குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 31, 2023

கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

இன்றைய மகா கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியாகியது! ஒரு மாணவரும் தனது உபாசனை மூர்த்தத்துடன் பங்குபற்றியிருந்தார்! 

உபாசனை, பூஜைகள் சரியான அர்த்தத்துடன் புரிந்து செய்யும் போது மனதிற்கு இன்பத்தினையும், தூய்மையையும், ஆற்றலையும், சம நிலையையும் தரக்கூடியவை. 

மகாகணபதி உபாசனை ஸக்தியை அணுகுவதற்கு மூலம்!


சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மறையியல் கோட்பாடுகள் - 01

காரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் உருவாகி வன்மை அடைந்து ஸ்தூல சரீரத்தை உருவாக்குகிறது என்பதே சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையாகும். 

இந்த காரண சரீரம் ஆன்ம ஒளியாக இறைவனிலிருந்தும் மற்றைய உப ஒளிகளாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியில் இருந்து உருவாக்குவது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. 

இந்த நவக்கிரக - நட்சத்திர சக்திகளை பூமியின் உறைந்த உயிரற்ற வடிவமே தாதுவர்க்கம் எனப்படும் minerals. 

இந்த உயிரற்ற தாதுக்களை உயிருள்ள தன்மைக்குள் கொண்டு வருவதே தாவர வர்க்கங்களின் தொழில். இதனால் மூலிகை வர்க்கம் மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. தாது வர்க்கம் பாவிக்க வேண்டுமானால் தகுந்த புடத்தினால் அணுத் தன்மை உருவாக்கப்பட வேண்டும். இந்த மருந்துகளை செந்தூரம்/பஸ்பம்-சுண்ணம், கட்டு என்று சொல்லுவோம். அப்படியிருந்தும் அவை பாவிக்கப்படும் போது அளவும், பத்தியமும், துணை மருந்துகளும் அவசியம்.

விலங்குகளும், மனிதனும் தனது உடலைப் போசிக்கும் நவக்கிரக நட்சத்திர சக்திகளைக் கிரக்கிக்க வேண்டுமானால் அவற்றை தாதுக்கள் உறைவித்து பூமியில் சேமிக்க, அப்படிச் சேமித்தவற்றை தாவர வர்க்கம் உயிர்த் தன்மையுள்ளதாக்க விலங்குகளும் மனிதர்களும் பயன்படுத்துகிறார்கள். 

மேற்குறித்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் ஜோதிடம் மருத்துவத்திற்குள் வருகிறது. ஒருவன் பிறக்கும் போது அவனது சூக்ஷ்ம சரீரத்தில் அவன் ஏற்ற கிரக நட்சத்திர ஆற்றல்களின் வலிமை என்பதே ஜாதகம். இந்த இருப்பை வைத்துக் கொண்டு அவன் குறித்த கர்மங்களில் -செயல்களில் என்ன நிலையை அடைவான் என்பதை அனுமானிப்பதே!

சூக்ஷ்ம சரீரம் என்ற அமைப்பு காரண சரீரத்திலிருந்து உயிர்த் தன்மையை ஸ்தூல உடலுக்கு கடத்தும் வேலையைச் செய்யும் அதேவேளை உடலிலுள்ள திரவப் பதார்த்தங்கள் அனைத்தினதும் ஓட்டத்தினைச் செம்மைப் படுத்துகிறது. 

இந்த ஓட்டத்தை நாடி - பிராண ஓட்டம் என்று சித்த ஆயுள் வேதம் குறிப்பிடுகிறது. ஸ்தூல உடலில் இது இரத்த ஓட்டத்தினால் அறியப்படுகிறது. எனினும் நாடி என்பது இரத்த ஓட்டத்தினூடாக சூக்ஷ்ம உடலின் பிராண ஓட்டத்தினை அறியும் முறையாகும்.


Friday, January 27, 2023

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஸ்ரீ அரவிந்தர் யோக இலக்கியங்கள் சிருஷ்டியின் வகுப்பாக நடைபெறுகிறது. இந்த வகுப்பில் உரையாடப்பட்ட ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் சைத்திய புருஷன் என்ற சொல்லின் விளக்கக் குறிப்புகள். 

_______________________________________

A. சைத்திய புருஷன் / psychic being

1) சைத்திய புருஷன் என்பது எமது ஆன்மாவில் இருக்கும் இறையின் ஒரு தீப்பொறி போன்ற ஒரு கூறு. இந்தக் கூறு வளர்ச்சியடைந்து ஒரு முழுமையை அடைய முடியும். அதாவது ஒரு சிறிய பொறியாக எல்லோரிலும் இருக்கும் இந்தக் கூறு படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒரு முழுமையை அடையும் போது இதை நாம் சைத்திய புருஷன் என்று கூறுகிறோம்.

2) சைத்திய பகுதி தெய்வீக கூறாக இருந்தாலும் அளவில் சிறியதாக இருப்பதால் இது தெய்வ சக்திகளைக் கொண்டிருப்பதில்லை; இந்தப் பகுதி வளர்வதன் மூலம் தான் மனிதன் தெய்வமாகிறார். 

3)இந்தக் கூறு இருப்பதால் தான் மனிதன் தெய்வத் தன்மையுடையவனாக ஆவலுடையவனாகிறான். சத்தியத்தையும், ஒளியான தன்மையையும் கொண்டு தெய்வ உணர்வு நோக்கி எமக்குள் உந்தித் தள்ளும் பகுதி சைத்தியக் கூறு எனப்படுகிறது. 

4) சைத்திய புருஷன் என்பதை வரையறுக்க முடியுமா என்று ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதற்கு கீழ்வருமாறு பதிலுரைத்தார்; அப்படி வரையறுக்க முடியாது என்று பதிலளித்தேன். விலங்குகளிலோ அல்லது பெரும்பாலான மனிதர்களிலோ உள்ள சைத்திய புருஷர் அதிமனதுடன் நேரடி தொடர்பில் இல்லை-எனவே அதை வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனால் இது அதிமனதுடன் தொடர்பு படுத்தப்பட்டால் எமது சாதாரண மனம், பௌதீக உடல், பிராணன் ஆகியவற்றை விட வலிமையான ஒன்றாக செயற்படும். மனம், பிராணன், உடல் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து துணையாகிச் செயற்படும். ஆனால் சைத்திய புருஷன் இப்படிக் கலப்பின்றி தூய்மையான நிலையில் இன்றி செயற்படக்கூடியது. தெய்வஉருமாற்றம் என்பது சைத்திய புருஷனின் விழிப்பின்றி சாத்தியமில்லை. 

