வைரசு, பற்றீரியாக்கள் போன்ற நுண் கிருமிகள் எப்படி உடலைத் தாக்கி நோயை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள கஷ்டம் என்ன?
இது அரவிந்தரிடம் கேட்கப்பட்ட கேள்வி; அக்காலத்தில் ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளேக், காலரா தாக்கிக்கொண்டிருந்தது.
நீ விஞ்ஞானியைப் போன்று கேள்வி கேட்கிறாய்; அவர்கள் மனம் என்ற ஒன்று இல்லை, எண்ணம் மனம் என்பதெல்லாம் பௌதீக மூளையின் செய்கையால் நடைபெறுவது என்று எண்ணுபவர்கள். அதுபோல் எல்லாவற்றையும் இயக்கும் சக்தி ஒன்று இருக்கிறது என்பதை விட உடல் இயக்கம் என்பது இரசாயனங்களாலும், சுரப்பிகளாலும் நடைப்பெறுகிறது என்று கூறுபவர்கள். இந்த சிறு கிருமிகளும் பெரிய பௌதீகத்தின் கருவிகளே.
நோயை உருவாக்கும் காரணிகள் (வைரசு, பற்றீரியாக்கள்) முதலில் எமது நரம்பு மண்டலத்தை சூழ உள்ள எமது காந்த மண்டலத்தை (aura) பலவீனப்படுத்துகிறது. இந்தக் காந்த மண்டலம் பலமாக இருந்தால் மில்லியன் கணக்கான கிருமிகள் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. இந்த கவசம் உடைக்கப்ப்பட்டால் எமது உடலில் உள்ள ஆழ்மனம் நோயை உருவாக்கும் கிருமியை ஏற்றுக்கொள்கிறது. இந்தக் கவசத்தில் பிராணன் குறைவது மனமானது பயத்தின் காரணமாகவோ, நோயின் தன்மைகளை ஆராய்வதனூடாகவோ நோய்க் கிருமி உடலினுள் வேலை செய்வதற்குரிய சூழலை ஏற்படுத்துகிறது. இன்புளுவென்ஸா, காலரா போன்ற நோய்களில் 90% மக்களுக்கு நோய் பரவுவதில் பயம் முக்கிய காரணியாக இருக்கிறது. இதில் ஆழ்மனம் பெரும் பங்கு வகிக்கிறது.
மனதிலும் உடலிலும் நல்ல எதிர்ப்பு சக்தியுள்ள ஒருவன் ப்ளேக், கலரா போன்ற நோய் நிலவரங்களுக்கு மத்தியிலும் சென்று வரமுடியும்; நான் பரோடாவில் இருக்கும் போது இதை நானே சந்தித்திருக்கிறேன்.
Complete Works of Sri Aurobindo, Vol. 31, Letters On Yoga-IV, P568-569
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.