குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 28, 2020

சாதகர் அனுபவம்: அனுஷ்டானம் -லக்ஷப்பூர்த்தி

கீழ்வரும் சாதனா அனுபவம் குருமண்டலத்திடம் சாதனை பயின்ற ஒரு சாதகர் தனது காயத்ரி அனுஷ்டானத்தின் அனுபவத்தை எழுதி அனுப்பியுள்ளார். மற்ற சாதகர்களுக்கு ஒரு உத்வேகமாக இருப்பதற்காக இங்கு வெளியிடுகிறோம். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்

*************************************************************************

இந்த முறை வசந்த நவராத்திரி காயத்ரி அனுஷ்டானம் Lockdown Period இல் சரியாக  March 24,,2020 (செவ்வாய் கிழமை ) அன்று  மாலை  10 மாலை அகத்தியர் மூல குரு மந்திரத்துடன் ஆரம்பித்தது. குரு ஏற்கனவேய குழுவில் இந்த காயத்ரி லகு அனுஷ்டானத்தை முடிந்த அளவு அனைவரும் பயன்படுத்திக்கொள்ள சொல்லி இருந்தார்.

நான் எனது இச்சா சக்தியை   என்னுடைய அனுஷ்டான நோக்கங்களை நிறைவேற   எனது இலக்குகளை நிர்ணயிய்துகொண்டு உறுதியுடன் அந்த இலக்குகளை நோக்கி பயணிக்க Lockdown  எவ்வளவு நாள் நீடிக்க்கீறதோ அத்தனை நாட்களும் தினமும் 27 மாலை காயத்ரி சாதனை செய்யவேண்டும் என்று குருமண்டலத்தையும், மூலகுரு அகஸ்தியரையும், காயத்ரி தேவியையும் வேண்டி எனது அனுஷ்டானத்தை தொடங்கினேன்.

உண்மையில் எனது சங்கல்பம் மலைப்பாக தான் இருந்தது. ஆனால் எனது இச்சா சக்தி உன்னால் முடியும் என்று சொன்னது  .

Lock down முதல் ஸ்டேஜ்  April 14,2020 வரை அறிவித்து இருந்தார்கள். முதலில் மனம் பல கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தது. உன்னால் முடியுமா ? 9 நாட்கள் அனுஸ்டானமே முதலில் கடினம் ? எப்படி   21 நாட்கள் (stage 1) முடியும் வரை இந்த சாதனையை தொடரமுடியும். மேலும் வீட்டில் அனைவரும் இருந்தனர். சாதனை செய்யும் பொழுது பலவித தடங்கல் வரும் கட்டாயம் 21 நாட்கள் சாதனையை முடிப்பதே கடினம்  என மனது கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது   .Work From Home  என்றுதான் பெயர். ஆனால் ஒரு நாளைக்கு எனது வேலை 12 மணிநேரம் வேறு  மறுபுறம் நீண்டு கொண்டிருந்தது . இரவு பகல் என எப்பொழுதும் நேரம் பார்க்காமல் பல Office telephones calls வேறு வரும் சூழல்.
மனதை முதலில் 9 நாள் அனுஷ்டானத்தை எந்தவித தடங்கலும் இன்றி நிறைவேற்றலாம் பிறகு  பார்த்துக்கொள்ளலாம் என்று அனுஷ்டானத்தை தொடங்கினேன்.
தினமும் அதி காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு அனுஷ்டானத்தை மிகச்சரியாக 4:30 தொடங்கினேன். எப்பொழுதும் என்னுடைய சாதனையின் பொழுது காயத்ரி தேவியின் பஞ்சமுக படமும் , மூலகுரு அகஸ்தியர் படமும் , கண்ணைய யோகி குருவின் படமும், காயத்ரி சித்த முருகேச குருவின் படங்களின்  முன்னாள் மெல்லிய விளக்கு ஒளியில் சாதனை செய்வது வழக்கம் . மேலும் நான் சாதனையை கண்ணை மூடிக்கொண்டு புருவ மத்தியை பார்த்து செய்வது வழக்கம்
 முதல்நாள் அனுஷ்டானம் (25 Mar 2020)  முடிக்க 5.30 மணிநேரம் ஆனது. உடல் வலித்தது , முதுகு வலித்தது, கால்கள் மரத்து போனது  மனம் . ஆனால் ஓரளவு அமைதியுடன் இருந்தது. ஆனால் 27 மாலை எப்பொழுது முடியும் என மனம் பரபரத்துகொண்டே இருந்தது. இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் இதே மனநிலையுடன் சாதனை தொடர்ந்தது.

