குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 29, 2020

தலைப்பு இல்லை

இன்று காலையிலிருந்து மூன்று இலங்கைத் தமிழ் அரசியல் பற்றிய பதிவுகள் பார்க்க நேரிட்டது; 

மைந்தன் சிவாவின் மனோகணேசன் - ஜனகன் தொடர்பானது!

இரண்டாவது கலாநிதி குருபரனுடையது!

மூன்றாவது சோபிசனுடையது! 

இந்த மூன்று பதிவுகளும் தமிழர்களின் கூட்டு மன நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவாகத்தான் எனது உணர்வில் தெரிகிறது! 

நாம் என்ன செய்கிறோம், சிந்திக்கிறோம் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி ஆழமாக உரையாட வேண்டி இருக்கிறது. 

அரசியல் எதற்காக? 

ஸ்ரீ அரவிந்தர் வந்தேமாதிரம் பத்திரிகையில் அரசியல் விடுதலை பற்றி எழுதியது ஞாபகத்தில் தோன்றியது.

அரசியல் விடுதலை (Political freedom) என்பது தேசத்தின் மூச்சு! 

அது 

1) சமூக சீர்த்திருத்தம், 

2) கல்விச் சீர்திருத்தம், 

3) தொழில் மேம்பாடு, 

4) விழுமிய மேம்பாடு 

ஆகிய அடிப்படையாக இல்லாமல் அரசியல் சுதந்திரத்தை நாடும் சமூகம் அறியாமையின் உச்சத்திலும், பயனற்ற தன்மையிலுமே இருக்கும்; 

இத்தகைய முயற்சிகள் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் தான் தரும். இப்படி (விழுமியமும், தூர நோக்குச் சிந்தனையும் இல்லாமல்) தோல்விகளும் ஏமாற்றங்களும் வரும் போது நாம் அந்தத்தோல்விக்கான காரணம் தேசமும் அதன் கொள்கைகளும் பிழையானது என்ற சண்டைக்குள் செல்கிறோம். 

ஒரு மனிதன் வெற்றிக்கான அடிப்படை நிபந்தனை எதுவென்பதை அறிந்துகொள்ளாமல், தேசியத்தை வளர்ப்பதோ, தேசியத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதோ, பலமானவர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீளுவதோ சாத்தியமில்லை! 

(Bande Mataram, Pg 266) 

நாம் யாருடன் போட்டி போடுகிறோம்? 

எது இலக்கு? 

அதை அடைவதற்கு நாம் எமது சமூகத்தை தயார் செய்கிறோமா? 

மனிதனின் பலம் என்பது பலரது மனம் ஒன்றுபட்டு ஒரு இலக்கினை அடைய முயற்சிப்பதுதான் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

எம்மை ஒருவன் வீழ்த்திவிடுவான் என்ற பயம் பற்றிக்கொள்ளும் போது அந்தப்பயத்தில் நாம் முழுச் சமூகத்தையும் குழப்பி இலக்கினை மறக்கச் செய்கிறோமா? 

வேற்றுக்கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்த்துக்கொண்டு அதைக் கூறுபவனும் நம்மில் ஒரு சகோதரன் என்ற மன நிலையுடன் பிரச்சனைகளை அணுகி வெற்றிபெறுகிறோமா? 

சமூகம் அதை அடைவதற்குரிய சீர்திருத்ததிற்கு, சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறோமா? 

நாம் சிந்திக்கவேண்டிய கேள்விகள்!

அரசியல் சமூகத்திற்கானது! விழுமியத்துடன் இருக்க வேண்டும்.


தலைப்பு இல்லை

மரபுவழி நூல்களை கற்றல் வழி காத்தல் என்ற திட்டத்திற்கு அமைய முதல் முயற்சியாக பரராசசேகரம் வைத்திய நூல் கற்றல் இன்று முதல் ஆரம்பமாகியது. 

தினசரி காலை 07:00 மணிக்கு Sri Sakthi Sumanan என்ற எமது Youtube Channel இல் வீடியோவாக வெளியாகும். ஆகவே இந்த channel உடன் இணைந்திருங்கள்! 

மேலும் அவை இந்த முக நூல் பக்கத்திலும் பகிரப்படும். 

பல்வேறு விஷயங்கள் எழுதப்படுவதால் இந்த வீடியோக்கள் எமது கணக்குப் பக்கத்தில் தொடர்ச்சியாக பகிரமாட்டோம்.


Monday, July 27, 2020

தலைப்பு இல்லை

பொதுவாக என்னுடன் உரையாடுபவர்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியன் ஆலோசகன் என்று சொல்லுவார்கள்! 

ஆனால் நான் ஒரு தொழில் முறை ஆசிரியனோ, விரிவுரையாளனோ அல்ல! தொழில் முறை ஆய்வாளன், நிர்வாகி, முகாமையாளன்! 

ஆனால் என்னிடம் கற்கும் 96% மாணவர்கள் திருப்தியாக இருக்கிறது என்று பின்னூட்டம் தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது! 

ஒரு Zoom வகுப்பின் கற்றல் திருப்தி பற்றிய பின்னூட்டம் சாராம்சம்!


மாம்பழமாக இருத்தல்

மாந்தோப்புக்குச் சென்றால் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டேன் மகளிடம்!

மாம்பழம் என்றாள் மகள்

ஏன் பிடிக்கிறது என்றேன்?

மாம்பழம் நாவுக்குச் சுவையானது என்றாள்!

பிடிக்காதது எது என்றேன்?

கீழேயிருக்கும் குப்பை, அழுக்கு, சருகு என்றாள்! 

ஏன் அவற்றைப் பிடிக்காது என்றேன்?

அவற்றில் பாம்பு, பூரான் இருக்கும், பயமாக இருக்கும் என்றாள்! 

அப்படியானால் அப்படி அழுக்கு நிறைந்த மாமரம் எப்படி சுவையான மாம்பழத்தை தருகிறது என்று சிந்தித்தீர்களா? என்றேன்

இல்லையப்பா! என்றாள்

மாமரம் தனது வேர்களை ஆழமாக்கிக் கொண்டு தனக்குரிய நீரையும், போசணையையும் அழுக்கான மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளும், தனது வளர்ச்சியை, சக்தி தரும் சூரியனை நோக்கி வைத்துக்கொள்ளும்! இப்படி எங்கிருந்து எதைப் பெறவேண்டும்? தெளிவான இலக்கினைக் கொண்டிருப்பதால் சுவையான மாம்பழத்தை உருவாக்கும். அழுக்கு என்று மண்ணையும், சருகையும், குப்பையையும் விட்டு விலகுவது இல்லை! அதற்காக அழுக்கான மண்ணுக்குள் புதைந்து விடுவதும் இல்லை! அதன் நோக்கம் சூரியனை நோக்கி வளர்வதுதான்! 

இதுபோலதான் நாமும் எம்மைச் சூழ நடக்கும் தீமைகள், வேதனைகள், எரிச்சல்கள் அனைத்தையும் எமக்கு பாடமாக, அனுபவமாக்கி அந்த உரம்பெற்ற மனதினது துணைகொண்டு சூரியனைப் போன்ற பிரகாசமான அறிவை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். இப்படி அறிவும், அனுபவமும் வளர நாமும் பழுத்து மற்றவர்களுக்கு சுவைதரும் கனிபோன்று பயனுள்ளவர்களாக இருப்போம்! 

ஆகவே மாந்தோப்பில் இருக்கும் குப்பை, சருகு, பாம்பு, பூரானைப் பார்த்து பயந்து விடுவதுபோல் வாழ்க்கையில் நடக்கும் தீமைகள், வருத்தங்களைப் பார்க்காமல் மாமரம் போல் மற்றவர்களும் பயன் தருபவர்களாக இருந்தல் வேண்டும்!


பிழைகளை ஒப்புக்கொள்ளுதலும் அகவலிமை பெறுதலும்

ஒருவன் தவறு செய்யும் போது தனது அகத்திற்கு உடனடியாக ஒருவித அதிர்ச்சியைத் தருகிறான். அதை அவன் உணர்வு அறிந்து கொண்ட அடுத்த கணம் அவனது மேல் மனம் உடனடியாக அதை மறுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கும். ஏனென்றால் அந்த தவறை தான் ஏற்றுக்கொண்டவுடன் அதனால் தனக்கு அவமானம், தண்டணை, வேண்டத்தகாத அனுபவம் மற்றவர்களிடமிருந்து வரும் என்ற எண்ணம். இந்தப் பயமும் எண்ணமும் அவனின் அர்த்தமற்ற காரணம் கற்பித்தல், சரியான காரணமற்ற குதர்க்கம், தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளுதல் என்ற சிந்தனை, அந்தப்பிழைக்கு எப்போதும் மற்றவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்ற வகையில் நடத்தையை உருவாக்கும். 

