குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 30, 2019

காளமேகத்தின் அம்பாள் உபாசனை

காளமேகப் புலவர் அந்தக் காலத்து ரஜனிகாந்தின் பாபா பட கரெக்டர்! இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் கரக்டெர் எப்படி ஒழுக்கமற்ற பாபாவிற்கு வரம் கிடைத்தது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார், இதைப் போல தான் காளமேகத்தாரின் பாட்டுகளைப் பார்த்தால் வசைபாடலும், நக்கலும், தாசிகளுடனான் தொடர்பு என்று ஏராளமாக!! இவர் எப்படிப்பட்டவர் என்று கேள்விக்கு உள்ளாக்கும் படியானவர்!

இத்தனைக்கும் அம்பாளின் பூரண அனுக்கிரகத்தினால் கவிபாடும் ஆற்றல் பெற்றவர். 

எப்படி என்றால் இவர் ஸ்ரீ ரங்கத்து வைணவர், இவரது காதலி மோகானங்கி திருவானைக்கா சைவர்! 

அக்காலத்தில் வைணவர்களும் சைவர்களும் வேற்று மதத்திற்கு ஒப்பானவர்கள்! வேற்று மதத்தவர்கள் மணம் புரிய சம்மதமில்லை! ஆகவே வரதன் என்ற காளமேகம் சிவதீக்ஷை பெற்று மோகனாங்கியைக் கரம்பிடிக்கிறார். சைவரான காளமேகப்புலவர் திருவானைக்கா கோயிலிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டார். 

இப்படி இருக்க அகிலாண்டேஸ்வரி அம்மையார் சன்னதியில் ஒரு உபாசகர் அம்பாளை நோக்கி தான் கவித்துவம் பெறவேண்டும் என்று தீவிரமாக உபாசனை செய்து வந்தார். ஒரு நாள் மோகனாங்கி தான் வரும் வரை இவரை அம்மன் சன்னதியில் காத்திருக்கும் படி கூற இவரும் அங்கு சென்று பிரகாரத்தில் தூங்கிவிட்டார். இரவாகி விட்டது, மற்றொரு புறத்தில் உபாசகர் தனது தீவிர தவத்தை செய்துக் கொண்டிருக்க அம்பிகை பெண்வடிவத்தில் தனது வாய் நிறைய தாம்பூலத்தை குதப்பிக்கொண்டு உபாசகர் அருகில் வந்து வாயைத் திற எனது தாம்பூல எச்சிலை துப்பி உனக்கு கவித்துவம் தருகிறேன் என்று கூறினாள்.

உபாசகரோ தீவிர ஒழுக்க சீலர், பாபா படத்தில் வரும் டெல்லி கணேஷ் மாதிரி, ஆறு நேரம் குளித்து மூன்று நேரம் பூஜை செய்து அம்பாளைப் பூஜிப்பவர். அவரது ஒழுக்க மனதிற்கு தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருப்பவள் அம்பாள் என்று நம்பாமல் எவளோ தனது தவத்தைக் கெடுக்க வந்த தாசி என்று அவளை விரட்டி விட்டார். அருள்புரிய வந்த அம்பாளோ அருகில் மோகனாங்கி மேல் காதல் கொண்டு காத்திருக்கும் வரதனாரைத் தட்டி வாயைத் திற என்று கூற இவரோ தன் காதலி மோகனாங்கி தான் எழுப்புகிறாள் என்று அரைத் தூக்கத்தில் வாயைத் திறக்க அம்பாள் தனது தாம்பூல எச்சிலை துப்பிவிட்டு சென்றுவிட்டாள்! 

மறு நாள் காலையில் எழுந்த வரதனார் எல்லாவிதக் கவியும் பாடும் காளமேகம் ஆனார்!

தீவிர ஒழுக்கத்துடன் அம்பாளை உபாசித்த தவத்தின் பலன் ஒழுக்கமே அற்று தன் காதலியே கதி என்று கிடைத்த வரதரிற்கு கிடைத்தது! 

அம்பாளை கல்லாக கண்ட உபாசகரிற்கு நேரில் வந்தவளை அறிந்துக் கொள்ள முடியவில்லை! தன் காதலியே உலகம் என்று இருந்த வரதனாருக்கும் அம்பாளைத் தெரியவில்லை! ஆனால் வரதனாருக்கு தனது காதலி மேல் காட்டிய அன்பு அம்பாளின் அருளைப் பெற துணையானது! 

பிரபஞ்சத்தின் அருளும் ஆற்றலும் திறந்த மனதுடன் அன்புடையாருக்கே திறக்குமன்றி தீவிர ஒழுக்கம் மட்டும் இருந்துக் கொண்டு எல்லோரையும் அம்பாளாக பார்க்கும் மனப் பண்பு இல்லார்க்கு இல்லை என்பதற்கு காளமேகத்தாரின் கதை ஒரு நீதி!

நாம் எவ்வளவு முயன்றாலும் அவள் அருள் மட்டுமே சித்திக்கு வழி என்பதும், ஆணவம் உள்ள மனம் அவள் அருள் சுரந்தாலும் ஏற்கமாட்டாது என்பதும், ஆணவமற்று திறந்த மனமுடையாருக்கு அவள் அருள் சுரப்பதில் நிபந்தனை இல்லை என்பதும் காளமேகத்தாரின் கதை சொல்லும் தத்துவம்! 


தலைப்பு இல்லை

சிறுவயதில் நானும் எனது தம்பியும் அம்மா தரும் கைக்காசு (Pocket money) சேர்த்து புத்தகம் வாங்க கண்டிக்கு கலைவாணி புத்தக சாலைக்கு போவோம்! இதில் வாங்கியவை புலியூர்க்கேசினின் உரை நூற்கள்! அனேகமாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி என எல்லா நூற்களுமே இருந்தன. 

இந்தப் புத்தகங்கள் பின்னர் இருவரின் சதுரங்க சூதாட்டத்திற்கும் பிணையாகும். வெல்பவர்கள் அவர்கள் நூற்களை கொடுத்து விட வேண்டும். இப்படி புத்தங்களின் ஆட்சி ஆட்டத்திற்கு ஆட்டம் கைமாறும்! 

இதில் புலியூர்க்கேசிகனின் எனக்கு பிடித்த புத்தகம் காளமேகம் தனிப் பாடல்கள்!

ஆனேகமானவை சிலேடை அணியுடையவை, மேற்போக்கான சொல் அமைப்பில் ஒன்றாகவும் ஆனால் அமைதியினாலே இரண்டு மூன்றாகவும் பொருள் விளங்கும் அணி சிலேடையணி. 

இக் காலத்தில் சில இளைஞர்கள் கலாய்த்தல் என்று கூறி செய்யும் அலப்பரையின் மிக உயர்ந்த அறிவுசார் வடிவம்! 

காள மேகத்தின் கலாய்த்தலில் நுண் அறிவும், பொருட்ச் செறிவும் இருக்கும். 

சுவைக்காக ஒன்று, 

தாம் கவிராயர் என்று தற்பெருமை கொண்டிருந்த திருமலைராயரின் புலவர் கூட்டத்திடம் கேட்கிறார்,

வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்

புவிராயர் போற்றும் புலவீரகா ணீவிர்

கவிராயர் என்றிருந்தக் கால்

புவி ஆளும் இந்த திருமலைராயரின் அவையில் வீற்றிருக்கும் புலவர்களே உங்களை நீங்கள் உங்களைக் கவிராயர் என்கிறீர்கள்? அப்படி என்றால் எங்கே உங்கள் வால்? எங்கே உங்கள் நீண்ட வயிறு? முன்னங்கால்கள் எங்கே? உட்குழிந்த கண்கள் எங்கே? 

நீங்கள் குரங்குகளின் அரசன் என்று பொய் சொல்லுகிறீர்கள் என்று கலாய்க்கிறார்!


தலைப்பு இல்லை

மன்னா காலகேயர்கள் நாட்டைத் துவம்சம் செய்து விட்டார்கள்!

ஐயையோ, அப்படியா! சென்ற வாரம் வெற்றிலை கொடுக்கும் போது பாதுகாப்பு பிரதானி ஏதோ சொன்னானே, அதுவா இது?

நாம் நினைத்ததை விட பயங்கரமான பாதிப்பு!

மனதிற்குள்ளே "அப்பாடா, நாம தப்பித்தோம், இது தெரிந்து தானே நாம் நாட்டை விட்டு ஓடி வேங்கட  நாட்டிற்கு வந்தோம்"

சரி, எல்லாம் நல்லது தான், பிரதம மந்திரியின் தலையை உருட்ட நல்ல சந்தர்ப்பம்! 

மன்னா அப்படிச் செய்ய முடியாது, நீங்கள் தானே நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பு! 

மங்குனி அமைச்சரே இப்படிச் சொல்லி எனது கோவத்தைக் கிழறாதீர், நான் எப்படிப் பொறுப்பாக முடியும்! அதற்கு தான் ஒரு செயலாளர் இருக்கிறார், காவல் பிரதானி இருக்கிறார்! அவர்கள் தானே பொறுப்பாக முடியும்! அவர்களைப் பதவி விலகச் சொல்ல வேண்டும். நான் சொல்வதைச் செய்யும்!

முதலாவது என்னைப் பற்றி எவரும் மீம்ஸ் போட்டுவிடக் கூடாது, அத்துடன் காலகேயர்களை பிடிக்க முடியாது! ஆகவே மார்க் சுக்கபனின் அரசின் படைகள் இரண்டை தற்காலிகமாக சிறைப்பிடிக்க உத்தரவிடுகிறேன்!

மன்னா, மார்க் சுக்கப்பனின் அரசின் உதவியுடன் பாதிப்பு நடந்த இடங்களுக்கு பொருள் உதவியும், இரத்த உதவியும் நடக்கிறது, அது தடைப்பட்டுவிடும்! மேலும் எமது புலனாய்விற்கும் உதவியாக இருக்கும், காலகேயர்களுக்கு உதவுபவர்கள் தமது எண்ணத்தை வெளிக் காட்டுவார்கள்! இலகுவாக பிடித்து விடலாம்!

மங்குனி அமைச்சரே, நீர் வர வர பிரதம மந்திரியார் போல் பேசுகிறீர், வெகுவிரைவில் உமக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்! நான் சொல்லுவதை மட்டும் செய்யும்! 

சரி மன்னா, உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யவா? 

மங்குனி அமைச்சரே, உமக்கு எனது திட்டமே புரியவில்லை! நான் ஏன் இங்கு வந்தேன் என்றும் புரியவில்லை! இந்த வெங்கட தேசத்திலும் காலகேயர்கள் இருக்கலாம், அதனால் உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் தான், அல்லது என்னைக் குறிவைத்துவிட்டால் அதற்காக எமது நாட்டிற்கு உடனடியகத் திரும்பக் கூடாது! இப்போது சென்றால் என்னால் சமாளிக்க முடியாது என்று உமக்குத் தெரியாதா! ஆகவே உலகின் பாதுகாப்பான நாடான சிங்கபுரிக்கு செல்வோம்! 

மந்திரியார் மனதிற்குள், 

மன்னா உங்களைப் போன்ற ஒருவரிற்கு காலகேயர்கள் கட்டாயம் குறிவைக்க மாட்டார்கள், உங்களைப் போன்ற ஒருவர் இருந்தால் தானே அவர்கள் இப்படியான காரியங்களை இலகுவாக செய்ய முடியும்! ஆகவே பயம் வேண்டாம்

புலிகேசியார், என்ன மந்திரியாரே மனதிற்குள் என்ன கேலிப்பேச்சு!

மந்திரியார்,

இல்லை மன்னா, மார்க் சுக்கப்பனை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் என்னவென்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

நல்லது அத்துடன் சேர்த்து வைபனை பிடித்து வையும்! அவனும் தேவையற்ற தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பான்!

ஆகட்டும் மன்னா!!!

~ 23ம் புலிகேசி இரண்டாம் பாக நாவலில் இருந்து ஒரு காட்சி ~ 

~ யாவும் கற்பனை ~ 

Disclaimer: 

இது எனது கற்பனையில் உதித்த கதையின் ஒரு பாகம், இந்தக் கதையின் சம்பவங்களைத் தொடர்புபடுத்தி யாராவது செய்யும் சுயவியாக்கியானங்களுக்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாகமாட்டார்!


சிறைமீண்டன உலகை ஆளும் தகவல் பேரரசுகள்!