3 வது நாள் காலையில் சாதனை முடிந்தவுடன் ஒரு போன். எனது மாமா  பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார். சுயநினைவு சரியாக இல்லை. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாகவேண்டும் என்று. எல்லா ஆஸ்பத்திரியிலியும் கொரோன காரணமாக எந்தவித நோயாளிகளையும் அனுமதிக்காத சூழல். Lockdown என்பதால் CAR ஓட்ட கூட அனுமதியில்லை. மேலும் ஆம்புலன்ஸ் வேறு கிடைக்கவில்லை. எனது மாமா இருந்தது ஒரு 20 KM தொலைவில். CAR ஓட்ட தெரிந்த ஒரே நபர் நான் மட்டும்தான். குருமண்டலத்தையும் , ஈஸ்வர பட்ட குருவையும் மனதார வேண்டிக்கொண்டு எனது CAR ஐ எடுத்துக்கொண்டு அவரை காப்பாற்றிட வேண்டும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன்

அரசு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி கொண்டு இருந்தது அங்கு  செல்வதில் உள்ள கடினம் என்னவென்றால் சிறிது காய்ச்சல் அவருக்கு இருந்தாலும் கொரோன வார்டில் போட்டு விடுவார்கள் ஏற்கனவேய அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் இரத்த அழுத்தம் வேறு.. மிகப்பெரிய டாக்டர்கள் கூட நோயாளிகளை பார்க்க வர இயலாத சூழல்
வழியில் பலத்தடைகளை தாண்டி அவரை அவசரமாக அழைத்து கொண்டு  ஒரு Private Multi Specialty ஆஸ்பத்திரியை அடைந்தேன். அங்கு முதலில் அவரை அனுமதிக்க மறுத்தனர். அவர் நிலைமை வேறு மோசமாகி கொண்டு இருந்தது. எவ்ளவு சொல்லியும் கேட்காமல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறிக்கொண்டே இருந்தனர். யாராக இருந்தாலும் நாங்கள் இங்கு ADMIT செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டனர்

நேரம் இவ்வாறு கடந்து கொண்ட நிலையில் திடீரென ஒரு எண்ணம் உதித்தது. எனது மாமா கடந்த 7 வருடங்களாக  தனது சிறுநீரக சிகிச்சைக்கு அதே மருத்துவமனைக்கு தான் சென்றுகொண்டு இருந்தார். எனவேய அவருக்கு எப்பொழுதும் சிகிச்சை தரும் உயர் மருத்துவர் அனுமதி அளித்தால் அவரை ஒருவேளை அனுமதிப்பார்கள் எனவேய அவர் பெயரை சொல்லி அவரிடம் பேசிப்பார் என்று தோன்றியது. அந்த கடினமான சூழலில் அந்த எண்ணம் தோன்ற காரணம் கட்டாயம் காயத்ரி தேவிதான்.

அவருடன் பேசியவுடன் அவர் சொன்னார் அவர் வீட்டிற்கு யாரும் வெளிநாடுகளில் இருந்து வராமல் இருந்தால் அவருக்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தால் அவரை நான் இங்கு ADMIT செய்ய சிபாரிசு செய்கிறேன் (With Exception). ஒருவேளை இதில் எதாவது ஒன்று உண்மை என்றால் கட்டாயம் அனுமதி கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் But  நீங்கள் இதில் எந்தவித பொய் சொன்னால் கூட பாதிப்பு அனைவருக்குமே ஏன் என்றால்  கொரோன அப்படிப்பட்டது என்று சொன்னார்.

நான் இரண்டும் இல்லை என்று உறுதி  செய்த பிறகு (நம்பிக்கை தான் ). அவரை EMERGENCY Ward இல் ADMIT  செய்தனர். அவர்கள் டெஸ்ட் எடுத்து காய்ச்சல் இல்லை என்று உறுதி படுத்தி, பிறகு பிளட் டெஸ்ட் செய்து CCU vil அனுமதித்தனர். ஒரு 6 மணி நேரம் கழித்து அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் இன்னும் CCU மூன்று நாட்கள் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான்தான் அவருக்கு அட்டெண்டர்(His son and daughter unable to come due to un availability of buses , absence of rental cars from home town)  .

