

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால், 

மனிதரின் உடல் அமைப்பு

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக்கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம். 

ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது. 

சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இதுபற்றி உரையாடுவோம்.

 

Wednesday, December 08, 2021

தலைப்பு இல்லை

மனிதரின் உடல் அமைப்பு 

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு 

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு 

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு 

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

மனித உடலின் அமைப்பினை விளங்கினால் பல இரகசியங்களை விளங்கிக் கொள்ளலாம்!


தலைப்பு இல்லை

மனிதரின் உடல் அமைப்பு 

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு 

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு 

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு 

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

மனித உடலின் அமைப்பினை விளங்கினால் பல இரகசியங்களை விளங்கிக்கொள்ளலாம்!


தலைப்பு இல்லை

அம்ருதவர்ஷினியின் முதலாவது SCRATCH coding project! 
அம்ருதவர்ஷினியிற்கு கதை சொல்லுவதில் ஆர்வம்! முயற்சித்திருக்கிறார்!

Tuesday, December 07, 2021

தலைப்பு இல்லை

Latin American Ayurveda conference இற்கு ஒரு பேச்சாளனாக அழைக்கப்பட்டிருக்கிறேன்!

தலைப்பு இல்லை

Latin American Ayurveda conference இற்கு ஒரு பேச்சாளனாக அழைக்கப்பட்டிருக்கிறேன்!

Wednesday, December 01, 2021

தலைப்பு இல்லை

இன்று ஒரு தொகை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு வகுப்பு.... 
இங்கு ஆயுர்வேதம், யோகம், சித்தர் தத்துவங்கள் என்றால் என்னவென்று கேட்டுக் கொண்டிருக்க அவர்களோ சமஸ்க்ருதம், தமிழ் எல்லாம் படித்து தாங்களாகவே மூலநூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கற்கிறார்கள். 
Zoom இருப்பதால் காலை எழுந்தவுடன் fiber connection வழியாக ககன மார்க்கமாக உலகெங்கும் சென்று வரக்கூடியதாக இருக்கிறது!

தலைப்பு இல்லை

இன்று ஒரு தொகை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு வகுப்பு.... 

இங்கு ஆயுர்வேதம், யோகம், சித்தர் தத்துவங்கள் என்றால் என்னவென்று கேட்டுக்கொண்டிருக்க அவர்களோ சமஸ்க்ருதம், தமிழ் எல்லாம் படித்து தாங்களாகவே மூலநூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கற்கிறார்கள். 

Zoom இருப்பதால் காலை எழுந்தவுடன் fiber connection வழியாக ககன மார்க்கமாக உலகெங்கும் சென்று வரக்கூடியதாக இருக்கிறது!


Sunday, November 28, 2021

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 
காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள் தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 
வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 
வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.
இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ள வேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 
இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 
அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 

காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும்போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள்தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 

வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 

வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.

இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ளவேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 

இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 

அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  


Thursday, November 25, 2021

System Theory இனைப் பிரயோகித்தல்

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

System Theory இல் உள்ள Input, Process, Output, Feedback இவற்றினை வைத்துக் கொண்டு எப்படி ஒவ்வொரு விஷயத்தின் மீதும் system thinking இனை - தொகுதியாகச் சிந்திக்கும் பண்பினை உருவாக்குவது என்ற விஷயத்தினை 03 உதாரணங்கள் மூலம் அமிர்தவர்ஷினி கூறுகிறார். 

System theory approach சிக்கலான விஷயங்களை எளிமைப்படுத்த தேவையான முறை என்பதையும் அப்பம்மா மரக்கறி வாங்குவதையும், அதைப் பிரிப்பதையும் வைத்து விளக்கியாயிற்று! 

பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்!


Tuesday, November 23, 2021

ரொட்டியும் System theory யும்

அம்ருதவர்ஷினிக்கு ஒரே குறை! அப்பா மணிக்கணக்கில் பலருக்கும் வகுப்பெடுக்கிறார். எனக்கு படிப்பிக்கிறீர்கள் இல்லை என்று! 
சரி படிக்கலாம் என்றால் கணிதம், விஞ்ஞானம், எல்லாம் நான் எனது ஆசிரியர்களிடம் படிக்கிறேன். புதிதாக ஏதாவது படிக்கலாம் என்றாள்! 
கற்றல் என்பது சிந்திக்கத் தானே! சிந்திக்க எமக்கு இருக்கும் கோட்பாட்டு மாதிரி system theory! இதன் அடிப்படைகள் உள்ளீடு, செயல்முறை, விளைவு, பின்னூட்டம், நடைபெறும் சூழல் என்ற ஐந்து உறுப்புக்களால் ஆனது. 
இதை விளங்கப்படுத்த system theory ஐ வைத்து ரொட்டி (சப்பாத்தி) செய்வது எப்படி என்று விளங்கப்படுத்தியாயிற்று! 
Like பண்ணுங்க
Subscribe பண்ணுங்க
Share பண்ணுங்க  

Monday, November 22, 2021

தலைப்பு இல்லை

வந்து சேர்ந்த ஒரு தொகைப் புத்தகங்கள்! 

சென்னையிலிருந்து தருவித்துத் தந்தவர் Nirosh Shanthan ,

BukBuk.lk என்று வாசிப்பவர்களுக்கு உதவி செய்யும் தளம் ஒன்றினை நடத்துகிறார். புத்தக வியாபாரம் என்பதைத் தாண்டி வாசிப்பு உயிர் என்று இருப்பவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்கிறார். 

நாவல், இலக்கியம், கவிதை வாசிப்பவர்களுக்கு அதிகம் தீனி உண்டு. 

பரிந்துரைக்கிறேன். 