பேஸ்புக் 
வாட்ஸ்அப் 
வைபர்
மூன்று தகவல் பேரசுகளையும் 09 நாட்கள் சிறை வைத்த மாமன்னர் வாழ்க! 
இன்று முதல் நீவீர் சிறைப் பிடித்த வெற்றியின் நினைவாக "பேஸ்புக் கொண்ட 23ம் புலிகேசி என்று அழைக்கப்படுவீர்கள்! 
23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தின் காட்சிகளிலிருந்து....
-- யாவும் கற்பனை -

Sunday, April 28, 2019

தலைப்பு இல்லை

எனக்கு இருக்கும் கற்றலும், நூல்கள் மேலான ஆர்வமும், சரபோஜி மன்னனுக்கு இருந்த நூல்களைச் சேகரிக்கும் ஆர்வத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தஞ்சை சரபோஜி மன்னர் முற் பிறப்பில் எனது நண்பராக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதில் மிகையில்லை என்று நினைக்கிறேன். 

இதுவரை மூன்று தடவை தஞ்சை சரஸ்வதி மகால் சென்றும் புத்தகசாலையைத் தாண்டி இன்னும் போகவில்லை, நூல்கள் வாங்குவதிலேயே நேரம் செலவாகிவிட்டது! 

இதுவரை சரஸ்வதி மஹால் பதிப்பித்த நூல்களில் வாங்காமல் விட்ட கடைசித் தொகுதி நூற்கள் வாங்கியாகிவிட்டது. 

அடுத்த முறை தான் தஞ்சை அரண்மனையும் அருங்காட்சியகமும் பார்க்க வேண்டும்!


தலைப்பு இல்லை

சென்ற முறை சென்னை விஜயத்தின் போது 99Km Filter Coffee - Acharapakkam, கடைக்கு நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றார். கடை இயற்கை விவசாயப் பொருட்களையும், பாரம்பரிய உணவு வகைகளையும் விற்பனை செய்கிறது. அதன் விற்பனை கருத்து (business concept) நன்றாக பிடித்திருந்தது. 

கடையின் ஒருபகுதி இயற்கை விவசாயப் புத்தகங்கள் இருக்க அதில் மூழ்கிப் போக கண்களில் கண்ட புத்தகம் தான் இந்த "ரசவாதி"

பொதுவாக நாவல்கள் வாசிக்கும் பழக்கம் சாண்டில்யன் கல்கியைத் தாண்டி வரவில்லை என்றாலும், இந்தப் புத்தகம் ஏதோ ஈர்த்தது. 

நேற்று வாசிக்க எடுத்த புத்தகம் வேலைகளுக்கு மத்தியில் இன்று மத்தியானம் பூர்த்தியானது. 

ஒருவன் தனது கனவைத் தேடி பயணிக்கும் போது எப்படி பிரபஞ்சம் வழிகாட்டுகிறது, எதிர்ப்புகள் வருகிறது அதை மீறி எப்படி ஏமாற்றங்களுக்கு, சோர்வுகளுக்கு மத்தியில் இறுதியாக தனது கனவை அடைகிறான் என்பதை ஒரு மறையியல், தத்துவ பாணியில் கூறுகிறது. 

மேற்கத்தேய தத்துவ ஞான மரபினை புரிந்துக் கொள்ள நல்ல நூல்!

தமிழில் நாகலக்ஷ்மி சண்முகம் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


Saturday, April 27, 2019

தலைப்பு இல்லை

ஒரு முறை நிறுவனத்தின் தொடர் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் படி நிறைவேற்று இயக்குனர் எனக்கு உத்தரவிட்டார். அவர் கூறிய முக்கியமான ஒரு விடயம் இதை Pareto rule இனை வைத்துக் கொண்டு ஆராயும் படி. 
இது என்ன சொல்கிறது 80:20, அதாவது 80% பிரச்சனையை உருவாக்குபவர்கள் 20%  சிறிய அளவில் உள்ளவர்கள். 
ஆனால் பொதுவாக நிறுவனம் 80% பிரச்சனை 80% பெரும்பான்மை ஊழியர்களிடமிருந்து வருவதாக நம்பிக் கொண்டு இருக்கும். 
எனது ஆய்வில் இது நிருபணமும் ஆகியது, குறித்த 20% பிரச்சனை உருவாக்க காரணிகளில் கவனத்தை செலுத்தினோம். 
இன்று இலங்கையின் பிரச்சனையும் இது தான் 20% குறைவான முஸ்லீம் அடிப்படை வாதிகளால் பெரும் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த 20% இனை சரியாக கையாண்டால் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். 
அரசு சிந்திக்குமா!

கோடாலிகாம்பு

அவன் ஒரு கோடாலிக்காம்பு என்று விழிப்பது பழையவர்கள் சமூகத்திற்கு எதிராக இருப்பவர்களை கூறும் பழமொழி! 

மரங்கள் எல்லாம் பூமிக்கு பலன் தருபவை தான் ஆனால் மரம் வெட்டுபவனின் கோடாலிக்கு காம்பாகினால் தனது இனத்தையே அழிக்கும்! 

இதைப் போல் தான் மதங்களில் உள்ள அனேகர் நல்லவர்கள் தான் ஆனால் ஒரு கோடாலிக்காம்பு உருவாகிவிட்டால் அந்த மதத்தில் உள்ள பலரை அழிக்காமல் விடாது! 

ஆகவே பெரும்பாலும் நல்லவர்கள் இருந்தாலும் கோடாலிக் காம்புகள் பற்றி எப்போதும் அவதானமாக இருப்பது அனைவரதும் பொறுப்பு!


தலைப்பு இல்லை

ரசவாதி என்று உலகப்புகழ் பெற்ற ஒரு தத்துவ நாவல், தமிழில் கிடைக்கிறது! 

இதில் ஒரு ஞானிக்கும், ஞானம் பெறவந்த இளைஞனுக்குமான உரையாடல் வாழ்வை எப்படி சம நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துக் கொள்ள அனைவருக்கும் தேவையானது. 

ஞானம், மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று சென்ற இளைஞன் ஒருவர் ஒரு பெரிய மாளிகையில் வசிக்கும் ஞானியை சந்திக்கிறார். அவர் அவனைச் சந்திக்க நேரமாகும் என்று அந்தப் பெரிய மாளிகையை சுற்றி வரும்படி கூறி ஒரு கரண்டியில் இரண்டு துளி எண்ணெயை கொடுத்து அதை சிதறாமல் கொண்டு வரவேண்டும் என்று நிபந்தனை கொடுத்து வரப் பணிக்கிறார். அவனும் அதன் படி செய்து எண்ணெயை சிதறாமல் கொண்டு வருகிறான். பின்னர் ஞானி கேட்கிறார் அழகிய திரைச் சீலைகளைப் பார்த்தாயா? பூந்தோட்டத்தைப் பார்த்தாயா? நூலகத்தைப் பார்த்தாயா? என்று அதற்கு இளைஞன் எதையும் பார்க்கவில்லை எண்ணெய்த் துளி சிதறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் எதையும் பார்க்கவில்லை என்றான். 

அதற்கு ஞானி சரி இன்னொரு தடவை சென்று அதே எண்ணெய் கரண்டியுடன் சென்று எல்லாவற்றையும் பார்த்து வா என்று சொல்ல இளைஞனும் சுற்றி பார்த்து வந்தான். வந்த உடனே தான் பார்த்த எல்லாவற்றையும் அப்படியே சரியாக ஒப்புவித்தான். எல்லாவற்றையும் கேட்ட ஞானி சரி எண்ணெய்த்துளி எங்கே என, கொட்டி விட்டது என்றான். 

சிரித்துக் கொண்ட ஞானி எப்போது எண்ணெய்த்துளியை சிந்தாமல், உலகின் அழகையும் இரசிக்கப் பழகுகிறாயோ அப்போது உனக்கு மகிழ்ச்சிக்கான வழி கிடைக்கும் என்று கூறினார். 

இதுப் போலவே நாம் எமது தினசரி வாழ்வில் சம நிலை இன்மையால் தொழில், படிப்பு, குடும்பம் என்று ஒன்றை மட்டும் கவனித்துக் கொண்டு அழகிய உலகின் இன்பங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம்.


Friday, April 26, 2019

23ம் புலிகேசியின் சிறப்பு ஆட்சி

அரசு என்பது நாட்டையும் குடிகளையும் பாதுகாப்பதற்குரியது! அதைவிடுத்து தனது எதிராளியை அவமானப்படுத்துவதற்குரிய களமாகவும், சொந்த ஆணவத்திற்கு இரை போடவும் ஆட்சிக்கு வந்தால் 23ம் புலிகேசி ஆட்சி தான் நடக்கும். 

நடக்கப்போவது தெரிந்தும் ஏதோ சிறிய பட்டாசு வெடிக்கப் போகிறார்கள், இரண்டு பேரின் மூஞ்சில சிறிய காயம் வரும் அதை வைத்துக் கொண்டு அதற்குப் பொறுப்பான புலிகேசி மன்னனைச் சாடலாம் என்ற எண்ணத்தில் பிரதம மந்திரியும், தனக்கு பிடிக்காத மந்திரியை நீக்க முடியவில்லையே என்ற சொந்த எரிச்சலை உள்ளுக்குள் வைத்திருந்து கொண்டு, காபியில் சக்கரை குறைவாக குடிக்க வேண்டும், மஞ்சள் கோட்டை வெள்ளைக் கோடாக்க வேண்டும், மரங்கள் வெட்டக் கூடாது, முன்னாள் அரசர் நுள்ளி விட்டார், கிள்ளிவிட்டார் என்று அவதூறு பரப்புவதுடன் மட்டும் நின்றுக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து பல தந்திரோபாயங்களை வகுத்த புலிகேசி மன்னருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையே இன்றைய நிலை! 

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று கக்கக போ என்று மன்னருக்கு பாடல் பாடும் மற்ற அமைச்சர்கள்!

~ யாவும் கற்பனை ~


தலைப்பு இல்லை

கருத்தை விட்டு சொற்களைப் பிடித்து வாதாடும் முறை மாறும் வரை புரிந்துணர்வு என்பது ஏற்பட முடியாது. நான் நேற்று முன் தினம் பதிந்த எண்ணங்களின் செயற்பாடுகள் எத்தகையது என்பதற்கு காட்டிய உதாரணத்தை ஒருவர் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக பிரார்த்தனை செய்யப்பட்டதால் தான் பேரழிவு ஏற்பட்டது என்று வியாக்கியானப்படுத்தி மூடத்தனம் என்று தனது முக நூல் பக்கத்தில் சாடியிருந்தார். 

எண்ணங்களின் இயக்கத்தின் நுண்மை பற்றி எந்த வாசிப்பும் பரீட்சயமும் ஆய்வும் இல்லாமல் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எதுகை மோனையுடன் எதிராளியை நக்கலடித்து கேலி செய்து கண்டனம் செய்யும் பழைய மரபு அது! 

நான் ஒரு Chaos theory ஆய்வாளன். எனது ஆய்வு முதன்மையாக சூழலியலில் இதன் பிரயோகம். பின்னர் மனம், எண்ணங்களில். 

Chaos theory என்ன சொல்லுகிறது என்றால் ஆபிரிக்காவில் பறக்கும் ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை ஏற்படுத்தும் அதிர்வினால் உண்டாகும் தாழமுக்கம் வங்களா விரிகுடாவில் புயலாக மாறும் என்று!

இதை நேர்கோட்டுச் சிந்தனையில் (Linear thinking) சிந்திப்பவர்களுக்கு பார்க்க வெறும் கேலிக் கூத்தும் மூடத்தனமுமாகத் தான் தோன்றும். ஆனால் இயற்கையின் நுண்மையில் ஒவ்வொரு சிறு அதிர்வுமே பேரதிர்வாக மாறுகிறது.

இது எண்ணங்களுக்கும் பொருந்தும், நாம் தனிப்பட எண்ணும் எண்ணங்கள் சேர்ந்து எமது மனத்தை ஆக்குகிறது. பல மனங்கள் சேர்ந்து கூட்டு மனமாக ஒரு சமூகத்தின் மனமாக மாறுகிறது. எந்தச் சமூகத்தின் மனதிற்குள் எமது மனம் இருக்கிறதோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ணமே எமது தலைவிதியைத் தீர்மானிக்கும்! இப்படி சமூக மனம் ஆளத் தொடங்கிய பின்னர் நாம் தனிப்பட நல்லவர்களாக இருந்தாலும் சமூக மனத்தின் தீமைகளை ஏற்றுக்கொண்டு பலன்களை அனுபவிக்க வேண்டியவர்களாகி விடுவோம். 