ஆனால் இந்த எண்ணங்கள் ஒருவித குரூர நடத்தையை தொடர்ச்சியாக உருவாக்கும். மீண்டும் மீண்டும் அத்தகைய தவறினைச் செய்யத்தூண்டும் படிப்படியாக ஒரு பழக்கமாக உருவாகி எது சரி எது பிழை என்பதைப் பற்றிய சிந்திக்கும் இயல்பினை இல்லாமல் ஆக்கும். இது பிழையான, இருண்ட, பலவீனமான அகத்தினை உருவாக்கி தீய பண்புகளை உருவாக்கும். 

ஒருவன் தனது பிழைகளையும், பலவீனங்களையும் ஒப்புக்கொள்ளுதல் என்பது அவனது ஆன்ம தைரியத்தையும் அகத்தூய்மையையும் காட்டுகிறது. ஆகவே ஒருவன் தனது பிழைகளை ஏற்று அதற்குரிய மன்னிப்பினை கேட்பது அவனது அகத்தூய்மையை அதிகரிக்கும். இது மிகவும் தைரியமான செயல். அது அவனுடைய அகவலிமையை அதிகரிக்கும். அப்படி உருவாகும் அகவலிமையுடன் அவன் அத்தகைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதிலிருந்து மீண்டு வர உறுதி கிடைக்கும். இதைச் செய்வதால் அவன் தன்னைப் படிப்படியாக புடம் போட்டு முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பிப்பான். இது அவனது உலகவாழ்க்கையிலும், ஆன்ம முன்னேற்றத்திலும் சரியான பாதையைக் காட்டும். 

குருதேவர்


Sunday, July 26, 2020

தலைப்பு இல்லை

மரபுவழி நூல்களை கற்றல் வழி காத்தல் என்ற திட்டத்திற்கு அமைய முதல் முயற்சியாக பரராசசேகரம் வைத்திய நூல் கற்றல் ஆரம்பமாகியது.

தினசரி காலை 0700 மணிக்கு Sri Sakthi Sumanan என்ற எமது Youtube Channel இல் வீடியோவாக வெளியாகும். ஆகவே இந்த channel உடன் இணைந்திருங்கள்!


மரபுவழி நூல்களை கற்றலின் வழி காத்தல்

பரிணாமக் கோட்பாடு என்ன சொல்கிறது? பயன்படுத்தப்படாதது, சூழலுக்கு தக்கணப் பிழைக்காதது அழிந்துபோகும்! அறிவும் சரி! விலங்கினமும் சரி! 

இன்று நாம் அனைத்தையும் யாரோ ஒருவன் வருவான் எம்மை மீட்பான் என்று மந்தைக்கூட்ட மனப்பாங்கில்தான் அனைத்தைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருக்கிறோம்! 

ஒவ்வொருவரும் தமது கடமை என்ற எண்ணத்தில் செயலாற்ற வேண்டிய துறைகள் இரண்டு

1) எமது பாரம்பரிய சித்த ஆயுர் வேத மருத்துவம்.

2) எமது பாரம்பரிய பசு சார்ந்த மண்வளம் பேணும் விவசாயம். 

இவை இரண்டும் எமது ஆரோக்கியமும், இருப்பும் சார்ந்தது! 

இரண்டும் செயலில் இருக்க என்ன செய்யலாம்? 

பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் என்று கற்பனை செய்யாமல் நாமே சுயமாக கற்க முயற்சிக்க வேண்டும். 

நாம் கணினி, பொறியியல் என்று வேறு எந்தத்துறையில் பட்டம் பெற்றாலும் இவற்றை எமது சுயகற்கைகளாக அறிவுக்காக கற்கவேண்டும்! எமது பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி வைக்கவேண்டும். 

இப்படி அதிகமானோர் கற்க, தேவைகள் உருவாக அந்தத்துறை முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்! 

முதல் முயற்சி யாழ்ப்பாண பாரம்பரிய வைத்திய நூலான பரராசசேகரத்தினை அனைவரும் கற்கத் தூண்ட சிறு சிறு வீடியோக்களாக தினசரி வெளியிடலாம் என்று முயற்சிக்கிறோம்! 

ஆதரவு தருவீர்கள் என்று எண்ணுகிறோம்!


பரராசசேகரம் பதிப்புகள்

பரராசசேகரம் சிரரோக நிதானம் என்ற முதல் நூல் முதல் முதலாக 1928ம் ஆண்டு ஏழாழை பொன்னையாப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திர சாலையில் ஐப்பசி மாதம் வெளியிடுகிறார். 

இந்த வெளியீட்டின் முன்னுரையில் கீழ்வரும் தகவல்களைக் குறிப்பிடுகிறார்: 

1. அந்த நூல் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டது. 

2. தனியொருவரால் இயற்றப்படவில்லை.

3. மொத்தம் 12000 பாடல்கள் காணப்பட்டது, 

4. தன்னிடம் கிடைத்த செய்யுட்தொகை ஏழாயிரத்திற்கு சற்று அதிகம் என்று கூறுகிறார். 

5. நூலை பதிப்பிற்குத் தயார் செய்தபின்னர் கிடைத்த ஏட்டுப் பிரதியில் உள்ள பாயிரச்செய்யுளைச் சேர்த்து அச்சிட்டதாகக் கூறுகிறார். 

6. கிடைத்த ஏட்டுப்பிரதிகள் சிலதில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி என்று முகப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 

இதன் பின்னர் மொத்தமாக ஏழு பாகங்களாக பரராசசேகரத்தை 1936ம் ஆண்டளவில் ஏழாலை ஐ. பொன்னையப்பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். 

இதுவே எமக்குக் கிடைக்கக்கூடிய ஒரேயொரு மூல நூல் பதிப்பாகும்! 

இதன் பின்னர் யாழ்ப்பாணத்து லங்கா சித்தாயுள் வேதக்கல்லூரியின் வைத்தியர்கள் இணைந்து 1999 களில் மீள்பதிப்புக்கு உள்ளாகியது. 

2003ம் ஆண்டளவில் கரவெட்டி ஸ்ரீபதி சர்மா அவரகள் ஐந்தாம் பாகத்தை மாத்திரம் வெளியிட்டிருக்கிறார்கள்.

பிறகு 2016ம் ஆண்டளவில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களம் ஐந்து பாகங்களை மீள்பதிப்புச் செய்துள்ளது. 

அதன் பிறகு 2019, 2020 களில் வைத்திய கலாநிதி சிவசண்முகராஜா அவர்கள் இவற்றை சுருக்க உரையுடன் முழுமையாகப் பதிப்பித்துள்ளார். 

உரையைக் கேட்க நாளை காலை 0730 இற்கு கீழ்வரும் தளத்தில் பாருங்கள்; 


Saturday, July 25, 2020

தலைப்பு இல்லை

புளிப் பலாக்காய் - ambul polos curry - (மூசுக்) கறியை Mozzarella சீஸுடன் கலந்து, தக்காளி, bell pepper, பூண்டுக் கலவை topping ஆக்குவதன் மூலம் கிடைப்பது தான் 

பலாக்காய் கறி பீட்ஸா - Polas Curry Pizza  ®  Pizza Hut please note it is patent,    

தனித்துவச் சுவையுடன்!


தலைப்பு இல்லை

தாடிக்கு (முகக்) கவசம்!    

நாடிக் கவசம் 

மோவாய் கவசம் 

முகவாய் கவசம்

தாவாய்க் கவசம்


Friday, July 24, 2020

தலைப்பு இல்லை

நான் கரைகளில் பிறந்திருந்தாலும் 

மலைகளில் வாழ்ந்தவன் வாழ்பவன்

அலைகள் மனதின் இயல்பு 

மலைகள் மனதின் உயர்வு

மலைகள் நீரின் ஊற்று

கடல்கள் நீரின் கலப்பு

மலைகள் ஊடு பயணிப்பது 

மனதிற்கு மகிழ்ச்சி உயர்ச்சி!

மேகம் ஒடுங்கி மலை தருவது மழை!


தலைப்பு இல்லை

எம் மாத்தளை எனும் அழகிய மலை நாடு!

நான் கரைகளில் பிறந்திருந்தாலும்

மலைகளில் வாழ்ந்தவன் வாழ்பவன்

அலைகள் மனதின் இயல்பு

மலைகள் மனதின் உயர்வு

மலைகள் நீரின் ஊற்று

கடல்கள் நீரின் கலப்பு

மலைகள் ஊடு பயணிப்பது

மனதிற்கு மகிழ்ச்சி உயர்ச்சி!

மேகம் ஒடுங்கி மலை தருவது மழை!


Monday, July 20, 2020

யோக சாதனையும் கிரிக்கட்டும்

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளரின் கடமை பந்து வீசுதல், துடுப்பாட்டக்காரரின் கடமை பந்தை எதிர்த்தாடுதல். பந்து வீச்சாளர் ஒவ்வொரு விக்கெட்டாக எடுத்து 10 பேரையும் ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றி! இதில் துடுப்பாட்டக்காரர் திறமையாக உயர அடித்தால் அவற்றைப் பிடித்துக்கொள்ள மற்றைய வீரர்கள். இதில் ஆட்டம் சரியாக ஆடுகிறோமா என்று நடுவர் இருப்பார்! 