5) சித்தமும் சைத்திய பகுதி என்பதும் ஒன்றல்ல; சித்தம் என்பது புற உணர்விலிருந்து, செயலிலிருந்து உருவாகும் ஞாபகங்களின் தொகுப்பு; சித்தத்தை அறிய நாம் மேற்பரப்பு, வெளிப்புற இயல்புகளைத் தாண்டி ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. சித்தம் என்பது வெளிப்புற உணர்வின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்,


ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்.

ஸ்ரீ அரவிந்தர் யோக இலக்கியங்கள் சிருஷ்டியின் வகுப்பாக நடைபெறுகிறது. இந்த வகுப்பில் உரையாடப்பட்ட ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் சைத்திய புருஷன் என்ற சொல்லின் விளக்கக் குறிப்புகள். 

_______________________________________

A. சைத்திய புருஷன் / psychic being

1) சைத்திய புருஷன் என்பது எமது ஆன்மாவில் இருக்கும் இறையின் ஒரு தீப்பொறி போன்ற ஒரு கூறு. இந்தக்கூறு வளர்ச்சியடைந்து ஒரு முழுமையை அடைய முடியும். அதாவது ஒரு சிறிய பொறியாக எல்லோரிலும் இருக்கும் இந்தக்கூறு படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒரு முழுமையை அடையும் போது இதை நாம் சைத்திய புருஷன் என்று கூறுகிறோம்.

2) சைத்திய பகுதி தெய்வீக கூறாக இருந்தாலும் அளவி சிறியதாக இருப்பதால் இது தெய்வ சக்திகளைக் கொண்டிருப்பதில்லை; இந்தப்பகுதி வளர்வதன் மூலம்தான் மனிதன் தெய்வமாகிறார். 

3) இந்தக் கூறு இருப்பதால் தான் மனிதன் தெய்வத்தன்மையுடையவனாக ஆவலுடையவனாகிறான். சத்தியத்தையும், ஒளியான தன்மையையும் கொண்டு தெய்வ உணர்வு நோக்கி எமக்குள் உந்தித் தள்ளும் பகுதி சைத்தியக் கூறு எனப்படுகிறது.  

4) சைத்திய புருஷன் என்பதை வரையறுக்க முடியுமா என்று ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதற்கு கீழ்வருமாறு பதிலுரைத்தார்; அப்படி வரையறுக்க முடியாது என்று பதிலளித்தேன். விலங்குகளிலோ அல்லது பெரும்பாலான மனிதர்களிலோ உள்ள சைத்திய புருஷர் அதிமனதுடன் நேரடி தொடர்பில் இல்லை-எனவே அதை வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனால் இது அதிமனதுடன் தொடர்பு படுத்தப்பட்டால் எமது சாதாரண மனம், பௌதீக உடல், பிராணன் ஆகியவற்றை விட வலிமையான ஒன்றாக செயற்படும். மனம், பிராணன், உடல் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து துணையாகிச் செயற்படும். ஆனால் சைத்திய புருஷன் இப்படிக் கலப்பின்றி தூய்மையான நிலையில் இன்றி செயற்படக்கூடியது. தெய்வஉருமாற்றம் என்பது சைத்திய புருஷனின் விழிப்பின்றி சாத்தியமில்லை. 

5) சித்தமும் சைத்திய பகுதி என்பதும் ஒன்றல்ல; சித்தம் என்பது புற உணர்விலிருந்து, செயலிலிருந்து உருவாகும் ஞாபகங்களின் தொகுப்பு; சித்தத்தை அறிய நாம் மேற்பரப்பு, வெளிப்புற இயல்புகளைத் தாண்டி ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. சித்தம் என்பது வெளிப்புற உணர்வின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்,


Wednesday, January 25, 2023

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று மாத்தளை பிரம்மகுமாரிகள் இராஜயோக கிளையினால் கோபம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு Muthusamy Sivagnanam ஐயா அவர்கள் அழைத்திருந்தார்கள். 

நிகழ்வு அவர்களுடைய சர்வதேச ஒருங்கிணைப்பாளரான திரு யோகேஷ் யாதவ் அவர்களால் நடாத்தப்பட்டது; அருமையான மென்மையான உரை; அதன் சுருக்கம் அடுத்த பதிவில் பதிகிறேன். 

இறுதில் அவர்களுடைய பிரசாதம் கொடுக்கும் போது, எமது உள்ளிருக்கும் தெய்வீக இயல்பினை உறுதிப்படுத்துவதற்காக நல்வார்த்தைகள் அடங்கிய அட்டை ஒன்று கொடுப்பார்கள்; 

எனக்குரிய அட்டையில் இருந்த வாசகம் வருமாறு:

"நீங்கள் எப்போதும் பிறரை ஈடேற்ற விரும்புகின்ற பெருந்தன்மையுள்ள ஆத்மா"

"You are a generous soul always liking to uplift others"

இங்கிருக்கும் நட்புகளில் எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? இது உண்மையா?


மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்

எமது புதுவருட சங்கல்பத்தில் நாம் வாழும் மாத்தளைச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது என்று சங்கல்பித்து 25 நாட்களுக்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுக்கும் இந்த வருடம் க. போ. த சாதாரண தரப் பிரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணிதச் செயலட்டைகளை வழங்கும் பணியில் ஒருபகுதியை எனது சிருஷ்டி நிறுவகம் மூலம் நிதி வழங்கி இந்தப் பணி நிறைவேறப் பங்காளராகியுள்ளது. இன்னும் பலர் இந்தப் பணிக்கு உதவியுள்ளார்கள். 

சிருஷ்டி புராதன ஞானத்தினை நவீன மனங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று உலகெங்கும் உள்ள சில நூறு மாணவர்களுடன் சிறப்பாக இயங்குகிறது. 

மாத்தளையின் கல்வி வளர்ச்சிப் பணியில் பாரிய பங்களிப்பினை களத்தில் செய்து வரும் சுபீட்சம் அறக்கட்டளை Velayutham Sutharshan அண்ணா அவர்கள் இந்தப் பணியை தனிப்பட தொடர்பு கொண்டு பாராட்டினார். அவருக்கு எமது நன்றிகள்! எதிர்காலத்தில் சுபீட்சத்தின் பணிகளை நடைமுறைப்படுத்த என்னால் இயன்ற ஆலோசனைகளையும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கள உதவிகளையும் செய்விக்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. 

அனைத்துப் பாடசாலை அதிபர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செயலட்டைகள் தமது மாணவர்களுக்கு உதவும் என்ற மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செயலாளர் Dr. Nishānthan Ganeshan, இயக்குனர் சபை உறுப்பினர் Sathasivam Luxsmi Kanth ஆகியோர் களத்தில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்துகிறாரகள். இந்தத் திட்டத்தின் அச்சாணி STEM-Kalvi நிறுவனர் Dr. Kumaravelu Ganesan அண்ணா அவர்கள்! அவருக்கும் எமது நன்றிகள்! 

பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale தனது அறிவிப்பில் நன்றி தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.


Tuesday, January 24, 2023

விஞ்ஞானம்

விஞ்ஞான ரீதியில் நிருபிக்க பட்டதா?

____________________________________________________

தமிழில் எடுத்ததற்கெல்லாம் அறிவியல் ரீதியாகப் பேசுகிறோம் என்று கேள்வியை மட்டும் கேட்பதைச் செய்துகொண்டு தம்மை அறிவியலாளராக காட்டும் நபர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அறிவியல் முறை (scientific method) என்பது "பௌதீக" அறிவினைப் பெறுவதற்கு எமக்கு இருக்கும் ஒரு நம்பகமான முறை. 

எது அறிவியல் என்பதைப் பற்றி அறிவியலின் மெய்யியல் (scientific philosophy) இனது மிக முக்கியமான மெய்யியலாளர் கார்ல் பொப்பர் demarcation problem எனக் குறிப்பிடுகிறார்; 

ஒரு பிரச்சனையை எடுத்தால் அதில் பரிசோதனைகள் மூலம் நேரடி அனுபவமாக அறியக்கூடிய அறிவியல் (empirical sciences), தர்க்கம் (Logic), கணிதம் (mathamatics), அதிபௌதீகம் (meta physical) ஆகிய நான்கு விதத்தில் அதைப் புரிந்துகொள்ளலாம். 

கார்ல் பாப்பர் அறிவியல் எல்லை நிர்ணய சிக்கலை (problem of demarcation) இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஒருபுறம் அனுபவ அறிவியலையும், கணிதம் மற்றும் தர்க்கவியல் மற்றும் 'மெட்டாபிசிக்கல்' அமைப்புகளையும் வேறுபடுத்தி அறிய உதவும் அளவுகோலைக் கண்டுபிடிப்பதில் உள்ள  சிக்கலை, எல்லை நிர்ணயத்தின் சிக்கலை நான் அழைக்கிறேன்" உண்மையிம் எம்மிடம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் empirical sciences மூலம் அளக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம். இதனால் தான் மனிதனுக்கு தர்க்கமும், கணிதமும், mete physical believes உம் தேவைப்படுகிறது. 

உலகத்தில் உள்ள அனைத்தையும் empirical sciences இற்குள் கொண்டுவரமுடியாது. இது ஸ்திரமான பௌதீக உலகத்தின் விதிகளை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டது. இந்த empirical sciences இனது பல கண்டுபிடிப்புகள் தர்க்கத்திலிருந்தும், கணிதச் சமன்பாடுகளிலுந்தும் அனுமானிக்கப்பட்டு பிறகு தகுந்த பரிசோதனைகள் மூலம் அறிவியலுக்குள் உள்வாங்கப்பட்டது. 

அண்மையில் நண்பர் ஒருவர் ஜோதிடம் பரிகாரம் இவை அறிவியல் பூர்வமானதா என்ற ஒரு கேள்வியைக் கேட்டார்?

ஜோதிடம் meta physical இல் தொடங்கி சரியான தர்க்கத்தையும், கணிதவியலையும் (Logic and Mathematics) வைத்திருக்கீறது. ஆனால் empirical sciences இற்குள் முழுமையாகக் கொண்டுவருவதற்கு அதை நாம் ஆய்வு செய்யவில்லை என்பதே நியாயமான பதில். கே. பி முறைபோன்றவை கணிதத்தைச் செம்மைப் படுத்துவதன் மூலம் ஜோதிடத்தை விஞ்ஞானப் பூர்வமாக்க முயற்சித்திருக்க்கின்றன. இவற்றைப் உண்மையாகப் புரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆழமாகப் படியுங்கள். 

empirical sciences இனது நோக்கம் உண்மையைத் தேடுவதல்ல; ஒரு விடயத்தில் அதன் நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால் அது குறித்த விளைவினைத் தொடர்ச்சியாகத் தருகிறதா? அல்லது எந்த நிபந்தனையில் குறித்த விளைவினைத் தருகிறது என்பதை அறிவதை நோக்கமாகக் கொண்டது.

பரிகாரங்கள், தலங்களுக்கு போவதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பது ஒருவித முட்டாள்தனம். அது எமது உணர்ச்சி, மனம் இவற்றின் திருப்திக்காக மனிதர்கள் செய்துகொள்வது. இப்படிச் செய்யும் போது மனதிற்குள் உருவாகும் புத்துணர்ச்சி எம்மை கவலையை மறந்து ஆற்றலுள்ளவர்களாக்கும். இந்த விடயங்கள் meta-physical aspect சார்ந்தவை. 

எமக்கு வாசிப்பு இல்லாத, சிந்தனையில்லாத, உழைக்க விரும்பாத துறையில் இருக்கும் விடயங்களை தனது துறை சார்ந்த அறிவுடன் ஒருவன் நோண்டப் போவது அறமன்று! 

அண்மையில் ஒரு வைத்தியர் தான் Physics உம் Chemistry ம் A எடுத்துத்தான் medicine சென்றதால் தனக்கு இரசாயனவியலில் எல்லாம் தனக்குத் தெரியும் என்றார்; நான் திருப்பிக் கேட்டேன் அப்படியென்றால் Biology A எடுத்து B.Sc படித்தவர் நோய்ற்கு மருந்து கொடுக்கலாமா என்று? 

இவை வீண் மமதைத்துவம்! எமக்கு சற்றுப்புகழ், சொல்லுவதை ஆமோதிக்க ஒரு கூட்டம், அதற்கு சில லைக் வந்தவுடன் நாம் அறிவியல் சிந்தனையை மறந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து அறிவியலுக்குள் கொட்டலாம் என்பதும் அவற்றை நம்புவர்களை ஏளனப்படுத்துவதும் செய்யத்தொடங்குகிறோம். 

அறிவைத் தேடுபவன் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் அணுகக் கூடிய எளிமையானவனாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். அறிவியல் பௌதிக உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஒரு நம்பகமான முறை என்பதும் பௌதீக உலகைத் தாண்டிய விடயங்களுக்கு நாம் தர்க்கம், கணிதம், meta physical நம்பிக்கைகளையும் பாவிக்க வேண்டும் என்று எமக்குத் தெரியவேண்டும்.


Monday, January 23, 2023

அம்ருதவர்ஷினி பிறந்த நாள்

இன்று அம்ருதவர்ஷினிக்கு பிறந்த நாள்! 

அப்பாவின் பரிசு புத்தகம் ஒன்று! 

