குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 27, 2022

தலைப்பு இல்லை

மிகக் சுருக்கமான அறிமுகங்கள் என்ற இந்த புத்தகத் தொகுதிகள் புதிய விஷயத்தைப் பற்றிய அடிப்படைகளைப் பற்றி அறிமுகத்தைத் தருகிறது. மொத்தம் இதுவரை 450க்கு மேற்பட்ட தலைப்புகள் வெளிவந்திருக்கிறது. இதில் சில நூறு எனது வாசிப்பில் இருக்கிறது. இந்த நூல்களைப் பற்றி அவ்வப்போது பதிவு போடலாம் என்பது அவா; தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எத்தனை தலைப்புகள் உண்டு எனத் தெரியவில்லை. 

முதலாவது அறிமுகம்:

சந்தேகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். 

ஒரு குறிப்பிட்ட அளவு சந்தேகம் பெரும்பாலும் ஒரு நல்ல விஷயம். உண்மையில், ஒரு 'ஆரோக்கியமான சந்தேகம்' கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அதாவது ஒருவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துக்கொண்டு இருக்காமல் அதற்குரிய மாற்றுக்காரணம் இன்னும் ஆழமாக இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சந்தேகப்படுதல் எனும் பண்பு பாதையை அமைக்கிறது. 

ஒரு விஷயத்தின் காரணத்தை சந்தேகத்திற்கு உட்படுத்தி அதைவிட மேலான ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கைக்குள் புகுந்து அறிவினைப் பெற சந்தேகம், அறிவினை வளர்க்கும் ஒரு ஆரம்ப உத்தியாக ஒருவனுக்கு உதவி செய்யலாம். 

ஒரு ஆரோக்கியமான சந்தேகம் நம்மை ஏமாற்ற விரும்புபவர்கள் எம்மை ஏமாற்றாமல் தடுக்க உதவுகிறது. 

சந்தேகத்தின் அடுத்த பக்கம் தர்க்க சிந்தனை இன்றி "எழுந்தமானமாக சந்தேகப்படுதல் அல்லது தீவிர சந்தேகம்" 

இதற்கு உதாரணம் அறிவியல் அடிப்படையில் சந்தேகப்படுகிறோம் என்பதில் ஒரு அடிப்படை இருக்கிறது. அறிவியலையே சந்தேகப்படுகிறோம் என்பது தீவிர சந்தேகம் எனப்படுகிறது. இந்த நிலைக்குப் போகும்போது அறிவியலை நாம் எமக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைவோம். 

உறவுகளில் இவர் எனக்கு நம்பிக்கையானவரா என்ற ஆரோக்கியமான சந்தேகத்தினை உள்வைத்து அவதானித்து இன்னும் உறவுகளை மேம்படுத்தி புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும்; ஆனால் உறவிற்குள் அதிதீவிர சந்தேகத்தைக் கொண்டுவந்தால் அந்த உறவே இல்லாமல் போகும். 

சந்தேகம் பற்றி சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ள, சந்தேகபுத்தியில் இருந்து எப்படி எமது அறிவினை, விவேகத்தினை வளர்க்கலாம், அறிவின் ஆதாரம் சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள நல்ல அறிமுக நூல்.


Tuesday, July 26, 2022

தலைப்பு இல்லை

இன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பிரயோக கணித புதுமுக பட்டதாரி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம்:

181 மாணவர்கள் துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பீடத்தின் பழைய மாணவர்களாக இருந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். 

1) முதலாம் ஆண்டில் நான் தொழில் வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறேன் என்ற இலக்கினை நிர்ணயுங்கள். 

2) ஆங்கிலம் நன்கு உரையாட, எழுத திறனை விருத்தி செய்துகொள்ளுங்கள். 

3) உங்கள் துறையில் வரும் புதிய தகவல்களை எப்போதும் படித்து உங்களை எப்போதும் update இல் வைத்திருங்கள். 

4) படிக்கும் காலத்தில் சவால்களுக்கு முகம் கொடுங்கள்; புத்தாக்க தீர்வினை சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

5) அரசாங்க வேலைக்கோ, வேலை கிடைப்பதற்கோ படிக்காதீர்கள்; வேலையை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக உங்கள் துறையில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பியுங்கள். 

6) படித்து முடித்தவுடன் பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் உங்கள் துறையில் இருக்கும் வாய்ப்பின் மூலம் உள்நுழைந்து உங்களுக்கான வாய்ப்பினை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். 

7) Do the best with available மனப்பாங்கினை வளருங்கள்;

 முரண்பாடுகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்; Assertiveness என்ற ஆக்ரோஷமாக இல்லாமல் அல்லது செயலற்ற முறையில் 'தவறானதை' ஏற்றுக்கொள்ளாமல், உங்கள் சொந்த அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்காக அமைதியான மற்றும் நேர்மறையான வழியில் நிற்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

9) உங்கள் துறையில் உள்ளவர்களுடன் networking வைத்திருங்கள். 

10) மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்கள் அறிவையும், திறனையும் விருத்தி செய்ய கடுமையாக உழையுங்கள்.


Saturday, July 23, 2022

தலைப்பு இல்லை

2018 களிற்கு முன்னர் கொழும்பில் மிக பரபரப்பாக, ஒரு நிறுவனத்தின் அதிகாரியாக இருந்து கொண்டு மாலை வேளைகளில் ஒரு குழுவுடன் சித்தர் நூற்களைப் படிப்பது ஒரு கடமையாக இருந்தது. 

அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை இன்று Facebook memory காட்டியது.

அகத்தியர் சௌமியசாகரம் என்ற நூலில் அடிப்படையில் தத்துவங்கள் 96 பற்றிய அறிமுகம், 96 தத்துவங்கள் எப்படி யோக சாதனையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறு கலந்துரையாடல்!


விவசாய ஆராய்ச்சிகளின் முட்டாள்தனமும் இலங்கை அரசியல்வாதிகளும்

நவீன விவசாயத்துறை ஒரு முட்டாள்தனத்தைச் செய்து வருகிறது; அது என்னவென்றால் எங்கோ வளர்ந்து வரும் நாடுகளின் ஏகபோக உரிமை இருக்கும் இரசாயன உரத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் விதைகளை மக்கள் மனதில் "நல்ல விதைகள்" என்று நம்பவைத்து, இயற்கையில் காணப்படும் இயல்பான சுதேச இனங்களை, அதிக உள்ளீடு இல்லாமல், அதிக விளைச்சலைத் தரும் இனங்களைக் கண்டுபிடிக்க தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. 

இப்படியொரு முறையான நீண்டகால ஆராய்ச்சியும், உழைப்பும் சிரத்தையும் இல்லாமல் இப்போது உரம் இல்லை, இரசாயனம் இல்லை என்றவுடன் விவசாயத்துறை விழுந்துவிட்டது, அதற்கு காரணம் இது, அது என்று கம்பு சுற்றி அதிகாரத்தில் உள்ளவரைக் கையைக் காட்டி விட்டு, தாங்கள் ஏதோ ஒன்றும் செய்யாதவர்கள் போல் தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். 

உண்மையான காரணம் இப்படியான ஒரு சூழலிற்கு பலனளிக்கக் கூடிய விதைகளைக் கண்டுபிடிக்க நாம் எமது ஆராய்ச்சியையும், உழைப்பையும் செய்யவில்லை என்பதாகும். 

இதேபோன்ற ஒரு முட்டாள்தனம்தான் இலங்கை மக்களின் அரசியலும்; அறுபது, எழுபது வருடமாக இனத்துவேஷத்தையும், அழிவையும், குழப்பத்தையும் விரும்புபவர்களையே தமது அரசியல் தலைவர்களாக தெரிவு செய்து பழக்கப்படுத்தி, - (எப்படி இரசாயன உரத்திற்கு துலங்கள் காட்டும் விதைகளை நல்ல விதைகள் என்று கூறி ஏமாற்றிக்கொண்டிருந்தோமோ) - அதையே நல்ல அரசியல் என்று எண்ணிக்கொண்டிருந்த முட்டாள்களுக்கு திடீரென உலக ஒழுங்கு பொருளாதாரம் என்ற ஆணியைப் பிடுங்கியவுடன் குழம்பிப்போன குரங்குகள் போல் தாம் தெரிவுசெய்த முட்டாள் அரசியல்வாதிகளின் மேல் கோபம் பொங்கிக்கொண்டு வருகிறது. 

ஒரு தேசம் வளர வேண்டும் என்றால் இனம், மதம், மொழி இவற்றினால் பிளவுபடாத மனித வளமும், அந்த ஒத்திசைந்த மனித வளத்தினை ஒருங்கிணைத்து உலக ஒழுங்குடன் பொருளாதாரம் வளரக்கூடிய அறிவு, ஆற்றல் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும். 

இலங்கை விவசாயத்துறையில் எப்படி இரசாயனத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைத் தரும் விதைகளை நல்ல விதைகள் என்று விளம்பரப்படுத்தி இன்று உற்பத்தி இல்லாமல் எப்படி தடுமாறுகிறதோ,

அதேபோல்

இனத்துவேஷம் கக்கி, போர் செய்பவர்கள்தான் வீரர்கள், தலைவர்கள் என்று உசுப்பேற்றி தெரிவு செய்த எந்த அரசியல்வாதிகளும் இன்றைய சவாலிற்கு முகம் கொடுக்க முடியாத தலைவர்கள் என்பதை உணராமல் ஜனாதிபதியை, பிரதமரை மாற்றிக்கொண்டிருந்தால் பிரச்சனை தீரும் என்று கனவு காண்கிறார்கள். 