யோக சாதனையில்

மனம் - பந்துவீச்சாளர்

புத்தி - Team captain 

மனதை ஒருமைப்படுத்தல், சிந்தனையைச் சீர்படுத்தல் - பந்துவீசுதல்

துடுப்பாட்டக்காரர் - எமது கர்மாவும், புலன்களும், மனதை ஒருமுகப்படுத்த விடாமல்  திசைதிருப்பிக்கொண்டிருப்பவை.

சக ஆட்டக்காரர் - எமது உபாசனா தெய்வத்தின் பரிவாரங்கள் அல்லது சொந்த விழிப்புணர்வு, மனமும், புலன்களும் சிக்ஸர் அடித்தாலும் பந்தைப் பிடித்து ஆட்டத்தைத் தடுப்பவை. 

நடுவர் - குரு

விக்கட் - நாம் அடையவேண்டிய பரம்பொருளாகிய பேரொளி!

பந்து வீச்சாளர் பல ஓவர் வீசி சில விக்கட் எடுப்பது போல் பல மணி நேர ஜெப, தியான சாதனையில் ஒரு சில வினாடிகள் (fraction of second) சீரிய ஏகாக்கிரம் வாய்க்கும்! ஒரு விக்கட் எடுப்பதால் ஆட்டம் முடிவதில்லை; அதுபோல் ஒரு தடவை ஏற்பட்ட தியான சாதனை முன்னேற்றத்தால் முழுமையாக எவரும் கர்ம பிரபாவத்திலிருந்து விடுபடுவதில்லை! பலருக்கு பல இன்னிங்ஸ் ஆடவேண்டிய கிரிக்கட்டாகத்தான் இருக்கும்! 

யோக சித்தி என்பது பந்துவீச்சாளராகிய உங்கள் மனம் எவ்வளவு சீரிய ஏகாக்கிரமாக இருக்கிறது என்பதிலும், துடுப்பாட்டக்காரர் ஆகிய உங்கள் கர்மாவும், புலன்களின் தீய பழக்கவழக்கங்களின் வலிமை எப்படி இருக்கிறது என்பதிலும் தங்கியிருக்கிறது!

கிரிக்கட்டும் யோக சாதனைக்கு வழிகாட்டும்!


Sunday, July 19, 2020

பரராசசேகரமும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ அறிவுத்தோற்றவியலும்

அறிவுத்தோற்றவியல் (Epistemology) என்பது ஒரு மொழியைக் கொண்டு குறித்த சமூகம் தான் வாழும் இயற்கைச் சூழல், மற்றைய இனங்களின் பண்பாடு, பிரபஞ்சம் ஆகியவற்றுடன் இடைத் தொடர்படைந்து தனது கண்ணோட்டத்தினை (perspective) உருவாக்கி, அந்தக் கண்ணோட்டங்கள் பல படிகளில் ஆராயப்பட்டு விதிகளாக்கப்பட்டு, அந்த விதிகள் அந்தச் சமூகத்தால் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு ஒரு காலத்திற்குரிய அறிவு தோற்றம் பெறும். 

மருத்துவ அறிவுத் தோற்றம் மனிதன் தனது உடல், மனம் பற்றிய துன்பங்களுக்கு தனக்கு வெளியே எத்தகைய தீர்வுகளைப் பெறலாம் என்று சிந்தித்த மனிதனிற்கு தன்னைச் சுற்றி இருக்கும் சூழலில் இருக்கும் தாவர, தாது வர்க்கங்கள் நோய் தீர்க்க உதவும் என்ற அடிப்படையும், தன்னையும் மற்றவர்களையும் உற்றுநோக்கி நோய் எப்படி உருவாகிறது என்பதையும் அறிந்து உருவாக்கினான். 

இந்த அடிப்படையில் பரராசசேகரம் பதினைந்தாம் நூற்றாண்டிற்குரிய யாழ்ப்பாணத்தின் மருத்துவ அறிவுத் தோற்றவியல் ஆதாரங்களைத் தரும் நூல் என்பது எமது கருத்து. 

நாளை காலை உரையினை எதிர்பாருங்கள்;

https://youtu.be/eRCcJsNl280


யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களின் காலம்

யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் என்று ஈழத்தும் தமிழ் கவிதைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இது கி.பி 1216 – 1621 வரையிலான காலப்பகுதி. அதாவது கி.பி 1044 இல் சோழராட்சி முடிவிற்கு வருகிறது. இதன் பின்னர் பாண்டியரின் துணையுடன் முதலாம் பாராக்கிரமபாகு இலங்கையை ஆட்சி செய்யத் தொடங்குகிறான். பின்னர் 180 வருடங்களின் பின்னர் கலிங்க மாகன் படையெடுப்பு நிகழ்கிறது. 

1215ம் ஆண்டு கலிங்கமாகனின் படையெடுப்பில் இலங்கை அவனது ஆட்சிக்கும் கீழே வருகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு தம்பதெனியாவை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்கிறான். பின்னர் 1251 இல் பாண்டிய நாட்டில் முடிசூடிய சடாவர்ம சுந்தரபாண்டியன் ஏழுவருடங்கள் கழித்து பொலன்னறுவை மீது படையெடுத்து கலிங்க மாகனை விரட்டி தம்பதெனிய இராசதானியிடம் திறை பெறுகிறான். அதன் பிறகு 1284 இல் தம்பதெனிய இராசதானியில் மூன்றாம் பராக்கிரமபாகு முடிசூட பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூடிய பின்னர் இலங்கையை கவனிக்க அனுப்பிய சேனாதிபதியின் பட்டப்பெயரே “ஆரியச்சக்கரவர்த்தி” என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறும். 

இலங்கையின் முதல் பழந்தமிழ் இலக்கிய நூல் மூன்றாவது பராக்கிரமபாகுவின் அவையில் உருவாகிறது. அது ஒரு சோதிட நூல்; சரசோதிமாலை. 

இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் 1284 இல் வட இலங்கையை தமது குடிகளுடன் அரசமைத்து 1621ம் ஆண்டு யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமாகும் வரை பன்னிரெண்டு அரசர்கள் ஆண்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். இந்த பன்னிரெண்டு மன்னர்களும் செகராரசசேகரன், பரராசசேகரன் என்ற பெயர்களை பட்டத்துப் பெயர்களை மாறிமாறிக்கொண்டிருந்தனர். 

1216 – 1450 வரை யாழ் இராசதானியின் தலை நகர் சிங்கை, 1450 -1621 வரை தலை நகர் நல்லூராக விளங்கியது. தலைநகரின் பெயரைக் கொண்டு சிங்கை செகராச சேகரன், நல்லூர் பரராச சேகரன் என்று மன்னர்கள் குறிப்பிடப்பட்டனர். 

இந்தப் பன்னிரு மன்னர்களில் சிங்கை செகராரசசேகரன் (1380 – 1414) மற்றும் நல்லூர் பரராசசேகரன் (1478 – 1519) ஆகிய இருமன்னர்களும் சிறந்த அறிஞர்கள். இவர்களது ஆட்சிக்காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றியது. அக்காலத்தில் அறிவியல் இலக்கியங்கள் என்று கருதப்படக்கூடிய சோதிடம், மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகள் வளர்ச்சியடைந்து காணப்பட்டது.

சிங்கைச் செகராசசேகரனின் ஆட்சியில் தோன்றிய வைத்திய நூல் செகராசசேகரம்.

நல்லூர் பரராசசேகரன் காலத்தில் தோன்றிய வைத்திய நூல் பரராசசேகரம். 

இவை இரண்டுமே இன்று நூறுவருடங்களுக்கு முன்னர் ஏழாழையில் வாழ்ந்த ஐ. பொன்னையாப்பிள்ளை எனும் பெருந்தகையால் எல்லோருக்கும் கிடைக்கும்படி பதிப்பிக்கப்பட்ட மன்னர் காலத்தைய வைத்திய நூல்கள்.

உரையைக் கேட்க கீழ்வரும் Youtube channel இல் இணைந்திருங்கள்.


Saturday, July 18, 2020

தலைப்பு இல்லை

 இது Trailer.... Main Picture upload ஆகிக்கொண்டு இருக்கு!   நாளை காலை வெளியாகும்! 

எழுதுவது எனக்குப் பிடித்த வேலை; நான் தொழில் முறைப் பேச்சாளனோ, காணொளி உருவாக்கியோ இல்லை! புதுமையாக இருக்கட்டும் என்று ஒரு உந்தலால் முயற்சிக்கிறேன்! 

கருத்துக்களை உரையாடுவோம்!

முழுவீடியோ இங்கு காண்க: https://youtu.be/pWDV3ha62dc


தலைப்பு இல்லை

யாழ்ப்பாணத்து புராதன மருத்துவ நூல்கள் பற்றிய காணொளி அறிவுப்பகிர்வு!

1. அறிமுகம்: https://youtu.be/BjYCGwMtNoc


தலைப்பு இல்லை

யாழ்ப்பாண மருத்துவ நூற்கள் பற்றி சிறிது உரையாடலாம் என்று எண்ணம்! 

உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்!