அப்பாவிற்கு வாசிப்புத் தான் தீனி என்பதால் மகள் happy birthday to you படிக்க புத்தகப் பொதி திறக்கப்படுகிறது.  


தலைப்பு இல்லை

வந்து சேர்ந்த ஒரு தொகைப் புத்தகங்கள்! 

சென்னையிலிருந்து தருவித்துத் தந்தவர் Nirosh Shanthan ,

BukBuk.lk என்று வாசிப்பவர்களுக்கு உதவி செய்யும் தளம் ஒன்றினை நடத்துகிறார். புத்தக வியாபாரம் என்பதைத் தாண்டி வாசிப்பு உயிர் என்று இருப்பவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்கிறார். 

நாவல், இலக்கியம், கவிதை வாசிப்பவர்களுக்கு அதிகம் தீனி உண்டு. 

பரிந்துரைக்கிறேன். 

அப்பாவிற்கு வாசிப்புத்தான் தீனி என்பதால் மகள் happy birthday to you படிக்க புத்தகப் பொதி திறக்கப்படுகிறது.  

 

Sunday, November 21, 2021

கற்றலில் அறிவின் நோக்கம்

கற்றலின் இலக்கை மற்றவர்களுடன் போட்டி போடும், மற்றவர்களை வெல்லும் ஒன்றாக பிள்ளைகளின் மனத்தில் விதைக்கக் கூடாது. இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வந்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர் மற்றவர்களை மேம்படுத்த தமது ஆற்றலைப் பயன்படுத்த மாட்டார்கள். 

எப்படிச் சுரண்டுவது, மற்றவர்களை வதைப்பது என்ற போக்கிலேயே அவர்களது தந்திரங்கள் முழுவதும் இருக்கும். வாழ்க்கையில் கல்வி, பணம், பதவி இவற்றில் உயர்ந்த நிலை அடைந்தாலும் திருப்தி இல்லாமல் எதற்காவது பின்னால் செயற்கையாக ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான் இலகுவாக மற்றவர்களுக்கு இவை கிடைத்துவிடக் கூடாது என்று தடங்கள் ஏற்படுத்தும் முட்டுக் கட்டைகளாக அமர்ந்திருப்பார்கள். 

கல்வி என்பது அக அனுபவத்திற்கும், பரந்து விரிந்த மனதால் உலகின் பல் பரிணாமங்களைக் காண்பதற்குரிய பார்வையை விருத்தி செய்யும் போசணையாகவும் இருக்க வேண்டும். 

இன்று பலர் உயர்ந்த பட்டங்களைப் பெற்றுவிட்டு திருப்தி இல்லாமல், சிந்தனை செய்ய நேரம் இல்லாமல் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும், பணத்திற்கும் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது கல்வி, அறிவு எதற்கானது என்ற தெளிவு இல்லாமல் தொழிலிற்காக, அந்தஸ்திற்காக கற்கிறோம் என்று கற்றவர்களின் நிலை தான்!

அறிவு மற்றவர்களுக்குப் பயன்படாவிட்டால் கற்ற கல்வியால் பயன் எதுவும் இல்லை! அதுப் போல் நாம் கஷ்டப்பட்டு படித்தால் எமக்கு பிறகு வருபவர்கள் கஷ்டப்படாமல் படிக்க என்ன வழி என்று சிந்திக்கும் மனப்போக்கு வளர்க்க வேண்டும். இப்படி இருக்கும் போது தான் சமூகமாக முன்னேற முடியும்.


கற்றலில் அறிவின் நோக்கம்

கற்றலின் இலக்கை மற்றவர்களுடன் போட்டி போடும், மற்றவர்களை வெல்லும் ஒன்றாக பிள்ளைகளின் மனத்தில் விதைக்கக்கூடாது. இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வந்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர் மற்றவர்களை மேம்படுத்த தமது ஆற்றலைப் பயன்படுத்த மாட்டார்கள். 

எப்படிச் சுரண்டுவது, மற்றவர்களை வதைப்பது என்ற போக்கிலேயே அவர்களது தந்திரங்கள் முழுவதும் இருக்கும். வாழ்க்கையில் கல்வி, பணம், பதவி இவற்றில் உயர்ந்த நிலை அடைந்தாலும் திருப்தி இல்லாமல் எதற்காவது பின்னால் செயற்கையாக ஓடிக்கொண்டிருப்பார்கள். ஒருவித பாதுகாப்பின்மை இருக்கும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தனான் இலகுவாக மற்றவர்களுக்கு இவை கிடைத்துவிடக்கூடாது என்று தடங்கள் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளாக அமர்ந்திருப்பார்கள். 

கல்வி என்பது அக அனுபவத்திற்கும், பரந்து விரிந்த மனதால் உலகின் பல் பரிணாமங்களைக் காண்பதற்குரிய பார்வையை விருத்தி செய்யும் போசணையாகவும் இருக்க வேண்டும். 

இன்று பலர் உயர்ந்த பட்டங்களைப் பெற்றுவிட்டு திருப்தி இல்லாமல், சிந்தனை செய்ய நேரம் இல்லாமல் பதவிகளுக்கும், பட்டங்களுக்கும், பணத்திற்கும் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது கல்வி, அறிவு எதற்கானது என்ற தெளிவு இல்லாமல் தொழிலிற்காக, அந்தஸ்திற்காக கற்கிறோம் என்று கற்றவர்களின் நிலைதான்!

அறிவு மற்றவர்களுக்குப் பயன்படாவிட்டால் கற்ற கல்வியால் பயன் எதுவும் இல்லை! அதுபோல் நாம் கஷ்டப்பட்டு படித்தால் எமக்கு பிறகு வருபவர்கள் கஷ்டப்படாமல் படிக்க என்ன வழி என்று சிந்திக்கும் மனப்போக்கு வளர்க்க வேண்டும். இப்படி இருக்கும் போதுதான் சமூகமாக முன்னேற முடியும்.