இதற்கு உதாரணமாக பல நல்ல இஸ்லாமியர்கள் இருந்தாலும் ஏற்பட்டிருக்கும் வலிமையான மதத்தின் பெயரால் ஏற்படும் தீவிரவாதத்தால் அனைவரும் இதற்குள் அடக்கப்படுவது போல! 

நல்ல பல இலங்கையர்கள் இருந்தாலும் முட்டாள்களும் கையாலாகதவர்களும் ஆட்சியில் இருந்தால் துன்பத்தை அனுபவிப்பது போல! 

ஆகவே பிரபஞ்சத்தில் எதற்கும் நக்கல், கேலி, விளையாட்டுக்கு என்று எதுவும் இல்லை! ஒவ்வொரு எண்ணமும் பெருவிளைவை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.


Wednesday, April 24, 2019

தலைப்பு இல்லை

எண்ணங்கள் வலியது, எவராவது அழிய வேண்டும் என்று நாம் வலிந்து எண்ண, அது எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் திருப்பித்தாக்கும். 

ஒரு அரசியல் வாதிக்கெதிரான தேவாலயங்களில் பிரார்த்தனை, பிரான்ஸ் தேவாலயத்தின் அழிவு, இலங்கை தேவாலயங்களில் உயிரிழப்பு இவற்றை நுணுக்கி ஆராய்ந்தால் இந்த நுண் தொடர்பு இருப்பது புரியும்.

ஆகவே தான் தென் நாட்டில் நாம் வணங்குபவனை சிவன் என்று நாம் கூறி வணங்கினாலும் மற்ற எந்த நாட்டவர்களுக்கும் எந்தப் பெயரிலாவது இருக்கும் அதே இறைவனைப் போற்றி வணங்குகிறார்கள் என்ற உண்மை தெரிந்து பகைமை, குரோதம் கொள்ளாது எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்று எண்ணச் சொன்னார்கள்.

விதை ஒன்று போட செடி வேறொன்று வராது, பகைமை அற்ற நல்லெண்ணம், நிபந்தனை அற்ற அன்பு இவையிரண்டுமே உலகின் தற்போதைய நோய்க்கு சிக்கன மருத்துவம்!


தலைப்பு இல்லை

எண்ணங்கள் வலியது, எவராவது அழிய வேண்டும் என்று நாம் வலிந்து எண்ண, அது எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் திருப்பித்தாக்கும். 

ஒரு அரசியல் வாதிக்கெதிரான தேவாலயங்களில் பிரார்த்தனை, பிரான்ஸ் தேவாலயத்தின் அழிவு, இலங்கை தேவாலயங்களில் உயிரிழப்பு இவற்றை நுணுக்கி ஆராய்ந்தால் இந்த நுண்தொடர்பு இருப்பது புரியும். 

ஆகவே தான் தென் நாட்டில் நாம் வணங்குபவனை சிவன் என்று நாம் கூறி வணங்கினாலும் மற்ற எந்த நாட்டவர்களுக்கும் எந்தப் பெயரிலாவது இருக்கும் அதே இறைவனைப் போற்றி வணங்குகிறார்கள் என்ற உண்மை தெரிந்து பகைமை, குரோதம் கொள்ளாது எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்று எண்ணச் சொன்னார்கள்.

விதை ஒன்று போட செடி வேறொன்று வராது, பகைமை அற்ற நல்லெண்ணம், நிபந்தனை அற்ற அன்பு இவையிரண்டுமே உலகின் தற்போதைய நோய்க்கு சிக்கன மருத்துவம்!


தலைப்பு இல்லை

சித்ரா பவுர்ணமியில் கைகளில் வந்து நம்ம வீட்டுக்கு வந்த மெய்ஞான குரு அகத்தியர்

Tuesday, April 23, 2019

தலைப்பு இல்லை

பாதுகாப்பாக வீடு திரும்பியாயிற்று, விமானத்திலிருந்து நாட்டில் கால்களை வைக்கும் போது கண்களில் தானாக நீர் பெருகியது, 

love and humanity is a needed religion! 

Respecting each and everyone is a needed religion!

Loving and caring our mother land is a needed religion!

We must love not only Sri Lanka, entire humanity, world and nature!

Loka Samastha Sukhino Bhavantu

எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க!!


தலைப்பு இல்லை

பாதுகாப்பாக வீடு திரும்பியாயிற்று, விமானத்திலிருந்து நாட்டில் கால்களை வைக்கும் போது கண்களில் தானாக நீர் பெருகியது, 

love and humanity is a needed religion! 

Respecting each and everyone is a needed religion!

Loving and caring our mother land is a needed religion!

We must love not only Sri Lanka, entire humanity, world and nature!

Loka Samastha Sukhino Bhavantu

எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க!!


Friday, April 19, 2019

தலைப்பு இல்லை

Birth place of Kiriyababaji as per Yogiar Ramaiya, Parangipettai, Kudalur district, Tamil Nadu

தலைப்பு இல்லை

Today Poornima morning SRI Aurobindo ashram 

SRI AUROBINDO’S GAYATRI MANTRA

Om Tat Savitur Varam Rupam, 

Jyoti Parasya Dhimahi Yannah Satyena Dipayet. 

[Tat = That, Savitur = Sun-god who is the Creator, Varam = most auspicious, Rupam = form, Jyotih = Light, Parasya = of the Lord (since para = Transcendental),Dhimahi = meditate on (since Dhi = Intellect), Yannah = by which, Satyena = Truth, Dipayet = illumine (dipa = light) ]

“The power of the Gayatri is the Light of the divine Truth. It is a mantra of Knowledge.”

—SRI AUROBINDO

*

“The Gayatri mantra is the mantra for bringing the light of Truth into all the planes of the being.”

—SRI AUROBINDO

(Note: According to M.P.Pandit, the original 'Gayatri Mantra' was intended for illumining the intellect, while Sri Aurobindo’s modification of the Gayatri Mantra is intended for supramentalization )


Tuesday, April 16, 2019

தலைப்பு இல்லை

ஏகாதசி ஸ்ரீ தத்த குருவிற்கு அபிஷேகம்!!!

Sunday, April 14, 2019

தலைப்பு இல்லை

Golden Hexagon Star

தமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா?

நண்பர் ஒருவர் தமிழ் வருடங்கள் அறுபதிற்கும் எப்படிப் பெயர் வந்தது என்பதற்கு அபிதான சிந்தாமணியில் கூறப்பட்ட கதை ஒன்று பகிர்ந்திருந்தார். 

இதை ஏற்கனவே சில நாத்திகவாதிகள் ஆபாசமாக சித்தரித்து முன்னர் பேசியிருக்கிறார்கள். 

இவர்களுக்கு கூற விரும்புவது ஒவ்வொரு சமூகத்திலும் அந்த அந்த அறிவுத் தரத்திற்குத் தக்க ஒவ்வொரு விஷயத்தையும் கூறும் வட்டார வழக்கு இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. இப்படி வட்டார வழக்கை வரலாற்றுத் தகவலாகவும் ஒரு சமூகத்தினதும் வரலாறாகவும் அறிவு மட்டமாகவும் கருதுவது தவறானது. இப்படி நம்புவது ராணி காமிக்ஸில் மாயாவி இருந்தார் என்பதை PhD ஆய்வு செய்கிறேன் என்பது போன்ற வேடிக்கையான விஷயம். 

அறுபது வருடங்கள் ஏன் வந்தது என்பதை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்க வேண்டும். முற்காலத்தில் ஜோதிடம் என்பது சித்தாந்தம், கணிதம், சம்ஹிதை, என மூன்று பகுதிகளைக் கொண்டது. 

சித்தாந்தம் என்றால் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குரிய வானவியல் கணிதம். அதாவது Astronomical calculations. சைவ சித்தந்தம் அல்ல...

கணிதம் என்பது ஒரு மனிதனுக்குரிய ஜாதகத்தைக் கணிப்பதற்கான கணிதப் பகுதி. இதில் ராசிக் கட்டம், நவாம்சம், தசாம்சம், இப்படி பல நூறு வகையுண்டு. 

இப்படி கணிக்கப்பட்ட கணிதத்தின் படி பலன் கூறப்படுவதற்குரிய விதிகள் சம்ஹிதை எனப்படும். 

இன்று ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் பலர் சம்ஹிதையில் தேர்ச்சி பெற்றவர்களே அன்றி சித்தாந்தத்திலோ கணிதத்திலோ அல்ல, இன்று சித்தாந்தத்தையும் கணிதத்தையும் கணணி செய்து விடுகிறது. 

சித்தாந்தமும் கணிதமும் அறிவியல் (Science)

சம்ஹிதை ஒருவித உள்ளுணர்வுடன் கூடிய கலை (Intuitive art).

சித்தாந்தம் வானியலைப் பற்றியும் உடுக்கள் பற்றியும் தெளிவாகக் கூறும். 

அறுபது வருடங்களுக்கான விளக்கம் என்பதை அபிதான சிந்தாமணியில் தேடாமல் சித்தாந்தத்தில் தேடினால் சரியான விளக்கம் கிடைகும். 

எமது வருடப் பிறப்பு சூரியனை அடிப்படையாகக் கொண்டது, இன்று சித்திரை பிறந்தது என்பது மீன இராசியில் நின்ற சூரியன் மேஷத்திற்குள் வந்துள்ளது என்பதே அர்த்தம். இப்படி ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு என்பதும் சூரியன் ஒவ்வொரு இராசிக்குள்ளும் செல்லும் நிகழ்வு, வைகாசி என்பது சூரியன் ரிஷபத்தில் புகுவது. இப்படி பன்னிரெண்டு மாதங்கள் என்பது 360° உடைய நட்சத்திர மண்டலங்களை கடக்க எடுப்பதை ஒரு வருடம் என்கிறோம். இது ஒரு வானவியல் நிகழ்வு, இதில் மதமோ, மூட நம்பிக்கையோ இல்லை. 

இப்படி சூரியன் 12 மாதங்களில் 30° உடைய இராசியைக் கடக்கும் போது, அதே அளவு தூரத்தை வியாழக் கிரகம் ஒரு வருடத்தில் கடக்கும். அதே போல் அதை விடப் பெரிய நீள்வட்டத்தில் கடக்கும் சனி 30° ஐக் கடக்க இரண்டரை வருடங்கள் எடுக்கும். 

இப்படி வியாழனும் சனியும் சேர்ந்து ஒன்றாக ஒரே இராசிக்கு வருவதற்கு 60 வருடங்கள் ஆகும். 

ஆக இந்த 60 வருடங்கள் என்ற கணக்கு வியாழனும் சனியும் இயங்கும் சுற்றினை குறிக்கும் நிலைகளாகும்.

இன்று தனுசு இராசியில் சனி 26°,11' 20.62" இல் நிற்கிறது, வியாழன் 00°11' 40.26" இல் நிற்கிறது. 

இன்று பஞ்சாங்கத்தில் சனியும் வியாழனும் இருப்பது போல் சரியாக அறுபது வருடத்திற்கு பின்னர் 2079 இல் இருக்கும். 2079 ம் வருடத்தை நாம் மீண்டும் விகாரி வருடம் என்று அழைப்போம். 

இந்த வியாழன் சனி சேர்க்கையின் அடிப்படையிலேயே சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுவார்கள். உங்கள் 60 வயதில் சரியாக நீங்கள் 60 வருடங்களுக்கு முன்னர் பிறந்த நேரத்தில் சனியும் வியாழனும் எந்த இராசியில் நின்றார்களோ அந்த இராசியில் அப்போது இருப்பார்கள். 

இந்தக் கணிதம் ஐந்தாம் நூற்றாண்டு ஆரியப்பட்டர் எழுதிய சமஸ்க்ருத வானியல் நூலான சூரிய சித்தாந்தத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 

ஆக நம்ம முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை!


தமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா?

தமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா?
******************************************************
நண்பர் ஒருவர் தமிழ் வருடங்கள் அறுபதிற்கும் எப்படிப் பெயர் வந்தது என்பதற்கு அபிதான சிந்தாமணியில் கூறப்பட்ட கதை ஒன்று பகிர்ந்திருந்தார்.

இதை ஏற்கனவே சில நாத்திகவாதிகள் ஆபாசமாக சித்தரித்து முன்னர் பேசியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு கூறுவிரும்புவது ஒவ்வொரு சமூகத்திலும் அந்த அந்த அறிவுத்தரத்திற்குத் தக்க ஒவ்வொரு விஷயத்தையும் கூறும் வட்டார வழக்கு இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இப்படி வட்டார வழக்கை வரலாற்றுத்தகவலாகவும் ஒரு சமூகத்தினதும் வரலாறாக அறிவு மட்டமாக கருதுவது தவறனது. சித்தரித்து நம்புவது ராணி காமிக்ஸில் மாயாவி இருந்தார் என்பதை PhD ஆய்வு செய்கிறேன் போன்ற வேடிக்கையான விஷயம்.