முதலில் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் சகோதரத்துவம், ஒற்றுமை, இணைந்து செயலாற்றுதல், சவாலுக்கு முகம் கொடுத்தல் என்பன ஒவ்வொரு பிரஜைகளின் பண்பாகவும், அத்தகைய பண்பு உடையவர்களையே அரசியல் தலைவராகவும் கருதும் மனப்பண்பு மக்களிற்குள் உருவாக வேண்டும். 

அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்கவைப்பதை விட தமது மக்களுக்கு, அபிவிருத்திக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்று உளமாரச் சிந்திக்க வேண்டும். 

உதாரணமாக மலையக மக்களிற்கு வீடு, நிலம் இல்லை என்று ஒவ்வொரு முறையும் மலையக அரசியல்வாதிகள் பேரம் பேசுகிறோம் என்று ஏமாற்றாமல், அரசாங்கம் தருகிறதோ, இல்லையோ எமது சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நிலங்களை வாங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கலாம் என்ற இலகுவான தீர்விற்கு செல்லாத கபடத்தனம் இல்லாமல் போக வேண்டும். 

இப்படி பிரச்சனையின் ஆணிவேரிலிருந்து தீர்வினை யோசிக்க வேண்டும்!


Friday, July 22, 2022

தலைப்பு இல்லை

President Ranil Wickramasinghe, 08th Executive President of Sri Lanka set the rules of the political game as follows; (on 23 Jun 2014)

Politics is more than chess, its teamwork like cricket; needs stamina like a marathon; you must remember it's a hard game like Rugger, and also a blood sport like boxing

அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது, கிரிக்கெட் போன்ற குழுவின் ஒற்றுமை; மாரத்தான் போன்று ஓடி முடிக்கவேண்டும் என்ற உறுதி தேவை; ரக்கர் போன்ற (முட்டி மோதும்) கடினமான விளையாட்டை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்; மேலும் குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு. 

சதுரங்க ஆட்டத்தினால் pawns - நகர்த்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி தூக்கி வீசப்பட, சகிப்புடன் மரதன் ஓடிய மனநிலையில் ஒற்றை ஆசனத்துடன் பாராளுமன்றத்திற்குள் வந்து அமர்ந்து, எதிர்த்தவன் எல்லோரையும் குழுவாக ஒருங்கிணைத்து தனக்குச் சாதகமாக வாக்கினைப் பெற்று அனைவரது ஒத்துழைப்புடன் கிரிக்கட் ஆடி அதிகாரத்தைக் கைப்பற்றி ஜனாதிபதியாகி இப்போது முட்டி மோதி ரகர் விளையாடிக்கொண்டிருக்கிறார்! 

அடுத்து இரத்தக்களறியுடனான குத்துச் சண்டையும் இருக்கு. மூஞ்சியில் குத்துவேன் என்றும் சொல்லியிருக்கிறார். 

ஆகவே கவனம் மக்களே!


Tuesday, July 19, 2022

தலைப்பு இல்லை

மக்களே, ஞாபகம் வையுங்கள்! கடன்வாங்கியவனுக்கு எங்கே சுதந்திரம்?

கடன் கொடுத்த பெரிய முதலாளி தனது வேலையைச் செய்ய கையைக் காட்டும் ஒருவர் சின்ன முதலாளி ஆகப்போகிறார் நாளைக்கு! 

அவர் வேலை கடன் கொடுத்த பெரிய முதலாளி சொல்லுவதன்படி கைகட்டி, வாய்பொத்தி, பெரிய முதலாளி மனம் கோணாமல் வேலை செய்வது மாத்திரம்தான்! 

அவ்வளவுதான்!


தலைப்பு இல்லை

ஜனநாயகம் என்பது majority rule; பெரும்பாலான மக்களின் தெரிவு அதிகாரத்தை ஆள்வது! 

இதில் தலைமைகளைத் தூக்கி வீசுவதால் ஒரு பிரயோசனமும் நிகழப்போவதில்லை! 

பெரும்பான்மை முட்டாள்களாக இருந்தால் ஒரு முட்டாளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்!

திருடர்களாக இருந்தால் திருடர்களைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்! 

சுய நலவாதிகள் என்றால் சுய நலவாதிகளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்! 

இனவாதிகள் என்றால் இனவாதியை தலைவராகத் தெரிவு செய்வார்கள்!

ஆக, இளைஞர்கள் இப்படி பெரும்பான்மை மனதால் தெரிவுசெய்யப்படும் தலைமைகளைத் தூக்கி வீசுவதற்குப் புரட்சி செய்யாமல், இந்த தலைமைகளை உருவாக்கும் "பெரும்பான்மை மனதினைத் தூய்மை செய்வதற்கு புரட்சி செய்யவேண்டும். 

மதம், இனம், சுய நலம், அறியாமை, உழைப்பின்மை, சோம்பேறித்தனம், சரியான பொருளியல் அறிவுஇன்மை, முட்டாள்தனமான அதிகாரத்தின் மீதான பற்று இப்படியான முட்டாள்தனங்களில் இருந்து மக்கள் மனதினை மீட்பதற்கு புரட்சி செய்ய வேண்டும்! 

