குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 31, 2019

தலைப்பு இல்லை

அமைச்சரே, தீர்வு நம்மிடம் இருக்கிறது, கேட்பீர்களா?

இந்த காரணத்தினால் தான் இயற்கை வேளாண்மை தகுந்த மாற்றாகிறது.


தலைப்பு இல்லை

நமது இயற்கை விவசாயக் கத்தரியின் சுவை, மணம், தரம் பற்றி கருத்தினை அறிவதற்காக ஒரு சிலருக்கு கொடுத்து வருகிறோம். நல்ல feedback கிடைத்து வருகிறது! 

Organic என்பதற்கும் இயற்கை விவசாயம் என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. Organic என்பது இரசாயன விவசாயம் போன்றே தாவரத்தை மனிதன் இடுபொருள் இட்டு இயற்கைப் பொருட்களால் செயற்கையாக வளர்க்கும் முறை.

இயற்கை விவசாயத்தில் காட்டில் ஒரு இயற்கைச் சூழலில் எப்படி தாவரம் தானே வளர்வதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வது மட்டும்தான்! ஆகவே செடி தனக்குத்தேவையானதை எடுப்பதற்கு உதவி செய்வது மட்டும் தான் எமது பணி! ஆகவே இப்படி விளைவிக்கப்படும் தாவர உணவுகள் அதிக மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்! இது எமது கத்தரிகளில் நிருபணமாகிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஆடி அமாவசையில் கத்தரிச் சமையல் பற்றி Lavanya Satheeshwaran அக்காவின் கருத்து! நன்றி அக்கா!

***********************************************************************

//என் அருமை தம்பி ஸக்தி சுமன் ஓர் "அறிவியல் விவசாயி".(அது மட்டுமல்ல பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றவர்). அவரது இன்னொரு ஆராய்ச்சியின் வெற்றி தான் நான் இன்று சமைத்த கத்தரிக்காய் புளிக்குழம்பு. எவ்வித இரசாயனப் பொருளையும் பயன்படுத்தாமல் இயற்கை பசளைகளை மட்டும் பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் நான் வெட்டும் ஐந்து கத்தரிக்காயில் மூன்று பூச்சாகவே காணப்படும். இதன் தோற்றத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

இன்று ஆடி அமாவசை விரதம். என் கணவருக்கு ஆரோக்கியமான, சுவையான கத்தரிக்காய் குழம்பு சமர்பணம். தம்பி ஸக்தி சுமணனுக்கு நன்றிகள்...   //


Saturday, July 27, 2019

தலைப்பு இல்லை

இயற்கையாக நுண்ணுயிர்கள் மண்புழு நிறைந்த மண்ணிற்கும் (வலது), உரம்போட்டு மலடாக்கப்பட்ட மண்ணிற்கும் (இடது) உள்ள வித்தியாசத்தைக் கீழே உள்ள படம் காட்டுகிறது. 

படத்தின் வலதுபக்கத்திலுள்ள ஆழமான நார் வேர்த் தொகுதி மண்ணை ஊடுருவி ஒரு பஞ்சு போல் ஆக்கி நீரைத் தேக்கி வைக்கும். இப்படி இருக்கும் நிலத்தின் கிணறு வற்றாது. இப்படி பஞ்சு மெத்தை போல் ஆக்குவதற்கு மண்ணை நுண்ணங்கிகள் பதமாக்க, மண்புழு உழுது கொடுக்க வேண்டும். 

உப்புக்களாகிய உரம் கொட்டிய நிலத்தில் இந்த செயல்முறை எதுவும் நடக்காது! மண் மலடாவதுடன் நிலம் நீரைத்தேக்கும் ஆற்றலையும் இழந்து விடும். 

ஆக பயிரும் வளராது, நிலத்தடி நீரும் கிடைக்காது!


Friday, July 26, 2019

தலைப்பு இல்லை

பயிர்த் தொழில் ஒரு போர்த் தொழில்! 

செடிகள் எமது குடிகள்! 

குடிகளை எதிரிகளான புழு பூச்சிகளிடமிருந்து காத்தல் மன்னனாகிய விவசாயியின் கடமையன்றோ! 

குடிகளைக் காத்தால் மன்னனிற்கு வரி சரியாகும்!

செடிகளைக் காத்தால் விளைச்சல் வரியாகும்! 

இந்த விவசாயி செய்யும் போர்த் தொழில் எதிரியை அழிக்கும் இரசாயன ஆயுதங்களால் அல்ல! 

தன் குடிகளை வலிமையுள்ள நன்மக்களாக ஆக்கி எதிரிகள் ஊடுருவமுடியாத அரணை எழுப்புதல்! வலிமையான ஆரோக்கியமான குடிகளுள்ள நாட்டில் எதிரி ஊடுருவ முடியாது!

அது போல் செடிகள் வலிமையாக இருக்கும் தோட்டத்தில் பூச்சிகளுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடமில்லை! 

கீழே நாமும் எம் குடிகளைக் காக்கும் எமது தளபதியுடன் இந்த வார திறையை எமது குடிகளான கத்தரிச் செடிகளிடமிருந்து பெறும் காட்சி!


Thursday, July 25, 2019

தலைப்பு இல்லை

எமது தோட்டத்தின் அடுத்த விளைபொருள்! 

கௌபீ... 

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது!


தலைப்பு இல்லை

On the way from Pondicherry!
Learning a book is learning the experience of author!
Savitri is a epic poem of yogic experience of Sri Aurobindo, Savtribhavan in Aurovil recommended these books for deep learning of Savitri!

Tuesday, July 23, 2019

சித்தர் தத்துவங்களும் யோகசாதனையும்

கடந்த 2014ம் ஆண்டு முதல் கொழும்பில் அஷ்டாங்க யோக மந்திரில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் சித்தர் பாடல்கள் குழுவாகச் சேர்ந்து படித்து கலந்துரையாடல் நிகழ்த்தினோம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு எனது விவசாயத் திட்டங்களுக்காக கொழும்பை விட்டு வெளியேறிய பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் ஒரு ஒன்று கூடல். 
அகத்தியர் சௌமியசாகரம் என்ற நூலில் அடிப்படையில் தத்துவங்கள் 96 பற்றிய அறிமுகம், 96 தத்துவங்கள் எப்படி யோக சாதனையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறு கலந்துரையாடல்!

Sunday, July 21, 2019

செயல் வேண்டும்!

என்ன நடக்கும், இது நடந்துவிட்டால், அது நடந்துவிட்டால் என்று அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதுவும் சாத்தியமாவதில்லை!
என்ன நடந்தாலும் சரி எடுத்த காலை பின் வைப்பதில்லை என்ற ஆண்மை உள்ளவனிற்கு எல்லா பணியும்! 
செயலில் பற்று விளைவை மெருகேற்றும்!
விளைவில் பற்று செயலைக் குழப்பும்! 
செயலிற்குரிய உத்வேகம் அகத்திலிருந்து பிறத்தல் வேண்டும்!
எவருக்குமாக நாம் செயல் என்ற நிலை இறுதியில் ஏமாற்றமும் விரக்தியும் தரும்!
செயல் வேண்டும்!