தலைப்பு இல்லை

“யோகமும் இயற்கையும்” நூல் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத் தலைவர் திரு. N. சிவகரன் அவர்கள் தனது மதிப்பீட்டு விமர்சனத்தை பைந்தமிழ் சாரல் நூல் விமர்சன அரங்கில் வழங்கினார்! 
இந்த நூலை விமர்சனத்திற்கு தேர்ந்தெடுத்தமைக்கு பெருமகிழ்ச்சியும் நன்றியும்! Rtn N. Sivakaran  

தலைப்பு இல்லை

“யோகமும் இயற்கையும்” நூல் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத் தலைவர் திரு. N. சிவகரன் அவர்கள் தனது மதிப்பீட்டு விமர்சனத்தை பைந்தமிழ் சாரல் நூல் விமர்சன அரங்கில் வழங்கினார்! 

இந்த நூலை விமர்சனத்திற்கு தேர்ந்தெடுத்தமைக்கு பெருமகிழ்ச்சியும் நன்றியும்! Rtn N. Sivakaran  


Tuesday, November 16, 2021

தலைப்பு இல்லை

அம்ருதவர்ஷினியின் படப்பிடிப்பில் அப்பாவிடமிருந்து இரண்டு காட்சிகள் மாத்திரம் தான்! 

ஒன்று புத்தகமும் கையும்

அல்லது கணனியும் கையும்


தலைப்பு இல்லை

ஆயுளும் ஆரோக்கியமும் வெவ்வேறானவை! இதை தெளிவாக ஆயுர்வேத மூலநூலான சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது. 
ஒருவன் ஆரோக்கியமானவனாக உற்சாகமாக வேலை செய்துக் கொண்டிருக்கலாம். திடீரென இறந்து போய் விடலாம். உடனே நன்றாகத் தானே இருந்தான் இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். 
இதைக் கூர்ந்து கவனித்த ரிஷிகள் ஆயுளை வளர்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்த அறிவே ஆயுர்வேதம். 
ஆயுள் என்பது சரீர, இந்திரிய ஸத்வ ஆத்ம ஸம்யோகா என்கிறது சரஹ சம்ஹிதை. 
சரீரம் என்ற ஸ்தூல உடல்
அதிலிருந்து இந்திரியங்களின் செயல்
ஸத்வ மனம் 
ஆத்மா என்ற உயிர்
என்ற இந்த நான்கினதும் சரியான இணைப்பினை ஒருவன் தினசரி வாழ்க்கையில் உருவாக்க இயலாதவன் ஆயுளைப் பெற முடியாது. 
ஆத்மாவை அறிந்து அதன் ஆற்றலை சத்துவ குணமுடைய மனதினால் உடலையும், புலன்களையும் ஆளத் தெரிந்தவன் மாத்திரமே நீண்ட ஆயுளைப் பெறலாம். 
மனதை ரஜோ, தமோ குணத்தில் அலைக் கழிப்பவர்களும், உடலை, புலன்களை கட்டுப்பாடு அற்றுப் பாவிப்பவர்களும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர், உடல், மனத்துடன் ஒன்றிணைந்து வலுவாகப் பிணைப்புடன் இருப்பதில்லை. 

தலைப்பு இல்லை

ஆயுளும் ஆரோக்கியமும் வெவ்வேறானவை! இதை தெளிவாக ஆயுர்வேத மூலநூலான சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது. 

ஒருவன் ஆரோக்கியமானவனாக உற்சாகமாக வேலை செய்துகொண்டிருக்கலாம். திடீரென இறந்து போய் விடலாம். உடனே நன்றாகத்தானே இருந்தான் இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். 

இதைக் கூர்ந்து கவனித்த ரிஷிகள் ஆயுளை வளர்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்த அறிவே ஆயுர்வேதம். 

ஆயுள் என்பது சரீர, இந்திரிய ஸத்வ ஆத்ம ஸம்யோகா என்கிறது சரஹ சம்ஹிதை. 

சரீரம் என்ற ஸ்தூல உடல்

அதிலிருந்து இந்திரியங்களின் செயல்

ஸத்வ மனம் 

ஆத்மா என்ற உயிர்

என்ற இந்த நான்கினதும் சரியான இணைப்பினை ஒருவன் தினசரி வாழ்க்கையில் உருவாக்க இயலாதவன் ஆயுளைப் பெற முடியாது. 

ஆத்மாவை அறிந்து அதன் ஆற்றலை சத்துவ குணமுடைய மனதினால் உடலையும், புலன்களையும் ஆளத்தெரிந்தவன் மாத்திரமே நீண்ட ஆயுளைப் பெறலாம். 

மனதை ரஜோ, தமோ குணத்தில் அலைக்கழிப்பவர்களும், உடலை, புலன்களை கட்டுப்பாடு அற்றுப் பாவிப்பவர்களும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர், உடல், மனத்துடன் ஒன்றிணைந்து வலுவாகப் பிணைப்புடன் இருப்பதில்லை. 


Friday, November 12, 2021

தலைப்பு இல்லை

சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்! 

அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து. 

அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறேன். 

இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆசிரியர்கள் இந்தப் பாடம் முடிக்கவில்லை, அந்தப் பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்! 

ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.


தலைப்பு இல்லை

சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்! 

அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து. 

அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக்கொடுத்திருக்கிறேன். 

இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆசிரியர்கள் இந்தப்பாடம் முடிக்கவில்லை, அந்தப்பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம்தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்! 

ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.


