குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 25, 2020

எனது பெயர்

எனக்கு எனது பெற்றோர்கள் இட்ட பெயர் சுமனேந்திரன் = சு+மன+இந்திரன்.
ஒரு தடவை எனது குரு நாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் பூர்ணதீக்ஷையின் போது கொடுக்கப்படும் பெயர் அந்த சாதகன் தனது சாதனையால் அடையப்போகும் நிலைக்கான சங்கேத் குறியீடு என்று சொல்லியிருந்ததை அடிப்படையாக கொண்டு எனது பெயரின் அர்த்தத்தை அறிய முயன்றேன்.
சுமனேந்திரன் = சு+மன+இந்திரன்.
சுமன = நல்மனது, செழுமனது
சமஸ்க்ருதத்தில்
सुमन = சுமன = மிக வசீகரமான, அழகான,
सुमनस् = சுமனஸ் = நல்மனது , இரக்கமுள்ள, நன்கு முதிர்ந்த, இனிமையான, கருணையுள்ள , சாதகமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தங்களில் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.(Lit. RV. Lit. AV. Lit. Gobh. Lit. KaṭhUp)
ஸ்ரீ அரவிந்தரும், Dr. காஸ்யப அவர்களும் வேதங்களில் குறிப்பிடப்படும் இந்திரன் என்ற தெய்வத்தைப்பற்றிய மறையியல் சூக்ஷ்ம விளக்கத்தைக் கூறும்போது இந்திரன் என்பது தெய்வ மனதின் அதி தெய்வம் என்றும், பிரபஞ்சத்தில் இருந்து மனித மனத்தின் செயற்பாட்டை நெறிப்படுத்தி, மனிதன் தனது செயற்பாடுகளை சரியான முறையில் செய்வதற்குரிய ஆற்றலை ஸ்தூல பௌதீக உலகிலும், சூக்ஷ்ம உலக ஆற்றல்களை பெற அறிவினை தருபவனாகவும் அர்த்தப்படுத்துகிறார்கள்.
மேற்கூறிய அர்த்தங்களைக் கொண்டு சுமன இந்திரன் என்ற பெயரிற்கு நல்மனது , இரக்கமுள்ள, நன்கு முதிர்ந்த, இனிமையான, கருணையுள்ள , சாதகமான மனதையும், தெய்வ மனதை இயக்க கூடிய ஆற்றலுள்ளவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
நான் மேற்குறித்த அர்த்தத்திற்கு தகுதியானவனா என்று தெரியவில்லை! எனினும் சிறுவயது முதல் மனம் பற்றிய ஆழமான புரிதலை தேடியது என்னை யோகசாதனைக்குள் கொண்டு வந்து விட்டது என்பது அனுபவ உண்மை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...