Saturday, July 20, 2019

சித்த மருத்துவ கத்தரிக்காய் மான்மியம்

சித்தர்கள் கூறும் கத்தரி மான்மியம் கீழே, 

சித்த மருத்துவத்தில் தேரையர் கத்தரிக் காயைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 

தேரையர் கரிசல் 

பண்டு மாண்ட கிரந்தியைப் பாலிக்கும்

உண்ட கைக்குந் தினவை உண்டாக்கிடும்

நண்டுகிட்டுங்க் குரங்கென நாமாளுங்

கண்டு விட்டது கத்தரிக் காயதே

எக்கால மும்பழகி யில்லாத மானிடர்க்கு

முக்கால முண்டாலும் மோசமிரா - பக்குவமா

யங்கந் தணிய வமாபத்தி யக்கறியாம்

வங்கக்கா யுண்டறிகு வாய்

வழுதலை யாகிய வங்கக் காய்தினப்

பழுதிலை யஃது நற் பத்தியமாகுமே. 

கத்தரிகாய் கரப்பான், சொறி சிரங்கைத் தூண்டும், 

எக்காலமும் பழகிய மனிதர்க்கு, அதாவது வழமையாக கத்தரி உண்டு உடல் ஏற்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு மூன்று நேரமும் உண்டாலும் எந்த துன்பமும் வராது. பத்தியத்திற்கு உகந்தது. 

கத்தரியில் பழுக்க விட்டு உண்டால் அது நோயை உண்டாக்கும். பிஞ்சும் காயும் (விதை உருவாக முன்னர் இருக்கும் காய், இதுவே பறிக்கும் பருவம்) முக்குற்றத்தைத் தணிக்கும். உடலிற்கு நலம் தருவது.


ஆயுர்வேத கத்தரிக்காய் மான்மியம்

கத்தரி இயற்கையாக விளைவித்தால் அதன் பலனை ஆயுர்வேத அடிப்படையில் கூற வேண்டுமல்லவா, 

கத்தரியை சம்ஸ்க்ருதத்தில் வ்ரிந்தக அல்லது வர்துக (மலையாளத்தில் வழுதலங்காய் என்பதற்கு அடிச் சொல்லாக இருக்கும்) என்று கூறுவார்கள். கத்தரி எப்படி செயல் புரியும் என்பதைப் பற்றி பாவ ப்ரகாச நிக்ஹந்து சகவர்கம் என்ற ஆயுர் வேதநூல் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. 

சுவை - மதுரம் எனும் இனிப்பு

குணம் - தீக்ஷணம் (எல்லா தாதுக்களையும் வலிமையாக ஊடுருவிச் செல்லக்கூடியது, அதனால் உஷ்ண குணமும், இலகுவானதும்)

விபாகம் என்றால் சமிபாடடைந்த பின்னர் என்ன செய்யும் என்பது, கத்தரி சமிபாடடைந்த பின்னர் காரச் சுவையாக செயற்படும்.

திரிதோஷத்தில் பித்தத்தை அதிகரித்து கபத்தைக் கூட்டி வாதத்தைக் குறைக்கும் 

அதனால் ஈரலைப் பலப்படுத்தும், சமிபாட்டுக்கு உதவும், சுக்கில தாதுவைக் கூட்டி விந்து உற்பத்தியைக் கூட்டும்!   

ஆயுர்வேதத்தில் கத்தரி ஆமணக்கெண்ணை தைலம் ஆமவாத (Rheumatoid Arthritis) சிகிச்சைக்குப் பயன்படுகிறது. 

நவீன ஆய்வுகளில் கத்தரியில் இருக்கும் Chlorogenic acid என்ற பதார்த்தம் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. அத்துடன் கத்தரியில் Histamines அதிகளவு காணப்படுவதும் சிலரிற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணம். ஆயுர்வேதத்தில் தோல் நோய் உள்ளவர்கள் கத்தரி தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

கத்தரி மான்மியம் தொடரும்....


நாங்கள் அறிவியல் இயற்கை விவசாயிகள்!

விவசாயம் செய்கிறோம் என்றால் தோட்டத்தில் மண்வெட்டி பிடித்துக் கொத்திக் கொண்டு இருப்பது மாத்திரம் அல்ல! அது அடிப்படை! 

சூழலைப் புரிந்து கொள்வது! 

பயிரின் வளர்ச்சிக்கு எது தேவை?

எது தடையாக இருக்கிறது?

நீர்ப்பாசனம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

காற்று என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

வெப்பம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

என்ன பூச்சிகள் வருகிறது?

எப்போது வருகிறது?

இலை எப்படி இருக்கிறது?

தண்டு எப்படி இருக்கிறது?

நிலம் எப்படி இருக்கிறது?

இறுதியாக வரும் விளைச்சலில் அளவு எப்படி இருக்கிறது? 

இவற்றிற்கு எல்லாம் சரியான புரிதல் இருந்தால் மட்டும் தான் நாம் விவசாயம் செய்ய முடியும். 

இப்போது உள்ள விவசாயம் நோய் வந்தால் ஏன் வந்தது? எப்படி வந்தது என்று சிந்தியாமல் நேரே மருந்துக்கடைக்குச் சென்று பூச்சி மருந்து வாங்கி ஒரு அடி அடித்தால் போதும் என்ற அளவில் தான் விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்!

ஆனால் நாங்கள் அப்படி இல்லை! ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் இளைஞர்கள்! 

கீழே எமது இயற்கை விவசாயக் கத்தரியின் ஒவ்வொரு காயும் நீளமும், சுற்றளவும், எந்த மரத்தில் எத்தனையாவது காய்? எவ்வளவு நிறை என்ற அனைத்து விபரமும் பதிகிறோம்!

யாராவது இயற்கை விவசாயம் விளைச்சல் குறைவு? பூச்சி தாக்கும் என்று கதை விட்டால் அறிவியல் புள்ளி விபரத்துடன் (Scientific Statistical parameters) பதில் கிடைக்கும்!   


Thursday, July 18, 2019

நானும் தாடியும்

சிறு வயதில் எனது அப்பப்பாவை பார்க்கச் செல்லும் போது வைத்தியரான அவர் முனிவர் போல் தாடி வைத்திருப்பார்!

அப்பாவும் தாடி தான்!

எனக்கு வாய்த்த குருமார் இருவரும் வெண் தாடி வேந்தர்கள் தான்! 

இப்படி இருக்க, 

நான் தாடி வைக்கத் தொடங்கிதற்கான காரணம் சுவாரசியமானது! பட்டம் பெற்ற பின்னர் சூழலியலில் ஆலோசகனாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒரு ஆலோசனைக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது மீசையைக் குறைத்து தாடி இல்லாமல் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பற்றுவேன். 

ஒரு முறை மிக வயதான அரச அதிபர் (இந்தியாவின் கலெக்டெர்) சந்தித்து உரையாடச் சென்றிருந்தோம். அந்த மாவட்டம் தொடர்பாக சூழலியல் மேம்பாடு தொடர்பாக, நான் கருத்துச் சொல்லும் போது சற்று கவனமில்லாமல் கேட்பதுடன் இடைக்கிடை இந்த சிறுவன் யார் என்ற போக்கில் அடிக்கடி எனக்கு அனுபவம் போதாது என்ற தொனியில் உரையாடுவார். இது எனக்குப் பெருத்த மனச் சங்கடம்! 

இது போல் என்னை எவரும் சிறுவனாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக தொடங்கிய தாடி இப்போது ஆன்மீகம் பேசுவதால் அதனுடன் தொடர்பு படுத்துவது தவிர்க்க முடியாமல் வந்து நிற்கிறது! 

எப்படி இருப்பினும் எல்லாக் கலாச்சாரத்திலும் தாடி அறிவின் முதிர்ச்சியின் குறியீடாகத் தான் இருக்கிறது.


Monday, July 15, 2019

தலைப்பு இல்லை

நாம் எமது சக விவசாயிகளுடன் உரையாடிய போது கத்தரியில் காய்துளைப்பான் (fruit borer) தண்டு துளைப்பானுக்கும் (Stem Borer) எந்த பூச்சி மருந்தும் (Pesticide) தற்போது பலனளிப்பதில்லை என்று கவலைப்பட்டார்! 