Wednesday, November 10, 2021

தலைப்பு இல்லை

இது என்ன உணர்ச்சி? எனக்கே தெரியவில்லை?




























































-

Tuesday, November 09, 2021

தலைப்பு இல்லை

கந்த சஷ்டி முடிவுற்றிருக்கும் இந்த நாளில் அறிவிற்கு விருந்தாக கந்த சஷ்டி கவசம் பற்றிய உரையாடல். 
கந்த சஷ்டி கவசத்தினுள் காணப்படும் மந்திரம், குண்டலினி, வாசியோகம், ஆறுமுகம், சக்தி இவை பற்றிய யோக விளக்கங்களும் உரையாடப்பட்டிருக்கிறது. 
வேல் என்பது ஆற்றலை, சக்தியைப் பிரயோகிக்கும் முறை! முருக உபாசனை என்பது குண்டலி யோகம், வாசியோகம்! 
உடலெங்கும் மனதின் துணைக் கொண்டு உணர்வினை வேலாக கவசிக்கும் முறை
கந்தர் சஷ்டி கவசத்தை,
1. துன்பங்கள் நீங்க
2. நினைத்த காரியம் கைகூட
3. யோக சித்தி பெற என 
மூன்று விஷயங்களுக்குப் பாவிக்க முடியும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. 
முருகன் அடியார்கள் பார்த்துக் கருத்துரையுங்கள்! 
நேர்காணலுக்கு நன்றி Dyena Sathasakthynathan Isuru Mano

தலைப்பு இல்லை

கந்த சஷ்டி முடிவுற்றிருக்கும் இந்த நாளில் அறிவிற்கு விருந்தாக கந்த சஷ்டி கவசம் பற்றிய உரையாடல். 

கந்த சஷ்டி கவசத்தினுள் காணப்படும் மந்திரம், குண்டலினி, வாசியோகம், ஆறுமுகம், சக்தி இவைபற்றிய யோக விளக்கங்களும் உரையாடப்பட்டிருக்கிறது. 

வேல் என்பது ஆற்றலை, சக்தியைப் பிரயோகிக்கும் முறை! முருக உபாசனை என்பது குண்டலி யோகம், வாசியோகம்! 

உடலெங்கும் மனதின் துணைகொண்டு உணர்வினை வேலாக கவசிக்கும் முறை

கந்தர் சஷ்டி கவசத்தை,

1. துன்பங்கள் நீங்க

2. நினைத்த காரியம் கைகூட

3. யோக சித்தி பெற என 

மூன்று விஷயங்களுக்குப் பாவிக்க முடியும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. 

முருகன் அடியார்கள் பார்த்துக் கருத்துரையுங்கள்! 

நேர்காணலுக்கு நன்றி Dyena Sathasakthynathan Isuru Mano


Monday, November 08, 2021

தலைப்பு இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத்தலைவர் திரு சிவகரன் அவர்களிடம் "யோகமும் இயற்கையும்" நூல் கையளிக்கப்பட்டது. வாசித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்! 
திரு. சிவகரன் Rtn N. Sivakaran அவர்கள் "மாணவர்களுக்கான ஆசிரியர்" ; மாணவர்களை வழி நடாத்தி ஆற்றல்களை வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற உந்தலை செயலாக்கிவர்! அவரது "Youth Truth and the Meaning of Life" என்ற மாணவர்களுக்கான webinar series தகுதியுடைய பல மாணவர்களை உலகறியச் செய்துள்ளது!

தலைப்பு இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத்தலைவர் திரு சிவகரன் அவர்களிடம் "யோகமும் இயற்கையும்" நூல் கையளிக்கப்பட்டது. வாசித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்! 

திரு. சிவகரன் Rtn N. Sivakaran அவர்கள் "மாணவர்களுக்கான ஆசிரியர்" ; மாணவர்களை வழி நடாத்தி ஆற்றல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உந்தலை செயலாக்கிவர்! அவரது "Youth Truth and the Meaning of Life" என்ற மாணவர்களுக்கான webinar series தகுதியுடைய பல மாணவர்களை உலகறியச் செய்துள்ளது!


Thursday, November 04, 2021

தலைப்பு இல்லை

அருளோடு செல்வம் ஞானம் 
ஆற்றலும் அன்பும் பண்பும் 
பொருள் நலம் பொறுமை 
ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் 
அசைந்திடா பக்தியன்பு 
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என 
அன்னையிடம் பிரார்த்தித்து 
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

தலைப்பு இல்லை

அருளோடு செல்வம் ஞானம் 

ஆற்றலும் அன்பும் பண்பும் 

பொருள் நலம் பொறுமை 

ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் 

அசைந்திடாபக்தியன்பு 

தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என 

அன்னையிடம் பிரார்த்தித்து 

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 


Wednesday, November 03, 2021

தலைப்பு இல்லை

After long months of Corona lockdown now managed to cut my hair; however, beard will be maintained as same!
Hope this appearance is pleasing to everyone!