Friday, July 17, 2020

உயர்ந்த அறிவினைப் பெறுவதற்கான பண்புகள்

முற்காலத்தில் உயர்ந்த அறிவினைப் (மேதாசக்தியைப்) பெறுவதற்காக குருவிடம் செல்லும் மாணவர்கள் தமது மனதினை அமைதிப்படுத்தி சாதனையில் முன்னேற சாந்தி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. 

இது மேதா சகதியைப் பற்றி உரையாடும் மகா நாராயண் உபநிஷதம், சுவேதாசுவர உபநிடதம் ஆகிய இரண்டினது சாந்தி மந்திரமாக வருகிறது. 

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் கற்பித்தலும், கற்றலும் நிகழவேண்டும் என்றால் நிகழவேண்டிய அமைதிக்கான நிபந்தனைகளைக் கூறுகிறது. 

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

இதன் பொருள்;

ஆசிரியர் மாணவர்கள் இருவரையும் இறைவன் காப்பாராக!

நாம் இருவரும் அறிவின் ஆற்றலை அனுபவிப்போமாக!

நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!

நாம் இருவரும் கற்றது எமக்கு பயனுள்ளதாகட்டும்!

எதற்காகவும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷம் கொள்ளாமல் இருப்போமாக!

இந்த மந்திரம் ஆசிரியர் மாணவர் இருவருக்குமிடையிலான ஒப்பந்தம். இருவருக்கும் தமக்கு மேல் ஒருவர் - இறைவன் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். குரு தன்னை எல்லையற்ற கடவுளாக சிஷ்யனுக்குக் காட்டி ஏமாற்றி அறியாமையில் தள்ளக்கூடாது. சிஷ்யன் குரு தனது இச்சைகளை எல்லாம் பூர்த்தி செய்யக் கிடைத்த ATM என்று நினைக்கக்கூடாது என்பது இந்த வரியின் பொருள்!

அடுத்த "ஸஹ" என்ற சொற்கள் மூன்று தடவை பாவிக்கப்பட்டுள்ளது. இது இருவரும் சேர்ந்தே பொறுப்புக் கூறல் வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கிறது. 

சரியான விஷயத்தை ஆசிரியன் கற்பிக்க வேண்டும், கற்பித்தல் ஆசிரியர் கடமை என்றால் அதை கற்றல் மாணவனின் கடமை! இதற்கு இருவரும் சேர்ந்து ஆற்றலுடன் உழைக்க வேண்டும். அந்த உழைப்பில் வரும் கல்வியின் பலன் இருவருக்கும் பலனுள்ளதாக இருக்க வேண்டும். அந்தப்பலனை இருவரும் அனுபவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். 

இறுதியாக மிக முக்கியமான விஷயம் "எக்காரணம் கொண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷித்துக் கோபம் கொள்ளக்கூடாது" என்பதாகும். 

பலர் தாம் நினைத்தது சாதனையில் நடக்கவில்லை என்றவுடன் குருவின் தகுதியை சந்தேகிப்பதும், குருவைக் கேள்வி கேட்பதும் என்றவாறு தமக்குள் விரோத பாவம் வளர்த்து சிக்கலாக்கிக் கொள்வார்கள். குரு தகுதியற்றவர் என்றோ, அவரிடம் நமக்கு பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால் எந்தவித விரோத பாவத்தையும் மனதில் தோற்றுவிக்காமல் விலகிவிடும் மாணவன் மனதில் சாந்தியுடன் கற்கும் ஆற்றலைப் பெறுவான்.

மேலேயுள்ள மந்திரம் கற்றலுக்குரிய முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகிறது;

1) இருவரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இருக்கக் கூடாது; தமக்கு மேலே அல்லது அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற பணிவும் எண்ணமும் இருவருக்கும் இருக்க வேண்டும். 

2) கற்றலில் ஆசிரியனுக்கும், மாணவனுக்கும் புரிந்துணர்வும், ஒருவரை ஒருவர் போஷிக்கும் தன்மை இருக்க வேண்டும். 

3) இருவரும் இணைந்து ஆற்றலுடன் சிரத்தையுடன் முயற்சிக்க வேண்டும். 

4) இருவருடைய முயற்சியும் இருவருக்கும் பயன் தரவேண்டும். 

5) எக்காரணம் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் துவேஷம் கொண்டு தமது மனதை அழுக்காக்கிக் கொள்ளக்கூடாது. இது கற்றலை நிறுத்தி விடும்!


தலைப்பு இல்லை

இன்று ஒரு சாதகருக்கு புலன்கள், அனுபவம், மேல்மனம், ஆழ்மனம், ஆழ்மனத்தின் பதிவுகள் எப்படி எம்மைச் சுற்றி காந்தத்தினை உருவாக்குகிறது, அவை எப்படி நல்லெண்ணம், தீய எண்ணத்தை உண்டுபண்ணி வாழ்க்கையை இன்பமாகவோ துன்பமாகவோ மாற்றுகிறது என்ற விளக்க வரைபடம்! 

புலன்களை சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும், தனக்கு ஏற்படும் சூழலிற்கு தனது எண்ணங்களும், ஆழ்மனப் பதிவுகளும்தான் காரணம் என்பதை விழிப்புணர்வுடன் அறிந்து அவற்றிற்கான மாற்று விதிகளை ஆழ்மனத்தில் புகுத்துவதன் மூலமும், இன்பமான வாழ்க்கைக்குரிய விதிகள் எவை என்பதை அறிந்து கொள்வதன் மூலமும் வாழ்வை மாற்றியமைக்கலாம் என்று விளக்கினோம்!

இதை யோகத்தில் சித்த சாதனை என்று கூறுவோம். காயத்ரி ஜெபத்துடன் கூடிய காயத்ரி சித்த சாதனை மிகத்துரித பலனை அளிக்கவல்லது! பல சாதகர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.


Thursday, July 16, 2020

ஓநாய்க் கூட்டமும் இலக்கினை அடைதலும்

ஓநாய்க் கூட்டத்தின் வேட்டையாடல் நடத்தை மனிதக் குழுக்களில் தலைமைத்துவப் பண்பிற்கு ஒரு பாடம். 

ஓநாய்கள் சிக்கலான, நுண்ணறிவுடைய, அக்கறையுடைய, விளையாட்டுத்தனமுடைய, தனது குடும்பத்தின் மீது பாசம் மிகுந்த சமூக விலங்கு! 

யானை, டொல்பின், குரங்குகள் இத்தகைய தனது பிள்ளைகளை வாழ்க்கைக்குப் பயிற்றுவித்து தயார்ப்படுத்தும் விலங்குகள் ஆகும். 

ஓநாய்க் கூட்டம் தனது இலக்கினை ஏற்கனவே வேட்டைக்கு நிர்ணயித்து விட்டு எந்தவொரு உயர்படி நிலைகளையும் (hierarchy) ஆக்கிக்கொள்ளாமல் மிகச்சொற்பமான தொடர்பாடலுடன் வேட்டையை வெற்றிகொள்ளும்! அவ்வளவு குழுவிற்குள் ஒத்திசைந்து இயக்கும் புரிதல் உடையது! 

தமது குழுவுக்குள் சண்டை பிடித்துக் கொள்ளாது; அரசியல் செய்யாது! இலக்கின் மீது மாத்திரமே குழுவாகக் குறிவைக்கும்! தமது குழுவில் நலிந்தவர்களுக்கு உதவும். தனது வேட்டைத் தந்திரோபாயங்களை அடுத்த சந்ததிக்குக் கற்பித்து தனது குழுவின் உறுதி நிலையை வலுப்படுத்தும். 

ஓநாய்கள் தனது இரையைப் பிடிப்பதற்கு தகுந்த சந்தர்ப்பத்தை தனது குழுவுடன் சேர்ந்து உருவாக்கும். எதிரியை போலிச்சந்தர்ப்பத்தை உருவாக்கி எதிரியின் வலிமையைச் சோதித்து வெற்றியை உறுதிப்படுத்தும். தாக்கும் போது எதிரியை தனது குழுவுடன் சேர்ந்து திக்குமுக்காடச் செய்யும்! 

தனியொரு ஓநாயாக பிடிக்கமுடியாத தன்னைவிடப் பெரிய இரையைக் கூட்டமாகப் பிடித்து வெற்றிபெறும்! 

ஓநாய்களிடமிருந்து பெறும் பாடம்

1) தனது குடும்பத்தை, குழுவை, இனத்தைப் பாதுகாத்தல், வளங்களை உருவாக்குதல். 

2) இலக்கினை அடையவேண்டும் என்று நிர்ணயித்த பின்னர் தலைவனைத் தேடிக்கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இலக்கினை அடையப்போராடுதல். 

3) தமக்குள்ளேயே சண்டைபோட்டு யார் பெரியர் என்று நடக்காமல் அன்பும், பாசமும், பரிவுடனும் நடத்தல்.

4) தனது தகுதிக்கு மீறிய இலக்கினைக் குறிவைக்காது; குறிவைக்கும் போது குழு முழுமையாக இலக்கில் இயங்கும் படி குழுவிற்கு ஒழுக்கத்தைப் போதித்திருக்கும்!