ஆனால் ஆச்சரியம் பூச்சி மருந்து தெளிக்காத எமது இயற்கை வேளாண்மையில் விளைந்த கத்தரி காய்துளைப்பான் எதுவும் இல்லை என்பதே! இதன் அர்த்தம் இயற்கை வேளாண்மையில் காய்துளைப்பான் வராது என்ற உயர்வு நவிற்சி அல்ல! ஆராய வேண்டிய ஒரு காரணி இருக்கிறது என்பதே! 

பூச்சியைக் கொல்லத் தெளிக்கும் போது அந்த இரசாயனம் செடியையும் பலவீனப்படுத்தும். ஆனால் இயற்கையாக செடியை வலிமைப்படுத்தும் உதவியை மட்டும் செடிக்கு நாம் செய்தால் செடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்! 

ஏனென்றால் இயற்கை எல்லோருக்கும் இயல்பாகவே தீமையை எதிர்த்து வெல்லும் சக்தியைக் கொடுத்துள்ளது! அதை எப்படி விழிப்படையச் செய்வது என்பது மட்டுமே மனிதனதும் மற்றைய உயிரினங்களினதும் செயலாக இருக்கும்! இதை விவசாயத்தில் சாதித்தால் அது இயற்கை விவசாயம்!

கீழே வீட்டுக்கார அம்மாவின் கத்தரிக்காய் புளிக்குழம்பு! சுவை அபாரம்! சுவையின் காரணம் கைப்பக்குவம் என்றாலும் நாம் விளைவித்த இயற்கை கத்தரி என்பது எமது விவாதம்!   

கத்தரி விஷேசம் என்பது அதை வாங்கிய மற்றவர்களும் கூறியதால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான்!

 

Friday, July 12, 2019

தலைப்பு இல்லை

தாவரங்களை எவரும் வளர்க்க முடியாது! அது இயற்கையில் தனக்குத் தேவையானதை பெற்று வளர்ந்து கொள்ளும்! அப்படி அது தனக்குத் தேவையானதைப் பெறுவதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வதற்கு பெயர் தான் இயற்கை விவசாயம்! 

எமது இயற்கை விவசாய நிலத்திலிருந்து விளைந்த கத்தரி!


தலைப்பு இல்லை

தாவரங்களை எவரும் வளர்க்க முடியாது! அது இயற்கையில் தனக்குத் தேவையானதை பெற்று வளர்ந்து கொள்ளும்! அப்படி அது தனக்குத் தேவையானதைப் பெறுவதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வதற்கு பெயர் தான் இயற்கை விவசாயம்! 
எமது இயற்கை விவசாய நிலத்திலிருந்து விளைந்த கத்தரி!

சமூகமும் ஆன்மீகமும்

ஆன்மீகம் என்பதன் பொருள் எமக்குள் இருந்து இயக்கும் ஆன்மாவின் கருவிகளை மீகித்தல் - உயர்த்துதல் என்று பொருள்படுகிறது. அதாவது தனிமனித மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாடு. 

இன்று ஆன்மாவை உயர்த்துதல் இல்லாமல் வெளிப்பகட்டு ஆன்மீகமாகி மக்களை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் ஆடம்பரமாக்கப்படும் பணம் ஏழைமக்களில் வாழ்வினை உயர்த்தப் பயன்படலாம்! அவனை விட அதிகமாக கோயிலிற்கு செய்து பெரும் புகழ் பெறலாம் என்ற எண்ணம் மாறி என்னிடம் இருக்கும் அதிக பணம் மற்றவனை உயர்த்தப் பயன்படுத்தலாம்! இப்படியான சிந்தனை எமது கோயில் வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அண்ணன் மல்லியப்புச்சந்தி திலகர் எழுதிய "மாரியம்மனுக்கோர் மனு" என்ற கவிதை மலையக தோட்டப்புற மக்களின் களங்கமற்ற பக்தியைப் படம்பிடித்துக்காட்டி, அந்த பக்திக்கு அர்ப்பணிக்கும் மன நிலையை சுட்டிக்காட்டுகிறார். 

இந்தக் கவிதை விவரிக்கும் சம்பவம் எனக்கு நடந்தது. பெருந்தோட்ட இளைஞர் குழு ஒன்று ஒரு முறை என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். என்ன நோக்கம் என்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதி கேட்பதற்காக? அவர்களை அமரவைத்து உரையாடினால் அதில் இருக்கும் 90% ஆனவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. சரி கும்பாபிஷேகத்திற்கு எவ்வளவு செலவு என்றால் 30 இலட்சம் என்றார்கள்! இந்த முப்பது இலட்சத்திற்கு எல்லோரும் சேர்ந்து தொழில் தொடங்கி அதில் வரும் இலாபத்தை எடுத்து கும்பாபிஷேகம் செய்யலாமே தம்பி! என்றால் மௌனம். 

ஆனால் யதார்த்தத்தில் கும்பாபிஷேகத்திற்கும் பணம் கொடுக்கும் எல்லோரும் அந்த இளைஞர்கள் நாம் தொழில் தொடங்கப்போகிறோம் என்றால் எவரும் பணம் தரமாட்டார்கள் என்பதுதான் சமூகத்தின் மன நிலை! 

ஆக கோயில் கட்டி பாவம் போக்கலாம் என்ற சிந்தனை மாறி இன்னொருவன் உயர்ந்தால் நாமும் உயர்வோம், சமூகமும் உயரும் என்ற சிந்தனையுள்ள சமூகம் உருவாகவேண்டும்! 

இதன் அர்த்தம் கோயில்கள் தேவையில்லை என்பதல்ல, அவை சமூக கலாச்சாரத்தின் அத்திவாரம்! ஆனால் அந்த அத்திவாரத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடம் அழகாகவும், சிறப்பாகவும் இருக்க சரியான மூட நம்பிக்கை அற்ற சிந்தனை இருக்க வேண்டும். 

கோயிலின் அநாவசிய செலவுகளைக் குறைத்து மக்களின் கலாச்சார வாழ்வதார மேம்பாட்டினை முன்னெடுக்கும் திட்டங்கள் உருவாக வேண்டும்.


Tuesday, July 09, 2019

5G தொழில் நுட்பமும் மௌன வசந்தமும் (Silent Spring)

யாழ்ப்பாணத்தில் 5G தொழில் நுட்பத்தினை டயலொக் நிறுவனம் பரீட்சிக்க ஆரம்பித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன! 

இதன் பாதிப்புகள் சரியா பிழையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்! மனிதவாழ்க்கையின் தத்துவமும், நோக்கமும் தெரியாத அறிவியல் மேதாவிகளின் கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு நன்மையானவையாக இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவற்றின் விளைவுகளின் அறிய நீண்டகாலமாகும் என்பது உண்மை. 

அண்மையில் நானும் எனது விலங்கு நடத்தையியல் (Animal behavior) ஆராய்ச்சி ஆசிரியரும் உரையாடும் போது 2009 இற்கு முன்னர் வவுனியா, வன்னிப் பகுதிகளில் இருந்த Migratory birds களின் வருகை படிப்படியாகக் குறைந்து முற்றாக இல்லாமல் போய் உள்ளது, இது பற்றி முறையான ஆய்வு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 2009 இற்கு பிறகு இந்தப்பகுதியில் தொலைபேசிக் கோபுரங்களின் பெருக்கம் அதிகம் என்பது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆம் சங்கரின் 2.0 படத்தின் கருதுகோள் இங்கு பொருந்தி வருகிறது. 