Tuesday, November 02, 2021

தலைப்பு இல்லை

இன்று தன்வந்திரி திரயோதசி! 
வடமொழி ஆயுர்வேத நூற்கள் தன்வந்திரியை பிரம்ம சம்பிரதாய வைத்தியக் கடவுளாகக் குறிப்பிடும்! 
தென்னாட்டு சித்த சம்பிரதாய நூற்கள் சிவன் பார்வதிக்கு உபதேசித்து, மகாவிஷ்ணுவிற்கு உபதேசமாகி தன்வந்திரி என்ற முனிவருக்கூடாக ஆயுள்வேத ஞானம் பரவியதாகக் கூறுகிறது. 
செய்ய மாதுக் கிறையவன் செப்பிய 
துய்ய வாயுள் மறையிற் றுலங்கிய
மெய்யை மாதவன் மேதினி வாழ்வுற 
ஐயன் தன்வந்திரிக்கருள் கூறினான்
ஓது நாடித் தொகையு மதிலுறு
வாத பித்தச் சிலேற்பன வன்மையும்
பேத மான வியாதியின் பெயர்களும் 
ஆதியான அருந்தவன் ஓதினான்
-தன்வந்திரி வைத்தியம் - 
பார்வதிக்கு சிவபெருமான் உபதேசித்த ஆயுள் வேதத்தில் உள்ள உண்மைகளை உடல் மேம்பட மகாவிஷ்ணு உயிர்கள் வாழ்வு மேம்பட ஐயன் தன்வந்திரிக்குக் கற்பித்தான். 
ஐயன் தன்வந்திரி நாடிகளின் எண்ணிக்கையும், அந்த நாடிகளில் வாத பித்த சிலேற்பனமும் அவற்றின் வலிமை, ஏற்படும் வியாதிகளது பெயர்கள் இவற்றைத் தொகுத்து ஓதினான்!

தலைப்பு இல்லை

இன்று தன்வந்திரி திரயோதசி! 

வடமொழி ஆயுர்வேத நூற்கள் தன்வந்திரியை பிரம்ம சம்பிரதாய வைத்தியக் கடவுளாகக் குறிப்பிடும்! 

தென்னாட்டு சித்த சம்பிரதாய நூற்கள் சிவன் பார்வதிக்கு உபதேசித்து, மகாவிஷ்ணுவிற்கு உபதேசமாகி தன்வந்திரி என்ற முனிவருக்கூடாக ஆயுள்வேத ஞானம் பரவியதாகக் கூறுகிறது. 

செய்ய மாதுக் கிறையவன் செப்பிய 

துய்ய வாயுள் மறையிற் றுலங்கிய

மெய்யை மாதவன் மேதினி வாழ்வுற 

ஐயன் தன்வந்திரிக்கருள் கூறினான்

ஓது நாடித் தொகையு மதிலுறு

வாத பித்தச் சிலேற்பன வன்மையும்

பேத மான வியாதியின் பெயர்களும் 

ஆதியான அருந்தவன் ஓதினான்

-தன்வந்திரி வைத்தியம் - 

பார்வதிக்கு சிவபெருமான் உபதேசித்த ஆயுள் வேதத்தில் உள்ள உண்மைகளை உடல் மேம்பட மகாவிஷ்ணு உயிர்கள் வாழ்வு மேம்பட ஐயன் தன்வந்திரிக்குக் கற்பித்தான். 

ஐயன் தன்வந்திரி நாடிகளின் எண்ணிக்கையும், அந்த நாடிகளில் வாத பித்த சிலேற்பனமும் அவற்றின் வலிமை, ஏற்படும் வியாதிகளது பெயர்கள் இவற்றைத் தொகுத்து ஓதினான்!


Monday, November 01, 2021

தலைப்பு இல்லை

சத்தியும் சிவமும் ஆயதன்மை 
இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும்
ஆக உணர்குண குணியும்ஆகி
வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் 
அவ்வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார் 
பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார். 
சிவ ஞான சித்தியார் சுபக்கம் - 89
ஆகமங்களில் வெவ்வேறு வடிவ சிவலிங்கங்கள் என்பதற்குரிய அர்த்தத்தினை இந்தப் பாடலினூடாகப் பெற முடியும்.
சக்தியும் சிவமுமே இந்த உலகத்தின் இரகசியம் எல்லாம்! ஆயம் என்றால் இரகசியம் என்று பொருள்! ஆயத்தன்மை என்றால் இரகசியத்தின் தன்மை என்று அர்த்தம்.
இந்த சிவசக்தி இரகசியம் என்னவென்றால் ஒத்திசைந்து சேர்ப்பதும், பிரிந்து விரிவதும்;
இது எப்படி என்றால் ஆண் உணவை உண்டு சேர்த்து சுக்கிலமாக்கி வித்தாகக் கொடுத்தால் பெண் அதைப் பெற்று விரித்து பல்கலங்கள் கொண்ட குழந்தையாக்கித் தருவதைப் போல்,
உணருவது சிவமாகவும் (உணர் குண), உணரப்படும் அனுபவம் (குணி) சக்தியாகவும் இருப்பதைப் போல்! எல்லாவற்றிற்கும் மூலமாக சிவம் இருக்க அந்த வித்தைப் பெற்று இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் ஆக்கி வாழ்வைத் தருபவள் சக்தியாக இருக்கிறாள்.
சிவமாகிய இலிங்கம் மூலமாக இருக்க அதைத் தாங்கும் பீடமாக சக்தி நிற்கிறாள்; இப்படி நிற்பதால் இந்த வாழ்க்கை உயிர் பெறுகிறது; இந்த உண்மை அறியாமல் பீடமும் இலிங்கமும் சேர்ந்து என்ன உண்மையைச் சொல்ல வருகிறது என்பதை அறியாமல் சிவஞானத்தை நோக்கிச் செல்ல முடியாது.
சிவமும் சக்தியும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தைப் படைக்கிறது என்று அறிவதே சிவலிங்க வழிபாட்டின் குறிக்கோள்!
இலிங்கத்தை உபாசித்து சிவசக்தி ஆயம் - இரகசியத்தை சூக்ஷ்ம அறிவைப் பெற்றவன் அடுத்து சிவசக்தி ஐக்கியம் எப்படி சதாசிவ ரூபத்திற்கூடாக பஞ்சீகரித்து பஞ்சபூதமாக விரிகிறது என்ற அறிவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவான்!
ஆகமங்கள்/தந்திரங்கள் என்பது இத்தகைய சூக்ஷ்ம அறிவை மனிதன் எப்படிப் பௌதீக நன்மையை மக்கள் பெறுவது என்ற தொழில்நுட்ப அறிவு. 
உலக நன்மையைப் பெற க்ஷணிக லிங்கங்கள் அமைத்து பூஜை செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்பதும், இன்ன பலனிற்கு இன்ன நிறப் பூக்கள் பயன்படுத்துவது என்பதும் சிவசக்தி ஐக்கிய இரகசியமே! 
இந்த சிவஞான சித்தியார் பாடல் நேற்று Lambotharan Ramanathan ஐயா அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட அகப்புரிதல் இந்தப் பதிவுகள்!

