குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 09, 2020

தலைப்பு இல்லை

எமது ஆரோக்கியம் என்பது மருத்துவரது கைகளில் இல்லை என்பதும், அரசாங்கம் எம்மைப் பார்க்கும் என்ற எண்ணமும் பிழையானது என்பதை இன்றைய மேற்கத்தேய நாடுகளின் நிலவரம் எடுத்துக்கூறி வருகிறது. 

மேற்கத்தேய நாடுகள் நவீன அறிவியல் ஒன்று தான் நம்பகரமானது என்ற ஒற்றை நம்பிக்கையை மருத்துவத்துறையில் புகுத்தி உலகின் அதியுயர் வணிகமாக மருத்துவத் துறையை மாற்றியுள்ளார்களே தவிர மேற்கில் நவீன மருத்துவத்துறை COVID-19 இனை எதிர்கொள்ள தயார் நிலையிலில்லை. 

பொருளாதாரம் ஒன்றை மாத்திரம் வாழ்வின் இலக்காக எடுத்துக்கொண்டு மேற்குலக வாழ்க்கையை நம்பிச் சென்றவர்கள் இன்று உயிரிற்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள். 

மேற்கத்தேய மருத்துவத்தில் உடலின் முழுமையான உடலின் சீரான இயக்கமே ஆரோக்கியம் என்று மருத்துவம் பார்க்கும் ஞானம் வரவில்லை.

அமெரிக்க அதிபர் தான் வல்லரசு என்ற கற்பனையில் கொரோனோவை எதிரி என்று பிரகடனப்படுத்துகிறார். இயற்கையின் அமைப்பில் இந்த நோய்த்தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தானாக மறைந்துவிடும். எதிரி என்று பிரகடனப்படுத்தி மக்களை அரசியலுக்காக உசுப்பேத்தலாமே தவிர கொரோனா காவு எடுக்கப்போவதை தடுக்க எந்த ஆற்றலும் இல்லை. 

பொருளாதாரமும் சந்தையும் தான் நோயையும், அதற்கான தீர்வையும் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பது மனித குலத்தின் அவலம்! 

இந்தியாவின் அகஞானம் எப்போதும் பாரதத்தைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். மக்களிற்காக மேற்கின் மிகப்பெரிய சந்தை தனது பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ளாமல் மூடி வைத்திருப்பது மனிதகுலத்தின் இருப்பிற்கான நம்பிக்கை தருகிறது. 

ஆயுதங்களையும், வாகனங்களையும் உற்பத்தி செய்தவர்கள் மனித குலத்திற்கு எதையும் உருப்படியாகச் செய்யவில்லை, மருந்துக்கு இந்தியாவும், முகக்கவசத்திற்கு சீனாவும் தான் கைகொடுக்கிறது. ஜேர்மனி விதிவிலக்கு; ஹிட்லருக்குப் பின்னர் வந்த ஞானமாக இருக்கலாம்! 

இலங்கை பல்லாயிரம் வருடங்கள் இயற்கையுடன் வாழும் கலாச்சாரம் கொண்ட சிறிய நாடு. உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருந்தால் இந்த அவல உலகில் மனிதன் தன்னிறைவாக வாழக்கூடிய மகிழ்ச்சியான நாடு!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...