குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Thursday, November 09, 2023

The teacher is a Role mode or Roll model? ஆசிரியர் என்பவர் முன்மாதிரியான வழிகாட்டியா?அல்லது நடிகரா?

அண்மையில் ஒரு சமூக அக்கறை கொண்ட ஊர்ப் பெரியவர் சமூகத்தில் நடைபெறும் ஒரு பிரச்சனை பற்றி உரையாடி எனது அபிப்பிராயம் வேண்டி வந்திருந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் சமூக நன்மை கருதி பதிவிட எண்ணுகிறேன். 
அவருடைய கேள்வியின் சாராம்சம் " ஒரு ஆசிரியர் தனிமனித ஒழுக்கத்தில் கேடுற்று அதனை தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் பதிவு செய்து, gossip பேசும் சமூகம் அதைப் பரவலாக்கி கேட்டு இன்பமுறும் நிலையில் அந்த ஆசிரியர் எந்தவிதமான சமூகப் பொறுப்பையும் ஏற்கத் தகுதியுடையவரா? இதை நாம் சமூகமாக அங்கீகரிக்க முடியுமா? 
எனது பதில்: 
ஆசிரியத் தொழில் என்பது பண்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் என்ற அடிப்படையில் ஆசிரியர் என்பவர் வகுப்பறையில் பாடத்தை மாத்திரம் வாசித்துவிட்டுச் செல்லாமல் மாணவனின் மனதை நல்வழியில் திசைதிருப்புபவர், மாணவருக்கு ஆதர்சன முன்மாதிரி வழிகாட்டியாக மாணவனின் மனதை உயர்த்துபவர் என்ற அடிப்படையில் - role model என்ற அடிப்படையில் ஆசிரியரின் சுய ஒழுக்கம் அதிமுக்கியமானது. உலகையும், அறிவையும் பண்பையும் மாணவன் ஆசிரியரிடமிருந்தே பெற்றுக்கொள்கிறான். 
மாணவர்கள் மனது பண்பற்ற ஆசிரியர்களின் செயலால் எப்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதற்கு எனது நண்பரின் மகன் ஆரம்ப கல்வியை ஒரு பாடசாலையில் கற்று ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பாடசாலைக்குச் செல்லும் போது சில நாட்களில் அழுகையும், கல்வி மீது வெறுப்பும் காட்டத்தொடங்கினான். ஆராய்ந்து பார்த்ததில் அதுவரை அவன் கற்ற வகுப்பாசிரியர் அன்பு மிகுந்தவர் " வாங்க தங்கம், ஹோம்வேர்க் செய்துவிட்டீகளா செல்லம்" என்று அன்பாகவே நடத்தி வந்திருக்கிறார்; புதிய ஆசியர் மரியாதை இல்லாமல் "இங்கே வாடா, இருடா" என்று சொல்லத்தொடங்கியவுடன் அதிர்ச்சியாகிவிட்டான். 
நான் எனது பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் வகுப்பில் பலர் ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; அவர்களுக்கு personality test வைத்தால் ஆசிரியருக்குரிய உளம், மனப்பண்பு, சேவை எதுவும் இல்லை. ஆனால் இலகுவான வேலை, ஓய்வூதியம், நிறைய லீவு கிடைக்கும் இப்படியான சுய நலத்திற்கு இலகுவான தொழில் என்றவுடன் நான் அதிர்ந்து போனேன். 
ஆசிரியத் தொழில் என்பது எதிர்காலச் சந்ததியை உருவாக்கி நல்ல சமூகத்தை உருவாக்கும் உன்னதமான சேவை; அதிக பணம் உழைப்பதற்கு, ஓய்வெடுப்பதற்கு, சுய விருப்பத்திற்கு இங்கு இடம் இருப்பதில்லை! தியாக வாழ்க்கையே ஆசிரியத்தொழிலின் அடிப்படை! 
ஆனால் இப்போதுள்ள சிக்கல் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் பலர் பொதுவாக roll model - நடிகர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் சுய ஒழுக்கத்திற்கும் தாம் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருதுகிறார்கள்; தாம் இரகசியமாக சமூகம் செய்யகூடாது, அறப்பிறழ்வான செயல்களைச் செய்துவிட்டு மாணவர்கள் அவற்றைச் செய்யும் போது கண்டிக்கிறார்கள்; தற்கால தலைமுறை நுண்ணறிவு மிக்கது; எதிர் கேள்வி கேட்கும் தலைமுறை; தாம் கடைப்பிடிக்காத ஒழுக்கத்தை மாணவர்களுக்கு அழுத்திப் போதிப்பவர்களாக, வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே போட்டு அகத்தில் காம, க்ரோத, மதம், மாச்சர்யங்கள் நிறைந்தவர்களாக, தாம் பரீட்சை எழுதிப் பெற்ற தகுதியால் தம்மை ஆசிரியர்களாக நிலை நிறுத்துகிறார்களே அன்றி தமது அகப்பண்பால், ஒழுக்கத்தால் ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவதில்லை. இது சமூகத்திற்கு கேடானது. 
ஆசிரியர் ஒழுக்கக் குறைவாக இருக்கிறார் என்றால் அதை சரிசெய்யக்கூடிய நிர்வாகப் பொறிமுறை சட்டத்தில் இல்லாத போது சமூகத்திற்குள் அதற்கான பொறிமுறை இருக்க வேண்டும். 
இப்படியான பிரச்சனைகளை எவரையும் அவமானப்படுத்தி மன உளைச்சலை குறித்த நபருக்கோ, அவர் சார்ந்த குடும்பத்திற்கோ ஏற்படுத்துவது நோக்கமாக இல்லாமல் தவறு செய்தவர்களை ஆற்றுப்படுத்தி அதிலிருந்து வெளிவர உதவி செய்ய வேண்டும். 
தவறு செய்தவரை கருணையுடன் அணுகி அந்தத் தவறை மேலும் செய்யாமல் இருக்க அவருக்குத் தேவையான உள ஆலோசனைகளை வழங்க வேண்டும். 
சமூகமாக இப்படிச் சிந்திக்கிறோமா?

