குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 10, 2020

தலைப்பு இல்லை

வீண் அகங்காரமும், ஜம்பமும் எப்போதும் எதையும் உருப்படியாகச் சாதித்ததில்லை! சமூகமும் தனிமனிதனும் முன்னேறாத குழப்பத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது.

இயற்கை விவசாயத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று என்று ஜப்பானிய இயற்கை விவசாய விஞ்ஞானி மசானபு ஃபுகோகா கூறும் உபதேசம்; இயற்கை விவசாயத்தின் நோக்கம் பயிர் சாகுபடி அல்ல, மனிதனில் பூரணத்துவத்தை சாகுபடி செய்வது! 

எனது முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரிக்காக முகாமையாளர்களுடன் முகாமைத்துவக் கூட்டம் நடத்தும் பொறுப்பு என்னுடையது. இந்தக் கூட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை எல்லோரும் தாம் சரி என்று நினைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் நாம் பொறுப்பில்லை மற்றவர்தான் காரணம் என்றபடி வட்டமாக குற்றம் சாட்டி சுற்றி வரும் உரையாடல்கள், எப்போதும் தீர்வு வராது. 

இந்தப்போக்கினை ஆராய்ந்த நாம் உணர்ந்து கொண்ட விஷயம்;

அனேகமாக எல்லோரும் தம்மைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற வெட்டி ஜம்பத்திற்காக மற்றவர்களிடம் over build up செய்பவர்களாக இருப்பதும், பின்னர் அந்த over build up செய்த பிம்பம் உடையாமல் காப்பாற்றிக் கொள்ள தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, பழிபோட்டு வீண் சண்டை போட்டு குழுவின் ஆற்றலை சிதறடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது. தமது இயலாமையை ஒத்துக்கொண்டு அதை எப்படி ஆற்றலாக வளர்த்தெடுப்பது என்ற வழி தெரியாததால் துன்பப்படுபவர்களாக இருப்பார்கள். 

இதற்கு எமக்குள் இருக்கும் அகங்காரம் பெரும் தீனி போட்டுக்கொண்டிருக்கும். ஆனால் இது எம்மை உள்ளிருந்து அழித்துக்கொண்டு இருக்கும் ஒரு எதிரி என்பது தெரியாமல் சிக்கிக்கொண்டு இருப்போம். 

நாம் எதற்காக இதைச் செய்கிறோம்?

இதன் விளைவுகள் என்ன?

அந்த விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா? என்று மூன்று கேள்விகளை எந்தச் செயல் செய்வதற்கு முன்னர் கேட்பதும் அதற்குத் திருப்தியான சரியான பதிலின் பின்னர் அந்தச் செயலில் இறங்குவதும் எப்போதும் அவசியமான ஒன்று. 

இதற்குத் தீர்வாக குழுவில் ஒருவருக்கு ஒருவர் போட்டியானவர்கள் அல்ல, மிகை நிரப்பிகள் (compliment) என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தோம். எனது இலாபத்தை, உயர்வை மற்றவன் கொள்ளையடித்து விடுவானோ என்ற பயத்தை அவர்கள் எண்ணுவதற்கு முன்னர் நாம் நியாயமாக நடப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்தோம். முகாமைத்துவம் சீரானது. 

ஒருவனின் மிகப்பெரிய பலம் தனது இயலாமையை, ஆற்றலின்மையை அகங்காரமற்று ஒத்துக்கொள்வதுடன், அதற்கு மிகை நிரப்பான மனித ஆற்றல்களை எம்மை நோக்கி நட்புடன் ஈர்த்துக்கொள்வது; இப்படியான பண்பு இருக்கும் போது மற்றவர்கள் உதவியுடன் நாம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...