அவரது மகளுக்கும் மகனுக்கும்  தகவல் சொல்லி இனி பயப்பட ஒன்றும் இல்லை என கூறிவிட்டு இரவு முழுவதும் HOSPITAL இருந்தேன். மறுநாள் காலை எப்படி காயத்ரி அனுஷ்டானம் செய்யமுடியம் என்பதை பற்றி சிந்தித்து கொண்டே சரியான தூக்கம் இல்லாமல் இரவு இருந்தேன். அபாயகட்டத்தை தாண்டி நன்றாக உள்ளார் என டாக்டர்கள் சொல்லிவிட்டனர். காலை 8 மணியளவில் அவரது மகள் ஊரிலிருந்து வந்துவிட்டார். இதன் பிறகு தான் இனி பார்த்துக்கொள்வதாக கூறவே நான் 10 மணி அளவில் வீடு திரும்பினேன்.

தூக்கம் இல்லாததால் உடல் தூங்க கெஞ்சியது. மனைவி மற்றும் மகனிடம் அடுத்த 4மணிநேரம் என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என கூறிவிட்டு நான் எனது தனி  ரூமிற்க்கு சென்று படுத்தேன். ஒரு நொடி எனது காயத்ரி லகு அனுஸ்டான சங்கல்பம் நினைவிற்கு வந்தது.உள்ளிருந்து ஒரு குரல்” எழுந்து குளித்துவிட்டு சாதனையில் உட்க்கார் என்று. எதைப்பற்றியும் யோசிக்காமல் குளித்து விட்டு குருமண்டலத்திற்கும் காயத்ரி தேவிக்கும் எனது மாமாவை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டு 4 வது  நாள் சாதனைக்கு  சுமார் காலை  10:30 மணி அளவில் அமர்ந்தேன்  .

பிறகு என்ன நடந்தது எப்படி நடந்தது தெரியவில்லை. 27  மாலை காயத்ரி யுடன்  சாதனை  முடித்துவிட்டு கண் திறந்தேன் . மணி நண்பகல் 1:30 ஆகி இருந்தது. அந்த 3 மணிநேரம் 3 நிமிடங்களாக கடந்தது போன்று உணர்வு.. சரியாக சாதனை முடிந்தவுடன் எனது மகன் அறைக்கதவை தட்டி சாப்பிட வரசொன்னான்.

பிறகு அடுத்த நாளில் இருந்து இருந்து 5th day to 8 th day. சாதனை வழக்கம் போல் அதிகாலை 4:30 மணியில் தொடங்கிவிடும்.

சிலநாட்கள்
1.      4.5 மணிநேரம் 4 நிமிடங்கள் முடிந்தது போல் இருக்கும். சாதனை முழுவதும் உணர்வில்லாமல் சலனம் இல்லாமல் இருப்பேன் சாதனையின் போது என்ன நடந்தது என்றேய் தெரியாது. அன்று முழுவதும் மனம் மிக அமைதியாக இருக்கும்.
சில நாட்கள் பல புதிய அனுபவங்கள் .
1.      என்னுடைய பூத உடல்  லேசாக இருப்பது போன்று உணர்வு  பிறகு என்னுடைய சூட்சும உருவத்தில் வானில் பள்ளத்தாக்குகளில் பறந்ததை போல உணர்வுகள்
2.      நான் அமர்நாத் கோவிலுக்கு சென்று அந்த இடத்தை  நேரில் பார்த்து தரிசனம் செய்தது போன்ற காட்சிகள்.
3.      இருட்டு ஒளிவெள்ளம் மாறிமாறி மஞ்சள் பச்சை வெண்மை என்ற ஒளிவெள்ளம் சூழலில் சிக்கி தவித்த உணர்வு.
4.      கண்களில் மின்னலை போன்று ஒளி பட்டு தெறித்து சிதறிய நிகழ்வுகள்
5.      சாதனையின் போது ஒவொரு 20 நிமிடத்திற்கும் உடல் முழுவதும் மின்சாரம் பாயும் உணர்வுகள்
6.      சில விசித்திர உருவங்கள் பிராணிகளை (இதற்கு முன் பார்த்திராத உருவங்கள்) பார்த்த காட்சிகள் அந்த உருவங்களை எப்படி சொல்வதென்று விளக்குவதென்று தெரியவில்லை
7.       பிறகு கண்ணைய யோகி குரு என்னை பார்த்து கண்சிமிட்டிய கைவிரல் அசைத்த  நிகழ்வுகள்
 அன்று முழுவதும் மனம் மிக உற்சாகமாக  இருக்கும்.