செயற்கைப் பீடைகொல்லிகளின் (synthetic pesticide) விளைவு 1962 இல் Rachel Carson இன் Silent Spring (மௌனவசந்தம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) நூலின் பின்னர்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆரம்பத்தில் DDT ஐ மண்ணெண்ணெயில் கலந்து அடித்து நுளம்புகளைக் கட்டுப்படுத்தவும் விவசாயப் பீடைகளை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. இதன் விளைவுகள் 1945 இல் அமெரிக்காவில் அறியப்பட்டு அதைத் தடுக்க வழியில்லாமல் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் 1962 இல் மேற்குறித்த நூல் மூலம் பெரும் விழிப்புணர்வு உண்டாகி, 1973 இல் தடைசெய்யப்பட்டது. ஏறத்தாள முப்பது வருடங்களுக்குப் பின்னர்! இதற்கு முன்னர் 1970 களில் WHO பாவனையைத் தடைசெய்த போது இலங்கை உடனடியாக 1976 இல் கொள்கை அளவில் (Regulatory) தடைசெய்தது. முற்றுமுழுதான தடை 25 வருடங்களுக்குப் பின்னர் 2001 இலேயே நடைமுறைக்கு வந்தது! இத்தனை வருட DDT பாவனையின் பாதிப்பு இலங்கையில் எத்தகையது என்பது பற்றி எந்த முறையான ஆய்வும் முன்னெடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை! 

5G தொழில் நுட்பம் அல்லது கைபேசி தொழில் நுட்பம் ஆபத்தானதா இல்லையா என்று அறிய இன்னும் பல ஆண்டுகள் தேவை! ஆனால் இந்த 5G தொழில் நுட்பம் எமக்குத் தேவையா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி? அதீத தொழில் நுட்பங்களைப் பாவித்துக்கொண்டு மனித மூளையினையும், உழைப்பினை மழுங்கடித்து மனிதனின் தேவையை இல்லாமல் ஆக்கப்போகிறோமா என்ற கேள்வி உருவாகிறது. 

5G தொழில் நுட்பம் வந்தால் சாரதி அற்ற Car பயன்பாட்டிற்கு வரும் என்றால் ஒரு சாரதியின் வேலை போகிறது. அவனுக்குரிய மாற்றுத்தொழில் என்ன?

10 நிமிடங்களில் தரவிறங்கும் HD திரைப்படங்கள் இரண்டு செக்கனில் தரவிறங்கி என்ன நன்மை வாய்க்கப்போகிறது. 

யோகத்திலும் ஆயுர்வேதத்திலும் அடிப்படை அவசரமாக மூச்சு விட்டால் ஆயுள் குறையும் என்பது! ஆக ஒட்டுமொத்தமாக இந்த தொழில் நுட்ப வசதியால் சமூகமாக அவசர மூச்சு விட்டு அழியப்போகிறோமா? 

ஏனென்றால் எல்லையற்ற தேவைகளை உருவாக்கி வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற ஒரு மாயையில் மனித சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதும் ஒருபக்கத்தில் உண்மையாகத்தான் இருக்கிறது.


Monday, July 08, 2019

தலைப்பு இல்லை

நாம் ஒரு செயலில் வெற்றி பெறவேண்டும் என்றால் அர்ப்பணிப்பு அவசியம், அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம்! 

"அர்ப்பணிப்பு”, இதன் அர்த்தம் முழுமையான பக்தி அல்லது வலிமையான இச்சா சக்தி! பொதுவாகப் பார்த்தால் புதிய புதிய சிந்தனைகளுக்கு எப்போதும் பற்றாக்குறை இருப்பதில்லை! ஆனால் அவற்றை செயலாக்குவதற்குரிய அர்ப்பணிப்பு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் மிக உற்சாகத்துடன் செயலைத் தொடங்கி பின்னர் இடையில் மனக்குழப்பம் அடைந்து பின்னர் அந்த செயலைத் தவறவிடுவதுதான் இக்காலத்தில் அனேகரின் நிலை. 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

(Dr. Prahaladha Sasthry, Nuclear Physicist and Former Scientist of Tata Institute of Fundamental Research)


அகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்- நூல் கருத்துரை
கருத்துரை வழங்கியவர்: அரவிந்த் சுவாமிநாதன் (பா. சு. ரமணன்)