உண்மையான கல்வி என்பது அறிவில் சிறப்பதை விட பண்பில் சிறப்பது! சின்னஞ் சிறு நற்பழக்கவழக்கங்களை நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் வாழ்வில் பெரிய மாற்றங்களை அடையலாம் என்பதைக் கூறும் நூல்!


Sunday, January 22, 2023

வாசிப்பின் முக்கியதுவம்

அண்மையில் Nadesapillai Sivendran சமுகவலைத்தளத்தில் ஒரு மனிதன் இறப்பதற்குள் வாசித்து முடிக்க வேண்டிய 100 நூல்கள் என்று அவருடைய நண்பர் பகிர்ந்த ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்; அவற்றுள் நான் படித்த நூல்களை பதிந்த போது அவற்றை சரியாக குறிப்பிட்டு எனது அனுபவத்தைக் எழுதச் சொல்லியிருந்தார்; இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு பணியாக எனக்குப் பட்டது தமிழ் வாசிப்பு இன்று அருகிவிட்டது; ஆகவே இத்தகைய பதிவுகள் ஆர்வத்தைத் தூண்டும். நாம் வாசிப்புக் கலாச்சாரத்தை மெருகேற்றலாம். 

இது கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பது பொருத்தமற்றது. அது ஒவ்வொருவொருவருடைய வாழ்க்கையின் அறிவுத் தேடல் சார்ந்த இலட்சியத்தைப் பொறுத்தது; என்னைப் பொறுத்தவரையில் இறப்பதற்குள் தமிழ்ச் சித்தர் பாடல்கள் எல்லாவற்றையும் படித்து அதில் கூறப்பட்ட வாத, வைத்திய, யோக ஞானத்தைப் புரிந்து உணர்ந்து மற்றவர்களுக்கு புரியும் படி சொல்லிவிட்டு போக வேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறேன்; இதற்கே தற்போது 300 க்கும் மேற்பட்ட சித்தர் நூல்கள் (?10000) பாடல்களாக சேகரித்து வைத்திருக்கிறேன். இந்தப்பணி எப்போது முடிவுறும் என்று தெரியாது! 

இதை விட நான்கு வேதங்கள், பதினெட்டுப் புராணங்கள், தேவி உபாசனையுடன் தொடர்புடைய தந்திரங்கள், ஆகமங்கள், ஆயுர்வேதத்தில் சரகர், சுசுருத சம்ஹிதை, தமிழில் பதினெண் கீழ்கணக்கு, சித்தாந்த சாத்திரங்கள், தொல்காப்பியம், நன்னூல், மணிமேகலை, இசை இலக்கண நூல்கள், யோக சாத்திர நூல்கள் என ஏகப்பட்ட கற்கை இலட்சியம் இருக்கிறது. 

ஆகவே இந்த 100 நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நான் ஏற்கவில்லை. இதற்கு மேல் எவ்வளவோ நல்ல நூல்கள் இருக்கிறது. எனவே வாசகர்கள் எவரும் இந்த நூறு நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று சிந்தனையில்லாமல் நேரத்தை வீணாக்கக் கூடாது. 

உங்கள் வாழ்க்கை இலட்ச்சியத்திற்கு தேவையான 100 நூல்களை எடுத்து ஒவ்வொன்றாக ஆழ்ந்து, அகன்று, நுணுக்கி படித்து முடியுங்கள். 

சைவத்தைப் பற்றி உரையாடி முக நூலில் சண்டை பிடிக்க முதல் சித்தாந்த சாத்திரத்தைப் படித்து முடியுங்கள்.

எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல முதல் அதைப்பற்றிய முக்கிய நூல்களைப் படித்து சிந்தித்து உங்கள் புரிதலைப் பகிருங்கள். 

இந்தப் பரிந்துரையில் நான் ஒரு வேக வாசிப்பாளன் என்ற அடிப்படையில் ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புகளூடாக இந்த 100 புத்தகங்களில் 34 புத்தகங்கள் படித்துள்ளேன்; நூறு நூல்களும் மின்பிரதியாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகளாகவும் இருக்கிறன; தமிழ் மொழிபெயர்ப்புகளில் மஞ்சுள் பப்ளிகேஷன் மூலம் வெளிவரும் நாகலக்ஷ்மி சண்முகம், அவர் கணவர் குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மூலத்தின் உயிரோட்டத்தைத் தருபவை. 

இவற்றில் பலவற்றின் மொழிபெயர்ப்பை நான் எனது பல்கலைக்கழக மாணவர்களுக்கான career guidance விரிவுரைகளில் பரிந்துரையாகவும் தந்திருக்கிறேன். என்னுடன் தொழில் பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாவிட்டால் இந்த நூல்களில் சிலதை வாசிக்கச் சொல்லி அதன் மூலம் உரையாட மனதைத் திறந்திருக்கிறேன். 

தரப்பட்ட 100 நூல்களில் நான் வாசித்த 34 நூல்கள் வருமாறு: 

01, 02, 04, 06, 08, 10, 14, 19, 20, 21, 22, 23, 24, 27, 29, 39, 43, 49, 50, 51, 52, 56, 60, 61, 63, 69, 70, 72, 77, 78, 80, 82, 94, 100 

Total 34/100 

இந்தப் பதிவின் கீழ் இந்த நூல்களில் சிலதைப் படித்தவர்கள் உரையாடலை ஆரம்பியுங்கள்; நான் படித்த நூல்களில் உள்ள எனது ஞாபகத்திலிருக்கும் சுவாரசியமானவற்றை காலத்திற்கு காலம் ஒவ்வொன்றாக எனது அனுபவத்துடன் பகிர்கிறேன்.


Thursday, January 19, 2023

காயத்ரி உபாசனையும் நவக்கிரக பலமும்

ஜோதிடம் ஒரு அரிய நுண்கலை; இது வானத்திலிருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் தமது அசைவுகளின் மூலமும் கதிர்ப்பின் மூலமும் பூமியின் பிராண ஓட்டத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைக் கணிக்கும் ஒரு கணிதம்; 

இந்தக் கணிதத்தை வைத்துக்கொண்டு அனுபவப்பூர்வமாக பெற்ற அனுபவங்களைத் தொகுத்து இப்படியான வானியல் மாற்றம் நிகழும் போது முன்னர் ஏற்பட்ட அனுபவங்களின் படி இப்படி நிகழலாம் என்பது சம்ஹிதை. 

இப்படி கணிதத்தின் மூலம் கணித்து, நிகழவாய்ப்பிருக்கிறது என்று கூறினால் அதுவே ஜோதிடம் எனும் கலையின் உண்மையான பயன்பாடு. 

