குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 01, 2020

சித்த மருத்துவத்தின் பெயரால் அலப்பறைகள்

1914ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ நூலில் கொரோனாவிற்கு மருந்து சொல்லப்பட்டிருப்பதாக காலையில் ஏப்பிரல் முட்டாள் தினச் செய்தியாக நண்பர்கள் அனுப்பியிருக்கிறார். 

முதலாவது இப்படி ஒரு முட்டாள் தனமாக, சித்த மருத்துவத்தை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும். 

சித்த மருத்துவமும் பாரம்பரியமாக சேகரிக்கப்பட்ட ஒரு அறிவுத்தேக்கம். ஒவ்வொரு காலத்திற்கேற்ற வகையில் அது சீரமைக்கப்பட வேண்டியதும், அறிவை விரிவிக்க வேண்டியது அந்தத் துறை சார்ந்தவர்களின் கடமை. கொரோனா என்பது நவீன வைரோலஜியின் பெயர்ப் பாகுபாடு. 

சித்தர்களை மாயாவிகளாகவும், அற்புதம் செய்பவர்களாகவும் காண்பித்ததில் சில நாவலாசிரியர்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் சித்தர் நூற்களை ஊன்றிப் படிப்பவர்கள் அது மிகப்பெரிய சமூக விமர்சனத் துறை - மூட நம்பிக்கைகளையும், சமூக, அதிகார, ஏமாற்றுக்களையும் சாடிய Critical thinkers ஆகவே அறிவார்கள். 

சித் என்றால் அறிவு, சித்த என்றால் செம்மை (Perfection) என்று அர்த்தம். சித்தர்கள் என்றால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறியைக் கூறியவர்கள் என்று அர்த்தம். 

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறிக்கு மனம், உடல், பிராணன் (மூச்சு) ஆகிய மூன்றினையும் எப்படி செம்மைப்படுத்தி உயர்ந்த வாழ்க்கை வாழ்வது என்பதே சித்தர்களின் நெறி! இதில் உடலிற்கு வரும் பிணியைப் போக்கி ஆரோக்கியமாக இருக்க என்ன வழி என்பதையே மருத்துவம் என்று கூறியிருக்கிறார்கள். 

சித்தர்களைப் பற்றி பேசுபவர்கள் எல்லோரும் ஒழுங்காக ஒரு மூல நூலை, அடிப்படைத்தத்துவதை (Basic philosophy) படித்தவர்களாக இல்லை. எவராவது சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப் பிள்ளைகளே அன்றி ஆராயும் நோக்கில் கேள்வி கேட்டுத் தெளியும் அறிவுமாட்சியும் இல்லை. 

இப்படியில்லாமல் மேற்கத்தேய மருத்துவத்துடன் தம்மைத் தாழ்வுச் சிக்கலுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சில தற்குறிகளின் இப்படியான வேலையால் அந்தத்துறையின் நம்பகத்தன்மை இல்லாமல் போகும். 

ஏற்கனவே சித்த மருத்துவத்தின் அடிப்படை தெரியாமல் சந்தர்ப்பத்தைப் பாவித்து தன்னை பிரபலப்படுத்த ஒருவர் தன்னை சித்த மருத்துவர் என்றும், கொரோனாவிற்கு மருந்து இருக்கிறது என்றும் வீடியோ வெளியிட்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார். 

வைத்தியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று அகத்தியர் வைத்திய காவியத்தில் 

சீர்பெரு வாகடத்தை செய்பவர் குணங்கள் கேளாய்

நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி

யாரையு முடன் பிறப்பா மென்றவை யவன் வல்லானே

பொய்யது பேசானாகப் புகழறிவுடையோனாக

மெய்யது சொல்வோனாக வினங்குகுரு மறவோனாக

தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன தீர்க்கமுண்டாய்

நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே

நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்

ஓதிய பொருள் கடன்னை யுசாவியே யிருப்பானாகில்

தீதிலா னவைக ளுள்ளான் செகமதி லிருக்க மட்டு

மேதினி யதனில்காலன் விதியல்லால் வியாதியுண்டோ

சினவெறி யேறு போலத் திடமுள்ளான் மனதுமுள்ளான்

கனமென வுயிரைக் காக்குங் கருணையான் கதித்தசீரில்

இனமுள்ளா னேத்தமுள்ளா னேற்கையால் தோற்ற முள்ளான்

மனமதில் தயவுள்ளான் வைத்தியனாகு மென்றே (௧௪)

என்று கூறுகிறார். 

மருத்துவ ஒழுக்கத்தின்படி ஒரு மருத்துவர் இப்படி விளப்பரப்படுத்துவதே தவறு! சித்த மருத்துவம் என்றால் நாம் வெறும் கருவிதான், உண்மை மருத்துவன் வைத்தியநாதன் எனும் எம்பெருமான் மட்டுமே! Doctor treat God cures என்ற மனப்பாங்கு இல்லாது நான் குணப்படுத்துகிறேன்! நான் குணப்படுத்துகிறேன் என்பது வெறுமனே ஆணவம் அன்றி வேறொன்றுமில்லை! 

மேலும் வைத்தியர் என்பவர் தன்னை நாடி வருபவர்களுக்கு பிணி தீர்ப்பவரே அன்றி தன்னை நாடி வர விளம்பரம் செய்து பிணி தீர்ப்பவர் அல்ல!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...