5) குழுவிற்கு ஒழுக்கத்தையும், கட்டுக்கோப்பையும் காக்க தலைவர் இருப்பார்; ஆனால் வேட்டையாடும் போது இலக்கை அடைவதற்கு அனைவரும் தலைமைத்துவம் ஏற்று வேட்டையாடுவர். 

6) பெரிய ஓ நாய்கள் வேட்டையாடும் போது சிறியவர்கள் கவனமாக வெளிவட்டத்திலிருந்து கற்றுக்கொள்வார்கள். 

7) தலைவர் (alpha) வேட்டை இலக்கினைத் தேர்ந்தெடுத்தால் குழு அந்த இலக்கிற்கு அர்ப்பணிக்கும்!

இறுதியாக தமிழ் மக்களின் அரசியலிற்கு ஓநாய்கள் நல்லதொரு பாடம்!   


நரிகளின் நடத்தை

நரிகள் நாய், ஓநாய் குடும்பமானாலும் அவற்றின் உப இனம் வேறானாவை. 

நரிகள் வெட்கம் மிகுந்தவை; பயிற்றுவிக்க முடியாதவை; எதையும் கவனித்து கட்டளைக்கு அடிபணிய மாட்டாது; இதனால் தான் குழம்பிய மனதை நரிக்கு ஒப்பிட்டார்கள் முன்னோர்கள்.

நரிகள் வேறு எவற்றுடனும், தனது சொந்த இனத்துடனும் சேர்ந்து செயலாற்ற முடியாதவை. அனேகமான நரிகள் தனியன்கள். இதனால்தான் நரிகள் சுயநலத்தின் வடிவம் என்று கூறினார்கள். 

வேட்டை, இலக்கு என்றெல்லாம் பெரிதாக இலட்சியம் வைத்துப் பிதற்றாது. கிடைப்பதைத் தின்றுவிட்டு திருப்தியாகிவிடும். 

இரவில் இரகசியமாக, தனியாகத்தான் வேட்டைக்குச் செல்லும். இரைக்கு கிட்டச்சென்று அறியாமல் தந்திரமாக கடித்துக் குதறி இரையைப் பிடித்துவிடும். இதனால் தான் குள்ள நரித்தனம் என்று சொல்கிறோம். 

கீழே இருப்பவர் இலங்கைக் காட்டு குள்ள நரி! 


சிங்கம் நரியும்

பொதுவாக சிங்கம் காட்டின் ராஜாவாகவும் நரி குள்ளத்தனம் செய்யும் சதிகாரனாகவும் பழங்கதைகளில் சொல்லப்படுகிறது. இப்படி உருவகப்படுத்த கதைசொல்லிகள் அவற்றின் நடத்தையியலை கூர்ந்து கவனித்து அவதானித்திருக்க வேண்டும். 

சிங்கத்தின் வேட்டை நடத்தை (hunting behavior) தனித்துவமானது. சிங்கம் தனது உணவிற்காக பெருமளவு உழைப்பைத் தரும் தன்மையுடையதல்ல! தனது எல்லையை வலிமையாக வரையறுத்துக்கொள்ளும். மேலும் அது வேட்டையாடும் இரையைத் தாக்க முன்னர் அது பாயப்போகிறது என்பது இரைக்குத் தெரியும் வகையில் காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையிலிருந்து தாக்கும். மேலும் ஒரு இரையைக் குறிவைத்து ஓடத்தொடங்கினால் வேறு இரையில் கவனம் வைக்காத ஏகாக்கிரம் உடையது. பாதையை மாற்றாதது. இரைத் தப்பிவிட்டது என்றால் உடனடியாக வேறு இரைக்கு குறிவைக்காது. மீண்டும் தனது எல்லைக்குள் வந்து அடுத்த இரையைக் குறிவைக்கும். ஆண்சிங்கங்கள் ஆகச்சிறிய முயல் போன்றவற்றினை பெரும்பாலும் குறிவைக்காது. 

சிங்கம் எப்போதும் சிங்கிளாத் தான் வேட்டைக்குப் போகும். ஒருவேளை கூட்டமாகப் போகும் சந்தர்ப்பம் வந்தால் தமது கண்பார்வையால் யார் இரையைத் துரத்தப்போகிறோம் என்பதை அறிவித்துவிட்டு ஒருதிசையில் மாத்திரம் அந்தக்கூட்டத்தின் ஒரு சிங்கம் இரையை நோக்கிப் பாயும். மற்றவை பதுங்கிப் பாய்ந்து இரையைப் பயமுறுத்தும். தலைமை ஏற்று வேட்டையை நடத்தும் சிங்கத்தைப் போட்டி போட்டு குழப்பாது. வேட்டைச் சிங்கத்தின் தலைமைத்துவத்தை வேட்டை முடியும் வரை பொறுமையாக உதவி செய்யும் வகையில் காத்திருக்கும். மேலும் வேட்டை நடத்தையை மாற்றாது! 

ஆக சிங்கத்தின் நடத்தை தரும் தலைமைப் பண்பு;

1) எதை நோக்கியும் அலைந்து திரியும் பழக்கம் இல்லை; தனது எல்லையை வகுத்துக்கொண்டு வேட்டையை நிகழ்த்தும்.

2) வேட்டையாடப் போகும் இரையை நம்பவைத்து கழுத்தறுப்பதில்லை; பாயுமுன்னர் இதோ நான் உன்னைக் கொல்லப்போகிறேன் என்பதை அறிவித்துவிட்டு முடியுமானால் தப்பித்துக்கொள் என்று நடத்தைக் காட்டி வேட்டையாடும். 

3) ஒரு தடவை குறித்த இரையைப் பிடிப்பது என்று முடிவு செய்து விட்டால் அதன் பேச்சை தானே கேட்காது.      

4) தனது தகுதிக்கு குறைந்த சிறிய இரைகளை ஆண்சிங்கங்கள் குறிவைப்பதில்லை.

5) ஆண் சிங்கம் சிங்கிளாகத்தான் போகும்.   

6) ஒரு சிங்கம் குறிவைத்த இரையில் மற்றைய சிங்கங்கள் குறிவைக்காது. வேட்டையாடும் சிங்கத்திற்கு cover up position கொடுத்து உதவும். 

இவையெல்லாம் இன்று தனிமனித வெற்றிப்பாடங்களாக போதிப்பதால் தான் அந்தக் காலத்து மனிதர்கள் சிங்கத்தின் நடத்தையில் அறிந்தவற்றை அரசனுக்கு தலைவனுக்கு ஒப்பிட்டார்கள்! 

அடுத்து நரி பற்றிப் பார்ப்போம்!


Wednesday, July 15, 2020

மருத்துவம் பற்றிய அறிவியல் மாயைகள் {Prof. B. M Hegde அவர்களது MEDICAL SCIENTIFIC DELUSIONS கட்டுரையின் சுருக்கத் தமிழாக்கம்}

இன்று அறிவியல் என்பது தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதும் அவற்றின் மூலம் பணத்தினைப் பெறுவது என்பதே. ஆகவே அது மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் வியாபாரமாகவே இருக்கிறது. அறிவியல் பூர்வமானது என்ற வார்த்தை இணைக்கப்பட்டவுடன் அது மிகவும் மதிக்கத்தக்கதாக மாறுகிறது. யாராவது அறிவியல் பூர்வமான வியாபாரத்தைப் பற்றி எதிராகப் பேசியவுடன் அத்தகையவர்கள் அறிவற்றவர்கள், விஞ்ஞானப்பூர்வமானவர்கள் இல்லை, மூட நம்பிக்கை நிறைந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். 

அறிவியலில் புரிதலுக்கான மாதிரியுருக்கள் அனேகமானவை கணித அடிப்படையிலானவை; அவற்றில் சிலது சொற்கள் மூலம் விளங்கப்படுத்தக் கூடியவையாக இருக்கும். அனேகமானவை அப்படி விளங்க முடியாதவையாக இருக்கும். நாம் நினைக்கும், விரும்பும்படி அந்த மாதிரியுருக்களை (mathemetical models) மாற்றிக் கொள்ள முடியும். (இதற்கு பேராசிரியர் கொலெஸ்ரோல் பற்றிய சுவையான கதை ஒன்றினைக் கூறியுள்ளார்) 

1950 களின் மருத்துவ அறிவியல் தத்துவத்தின் (Medical Scientific Philosophy)மிக உன்னதமான விஞ்ஞானி பீட்டர் மெடாவர் அருமையான நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் பெயர் Limits of Science - அறிவியலின் எல்லைகள், இது அறிவியலில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவனும் ஆழமாகக் கற்கவேண்டிய நூல். ஒன்று அல்லது இரண்டு உதாரணங்கள் மூலம் நவீன மருத்துவத்தின் அறிவியல் புனிதத்தன்மையை அறிந்துகொள்ளலாம். 

மருந்தாக்கத் துறையில் (field of pharmaceuticals) எந்தவொரு இரசயான மூலக்கூறும் விலங்கு கலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அறிவியல் கண்டுபிடிப்பாகக் கொள்ளப்படுகிறது. இப்படி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த மூலக்கூறு கீழ்வரும் படிமுறைகள் மூலம் செல்லும்.