தலைப்பு இல்லை

சத்தியும் சிவமும் ஆயதன்மை 

இவ்வுலகம் எல்லாம்

ஒத்து ஒவ்வாஆணும் பெண்ணும்

ஆக உணர்குண குணியும்ஆகி

வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் 

அவ்வாழ்க்கை எல்லாம்

இத்தையும் அறியார் 

பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார். 

சிவ ஞான சித்தியார் சுபக்கம் - 89

ஆகமங்களில் வெவ்வேறு வடிவ சிவலிங்கங்கள் என்பதற்குரிய அர்த்தத்தினை இந்தப்பாடலினூடாகப் பெற முடியும்.

சக்தியும் சிவமுமே இந்த உலகத்தின் இரகசியம் எல்லாம்! ஆயம் என்றால் இரகசியம் என்று பொருள்! ஆயத்தன்மை என்றால் இரகசியத்தின் தன்மை என்று அர்த்தம்.

இந்த சிவசக்தி இரகசியம் என்னவென்றால் ஒத்திசைந்து சேர்ப்பதும், பிரிந்து விரிவதும்;

இது எப்படி என்றால் ஆண் உணவை உண்டு சேர்த்து சுக்கிலமாக்கி வித்தாகக் கொடுத்தால் பெண் அதைப் பெற்று விரித்து பல்கலங்கள் கொண்ட குழந்தையாக்கித் தருவதைப் போல்,

உணருவது சிவமாகவும் (உணர் குண), உணரப்படும் அனுபவம் (குணி) சக்தியாகவும் இருப்பதைப் போல்! எல்லாவற்றிற்கும் மூலமாக சிவம் இருக்க அந்த வித்தைப் பெற்று இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் ஆக்கி வாழ்வைத் தருபவள் சக்தியாக இருக்கிறாள்.

சிவமாகிய இலிங்கம் மூலமாக இருக்க அதைத்தாங்கும் பீடமாக சக்தி நிற்கிறாள்; இப்படி நிற்பதால் இந்த வாழ்க்கை உயிர் பெறுகிறது; இந்த உண்மை அறியாமல் பீடமும் இலிங்கமும் சேர்ந்து என்ன உண்மையைச் சொல்ல வருகிறது என்பதை அறியாமல் சிவஞானத்தை நோக்கிச் செல்லமுடியாது.

சிவமும் சக்தியும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தைப் படைக்கிறது என்று அறிவதே சிவலிங்க வழிபாட்டின் குறிக்கோள்!

இலிங்கத்தை உபாசித்து சிவசக்தி ஆயம் - இரகசியத்தை சூக்ஷ்ம அறிவைப் பெற்றவன் அடுத்து சிவசக்தி ஐக்கியம் எப்படி சதாசிவ ரூபத்திற்கூடாக பஞ்சீகரித்து பஞ்சபூதமாக விரிகிறது என்ற அறிவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவான்!

ஆகமங்கள்/தந்திரங்கள் என்பது இத்தகைய சூக்ஷ்ம அறிவை மனிதன் எப்படிப் பௌதீக நன்மையை மக்கள் பெறுவது என்ற தொழில்நுட்ப அறிவு. 

உலக நன்மையைப் பெற க்ஷணிக லிங்கங்கள் அமைத்து பூஜை செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்பதும், இன்ன பலனிற்கு இன்ன நிறப் பூக்கள் பயன்படுத்துவது என்பதும் சிவசக்தி ஐக்கிய இரகசியமே! 

இந்த சிவஞான சித்தியார் பாடல் நேற்று Lambotharan Ramanathan ஐயா அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட அகப்புரிதல் இந்தப்பதிவுகள்!


Sunday, October 31, 2021

தலைப்பு இல்லை

வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!
தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்! 
ஓடத்தில் நாம் ஏறிப் பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத் தான் இருக்கிறார்கள்! 
எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப் போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவது தான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக் கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில், வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாது. 
புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப் பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துக் கொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி! 
நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலும் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்! 
குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துக் கொள்வது என்பது அல்ல!

தலைப்பு இல்லை

வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!

தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்! 

ஓடத்தில் நாம் ஏறிப்பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத்தான் இருக்கிறார்கள்! 

எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப்போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவதுதான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக்கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில் வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாதது. 

புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப்பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக்கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி! 

நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலுடன் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்! 

குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துகொள்வது என்பது அல்ல!


Friday, October 29, 2021

தலைப்பு இல்லை

சேதனப் பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித் தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது. 

Deal with Dragon.. let's see how the government is going to play! 

#stategy


தலைப்பு இல்லை

சேதனப்பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித்தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது. 

Deal with Dragon.. let's see how the government is going to play! 

#stategy


தலைப்பு இல்லை

தற்பொழுது யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்தில்,
"யோகமும் இயற்கையும்"
"சிவயோக ஞானத்திறவுகோல்"
ஆகிய இரண்டு நூற்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தலைப்பு இல்லை

 தற்பொழுது யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்தில்,

"யோகமும் இயற்கையும்"

"சிவயோக ஞானத்திறவுகோல்"

ஆகிய இரண்டு நூற்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.


