குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 14, 2020

அறுபது தமிழ் வருடங்களின் கதை என்ன?

ராணி காமிக்ஸ் மாயாவி கதை போல் தொட்டுக்கொள்ளலாம்!
{பிற்குறிப்பு: நான் தொழில்முறை சோதிடன் அல்ல; வானியலும் ஜோதிடமும் எனது கற்கை வானியலில் பெரிய கிரகம் வியாழன், இது ஒரு நாளைக்கு ஐந்து கலைகள் (minutes) நகரும். 
அடுத்த மிகப்பெரிய கிரகம் சனி, இது ராசிச் சுற்றுப்பாதையில் ஒரு நாளைக்கு இரண்டு கலைகளை ((minutes) நகரும். 
இப்போது நாம் இந்த இரண்டு கிரகங்களும் பூச்சிய நிலையில் மேஷ ராசியின் தொடக்கத்தில் நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். 
ஒரு ராசி என்பது வானியலில் 30 பாகைகளைக் கொண்ட கோண அளவு. இந்த 30 பாகை கோண அளவை மேற்கூறிய இரண்டு கோள்களும் கடக்க எடுக்கும் அளவு
வியாழன் - 01 வருடம்
சனி - 2 1/2 வருடங்கள்
பன்னிரெண்டு வருடங்களில் வியாழன் மொத்தமாக 360 பாகை வட்டப்பாதையான ராசி மண்டலத்தை முற்றாக சுற்றி வரும். இது வியாழச் சுற்று எனப்படும். 
சனி ஒரு ராசி மண்டலத்தை 360 பாகைகளை சுற்றி வர 30 வருடங்கள் ஆகிவிடும். இதை சனியின் ஒரு ராசிச் சுற்று எனப்படும். 
12 என்ற இலக்கத்திற்கும் 30 என்ற இலக்கத்திற்குமுரிய Least common multiple number எதுவென்றால் 60, 
இதை வானியலில் சொல்லுவதானால் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் சனியும் வியாழனும் ஒரே இராசியில் அருகருகே நிற்கும். 
அதாவது நீங்கள் பிறந்த போது இருந்த சனியினதும் வியாழனதும் கிரக நிலை உங்கள் 60 வயதில் சரியாக ஒரே போல் வரும். 
இது ஜோதிடத்தில் இன்னொரு பிறப்புப் போன்றது என்பதால் தான் சஷ்டியப்தப் பூர்த்தி செய்யப்படுகிறது. சீன கலாச்சாரத்தில் ஒரு வாழ்கைச் சுற்றை முடித்தவராக கருதப்படுகிறார். 
ஆக அறுபது வருடங்களின் கதை என்பது சனியினதும் வியாழனதும் வானியல் சுற்றுப்பாதை சார்ந்தது. 
இந்த இரண்டு கிரகங்களும் வானியலில் மிகப்பெரிய கிரகங்கள் என்பதும், மனித வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த வானியல் பாதை கணித சூத்திரத்தையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கணித்து ஒவ்வொரு வருடம் எனக்குறித்து சனி - வியாழ விளைவு என்ன நன்மை, பாதிப்பை உலகிற்குத் தரும் என்று பாடல் எழுதி வைத்தார்கள். 
எப்போதும் மனிதர்கள் உண்மைக்கும் அரிதாரம் பூசி மனதின் கற்பனையைப் புகுத்தி ரசிக்கும் வல்லமை உள்ளவர்கள்; அதிலும் குறிப்பாக தமிழர்கள் இரண்டடி உயரம் பாயமுடியாத கிழவனை வானில் சுற்றிப் பறந்து சண்டை புரியும் ஹீரோவாகவும், உண்மையான ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் சாதனை புரிந்து பதக்கம் வென்றவர் யார் என்றும் தெரியாத அறிவாளிகள்! 
ஆகவே எவராவது இட்டுக்கட்டும் ஆபாசக்கதைகளை நம்பிக்கொண்டு வியாக்கியானப்படுத்தும் வல்லமை உள்ளவர்கள். 
அறுபது வருடங்களின் உண்மைக் கதை தெளிந்த வானியல் இயக்கமும், அது மனித வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஜோதிடவியலையும் சார்ந்த ஒன்று! இதைத் தவிர்ந்த வேறு கதைகள் இச்சைகளில் (study passion) ஒன்று}

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...