Sunday, May 14, 2023

The teacher is a Role mode or Roll model? ஆசிரியர் என்பவர் முன்மாதிரியான வழிகாட்டியா?அல்லது நடிகரா?

அண்மையில் ஒரு சமூக அக்கறை கொண்ட ஊர்ப் பெரியவர் சமூகத்தில் நடைபெறும் ஒரு பிரச்சனை பற்றி உரையாடி எனது அபிப்பிராயம் வேண்டி வந்திருந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் சமூக நன்மை கருதி பதிவிட எண்ணுகிறேன். 
அவருடைய கேள்வியின் சாராம்சம் " ஒரு ஆசிரியர் தனிமனித ஒழுக்கத்தில் கேடுற்று அதனை தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் பதிவு செய்து, gossip பேசும் சமூகம் அதைப் பரவலாக்கி கேட்டு இன்பமுறும் நிலையில் அந்த ஆசிரியர் எந்தவிதமான சமூகப் பொறுப்பையும் ஏற்கத் தகுதியுடையவரா? இதை நாம் சமூகமாக அங்கீகரிக்க முடியுமா? 
எனது பதில்: 
ஆசிரியத் தொழில் என்பது பண்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் என்ற அடிப்படையில் ஆசிரியர் என்பவர் வகுப்பறையில் பாடத்தை மாத்திரம் வாசித்துவிட்டுச் செல்லாமல் மாணவனின் மனதை நல்வழியில் திசைதிருப்புபவர், மாணவருக்கு ஆதர்சன முன்மாதிரி வழிகாட்டியாக மாணவனின் மனதை உயர்த்துபவர் என்ற அடிப்படையில் - role model என்ற அடிப்படையில் ஆசிரியரின் சுய ஒழுக்கம் அதிமுக்கியமானது. உலகையும், அறிவையும் பண்பையும் மாணவன் ஆசிரியரிடமிருந்தே பெற்றுக்கொள்கிறான். 
மாணவர்கள் மனது பண்பற்ற ஆசிரியர்களின் செயலால் எப்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதற்கு எனது நண்பரின் மகன் ஆரம்ப கல்வியை ஒரு பாடசாலையில் கற்று ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பாடசாலைக்குச் செல்லும் போது சில நாட்களில் அழுகையும், கல்வி மீது வெறுப்பும் காட்டத்தொடங்கினான். ஆராய்ந்து பார்த்ததில் அதுவரை அவன் கற்ற வகுப்பாசிரியர் அன்பு மிகுந்தவர் " வாங்க தங்கம், ஹோம்வேர்க் செய்துவிட்டீகளா செல்லம்" என்று அன்பாகவே நடத்தி வந்திருக்கிறார்; புதிய ஆசியர் மரியாதை இல்லாமல் "இங்கே வாடா, இருடா" என்று சொல்லத்தொடங்கியவுடன் அதிர்ச்சியாகிவிட்டான். 
நான் எனது பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் வகுப்பில் பலர் ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; அவர்களுக்கு personality test வைத்தால் ஆசிரியருக்குரிய உளம், மனப்பண்பு, சேவை எதுவும் இல்லை. ஆனால் இலகுவான வேலை, ஓய்வூதியம், நிறைய லீவு கிடைக்கும் இப்படியான சுய நலத்திற்கு இலகுவான தொழில் என்றவுடன் நான் அதிர்ந்து போனேன். 
ஆசிரியத் தொழில் என்பது எதிர்காலச் சந்ததியை உருவாக்கி நல்ல சமூகத்தை உருவாக்கும் உன்னதமான சேவை; அதிக பணம் உழைப்பதற்கு, ஓய்வெடுப்பதற்கு, சுய விருப்பத்திற்கு இங்கு இடம் இருப்பதில்லை! தியாக வாழ்க்கையே ஆசிரியத்தொழிலின் அடிப்படை! 
ஆனால் இப்போதுள்ள சிக்கல் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் பலர் பொதுவாக roll model - நடிகர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் சுய ஒழுக்கத்திற்கும் தாம் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருதுகிறார்கள்; தாம் இரகசியமாக சமூகம் செய்யகூடாது, அறப்பிறழ்வான செயல்களைச் செய்துவிட்டு மாணவர்கள் அவற்றைச் செய்யும் போது கண்டிக்கிறார்கள்; தற்கால தலைமுறை நுண்ணறிவு மிக்கது; எதிர் கேள்வி கேட்கும் தலைமுறை; தாம் கடைப்பிடிக்காத ஒழுக்கத்தை மாணவர்களுக்கு அழுத்திப் போதிப்பவர்களாக, வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே போட்டு அகத்தில் காம, க்ரோத, மதம், மாச்சர்யங்கள் நிறைந்தவர்களாக, தாம் பரீட்சை எழுதிப் பெற்ற தகுதியால் தம்மை ஆசிரியர்களாக நிலை நிறுத்துகிறார்களே அன்றி தமது அகப்பண்பால், ஒழுக்கத்தால் ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவதில்லை. இது சமூகத்திற்கு கேடானது. 
ஆசிரியர் ஒழுக்கக் குறைவாக இருக்கிறார் என்றால் அதை சரிசெய்யக்கூடிய நிர்வாகப் பொறிமுறை சட்டத்தில் இல்லாத போது சமூகத்திற்குள் அதற்கான பொறிமுறை இருக்க வேண்டும். 
இப்படியான பிரச்சனைகளை எவரையும் அவமானப்படுத்தி மன உளைச்சலை குறித்த நபருக்கோ, அவர் சார்ந்த குடும்பத்திற்கோ ஏற்படுத்துவது நோக்கமாக இல்லாமல் தவறு செய்தவர்களை ஆற்றுப்படுத்தி அதிலிருந்து வெளிவர உதவி செய்ய வேண்டும். 
தவறு செய்தவரை கருணையுடன் அணுகி அந்தத் தவறை மேலும் செய்யாமல் இருக்க அவருக்குத் தேவையான உள ஆலோசனைகளை வழங்க வேண்டும். 
சமூகமாக இப்படிச் சிந்திக்கிறோமா?

