குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 26, 2023

காலபைரவ தியானம் – 25

 

இந்தப் பாடல் பைரவரின் ஆயுத தியானம்; ஆபத்துதாரண மூர்த்தியின் பிரதான ஆயுதம் தண்டாயுதம்; தண்டாயுதம் என்பது வலிமையான கருங்காலியின் வைரத்திற்கு உச்சியில் உருளையான உலோகப் பூண் பூட்டிய ஒரு ஆயுதம். காவலுக்கு இருக்கும் வீரர்களிடம் இருப்பது; திருடனோ, எதிரியோ வந்தால் ஒரே வீச்சில் அவனது தலையோ, எலும்போ நொருங்குமாறு இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். இந்த தண்டம் வைத்திருப்பவர் அந்த இடத்தின் காவலர் என்றும், அவரது உத்தரவிற்கு பணிய வேண்டும் என்பது அக்காலத்து மரபு! தற்போது ஒரு வட்டத்தின் காவல் ஆய்வாளர் லத்தியுடன், துப்பாக்கியுடன் செல்வது போன்றது.

பைரவர் அனைத்து சிவ ஸக்தி க்ஷேத்திரங்களினதும் பாலகர்; பாதுகாவலர்! சிவசக்தியை வணங்குவதற்கு ஆணவமற்ற மனம் வேண்டும்; எம்மிடமிருக்கும் ஆணவ மலத்தை தனது தண்டத்தால் சுக்கு நூறாக்கி பொடிப்பொடியாக்குவது பைரவரின் தண்டம்!

இங்கு பைரவரின் பெருமை மிகு தண்டாயுதம் தியானிக்கப்படுகிறது.

படிக்குந் தண்டாயுதமென்பார்க்கு

நோய்வினை பற்றறுப்பப்

படிக்குந் தண்டாயுத வெண்ணருங் கோடி ப்ரமாண்டமெல்லாம்

முடிக்குந் தண்டாயுதமு தண்டந்

தாண்டுமுகுந்தன் சென்னி

தடிக்குந் தண்டாயுத நேகாழி

யாபத்துத் தாரணணே

ஆணவ மலம் நீக்கி சிவத்தை சக்தியை நோக்கிச் செல்லும் வழியை உண்டாக்கும் தண்டாயுதம் பைரவரின் தண்டாயுதம்!

நோய்கள் வினைகளை அகற்றும் தண்டாயுதம்

எண்ண முடியாத கோடிக்கணக்கான பிரம்மாவினால் படைக்கப்பட்ட அண்டங்களையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்ற தண்டாயுதம்

சிவனின் முடியைத் தேடிச் சென்ற திருமாலின் அறியாமையை நீக்கிய தண்டாயுதம்,

இந்த தண்டாயுதமுடைய சீர்காழிப் பதியில் உறையும் ஆபத்துத் தாரண பைரவ மூர்த்தியை தியானிக்கிறேன்.

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 12}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...