இலங்கை வாழ் யோக சாதகர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் எழுதியிருக்கும் இந்த நூல் என் கைக்கு வந்ததும் நான் முதலில் நினைத்தது, ‘இலங்கை வாழ்த் தமிழர் எழுதியதாயிற்றே. நிறைய அவர்கள் வட்டார வழக்குச் சொற்கள் இருக்குமே; நமக்கு அவ்வளவு எளிதில் புரியுமா’ என்பதுதான். இப்படி நினைத்ததற்குக் காரணம், இலங்கை வாழ் எழுத்தாளர்கள் பலரது நூலை முன்னமே படித்திருந்ததுதான். ஆனால், எனது அந்த நினைப்பைப் பொய்யாக்கி விட்டது இந்தத் திறவுகோல்.
பொதுவாக, எனக்கு அறிமுகமாகும் புதிய நூல்களுக்கு அது எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும் முதலில் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு நடுவில் ஏதேனும் ஒரு பக்கத்தை அல்லது சிலபக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என் வழக்கம். அது எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதனைத் தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது பிந்தைய வாசிப்பிற்காகத் தள்ளி வைத்து விடலாமா என்பதை முடிவு செய்வேன். (இது எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல; எனக்கு அறிமுகமாகாத புதியவர்களின் நூல்களுக்கு மட்டுமே இந்த முறை) அது போலவே இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், நான் எடுத்துப் பிரித்த பக்கத்தில் இருந்த செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. காரணம், சமீபத்தில் அதற்கு முன்பாக நான் வாசித்திருந்த ரமண மஹரிஷியின் நூல் ஒன்றுக்கும் இந்த நூலில் இருந்த செய்திக்குமான தொடர்பு தான். பக்தர் ஒருவர், ரமணரை அணுகி, தனக்குத் தொடர்ந்து தியானம் செய்வதால் இறைவனின் காட்சி உள்பட பல்வேறு காட்சிகள் கிடைப்பதாகவும், சில ஒலிகள் கேட்பதாகவும் தான் அநுபூதி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும் கூறி, பகவான் ரமணரிடம் அது குறித்து விளக்கம் கேட்கிறார். அதற்கு ரமணர், “அதெல்லாம் மாயத் தோற்றங்கள். தியான வேளைகளில் சிலருக்கு அம்மாதிரித் தோன்றக் கூடும். ஆனால், அதெல்லாம் நிலையில்லாதவை. அகங்கார மனதின் செய்கையே இதெல்லாம். ஆன்மானுபூதியை விரும்பும் ஒருவன் இம்மாதிரிக் காட்சிகளில் மயங்கிவிடாமல், கவனத்தைச் சிதறவிடாமல் தொடர்ந்து தனது சாதனையைச் செய்து வரவேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
”அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்” நூலில், நான் வாசிக்கத் திறந்த பக்கத்தில் (பக்கம்:95) இருந்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
“சதாசிவ தளம் எனப்படும் புருவமத்தியில் உனது பார்வையினைச் செலுத்தி, மனதின் துணை கொண்டு உணர்வினையும் செலுத்தி வந்தால், சித்தத்தின் விருத்திகள் குறைந்து, மனம் அடங்கி சுழுமுனையில் பிராணன் பாய ஆரம்பிக்கும். கண்களை மூடிய நிலையில் உனது அகக்கண்ணில் ஒளி தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஒளி உனது பிராண சக்தி அளவிற்கு ஏற்ற அளவில் ஒரு சிறு பொறியாகவோ, கற்றைகளாகவோ காணப்படும்.
இங்கு ஒரு விடயத்தினைத் தெளிவாக கவனித்து கொள்ள வேண்டும். சித்தத்தின் விருத்திகளை கட்டுப்படுத்தி அக மௌனத்தினை அடைவதற்கு, திருமூலர் முதலான சித்தர்கள் கூறிய இயம, நியம நிலைகளை நன்கு கடைப்பிடித்து, பிரத்தியாகார, தாரணையில் மனதை நன்கு பயிற்றுவிக்க வேண்டும். இப்படியான நிலையினை அடையாமல் வெறுமனே புருவமத்தியில் உணர்வைச் செலுத்த ஆரம்பித்தால் உனது மனம் சித்த விருத்திகளின் மூலம் பலவித மாயத்தோற்றங்களை உருவாக்கி, உனக்கு பலவித காட்சிகளை காட்டி மயக்குவிக்கும். இப்படியான நிலையில் நீ கடவுளை பத்து தலைகளுடன் கண்டேன், பேசினேன் என்று மாயா உணர்வு தோற்றங்களில் சிக்கி விடுவாய். ஆகவே, இதனை எச்சரிக்கையாக குருவின் வழிகாட்டலில் பயிலவேண்டும்.”
- இதனைப் படித்ததும், ரமண மஹரிஷி பக்தர் ஒருவருக்குச் சொன்னதற்கும், இந்த நூலில் இருக்கும் தகவலுக்குமான உள்ள தொடர்பை நினைத்து வியந்தேன். தொடர்ந்து நூலை ஆர்வமுடன் வாசிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் ஒரே மூச்சில் வாசிக்கவில்லை. அப்படி இந்த நூலை வாசிக்கவும் கூடாது. மெல்ல மெல்ல அசை போட்டு, நூலின் கருத்துக்களை உள்வாங்கி, வினா எழுப்பி, தனக்குள் சிந்தித்தே வாசிப்பைத் தொடர வேண்டும். அப்படிப்பட்ட நூலே இது. நான் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழில் இருக்குமோ என்று ஐயப்பட்டதற்கு மாறாக மிக எளிய தமிழில், அனைத்துத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மிக மிகச் சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் யோக ஸாதகர் ஸ்ரீஸக்தி சுமனன் அவர்கள்.
நூலைப் பற்றி முகவுரையில் சொல்லும் Sri Sakthi Sumananசுமனன், “இந்த நூல் வெறுமனே சொற்களின் அகராதி அர்த்தங்களை வைத்துக் கொண்டு எழுதப்படவில்லை. எமது குடும்ப, வைத்திய யோக பாரம்பரிய அறிவினையும், எமது குருமார்கள் காட்டிய வழியில் யோக சாதனையில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டு, தியான சாதனை மூலம் உணர்வினால் அறிந்த விடயங்களையும் தந்துள்ளோம்” என்கிறார். நூலை வாசிக்கும் ஒருவர் வாசிக்க வாசிக்க இந்த உண்மையை, இதன் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
“அகத்தியர் ஞானம் -30” என்னும் அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் 30 பாடல்களின் விளக்க நூலாக மட்டுமல்லாமல், யோக, ஞான, தியான, சாதனா மார்க்க நெறிமுறைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. நூலின் சிறப்புக்களைப் பலவாறாகச் சொல்லலாம். ஆனால், நான் யோகம் அறிந்தவனோ, ஆசிரியனோ, ஏன் பயிற்சி செய்பவனோ கூடக் கிடையாது. ஆகவே, சாதரண வாசகனான என்னைக் கவர்ந்த இந்த நூலின் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல முற்படுகிறேன்.
(தொடரும்)



அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் - நூல் கருத்துரை : பகுதி 2
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

- என்கிறது திருமந்திரம். யோக, ஞான சாதகர்களுக்கு குரு என்பவர் அவசியம் தேவை. இருளை நீக்கி அருளப் பெருகச்செய்வது மட்டுமல்ல குருவின் வேலை. நல்லதை மட்டுமல்லாமல் அல்லாததையும் சுட்டிக்காட்டி அவ்வழிப் போகாதே என எச்சரிப்பதும் அவர் பணியே. சிங்கத்தின் கண் பட்ட இரை தப்பாதது போல் குருவின் அருட்கடாட்சம் பெற்ற சீடன் ஒருபோதும் வழி தவறுவதில்லை. குரு காட்டிய வழிப்படி நடப்பவர்களே குருவிற்குகந்த சீடர்களாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட சீடனுக்கு குருவின் அருள் என்றும் துணையாக இருக்கும். “தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.” - என்கிறார் சுமனன்.
குருவின் அவசியம், தேவை என்பதற்கான பாடல்களின் விளக்கங்கள் குருவின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாய் மட்டுமல்லாமல், “குரு இல்லா வித்தை பாழ்” என்ற உண்மையையும் உறுதிப்படுத்துகின்றன. அகத்திய குரு வழிபாடு, அந்த வழிபாட்டிற்கான மூலகுரு மந்திரம், இந்த நூலை வாசிக்கும் முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார். அது நூலைத் தொடர்ந்து அம்முறையில் வாசிப்பதற்கு வழிகோலுகிறது.
நூலின் முக்கியமான சில செய்திகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.
1) பரிபாஷை, பரிபாஷை என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்னவென்று தெரியுமா? நான் கூட அதை சித்தர்கள் தங்களுக்குள் ‘பரிமாறி’க் கொள்ளும் ரகசிய மொழி என்பதாகவே இதுநாள் வரை அறிந்திருந்தேன். ஆனால், ‘பரி’ என்பதன் பொருள் என்ன, அது அதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கங்கள் வியப்பைத் தருகின்றன.
2) பன்னிரண்டு வருட குருகுல வாசம் ஏன் அவசியம் என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கம் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
3) சித்தர்கள் குறிக்கும் ‘கலை’ என்பதன் உண்மைப் பொருள், ‘விந்து’ என்று அவர்கள் எதனைக் குறித்துள்ளார்கள், ‘விந்து கட்டுதல்’ என்றால் என்ன என்பதெல்லாம் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும், யோக மார்க்கத்தில் கூறப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீ சுமனன்.
4) வாசி, வாலை, ஓரெழுத்து, எட்டெழுத்து, இரண்டெழுத்து மந்திரங்கள், அவற்றின் தாத்பரியம், யோகத்தில் அவை பயின்று வரும் விதம், நாடி பற்றிய விளக்கக் குறிப்புகள் யோக சாதகர்களுக்கு நல்லதோர் திறப்பு
5) உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ‘தீர்க்க சுவாசம்’ பற்றிய விளக்கம் சிறப்பு. (இதை மட்டுமே நான் -அதுவும்- எப்போதாவது செய்வேன்)
6) ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கமும், அவற்றுடன் பூமி சுழற்சிக்கான தொடர்பும், அதனால் பிராணனை ஈர்க்கும் விதமும், மகா பிராணன் உடலிலும் சித்தத்திலும் செயல்படும் விதமும் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ள விதம் பிரமிப்பைத் தருகிறது.
7) முறையாகப் பிராண சாதனை செய்வது எப்படி, அதனால் கிடைக்கும் சித்தியான ‘வகார மாறல்’ என்பதின் பயன் என்ன என்பது யோகத்தில் அனுபவம் பெற்றார்கள் மட்டுமே விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
8) வாமபூசை என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்கு உண்மையாகவே ஒரு திறப்புத் தான்.
9) நமது மனது, அது செயல்படும் விதம், அதற்கும் சூரிய, சந்திரர்களுக்குமான தொடர்பு, அதனோடு இயைந்து நாடிகள் செயல்படும் விதம், எண்ணம் தோன்றும், ஒடுங்கும் செயல்பாடுகள் என்பது பற்றி இருக்கும் விளக்கங்கள் புதுமை.
10) ஞான யோக வழியில் செல்லும் சாதகனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள், அவன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை எல்லாம் தெளிவாக, விளக்கமாகப் பல பாடல்கள் மூலம் சொல்லியிருக்கிறார் சுமனன்.
சுருக்கமாகச் சொன்னால் சிந்தர்களின் சூட்சும மந்திரங்கள், (நங், மங், சிங், வங், யங் போன்றன) அவற்றின் சூட்சுமப் பொருள், அவற்றைத் தன்னுடலில் ஈர்க்கும் விதம், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களின் இயல்புகள், போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை என்பதன் விளக்கம், ஆயிரம் இதழ் தாமரைப்பூ, நாத ஒலி, அமிர்தத்தை கிரகித்துக் கொள்ளும் வழிமுறைகள் என்று யோகக் கலையின் சூட்சும அம்சங்களை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியிருக்கிறார் சுமனன்.
“மனதில் எழும் சந்தேகத்தை சித்தத்தில் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, பெறப்படும் ஞானத்தை உள்வாங்கிக் கொள்வதில் தான் ஒருவனின் புரிதல் வளர்ச்சி உள்ளது. இப்படி சித்தத்தையும் கட்டுப்படுத்தி மனதையும் கட்டுப்படுத்தி புத்தியை வலுப்படுத்த தகுந்த பிராண பலம் வேண்டும். இப்படிச் செய்ய முடியாதவர்கள் எப்போதும் கேள்வி கேட்பவர்களாகவும், அதற்கான தகுந்த விடைகளைப் புரிய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்” - என்கிறார் சுமனன் நூலின் முன்னுரையில். இக்கருத்து அனைவரும் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
யோக சித்தியில் ஆர்வமுள்ள ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் “அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்.” ஏற்கனவே யோகத்தில் தேர்ந்தவர்களுக்கும் கூட இந்நூல் புதிய வெளிச்சம் பாய்ச்சும் தன்மையில் உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
பல்வேறு குருமார்களின் அருள் பெற்று, குருமார்கள் வழி நின்று சாதனைகள் செய்து அனுபவம் பெற்று இந்நூலைத் தந்திருக்கிறார் Sri Sakthi Sumanan. இந்த நூலை உருவாக்க அவர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; சிந்தித்திருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரு வித தியான, தெய்வீக நிலையிலேயே பல சமயங்களில் இருந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் இவ்வளவு செறிவான, தெளிவான விளக்கங்கள் உடைய, எளிமையான நூல் என்பது சாத்தியம். நூலாசிரியர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், அகத்தியர் யோகம் பற்றிய நல்லதொரு நூலைத் தந்தமைக்காக எனது வணக்கங்களும்.
அன்புடன்
அரவிந்த் சுவாமிநாதன்