அறுபது வருடங்கள் ஏன் வந்தது என்பதை அந்தத்துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்கவேண்டும். முற்காலத்தில் ஜோதிடம் என்பது சித்தாந்தம், கணிதம், சம்ஹிதை, என மூன்று பகுதிகளைக் கொண்டது.

சித்தாந்தம் என்றால் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குரிய வானவியல் கணிதம். அதாவது Astronomical calculations. சைவ சித்தந்தம் அல்ல...

கணிதம் என்பது ஒரு மனிதனுக்குரிய ஜாதகத்தைக் கணிப்பதற்கான கணிதப்பகுதி. இதில் ராசிக்கட்டம், நவாம்சம், தசாம்சம், இப்படி பல நூறு வகையுண்டு.

இப்படி கணிக்கப்பட்ட கணிதத்தின் படி பலன் கூறப்படுவதற்குரிய விதிகள் சம்ஹிதை எனப்படும்.

இன்று ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் பலர் சம்ஹிதையில் தேர்ச்சி பெற்றவர்களே அன்றி சித்தாந்தத்திலோ கணிதத்திலோ அல்ல, சித்தாந்தத்தையும் கணிதத்தையும் கணணி செய்து விடுகிறது.

சித்தாந்தமும் கணிதமும் அறிவியல் (Science)
சம்ஹிதை ஒருவித உள்ளுணர்வுடன் கூடிய கலை (Intuitive art).

சித்தாந்தம் வானியலைப் பற்றியும் உடுக்கள் பற்றியும் தெளிவாகக் கூறும்.

அறுபதுவருடங்களுக்கான விளக்கம் என்பதை அபிதான சிந்தாமணியில் தேடாமல் சித்தாந்ததில் தேடினால் சரியான விளக்கம் கிடைகும்.

எமது வருடப்பிறப்பு சூரியனை அடிப்படையாகக் கொண்டது, இன்று சித்திரை பிறந்தது என்பது மீன இராசியில் நின்ற சூரியன் மேஷத்திற்குள் வந்துள்ளது என்பதே அர்த்தம். இப்படி ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு என்பதும் சூரியன் ஒவ்வொரு இராசிக்குள்ளும் செல்லும் நிகழ்வு, வைகாசி என்பது சூரியன் ரிஷபத்தில் புகுவது. இப்படி பன்னிரெண்டு மாதங்கள் என்பது 360° உடைய நட்சத்திர மண்டலங்களை கடக்க எடுப்பதை ஒரு வருடம் என்கிறோம். இது ஒரு வானவியல் நிகழ்வு, இதில் மதமோ, மூட நம்பிக்கையோ இல்லை.

இப்படி சூரியன் 12 மாதங்களில் 30° உடைய இராசியைக் கடக்கும் போது, அதே அளவு தூரத்தை வியாழக்கிரகம் ஒரு வருடத்தில் கடக்கும். அதே போல் அதைவிடப் பெரிய கிரகமான சனி 30° ஐக் கடக்க இரண்டரை வருடங்கள் எடுக்கும்.

இப்படி வியாழனும் சனியும் சேர்ந்து ஒன்றாக ஒரே இராசிக்கு வருவதற்கு 60 வருடங்கள் ஆகும்.

ஆக இந்த 60 வருடங்கள் என்ற கணக்கு வியாழனும் சனியும் இயங்கும் சுற்றினை குறிக்கும் நிலைகளாகும்.

இன்று சனி தனுசு இராசியில் 26°,11' 20.62" இல் நிற்கிறது, வியாழன் 00°11' 40.26" இல் நிற்கிறது.
இன்று பஞ்சாங்கத்தில் சனியும் வியாழனும் இருப்பது போல் சரியாக அறுபது வருடத்திற்கு பின்னர் 2079 இல் இருக்கும். 2079 ம் வருடத்தை நாம் மீண்டும் விகாரி வருடம் என்று அழைப்போம்.

இந்த வியாழன் சனி சேர்க்கையின் அடிப்படையிலேயே சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுவார்கள். உங்கள் 60 வயதில் சரியாக நீங்கள் 60 வருடங்களுக்கு முன்னர் பிறந்த நேரத்தில் சனியும் வியானும் எந்த இராசியில் நின்றார்களோ அந்த இராசியில் அப்போது இருப்பார்கள்.

இந்தக்கணிதம் ஐந்தாம் நூற்றாண்டு ஆரியப்பட்டர் எழுதிய சமஸ்க்ருத வானியல் நூலான சூரிய சித்தந்தத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆக நம்ம முன்னோர்கள் ஒண்ணும் மூட்டாள்கள் இல்லை!



தலைப்பு இல்லை

அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! 
உடன் இதைக் காண்போர் அனைவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா 
என்று பிரார்த்திக்கிறோம்!

Saturday, April 13, 2019

தலைப்பு இல்லை

இன்று ஒரு சிறு வாதம்.... சிந்தனைக்கு
உங்களைப் புரிந்து கொள்ளாதவருடன், கேலி செய்யும், மதிப்பளிக்காதவருடன் ஏன் வீணாக உரையாடுகிறீர்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார். 
இப்படியான கேள்வியில் எனக்கு தர்க்க ரீதியாக ஒரு முரண்பாடு இருப்பதாகவே எப்போதும் எனது மனம் கூறும். 
ஏன், உரையாடுகிறோம் புரிதலை வளர்க்கத் தானே, 
ஒருவர் எம்மைப் பற்றி தவறாக பேசுகிறார் என்றால் அவருடன் தானே நாம் அதிகம் உரையாட வேண்டும். அவர் அப்படிப் பேசுவதற்கு என்ன காரணம் என்பது உரையாடினால் தானே தெரிய வரும். 
ஒருவர் எமது திறனைப் பற்றி தெரியாமல் மதிக்கவில்லை என்றால் அவருக்கு அதைத் தெரியபடுத்துவது தானே எமது கடமை! 
மருந்து யாருக்கு நோயாளிக்கா? ஆரோக்கியவானுக்கா? நோயாளிக்குத் தானே?
ஆகவே எமது கருத்துகளுக்கு முரண்படுபவர்களுடன் அன்புடன் உரையாடும் பண்பினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும், உரையாடுபவர் புரிந்து கொள்கிறார் இல்லை என்றால் அவரிற்கு புரிதலுக்கான தகுந்த கால அவகாசம் தரப்படல் வேண்டும். 
எவரும் உயர்ந்தவருமில்லை, தாழ்ந்தவரும் இல்லை! 
மனதில் அன்பிருந்தால் எவரும் யாருக்கும் அன்னியம் இல்லை!

தலைப்பு இல்லை

நாளை வசந்த நவராத்ரி பூர்த்தியாகிறது,

இப்படியான நாளில் ஆடு பலி கொடுப்பது விஷேஷமாக கருதப்படுகிறது. 

அதுவும் பைரவரிற்கு, ஆகவே அனைவரும் ஆடு பலிக் கொடுப்பதற்கு தயாராக வேண்டும். 

.

.

.

.

.

.

.

..

...

குரு பைரவ ஸ்வரூபம், 

பைரவருக்கு பிரியமான பலி ஆடு

ஆடு ஆர்வத்துடன் துள்ளிப் போய் ஒரு செடியைக் கடிக்கும், இரண்டு இலை சாப்பிட்டவுடன் அடுத்த செடிக்கு மாறும். இறுதியில் எல்லாச் செடியையும் கடித்து நாசம் செய்து விட்டு ஒரு லீட்டர் பால் மட்டும் தரும்.

இனி விஷயத்திற்கு வருவோம், சில அன்பர்கள் சாதனை தொடங்குவார்கள், சிறிது காலம் செய்வார்கள், அவர்களது பிரச்சனைகள் எல்லாம் உடனடியாக தீரவேண்டும். இல்லாவிட்டால் வேறு குருவைத் தேடிச் செல்வார்கள். அவரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டு மீண்டும் சாதனை செய்வார்கள். உடனடியாக பலன் வேண்டும், கிடைக்கவில்லை என்றால் அடுத்த குரு, இப்படிப் பயணம் தொடரும். இதில் குரு சற்று கடிந்துக் கொண்டால் குருவில் குறையும் காணத் தொடங்கி விடுவார்கள்.

இப்படி சலனிக்கும் மனதில் உள்ள ஆட்டுப் புத்தியை குருவாகிய பைரவரிற்கு பலியிட்டு விட்டு தனக்கு கிடைத்த சாதனையை கடைசி வரை விடாமல் சாதகம் செய்யும் சாதகருக்கே மனம் ஒருமைப்படும், அதை விடுத்து அந்த மந்திரம், இந்த தந்திரம், அந்த வித்தை, இந்த வித்தை என்று எங்கும் ஓடத் தேவையில்லை. ஆட்டுப் புத்தி இல்லாமல் கிடைப்பதை சரியாக சாதகம் செய்தாலே கேட்காமல் எல்லாம் கிடைக்கும்!

ஆகவே நாளை இராம நவமி வசந்த நவராத்ரியில் உங்களிடம் இருக்கும் ஆட்டுப் புத்தியை பைரவரிற்கு பலியிட்டு உங்கள் பூர்வ புண்ணிய பலனால் கிடைத்த இந்த இறை சாதனையை சிரத்தையாக தினசரி சாதனையாக தொடர்ந்து செய்து வருவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 

சலனிக்கும் புத்தியை இறையிடம் ஒப்படைத்து மனதைத் தூய்மைப்படுத்துவதே ஆட்டுப்பலி! 

பதிவை ஒழுங்காக படிக்காமல் எவராவது வீட்டில் ஆடு பலி கொடுத்தால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை!   


ஏன் பாரதம் புண்ணிய பூமி, இலங்கை சிவபூமி மெய்ஞானம் விஞ்ஞானம்

மனித குலத்திற்கு தேவையான அக வாழ்க்கையை விந்தியமலைக்கு தெற்கே உள்ள தென் இந்திய சமூகமும், இலங்கையும் அடக்கம் - ஆதி தமிழர்கள், சீனாவும், மாயன் நாகரீகமும், ஆபிரிக்க பழங்குடிகளும் கொண்டிருந்ததற்கு ஒருவித புவியியல் காரணம் இருப்பதாக நம்புகிறேன். 

மனித குலம் தோன்றியதாக அறிவியலால் நிருபிக்கப்பட்ட ஆபிரிக்க கண்டத்தில் புவியின் அதி குறைந்த ஈர்ப்பு விசை உள்ள இடம் இருக்கிறது. 

மனித குலத்தின் அகவயப்பட்ட சிந்தனைக்கும் புறவயப்பட்ட சிந்தனைக்குமான வளர்ச்சி புவிக்கும் அண்டத்திற்குமான தொடர்பில் தங்கியுள்ளது என்பதே இதன் அடிப்படைக் கருதுகோள். 

இதனை நிருபிக்க புவியீர்ப்பு விசை வரைபடத்தை உற்று நோக்க மிக தர்க்க ரீதியான விடை கிடைத்தது. 

நான் மேற் குறிப்பிட்ட நாகரீகங்கள் தோன்றிய இடங்கள் எனப்படுபவை அதி குறைந்த புவியீர்ப்பு விசை உள்ளவை. படம் பார்க்க நீல நிறத்தால் குறிப்பிடப்படும் இடங்கள். https://en.wikipedia.org/wiki/Gravity_of_Earth...

புவியீர்ப்பு குறைவு என்பதை அண்டத்தின் தாக்கம் குறைவு என்று இன்று ஏற்றுக் கொள்ளக் கூடிய General Relativity Theory இன் படி கூறலாம். ஆக அண்டத்தினால் அதிக விசை தாக்காத இடத்தில் இருக்கும் மனிதன் சூழலின் பாதிப்பிலிருந்து அகவயத்தை நோக்கி செல்லுவதற்கு ஏதுவான வெளிச் சூழலின் உதவியை இலகுவாகப் பெறுகிறான். ஆகவே இந்த இடங்களில் தியானம், தவம் போன்ற அகவாழ்க்கை மேம்பட்ட மனித குலம் உருவாகியது எனலாம். 