1) விலங்குகளில் பலமுறை சோதித்து அவதானத்தைப் பெறுதல்

2) சரியான மூலக்கூறினைப் பெறுதல்

3) மனிதனில் பரிசோதித்துப் பார்த்தல் 

4) பிறகு எழுந்தமானமான கட்டுப்பாடுப் பரிசோதனை

5) இறுதியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தினைப் பெறுதல்

ஆகவே மருந்தாக்க சந்தை தனது சந்தையினைப் பெருப்பித்துக் கொள்ள சமாந்திரமாக நோய்வருவதை தடுக்கும் காரணிகளாக மறைமுக உடல் நல ஆபத்துக்காரணிகளுக்கு என மருந்துகள் தயாரிக்கின்றன. 

தற்போதைய நிலவரத்தின் படி USA இல் 90% மான நாற்பது வயதினை எட்டும் நபர்கள் ஆகக் குறைந்தது 01 ஆபத்துக்காரணியையாவது கொண்டிருப்பார்கள். 60 வயதில் இது 100% ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பார்கள். இதை “risk factor hypotheses” என்று கூறுவார்கள். 

நாற்பது வயதை எட்டியவுடன் 90% மானவர்கள் தமது ஆரோக்கிய பரிசோதனையின்படி நோயைத் தடுக்கவென்று (கொலெஸ்ரோல் அதிகரித்துள்ளது; மாத்திரை சாப்பிடுங்கள் என்ற} பரிந்துரையின் படி மருந்துக் கம்பனியின் வாடிக்கையாளர் ஆகியிருப்பார். வயது கூடக்கூட அது சக்கரை, இதய நோய் என்று இன்னும் அதிகரித்து முழுவாடிக்கையாளராகும் பொறிமுறை நடக்கும். 

இது மிகவும் பயங்கரமானது; 

தொடரும்


பரராசசேகரம்

சிரரோகம் முதல் பதிப்பின் அட்டைப்படமும் முகவுரையும். 

1928 இல் வெளியிடப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்து வைத்திய நூல் வெளியீட்டு வரிசையில் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ளது.

முகவுரை சமூகத்தில் வழமையாக எந்தச் செயலும், முயற்சியும் முன்னெடுக்காமல், செய்யாமல் குறை கூறும் இயல்புடையோர் பற்றி அதிகம் விசனப்படுகிறது!   


Monday, July 13, 2020

தலைப்பு இல்லை

நேற்று பரராசசேகரம் பற்றி அறிமுக உரை வெளியாகிய அடுத்த நாள், இன்று மிக ஆச்சரியமாக உரையாசிரியர் Dr. சே. சிவசண்முகராஜா அவர்களை நேரில் காணும் சந்தர்ப்பம் கிட்டிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தரும் பரிசுகளைத் தந்தார்! 
கொரோனா காலத்து விடுமுறையில் பரராசசேகரத்தின் முழுமையான மீள் பதிப்பினை வெளியிட்டு விட்டதாகக் கூறி பிரதிகளைத் தந்தார். 
இந்தப் புத்தகங்கள் தமிழ் நாட்டிலிருந்தும், கிழக்கிலங்கையிலிருந்தும் அன்பர்கள் ஆர்வமுடன் வாங்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குறைக்காக 100 பிரதிகள் மாத்திரம் வெளியிட்டுள்ளதாகக் கூறினார். 
இன்னுமொரு சுவாரசிய தகவல்; அகத்தியர் பன்னீராயிரம் என்ற நூல் இதுவரை கிடைக்கவில்லை; பரராசசேகரம் பன்னீராயிரம் தான் அகத்தியர் பன்னீராயிரமாக இருக்கலாம் என்பது அனுமானம் என்ற தகவல், எப்படியிருப்பினும் 12000 பாடல்களில் 6171 பாடல்கள் மாத்திரமே ஐ. பொன்னையாபிள்ளை அவர்கள் பதிப்பித்தார். அவை இப்போது மீள் பதிப்புக் கண்டுள்ளது. பதிப்பிக்கப்படாத ஓலைச் சுவடிகளில் உள்ளதும் சேர்த்து மொத்தம் 8000 பாடல்கள் தற்போது உள்ளது என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

Sunday, July 12, 2020

தலைப்பு இல்லை

பரராசசேகரம் பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தின் தனித்துவமான சித்த வைத்திய நூல்! சித்த வைத்தியம் என்று கூறப்பட்டாலும் சித்த வைத்தியம் - மருத்துவம் என்று நூலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை; அகத்தியர் இயற்றிய வாகடத்தைப் (பரராச) சேகரன் ஆணையில் தொகுத்த நூல் என்றே கூறப்படுகிறது. 

அகத்தியர் வழி வைத்தியம் ஈழத்தில் இருந்தது என்பதற்கான அகச்சான்றுகளைத் தரும் நூல்! தாய்த்தமிழகம் முகாலயர் ஆட்சியால் தாக்கமுறும் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் தனித்துவமாக சைவம், தமிழ், மருத்துவ, சோதிட கலாச்சாரத்தைப் போற்றிப்பாதுகாத்தது என்பதற்கான சான்றாதாரத்தை பரராசசேகரம் வைத்தியத்துறையில் தருகிறது. 

வடமொழிச் சொற்பிரயோகம், ஆயுர்வேத அடிப்படைகள் பலவற்றையும் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர் தமிழர்கள் தமது வேர்களில் ஒன்றாக படிக்க வேண்டிய நூல்! 

இது பற்றிய சிறிய அறிமுகத்தை இன்றைய ஈழத்து நூல்களை அறிவோம் பகுதியில் பேசியிருக்கிறேன்! 

பார்த்துக் கேட்டு கருத்துப்பகிர்க! உரையாடுவோம்!

Friday, July 10, 2020

சைவ சித்தாந்தமும் குண்டலினி யோகமும்

சைவ சித்தாந்த நூலாகிய சிவ ஞானசித்தியார் சுபக்கத்தில் வரும் 299 & 300 வது பாடல்கள் திருவைந்தெழுத்தால் செய்யப்படும் குண்டலினி யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
299 வது பாடலின் பொருள் வருமாறு; 
திருவைந்தெழுத்து ஆன்மாவிற்கு அரனுடைய பரிசு
ஏனென்றால் அது அரனாகிய சிவனின் உருவம் திருவைந்தெழுத்தாலேயே அமைந்திருக்கிறது என்பதை அறிந்து அந்த திருவைந்தெழுத்தால் அங்க நியாசம், கர நியாசம் செய்து, ஆன்மாவின் ஐந்தெழுத்தால் இதயத்தில் அர்ச்சித்து, அதே ஐந்தெழுத்தால் குண்டலினி அனலை விழிப்படையச்செய்து, குண்டலினி எழுந்து செல்லும் முதுகுத்தண்டு வழி உணர்வைச் செலுத்தி (அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) திருவைந்தெழுத்தை உச்சரிக்க சந்திர மண்டலம், சூரிய மண்டலம், அக்னி மண்டலத்தினூடாக அரவம் என்ற குண்டலினி தோன்றும், இப்படித்தோன்றும் போது ஆன்மாவில் அரனாகிய சிவம் தெரியும். 
இனிப்பாட்டினைப் பார்க்க; 
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் 
அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு) 
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி 
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து) 
அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி 
அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) 
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் 
அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே. 299 
இதில் இரண்டு விஷயங்கள் குருமுகமாய்த் தெரிந்துகொள்ள மறைப்புச் சொல்லியுள்ளார்;
1) ஆன்மாவின் ஐந்தெழுத்து
2) ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல்

Thursday, July 09, 2020

தமிழும் சமஸ்க்ருதமும்

நண்பர் Kandasamy Jeyandran அவர்கள் நாம் புத்தி என்ற சொல்லிற்கு கூறிய விளக்கத்தை கேள்விக்குட்படுத்தினார். அவரது கேள்விக்கணைகளுக்கான பதிலே நீண்ட பதிவாகிவிட்டதால் இங்கு தொகுத்துள்ளோம்.

*************************

தமிழும் சமஸ்க்ருதமும் நாத்திகம் கதைப்பவர்களுக்கும், குழப்ப வாதிகளுக்கும் வேறாகவும் பிரித்துப் பார்த்து வீண்வியாக்கியானம் செய்து குழப்பம் தரும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் யோக மரபில் இத்தகைய சிந்தையுடன் அணுகுபவர் யோக சாத்திரம் பற்றிய உண்மையான அறிவினைப் பெற முடியாது, 

ஆகவே இந்தப்பதிவு தமிழும் சமஸ்க்ருதமும் யோக சாஸ்திர அடிப்படையில் அதிமுக்கியமானவை என்பதைப் பற்றிக் கூறும். அரசியல், சமூகவியல் பார்வையைப் பற்றி உரையாடுவது இதன் நோக்கம் இல்லை. 