Sunday, July 07, 2019

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானதிறவுகோல் நூல் பற்றி Arvind Swaminathan அவர்களின் கருத்துரை!

தலைப்பு இல்லை

நான் ஒரு சூழலியல் ஆய்வாளனாகவே (Environmental Science Researcher) எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன்! எதையும் நுணுக்கி ஆராய்வதை விட (Reductionist approach) ஒரு பிரச்சனையின் குழப்பத்தையும் (Chaos) அதன் பெரும் படத்தையும் (Big picture), அதன் தொகுதி இயக்கத்தையும் (System Dynamics), அவற்றின் இடைத் தொடர்புகளையும் (Interrelationships), ஒன்றுக் கொன்று இடைச் சார்புநிலை (Interdependence) என்பவற்றை ஆராய்வதே எனக்குப் பிடித்த ஆய்வு முறை! 

இதற்கேற்றால் போல் எனது சிந்தனைக்கு சுதந்திரம் தரும் மேற்பார்வையாளர் அமைந்தார்! 

இந்த ஒளிப்படம் அரிஸ்டாடலின் Synergy concept - Whole is grater than Sum என்ற அடிப்படையில் என்னுடைய ஆய்வினையும் இன்னும் இருசக மாணவர்களது ஆய்வினை இணைத்து உருவாக்கபட்டது! 

https://www.youtube.com/watch?v=YCHseZYzASI&t=1s 

குரல் தந்தது எனது சகோதரன் Thava Sajitharan

Zero Budget இல் இருக்கும் வசதிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உருவாக்கியது! 

நிர்மலகாந்தன், சுஜி, விஷ்ணுவரதன் ஆகிய எனது இளைய அணி நண்பர்கள் களப் பணியில் உதவினார்கள்!


தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோலிற்கு கிடைத்த ஆசியுரை! தகுதி வாய்ந்த கற்றறிந்த பெரியவர்கள் நூலிற்கு ஆசி தருவது அன்னையினதும் குருவினது அருள்! 

எனது குருவின் நண்பரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிரேஷ்டரும், சாதனா மார்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும், புதுடெல்லி ருதம்பர ஞான சபா ஸ்தாபகர், சிதானந்த அலை, மஹாசக்தி ரகசியம், ஸ்ரீ பாலாம்பிகா, ஸ்ரீ குருப்ரகாச மலர், ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் ஆகிய ஸ்ரீ வித்யா உபாசனை நூற்களை எழுதியவருமான ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன் (Arutsakthi Nagarajan) ஐயாவின் ஆசியுரை! 

மிக்க மகிழ்ச்சியான தருணம்!


Saturday, July 06, 2019

தலைப்பு இல்லை

தேவிபுரம் கட்டுரைத் தொடர் 09 பாகம் இன்றைய வீரகேசரி சங்கமம் இதழில்!

நுண்ணறிவும் ஞானமும் Intelligence and wisdom

1. நுண்ணறிவு தர்க்கத்திற்குத் தள்ளுகிறது, ஞானம் தெளிவினைத் தருகிறது

2. நுண்ணறிவு இச்சா சக்தியின் ஆற்றல், ஞானம் இச்சா சக்தியை வெல்லும் ஆற்றல்

3. நுண்ணறிவு எரிக்கும் சூடு, ஞானம் கதகதப்பைத் தரும் வெம்மை

4. நுண்ணறிவு தகவலின் தேடல், தேடுபவனை சோர்வாக்கும், ஞானம் உண்மையின் தேடல், தேடுபவனைத் தூண்டும்.

5. நுண்ணறிவு ஒன்றைப் பற்றிக்கொள்வது, ஞானம் கடந்து செல்வது

6. நுண்ணறிவு உன்னை தன் வழியில் இழுத்துச் செல்லும், ஞானம் சரியான வழியில் வழி நடாத்தும். 

7. நுண்ணறிவுள்ளவன் தனக்கு எல்லாம் தெரியுமென நினைப்பான், ஞானமுள்ளவன் இன்னும் கற்பதற்கு இருக்கிறது என்று நினைப்பான்.

8. நுண்ணறிவுள்ளவன் எப்போதும் தனது கருத்தை நிருபிக்க முயல்வான், ஞானமுள்ளவன் தர்க்கங்களில் எந்த உண்மையும் இல்லை என்பதை அறிவான்

9. நுண்ணறிவுள்ளவன் எப்போதும் தேவையில்லாத அறிவுரைகளைத் தருவான், ஞானமுள்ளவன் எல்லா விதமான தீர்வுகளின் சாத்தியங்களை ஆராய்வான்.