மற்ற இடத்தில் உள்ளவர்கள் பூமியிடம், அண்டத்தின் விசையிடம் அடி வாங்குபவர்கள்! ஆகவே அவர்கள் இயற்கைக்கு எதிராகவும், இயற்கையை வெல்லவும் முயற்சிக்கும் சிந்தனைப்போக்கை உடையவர்கள்! 

இலங்கையின் பழங்குடி கர்ண பரம்பரை இராவண கதையில் இராவணனிடமிருந்த சந்திர ஹஸ்தம் என்ற வாள் அவன் விண்ணுலகம் சென்று வர உதவியதாக கதைகள் உண்டு! இராவணன் புஷ்பக விமானம் இலங்கையில் வைத்திருந்தான் என்ற கதையிற்கும் இந்த குறைவான ஈர்ப்பு விசைக்கும் தொடர்பு இருக்கலாம்! 

மேலும் இந்த இடங்களில் புவி ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் விண்வெளிக்கு தப்பிச் செல்லுதல் இலகுவான விஷயம். 

இப்படி அண்டத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பி அகவாழ்க்கையில் முன்னேறக்கூடிய புவி ஈர்ப்பு விசை குறைந்த இடங்கள் என்பதால்தான் பாரதத்தை புண்ணிய பூமி என்றும் இலங்கையை சிவபூமி என்றும் எழுதி வைத்தார்களோ? 

எதிர்காலத்தில் இந்தக் கோட்பாடு நிருபிக்கப்படும் போது ஸ்ரீ ஸக்தி சுமனனின் பூவி ஈர்ப்பு சக்தியின் மனித சிந்தனை பரிணாமத் தூண்டலுக்கான கோட்பாடுகள் (Theory of Earth Gravitational force Induced Human thinking evolution) என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்படலாம்!    


தலைப்பு இல்லை

பூமியில் நீங்கள் எங்கு வாழுகிறீர்கள் என்பது உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் செல்வாக்குச் செலுத்தும். 

புவியில் மத்திய கோட்டிற்கு அண்மையில் வாழும் மனித சமுதாயங்கள் இயற்கையுடன் இயைந்து வாழும் கலாச்சாரம் உள்ளவை, இந்த எல்லைக்குள் சூரிய ஒளியும், நீர்வளமும் நிரம்பி மனித இனம் வாழும் வசதிகளை இயற்கை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் உலகின் உற்பத்தி இந்தப் பிரதேசத்தில் இருந்து தான் மேற்கத்தைய நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு மேற்பட்ட இடங்கள் அதீத குளிரும், வெப்பமும் உள்ள இடங்களில் மனிதன் இயற்கையுடன் சண்டையிட்டு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய சிந்தனை வளர்ச்சி வேண்டியிருக்கிறது. 

இப்படி இயற்கையுடன் சண்டையிட்டு தமக்கு தேவையான வளத்தை இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த சமூகத்தை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரமும், அரசியலும் உள்ள சமூகத்திலேயே நாம் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 

இப்படி இயற்கையால் தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய மனிதன் தனது சிந்தனை முறையை மாற்றுவதில் ஏற்படும் குழப்பங்களில் ஒன்று தான் இன்று நாம் பரவலாக காண்பது! 

நாம் கீழைத் தேசத்தில் இயற்கையுடன் ஒன்றி அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை மேலைத் தேசம் சென்று கடுங் குளிரால் தலைவிறைக்கும் போது நாமும் இயற்கைக்கு எதிராக சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம். சட்டையைக் கழற்றி விட்டு ஊரில் தென்றல் இன்பத்தை அனுபவித்த அதே காற்று, கொடுங்குளிராக கொன்றுவிடுவதை பார்த்து பயந்து, மீண்டும் ஊருக்கவந்தால் காற்றுப்பட்டால் உயிர் போய் விடும் என்று கோட்டு சூட்டு போட்டு வாழுகிறோம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முடியாமல் மனம் தடுமாறுகிறது. 

இதைப் போன்ற நிலை தான் இன்று பலரும் கீழைத்தேய தத்துவ மரபுகளை மேலைத்தேய ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பிட்டுக் கேலிபேசும் அறியாமை! 

ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவால் ஆராயாமல் கருத்துக் கூறுவது வெட்டிப் பேச்சு!


தலைப்பு இல்லை

இன்று இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய மனநிலையில் மிக முக்கியமானது காலனித்துவ மனநிலையில் இருந்து வெளிவந்து யதார்த்தத்துடன் ஒன்றுவது! 

காலனித்துவ மன நிலையின் ஒரு பண்பு, பிரித்தானியர்கள் தம்மை உயர்வாக காட்ட உருவக்கிய தரங்களை மட்டும் உண்மை என்று நம்பி எமது சொந்த பண்பாடு, கலாச்சாரங்களை ஏளனம் செய்தல், கேலி பேசுதல்! 

இதனால் எமக்கு எம்மீதே ஒரு வெறுப்புணர்வு உண்டாகி எமது வேர்களை ஆட்டம் காண வைத்துவிடும்! 

உதாரணம் 38 டிகிரி வெப்பநிலை உள்ள நாட்டில் கோட்டும் சூட்டும் போட்டு அதனால் தான் பண்பாடு அடைந்து விட்டேன் என்று நம்பிக்கொண்டு அதை ஆடை ஒழுக்கம் என்று உறுதியாக நம்பும் முட்டாள் தனம்! 

இது ஒரு அதீத நிலை என்றால் மற்றொரு புறம் சமூகத்தில் மதத்தில் உள்ள முட்டாள் தனங்களை எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்பாவித்தனமாக நம்புவது! 

இரண்டும் இல்லாத உலக யதார்த்தத்திற்கு பொருந்தும் எமது வேர்கள் அறுந்துவிடாத யதார்த்த சிந்தனை இளைஞர்களுக்கு அவசியமான ஒன்று.


Friday, April 12, 2019

தலைப்பு இல்லை

இன்று பல தமிழ் இளைஞர்கள் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை இகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் முறையாக அணியிலக்கணம் கற்காதது தான் என்பதை நாம் அறிந்தோமா! 

அணி என்பது ஒரு விஷயத்தை, சொல்லை அழகுபடுத்த பயன்படுத்தும் சொற்றொடர்கள். 

தண்டியலங்காரம் 35 அணிகளைப் பற்றிக் கூறுகிறது. இந்த அணிகள் சேர்க்கப்படுவது மனதிற்கு இன்ப, ஹாஸ்ய உணர்ச்சிகளைக் கொடுப்பதற்காக. 

ஏனெனில் எமது முன்னோர்கள் அக அழகினையும் அக இன்பத்தினையுமே வாழ்வியலாக கொண்டிருந்தனர்! தற்போதைய மேற்கத்தேய வாழ்வியலான புறத்தில் இன்பம் தேடும் பாங்கு அவர்களுக்கு இருக்கவில்லை! 

திரிபுவனச் சக்கரவர்த்தி என்றால் மூன்று உலகத்திற்கும் அரசன், உண்மையில் மூன்று உலகத்திற்கும் அரசன் இல்லை என்றாலும் மன்னன் மனம் மகிழ, அதனால் தனக்கு நன்மை உண்டாக பாடப்பட்ட உயர்வு நவிற்சி அணி இது! 

இப்படி அணிகள் சேர்த்து கோர்க்கப்பட்டவை தான் எமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள், இதில் உண்மை எது, அழகுபடுத்த சேர்க்கப்பட்ட அலங்காரம் எது என்பதை அறியக்கூடிய பக்குவம் தற்காலத்தைய தமிழர்களுக்கு குறைந்து விட்டதால் இதை நிருபிக்க முடியுமா? இது சரியா என்ற ஒரு வித stereo type வாதங்களை முன்வைக்கிறார்கள். 

ஆகவே இலக்கியம், பண்பாடு பற்றிப்புரிதல் வேண்டுபவர்கள் எவராயினும் அணியிலக்கணம் பயிலல் அவசியம்!


சுன்னாகம் நீர் மாசடைவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீதான வாசிப்பும் உரையாடலும்

முழுமையான தீர்ப்பு ஆவணம் ஆங்கிலத்தில்:

http://www.supremecourt.lk/.../docu.../sc_fr_141_2015.pdf...

இந்த தீர்ப்பிற்கான அடிப்படை "polluter pay concept", அதாவது மாசுபடுத்தியவன் காசைக் கட்டு கருத்து என்று தமிழில் மொழிப் பெயர்க்கலாம். 

இதன் அடிப்படை நீதிமன்ற ஆவணத்தில் தரப்பட்ட படி: 

It is an oft-cited and applied principle of environmental law that the “Polluter Pays”. This is reflected in Principle 16 of the Rio Declaration, which states “National authorities should endeavour to promote the internalization of environmental costs and the use of economic instruments, taking into account the approach that the polluter should, in principle, bear the cost of pollution, with due regard to the public interest and without distorting international trade and investment.”.

சுருக்கமாகச் சொன்னால் பணமுள்ளவன் சூழலை மாசுபடுத்தினால் அவனது வருமானமும் சர்வதேசத்தின் வருமானமும் பாதிக்கப்படாமல் செய்த சூழல் மாசிற்குரிய பொருளாதாரப் பெறுமதியை தண்டப் பணமாக கட்ட வேண்டும் என்பது. இது சரியான ஒன்றாக இருக்கலாம், 

இதன்படி பார்த்தால் குறித்த நிறுவனம் நிலத்தடி நீர்த்தேக்கத்தை முழுமையாக சுத்திகரிப்பதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் மொத்தம் 20 மில்லியன் மாத்திரம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

This is an appropriate case to apply the “Polluter Pays” principle. I direct the 8th respondent to pay compensation in a sum of Rs.20 million to offset at least a part of the substantial loss, harm and damage caused to the residents of the Chunnakam area by

the contamination of groundwater in the Chunnakam area and of soil in the vicinity of the 8th respondent‟s thermal power station. Article 126 (4) of the Constitution vests ample jurisdiction in this Court to make the aforesaid Order, which is just and equitable

in the circumstances of this case. 

இதன்படி இந்தப் பணத்தைக் கொண்டு கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

The members of panel and the institutions they represent shall be collectively and individually responsible for distributing this sum of Rs. 20 million among persons who reside within a 1.5 kilometre radius of the 8th respondent‟s thermal power station and whose wells have been contaminated with Oil and Grease and/or BTEX, in order to assist those persons to clean and rehabilitate their wells. 

நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி யாழ்குடா நாட்டின் நிலத்தடி நீர்த்தேக்க அமைப்பிற்கு தனியே கிணற்றினை இறைப்பது போதுமான தீர்வாக இருந்திருந்தால் இதுவரை அங்கு வாழும் மக்கள் தாமாகவே இந்தப் பிரச்சனையைத் தீர்த்திருப்பர்கள். முழு யாழ் குடா நாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இவற்றில் தேங்கியுள்ள கழிவு எண்ணெய் எங்கு உள்ளது? எவ்வளவு உள்ளது என்பது பற்றிய சரியான ஆய்வுத்தகவல் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பது கஷ்டம்! 

ஆகவே இந்தப் பிரச்சினையில் வாதிட்டவர்கள் மன்றிற்கு எது சரியான தீர்வு என்பதை சரியாக ஒப்புவித்தார்களா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! 

சூழல் விஞ்ஞானிகளின் ஆலோசனை பெறப்படாமல் வெறுமனே சட்ட நிபுணர்கள் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்ட விதிகளைக் கொண்டு தரப்படும் சூழலியல் தவறுகளுக்கான தீர்வுகள் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினைத் தருமா என்பது பற்றி சட்ட நிபுணர்கள், பல்கலைக்கழக சமூகம், அறிவியலாளர்கள் நிச்சயம் உரையாட வேண்டும்.