Thursday, October 28, 2021

தலைப்பு இல்லை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது. 

படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை! 

கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!


தலைப்பு இல்லை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது. 

படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை! 

கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!


Wednesday, October 27, 2021

தலைப்பு இல்லை

தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக் கொள்ளலாம். 

தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham


தலைப்பு இல்லை

தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக்கொள்ளலாம். 

தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham


அசுரன் - வேதாளம் - ராக்ஷதர்

புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்! 

அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அது போல் வேதாளம் transformation force.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத் தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக் கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக் கூடிய உப ரசங்கள்!

அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.

மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்! 

ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.

ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும் போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் போது மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!

இதைப் போல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைப் பெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத் தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.


அசுரன் - வேதாளம் - ராக்ஷதர்

புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்! 

அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அதுபோல் வேதாளம் transformation force.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக்கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக்கூடிய உப ரசங்கள்!

அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ, அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.

மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்! 

ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.

ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும்போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக்கொண்டிருக்கும்போது) மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!

இதைபோல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைபெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.


Tuesday, October 26, 2021

தலைப்பு இல்லை

இன்று சாமியின் பிறந்த நாள்! 
"என்னைக் கைவிட்டாலும் என்னை நாடி வருபவர்களை எக் காரணம் கொண்டும் கைவிட்டு விடாதே அம்மா" என்று அன்னையை அனுதினமும் பிரார்த்திப்பார். 
அவருடன் வாழ்ந்த கால அனுபவம் பெரும் ஞானம்! பாமரன் முதல் பிரதம மந்திரி வரை சமூகத்தின் அனைத்து மட்டத்தினரின் மனதினையும் படிக்கச் சொல்லித் தந்த காலம்! 
பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்கி விட்டேன் அப்பா! ஆனால் சாதகர்களை உருவாக்க முடியவில்லை அப்பா! என்று அடிக்கடி வேதனைப்படுவார்! 
அவர் விட்ட பணி தொடர்கிறது....

தலைப்பு இல்லை

இன்று சாமியின் பிறந்த நாள்! 

"என்னைக் கைவிட்டாலும் என்னை நாடி வருபவர்களை எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடாதே அம்மா" என்று அன்னையை அனுதினமும் பிரார்த்திப்பார். 

அவருடன் வாழ்ந்த கால அனுபவம் பெரும் ஞானம்! பாமரன் முதல் பிரதம மந்திரி வரை சமூகத்தின் அனைத்து மட்டத்தினரின் மனதினையும் படிக்கச் சொல்லித்தந்த காலம்! 

பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்கி விட்டேன் அப்பா! ஆனால் சாதகர்களை உருவாக்க முடியவில்லை அப்பா! என்று அடிக்கடி வேதனைப்படுவார்! 

அவர் விட்ட பணி தொடர்கிறது....


Wednesday, October 20, 2021

தலைப்பு இல்லை

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

தில்லைச்சிற்றம்பலம் நடராஜர் தாண்டவம் ஆடும் தலம். இந்த ஆட்டம் சித் என்ற அறிவினை பிரபஞ்சத்தில் இயக்க அம்பலத்தில் ஆடும் ஆட்டம். இதுவே சிற்றம்பலம். பூவுகில் இந்த ஆட்டத்தின் பொருளை விளங்க தில்லையில் நடராஜராக தரிசிக்கலாம். 

சிவயோகத்தில் பிண்டத்திற்குள் தாண்டவம் காண தலையுச்சிக்கும் மேல் அம்பலம் என்ற ஆயிரம் இதழ்கமலத்தில் சித் என்ற அறிவாக இறைவன் ஆடிக்கொண்டிருக்க அந்த ஆட்டம் ஏற்படுத்தும் பிராண சலனம் இந்த அன்னமய உடலை உருவாக்குகிறது. ஆக தலையுச்சியில் உள்ள தில்லைச்சிற்றம்பலம் அன்னமய உடலை போசித்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அப்பர் பெருமான். அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்.

தலையுச்சியில் ஆயிரம் இதழ் கமலத்தில் ஆடும் இந்த தாண்டவத்தை அறிந்த சிவயோகிக்கு காரண உடல் பொன்னுடலாக வாய்க்கும். இதுவே பொன்னம் பாலிக்கு... இதனாலேயே தில்லைச் சிற்றம்பலம் பொற்சபை எனப்படுகிறது. 

மேலும் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து இந்த பொன்னுடல் பெற்று இன்புற இந்த உடலைத் தந்து என்னைக் காத்து வரும் புலியூர் எம்பிரானே என்று வணங்குகிறார்! 

இந்தத் தேவாரம் நாம் எமது அன்ன உடலிற்கு உணவு அளிக்கும்போது இந்த அன்ன உடல் ஆயிரம் இதழ் கமலத்தில் சிவ பரம்பொருளின் தாண்டவத்தால் எமக்குக் கிடைத்த உடல் என்பதும், அதைப் போசிப்பது சிற்றம்பலம் என்ற பொற்சபையில் பொன்னுடல் பெறவே என்பதையும் ஞாபகத்தில் இருத்தி உணவை உண்ண வேண்டும் என்று இந்தத் தேவாரத்தை உணவருந்தும் போது படிக்கிறோம்.


Saturday, October 16, 2021

தலைப்பு இல்லை

தமிழகத்தின் தமிழருவி மணியன் ஐயாவிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது. 

ஐயா தன்னுடைய நூல் ஒன்றில் (தலைப்பு ஞாபகத்தில் இல்லை) அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூலை யோகம் பயில விரும்புபவர்களுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார். 