10. நுண்ணறிவுள்ளவன் கூறப்பட்டது எதுவென்பதை புரிந்து கொள்வான், ஞானமுள்ளவன் எது கூறப்படவில்லை என்பதையும் அறிவான். 

11. நுண்ணறிவுள்ளவன் தான் கூறவேண்டும் என நினைக்கும் போது பேசுவான், ஞானமுள்ளவன் கூறுவதற்கு ஏதும் இருந்தால் பேசுவான். 

12. நுண்ணறிவுள்ளவன் எல்லாவற்றுடனும் தனக்கு தொடர்பு உள்ளது என நினைப்பான், ஞானமுள்ளவன் எல்லாவற்றுடனும் தான் எப்படி தொடர்பு பட்டுள்ளேன் என்பதைப் புரிவான்.

13. நுண்ணறிவுள்ளவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைப்பான், ஞானமுள்ளவன் எல்லாவற்றையும் சரியான திசையில் வழி நடாத்துவான் 

14. நுண்ணறிவுள்ளவன் உபதேசித்துக்கொண்டு இருப்பான், ஞானமுள்ளவன் அடையவேண்டிய இடத்தை அடைந்திருப்பான்

நுண்ணறிவு நல்லதாக இருந்தாலும் ஞானமே நல்ல பலனதைத் தருகிறது. 

Translated from Sai Ramji's wall post


Friday, July 05, 2019

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூலிற்கு தமிழகத்தின் எழுத்தாளர், ஸ்ரீ அன்னையினது பக்தர், மகாயோகி ஸ்ரீ அரவிந்தர், ரமண மகரிஷி வாழ்க்கை வரலாறு இன்னும் பல நூற்கள் எழுதியவர், சித்திரக் கவி முதலிய தமிழின் ஆழமும் அகலமும் அறிந்த பரம்பரையில் வந்த Arvind Swaminathan அவர்களது கருத்துரை!

இயற்கை விவசாயம் இயற்கையைப் பேணும் விவசாயம்!

மண் எல்லா வளங்களையும் கொண்ட அன்னப் பூரணி என்பார் சுபாஷ் பாலேக்கர்! சூழலியல் விஞ்ஞானம் (environmental science) படித்து விட்டு Commercial plantation நிர்வாகத்தில் வேலை பார்த்த எனக்குரிய துறை ஆன்மார்த்தமான தொழில் இயற்கை விவசாயம் என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் கடந்த எட்டு மாதங்கள் திட்டமிடலும் முயற்சியுமாக ஒரு ஆய்வுப் பண்ணையை உருவாக்கினோம். முதல் படி மூன்று பயிர்கள் பலன் தந்திருக்கிறது. 
பூச்சிக் கொல்லி இரசாயன உரம் பாவிக்காமல் ஜீவாமிருதம் மாத்திரம் தெளித்து பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட இயற்கை விவசாயத்தின் முதல் விளைச்சல்!
கத்தரி
கௌபீ
கீரை
சம்பிராதயப் பூர்வமாக இன்று, இயற்கை அன்னை விளைவித்தவை எம்பெருமான் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டது!

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்...
மாத்தளையில் உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளை ஒன்றிணைத்து மாத்தளை தமிழ் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு! 
மலையக தமிழ் சமூகம் கல்வியால் பலம் பெற வேண்டும் என்பதே இவர்களது இலக்கு! 
இவர்கள் சில வருடத்திற்கு முன்னர் எம்மை தமக்கு ஆலோசகராக பணியாற்றும் படி கேட்டிருந்தார்கள். நானும் மனமுவந்து ஒப்புக் கொண்டேன். 
இவர்கள் செயலாற்றும் விதம் ஒரு முன் மாதிரியான உதாரணம். இவர்களின் திட்டங்களில் எந்த படோபமும், ஆடம்பரமும், முகஸ்துதிகளும் இருப்பதில்லை, எவரிலும் தங்கியிருப்பதில்லை! கிடைக்கும் சிறிய நிதியில் எப்படி சிறப்பாக திட்டங்களை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள். 
மாணவர்களுக்கு கருத்தரங்குகள் வைக்கும் போது தம்மை உயர்வானவர்களாக காட்டி மாணவர்களின் உளவியலைப் பாதிப்பதில்லை, நண்பர்களாக எளிதாக மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 
ஒரு சிலர் இவர்கள் தமது சொந்த புகழிற்காகச் செய்கிறார்கள் என்று புறம் பேசினாலும் அவற்றை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு தமது சமூக கடமையை செய்யாமலிருப்பதில்லை!
ஒரு முறை நண்பர் ஒருவர் நிகழ்ச்சிகளை பெரிய ஹோட்டலில் சிறப்பாக நடாத்த வேண்டும் என்று முன் மொழிந்த போது அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுவிட்டு, அண்ணா இந்தப் பணத்திற்கு நாம் 100 நிகழ்ச்சிகளில் எங்களது வழமையான style இல் செய்யலாம், இது வீண் ஆடம்பரச் செலவு என்று முடிவெடுத்த போது எனக்கு பெரிய ஆச்சரியம்! எவ்வளவு மனப் பக்குவத்துடன் நடக்கிறார்கள் என்பதை இட்டு.  
சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் தமது பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை விட்டு இத்தகைய இளைஞர்களுக்கு உதவுவது ஒரு பெரிய சமூகப் பணி! 
அவர்களின் அண்மைய பணி....

Thursday, July 04, 2019

தேவி உபாசனையும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கமும்

1. நாம் எமது புலன்களின் இயற்கையைப் புரிந்துக் கொண்டால், 
2. புலன்களுடனான பற்றை விட்டு விட வேண்டிய அவசியத்தை உணர்ந்தால்,
3. எம்மைத் தடுக்கும் எல்லைகளையும், தடுப்புகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக வேலை செய்ய எம்மைப் பழக்கிக் கொண்டால்,
4. கடைசியாக இது சரி, இது பிழை என்ற முடிவெடுக்கும் இருமை நிலையிலிருந்து விடுபட்டு புலன்களின் எல்லைகளிலிருந்து விடுபட்டால் ,
அகங்காரம்/ஆணவம் உடையும், 
இவையே தேவி உபாசனையின் நோக்கங்களும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கமும்! 
- ஸ்ரீ அம்ருதானந்த நாத ஸரஸ்வதி -
(Dr. Prahaladha Sasthry, Nuclear Physicist and Former Scientist of Tata Institute of Fundamental Research)
சுருங்கச் சொல்லின் தேவி உபாசனையின் நோக்கமும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கத்தின் நோக்கம் அகங்காரம்/ஆணவம் அழிதல்! தேவி உபாசனையின் முக்கிய நோக்கம் நான் என்ற நிலை விரிந்து எல்லாவற்றிலும் தெய்வீகத்தை உணர்தல்!
Translated from William Thomas wall post

தலைப்பு இல்லை

வாராஹி உபாசனை என்ற இந்த நூல் நான் சிறுவனாக இருக்கும் போது கைக் காசு (அது தாங்க pocket money) சேர்த்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று! வாங்கும் போது எதற்காக வாங்கினோம் என்று தெரியவில்லை! ஆனால் பிற்காலத்தில் குருமண்டலத் தொடர்பால் தெரிந்துக் கொள்ள வேண்டியதற்கான முன்னறிவிப்பு என்பது புரிந்தது. 