மண்ணில் இருந்து உற்பத்தியை அபரிதமாகப் பெருக்க புரட்சி வேண்டும்! 

உலகில் உள்ள தொழில்நுட்ப அறிவுகளை பிரயோகித்து உலக தரத்துடன் போட்டிபோடும் அறிவிற்கு புரட்சி செய்யவேண்டும்! 

எவரிடமும் கையேந்தாமல் தற்சார்ப்பு பொருளாதாரத்தை உருவாக்க புரட்சி வேண்டும்! 

இவை எல்லாம் எமது எண்ணத்தை மாற்றுவதால் உண்டாகும் புரட்சி!


தலைப்பு இல்லை

மனிதன் இன்பத்தை அடையப் போராடுகிறான்!

மனிதன் துன்பத்தை நீக்க போராடுகிறான்!

நினைப்பது நடக்கவில்லை என்றால் சலிப்படைகிறான்!

இன்பம் - துன்பம் - சலிப்பு இதுவே மனித வாழ்வின் அடிப்படை! 

எண்ணத்தை மாற்றி, சுய நலத்திலிருந்து விரிந்து இதயத்திலிருந்து செயலாற்ற எவரும் விரும்புவதில்லை!


Saturday, July 09, 2022

தலைப்பு இல்லை

 சிறுவயதில் கற்க ஆரம்பித்து, விடுபட்டு போன வித்தை, மீண்டும் அன்னையின் அருளால்….

பன்சூரி அறுதுளைப் புல்லாங்குழல் 

வேணு எண்துளைப் புல்லாங்குழல்

மூச்சு - கைவிரல்கள் - மனம் - மூளை இவற்றின் ஒத்திசைவிற்கு நல்ல பயிற்சி

நாத யோகத்திற்கான பாதை…


தலைப்பு இல்லை

மலைப்பாங்கான நிலத்தில் மரவள்ளிச் செய்கை

1) மரவள்ளி நீர் தேங்கினால் (24 மணித்தியாலம்) பயிர் அழுகிவிடும். ஆகவே மலைப்பாங்கான நிலத்தில் பயிரிடும்போது சமவுயரக்கோட்டிற்கு செங்குத்தாக அதனுடைய வரிகளை அமைப்பது அவசியம். பொதுவாக மலைநாட்டில் நெற்பயிர்ச் செய்கை சமவுயுரக்கோட்டுடன் நீரைத்தேக்கி பயிர் செய்யும் முறையாகும். பலர் இதைப்போல் நீர் தேங்கும் சமவுயரக்கோட்டின் அடிப்படையில் பாத்தி கட்டி மரவள்ளி பயிரிட்டால் பயிர் வீணாகிவிடும். சுருங்கச்சொன்னால் மலைப்பாங்கான நிலத்தில் மரவள்ளியை நட்டால் மழைபெய்தால் நீர் எங்கும் தேங்கி நிற்கக்கூடாது; அதற்கு எப்படி நடவேண்டும் என்று சிந்தித்தால் இது எப்படி என்பது புரியும். 

2) சமவுயரக்கோட்டிற்கு செங்குத்தாக பயிரிடும்போது மண்ணரிப்பு அதிகமாகி மண்வளம் குன்றும். ஆகவே நிலத்தின் நீர் தேங்காதவாறு அந்த சாய்வு முடியும் அடிப்பகுதியில் hedge row - படிக்கட்டு அமைப்பது அவசியமாகும். இதில் வெட்டிவேர், அவரை இனத்தாவரங்கள் வைத்தால் மண்வளம் பாதுகாக்கப்படும். 

3) அடுத்து இயலுமான அளவு மூடாக்கு போட்டு நிலத்தினை மறைத்தல். இதனால் நீர் புகுந்து ஓடும் அதேவேளை மண்ணரிப்பு தடைப்படும். மண்வளமும் கூடும். இதனால் களைகளும் அதிகம் வளராது. ஏற்கனவே வெட்டிய மரவள்ளியின் இலைகள், பாவிக்கமுடியாத துண்டங்களை மூடாக்காக போட்டு மண்ணைப் பாதுக்காக்க வேண்டும்.

 

Thursday, July 07, 2022

தலைப்பு இல்லை (b)

நான் வாழும் உலகம்! 

மலைபோல் உயர்ந்த எண்ணம்!

பச்சை மரகத குளிர்ந்த மனம்!

வான்போல் விரிந்த இதயம்! 

எஃகு போன்ற உடல்! 

அன்னையே உன்னிடம் நான் வேண்டும் வரம்!

பட உபயம்: மகள்


தலைப்பு இல்லை

மரவள்ளி உலக உணவு நிறுவனத்தினால் இடர்களின் போது, இரசாயன் உள்ளீடு இல்லாத போது மக்களின் உணவுத் தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரு உணவுப் பயிர்!