Sunday, February 10, 2019

தலைப்பு இல்லை

எந்த ஒரு அறிவும், ஞானமும் தூய்மையானதும், ஆரோக்கியமானதும், அனைவருக்கும் நலனைத் தரும் ஆற்றலுள்ளதாகவுமே உண்மை இயல்பில் இருக்கிறது. 

இதை சூழ்ச்சியுள்ள மனம் உடைய மனிதர்கள் தமது அறியாமையால் அதிகாரப்பசிக்காக வளைக்கும் போதும் போலியான மனமாயைகளால் பார்க்கும் போதும் அவை கெட்டுப் போய் விடுகிறது.

முற்காலத்தில் வைத்தியன், வித்தை சொல்லும் ஆசிரியன் எல்லோருக்கும் சமூகத்திற்கு களங்கமற்ற மனதுடன் சேவை செய்ய அரசனால் தேவையான அளவு மானிய நிலம் வழங்கப்பட்டிருந்தது. இந்த மானிய நிலத்தின் விளைச்சலின் வருமானமே அவருக்குரிய செல்வத்தை ஈட்டுமே அன்றி வைத்தியமோ, கல்வியோ வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கவில்லை. ஆசிரியனுக்கும் வைத்தியனுக்கும் தான் செய்யும் சேவையால் இலாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் அந்த சேவையில் நோக்கம் கெட்டுப்போய் விடும் என்ற உண்மை அறிந்ததால் இந்த ஏற்பாடுகள்!

இன்று கல்வியும், மருத்துவமும் வருமானம் ஈட்டும் தொழிலாகிவிட்டதால் கல்வியில் இலாபம் சம்பாதிக்க புதுப்புது உத்திகள், புதுப்புது பட்டங்கள் எல்லாம் உருவாக்கி சிந்தனைத் திறனை மழுங்கடித்து மந்தைக் கூட்டத்தை உருவாக்கும் உலகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. 

மருத்துவத்தில் sales representative என்ற தொழிலே விந்தையானது, நோய் தீர மருத்துவம் என்றால் ஏன் மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும். மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் நோய் கூட வேண்டுமல்லவா? 

வைத்தியோ நாராயணோ ஹரி - வைத்தியன் நாராயண அம்சமான ஹரி என்ற நிலை மாறி இன்றைய வைத்தியனுக்கு நோயாளி இலாபம் சம்பாதிக்கும் கறவை மாடாகிவிட்டான்! 

குரு ப்ரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வரஹ என்ற நிலையில் முற்காலத்தில் குருவே ஒருவனின் முன்னுதாரணம். ஆசிரியனே மாணவனின் தாயும் தந்தையும்! இந்தப் பண்பும் உணர்வும் மாறி நான் காசு கொடுக்கிறேன், நீ படிப்புக் கொடுக்கிறாய், வகுப்பு முடிந்தால் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணம் மாணவனுக்கும், ஆசிரியருக்கோ தனது கை நிரப்பினால் போதும் என்ற மனதையும் உருவாக்கியுள்ளது!


ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...