விஞ்ஞான மதவாதிகள்

சில நாட்களுக்கு முன்னர் "விஞ்ஞான மதவாதி" நண்பர்கள் சிலர் மற்றைய இந்து, இஸ்லாம், கிருஸ்தவ மதவாதிகளை ஏளனமாக நையாண்டி செய்து கருந்துளை பற்றி பதிவிட்டிருந்தார். 
தற்போதைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மதங்கள் 
1) நாத்திக மதம்
2) கம்யுனிச சோசலிச மதம்
3) விஞ்ஞான மதம்
கடவுள் இல்லை என்பதை உறுதியாக " நம்புபவர்கள்" நாத்திக மதத்தினர்!
கடவுளுக்குப் பதிலாக "கார்ல்மாக்ஸை" வைத்துப் போற்றி வழிபடுபவர்கள் இரண்டாவது வகையினர்
மூன்றாவது விஞ்ஞான மதத்தினரது கடவுளர் "விஞ்ஞானிகள்" இந்த விஞ்ஞான மதத்தைச் சேர்ந்தவர்களது மதவாத பொதுப் பண்பு பண்டைய மதநம்பிக்கை வாதிகள் எப்படி புனித நூல்களை கேள்வி கேட்காமல் ஒப்புக் கொண்டனரோ அதைப் போல் விஞ்ஞானிகள் கூறிவிட்டார்கள் என்றால் அதை அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அதீத நம்பிக்கை உடையவர்கள். 
இவர்களது இன்னொரு பண்பு, எப்படி தனது மதம் உயர்ந்தது என்று சண்டை போடும் மதவாதிகள்போல் தமது கடவுளர்களாகிய விஞ்ஞானிகளிற்காக தமது முன்னோர்களை கேலி செய்யவும், நையாண்டி செய்யவும் தயங்க மாட்டார்கள். 
ஆனால் விஞ்ஞானிகளே தாம் கூறும் செய்தி மீண்டும் மறுதலிக்கும், பிழைக்கும் என்பதை உறுதியாக அறிந்துக் கொண்டு தான் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்பதை அறியாத பேதைகள் இந்த விஞ்ஞான மதத்தினர்! 
அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்பது அறிவை ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பிற் கூடாக பெறும் ஒரு முறை, அது ஒரு பயிற்சி என்பதை சிந்தித்து அறியமுடியாத அப்பாவிகள் அவர்கள்!
இதிலிருந்து அறியப்படுவது யாதெனில் மதவாதம் என்பதில் இறைவன் தொடர்புபடுவதில்லை. மனிதனின் மனம் தான் மிக முக்கிய காரணி! அவனுக்குத் தேவை சிந்தனை செய்யும் மனம் இல்லை, யாரையாவது போற்றிப் புகழந்து அதில் திருப்தி கண்டு தன்னை அறிவாளியாக்கி மகிழும் போதை!

Wednesday, April 10, 2019

தலைப்பு இல்லை

கருந்துளையின் நிழல் பிடிபட்டது, கருந்துளை அல்ல   

Sunday, April 07, 2019

வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்

விளம்பரங்களும், உணர்ச்சி வியாபார அரசியல்வாதிகளும் செயற்படுவதற்கு மக்களது சிந்தனைத் திறன் குறைவாக வேண்டிய தேவை இருக்கிறது. 
உதாரணமாக வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று மக்களை நம்பவைத்து பின்னர் வெள்ளையாய் இருப்பவனை வைத்தே பொய் சொல்லி ஏமாற்றும் அரசியல். 
இன்று சிலர் அறிவியல் பேசுகிறோம் என்பவர்களும், நாத்திகவாதிகளும் பழைய சம்பிரதாயங்களை, நூற்களை, கடவுளரை கேலி பேசுவதும், நக்கலடிப்பதும் தம்மை உயர்ந்த சிந்தனாவாதிகளாக காட்டும் ஒரு தகுதியாக நினைக்கிறார்கள். 
இது மனதில் வழுவுள்ள, காழ்ப்புணர்ச்சி கொண்ட விசிலடிக்கும் கூட்டத்திற்கு பொழுது போக்க உதவும்.
உண்மையில் நாம் சமூகத்திற்கு நன்மையாக எதையாவது செய்ய வேண்டுமானால் நாம் கற்காத, அறியாத, ஆராயாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும். 
நாம் கிருஷ்ணரைப் பற்றி பேசுகிறோம் என்றால், எமது மனவக்கிரத்தை கிருஷ்ணனில் சாடிப் பேசுகிறோமா, அல்லது பாகவதத்தை முழுமையாக படித்திருக்கிறோமா? அதில் சொல்லப்பட்ட நிலைக்குரிய சமூகப் பண்பாடு என்ன? என்பதை ஆராய்ந்து பேசுகிறோமா என்பது முக்கியமானது. 
எமது கருத்து என்பது எமது மனதின் நிலை, ஆகவே எமது கருத்து உண்மை அல்ல என்ற ஞானம் இருக்க வேண்டும். எவராவது ஒருவரை அறிஞர் என்று ஏற்றுக் கொண்டு விட்டு அவர் கூறுவது எல்லாம் சரி, வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பும் மந்தைக் கூட்ட மன நிலையில் இருந்து வெளிவந்து எனது சுய அனுபவத்தில் கற்று, அறிந்த பின்னர் தான் முடிவுக்கு வருவேன் என்ற மன நிலை உள்ள சமூகம் உருவாகும் வரை இப்படியான மந்தை மேய்ப்பான் போலித் தலைவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். 
ஆகவே சமூகத்தை சிந்திக்கும் சமூகம் ஆக்குவது தான் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய பணி!

தலைப்பு இல்லை

பலருக்கு ஒரு செயலைச் செய்தால் மற்றவர் பாராட்டுவார்கள் என்ற அங்கீகாரம் தேவை! சமூகமும் மற்றவர்களும் எம்மை அங்கீகரித்தல் என்பது ஒரு அடிப்படை உளவியல் தேவை என்பது மறுக்க முடியாது. என்றாலும் மற்றவர்களை ஈர்க்க ( impress) என்று செயல் புரியும் போது அது மனதின் ஆழத்திலிருந்து செயற்படும் ஆற்றலைத் தடுத்து விடும். 

நாம் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் எமக்கு இருப்பதை நாம் உணரும் அதேவேளை அந்தச் சுதந்திரத்தால் மற்றவர்களை சங்கடமாக்காமல் ஒத்திசைந்து செயல் புரியும் பண்பு எமக்கு இருக்க வேண்டும். 

செயல் புரிவதன் அடிப்படை எமது சந்தோஷத்திற்காக என்பது முதன்மையாக இருக்கும் போது மனம் சந்தோஷத்துடன் சிறப்பாக செயலைச் செய்யத் தூண்டுகிறது. 

ஒரு செயலை செய்து முடிக்க இயலாதவர்களின் அடிப்படைச் சிந்தனையை ஆராய்ந்தால் அவர்கள் தமக்கு என்ன இலாபம் என்று கணக்கிட்டுக் கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள் என்பதும் அந்த எண்ணமே செயலைச் செய்ய விடாமல் தடுக்கும் காரணி என்பதையும் அறியலாம்.


கிருஷ்ணனின் சூழலியல் தத்துவம்

கிருஷ்ணன் மனித குலத்தில் முதல் சூழலியல் விவசாய விஞ்ஞானி!

கிருஷ்ணன் மனித குலத்தின் உணர்வை உயர்த்தியவன். கிருஷ்ணனிற்கு முன்னர் மனித குலம் தெய்வமனமாகிய இந்திரனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தது. இதன் அர்த்தம் இயற்கையை வெல்ல முடியாமல் இயற்கைக்கு அடிமைப்பட்டிருந்தது. மழை வெள்ளம், வரட்சி இவற்றை சமாளிக்கும் அறிவாற்றல் இல்லாத மனித சமூகம். கிருஷ்ணனே மனிதன் தெய்வ மனத்தையும் ஆளமுடியும் என்று மனிதனுக்கு புகட்டியவன். 

கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தின் முன்னோடி! கோபாலன், கோ என்பது பசு! பசுவும் மண்ணும் நுண்ணுயிரும் ஒன்றை ஒன்று போசிக்கும் ஒன்றிய வாழிகள்!

மண்ணில் வாழும் மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் பசு புல்லை உண்ணும் போது வயிற்றினுள் சென்று அதன் போலி இரைப்பையில் வளர்ந்து சாணத்துடன் வெளிவருகிறது. பசுவின் சாணமும், கோமியமும் மண்ணில் உள்ள நுண்ணங்கிகளை வளர்க்கும் நல்ல ஊடகம். இரண்டுடன் காட்டில் விழும் பழங்களின் அழுகல் மண்புழுவிற்கு நல்ல விருந்து. மண்புழு மண்ணை உழ, நுண்ணுயிரி மண்ணில் உள்ள கனிமத்தை தாவரம் உறிஞ்சத்தக்கதாக உடைக்க, மண் வளமாக, காடு வளர, விவசாயம் செழிக்கும். 

மண்ணின் உயிர் என்பது தற்போதைய விவசாயக் கல்லூரிகள் சொல்லித் தரும் நைதரசன், பொசுபரஸ், பொட்டாஸியத்தின் (NKP) அளவு அல்ல. எவ்வளவு மண்புழுவும் நுண்ணுயிரிகளும் மண்ணில் இருக்கிறது என்பதே மண்ணின் உயிர்த் தன்மை! 

இப்படி மனித குலம் பசுவை ஆதரித்தால் விவசாயம் ஓங்கும். ஆகவே பசுவை ஆதரிக்க வேண்டும் என பசுவையே தனக்குப் பிரியமாக்கிச் செய்தி சொன்னவன் கிருஷ்ணன். 

இயற்கையின் நியதி மண்ணில் வித்து ஊன்றி, வேர் படர வைத்து, நீர் ஈர்த்து, மரமாகி ஆகாயத்தில் பழமாக நிலைக் கொண்டு கனிந்த கனி வித்தாகி மீண்டும் மண்ணிற்கு வருகிறது. 

இதைத் தான் இன்று Sustainability என்று எல்லா நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் பணங்கறந்து பாடம் எடுக்கிறார்கள். 

ஒவ்வொருவனும் தான் வளர்ந்த மண்ணிற்கு உரமாக வேண்டும். இப்படிச் செய்தால் உலகம் வளம் பெறும்! வளங்கள் பெருகும்!


Saturday, April 06, 2019

தலைப்பு இல்லை

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதலுக்கு நோர்தன் பவர் நிறுவனத்திற்கு தண்டப் பணம் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்காடிய வழக்கறிஞர்களின் திறமையால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 02 கோடி அபராதம் என்பது அந்த நிறுவனத்திற்கு மிகச் சிறிய தொகை, just 87,752 GBP, இந்த தொகை அந்த நிறுவன முதலாளியின் ஒரு நாள் செலவாக இருக்கும். அபராதத் தொகை என்பதை விட சூழல் மாசடையச் செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நீதித்துறை நிலை நாட்டியுள்ளது சிறப்பானது! 

சூழல் மாசடையச் செய்ததற்கான தண்டனை பணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று! ஏனெனில் நீரில் விஷத்தைக் கலந்து விட்டு விஷம் கலந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள், அதற்கு நஷ்ட ஈடு இவ்வளவு என்பதை எப்படி மதிப்பிடுவது என்பது சிக்கலான விஷயம். 

சூழலியல் ரீதியாக தற்போதைய நிலையில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட முடியாததும், நினைப்பதைவிட பாரதூரமானதும் என்பதே உண்மை. 

முழு யாழ் குடா நாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால் தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இது தான். 

இப்படியான நிலவமைப்பில் நிலத்தில் போடும் கழிவுகள் எல்லாம் நிலத்தடி நீரில் கலந்து நீரை மாசுபடுத்தும். ஆக யாழ்குடா நாடு சரியாக மாசுக் கட்டுப்பாடு முன்னெடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சூழல் மாசடைதல் பிரச்சனைகளை எதிர் கொள்ளப் போகிறது என்பது தான் உண்மை. 

மேற்குறித்த நிலத்தடி நீர் மாசடைதலுக்குரிய சரியான தீர்வு முழுமையான நிலத்திடி நீர்படுக்கை சுத்திகரிப்பு (Restoration of contaminated aquifer), இதை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமே!


தலைப்பு இல்லை

விவசாயம் என்பது மனிதனின் தேவைக்கானது என்ற நோக்கில் விவசாயத்தைப் பார்க்க உற்பத்தியைக் கூட்டுகிறோம். 

இயற்கை விவசாயம் என்பது உற்பத்தியைப் பெருக்கி அதிக இலாபம் காணும் தொழில் அல்ல, உற்பத்தியை ஆயிரமாண்டு காலம் நிலைத்து நிற்கச் செய்து மனிதகுலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வாழ்வியல் முறை! 

உற்பத்தியைக் கூட்டுதல் என்பது இயற்கையில் இல்லை. இன்னொன்றிற்கு சேர வேண்டியதை நமக்கு கையடக்கப்படுத்திக் கொள்வது தான் அதிக விளைச்சல். 

பசுமைப்புரட்சி தந்த Hybrid இனங்கள் என்ற அதிக உற்பத்தியைத் தரும் தாவரங்களின் சூட்சுமம் இது தான். 