வாராஹியைப் பற்றி தேடுபவர்களுக்கு இந்த நூலில் கடைசியில் துர்க்கைச் சித்தர் பெருமான் சொல்லும் ஒரு அரிய செய்தி; 

"மஹாவராஹி தேவியைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் பல செய்திகள் உள்ளன. சில இடங்களிலும், சில விஷயங்களிலும் ஒரே செய்தி ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும். சாஸ்திரங்களைப் படிப்பதில் ஒரு வகையான சிறந்த பழக்கம் உண்டு. இதை குருமுகமாக கற்க வேண்டும். தெரிந்த விஷயம் இதுவே தெரியாத விஷயத்துடன் கலந்து போய்விடும். மந்திரங்கள் அதன் செயல் தன்மை, அதன் பரிமாணம், அதன் பயணகாலம், பயணதூரம் இவைகளைப் பற்றி எல்லாம் குருவருளால் தான் சித்திக்கும். புரச்சரணை நெறியில் இருந்து வழுக்கி விழுந்துவிடக் கூடாது. இது தன்னைத் தானே கீழே தள்ளுவதுடன், தன்னால் உதவிபெற வந்தனவையும் சேர்த்துத் தள்ளிவிடும்.

எல்லா தேவி மந்திரங்களையும் தானே குருவாக இருந்து தனக்கே ஜெபம் செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பரதேவியான வாராஹியிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. கருணை நிறைந்தவள் இவள்,  அத்துடன் கடுமையும் கொண்டவள். அருளைத் தரும் இவளே அழிவையும் செய்பவள். குளிர்மையானவள் இவள், அதே சமயத்தில் கொடும் தணலாகச் சுடுபவள். எனவே தான் வாராஹி தேவியை நன்கு ஞானம் பெற்றவர்களிடத்தில் உபதேசம் பெற வேண்டும் என்று குருமார்கள் சொல்லிக் கொண்டு வந்துள்ளார்கள். பழைய கால குருமார்கள் தங்கள் சீடர்களின் நல்ல சந்தோஷத்தை கேட்கவும் அதைக் கண்களால் பார்க்கவும் ஆசைப்பட்டார்கள், அவர்கள் மஹனீயர்கள் - மஹான்கள்! 

ஆகவே ஆர்வமுள்ளவர்கள் விஷய ஞானத்தைத் தேடாமல் குருமுகமாய் அறிய வேண்டும் என்பது இந்த ஆஷாட நவராத்ரியில் உபாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!


Wednesday, July 03, 2019

ஆஷாட நவராத்ரி

தஞ்சைப் பெருங்கோயில் வாராஹி சன்னதி!

வாராஹி பிரபஞ்ச மூல ஸக்தியின் சேனாதிபதி! சாதகனின் அந்தக் கரணங்களை சுத்தி செய்து அன்னையை நெருங்க வைப்பவள்! இவள் ஆற்றலால் மனம் ஸ்திரப்படாதவர்கள் எவரும் ஸ்ரீ லலிதையை நெருங்க முடியாது! 

பிரபஞ்சத்திலுள்ள நல்லவை, தீயவை ஆகிய இரு சக்திகளினையும் கட்டுப்படுத்துபவள்! 

ஸாதகனில் ஆக்ஞா சக்ரேஸ்வரியாக புருவ மத்தியில் வீற்றிருந்து மனோன் மணியை அறிவிப்பவள்!


Monday, July 01, 2019

சாதகனின் இச்சை

ஒரு சாதகன் நேர்மையுடன் இருப்பது அவசியமானது! தனது ஆழ்மன ஆசைகளைப் புரிந்து கொண்டு அந்த ஆசைகளில் நிறைவேற்றி திருப்தி காணமுடிந்தால் அதற்குரிய முயற்சியை சரியாக அறிவுத் திறனுடன் செய்து அதனால் ஏற்படும் வெற்றியால் திருப்தியினை மனதிற்கு உண்டாக்க வேண்டும். இதுவே எல்லோருக்கும் பயன்படக் கூடிய இலகுவான வழி! வைராக்கியம் உள்ளவர்கள் அந்த ஆசைகளை தமது அறிவுத்திறத்தாலேயே வெல்ல முடியும். 
ஆகவே சாதனை தொடங்கும் ஒருவன் ஆரம்ப காலத்தில் தனது ஆழ்மன ஆசைகள், விருப்பங்கள் எவை என்று அறிந்து அதை தனது குருவினது ஆலோசனையுடனும் ஆசியுடனும் இஷ்ட தெய்வத்தின் அருளுடனும் தனது மனச் சக்தியை உபயோகித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். 
தெய்வ உபாஸனை எம்மை தெய்வ உருமாற்றம் செய்வதற்குரியவையே அன்றி எமது இச்சைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்கள் இல்லை! 
உபாஸனை செய்து வருவதால் சாதகனது இச்சா சக்தியும் மனச் சக்தியும் பிராண சக்தியும் வலுப்பெறுவதால் இவற்றை பிரயோகித்து தனது ஆழ்மன ஆசைகளை பூர்த்தி செய்துக்க் கொள்ளலாம். இப்படிப் பூர்த்தி செய்வது தனது ஆழ் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தி தெய்வ உருமாற்றத்திற்கு நாம் முன்னேறுவதை தடைப்படுத்தும் மனதின் கீழ் இயல்புகளை ஏமற்றுவதற்கு பயன்படுத்தும் உத்தியாக இருக்க வேண்டுமே அன்றி மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்து மனதின் விளையாட்டில் மாட்டிக்கொள்ளக்கூடாது. 
பலர் உபாசனை சாதனை செய்து சில காரியங்கள் சித்தியானவுடன் தமது எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வேலைக்காரர்கள் போல் உபாசனை சாதனையை கருதத் தொடங்குகிறார்கள். இதனால் அவர்களது ஆன்ம முன்னேற்றம் தடைபடத் தொடங்குகிறது. 
ஆகவே சாதனைப் பாதையில் அறிவுத் தெளிவும் குருவின் வழிகாட்டலும் அவசியமான ஒன்று!

தலைப்பு இல்லை

யோக சாதனையிற்கு இருக்கும் இடையூறுகள் பற்றி ஸ்ரீ அரவிந்தர் கீழ்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 

ஒரு சாதகன் தனது முயற்சியை யோக சாதனையில் செய்து கொண்டு தன்னை தெய்வீக உருமாற்றத்திற்கு உள்ளாக்க விரும்பினால் அவனிற்கு குறுக்கே நிற்கக் கூடிய தடைகள் மூன்றே:

1) நம்பிக்கையின்மை அல்லது நம்பிக்கை போதிய அளவு இல்லாமை. இதனால் தாம் எதற்கு முயற்சிக்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் சிரத்தை குறையும். 

2) தன் முனைப்பு: தன்னைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொள்ளுதலும், தனது மனம் கூறும் விஷயங்களையே நம்பிக் கொண்டு இருத்தலும், இறை சக்தியின் மேல் உண்மையான சரணா கதியினைச் செய்யாமல் தனது ஆழ்மன ஆசைகளை நிறைவேற்றப் பாடுபடுவது. 

3) உணர்வில் ஒரு மந்தம் அல்லது அடிப்படையில் மாற விரும்பாமல் இருப்பது. பலருக்கு சாதனை செய்யச் சொன்னால் தமது அன்றாட வியாபாரம் குழம்பிப் போய் விடும், அல்லது தமது தற்போதைய வாழ்க்கை மாறிவிடும் என்ற பயம் என்பவை உணர்வில் ஒரு மந்த கதியை ஏற்படுத்தும். 

யோக சாதனையில் தெய்வீக உருமாற்றம் வேண்டுபவர்கள் இந்த மூன்று காரணிகளையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...