குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 28, 2020

சாதகர் அனுபவம்; லகு அனுஷ்டானம், லக்ஷ காயத்ரி ஜெப பூர்த்தி

லகு அனுஷ்டானம் - 27 மாலை அனுபவம்

1.முதலில் நான் எப்படி செய்ய போகிறேன் என்ற கேள்வி என்னுள் இருந்தது ஏதுவாக ஆயினும் குரு மண்டலம் இடம் கூறி விட்டோம் அவர்கள் தம்மை வழி நடத்துவார்கள் என்று இருந்தேன். அதே போல் முதல் வாரம் வேலைக்கு எனக்கு மட்டும் சிஸ்டம் விட்டிற்கு வரவில்லை. ஆகையால் அந்த 1 வீக் 27 மாலை செய்து முடிக்க முடிந்தது. அடுத்த வாரம் வேலை வந்தது அப்பயும் முன் வாரம் 27 மாலை செய்த அனுபவம் இருந்ததால் இந்த வாரம் உம் செய்ய முடிந்தது 🙏 

இதனால் குரு மண்டலம் மீதான நம்பிக்கை மிகவும் வந்தது. அவர்கள் இடத்தில் பிராத்தனை செய்ததால் செய்ய முடிந்தது என்று. 

2. ஆரம்ப காலத்தில் நான் செய்து முடிக்க அதிக நேரம் எடுத்தது. சில நாட்கள் பிறகு நான் வேகமா செய்ய தொடங்கினேன் ஒரு சக்தி என்னை இழுத்து கொண்டு போவது போல் உணர்தேண். அவபொழுது காயத்ரி தேவி, லக்ஷ்மி தேவி, காளி தேவி,ஒளி,கண்ணையா யோகி குரு, காயத்ரி முருகேச குரு,Amirthananda ஸ்வாமிகள் அவர்கள் அனைவரும் ஒரு நாள் காயத்ரி சாதனை செய்யும் பொழுது அவர்கள் உருவம் தோன்றியது.

3. நீங்கள் அனுஷ்டானம் முடியும் நாள் அன்று மாலை 6 மணிக்கு தியானத்தில் உட்காரும் படி கூறினீர்கள் வேலை இருந்ததால் என்னால் தியானத்தில் உட்டகார முடியவில்லை அதனால் அன்று சிறிது ஒரு மாதிரி இருந்தது. 


4. அனுஷ்டானம் முடியும் தருவாயில்  எனக்கு வேலை பளு அதிகமா இருந்தது மனதில் ஒரு விதமான பதற்றம் இருந்தது இருந்தாலும் நாம் எடுத்த சங்கல்பம் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதி உடன் செய்து வந்து ஏப்ரல் 14 தேதி அன்று முடித்தேன் குரு 🙏 இனிமேல்  எபோழுது இந்த மாதிரி 27 மாலை செய்ய போகிறேன் என்ற எண்ணம் தோன்றிய பொழுது கண்களில் நீர் வந்தது 🙏 

5. ஒரு லட்சம் முடிக்க வேண்டும் என்று மன உறுதி உடன் செய்து முடித்தேன். ஆனால் அடுத்த நாள் நானா ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்து உள்ளேன் என்று எனலே நம்ப முடியாமல் இன்றும் இருக்கிறேன். 

மறுபடியும் முதலில் இருந்து தொடங்குவது போல் ஒரு உணர்வு. வார அறிக்கை அனுப்பும் பொழுது ஒரு லட்சம் என்று பார்க்கும் போது இன்றும் பிரமிபாக உள்ளது.

ஆனால் இப்பொழுது ஏதோ நான் காயத்ரி ஜபம் செய்ய வேண்டாம் என்று என்னை தடுத்து நிறுத்துவது போல் உணர்கிறேன். அதையும் தாண்டி மன மிடம் நானே இல்லை செய்ய வேண்டும் என்று கூறி கொண்டு செய்து வருகிறேன். இன்று சில நாட்கள் கழித்து மிகவும் ஆனந்தமாக இருப்பதை உணர்கிறேன் 🙏


*********************************************************************************************************************
வணக்கம் குரு,

ஒரு லட்சம் பூர்த்தி செய்த அனுபவம்
(March 25th 2019 to 26th April 2020)

