குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 02, 2023

கற்றலில் மாணவர்கள் அடையும் அடைவு

 

நாம் கற்றலில் மாணவர்கள் அடையும் அடைவினை எப்படி கொண்டாடுவது? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடைவை தானும் தன்னைச் சார்ந்தவர்களும் அடையும் போது மனதில் இன்ப உணர்ச்சி எழுவது மனித இயல்பு! ஆனால் நாம் முழுமையான நிலையை அடைய இன்னும் பாக்கியிருக்கிறதா, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூர்ந்து சிந்திக்க வேண்டும்.

கற்றலின் தேர்ச்சி  என்பது ஏழு நிலைகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

1. பெற்ற அறிவினை மீள் ஞாபகப்படுத்தும் ஆற்றல் knowledge (recall of information),

2. அந்தத்துறை சார்ந்து தான் பெற்ற அறிவினைப் புரிந்துகொள்ளுதல் comprehension (understanding concepts),

3. அந்த அறிவினை தகுந்த சூழலில் பிரயோகித்தல் application (applying knowledge in different contexts),

4. தகவல்களை பகுத்து ஆராயும் பகுப்பாய்வு ஆற்றல் analysis (breaking down information), 

6. மீளத்தொகுத்து புதிய யோசனைகளை உருவாக்குதல் synthesis (creating new ideas or solutions), 

7. தாம் செய்தவற்றைப் பற்றிப் பூரிக்காமல் மதிப்பிட்டு ஆராய்ந்து மேம்படுத்துதல் evaluation (judging and critiquing based on established criteria). 

நாம் பரீட்சைகள் மூலம் முதல் இரண்டு நிலைகளையே மாணவர்களின் திறனை உறுதிப்படுத்துகிறோம். இந்த இரண்டும் சிறப்பாக இருந்தால் மாத்திரம் தான் மற்றைய நிலைகளில் சிறப்படைய முடியும் என்பதால் பரீட்சைகளின் முக்கியத்துவம் மிக அவசியமானது!

ஆனால் பெற்ற அறிவை பிரயோகித்து, சூழலிற்கு ஏற்றவகையில் பகுதாய்ந்து, தொகுத்து, பிரயோகித்து பிரச்சனைகளைத் தீர்க்க வல்ல எதிர்காலத்தை கட்டமைக்கக் கூடிய மனித வளத்தை நாம் உருவாக்கக் வேண்டும்!

ஆகவே பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டு அடுத்த நிலை ஆழமான பகுத்தாயும், பிரச்சனைக்கு தீர்வுகாணும், புத்தாக்க யோசனையை உருவாக்கும் கற்றல் பகுதியிலும் நாம் பிள்ளைகளைக் கவனம் செலுத்தப் பழக்க வேண்டும்!

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு!

கற்றலும், புரிதலும் புரிதலால் வரும் தெளிவே பெரும் ஆனந்தம்!








No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...