குறிப்பாக நூறாண்டுகளுக்கு முந்தைய யாழ்ப்பாண சைவ மரபும், தமிழ் அறிஞர்களும் இதைத் தெளிவாகப் புரிந்து வந்திருந்தனர்; பழைய சைவப் பண்டிதர்கள் தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்ணென்றே கொண்டு அறிவைப் பெற்றிருக்கிறார்கள். இதற்கு கந்தபுராணத்திலேயே சான்றிருக்கிறது.

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப

இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பும்

இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்

விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ

அவரது விவாதம் புக்தி என்று சமஸ்க்ருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லுக்கான விளக்கம் புத்தி என்ற சொல்லிற்கு எப்படி சரி என்பதாகும். 

தொல்காப்பியச் சூத்திரத்தில், எச்சவியலில்

குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் (453)

குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல (454)

ஒரு சொல்லுக்குத் தலை, இடை, கடை என மூன்று இடம் உண்டு. அம்மூன்றினுள் ஒன்றை எவ்விடத்துக் குறைக்க வேண்டுமோ, அவ்விடத்தை அறிந்து குறைத்துச் சொல்லிப் பாவிக்கலாம்.

சமஸ்க்ருதத்தில் புக்தி என்ற உச்சரிப்பில் வரும் சொல் தமிழில் புத்தி என்று பயன்படுத்தலாம்; ஏன் புந்தி என்றும் பயன்படுத்தலாம் (புந்தியில் வைத்தடி போற்றுக்கின்றேன் - திருமந்திரம் காப்புச் செய்யுள்) முக்தி என்று வரும் சொல் முத்தி என்று பயன்படுத்தலாம், பக்தி என்று வரும் சொல் பத்தி என்று பயன்படுத்தலாம்.

இதை மொழியில் உழற்சி (free variation) என்று கூறுவார்கள். இரண்டு சொற்களும் உச்சரிப்பில் வேறுபாட்டைத் தந்தாலும் பொருள் ஒன்றாகவே இருக்கும்.

ஆகவே உழற்சிக்குரிய இலக்கணம் தெரிந்த ஒருவரால் சமஸ்க்ருதத்தில் புக்தி என்று உச்சரிக்கப்பட்ட சொல்லின் உண்மை விளக்கமான விழிப்படைந்த அறிவு என்பதை புத்தி என்ற தமிழ்ச் சொல்லிற்கும் பொருள் சொல்ல முடியும். புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல் புத்தியாகியிருக்கலாம்; புத்தி என்ற தமிழ்ச் சொல் புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல்லாயிருக்கலாம்.

இங்கு புத்தி தமிழ்ச் சொல்லா சமஸ்க்ருதச் சொல்லா என்று ஆராய்ந்து கொண்டிருப்பது மாமரத் தோட்டத்திற்கு போய் சுவையான பழத்தை சுவைக்காமல் இலை எத்தனை, வேர் எங்கு போகிறது என்று வீண் ஆராய்ச்சி செய்யும் அறிவாளியின் வேலை;

புத்தி என்ற சொல்லின் விளக்கம் ஒரு யோகசாதகனுக்குப் பயன்படும் விதத்தில் இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி உரையாடுவதை விட்டு விட்டு சொல்பிறப்பியல் ஆராய்ச்சி இங்கு கனியிருக்க இலை எண்ணும் வேலை!

தமிழைப் போற்றுகிறோம் என்று சமஸ்க்ருதத்தை தூற்றுவதும், உணர்ச்சிவசப்படுவதையும் விட தமிழ் இலக்கண மூல நூற்களை முறையாக கற்றால் சொல் எப்படி உருவாகிறது என்ற தெளிவு உண்டாகும்.

தமிழ் மேல் பற்று என்பது தமிழை ஆழமாகக் கற்பது; உணர்ச்சிவசப்பட்டு போற்றுவதும் சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதும் அல்ல! எல்லா மொழிகளும் அழகானவை! அந்த அழகை இரசித்து எமது அகத்தை செம்மைப்படுத்த வேண்டும்!

பற்று, கடும் பற்று, உணர்ச்சிகள் இவை உள்ளதை உள்ளபடி பார்க்கவிடாது! மனதை குழப்பி அறிவைத் தடுக்கும்; அறிவை வேண்டுபவர் தெளிந்த, திறந்த மனதுடன் இருக்க வேண்டும்; எந்தப் பற்றுக்களிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது! எமது அறிவிற்கு விருந்து தமிழிலும் உண்டு, சமஸ்க்ருதத்திலும் உண்டு, ஆங்கிலத்திலும் உண்டு! மொழி அறிவைக் காவும் ஊடகம்! மொழியைப் பயன்படுத்தி நாம் எமக்குள் அறிவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ஓடத்தில் பயணிப்பதை இரசிக்காமல் ஓடத்தை தலையில் ஏற்றினால் வீண் சுமை தான்!


Wednesday, July 08, 2020

சிவனிருக்கும் அக்ஷரம்

சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம்

உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்

கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை

உபாயம்இட் டழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.

சிவவாக்கியர் - 73

சிவாய என்ற சக்தி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் சிவனிருக்கும் மந்திரம், வாசியை நுண்மையாக்கி சிவமாக்கும் உபாயத்தினை நிச்சயமாகத் தரும் என்று நம்புவதற்குரிய உண்மையான மந்திரம், கபாடம் என்ற கதவு இல்லாமல் சகஸ்ராரத்தை கடந்து சென்று வரும் ஊர்த்துவகதிப் பிராணனை தந்திரமாக அதன் தொடக்கப்புள்ளியிலிருந்து அழைக்கும் ஐந்தெழுத்து சிவாய நம என்ற சக்தி சூக்ஷ்ம பஞ்சாஷரம். 

அக்ஷரம் என்றால் அழிவற்றது என்று பொருள்! 

சிவயநம என்றால் சிவசூக்ஷ்ம பஞ்சாக்ஷரம்

சிவாயநம என்று "வா" அக்ஷரமாக வந்தால் சக்தி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம்.

இப்படி "ஆ" என்று நெடிலாகி வா என்ற உயிர்மெய்யெழுத்துக்கூடியதால் சக்தி சேர்கிறாள்.

சிவாயநம என்ற சக்தி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் சஹஸ்ராரத்திற்கு மேலே வாசல் இல்லாமல் சென்று வரும் பிராணனை தந்திரமாக எமது சூக்ஷ்ம உடலிற்குள் கொண்டுவரும் ஒரு அரிய மந்திரம் இது என்பதே இந்தப்பாடலில் பொருள்!


Tuesday, July 07, 2020

புத்தி விழிப்பு

தூய அறிவிற்கு புத்தி என்பது சமஸ்க்ருதச் சொல். புத் என்ற அடிச்சொல் விழிப்படைந்த என்ற பொருளைத் தரும். தி - தீ என்பது அறிவு என்று பொருள்! காயத்ரி மந்திரத்தில் தீமஹி என்பதன் பொருள் அறிவு என்பதாகும். 

புத்தி என்றால் விழிப்படைந்த அறிவு என்று பொருள் சொல்லலாம். 

இந்த தூய அறிவு என்பது சலனமுறும் மனதின் தடுமாறிக் கொண்டிருக்கும் எண்ணச் சுழல்களிலிருந்து விடுபட்ட ஏகாக்கிர மனமும்; கொதித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டு தான் பார்க்கும் விஷயங்களை வழு (Bias) இன்றி, முன் துணிபு (Prejudice) இன்றி பார்க்கும் மனதின் ஆற்றல். 

வழமையான மனம் தனது தொடர் பழக்கவழக்கங்கள், உணர்ச்சிகளது அடிமைத் தனங்கள் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டு அந்த அடிப்படையிலேயே தனது பார்வையை (Perception) உருவாக்கிக் கொள்ளும். இப்படியான மனம் உள்ளதை உள்ளபடி பார்க்கும் வல்லமை அற்றதாகும். காரின் முன் கண்ணாடியில் தூசி, அழுக்கு, பனி படிந்தால் ஓடுபவருக்கு வீதியின் ஒழுங்கு தெரியாதது போல் அதிக மனச் சலனம், உணர்ச்சிக் கொந்தளிப்பு உள்ளவர்களது மனது தம்மைச் சூழ நடக்கும் நடைமுறை உண்மைகளை அறிவதில்லை. 

ஆகவே புத்தியை விழிப்படையச் செய்யாமல் நாம் பார்க்கும் பார்வைகள் எதுவும் எமக்கு உண்மையான அறிவினைத் தருவதில்லை. தெளிவில்லாத கண்ணாடியினூடாகப் பார்க்கும் சாரதி முட்டி மோதிக் கொள்வது போல் புத்தி விழிப்படையாமல் வாழ்க்கையை ஓட்ட முனைபவர்கள் விபத்தடைவது நடைபெறுகிறது. 

இப்படி புத்தியை விழிப்படையச் செய்ய எம்மைவிட உயர்ந்த ஒரு பேரறிவுடன் ஒன்றச் செய்வதையே மூவுலகிலும் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்று ஸ்ரீ காயத்ரி மந்திரத்தினூடாக தியானிக்கிறோம்!