(இது வரை என் வாழ்வில் ஒன்றை இவளோ நாட்கள் தொடர்ந்து செய்து வந்தது இல்லை 🙏

  நான் அன்றும் உங்களை காண வார நேரம் இல்லை என் என்றால் அன்று எனக்கு வேற ஒரு கிளாஸ் இருந்தது நான் என் மாமாவிடம் கேட்டேன் அவர்களை பார்ப்பது மிகவும் முக்கியமாக என்று அவர்கள் அமாம் என்று கூறினார்கள் சரி என்று தங்களை பார்க்க வந்தேன் அப்பொழுது தங்களின் பேச்சில் இர்க்க பட்டேன் முதல் நாள் பின்பு தங்களின் நம்பரை குரு என்று மொபைலில் சேர்த்து கொண்டேன். அடுத்த நாள் நீங்கள் யாகம் செய்யும் முன் ஒரு லேட்சர் குடுதிர்கள் எப்படி யாகம் செய்ய வேண்டும் என்று அப்பொழுது தங்களின் உடலில் இருந்து ஒரு 2cm ஒரு வெள்ளை ஒளியை கண்டேன் அன்று மிகவும் இர்க்க பட்டேன் இப்படி தான் தொடங்கியது தங்களின் மீது உள்ள காதல் 😁)

1. என்ன நடந்தாலும் காயத்திரி ஜெபத்தை அனைத்து நாட்களும் செய்து வர வேண்டும் என்ற எண்ணம்

2. காயத்ரி தேவி மேல் நம்பிக்கை வந்தது

3. நீங்கள் கூறினால் அதை சிரத்தையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம். 

4. அமைதியாக மூச்சை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம். கண் முடி அமைதியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு

5. மாமிச உணவு ஐபொழுது எல்லாம் உண்பது இல்லை. (From August 2019 to Today - 4 முறை மட்டுமே உண்டு இருப்பேன் அதுவும் நண்பர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது அவர்கள் செய்து விட்டதால் சாப்பிட நேர்ந்தது. இந்த வருடம் முதல் நாள் சாப்பிட்டேன் அவளோ தான்)

6. ஒளி தெரிவதை உணர முடிகிறது சில தருணங்களில்.

7. ஒரு வேளை செய்ய தொடங்கினாள் அதில் முன்பை விட இபொழுது அதிகம் ஈடுபாட்டுடன் செய்கிறேன்.

8. வீட்டில் அம்மா கோவத்தில் ஏதோ கூறினார்கள் என்றால் நானும் அவர்களுக்கு ஏதோ குறி கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது அவ்வாறு கூர வேண்டாம் என்று எண்ணம் தோன்றியது பின்பு அவர்கள் கூறும் கருத்தை ஏற்று அதை சரி செய்ய வேண்டும் அவர்கள் கூறும்படி இனி நடக கூடாது என்ற எண்ணமும் தோன்றியது.

9. நம்மை சுற்றி நடபதை கவனிக்கும் திறன் முன்பை விட இபொழுது வளர்ந்து உள்ளது.

10. குரு மண்டலம் மீது உள்ள நம்பிக்கை மிகவும் அதிகம் ஆகி உள்ளது.

11. சாதனை அல்லது மற்ற தருணங்களில் தேவி உருவம் மனதில் தோன்றும் பொழுது அல்லது ஒருவர் மற்ற நபர்கு உதவி செய்யும் பொழுது,கடவுள் படத்தை பார்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது.அதுவும் சட்டு என்று வருகிறது 🙏 

12. படம் பார்ப்பதில் ஆர்வம் மிகவும் குறைந்து விட்டது. 

13. தேவையில்லாத பேச்சில் போவதில் இடுபாடு இல்லை.

14. மற்றவர்களை காய படுத்தி விட கூடாது என்ற எண்ணம் முன்பே என்னிடம் இருக்கும் இப்பொழுது மிகவும் அதிகமா இருப்பதை எனொட எண்ணம் மற்றும் செய்யலில் உணர முடிகிறது.

14.முன்பை விட இப்பொழுது ஏற்படும் பாதிபில் இருந்து மீண்டு வந்து உள்ளேன்.

15. உடலை பற்றியும் மனதை பற்றியும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் சித்த மருத்துவம் பற்றியும்  ஆர்வம் வந்து உள்ளது.

16. ஆன்மிகத்தில் ஆர்வம் மற்றும் யார் வாழ்க்கையை புதிதாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் உள்ளர்களோ (அதாவது எபோழுதும் கஷ்டமா இருகிரார்களோ அல்லது  வாழ்க்கை மேல் வெறுப்பு உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்களோ) அவர்களிடம்  காயத்ரி சாதனை புத்தகத்தை குடுத்து வருகிறேன். 
என் அப்பாவும் இபொழுது செய்ய தொடங்கி உள்ளார்கள் 😁🙏



இது வரை அம்மா அப்பா தம்பி நான் செய்து வருகிறோம். அதாவது ஒரு குடும்பமாக செய்து வருகிறோம். இது அனைத்து குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி எனது  தோழின் அப்பா இடத்தில் குடுத்தேன் அவர்களும் செய்து வருகிறார்கள் ஆனால் சில நாட்கள் விட்டு விடுகிறார்கள்.இது அனைத்திற்கும் நான் தங்களை சந்தித்து இர்க பட்டதே காரணம்  ஆகையால் தங்களுக்கும் குரு மண்டலத்திற்கு காயத்ரி தேவிகும் நன்றி குரு 🙏

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...