குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 21, 2020

மண்ணின் வளம் தரம் - 02

{பெரும் பொய்யனின் ஆய்வும் இரசாயன உரங்களின் வளர்ச்சியும்} 

பெரும்பொய்யன் இந்த உக்கல்/மட்கு அல்லது Humus என்பதை எப்படிப் பார்த்தார் என்பதில் தான் இன்றைய இரசாயன உர ஆக்கிரமிப்பு விவசாயம் ஆதித்தியம் பெற்றது. 

இவர் ஹியுமஸ் மண்ணின் வளத்திற்கு பெரும் பங்காற்றுகிறது என்ற பண்டைய விவசாயக் கொள்கைகளை பெரும் விவாதத்திற்கு உட்படுத்தினார். உக்கல் அல்லது மட்கு என்பது தாவரத்தைப் பொறுத்த வரையில் காபன் மூலகத்தைப் பெறுவதற்கான ஒரு தளம் மாத்திரமே அன்றி வேறு பயன் ஒன்றுமில்லை என்றார்; செயற்கையாக உருவாக்கப்படும் அசேதன உரம் (Inorganic fertilizer) இந்தப் படையைத் தகர்த்துச் சென்று தாவரங்களைப் போசிக்கும் என்று வாதிட்டார்! 

ஆனால் இது உண்மையில்லை தாவரம் தனது காபன் தேவைகளுக்கு வளிமண்டலத்தையே நம்பியிருக்கிறது. 

எப்படியோ இந்தப் பெரும்பொய்யன்-Liebig கூறிய அறிவியல் உண்மை (??) என்ற முடிவுகள் அதிக விளைச்சலைப் பெற தாவரங்கள் தமது இயற்கையான உக்கலில் இருந்து தாவரம் வளரமுடியாது, அதற்கு செயற்கையாக அசேதன இரசாயனக்கலவை (Inorganic chemical) இட்டால்தான் அது வளரும், விளைச்சல் கூடும் என்ற கருத்தை பெரிதாக நம்ப வைத்தது. 

இதைப் போல் தாவரங்கள் எல்லாம் நைதரசனை வளிமண்டலத்திலிருந்தே பெறுகிறது, அது விளைச்சலுக்குப் போதுமானதில்லை என்று வாதிட்டார், ஆகவே நைதரசன் உரம் அவசியம் என்ற தேவையை "ஏற்படுத்தினார்", ஆனால் பிற்காலத்தில் அவரைக் குடும்பங்கள் மாத்திரமே வளிமண்டலத்தில் இருந்து பெற்று மண்ணிற்குப் பதிப்பதன் மூலம் மற்றைய தாவரங்களுக்கு பகிர்கின்றது என்று புரியப்பட்டது. 

இப்போது பலரும் அவரைத் தாவரம் மாத்திரம் தான் வளிமண்டலத்திலிருந்து பெறுகிறது என்றால் பெரும்பொய்யன் கூறியது சரிதானே என்று வாதிட வருவார்கள், ஆனால் அது சரியல்ல! அதுவரை பாரம்பரிய விவசாயத்தில் சுழற்சி முறைப் பயிர் செய்கை, கலப்புப் பயிர்ச் செய்கை என்ற பயிரிடல் முறைகள் மூலம் நைதரசன் பதிக்கப்பட்டு வந்தது, உரத்தின் மூலம் இதை ஈடுகட்டலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் விதைக்கப்பட்ட பின்னர் சுழற்சி, கலப்பு பயிர்ச் செய்கையெல்லாம் நாம் பின்பற்றத்தேவையில்லை, வெறுமனே இந்தப் பெரும்பொய்யனின் கோட்பாட்டு அடிப்படையில் உரத்தினை வாங்கி மண்ணுக்கு போட்டுவிட்டால் பயிர் வளர்ந்து விடும் என்று விவசாயிகள் நம்ப வைக்கப்பட்டார்கள்! நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தப் பெரும்பொய்யனின் கோட்பாடுகள் நீடித்து நிலைத்திருக்கும் விவசாயத்தை (sustainable agriculture) வளர்க்கவில்லை, விவசாயத்திற்கான உள்ளீடுகள் என்ற உர உற்பத்தியை வளர்த்தது. பெரும் உரக்கம் பனிகள்தான் விவசாயக் கம்பனிகளாக உருப்பெற்றது! பின்னர் அதிக உரப்பாவனை நீர் மாசு, மண் மாசினை உருவாக்கில் நிலத்தடி நீரை மாசாக்கி நோயை உருவாக்கும் காரணியாக வந்து நிற்கிறது. நீண்டகால உரப்பாவனை நிலங்கள் எல்லாம் உவர் நிலங்களாக செத்துபோயின! 

பிறகு உரத்திற்கு வளர்ச்சி தரும் இனங்கள் என்று கலப்பு, GMO என்று விவசாயம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதாக மாயை உருவாக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பொய்யன் மறுதலித்த உக்கல்/மட்கு/humus மண்ணின் வளம் இல்லை என்ற போலிக் கோட்பாடு சூழலியல் ஆய்வினால் பொய்யாக்கப்பட்டது. மண்ணின் வளத்திற்கும், தரத்திற்கும், விவசாயத்திற்கும், தாவர வளர்சிக்கும் உக்கல்/மக்கு ஹியுமஸ் எவ்வளவு பங்களிப்புச் செய்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறது. 

அதைத்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கப் போகிறோம்! 

இதை அறிய ஆவலுள்ளவர்கள் உங்கள் விருப்பை comment இல் தெரிவியுங்கள், அனேகரின் ஆர்வம் எம்மை எழுதத்தூண்டும் டானிக்!  


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...