இந்த அனுபவங்கள் அனைத்தையும்  குருவிடம் சாதனையின் நடுவில் பகிர்ந்து கொண்டிருதேன். April 1 ,2020 அன்று மேற்க்கூறிய எனது அனுபவங்களை கேட்டு குரு என்னிடம் பேசினார்.

1.      எனது மனதில் விகற்ப ஆற்றல் உள்ளதாகவும் அதனை ஒருமுக படுத்த பழக வேண்டும் என்று அறிவுறுத்தினார்
2.      மேலும் சித்த சாதனையின் குணங்கள் மற்றும் பண்புகள் உங்களுள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை கூர்ந்து கவனியுங்கள் என்றும் கூறினார்।
3.      உங்களுடைய மேற்கூறிய அனுபவங்கள் அனைத்தும் மாயை அல்ல எனினும் உங்களுடைய சாதனையின் முன்னேற்றத்தை அவை தடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
4.      மேலும் நீங்கள் தேவை இல்லாத முன்ஜென்ம நினைவுகளை அவசியமில்லாத விடயங்களை தெரிந்து கொள்வீர்கள். இவை உங்களுடைய சாதனையின் பாதையில் இருந்து உங்களை  விலகி போக செய்யும்.

உங்களுடைய முக்கிய நோக்கம் சித்த சாதனையின் பண்பு மற்றும் குண மாற்றங்கள். எனவேய இவைகளில் இருந்த்து விலகி சாதனையை மட்டுமே Focus செய்யுங்கள் என்று கூறினார் . மேலும் என்னிடம் நீங்கள் எவ்வாறு சாதனை செய்கிறீர்கள் என்று கேட்டார் ?

கண்ணை மூடிக்கொண்டு செய்கிறேன் என்று சொன்னதற்கு இனிமேல் நீங்கள் கண்ணை மூடாமல் காயத்ரி தேவியின் பஞ்சமுக உருவங்களையும் ஆதங்களையும் பார்த்து சாதனை செய்ய நாளையில் இருந்து பழகுங்கள் பிறகு  அதன் அனுபவங்களை பற்றி பேசலாம் என்று வழிகாட்டினார்

பிறகு 9 வது நாளிலிருந்து எனது சாதனை பின் வருமாறு மாறியது. பஞ்ச முக காயத்ரியின் உருவப்படத்தை பார்த்தும் குருமார்களின் உருவங்களை பார்த்தும் சாதனை செய்ய ஆரம்பித்தேன்

1.      குருமண்டல நாமாவளி – 1 சுற்று
2.      அகஸ்தியர் மூல குரு மந்திரம் – 1 மாலை
3.      லகு அனுஸ்டான சங்கல்பம் - 1 முறை
4.      காயத்ரி மந்திர ஜபம் – 27 மாலை
o   காயத்ரியின் பஞ்ச முகங்கள்  - 5 மாலை
o   காயத்ரி தேவியின் பாதம் – 1 மாலை
o   காயத்ரி தேவியின் 10 கைகள்( வரம், அபயம், ஆயுதங்கள்) – 10 மாலை
o   காயத்ரி தேவியின் முழு உருவம் – 2 மாலை
o   காயத்ரி சித்த முருகேசகுரு உருவப்படம் பார்த்து – 3 மாலை
o   கண்ணைய யோகி குரு உருவப்படம் பார்த்து – 3 மாலை
o   மூல குரு அகத்தியர் உருவப்படம் பார்த்து -3 மாலை
5.      காயத்ரி சித்த சாதனை – 3 முறை
6.      அருளோடு செல்வம் ஞானம் பிரார்த்தனை -3 முறை
7.      மேற்கூறிய  அனைத்தும் முடிந்த பிறகு
·        உடலின்  சக்கர இதழ்களை கொண்டு காயத்ரி தியானம் – 1 மாலை
·        காயத்ரி யின் 28  அட்சரங்களுக்கு உரிய – 28 உடல் பாகங்களுக்கு ஒளி பாய்வதை போல் பாவனை/ தியானம்
·        முக்த வித்ரும பஞ்சமுக தியானம் – 2 முறை

