குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 23, 2020

காயத்ரியும் குண்டலினி யோகமும்

இந்திரியம் அடங்க ---- கரணம் அடங்கும்
கரணம் அடங்க ---- பிராணன் அடங்கும்
பிராணன் அடங்க ---- மூலம் அடங்கும்
மூலம் அடங்க ---- குண்டலினி அடங்கும்
குண்டலினி அடங்க ---- பிந்து அடங்கும்
பிந்து அடங்க ---- பரை அடங்கும்
பரை அடங்க ---- பரிசுத்த பிரம்மம் ஆவார்.
- சைவ சத்குரு சச்சிதானந்த சுவாமிகள்
மேற்கூறிய உபதேசம் ஒரு உயர்ந்த யோகசூத்திரம்; இதன் விளக்கம் வருமாறு;
”இந்திரியம் அந்தக்கரணத்திற்கு உள்ளீடு (Input), பிராணன் அந்தக்கரணத்திற்கு சக்தி (energy) உள்ளீட்டினை நிறுத்தினால் அந்தக்கரணத்தின் சலனம் முதல் நிலையில் குறையும், பிறகு சாதகன் தனது இச்சக்தியும், குருவின் இச்சக்தி துணை கொண்டு கரணத்தை அடக்க, உடல் பிராணன் அடங்கி மூலத்திற்குள் பாய்ந்து ஊர்த்துவமுகமாக ஏற ஆரம்பிக்கும், இப்படி ஏற மறுபடியும் அந்தக்கரணங்களின் (மனதின்) தோற்றமான மூலம் சலனிக்க அதையும் இச்சாக்தி கொண்டு அடக்கி யோகம் செய்ய மூலத்தை சலனிக்கச் செய்யும் மகாபிராணன் குண்டலினி சலனிக்கும்! இதையும் அடக்க புருவமத்தியில் பிந்துவில் மகாபிராணனான குண்டலினி அடங்கும், இதற்கு மேலுள்ளவை அன்னையின்/குருவின் திருவருளால் நடப்பவை, சாதகனின் முயற்சி இல்லை!”

இதை எப்படிச் சாதிப்பது என்பதற்கு காயத்ரி சஹஸ்ர நாமம் வழிகாட்டுக்கிறது. காயத்ரி சஹஸ்ர நாமம் என்பது காயத்ரி சாதகனுக்கு தேவி எப்படி குருவாக இருந்து வழிகாட்டுவாள் என்ற விளக்கமாகவே கொள்ள வேண்டும்,
காயத்ரி அந்தக்கரணத்தைச் சுத்தி செய்யும் அறிவுச் சுடர்; புத்யை (சஹஸ்.நாமா:693) வேதமாதா, பிராணனை ஒழுங்குபடுத்தும் பிராண மாதா; மூலாதாரத்திலுறைபவள் மூலாதாரஸ்தியாயை (சஹஸ்.நாமா:820) மூலாதாரத்திலிருந்து ஊர்த்துவ முக ஏற்றத்தினை சாதகனுக்குத் தருபவள் - ஊர்த்துவோகதி பேதின்யை (சஹஸ்.நாமா:83) குண்டல்ன்யை (சஹஸ்.நாமா:133) தேவியே பிந்து நாத கலாதீதாய (சஹஸ்.நாமா:711) தேவியே பரை - பராயை (சஹஸ்.நாமா:511) தேவியே பரப்பிரம்மம்
ஆக அன்னை காயத்ரியின் நித்திய உபாசனை மேற்கூறிய எல்லவற்றிற்கும் வழிகாட்டும் என்பது பெறப்படுகிறது.
சாதகன் ஒழுங்காக காயத்ரி ஜெபம் குருமுக உபதேசமாகச் செய்து வருவானேயானால் அதுவே பெரும் யோக சாதனை என்பதனை இந்த நாமாக்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

அன்னையே உள்ளிருந்து எமக்கு வழிகாட்டுவாள்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...