குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 23, 2020

காயத்ரி சாதனையும் இல்லறயோக அடிப்படைகளும்

இல்லற யோகத்தின் அடிப்படை
**************************************************
நாம் இல்லறத்திலிருந்து யோக சாதனை பயிற்சிக்கும் இல்லற சாதகர்கள், ஆகவே இல்லற யோகத்திற்குரிய விதிமுறைகளைச் சரியாக புரிந்துகொள்வதும், பொதுவழக்கில் இருக்கும் ஆச்சாரங்களை சாதனையுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.
சாதாரண இல்லற வாழ்க்கையில் இருந்து வெறுப்பு ஏற்பட்டால் நாம் சாதனைப் பாதையில் இருந்து விலகுகிறோம் என்று உணரவேண்டும்.
நாம் சாதனைசெய்கீறோம், எமது கணவன்/மனைவி சாதனை செய்யவில்லை, நாம் சிறப்பானவர்கள், அவர்கள் புண்ணியம் செய்யவில்லை என்ற நினைப்புத் தோன்றினால் சாதனைப் பாதையிலிருந்து விலகுகிறோம். எமது சாதனையும் அவர்களுக்கானது என்ற உறுதியான எண்ணம் இருக்கவேண்டும்.
குடும்பக்கடமைகள், கணவன், மனைவி, பிள்ளைகளால் சாதனை செய்ய முடியவில்லை என்றால் நாம் சிரத்தையில்லாதவர்கள் என்பதே அர்த்தம் அன்றி இப்படியான சாக்குப்போக்கு காரணங்களை சாதனை செய்யாமலிருப்பதற்கு திருப்தி செய்யக்கூடாது.
சாதனை செய்வதால் எனது கர்ம பாவங்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விடலாம் என்று எண்ணக்கூடாது, சாதனையால் வரும் ஆத்ம, மனோ, பிராண பலத்தால் எந்தத்துன்பத்தையும் எதிர்த்து முன்னேறுவேன் என்ற மனப்பாங்கு இருக்க வேண்டும்.
சாதனை செய்வது அற்புத சித்திகளுக்கு என்ற மன ஏக்கம் அறவே இருக்கக்கூடாது, சாதனையின் சங்கல்பத்தை மீண்டும் மீண்டும் படித்து என்ன நோக்கத்திற்காக சாதனை செய்கிறோம் என்பதை மனதில் பதிவித்துக்கொள்ள வேண்டும்.
சாதனையின் முன்னேற்றம் என்பது சித்த சாதனையில் கூறப்பட்ட பண்புகள் எம்மில் விழிப்படைந்து இருத்தல். அவை எமது அடிப்படைப் பண்புகளாக மாறிவருகிறதா என்பதை கூர்ந்து கவனித்து அவற்றைப் பெற முயற்சிக்க வேண்டும்.
சுருக்கமாக சாதனை செய்யத்தொடங்கி முன்னுறுகிறோம் என்பதன் அறிகுறி அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுகிறோம் என்பதுதான்! இது சாத்தியமானால் உயர்ந்த யோக வாழ்க்கையினுள் தேவி அழைத்துச் செல்வாள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...