இன்றுடன் எனது 35 வது நாள்  சாதனை முடிந்தது இந்த வசந்த நவராத்திரி லகு அனுஷ்டானத்தில் மட்டும் 100,000(1 லட்சம்) காயத்ரி மந்திரத்தை முடித்துள்ளேன்

 என்னுடைய மாற்றங்கள்
1.      இச்சாசக்தி
·        இச்சா சக்தி யின் உண்மையை மேன்மையை உணர்ந்து அனுபவிக்க முடிந்தது
·        மனது எவ்ளவோ மறுத்தாலும் உங்களுடைய மனதை அடக்கி சாதனையை செய்ய தொடங்கினால் ,எந்தவித தடங்கலும் இல்லாமல் உங்களுடைய சாதனை தொடரும். பிறகு சாதனையே உங்களை வழி நடத்தி உங்களுடைய சாதனையை தடங்கல் இல்லாமல் பார்த்து கொள்ளும்.
·        சாதனைக்கு சிறு தடங்களோ, சாதனையின் போது குடும்பத்தினரின் குறுக்கீடுகளோ, சாதனையின் போது ஒரு ஆபீஸ் போன் கால்களோ கூட குறுக்கிடவில்லை
2.      ஒழுங்குமுறை நேர மேலாண்மை
·        தினமும் இந்த 35 நாட்களும் மாலை 6 மணிக்கு பிறகு, தடங்கல் இல்லாமல் ஸ்ரீவித்யா சாதனை செய்ய முடிந்தது
·        24 மணி - நேர மேலாண்மையில் பின்வரும் நேர்த்தியான ஒழுங்குமுறை வந்தது
o   6 மணி நேரம் சாதனை,  (காலை & மாலை)
o   8 மணி நேரம் ஆபீஸ் வேலை,  
o   3 மணி நேரம்  புத்தகங்கள் வாசிப்பு,
o   1 மணி நேர மதிய ஓய்வு
o   6 மணி நேர கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கம்
·        தினமும் அதிகாலை 4 மணிக்கு எந்தவித அலாரமும் இல்லாமல் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது

3.      எண்ணங்கள்
·        சாதனையின் போது எண்ணங்கள் எவ்வாறு வருகின்றது, அதன் மூலம் என்ன,  ஏன் வருகிறது என்பதை பற்றி ஆராய முடிந்தது.
a. பெரும்பாலான(80%) - என்னுடைய எண்ணங்களுக்கு காரணம் அன்றாட நடக்கும் ஆபீஸ் நிகழ்வுகள் , மற்றும் என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய செயலினால் பேசுவதால் வரும் எண்ணங்கள்.
b.சில எண்ணங்களின் (20 %) - மூலத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.. அது ஏன் வந்தது என ஆராய்ந்த போது சித்தத்தின் பதிவுகளில் இருந்த வாசனைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது
c. சாதனையின் போது உருவாகும் எண்ணங்களை (எரியும்  அக்னியில் நெய்யில்  தோய்த்த  சமித்து போட்டு எரிப்பது மாதிரி) எனது எண்ணங்களின் மூலத்தை பிராணனுடன் கலந்து நெற்றிக்கு மையத்தில் அக்னி குண்டம் எரிவதாக பாவித்து அந்த எண்ணங்களை சமித்து போல் குருவை நினைத்து எரித்ததாக பாவித்து சாதனை செய்ததால் அந்த எண்ணங்கள் மீண்டும் உருவாக வில்லை.
d.அந்த நிலைகளில் மனம் சலனமற்று நீண்ட நேரம் விழிப்புணர்வுடன் உணர்வில்லாமல் இருந்தது.
e. அதை மீறி சில சமயங்களில்  உருவாகும் எண்ணங்கள் சித்தத்தில் இருந்த்து உருவாகின்றது என்பதை உணர முடிந்தது ।பிறகு சித்தத்தை முழுவதுமாக லாக் செய்வது மாதிரி பாவித்ததால் அந்த எண்ணம் மீண்டும் உருவாக முடியாமல் அங்கேயே மறைவதை உணர முடிந்தது இதன் பேர்தான் சித்த விருத்தி நிரோதம் என்று சித்தம் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.
f.  எண்ணங்கள் உருவாகும் விதத்தை  அதன்  இயல்புகளை மிக நெருக்கத்தில் இருந்து ஆராய்ய முடிந்தது.
g.எண்ணங்களின் தாக்கம் மனதில் இருந்தும்  சித்தத்தில்  இருந்தும் குறைந்தால், மனது  சலனப்படாமல் இருந்ததால்   சாதனை செய்யும் கால அளவு வெகுவாக குறைந்தது ( Reduced from 4.5- 5 hours to 3-3.5 Hours)