தற்போது இலங்கையும் இந்த நிலவரத்தில் இரசாயன உள்ளீடு இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது.

இங்கு நாம் இயற்கை விவசாயம் என்று உரையாடுவது ஒருவித பற்றும் மயக்கமும் கலந்த உணர்ச்சிக் கூப்பாடு, சூழலியல் அக்கறையோ, சமூகப் புரட்சியோ, அரசியலோ அல்ல! 

எரிபொருள், பொருளாதாரத் தேக்கம் என்பவற்றில் மக்கள் தமக்குரிய உணவை அதிக உள்ளீடு இல்லாமல் உற்பத்தி செய்வதற்குரிய எளிமையான முறையாக இது இருப்பதாகும்! இப்படியான ஒரு சூழலிற்கான நம்பகமான அறிவினை உருவாக்கத் தவறியிருக்கிறோம் என்பதை விவசாய அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தம்மை விவசாய அறிஞர்களாக கற்பனை செய்துகொள்பவர்கள் கேட்க வேண்டிய கேள்வி உரம் வாங்க முடியாத விலையில் இருக்கும் போது எனது பரிந்துரை ஒரு ஏழை விவசாயியால் செய்ய முடியுமா? அப்படி அவனால் செய்ய முடியவில்லை என்றால் அந்த ஏழை விவசாயிக்கு உதவக்கூடிய அறிவினை எனது ஆய்வினைச் செய்கிறேனா? என்பது!

இந்தக் கேள்வியை உளமாரக் கேட்கும் போது நாம் விடை தேட ஆரம்பித்தால் உண்மையில் விடை எமக்கு அருகிலேயே கிடைக்கும்! நாம் வீண் அகங்காரங்களால் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இரசாயன உள்ளீடு இல்லாமல் எப்படி விவசாயம் செய்வது என்ற தொழில்நுட்ப அறிவு எமது விவசாயத்திணைக்களத்திடம் இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் உத்தியோகப் பூர்வமாக பிரசுரித்த புத்தகங்கள் எல்லாம் இரசாயன உரம் இவ்வளவு போடவேண்டும் என்றுதான் தொடங்குகிறது! இதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மரவள்ளிக்கு நைதரசன் பசளை அதிகம் போடக்கூடாது என்று அறிவுரை சொல்லிக்கொண்டு யூரியாவை பரிந்துரைப்பது.

ஆனால் ஆபிரிக்க நாடுகளின் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள், விவசாயத் திணைக்களங்கள் மரவள்ளிச் செய்கையிலாவது விவசாயியை உரம் போடு உரம்போடு என்று செலவினைக் கூட்டி சுரண்டாமல் உள்ளத்தூய்மையுடன் மரவள்ளியில் உரம் போடாமல் நல்ல விளைச்சலைப் பெறலாம் என அதற்கு சில நிபந்தனைகளைப் பரிந்துரைக்கிறது.

எமது திணைக்களத்திடம் இப்படியான பரிந்துரை இல்லாததால் எமது அரசாங்கம் கடன்வாங்கி எப்படி ஓடுகிறதோ, அதைப்போல சம்பியா நாட்டிடம் கடன்வாங்கிய விவசாய அறிவினை இங்கு தமிழில் மொழிபெயர்த்து இணைத்துள்ளேன். இது அவசரமான ஒரு மொழிபெயர்ப்பு; ஆகவே version 01 என்று கொள்க. இதில் விளங்காமல் எதுவும் இருந்தால் அவற்றை கேள்வியாக கீழே பதிவிட்டால் அவற்றை செம்மைப்படுத்தி, மேலும் இந்த ஆவணத்தை மெருகேற்றலாம்.

அத்தியாயம் 04: வெளி உள்ளீடு இன்றி தரமான விளைச்சலை மரவள்ளிச் செய்கையில் பெறுவது எப்படி?

ஆங்கிலம் தெரிந்தவர்கள் மூல நூலை இங்கே பார்வையிடுங்கள்: சமூக நல்லுணர்வு கொண்ட விவசாய அறிஞர்கள் இவற்றை தமிழிற்கு மொழிபெயர்த்து எமது மக்களுக்கு கொண்டு சேருங்கள்.

விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இனியாவது உலகத்தின் மறுபுறத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியுடன் உரத்தை நம்பிய விவசாயத்திலிருந்து உள்ளீடு இல்லாமல் விவசாயம் செய்வது எப்படி என்று ஆராய்ந்து மக்களுக்கு பயிற்றுவித்துக்கொண்டிருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு நமது உள்ளூர் அறிவினை எப்படி உருவாக்குவது என்று புதிய ஆராய்ச்சிகளைத் தொடங்குங்கள்.


Monday, July 04, 2022

Hybrid Seeds - போதைக்கு பிறந்த பேதைகள்

 

நேற்று ஒரு விவசாயப்பட்டதாரியுடன் உரையாட நேரிட்டது. அரசாங்கம் சேதன விவசாயத்திற்கான விதைகளை பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால் சேதன விவசாய உள்ளீட்டினால் எவ்வளவு விளைச்சல் வரும் என்று கணிக்க முடியாது என்றார்; இந்தக்கூற்று முற்றிலும் தவறானது.

