குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label சூழல். Show all posts
Showing posts with label சூழல். Show all posts

Friday, December 04, 2020

யாழ்ப்பாணத்து வெள்ளமும் சூழலியல் காரணிகளும்

ஊருக்கு ஒரு குளம், கோயில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத்தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில்தான் நாம் இருக்கிறோம். 
கோயில் என்று சொல்லப்படும் சிதம்பரத்திற்குள்ளும் வெள்ளம்! யாழ்ப்பாணத்து நல்லூருக்குள்ளும் வெள்ளம்! 
கோயில் வழிபாடு, பூசை என்று மட்டும் பார்த்ததில் வந்த விளைவு! சுற்றியிருப்பவன் எல்லாம் நிலத்தை அபகரித்து விடுவான் என்று மனம் கெட்டதால் கொங்கிரீட் மதில் எழுப்பியதன் விளைவு! 
ஊரின் தாழ் நிலம் குளமாக்கப்பட்டு முதல் மழை நிரப்பப்படும் விவசாயத்திற்காக! அதைச் சூழ வயல் இருக்கும்! மேட்டு நிலத்தில் குடியிருப்பு இருக்க வேண்டும்! குளம் நிறைந்தால் ஊரைச் சுற்றி இருக்கும் கோயில்களில் உள்ள கேணிகள் நிரம்பி நிலத்தடி நீர் நிரப்பப்படும்! இதற்கு மேல் உள்ள நீர் வாய்க்கால் வழியாக ஆற்றில் கலந்து கடலிற்குச் செல்ல வேண்டும்! 
இப்படி இருந்தால் மக்களுக்குரிய விவசாய, குடி நீர் தேவைத் தன்னிறைவடையும்! 
இன்று யாழ்ப்பாணம் வெள்ளம் என்று கவலைப்படுவதற்குரிய காரணம், யாழ் குடா நாடு என்பது மொத்தமாக நீர் நிலைகளுடன் 1,030 km² பரப்பையுடைய பிரதேசம். மேற்குப் புறமாக தெல்லிப்பழை அதிகபட்சமாக கடல் மட்ட உயரம் 10.5 m, அனேகமான இடம் சமமான நிலமாகவும் தேற்குப்புறமான சாய்வினையும் கொண்ட நிலம். 
மேலே சொன்னபடி யாழ்குடா நாட்டிற்குள் பெய்யும் மழையைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளாக 600 சிறு குட்டைக் குளங்கள் இருப்பதாக ஆசிய வங்கி சூழல் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
அதுதவிர வெள்ளம் நிரம்பினால் கடலுக்குக் கொண்டு போகும் பருவகால ஆறுகளாக தொண்டமானாறும், வழுக்கையாறும் இருக்கிறது. எப்படியிருப்பினும் வன்னி, மன்னார், அனுராதபுரம் பகுதிகள் போல் பெரும் குளங்கள் அமைப்பதற்குரிய நில, மண் அமைப்பினை யாழ்குடா நாடு கொண்டிருக்கவில்லை. 
17 - 18ம் நூற்றாண்டுகளில் டச்சுக்காலத்தில் கால்வாய்கள் சிறுகுளங்களுடன் இணைக்கப்பட்டு செயற்கை தொடர்பெருக்கி (cascade system) யாழ்குடா நாட்டிற்குள் உருவாக்கப்பட்டது! 
பொதுவாக வயலுக்கு நடுவில் குளம் இருக்கும். பெருமழையின் போது ஏந்தப்படும் மழை நீர் இந்தக்கால்வாய் வழியாக முதலில் வயலுக்குள் பாய்ந்து குளத்தை நிரப்பும்; இப்படி நிரம்பும் நீர் குளம் நிரம்பி அடுத்த குளத்தை நிரப்பி மெதுவாக கடல் நீரேரி (Lagoon) நிரம்பி கடலுக்குள் பாயும்! 
1) flood buffers ஆன கேணிகள் இல்லை, மூடப்பட்டுவிட்டன, அல்லது இயற்கையான கேணிகளாக இல்லாமல் கோயில் திருவிழாவிற்கு மோட்டர் போட்டு நிரப்பும் கேணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. கோயில் வெள்ளத்தடுப்புச் செய்ய முடியும் என்ற இயற்கையுடன் இயைந்த அமைப்பாக இல்லாமல் மனிதன் தனக்கு வேண்டியபடி, விருப்பப்படி தீர்த்தமாடும் இடமாக்கி விட்டான் மனிதன். 
2) ஒவ்வொரு காணியும் மதிற்சுவர்களால் பிரிக்கப்படுவதால் மழை வேகமாக தான் செல்ல வேண்டிய கடலை அடையமுடியாமல் தவிர்த்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறது! முன்னர் சீமைகிளுவையும், பூவரசும் வேலியாக நின்றதால் அவை வீட்டிற்குள் புகுவதில்லை!

Tuesday, September 08, 2020

தலைப்பு இல்லை

நாம் பூமியிற்கு வந்திருப்பதோ சிறு விஜயம், ஆகவே நேரத்தை விரயம் செய்யாமல் எம்மையும் எம்மைச் சூழ உள்ளவர்களையும், சூழலையும் இருப்பதை விட மேம்படுத்தப் பாடுபட்டு விட்டு மீளச் செல்வோம்!