உடல் மாற்றங்கள்
·        சித்த லகு அனுஷ்டானம் ஆரம்பிக்கும் முன்  இருந்த சாதனை ஆரம்பிக்கும் போது இருந்த உடல்வலியோ கால் மரத்து போவது  போன்ற உடல் வலிகள் மறைந்துவிட்டன
·        முதுகுதண்டினை  நேராக  நீண்ட நேரம் வைக்கும் முயற்சிகள் வெற்றிபெற்றன
·        நீண்ட சாதனையின் போது இயற்க்கை உபாதைகளை வெளியேற்றும் நிகழ்வுகளோ உடல் சோர்ந்து போனதுமாதிரி நிலைகளோ வரவில்லை
·        பிராணன் அதிகம் இருந்ததால் அவ்வளவாக பசிக்கவில்லை . ஒருநாளைக்கு சிறந்த மதிய உணவும், இரவு இலகுவான எளிய உணவுகளோடு (பால் வாழைப்பழம் )உடல் திருப்தி பெற்றது.
·        எந்த வித உடல் உபாதைகளும் ஜீரண கோளாறுகளும் வரவில்லை.
·        முகம் மிக பொலிவுடன் காணப்பட்டது .சோம்பல் ,விடயங்களை தள்ளிப்போடும்  உணர்வுகள் வரவே இல்லை.

பண்பு மாற்றங்கள் 
·        எண்ணங்களின்   இயல்பு கடந்த  காலம் மற்றும் எதிர்காலம் ஆகிவைதான் என்பதை உணரமுடிந்ததால் மனதை நிகழ்காலத்திலே  வைத்துக்கொள்ள  முடிந்தது.  மூச்சு போக்கினை கவனித்ததில் மனது நிகழ் காலத்திலே இருந்தது. எண்ணங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்தது
·        கோபம் சுயநலம் ஆணவம் பகை போன்ற உணர்வுகள் உருவாகவில்லை
·        மிக சிறந்த  ஆன்மிக புத்தகங்களை படித்ததால் அதை மனது அசைபோட்டு கொண்டு இருந்தது ஏன் நல்லவற்றை பற்றிஎஹ் எண்ணவேண்டும் என்ற உண்மை புரிந்தது 
·        சந்தோஷங்களையும்  துன்பங்களும் ஒரேய மாதிரியாக பார்க்க  முடிந்தது மனதின் உடலின் பரபரப்பு குறைந்தது நடப்பதை காட்சிப்பொருளாக பார்த்து அதனை ரெபிளெக்ட் செயும்ம்  தன்மை அதிகரித்தது.
·        வெட்டி பேச்சு வீண்கதை போன்றவைகளுக்கு இடமே இல்லாமல் நாட்கள் சென்றது
·        தைரியமும் தன நம்பிக்கையும் அதிகரித்தது
·        ஏதன் மேலும் பற்றில்லாமல் அதே சமயம் பற்றுஅற்று இருக்கும் தன்மை உருவானது  . 
The Things I can use are only for my convenient,  but me never gonna have association and those Belongs to me , With and without also my mind have same kind of feelings ..these kind of thoughts were started to flow
·        Conflict handling became very efficient.
·        Never hurted any in these days.
·        Happily able to accept criticism about me without any hesitations and justifications
·        Well balanced positive mindset .Calm and composed.
Able to travel with the things directions rather than how I wish it should h

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...