கணிப்பு என்பது ஜாதகம் எழுதும் போது இருக்கும் இரண்டு கட்டங்களை வைத்துக்கொண்டு இப்படி இருக்கிறது, அவனை இவன் பார்க்கிறான், இவனை அவன் பார்க்கிறான் என்று வாயால் ஜாலம் கட்டுவதல்ல! 

கணிப்புகளின் ஆதாரம் வராஹமிரரின் ப்ருஹத் ஜாதகமும், அதற்குரிய விளக்க உரையான ஸ்ரீபதிபத்ததி என்ற இரண்டு நூல்களும்; இந்த இரண்டு நூல்களிலும் தரப்பட்ட கணிதப்படி ஒரு பலனைக் கணிக்க வேண்டும் என்றால் ஒரு கிரகத்திற்கு 24 வகை பலம் (strength) கணிக்கப்பட வேண்டும். 

1) கிரக திருஷ்டி பலம்

2) உச்ச பலம்

3) கேத்திராபலம்

4) திரகோணபலம்

5) யுக்மாயுக்ம பலம்

6) இராசி வர்க்க பலம்

7) நவாம்ச வர்க்க் பலம்

8) திரக்கோண வர்க்க பலம்

9) துவாதசாம்ச வர்க்க பலம்

10) சம்த்தமம்ச் வர்க்க பலம்

11) ஓராவர்க்க பலம்

12) திரிம்சாம்ச வர்க்க பலம்

13) நத உன்ன பலம் 

14) தினராத்ரி திரிபாக பலம்

15) தினபலம்

16) மாச பலம்

17) வருஷ பலம்

18) ஓரா பலம்

19) பட்ச பலம் 

20) அயன பலம்

21) கிரக யுத்த பலம்

22) நைசர்க்கிக பலம்

23) திக்கு பலம்

24) ஜெஷ்டா பலம்

இவற்றையெல்லாம் தொகுத்து ஆறு குழுவாக்கி ஷட்பலமாக தொகுத்தால் ஒருவன் ஜாதகத்தில் சப்த கிரகங்களின் உண்மையான பலம் விளங்கும். 

Economic crisis வரப்போகிறது எல்லோருக்கும் ஆபத்து என்று சொல்கிறோம்; உண்மையில் நல்ல பணக்காரர் எவருக்கும் எந்தப்பாதிப்பும் வருவதில்லை; சிறிது தேக்கம் வரும். ஆனால் சேமிப்பும் பலமும் இல்லாதவனுக்கு பாதிப்பு அதிகமாகும். 

இதைப்போன்ற ஒரு கணிப்புத்தான் சட்பலம்; நாம் பிறக்கும் போது எமக்கு இந்தக்கிரங்களினால் எமது கர்ம பலனை நடாத்தும் நுண்மையான பலம் கிடைக்கிறது; இந்த கிரகங்களுக்கு மேற்குறித்த 24 நிலைகளால் பலம் கிடைக்கிறது. இதுவே நாம் வாங்கிவந்த சேமிப்பு. இப்போது கிரகம் தன்னுடைய வழமையான இயக்கத்தை கோட்சாரமாக நிகழ்த்தும் போது வலிமையை இழக்கும் போது - economic crisis இன் காரணமாக கம்பனி வியாபாரத்தை இழக்கும் போது - எமது ஜனன ஜாதாகத்தில் கிரகங்களின் ஷட்பலம் ஓரளவிற்கு மேல் இருந்தால் - எம்மிடம் crisis காலத்தினைக் கடப்பதற்கு தேவையான சேமிப்பு பலம் இருந்தால், அந்தக் காலத்தை நாம் மனதினைச் செம்மைப் படுத்துவதன் மூலம் எமக்குரிய வாய்ப்பாக மாற்றலாம். 

ஓருவனுக்கு அவனது ஜாதகத்தில் சப்த கிரங்களும் குறித்தளவுக்கு மேல் சட்பலத்தில் 150 - 200 புள்ளிகளைப் பெற்றால் அவன் வீணாக பயத்தை விட்டுவிட்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தான் எடுத்த காரியத்தை செம்மையாச் செய்ய முயற்சிக்க வேண்டும். 

ஸ்ரீ காயத்ரி உபாசனையில் சூரியன் ஆத்ம சக்தியாய், தேவி ஸ்வரூபமாக இருக்க அஷ்டமாவரணத்தில் அஷ்ட கிரகங்களும் இருக்கின்றன. காயத்ரியின் 24 அட்சரங்களே நாத சக்தியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் பலத்தைக் கொடுக்கிறது. ஆகவே எவர் ஒருவர் குருமுகமாய் காயத்ரி சாதனை செய்கிறார்களோ அவர்கள் கிரகபலம் - பிராண பலம் அதிகரிக்கும். பொதுவில் கோட்சாரப்படி கிரகம் வலுவிழந்திருந்தாலும் உபாசனை பலத்தால் வலிமை பெறுவார்கள். 

அன்னையை உபாசியுங்கள்! ஆற்றலைப் பெறுங்கள்


Wednesday, January 18, 2023

யோகாசனமும் உடற்கூறியலும்

ஆசனம் செய்கிறோம் என்று உடலை விதம் விதமாக வளைத்து வித்தை காட்டுவதை ஹடயோகம் என் கிறோம். இன்றைய நிலையில் சிலவாரங்கள் ஹடயோக கற்கை கற்றுவிட்டு தாம் ஹடயோக ஆசிரியர்கள் என்று தம்மிடம் ஆசனம் பழகவருபவர்களை இயந்திரத்தனமாக ஆசனம் பழக்கி பின்னர் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலி என்று வரவைத்துவிட்டு மாணவன் இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் அதற்கு நீங்கள் ஒழுங்காக பயிற்சி செய்யவில்லை என்று மழுப்பி மாணவர்களை குழப்பும் ஹட யோக ஆசிரியர்களைக் காண்கிறேன். பலர் என்னிடம் இதற்குத் தீர்வு வேண்டி வருகிறார்கள். 

நாம் ஒரு அறிவினை முழுமையாகக் கற்க வேண்டும்; அதற்குப் பொறுமை வேண்டும்; ஆசனம் செய்யப்போகிறோம் என்றால் உடற்கூற்றியல் பற்றி அடிப்படை அறிவு இருக்க வேண்டும். இதைக் கற்பதற்கு பொறுமையான பயிற்சியும் அவதானமும், நீண்ட் அனுபவ கற்கையும் வேண்டும்; இப்போது படிக்கும் எல்லோருக்கும் instant noodles மாதிரி ஹதயோக ஆசிரியராகிவிடவேண்டும்; எவருக்கும் பயிற்சி செய்து சுய அனுபவ அறிவு பெற நாட்டமில்லை. 