வேலைப்பளுவிற்கு மத்தியில் விரைவில் மதிப்புரை தருவதாகச் சொல்லியிருக்கிறார்!


Friday, October 15, 2021

ஆயுத பூசை

நமக்கு ஆயுதம் அறிவும் அதைத்தரும் மனமும்தானே! 

தடைகளை வெல்லும் மனமும் அந்த மனதிற்கு பலமும் இருந்தால் துக்கம் அண்டாது! இது துர்க்கையின் அருள்!

எந்தச் சூழ்நிலையிலும் சமநிலை தப்பாமல், அருளையும், ஆற்றலையும் வளப்படுத்தி செல்வத்தைப் பெற்றால் அது மகாலக்ஷ்மியின் அருள்!

தடையில்லாமல் எண்ணமும், வாக்கும் அறிவும், எழுத்தும் பிரவாகித்தால் அது சரஸ்வதியின் அருள்! 

எமக்குள் இருக்கும் தாழ் மனதின் அதியாசையும், துர்குணங்களும் இந்த மூன்று ஆற்றல்களாலும் வதைக்கப்பட்டு அன்பு, கருணை, பொறுமை போன்ற தெய்வ மனத்தைப் பெற்றால் அது வெற்றி என்ற விஜயம்!

இதைக் கொண்டாடுதல் விஜயதசமி! 

மகளின் ஆயுத பூசை! 

நான் விரும்பிக் கற்கும் எனது குருநாதரின் மனம், யோகம், தேவிபகவதம், தேவி மாஹாத்மியம், ஸ்ரீ சக்கரபூஜை, காளி உபாசனை, ஸாவித்ரி காவியம், Envirionmental Sciece, இயற்கை வழி வேளாண்மை நூற்களும்!

குருவின் அருளால் நான்(ம்) எழுதிய நூல்களும் சரஸ்வதியின் அருள் வேண்டி படைக்கப்பட்டது! 

அனைத்திலும் விழிப்புணர்வாகவும், எல்லாவற்றிற்கும் மூலமாகவும், அறிவின் மூலமாகவும் இருக்கும் அந்த ஆதிஸக்தியை புத்தியில் இருத்தி, அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என்ற பிரார்த்தனையுடன் விஜயதசமி வாழ்த்துக்கள்!


தலைப்பு இல்லை

அன்பர்களே! 

யோகமும் இயற்கையும் நூல்! 

இலங்கை, இந்தியாவிற்குள் வாழும் அன்பர்கள் அச்சிடப்பட்ட பிரதிகளை வாங்கிக்கொள்ளலாம். தேவையானவர்கள்; 

இலங்கையில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு இன்று நூல் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பதிவு செய்யாதவர்கள் இந்த இணைப்பில் பதிவு செய்யவும்: https://forms.gle/CpjKebT4gcsa237o8

இந்தியாவிற்குள் வாங்க விரும்புபவர்கள் இந்த இணைப்பினைப் பயன்படுத்தவும்: https://www.tamizhipadhippagam.com/product/407516/-01-64ccf

இன்று முதல் யோகமும் இயற்கையும் நூல் உலகெங்கும் கிடைக்கக்கூடிய வகையில் kindle பதிப்பாக வெளிவருகிறது. நீங்களும் இந்த நூலை வாங்கி பதிப்பகத்தை ஊக்கப்படுத்தும் அதேவேளை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் என எண்ணுகிறேன். குறிப்பாக இந்த நூலைப் படித்த பின்னர் உங்கள் மேலான கருத்தையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்! 

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்! https://www.amazon.com/dp/B09JGRP5ZN


Thursday, October 14, 2021

தலைப்பு இல்லை

நாளை விஜயதசமி முதல் உலகெங்கும் வாழும் வாசகர்களுக்காக அமேசன் kindle இல் "யோகமும் இயற்கையும்" நூல் கிடைக்க தமிழி பதிப்பகம் ஏற்பாடுகளை பூர்த்தி செய்திருக்கிறது.

https://www.amazon.in/.../ref=cm_sw_r_apan_glt...


தலைப்பு இல்லை

நவராத்திரியை முன்னிட்டு Dyena Sathasakthynathan Isuru Manoj அவர்களுடனான குரு அகத்திய காயத்ரி சாதனை பற்றிய என்னுடைய நேர்காணல் இன்று வெளியாகிறது. 

மூன்று பாகங்களாக சந்தேகம் தெளிதல் அடிப்படையில் வெளிவருகிறது:

பகுதி - 01 இனை இந்த இணைப்பில் காணலாம்: 

https://youtu.be/PBJB2JL-ByQ 

கீழ்வரும் கேள்விகள் பதிலளிக்கப்பட்டுள்ளது:

1) சாதனை என்றால் என்ன? இது ஆண், பெண் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் உரிய ஒன்றா? 

2) சாதனை செய்ய ஒருவர் தீர்மானித்த பின்னர் அவர் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் என்ன?

A. அதற்கென தனி அறை இருக்கவேண்டுமா?

B. காயத்ரிதேவியின் படம் வைக்கவேண்டுமா? என்னளவில் எவ்வாறு அதை வைக்கவேண்டும்.?

C. விளக்கு, ஊதுபத்தி ஏற்றவேண்டுமா?

D. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

E. ஜெப மாலை ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா?

F. எத்தனை முறை செய்யவேண்டும்?

G. இந்த ஆசனத்தில் தான் அமர வேண்டுமென்றோ அல்லது இந்த நிற ஆடைதான் அணியவேண்டுமென்றோ ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா?

H. எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும்?

3) சாதனை செய்ய ஆரம்பிப்பவர் சைவ உணவு உண்பவராக மட்டுமே இருக்கவேண்டுமா? இல்லாவிட்டால் ஏதேனும் உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமா?


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...