மேலே உள்ள பிரச்சனையைப் புரிந்துகொள்ள hybrid விதைகள் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். hybrid விதை என்பது ஒரு தாவரத்திற்கு இரசாயன உள்ளீட்டினைக் கொடுக்கும்போது ஒரு சில தாவரங்கள் உற்சாகமாக விளைச்சல் காட்டும். போதை மருந்து கொடுத்தால் கொடுக்கும் முதலாளிக்காக ஆக்கிரோஷமாக வேலைசெய்யும் நபர் போல. இப்படி நல்ல துலங்கலைக் காட்டும் தாவரங்களில் உள்ள மகரந்தங்களை மனிதர்கள் எடுத்து செயற்கையாக காய் உருவாக்கிப் பெறப்படும் விதைகள்தான் இந்த ஹைபிரைட் விதைகள். இவர்கள் போதையில் பிறந்த பேதைகள் என்பதால் இவர்களும் அவர்கள் பெற்றோர்களைப் போல் இரசாயன உரம் என்ற போதை இல்லாமல் வளர முடியாது.

இதைப் பற்றியெல்லாம் ஆராயாமல் வெறுமனே பத்திரிகை படித்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஆறுமாதத்தில் ஆறு இலட்சம் என்ற கவர் ஸ்டோறி படித்து உசுப்பேறி விவசாயம் செய்யப்போகிறேன் என்றும் சொல்கிறவர்களிற்கு, விவசாயிக்கு இந்த விதைகளைக் கொடுத்து அவற்றை பயிரிட்டு பயிர் வரவில்லை என்றால் சேதனவிவசாயம் சரிவராது என்று சொல்லி ஏமாற்றிவருகின்றனர்.

சேதன விவசாயத்திற்குரிய முறை மண்ணிற்கு சேதனப் பசளை, ஜீவாம்ருதம் போடும்போது இயற்கையாக மகரந்த சேர்க்க்கையில் அல்லது ஹைபிரைட் மூலமாகவோ நல்ல விளைச்சல்களைக் காட்டும் பண்பான பயிர்ப் பிள்ளைகளைத் தேர்வு செய்து அவர்களிடமிருந்து விதைகளைப் பெற வேண்டும். இதை நாம் செய்யவில்லை என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் வலுவற்ற கருத்துக்களுடன் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

இங்கு குறை கூறி விவாதிப்பதால் உணவுப் பிரச்சனை தீராது; எங்கு உண்மையான பிரச்சனை இருக்கிறது என்பதை அறிவியல் கண்கொண்டு பார்க்கும் கூர்மதி வேண்டும்.

இயற்கையை நாம் அன்னையாக வழிபடுவதற்குக் காரணம் எமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கி வைத்திருப்பதால்.

ஒரு தாவர இனத்திற்குள் இரசாயன உரத்திற்கு அதிக விளைச்சலைக்காட்டும் ஜீன்கள், வரட்சிக்கு தாக்குப்பிடிக்கும் ஜீன்கள், சேதன மண்ணிற்கு, உள்ளீட்டிற்கு அதிக விளைச்சலைக் காட்டும் இனங்கள் என்று எல்லாம் இருக்கும். நாம் இரசாயன உரத்திற்கு துலங்கல் காட்டுவதை மாத்திரம் அறிவியல் என்று நம்பிக்கொண்டிருக்கும் முட்டாள்களாக இருக்கிறோம்.

விவசாயத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து தொகுத்து இப்படியான சூழல் வரும் போது அதற்கு தீர்வு இதுதான் என்று சொல்லும் ஆற்றலுடையவர்களாக இருக்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய நிலவரத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிரச்சனைகளுக்கு புத்தாக்கமாக - innovative ஆக மாற்றுத்தீர்வினை கண்டுபிடிக்கத் தெரியாமல் அரைத்த மாவை அரைத்தால், அதுவும் விவசாயத்துறையில் நடந்தால் மக்களின் உணவிற்கு என்ன நடக்கும்?

Sunday, July 03, 2022

தலைப்பு இல்லை

 

சேதன, இயற்கை விவசாய முறைகள், மண்பாதுகாப்பு, மண்ணின் உயிர்த்தன்மை பேணல் போன்றவற்றில் உங்கள் கேள்விகளை இங்கே கேட்கலாம்,

நான் அறிந்துகொண்ட அறிவினையும், அனுபவத்தினையும் சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் பகிர்ந்துகொள்வது எனது சமூகக் கடமையாக நினைக்கிறேன்!

கேளுங்கள்! உரையாடுவோம்!

