நவீன மண் அறிவியல் (Soil Science) மண்ணின் தரம், வளம் பற்றிய காரணிகளை இரசாயனவியல் சார்ந்தே நிர்ணயிக்கிறது. இது பெரும்பொய்யன் (அவரது பெயர் Justus von Liebig, அவரது கடைசிப்பெயரை தனித்தமிழ் பற்றாளர்களுக்கு மொழிபெயர்த்தால் பெரும்பொய்யன் என்று தான் வருகிறது !) என்ற அறிவியலாளரின் விவசாய இரசாயனவியலில் (Agriculture chemistry) உருவாக்கப்பட்ட கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் காட்டின் உற்பத்தியும் மண்ணின் வளமும் எப்போதும் குன்றுவதில்லையே!! உற்பத்தித்திறன் குறைவதில்லையே!! மண்வளம் குன்றுவதில்லையே! எப்படி இது சாத்தியமாகிறது? என்ற ஆய்வு சென்ற நூற்றாண்டின் கடைசியில் சூழலியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போது காட்டின் மண் உக்கல் (Humus) எனப்படும் படையின் மூலம் மண்ணிற்கு உயிரூட்டி மண்ணின் வளத்தை சம நிலையில் வைத்திருக்கிறது என்பது அறியப்பட்டது. இது விவசாயத்தில் பெரிதும் உபயோகப்படக்கூடிய ஒன்று. இந்தப்படையை மண் சேதனப் பதார்த்தம் (Soil Organic Matter - SOM) என்று கூறுவார்கள்.
இந்த SOM நிலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை Brady, N.C., and R.R. Weil. 2002 என்ற அறிவியலாளர்கள் பாய்வு வரைபடம் (Flowchart) மூலம் விளக்கப்படுத்தியுள்ளார்கள்.
உக்கும் பொருட்களை மண்ணிற்கு இடும் போது முதல் நிலையில் அது மண்ணை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைக் கூட்டுகிறது, மண்ணில் நுண் துளைகளை உருவாக்கி நீர்க் கொள்ளளவை அதிகரிக்கிறது, மண்வாழ் உயிரினங்களுக்கு நல்ல உணவு வழங்குகிறது. இதை கீழே தமிழ் படுத்தியிருக்கிறேன்.
அடுத்த கட்ட இரண்டாவது நிலை நன்மைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும்...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.