ஒரு தாவரம் உற்பத்தில் செய்யும் தனக்கான உணவில் 1/3 பங்கு தனது தினசரி உடலியற் தேவைகளுக்கும் 1/3 பங்கு தனது உடல் வளர்ச்சிக்கும் 1/3 உணவுச் சேமிப்பாகவும் சேர்த்துவைப்பதே இயற்கையின் உற்பத்தி விகிதம். இதில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்தது தாவரத்தை வளர விடாமல் உணவுச் சேமிப்பை அதிகரித்து தனக்காக திருடிக் கொள்ளும் தொழில் நுட்பத்தை. இதுவே பசுமைப் புரட்சி! இதனால் தான் Hybrid இனங்கள் குட்டையாகவும் அதிக விளைச்சல் தருபவையாகவும் இருக்கும். எப்படி Broiler கோழியோ அப்படித் தான் இந்த Hybrid இனங்களும். 

இப்படித் திருடிக் கொள்வதற்கு இயற்கை ஒத்துக் கொள்ளாது. ஆகவே செயற்கை உரம் தேவை, இப்படி வியாபாரப் பொருளாதாரத்தை உருவாக்கும் முறைக்கு நவீன விவசாயத்தை இட்டுச் சென்றது. 

இப்படியான செயற்கை உர இடுபொருள்.

விவசாயத்தால் உற்பத்தி பெருக, இயற்கையின் சம நிலை குலைய, பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த விவசாய நிலம் உவர் நிலமாகி மாறி தரிசு நிலமாகும். 

இந்த அறிவு விதையை தமிழர்களுக்கு விதைத்தவர் நம்மாழ்வார் ஐயா! அவரது பிறந்த நாள் இன்று!


Friday, April 05, 2019

கடவுளும் ஆன்மீகமும்

ஆன்மீகம் என்பது ஆன்மாவை மீகித்தல், உயர்வடையச் செய்தல், ஆன்மா என்பது எமது உயிரைச் சூழ இயங்கும் உணர்வு, உணர்வு என்பது மனதின் இயக்கத்தால் நடப்பது! மனம் எண்ணங்களின் கோர்வை, ஆக ஆரம்பத்தில் மனதை தூய்மைப்படுத்தி ஆன்மாவினை உயர்வடையச் செய்தல் ஆன்மீகம்! 

கடவுள் = கட+உள், உள்ளே அகத்தில் இயங்கும் எண்ணங்களின் பிடியிலிருந்து கடந்து இன்னும் உள்ளே சென்றால் வரும் அனுபவம்! கல்லில் உள்ளதல்ல கடவுள்!


Thursday, April 04, 2019

என்னைப்பற்றி ஒரு அறிமுகம்

பலபேர், ஏன் நான் வசிக்கும் ஊரில் கூட நான் Facebook இல் எழுதுவதைப் பார்த்துவிட்டு ஏதோ ஆசிரமம் வைத்து நடத்தும் சாமியார் என்று எண்ணி உரையாடியிருக்கிறார்கள்!

ஒரு முறை தம்பி ஒருவர் நான் உலகத்தை துறந்து இமயமலை சென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்ததாக கூறியிருந்தார்!    

ஆன்மீகம் எனது அகத்தேடல் மட்டுமே, அதை நிறுவனமயமாக பின்பற்றுவதில் உடன்பாடு இல்லாதவன்! ஒவ்வொருவரும் தனிப்பட தமது அகத்தை மேம்படுத்தும் யோகசாதனையை அடிப்படையாக கொண்ட ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவன். இதுவே முற்காலத்தில் ரிஷிகளும் சித்தர்களும் பின்பற்றியது! தந்தை வழியிலும், சிறுவயதில் குரு என்னைப் பிடித்துக் கொண்ட சந்தர்ப்ப வசத்தால் இது எனது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இதனால் இன்று பலர் பயன் பெறுகிறார்கள் என்ற காரணத்தால் இந்த role இனை மகிழ்வுடன் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மை. 

எனக்கு மிகப் பிடித்த விஷயத்தை எழுதுகிறேன் அவ்வளவு தான்! பல நேரங்களின் எழுத வைக்கப்படுகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பின்பற்றுவதை, அறிந்ததை மற்றவர்களுக்கு பயன்படும்படி சொல்லிக் கொடுக்கிறேன். அதுவும் எனது குரு எனக்கு செய்யச் சொன்னதை கடமையாக செய்வதால், 

என்னைப் பற்றி எவராவது அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்டால் எனக்கு என்ன சொல்வது என்று பொதுவாகத் தெரிவதில்லை! அடிப்படையில் நாம் யார் என்பதைத் தானே தேடிக் கொண்டு இருக்கிறோம். 

பொதுவாக கீழ்வரும் tagline இற்குள் என்னை அடக்கலாம். 

சூழலியலாளன்

விவசாய தொழில் முனைவோன்

இயற்கை விவசாய ஆர்வலன்

நிர்வாகி, இயக்குனர்

ஆலோசகன்

சித்த ஆயுர்வேத வைத்தியன்

யோக சாதகன்

உபாசகன் 

தத்துவம் கற்கும் மாணவன்

சமூகத்தின் இயக்கவியலை கற்க முனைபவன்

ஆசிரியன்

வாசிப்பாளன் 

எழுத்தாளன்

இப்படி பலதை வைத்துக் கொண்டு எதைச் சொல்லுவது என்ற குழப்பத்தில் சில கணங்கள் ஓடிவிடும். 

அடிப்படையில் நான் ஒரு சூழலியலாளன்! என்னை ஒரு வியாபார நிறுவன நிர்வாகியாக்கியதும் சந்தர்ப்ப வசத்தால், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பல்தேசிய விவசாய நிறுவனத்தில் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிவகித்த அனுபவம் விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவன் ஆக்கியுள்ளது. 

கடந்த வருடம் வரை இலங்கையின் மிகப் பெரிய விவசாய ஏற்றுமதி நிறுவனத்தில் துணை இயக்குனராக பணிப் புரிந்துவிட்டு இப்போது நண்பர் ஒருவருடன் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளேன்!

தற்போதைய ஆர்வம் இயற்கை வேளாண்மை - Natural Organic Agriculture!


மதங்களும் இன நல்லிணக்கங்களும்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது எப்போது சாத்தியம்! அவரவர் தமது நிலையில் திருப்தியும், மற்ற இனத்தவர்களின் கலாச்சார, சமூகப் பழக்க வழக்கங்களை மதித்து அதனை ஊடறுத்து தமது கலாச்சாரம் பண்பாட்டினை திணித்து மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யாமல் இருக்கும் போது மட்டும் தான். 

ஆனால் பொருளாதாரம், பணம் என்று மட்டுமே உந்தப்பட்ட சமூகம் இந்த விழுமியங்களை மதிக்காது. இன்றைய உலகை பணம் ஆளுகிறது. ஆக மதம், இனம், கலாச்சாரம் என்பது அதற்கு கீழ்ப்பட்ட மதிப்பில் தான் இருக்கிறது என்பது தான் யதார்த்தம். 

இலங்கையைப் பொறுத்த வகையில் பௌத்தம் இந்தப் பூமியில் வந்திறங்கிய நாள் முதல், தேவநம்பிய தீசன் காலம் தொட்டு அரசனால் பாதுக்காக்கப்பட வேண்டிய, அரசனின் முதற் கடமைகளில் ஒன்றாக வரலாற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

வரலாற்றில் மதம் அதிகார வர்க்கத்தின் கைகளுக்குள் செல்லும் போது அது உண்மை பயன்பாட்டினை இழந்து அரசியலுக்காகவே பயன்படுத்தப்படும். 

அடிப்படையில் ஒவ்வொரு மதம் என்று சொல்லப்படுகிற கட்டமைப்பும் ஆரம்பத்தில் ஒருவன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்தி தனது சமூகத்துடனும், உலகத்துடனும் ஒத்திசைந்து வாழ்வதற்காகத் தான் அனுபூதி பெற்ற பெரியவர்களால் நெறிப்படுத்தப்படுகிறது. பின்னர் மனித மனத்தில் ஆழத்தில் இருக்கும் அதிகாரம், ஆசை, ஆணவம் போன்ற அறியாமைகளால் அரசியலாக்கப்படும் போது அவை உண்மை நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து மனிதரிடையே பிளவு உண்டாக்கும் ஸ்தாபனங்களாக மாறுகிறது. 

ஆக மதங்களின் கோட்பாடுகள் புலமைத்துவத்தை நிறுவும் அமைப்புகளாக இல்லாமல் மக்களை பண்படுத்தும் விழுமியத்தை உண்டாக்கும் நிலையங்களாக மதஸ்தாபனம் இருந்தால் மட்டுமே சமூகத்திற்கு மதங்களால் பயன். இல்லாவிட்டால் அவை வெறும் அரசியல் ஸ்தாபனங்களே!


Wednesday, April 03, 2019

Chaos theory - நாத்திகம் - புரட்சி

முன்னொரு காலத்தில் ( ) நான் Chaos theory இன் சூழலியல் முகாமைத்துவ பயன்பாடு பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன்! 

இதை நானும் எனது ஆய்வு மேற்பார்வையாளரும் தமிழில் பெருங் குழப்ப கோட்பாடு என்று மொழிப் பெயர்த்திருந்தோம். 

இந்தக் கோட்பாட்டின் படி நேர்கோட்டு இயக்கத்திலிருக்கும் ஒரு தொகுதி பெருங் குழப்பத்திற் கூடாக முதலில் இரு கூறாக்கம் (Bifurcation) அடையும். படம் பார்க்க. இப்படி இரு கூறாக்கம் அடையும் தொகுதி தன்னை சிக்கல் தன்மைக்கு (complexity) உள்ளாக்குவதன் மூலம் தன்னை உறுதிபடுத்திக் கொண்டு இருக்கும். 

இருகூறாக்கம் நடந்து சிக்கற்தன்மை உருவாகினால் மட்டும் தான் அந்த தொகுதி சம நிலை அடைந்து உறுதியடையும். அப்படி நடக்காமல் தொகுதியை எப்போதும் பதட்டத்தில் வைத்திருந்தால் அது இரு கூறாக்கத்தினை அதிகரித்து சிக்கற் தன்மையினை அதிகரிக்கும். ஆனால் தொகுதி சமனிலைக்கோ, ஒத்திசைவிற்கோ வராது. 

சமூகப் புரட்சிகளில் இந்தப் புரிதல் மிக அவசியம். உதாரணமாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சமூகத்தில் மதத்தினால், ஜாதியினால் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இருந்த நிலையில் சமூகத்தை புதிய மாற்றத்திற்கு இட்டுச் செல்ல ஒருவித இருகூறாக்கத்தை ஏற்படுத்த, சென்ற நூற்றாண்டில் சிலர் நாத்திகத்தையும், கேலிசெய்தலையும் ஆயுதமாக எடுத்தனர். அதன் காரணமாக சமூகம் அந்த தளைகளில் இருந்து வெளிவந்து புதிய திசையில் செல்ல ஆரம்பித்தது. 

அவர்கள் முன்னெடுத்த நாத்திகவாதம் என்பது புரையோடிப் போயிருந்த சமூகத்தை புதிய திசையில் செலுத்துவதற்கு கையாண்ட ஒரு உத்தியே, கிட்டத்தட்ட சமூகம் முன்னேற தடையாக இருந்த ஒரு பாறாங்கல்லை வெடிவைத்து தகர்த்தல் போன்றது. இது காலத்தின் தேவை. 

இந்த இருகூறாக்கம் வேதங்கள், பண்பாடு என்பவற்றை மேலும் ஆழமான நுண்மையை நோக்கியே செலுத்தியது எனலாம். மேலை நாட்டவர்கள் அவற்றை அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி நிருபிக்கத் தொடங்கினார்கள். இன்று எவர் வேண்டுமானாலும் வேதங்களை படிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 

ஆனால் இத்தகைய சமூகப் புரட்சிகளின் இயங்கியலை தவறாகப் புரிந்துகொண்ட, அதை வைத்து தமக்கான அடையாளம், அரசியல் செய்பவர்கள் மீண்டும் மீண்டும் சமூகத்தில் இரு கூறாக்கம் செய்ய ஏதாவது பொய்களும், புனைவுகளும் உருவாக்கி முயற்சிக்கிறார்கள். ஸ்திர நிலை அடைந்த சமூகத்தில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் போது அவை கேலிக்கூத்தாகிறது. 

