குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 25, 2020

யோகப்பயிற்சிகள் எப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது? - ஓர் அறிவியல் பார்வை




மனிதனது தொற்றா நோய்க்கான காரணங்களில் முதன்மையானது மன அழுத்தம், மன அழுத்தம் உடலில் தாக்கும்போது தலைவலி, வயிற்றுப்புண், வயிற்றுக்குழப்பம் என்பவற்றினூடாக உடலில் சம நிலையை ஆரம்பத்தில் குழப்பி நீண்டகாலத்தில் இதய நோய், நீரிழிவு, எலும்பு வலுவிழத்தல், சில ஆய்வுகள் தகவல்படி புற்று நோய் என்பவற்றை உருவாக்குகிறது.


உடலின் கட்டுப்பாடு தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுவே இதயம், கல்லீரல், குடல் முதலிய அக உறுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.

இந்த தன்னியக்க நரம்பு மண்டலம் இரண்டு பிரிவுகளாக அதன் செயற்பாட்டிறு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது பரிவு நரம்புத்தொகுதி (sympathetic nervous system) இது உடலை வேகமாக இயக்குவதற்குரிய பொறிமுறையை கொண்டிருக்கிறது.

மற்றையது பரபரிவு நரம்புத்தொகுதி (parasympathetic nervous system) இது முன்னையதற்கு மறுதலை வேலையை செய்கிறது. அதாவது உடலை ஓய்வுபடுத்தப்படுத்த தேவையானவற்றை செயற்படுத்துகிறது.

பரிவு நரம்புத்தொகுதியின் செயற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கம் மனிதன் ஆபத்து சூழ் நிலையில் விரைந்து செயற்படுவதற்குரிய உடலியக்கங்களை ஏற்படுத்துவதற்காகும். தன்னைச்சூழ ஒருவித ஆபத்து, சண்டை இருக்கிறது என்று மனம் உணர்ந்தவுடன் அது மூளையின் ஹைபோதலமஸும், ப்ரிட்யூடரி சுரப்பியும் இதை உணர்ந்துகொண்டு அதரினல் சுரப்பியை தூண்ட அது Cortisol எனும் ஹோர்மோனை வெளிவிடுகிறது. இந்த ஹோர்மோன் உடலை சூழ் நிலைக்கு தகுந்த வாறு அதிக இரத்த ஓட்டத்தையும், உடலின் இயக்கத்திற்கு தேவையான சக்கரை அளவையும் தற்காலிகமாக உயர்த்தி உடலை ஒருவித அவசர நிலவரத்திற்குள் கொண்டு வருகிறது.

இந்த அவசர நிலவரம் முடிந்த பின்னர் பரபரிவு நரம்புத்தொகுதியினூடாக (parasympathetic nervous system) உடலை ஓய்வுக்குள் கொண்டுவருகிறது. அதிகமாக பாய்ச்சப்பட்ட இரத்தம் மீள்பெறப்பட்டு உடல் சீராக்கப்படுகிறது.

இனி மன அழுத்தம் பற்றிப் பார்த்தால் சரியான ஒழுக்கமில்லாத, மனதைப்பயிற்றுவிக்காதவர்கள் பிரச்சனை வரும்போது மனதை இயக்கிய அவசர நிலவரத்திலேயே எப்போதும் தம்மை வைத்திருப்பார்கள். உண்மையான புறச்சூழல் ஆபத்தோ, அவசரமாக இல்லாவிட்டாலும் தாமாக, சுயமாக பரிவு நரம்புத்தொகுதியை தூண்டி தம்மை ஒருவித அழுத்தத்திற்குள் வைத்திருப்பதால் அவர்கள் உடல் எப்போதும் Cortisol இனை அதிகளவு கொண்டிருக்கும். இப்படி தொடர்ச்சியாக உடலிற்கு ஓய்வு தராமல் உடலை வைத்திருக்கும் போது அதனால் ஏற்படும் தொய்வு நிலை தொற்றா நோய்களாக உருப்பெறுகிறது.

யோகப்பயிற்சியில் உள்ள அனைத்து இயம நியமம் நாம் பரிவு நரம்புத்தொகுதியை பாவிப்பதில் ஒருவித ஒழுங்கை கொண்டுவருகிறது.

ஆசனம் உடலில் இரத்த ஓட்டம், தசை, நரம்பு என்பவற்றினை சம நிலைக்கு கொண்டு வருகிறது.

பிரணாயாமம் மூச்சின் மூலம் பரபரி நரம்புத்தொகுதியை செயற்படுத்தி உடலை ஓய்விற்குள் கோண்டுவந்து பிராணவாயுவின் சம நிலையை உருவாக்குகிறது.

பிரத்தியாகாரம் நாம் சூழ் நிலையால் புலங்கள் வழி மனதை தூண்டி, அது மூளையை தூண்டி பரிவு நரம்புத்தொகுதி இயக்கத்தை தூண்டுவதை கட்டுப்படுத்துகிறது.

தாரணை பரிவு நரம்புத்தொகுதியை துண்டாமல் பரபரிவு நரம்புத்தொகுதியில் இருந்தவாறு மனதை இயக்கும் ஆற்றலை தருகிறது.

தியானம் பூரண ஓய்வினை மனதிற்கும் உடலிற்கும் தந்து உடலை புத்துயிர்ப்பு செய்கிறது.

இதுவே யோகத்திற்கான நவீன அறிவியல் விளக்கம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...