Let us strive to make this earth a better place by living in alignment with nature, improving us and empowering those who around us – We visited earth for short time, we'd be gone when the time is ripe so let's not squander even a single minute


Wednesday, August 28, 2019

சூழலைப் பாதுகாப்போம் காடழிப்பைத்தடுப்போம்

Save Amazon Forest! 
இவை தான் இன்றைய மனிதரின் ஆதங்கங்கள்! இது பற்றி நேற்று ஒரு நண்பருடன் உரையாடும் போது நான் கூறிய கருத்தைப் பதிவிக்க விரும்புகிறேன்! 
இந்தக் கருத்துக்களில் ஒரு சூழலியளாளனாக எனக்கு எந்த ஒரு அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை! வெறும் பயமும், சுய நலமும் தான் தெரிகிறது. 
எல்லையற்ற ஆற்றலையும், நுண்ணறிவையும் கொண்ட இந்த இயற்கையை மனிதன் உண்மையில் பாதுகாப்பதாக எண்ணுவது ஒரு மூடத்தனம்! பூமியும் இந்தச் சூழலும் எமது மனிதகுலம் வாழ்வதற்குரிய வாய்ப்பினைத் தந்திருக்கிறது என்பதே உண்மை. 
இயற்கையின் ஒரு அங்கமாக நாம் வாழ்ந்தால் இந்தப் பூமியில் நாம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருப்போம்! இல்லாவிட்டால் பூமி தன்னை மதிக்கும் வேறு ஒரு உயிரினத்தைத் தேர்ந்தெடுத்து தன்னை சமப்படுத்திக் கொள்ளும்!
காடழிப்பிற்கு குரல் கொடுப்பது உண்மையில் காடுகள் அழிந்தால் நாம் அழிந்து விடுவோம் என்ற பயத்தில் தான்! இயற்கை மேல் உள்ள அக்கறை அல்ல! 
காடழிப்பால் வரும் சம நிலையை சரி செய்ய இயற்கை தனக்கே உரிய உயர் நுண்ணறிவுடன் (Higher intelligence) ஒரு இயற்கை நிகழ்வைத் தேர்ந்தெடுக்கும் போது அது மனிதனிற்கு சாதகமாக இருக்காது என்ற பயம்! 
மனித மனத்திற்கு சரியான மனப்பாங்கும் (attitude) பெறுமானமும் (Value) கட்டியெழுப்பப்படாமல் எந்த ஒரு சூழல் பாதுகாப்பும் சாத்தியமில்லை!
பெண்ணும், மண்ணும், நதியும், வனமும், பசுவும் "தாய்" என்று சொல்லிவைத்ததன் நோக்கம் மனிதன் துஷ்பிரயோகம் செய்ய மாட்டான் என்ற மனப்பாங்கினை வளர்ப்பதற்காகத்தான். இவற்றைத் துஷ்பிரயோகம் செய்யும் போது மனித குலம் அழிவினை நோக்கிச் செல்லத் தொடங்கி விடும். 
ஆனால் இன்று இவை எல்லாம் தமது தேவையைத் தீர்க்கவந்த போகப் பொருள் என்ற மனப்பாங்கு வளர்ந்துள்ள நிலையில் சூழல் பாதுகாப்பு என்பது வெறும் தாம் அழிந்து விடுவோம் என்ற பயத்தின் கூச்சலாக மட்டுமே நான் பார்க்கிறேன்!

Sunday, July 07, 2019

தலைப்பு இல்லை

நான் ஒரு சூழலியல் ஆய்வாளனாகவே (Environmental Science Researcher) எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன்! எதையும் நுணுக்கி ஆராய்வதை விட (Reductionist approach) ஒரு பிரச்சனையின் குழப்பத்தையும் (Chaos) அதன் பெரும் படத்தையும் (Big picture), அதன் தொகுதி இயக்கத்தையும் (System Dynamics), அவற்றின் இடைத் தொடர்புகளையும் (Interrelationships), ஒன்றுக் கொன்று இடைச் சார்புநிலை (Interdependence) என்பவற்றை ஆராய்வதே எனக்குப் பிடித்த ஆய்வு முறை! 

இதற்கேற்றால் போல் எனது சிந்தனைக்கு சுதந்திரம் தரும் மேற்பார்வையாளர் அமைந்தார்! 

இந்த ஒளிப்படம் அரிஸ்டாடலின் Synergy concept - Whole is grater than Sum என்ற அடிப்படையில் என்னுடைய ஆய்வினையும் இன்னும் இருசக மாணவர்களது ஆய்வினை இணைத்து உருவாக்கபட்டது! 

https://www.youtube.com/watch?v=YCHseZYzASI&t=1s 

குரல் தந்தது எனது சகோதரன் Thava Sajitharan

Zero Budget இல் இருக்கும் வசதிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உருவாக்கியது! 

நிர்மலகாந்தன், சுஜி, விஷ்ணுவரதன் ஆகிய எனது இளைய அணி நண்பர்கள் களப் பணியில் உதவினார்கள்!


ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...