மனிதன் இருப்பதற்கும் நடப்பதற்கும் அடிப்படையானது புவியின் ஈர்ப்பு புலத்தில் தன்னை எப்படி சம நிலையுடன் வைத்திருப்பது என்பது. 

ஹடயோகப் பயிற்சி என்பது எமது உடலை புவியீர்ப்பினூடன் சம நிலைப் படுத்துவதால் எமது உடலிற்குள் பிராண ஓட்டத்தைத் தூண்டும் முறையாகும். 

புவியீர்ப்புப் புலம் இல்லாத வானவெளியில் விண்வெளி ஓடத்திற்குள் ஓடத்துடன் தம்மைப் பிணைக்காமல் ஆசனங்கள் செய்ய முடியாது; 

ஆகவே ஹடயோக ஆசனங்கள் பயிற்சிக்க விரும்பும் ஒரு சாதகன் தான் புவியீர்ப்புடன் சம நிலைப்படுத்தி உடலில் குறித்த பகுதியில் பிராண ஓட்டத்தினை அதிகரித்து, குறைத்து, நிறுத்தி அந்தப்பகுதியை வலிமையுறவைக்க முயல்கிறேன் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். 

யோக ஆசனம் பயில்பவர்கள் தாம் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது விளங்கிக்கொள்ள வேண்டியது; ஒவ்வொரு அசைவும் புவியீர்ப்புப் புலத்தால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது என்பதும்; 

1) எப்படி எமது எலும்புத்தொகுதி உடலை அசைவிக்கிறது

2) இப்படி அசையும் போது எலும்பைச் சூழ உள்ள தசைத் தொகுதியை எப்படி நரம்புத்தொகுதி கட்டுப்படுத்துகிறது

3) இதன் மூலம் அந்த அசைவின் மூலம் கட்டுப்படுத்தப்படும் திசுக்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி விளங்கியிருக்க வேண்டும். 

இப்படி விளங்கியிருந்தால் மாத்திரமே ஆசனம் நாம் சரியாகச் செய்கிறோமா, பிழையாகச் செய்கிறோமா, ஆசனம் செய்யும் போது ஏன் உடலில் வலிவருகிற்து என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

ஆசனம் செய்வது என்பது மிருகத்தனமாக உடலை வருத்துவதல்ல; உடலிற்கு இன்பம் தரக்கூடிய ஒரு சுய உடல் அழுத்தல் (self massage) செயற்பாடு.


Tuesday, January 17, 2023

பத்மாசனமும் உடல் கூற்றியலும் சிவயோகமும்

"உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு

உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி

சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து

சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க

பரிதியுள்ள பத்மாசன மிதென்று

பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்

வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல

மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே."

["அகத்தியர் வாத சௌமியம் - 1200; பாடல் எண் 284 ; தாமரை நூலக பதிப்பு; சிறிது பாடபேதத்துடன் இருக்கிறது]

எப்படி பத்மம் - தாமரை சேற்றில் நிலைகொண்டு மலர்கிறதோ அப்படி உடலை பிருதிவி தத்துவத்தில் நிறுத்தி எமது ஆதார கமலங்களை மலரவைக்கக் கூடியது. 

மூலாதாரம் வலுப்பெறாமல் யோகம் சாத்தியமில்லை. 

கீழ்வரும் ஆறு தசைத்தொகுதிகள் இந்த ஆசனத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

Hip Flexors - இது இடுப்பு நெகிழ்வு தசை எனப்படுவது; இடுப்பை வளைப்பதில் செயல்படும் ஒரு தசை, முழங்காலை மார்புக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் பணி இதனுடையது. இது இடுப்பு மட்டத்திற்கு மேல் காலை கொண்டு வருவதற்கு, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கும்போது நீங்கள், உங்கள் இடுப்பு நெகிழ்வு தசைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

Adductors - தொடையின் இடைப் பகுதியில் உள்ள தசைகள் கூட்டாக ஹிப் அடாக்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் நான்கு தசைகள் உள்ளன; அட்க்டர் லாங்கஸ், ஆடக்டர் ப்ரீவிஸ், அட்க்டர் மேக்னஸ் மற்றும் கிராசிலிஸ் (adductor longus, adductor brevis, adductor magnus, and gracillis). தொடை/கீழ் முனையை உடலின் மைய அச்சுக்கு நெருக்கமாக நகர்த்துவதே ஹிப் அடாக்டர்களின் செயல்பாடு ஆகும்.

Abductors - இடுப்புக் கடத்தல் தசை என்பது உடலின் நடுப்பகுதியிலிருந்து கால்களை நகர்த்துவதாகும். இந்த நடவடிக்கை தினசரி பயன்படுத்தப்படுகிறது. நாம் பக்கவாட்டில் செல்லும்போது, படுக்கையில் இருந்து எழும்பும்போது, காரை விட்டு இறங்கும்போது. ஆதரவற்ற கால் "விண்வெளியில்" விழுவதை நிறுத்த நடைப்பயிற்சியிலும் இதைப் பயன்படுத்துகிறோம்.

Hamstrings - இது தொடை எலும்புகள் மூன்று தசைகளின் குழுவாகும், அவை முக்கியமாக முழங்காலை நெகிழச் செய்யும்.

Gluteus Maximus - குளுட்டியஸ் மாக்சிமஸ் என்பது உடலில் உள்ள மிகப்பெரிய மற்றும் கனமான தசை ஆகும். இடுப்பு மூட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள அனைத்து குளுட்டியல் தசைகளிலும் இது மிகவும் மேலோட்டமானது. இது மொத்த குறுக்குவெட்டு பகுதியில் 16% ஐக் குறிக்கும் இடுப்பில் உள்ள மிகப்பெரிய தசையாகும், தசையின் செயல்பாட்டின் வளர்ச்சியானது நிமிர்ந்து இருப்பதற்கு மற்றும் இடுப்புக்கு ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது, 

யோகத்தின் இந்த ஆசனத்தின் நோக்கம் உடல் நிமிர்ந்த நிலை அடைந்து தீர்க்கமான ஊர்த்துவ சுவாசம் பெறுதல்; இதை அகத்திய மகரிஷி இப்படிக் கூறுகிறார்

"ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு

அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால்

பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா

புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு

வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து

மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று

நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு

நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே."

