குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 29, 2020

மற்றவர்களின் சாதனை அனுபவங்கள் எமக்கு என்ன பலனைத் தரும்?

மற்றவர்களின் சாதனை அனுபவங்கள் எமக்கு என்ன பலனைத் தரும்?
****************************************************
மற்றவர்களது சாதனை அனுபவங்கள் எமக்கு பயனுள்ளதா?
இதற்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களும் பொருத்தமானது.
எப்படி ஆம் என்பதைப் பார்ப்போம்;
  1. சாதனை பற்றி எமக்கு சரியான நம்பிக்கை இல்லை என்ற நிலையில் இருக்கும் போது மற்றவர்கள் சாதனையின் பலன்களை கூறும்போது எமது மனம் உற்சாகமடையும்.
  2. அவர்களால் இவ்வளவு முடியும் எனும் போது நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
பலன் எதுவும் இல்லை என்பது எப்படி என்பதைப் பார்ப்போம்;
  1. நாம் இவ்வளவு நாள் செய்கிறோம் ஒரு முன்னேற்றமும் இல்லை, இவருக்கு மாத்திரம் எப்படி சாத்தியம்? என்ற எண்ணம் உள்ளவருக்கு.
  2. இவர் எதோ இரகசியமான முறைகள் வைத்திருக்கிறார்; அவற்றை நாமும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பதட்டப்படுபர்களுக்கு
  3. என்னைவிட முன்னேறிய ஒருவர் இருக்கிறாரா என்ற அசூயை தோன்றுபவர்களுக்கு,
சாதனை தொடர்ச்சியாக செய்வதற்குரிய இரகசியம் எவை என்பது பற்றிய சில குறிப்புகளை நிரல் படுத்தியுள்ளோம்;

  1. குரு கூறிய உபதேசத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரத்தையாக தினசரி செய்வோம் என்ற மனப்பாங்கு இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
  2. எம்மை எவருடனும் ஒப்பிடாமல், சாதனையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆனால் சங்கல்பத்திலும் சித்த சாதனையிலும் கூறப்படும் பண்புகளை வளர்ப்பதற்குரிய முயற்சியில் ஈடுபடும் சிரத்தை இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
  3. குருவிடம் முரண்படாத அகங்காரம் அற்ற ஏற்பு நிலையுள்ள மனம் இருந்தால் சாதனை ஒழுங்காக நடைபெறும்.
  4. வாழ்க்கையின் தினசரி உணவு, உறக்கம் அடிப்படை கடமைகளில் சாதனையும் ஒன்று என்ற உணர்வுப்பூர்வமான எண்ணம், இது இருந்தால் வேலைப்பளுவால் சாதனை செய்யவில்லை, வீட்டு சூழலால் சாதனை செய்யவில்லை என்ற காரணங்கள் வலுவற்றதாகப் போய்விடும்.
  5. எமது நம்பிக்கைகளே (Belief) எமது மனப்பாங்கினை (attitude) உருவாக்குகிறது, மனப்பாங்கு எமது செயலினை (action) உருவாக்குகிறது. சாதனை என்பது செயல் என்றால், அதற்குரிய மனப்பாங்குகள் நாம் சங்கல்பத்திலும், சித்த சாதனையிலும் உள்ள பண்புகள், இவற்றில் எமக்கு நம்பிக்கை இல்லாமல் எமது அகம் இருக்குமானால் சாதனை தடைப்படும்.
  6. நான் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன், எனது ஜாதி உயர்ந்தது என்ற நம்பிக்கை (Belief) உள்ளவன் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பாங்கினை (Attitude) உருவாக்குவான், இந்த மனப்பாங்கு வலுப்பெற தான் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற செயலில் இறங்குவான். இதே உதாரணம் சாதனையிலும் பொருந்தும். தான் ஒரு லக்ஷம், இத்தனை லக்ஷம் ஜெபம் செய்ததால் சாதனையில் உயர்ந்து விட்டதாக நம்பத் தொடங்கி, மற்றவர்கள் தாழ்ந்திருப்பதாக நினைக்கத் தொடங்கினால் சாதனை செய்யும் மனப்பாங்கு (attitude) போய் விடும், பின்பு சாதனை வெறுமனே ஒரு அகங்கார செய்கையாக, தற்பெருமையாகப் போய்விடும்.
  7. ஆகவே சாதனையில் வரும் அனுபவங்களை நாம் உயர்ந்து விட்டோம் என்ற நம்பிக்கையாக எடுக்காமல் முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையாக மாத்திரம் கைக்கொள்ள வேண்டும். அப்போது தான் சாதனை தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். இந்தப்பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் மற்றொன்றில் இருந்து ஈர்த்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகவே சாதனை என்பது முடிவுள்ள ஒன்று அல்ல! தொடர்ச்சியான செயல்!
  8. ஆகவே மற்றவர்களின் சாதனா அனுபவங்களைப் படிக்கும் போது அன்னத்தைப் போல் உங்களுக்குத் தேவையானவற்றை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள், அவை உங்களுக்குப் பயன்படுமா என்பதை உங்கள் குருவிடம் கேட்டு பின்னர் கடைப்பிடிக்க முயலுங்கள்!
  9. சாதனையின் ஆரம்பத்தில் எல்லோருடைய சட்டையும் (சாதனை முறையும்) ஒரே போல் இருப்பதால் எப்போதும் அப்படி இருக்கும் என்று நம்பி குழம்பி விடாதீர்கள்! வளர்ச்சிக் கேற்ற வகையில் வெட்டித்தைக்க வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! ஆகவே காலத்திற்கு காலம் சட்டையை தையல்காரனிடம் (குருவிடம்) கொடுத்து வெட்டித் தைத்துக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...