தலைப்பு இல்லை

 

உயிர்ப்பூ மற்றும் ஈகல்வி குழுவினர் மலையகத்தில் உணவுற்பத்தியினை ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இடர்கால எளிய உணவு மரவள்ளி

இதன் நாற்றுத்தடி பராமரிப்பு பற்றிய சிறிய குறிப்பு

மரவள்ளி நாற்றுதடி

*****************

பீடைகள், காலநிலைக் காரணிகள் வெட்டப்படும் மரவள்ளித்தடியினை நீர்ப்பதம் அற்றுப் போகச் செய்து முளைத்திறனை அற்றுப்போகச் செய்ய முடியும்.

இதை முறையாக சேமிப்பதன் மூலம் நல்ல தரமான நடவுத்தடியினைப் பெறலாம்.

நடவுத்தடி புதிதாக வெட்டப்பட்டதாகும், நன்கு மொத்தமானதாகவும், காயமற்றதாகவும், ஒரு தடியில் ஆகக்குறைந்தது 06 - 08 கணு உள்ளதாக, 20 - 30 cm இல் இருக்க வேண்டும்.

ஆபிரிக்காவில் மரவள்ளி நாற்றுத்தடிகளுக்கு என தனியான கொட்டகை இருக்கும்.

- ஓலையால் வேயப்பட்ட

- மணல் நிரப்பப்பட்ட - சேமிக்கும் போது வேர்பிடித்தால் கழற்ற இலகுவாக இருக்கும்.

- 50 தடிகளைக் கட்டி நிமிர்த்தி வைக்கக்கூடிய

கொட்டகைகள் இருக்கும்.

உடனடியாக பெறப்படும் மரவள்ளித்தடிகளை நடமுடியாவிட்டால் என்ன செய்வது?

*************************************

மரவள்ளிக்கிழங்கு நடவுத்தடி பராமரிப்பு பின்வரும் படிகளை உள்ளடக்கியது:

தேர்ந்தெடுக்கப்பட்ட மரவள்ளித் தண்டுகளை 1-மீ நீளத்தில் வெட்டி 50-தண்டு மூட்டைகளாகக் கட்டவும்.

• மரவள்ளித்தடி மூட்டைகளை வேப்ப மரப்பட்டை, இலைகளை எரித்த சாம்பல் கரைசலில் நனைத்து காற்றில் உலர வைக்கவும். ஊறவைத்துவிடக்கூடாது. ஒரு தடவை முக்கி எடுத்து வெளியே எடுக்க வேண்டும்.

• உலர் பகுதிகளில் பாதுகாப்பதற்காக துளையிடப்பட்ட பொலித்தீன் பைகளில் தண்டுகளை பேக்கேஜ் செய்யவும்.

• தண்டுகளின் முளைக்கும் பக்க முனைகளை தண்டின் நுண்துளை மண்ணைத் தொடுவதை உறுதிசெய்து மூட்டைகளை நிமிர்த்தி வைக்கவும். வாரத்திற்கு இருமுறை மண்ணை ஈரப்படுத்தவும். முளைக்க ஆரம்பிக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை குறைக்கவும்.

• நடப்போகிறோம் என்றால் தேவையான தடிகளை எடுத்து முளைகளை அகற்றவும். தண்டுகளை நனைப்பதற்கு வேப்ப சாம்பலை படிப்படியாக தண்ணீரில் கலக்கவும்.

• நடவு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் தண்டுகளை எடுத்து சிறுதுண்டுகளாக்கிப் பயன்படுத்தவும்.

கொண்டுவரும் போதும், வைத்திருக்கும் போதும் தண்டுகள் காயப்படக்கூடாது.

citation: FAO. 2018. Seeds toolkit - Module 6: Seed storage. Rome, 112 pp. Licence: CC BY-NC-SA 3.0 IGO

Saturday, July 02, 2022

இயற்கை விவசாயம்/சேதன விவசாயம் ஏன் சாத்தியமில்லாமல் போகிறது?


அறுவைச் சிகிச்சையின் தந்தை எனப்படும் சுசுருதர் (ஆயுர்வேதத்தின் மூல நூலான சுசுருத சம்ஹிதையை தொகுத்தவர்) ஒரு அறிவினை சிறந்தது என்று நிரூபிக்க தர்க்க புத்தியுடன் அதுசார்ந்த மற்றைய அறிவியலையும் கற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இன்று விவசாயத்துறையின் பிரச்சினைகளை ஆராய்பவர்கள் இந்தக்கூற்றை ஆழமாக உள்வாங்க வேண்டும்.

இரசாயன உள்ளீட்டு விவசாயத்தைப் புரிந்துகொள்ள சூழலியல் விஞ்ஞானம், அதுசார்ந்த பொருளியலின் இயக்கம், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல், இதற்காக வேலை செய்யும் அறிவியலாளர்களது நோக்கம் இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.

உதாரணமாக விதை விடயத்தில் அரச திணைக்களங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், விதைப்பண்ணைகளை உருவாக்கும்போது அங்கு இரசாயன உள்ளீட்டிற்கு அதிக விளைச்சலைத் தரும் தாவரத்தின் விதைகளை தேர்வு செய்து அதுதான் சிறந்த விதை என்று சான்றுப் பத்திரம் தருகிறது.