[அகத்தியர் பரிபூரணம் 1200, பாடல் எண்: 1126; இராமசமிகோனார் பதிப்பு 1936]

{பத்மாசனம் நீண்ட பயிற்சிக்கு பிறகு அப்பியாசக்கப் படவேண்டிய ஒரு இருக்கை ஆசனம்; முறையான நீண்ட ஆசனப் பயிற்சியில்லாமல் இதை முயற்சிப்பது கால் மூட்டுக்களுக்கு ஆபத்தானது; இங்கு பகிரப்படுவது தகவல் நோக்கத்திற்கானது} 

படம் power cut வேளையில் மகள் கிளிக்கியது;


Monday, January 16, 2023

கணித விஞ்ஞானத் துறை

பாடசாலைகள் தமது கணித விஞ் ஞானத் துறை ஆசிரியர் வளப்பற்றாக்குறையை எப்படித் தீர்ப்பது?

We need paradigm shift - மாத்தியோசி

தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்தான்; அண்மையில் மாத்தளையில் கணித விஞ் ஞானத் துறையில் ஏற்படும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி ஆராய்ந்த போது கீழ்வரும் காரணங்கள் அறியப்பட்டன;

மாத்தளையில் கணித விஞ்ஞானத் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிகக்குறைவு; கல்வி அமைச்சு யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ இருக்கும் ஆசிரியருக்கு இங்கு நியமனம் கொடுத்தால் தொழிலைத் தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வேலைக்கு வந்தாலும் ஊரோடு இருந்து சேவை புரிய வேண்டும் என்பதற்கு அவர்களுடைய பொருளாதார, குடும்ப யதார்த்தம் ஒத்துழைப்பதில்லை; வெகுவிரைவில் இடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார்கள் இப்போது இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் மாத்தளையை வாழிடமாகக் கொண்டவர்கள். இப்போது உள்ள இளைஞர்கள் பலரும் ஆசிரியராக தொழில் ரீதியாக நியமனம் பெறுவதை விருப்ப படவில்லை; ஆனால் வேறு நல்ல வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு பகுதி நேரம் சேவையாக கற்பிக்க எண்ணம் உள்ள பொறியிலாளர்கள், மென்பொருள் வல்லுனர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர் என அனேகர் இருக்கிறார்கள். இவர்கள் எவரும் தமது நேரத்தை பயணத்திற்கு ஒதுக்கி பாடசாலைக்கு விஜயம் செய்ய மாட்டார்கள். 

ஆனால் பாடசாலை நிர்வாகம் தன்னை தொழில் நுட்ப அளவில் தயார்படுத்திக்கொண்டு மாணவர்களை நிகர் நிலைக்கூடாக கற்கும் வளத்தினை ஏற்படுத்திக்கொண்டால் எத்தனை நூறு பேர்கள் அவுஸ்ரேலியவிலிருந்து, கனடாவிலிருந்து, பிரித்தானியாவிலிருந்து, தகுதிவாய்ந்த அறிவியலாளர்களும் எமது பிள்ளைகளுக்கு சர்வதேச தரத்தில் கற்பிக்கத் தயாராக இருக்கிறார்கள். 

இப்படி அலகுகளை, கோட்பாடுகளை நிகர் நிலையினூடக துரிதமாக முடித்தால், ஆய்வுகூடசெயல் முறைகளை அட்டவணைப்படுத்தி சிறிது காலத்திற்குள் செய்வித்து முடிப்பிக்கலாம். 

ஆகவே நாம் கற்றலில் ஒரு paradigm shift இனை ஏற்படுத்த வேண்டியவர்களாகிறோம். 

பாடசாலைகளில் தொழில் நுட்ப வளங்களை நவீன கற்றல் வளங்களுக்கு ஏற்ப எப்படி சரி செய்வது என்பதை மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தொழில் நுட்ப பிரிவின் தலைவர், இயக்குனர் சபை உறுப்பினர் திரு. ரவிசங்கர், STEM Kalvi நிறுவனர் கலாநிதி Kumaravelu Ganesan STEM-Kalvi ஆகியோர் முன்னெடுத்து வருகிறார்கள். 

ஆகவே கனம் அதிபர்களே தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கு அதிக திட்டமிடல், நேரத்தினை செலவிடுங்கள். 


சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி 

சிருஷ்டியின் புராதன ஞானத்திற்கான ஆய்வு நூலகத்திற்கு (Ancient Wisdom Library) நூல்கள் கொள்வனவு! 

50% தள்ளுபடியில் சைவசமய கலைக் களஞ்சியம் - சேக்கிழார் பதிப்பகம்! 

சிவஞான மாபாடியம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலிருந்து

சித்தம் சிவமயம் அறக்கட்டளையினர் அரிய சிவவழிபாட்டு தத்துவ நூல்களை மீள்பதிப்புச் செய்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்று அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


தைப்பொங்கல்

பொங்குதல் என்றால் இருக்கும் ஒன்று தானிருக்கும் இடத்தில் நிறைவடைந்து பெருகி மற்றவருக்கு பயனுள்ளதாக செழித்து வழிகிறது என்று அர்த்தம். 

இருக்கும் ஒரு மூட்டை நெல்லை நிலத்திலிட்டால் நூறு மூட்டை நெல்லாக வந்தால் விவசாயம் பொங்குகிறது என்று அர்த்தம்!

எம்மிடம் இருக்கும் அறிவு பொங்கி மற்றவர்களுக்கு பயன் படவேண்டும்

எம்மிடம் இருக்கும் செல்வம் பொங்கி மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும். 

சூரியன் பொங்கி கதிர்ப்பதால் தான் பூமியின் உணவு உற்பத்தி நடக்கிறது. 

வானம் பொங்கி பொழிவதால் தான் நீர்வளம் பெருகுகிறது. 

கவியின் மனம் பொங்குவதால் தான் கவிதை பிறக்கிறது! 

சுக்கில சுரோணிதம் கருப்பையில் பொங்குவதால் மனிதன் பிறக்கிறான். 

இருப்பதை பொங்கிப் பகிர்ந்தால் பல்கிப் பெருகும்!

பொங்குதல் என்றால் எம்மிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், செயல், நற்பண்புகள், செல்வம், மகிழ்ச்சி எல்லாம் எம்முள் நிறைந்து மற்றர்களுக்கு பயன்படும் வகையில் பொங்கி பிரவாகிக்க வேண்டும்! 

பொங்கல் பல்கிப் பெருகும் உயிராற்றலின் குறியீடு!


Sunday, January 15, 2023

தைப்பொங்கல் வாழ்த்து

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Saturday, January 14, 2023

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale

ஏன் ஒரு சமூகம் முன்னேறுவதில்லை என்றால் அவர்கள் தமக்குள் ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதுவே அவர்கள் அடைய வேண்டிய வளர்ச்சி என்று நம்பிக் கொண்டு இருப்பதால். 

மாத்தளையில் கணித விஞ்ஞான தொழில் நுட்பத்தில் எமது பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழகம் எப்படி இருக்கும், அங்கு ஏன் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாக்கப்பட வேண்டும். 

அதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்துவது எப்படி என்று சிந்தித்து மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale அப்படியொரு உத்வேகத்தைத் தரும் ஒருவர் எமது பிள்ளைகளுக்கு வழிகாட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது. 

மலையகத்தில் கணித விஞ்ஞான தொழில் நுட்ப கல்வியின் முன்னோடி, மலையக சமூகத்திலிருந்து கற்று இன்று பொறியியல் துறையில் சிறந்ததொரு ஆளுமையாக இருக்கும் கலாநிதி நவரட்ணராஜா Nava Navaratnarajah அவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர். 

அவர் நேற்று பாக்கியம் தேசிய கல்லூரியில் கணித விஞ் ஞான தொழில் நுட்ப கல்வி மாத்தளை இந்து தேசிய கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, இரத்தோட்டை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் பயிலும் கணித விஞ்ஞான தொழில் நுட்ப மாணவர்களுக்கு உயர்தரப் பரிட்சையில் STEM மாணவர்களுக்கு இருக்க வேண்டிய உத்வேகத்தினைப் பற்றியும் ஒரு சில தொழில் நுட்ப பாட அலகுகளையும் கற்பித்தார். 

மிக அதிகம் கற்றவர்களில் பலர் தமது சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தில் குறியாக இருக்கும் போது வெகுசிலரே சமூகத்திற்கு தமது நேரத்தையும், ஆற்றலையும் முதலிடுபவர்கள். அத்தகைய ஒரு அரிய சமூக அக்கறை கொண்ட மனிதர் கலாநிதி நவா அவர்கள்! அவருக்கு எங்கள் பிள்ளைகளுக்கு உத்வேகம் தந்து வழிகாட்டியமைக்கு மாத்தளைக் கல்விச் சமூகம் சார்பில் நன்றிகள்! 

இந்த நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு தந்த பாக்கியம் தேசிய கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளாதேவி அம்மையாருக்கு, பொறுப்பாசிரியர்கள், மாத்தளை இந்து தேசியகல்லூரி அதிபர், பொறுப்பாசிரிகள், இரத்தோட்டை இந்துக்கல்லூரி அதிபர் பொறுப்பாசிரிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!


Friday, January 13, 2023

ஆற்றலுள்ள ஆளுமைகள் ஆற்றலுள்ள இடங்களை உருவாக்குவாதல்

அதிகாரம், ஆற்றல் தமைமைத்துவம் என்பது எவராலும் கொடுக்கப்படும் பதவிகள் அல்ல! இது ஒரு செயலின் போது ஒருவன் வினைத்திறனாக செயற்படும் தன்மையால் ஒருவன் பெற்றுக் கொள்வது!

எந்தவொரு பதவியினைப் பெறுவதால் மாத்திரம் அதிகாரம் கிடைப்பதில்லை.

ஆற்றலுடைய சமூகம் என்பது ஆற்றலுள்ள மனிதர்களை உருவாக்குவது! ஆற்றலுடைய மனிதர்களை உருவாக்கும் செயற்திட்டங்கள் தான் எமக்குத் தேவை!

ஆற்றலுள்ள ஆளுமைகள் ஆற்றலுள்ள இடங்களை உருவாக்குவார்கள்!

Thursday, January 12, 2023

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்

இன்று சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள் - வீரமிகு இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற சங்கல்பம் கொண்ட ஒரு சிந்தனையாளரின் பிறந்த நாள்! படிக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆற்றலும், சிந்தனை மாற்றமும் செய்ய வல்ல ஆற்றல் மிகுந்தவர்.

சிறுவயதில் ஒரு விவாதப்போட்டியில் பெற்ற பரிசாக சுவாமி விவேகானந்தரின் நூல்களில் இரண்டு விடயங்கள் என்னை யோக சாஸ்திரத்தில் எனக்கிருந்த பூர்வ சம்ஸ்காரங்களை விழிப்படைய வைத்தது ஆர்வமுள்ளவனாக்கியது!

முதலாவது கல்வி என்பது மனித மனதின் இயக்கத்தையும், செம்மையையும், ஆற்றலையும் பற்றியது என்பதும்,

இரண்டாவது செம்மையுற்ற மனம் அனேகருக்கு ஓரிடத்திலிருந்து கொண்டு செயலாற்றலாம் என்ற விடயம். உடம்பால் செய்கின்ற உதவி ஒன்று தான் உதவி என்று நினைக்கிறாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோக சக்தி பெற்ற உயர்ந்த மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியும் என்ற உண்மை.

மனதைப் பற்றிய கேள்விக்கு எனது முதல் குருநாதர் ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தனது குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரின் மானச யோக விளக்கம், சித்தி மனிதன் பயிற்சி, பரிணாமத் துரித பிராண யோகம் என்றெல்லாம் விளக்கி நுணுக்கி வழிகாட்டினார்.

குருதேவர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர சரஸ்வதி, விசாகப்பட்டனத்தில் வசித்து வந்தவர்; ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் எனக்கு அடிக்கடி வரமுடியாது, எப்படி வழிகாட்டலைப் பெறலாம் என்ற கேள்விக்கு பதிலைத் தந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது;

ஐரோப்பாவின் கலாச்சாரம் இந்தியரை வசப்படுத்தியதன் ஆழமான காரணம் அது புறவயமான பொருண்மைய உலகின் மீது வீரியம், செயல்திறன், படைப்பாற்றால் உடையதாக கவர்ச்சிகரமாக இருந்து; மறுபுறம் இந்திய தத்துவங்கள் ஜடத் தன்மையுடன், ஒவ்வொருவரையும் பலவீனமாக்கும், முடங்கிப் போன செயலற்ற தற்காப்பு உணர்வினை உருவாக்கி மனித ஆற்றலை புறவயமாகச் செயற்பட முடியாத மூட நம்பிக்கைகள் நிறைந்த சமூகம் ஆகிவிட்டிருந்தது.

முதல் முதலாக சுவாமி விவேகானந்தர் இந்தியத் தத்துவங்களில் இருந்து ஐரோப்பிய மனங்களுக்கும் பொருளுலக மனோபாவத்தைத் தாக்கி புது வெளிச்சம் சமைத்தார் என்கிறார்.

அகவயமாக மூழ்கிப்போன இந்திய தத்துவமும், முழுமையாக பொருள் முதன்மையாகிப் போன மேற்கத்தேய நிலையும் மனித குலத்தின் ஆற்றலை ஒருங்கிணைக்க முடியாத நிலையுண்டாகும் என்று அறிந்து இதைச் சமப்படுத்தும் நிலையை ஏற்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்!

#SwamiVivekananda #swamivivekanandaquotes #swamivivekanandainspires

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...