இதற்கு உதாரணம் அண்மையில் ஸ்ரீ கிருஷ்ணரை தவறாக சித்தரித்து சுய அரசியல் செய்ய முனைந்து முட்டாளான சம்பவம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாத்திகம் வளர்ந்ததை விட கிருஷ்ண உணர்வு வளர்ந்திருக்கிறது. கிருஷ்ணனின் இராச லீலை என்ன என்பதை தெளிவான தத்துவத்துடன் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆக கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அது போல் ஆடியதாம் என்று தனது தலைவர் எந்த சந்தர்ப்பத்தில், எதற்காக நாத்திகம் பேசினார் என்ற பகுத்தறிவு இல்லாமல் ஏதாவது உளறப் போக அதுவே ஒரு பெருங்கேலியாகி சிரிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.


ஆசிரியனும் Teacher உம்

ஆசு + இரியன் = ஆசிரியன்

ஆசு என்பது குற்றம், இரியன் அற்றவன் குற்றமற்றவன் என்பதன் பொருளே ஆசிரியன். 

ஆசிரியர் தவறு செய்தார் என்பதே தமிழில் கருத்துப் பிழையான ஒன்று! தவறு அற்றவரையே ஆசிரியன் என்று தமிழில் கூறுகிறோம். 

ஆனால் Teacher என்பதிலுள்ள Teach என்பதன் அர்த்தம் to impart knowledge or skill என்ற பொருளில் வருகிறது. அதாவது அறிவையோ திறனையோ தருபவர் Teacher எனப்படுகிறார். அவர் குற்றமற்றவராக இருக்கத் தேவையில்லை.

இன்று ஆசிரியர்கள் அற்றுப் போய் teacher கள் மாத்திரமே இன்றைய கல்வி முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதனால் தான் பாடசாலைகளில் துஷ்பிரயோகம், கல்வியல் கல்லூரியில் பியர் பார்ட்டி, ஆகவே Teacher தமது அறிவினையும், திறனையும் தருவதுடன் வேலை நின்று போய்விடுகிறது. மாணவனுக்கு ஆதர்சன வழிகாட்டியாக முடியாது. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளை கற்பதற்கு தாம் Teacher இடம் அனுப்புகிறோமா, ஆசிரியனிடம் அனுப்புகிறோமா என்பதில் மிகத்தெளிவும் கவனமும் இருக்க வேண்டும். 

சுயஒழுக்கம் இல்லாத குடிகார, கீழ்த்தர சிந்தனையுடையவர்களும், அறிவும், திறனும் மிகுந்த Teacher ஆக இருக்க முடியும். இத்தகையவர்கள் பிள்ளைகளுக்கு ஆபத்தானவர்களாக இருக்கலாம். 

ஆகவே பெற்றோர்கள் ஆசிரியனுக்கும், Teacher இற்கும் வித்தியாசம் நன்கு வித்தியாசம் தெரியவேண்டும்.


வட இலங்கையில் பௌத்த மாநாடும் இன நல்லிணக்கமும்

அண்மையில் வடமாகாண ஆளுனர் தலைமையில் பௌத்த மாநாடு நடைபெற்றது. ஆளுனர் வால் பிடிக்கிறார், சிங்களவர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்றெல்லாம் வழமையான கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். 

ஆளுனரின் இந்த முன்னெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தமிழ் மக்களுக்கு இதன் பயன் என்பதை தெளிவுபடுத்தலில், தொடர்பாடலில் தெளிவு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

எமது தமிழ் மக்கள் எப்போதும் பிரிந்து தனியாக இருப்பதையே பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறார்கள். மற்றவர்களுடன் கலந்தால் நாம் அடிமைப்பட்டு விடுவோம் என்ற பயம் எப்போதும் இருக்கிறது. இது ஒருவித பலவீனம்! இந்த பலவீனத்தை, பயத்தை மறைக்க மற்றவன் எம்மை அழிக்கிறான் என்று பயந்து புலம்பி எவ்வளவிற்கு தூற்ற முடியுமோ அவ்வளவு தூற்றுகிறோம்.

இயற்கையின் விதி ஒன்றுடன் ஒன்று இயைந்து இடைத் தாக்கமடைந்து வலியது பிழைக்க எளியது அழிய, மீண்டும் எளியது வலியதாக, வலியது எளியதாகி ஒரு சக்கரமாக மாறிக் கொண்டு இருக்கும். எதுவும் நிரந்தரமாக வலியதாகவோ எளியதாகவோ இருந்ததில்லை. சரித்திரம் படித்தவர்களுக்கு இது புரியும். 

இந்த பௌத்த மாநாடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் பௌத்தம் என்பதை சிங்கள பௌத்தம் என்று வரையறுக்காமல் பௌத்தம் உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய தர்மம் என்றும், தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கப்பட வேண்டும். 

பௌத்தம் அடிப்படையில் ஒரு தர்மம், பாலியில் தம்மம், அது போல் இந்துமதம் என்று சொல்லப்படுவது ஒரு தர்மம், சனாதன தர்மம்! இரண்டும் தர்மம் என்ற அடிப்படையில் இது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டில் பெரும் பங்களிப்பினைச் செய்யும். இரண்டுமே எவரையும் வலிந்து மதம் மாற்றியது இல்லை! அவரவர் அகப் பக்குவத்திற்கு தக்க பயன்பெறும் முறையைத் தான் சொல்லித்தருகின்றது. 

இந்த நிலையில் இந்து விவகார அமைச்சர் Mano Ganesan எடுத்திருக்கும் இந்து பௌத்த மாநாடு என்பது சரியான நோக்கத்துடன் இருக்கிறது என்று சொல்லலாம்! அவரது உரையில் "இந்து-பெளத்த ஒற்றுமையை உறுதிபடுத்தவே மாநாட்டை நடத்த வேண்டும். அத்தோடு இந்த மாநாடு ஏனைய மதத்தவருக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் கூடாது " என்ற எண்ணம் மிகச்சரியாகவும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கியதாகவும் இருக்கிறது. 

பௌத்த தம்மத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் உள்ள அடிப்படையான "தர்மம்" என்ற ஒற்றுமையை தமிழ் சிங்கள இன நல்லிணக்கத்திற்கு உபயோகித்தால் ஒற்றுமையான இலங்கையை நோக்கி நாம் பயணிக்கலாம்! 

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லிணக்கத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பினை, காலம் ஆளுனர் சுரேன் ராகவனுக்கும் அமைச்சர் மனோகணேசனுக்கும் வழங்கியுள்ளது! எதிர்மறை பார்வைகள் நிறைந்த சமூக அரசியலில் யார் மக்களின் மனதை வெல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


தலைப்பு இல்லை

ஒரு விஷயம் எமக்கு விளங்கவில்லை என்றால் அதை அறிவதற்கு பொறுமையும், நிதானமும், முயற்சியும் இருக்க வேண்டும். 

பொறுமையாக, நிதானமாக முயற்சிக்க முடியாதவர்கள் எதையும் விமர்சிக்க தகுதி அற்றவர்கள். 

இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எதையும் கேலி செய்வதும், நக்கலடிப்பதும், கீழ்மைப்படுத்துவதும் பகுத்தறிவாக கருதப்பட்டது. எனினும் இன்றைய தொழில்நுட்ப வசதியும், அறிவியல் வளர்ச்சியும் அனைத்தையும் காரண காரியத்துடன் இயங்கும் பிரபஞ்சமாகவே பார்க்கும் மனதை மக்களுக்கு உருவாக்கியுள்ளது. 

மனதின் நுண்மையைப் புரிந்துக் கொள்ளாதவர்களும், எதையும் அர்ப்பணிப்புடன் ஈடுபடத் தயாராக இல்லாதவர்களுக்கு தமக்குப் புரியாத விஷயங்கள் உலகத்தில் இல்லை என்ற நினைப்புடன் கிணற்றுத் தவளைகளாகத் தான் இருக்கிறார்கள். 

தம்மை அறிவியலாளர்களாக காட்டிக் கொள்ள பல ஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள கலாசாரத்தை கொச்சைப்படுத்த நினைப்பது மூடத்தனம். எந்த ஒரு அறிவும் ஞானமும் காலம் போக போக பித்தளையில் களிம்பேறுவது போல், இரும்பு துருப் பிடிப்பது போல் அரசியலாலும், அதிகாரத்தாலும் உண்மை நோக்கத்திலிருந்து விலகுவது தவிர்க்க முடியாதது. 

ஆகவே எமது பாரம்பரியத்தில் கடைப் பிடிக்கப்பட்டவற்றில் வாழ்விற்கு உதவக் கூடிய விஷயங்களை முழுமனதுடன் ஏற்று, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்ப்பது அவசியமானது. 

இளம் பயிரைக்காக்க வேலி அவசியமாக இருக்கும். அதே வேலி வளரும் போது பயிரை வளரவிடாமல் தடுக்கும் செயலைச் செய்வது போன்ற நிலைதான் பல மத, கலாசார கட்டுப்பாடுகள்.


Tuesday, April 02, 2019

வாழ்க்கைப் பிரச்சினை - கோயில் - தீர்த்த யாத்திரை

முற்காலத்தில் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தால் கோயிலிற்கு போ, தீர்த்த யாத்திரை செல் என்று எல்லாம் சொல்வதில் ஒரு உளவியல் இரகசியம் இருக்கிறது. 

மனம் தான் எண்ணுவதற்கு பிராணனாகிய உயிர் சக்தியை கொடுத்து அதை உருவாக்கும் வல்லமை உள்ளது. 

பிரச்சினை வந்தவுடன் வலுவற்ற மனம் ஏன் எனக்கு இந்தப் பிரச்சினை வந்தது, என அதிகமாக புலம்பி குறித்த பிரச்சினைக்கு இன்னும் வலுவூட்டி அந்தப் பிரச்சனையை அதிகமாக்கும். 

எமக்கு ஒரு பிரச்சனை வரும் போது பிரச்சினையில் இருந்து மீண்டு வரும் மன நிலையை உருவாக குறித்த தெய்வங்களை உருவாக்கி அங்கு சென்று பரிகாரம் செய்து வரச் சொன்னார்கள். அங்கு சென்றால் மனம் இயல்பாகவே தனக்கு மேம்பட்ட ஒரு சக்தியுடன் தொடர்பு கொண்டு வலுவடைந்து புதுத்தெம்பு பிறக்கும். இந்த புதிய, மாறிய சிந்தனையுடன், புதிய ஆற்றலுடன் எமக்கு ஏற்பட்ட பிரச்சினையை வெற்றி கொள்ளலாம். 

ஆக பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரச்சினைக்கு வெளியே வந்து மனதை உற்சாகப்படுத்துவது அவசியமாகிறது. 

இது எமக்கு பிரச்சினை வந்தால் கோயிலிற்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு காரணம், இது தவிர்ந்த அனேக மறையியல் காரணங்களும் இருக்கிறது.


சாதனை அனுபவங்கள்

நாம் சாதனை செய்யும் போது கனவில், தியானத்தில் தெய்வ உருவங்கள் காட்சி கிடைத்தன, இது எனது ஆன்மீக முன்னேற்றம்தானே?

இது நல்ல சாதகருக்கு ஏற்படக்கூடிய அனுபவமும், சரியான கேள்வியும்!

இத்தகைய அனுபவங்கள் நாம் சாதனையில் சரியான வழியில் செல்கிறோம் என்பதை காட்டும் திசைகாட்டிகள்!

இந்த அனுபவங்களின் பின்னர் நாம் தீவிரமாக சாதனையில் ஈடுபட்டால் மட்டும்தான் நாம் உண்மையான தெய்வ உருமாற்றத்தினைப் பெறமுடியும்.

சாதனையின் முதல் நிலை சித்தி மனதில் சிந்தனையில் எண்ணத்தில் ஏற்படும் மாற்றம்.

சாதனையின் மூலம் எம்மில் மெதுவாக தெய்வ குணங்கள் உருவாகி வரும். இதனை சூழ் நிலைகளால் குழப்பிவிடாமல் அமைதியாக வளர்த்து வருதலே சாதனையின் உண்மையான முன்னேற்றம். இப்படி எமது பண்பினையும், எண்ண மாற்றத்தினையும் அடைந்தால் மட்டுமே தெய்வ சக்திகளை விழிப்பிக்கும் ஆற்றலை ஒரு சாதகன் பெறுவான்.

ஆகவே கனவிலோ, தியானத்திலோ ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டால் அதில் மனம் லயித்து நாம் சாதனையில் முன்னேறிவிட்டோம் என்று பூரித்து விடாமல் குருநாதர் கூறிய "மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே பொய்யாத உபதேச குருவைப் போற்றி புகழாக பன்னிரெண்டு வருசங்காரே" என்ற வாக்கினை நினைவில் கொண்டு சாதனையைத் தொடர வேண்டும்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...