அதே திணைக்களம் சேதன உள்ளீட்டிற்கு வினைத்திறனான விளைச்சல் தரும் தாவரத்திலிருந்து விதைகளைப் பெற்று இது சேதன விவசாயத்திற்குரிய விதைகள் என்று ஏன் உறுதிப்படுத்தி தருவதில்லை? இந்த ஆராய்ச்சியினை ஏன் செய்ய விரும்புவதில்லை, அப்படிச் செய்தாலும் மக்களை ஊக்குவிப்பதில்லை.

இதை ஆராய்ந்தால் செயற்கை உரங்களிற்கு விளைச்சல் தரும் விதைக்காக பலகோடிகள் முதலிட்ட ஒருவர் பாதிக்கக் கூடாது என்ற நல்லெண்ணமும், விவசாயிக்கு இலாபம் தருமா, இல்லையா என்பதைப் பற்றிச் சிந்தனையில்லாத அசண்டையீனமும் இருக்கும்.

Friday, July 01, 2022

தலைப்பு இல்லை

தற்போது விவசாயத்திட்டம் ஒன்றினை வடிவமைப்பது, ஆலோசனை கூறுவது எப்படி என்ற கலந்துரையாடல் நடைபெறுகிறது!

அறிவியல் அசுரனாவது எப்படி?

விஞ்ஞானத்தின் சமூகப் பயன்பாடும் அதன் நன்மை தீமைகளையும் பற்றி சிந்திக்க விரும்புபவர்கள் "The Golem

what you should know about science" என்ற இந்த நூலை வாசிக்க வேண்டும்.

Golem என்பது யூத மந்திர தந்திரக்கலையில் மாந்திரீகர் களிமண்ணைக்கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி பிறகு தனது அக ஒளியினைப் பாய்ச்சி தனது காரியங்களைச் செய்துகொள்ளப் பாவிக்கும் ஒன்று! இது எமது தாந்திரீகப் பிரயோகங்களில் க்ருத்யா என்று சொல்லப்படுகிறது. நவீன அறிவியலின் mechine, robotic என்பவற்றின் ஆரம்ப வடிவம் இது.

இந்த நூலில் ஆசிரியர் அறிவியலை Golem என்று குறிப்பிடுகிறார். அறிவியல் சிலரால் அசுரனாகவும், தீமைபயப்பதாகவும் பார்க்கப்படும்போது அது மனித குலத்திற்கு வரப்பிரசாதம் உடையதாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டும் உண்மையானது.

இதை விளங்கிக்கொள்ள Golem என்ற உருவகத்தை விளங்கிக்கொள்வது அவசியம். Golem என்பது மனிதன் உருவாக்கியது; சிறிது காலத்திற்கு பிறகு மனிதன் தான் உருவாக்கினேன் என்பதை மறந்து விட்டு Golem இனது அடிமையாகிப் போகிறான். இதுதான் அறிவியலிற்கு நடக்கிறது. மனிதன் தான் உருவாக்கிய Golem இடம் சரணடைந்து விட்டு தான்தான் அதை உருவாக்கியவன் என்ற உணர்வை இழந்துவிடுகிறான்.

மந்திர சாஸ்திர விதிகளின்படி இத்தகைய Golem போன்ற ஆற்றல்களை உருவாக்கக் கூடியவர்கள் அதன் மீது பரிபூரண கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி ஆற்றல் இல்லாதவர்கள் இதைப் பயன்படுத்தினால் ஆபத்து.

இதைப்போலவே அறிவியல் விஷயங்களின் அடிப்படையும், அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் அறிவியலை கையிலெடுத்து வியாபாரமாக்கும் போது அறிவியல் கட்டுப்படுத்த முடியாத Golem ஆக மாறிவிடுகிறது.

இதற்கு நல்ல உதாரணம் 1800 களில் தாவர வளர்ச்சிக்கு இரசாயனப் பொருட்களின் பயன்பாடு பற்றி Liebig என்ற இரசாயன விஞ்ஞான வியாபாரி கண்டுபிடித்த law of minimum என்ற golem கட்டுப்படுத்த முடியாத இராட்சசனாக மாறி இன்று உரம் இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது என்று மக்களைப் புலம்ப வைத்திருக்கிறது. 10000 வருடமாக மனிதன் இயற்கையை நம்பி விவசாயம் செய்ததை மறந்து விட்டு Liebig இன் golem தான் தனக்கு படியளக்கிறது என்று நம்பியதன் விளைவு இது!

ஆகவே அறிவியல் சரியாக புரியப்படாமல், தவறாக பயன்படுத்தினால் golem - அசுரனாக மாறி துன்புறுத்தும் என்பதை சமூகவியல் அடிப்படையில் இந்த நூலில் விளக்கியுள்ளார்கள்.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...