சிவவாக்கியர் கூறும் சிவா - வாசி யோக நுணுக்கம்

சங்கிரண்டு தாரை ஒன்று 

சன்னல் பின்னல் ஆகையால்

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை

சங்கிரண்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்

கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

சிவவாக்கியர் பாடல் 21

மூக்குத்துளைகள் இரண்டு, அதிலோடும் மூச்சுத்தாரையோ ஒன்று! ஆனால் இது சன்னல், பின்னல் என்று சிதறி ஓடுவதால் மங்கிப்போகும் மானிடர்கள் எத்தனை? மூக்குத்துளைகள் இரண்டையும் தவிர்த்து ஊர்த்துவமாக மூச்சை ஊத வல்லவராகினால் உமையுடன் உறை சிவத்துடன் நீர் சேர்ந்து வாழும் நிலை வாய்க்கும் என்கிறார். 

மூச்சு பிளவு படாமல் தாரையாக இயங்கினால் அது சிவத்தை நோக்கி ஓடும்! சன்னல் பின்னலாகி மாறி மாறி ஓடினால் உயிர் மங்கிப்போகும் என்கிறார்.

ஏன் மூச்சு சன்னல் பின்னல் ஆகிறது என்பதும், எப்படி மூக்குத்துளை இல்லாமல் மூச்சினை தாரையாக ஊர்த்துவ கதியை அடைவது என்பதும்;

1) குரு உபதேசம்

2) சாதனை - பயிற்சியால் அறிய வேண்டும்!


Sunday, July 05, 2020

சூக்ஷ்மத்தின் பலம்

சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை ஸ்தூலத்தை விட சூக்ஷ்மம் வலிமையானது. ஆகவே நோய்க்கான காரணம் சூக்ஷ்மத்திலிருக்கிறது. அந்த சூக்ஷ்மத்தைப் புரிந்து கொள்ள மனிதனின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை தமது தியான சாதனையால் மனதை நுண்மையாக்கி புரிந்து கொண்டதை மூலதத்துவமாக்கித் தந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். 

மனிதனின் சூக்ஷ்மத்தன்மையினை புரிந்துக் கொள்ள முடியாதவன் பிணி தீர்க்க முடியாது! சித்த ஆயுர்வேதத்தின் ஆழம் ஸ்தூல உடலைத் தாண்டி மனிதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பதில் இருக்கிறது. இன்று நவீன அறிவியல் இதை புரிய கருவிகள் மூலம் முயன்றுக் கொண்டிருக்கிறது. 

இன்று கொரோனோ வைரசைப் பற்றிய கட்டுரை படிக்க நேரிட்டது. ஒரு மனிதன் கொரோனோ positive என்று காண்பிக்க அவனது உடலில் 70 பில்லியன் வைரசுகள் இருக்க வேண்டும். இந்த 70 பில்லியன் வைரசுகளின் நிறை 0.0000005 கிராம், ஆக ஒரு வைரசின் நிறை 0.85 attogram (0.000,000,000,000,000,000,85 gram), தற்போது 03 மில்லியன் மக்களுக்கு நோய் ஏற்படுத்திய மொத்த வைரசுகளின் நிறை 1.5 கிராம் மட்டுமே! 

ஆக 1.5 கிராம் எடை வைரசுகளுக்கு இவ்வளவு பலமா? ஆம் வெளியே ஸ்தூலமான உலகம் மட்டும் தான் உண்மை என்று கற்பனை செய்துக் கொண்டிருக்கும் மனிதனின் அறியாமையால் இத்தகைய நுண்மையான கிருமிகள் பலம் பெறுகிறது என்று கொள்ளலாம். 

ஆகவே இப்படி சூக்ஷ்மமான வைரசு இவ்வளவு தாக்கம் தருமென்றால் அதைவிட சூக்ஷ்மமான உயிரின் - ஆன்மாவின் அளவு பற்றி திருமூலர் இப்படிக் கூறுகிறார்;

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''

(திருமந்திரம், சீவன், பா.2011)

அதாவது ஒரு பசுவின் மயிரினை நூறாகப் பிரித்து (0.001) அதைப் பிறகு ஆயிரமாக பகுத்து (0.000,01), அந்தக் கூறை நூறாயிரம் ஆக்கினால் வரும் அளவு ஆன்மாவின் அளவு என்கிறார். பசுவின் மயிரின் அளவு 0.01 மில்லி மீற்றர் என்றால் உயிரின் அளவு. 0.000,000,000,01 மில்லி மீற்றர்

ஆன்மாவின் அளவு 0.000,000,000,01 மில்லி மீற்றர்

COVIND - 19 இன் அளவு 0.000,000,125 மில்லி மீற்றர்

ஆக COVID - 19 உயிரை விட 12500 மடங்கு பெரியது! 

ஆகவே 80 கிலோ உள்ள ஸ்தூல உடலை மிகச் சூட்சுமமான வரைசுகள் கட்டுப்படுத்தினால் வைரசுகளை கட்டுப்படுத்த அதை விட 12500 மடங்கு நுண்மையான உயிரின் ஆற்றல் பயன்படலாம் அல்லவா? 

ஆகவே சூக்ஷ்மமான உயிரின் ஆற்றலைப் பயன்படுத்த மூலதத்துவமும், மனிதன் என்ற பிண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தத்துவமும் புரிந்திருக்க வேண்டும்! 

{இந்தப்பதிவு சித்தர் பாடல்களில் கற்றறிந்தவற்றை சிந்தித்து ஒப்பிட்டு கருதுகோள்களையே முன்வைக்கிறது; ஆகவே அறிவியல் கதைக்கிறோம் என்று விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் முன்வைக்க வேண்டாம்; ஆக்கப்பூர்வ கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.}


Saturday, July 04, 2020

தலைப்பு இல்லை

குருவின் திருவடிகளை அடைதல் என்பது சலனமற்ற செம்மையான மனதினை அடைதல்! 
மனம் செம்மையாக சாதனை வேண்டும், குருவிற்கு தரும் மரியாதை என்பது ஒவ்வொரு கணமும் எமது மனத்தைச் செம்மையாக்கும் முயற்சியும், குருவின் உபதேச வழி வாழ்தலும்! இதுவே குருவிற்கான மரியாதை! 
குரு தத்துவம் என்பது எம்மைச் செம்மைப்படுத்தும் பாதை! 
குருவிற்கு புற மரியாதை காட்டுதல் என்பது எமது உள்ளன்பைக் காட்டும் செய்கை! இது எமது உயர்ந்த பண்பைக் காட்டும்! ஆனால் எமக்கோ குருவிற்கோ பயன் எதுவும் இல்லை! வெறுமனே உணர்ச்சியளவில் மனம் மகிழ்வாக இருக்கும்! மகிழ்வாக இருந்த மனம் மீண்டும் துன்பப்படுவது என்பது இயற்கை! 
ஆகவே குருவின் புகழ் பாடுதல் என்பது அகத்தில் நாம் குருவிடம் கொள்ளும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் அதே வேளை குரு உபதேச வழி நிற்றல் அதைவிட மேலானது! 
குரு தன்னைப் புகழ்பவனை விட தனது உபதேசப்படி நிற்பவனிற்கே நெருக்கமானவராக இருப்பார்! ஏனென்றால் புகழ்ச்சி என்பது ஆணவத்தை ஏற்படுத்தக் கூடியது! குருவிற்கல்ல, சீடனிற்கு, குருவைப் புகழ்வதால் தான் பயனடைகிறேன் என்ற ஆணவத்தை!

தலைப்பு இல்லை

சுவாமி விவேகானந்தரின் தியானமும் அதன் முறையும் என்ற நூலில் யோக சக்தி பெற்ற மனதின் மூலம் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்பதை தனக்கு பவாஹாரி பாபா என்ற யோகியுடன் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். 

உடம்பால் செய்கின்ற உதவி ஒன்று தான் உதவி என்று நினைக்கின்றாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோக சக்தி பெற்ற ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன? 

- யோகி பவாஹாரி பாபா -


தலைப்பு இல்லை

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று பழமொழி ஒன்று உண்டு!
சந்திரமான மாதத்துடன் (வளர்பிறை, தேய்பிறை) மிளகுக் கற்பம் உண்ணும் முறை சித்தர்களின் கற்ப முறைகளில் ஒன்று! இப்படி மிளகினை உண்பதால் உடலிற்குள் விஷம் ஏறாது பாதுகாக்கலாம்! மிளகை வெறுமனே உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன் அல்ல இது! விஷ பாகம் நீக்கி அம்ருத பாகம் கூட்டி மருந்தாக்கினால் மட்டும்! 
நாக்கில் உறைப்புச் சுவை காட்டி பின்னர் சமிபாடு அடைந்த பின்னரும் உறைப்புச் சுவை (விபாக) செயற்பாடு உள்ளது. 
முத்தோஷங்களில் கபத்தையும், வாதத்தையும் சமனிக்கும்! பித்தத்தைக் கூட்டும். 
கீழேயுள்ள படம் எமது வீட்டில் விளைந்த மிளகு!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...