குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 02, 2011

போகநாதரது நவபாஷாணத்தின் உண்மை விளக்கம் - 01


இந்த ஆய்வு எவரையும் எந்தவிதத்திலும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படுவதல்ல மிகுந்த நட்புடனும் பரிவுடனும் உணர்ந்த உண்மையினை அனைவரும் அறிய‌ வேண்டும் என்ற பேராவலுடன் எழுதுகிறோம். 

முதலாவதாக நவபாஷாணம் என்று குறிப்பிடப்படுபவை எவை என போகர் பாடலிருந்து கூறுப்படுவது யாதெனில்!

"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே
நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர் 

சரி இவற்றைகடையில் கேட்டு வாங்கினால் எவற்றை தருவார்கள் என்பதனையும் அதற்கான நவீன வேதியல் விளக்கத்தினை கீழே தருகிறோம்.

  1. கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite (Arsenic pentasulfide is an inorganic compound contains arsenic and sulfur with the formula. The identity of this reddish solid remains uncertain.  Solids of the approximate formula As2S5 have been used as pigments and chemical intermediates but are generally only of interest in academic laboratories, Arsenic and many of its compounds are especially potent poisons. Many water supplies close to mines are contaminated by these poisons. Arsenic disrupts ATP production through several mechanisms.) 
  2. கெந்தகப் பாஷாணம்: Sulfur (Elemental sulfur is non-toxic, but it can burn, producing sulfur dioxide. Although sulfur dioxide is sufficiently safe to be used as a additive in small amounts, at high concentrations it harms the lungs, eyes or other tissues. In organisms without lungs such as insects or plants, it otherwise prevents respiration. Sulfur trioxide and sulfuric acid are similarly highly corrosive, due to the strong acids that form on contact with water)
  3. சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite 
  4. வீரப் பாஷாணம்: Mercuric Chloride 
  5. கச்சாலப் பாஷாணம்: சரியாக ஆய்வு செய்ய நேரம் கிடைக்கவில்லை
  6. வெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxide, மேலே ஆசனிக்கிற்கான தாக்கங்கள் அனைத்தும்
  7. தொட்டிப் பாஷாணம்: சரியாக ஆய்வு செய்ய நேரம் கிடைக்கவில்லை
  8. சூதப் பாஷாணம்: Mercury
  9. சங்குப் பாஷாணம்: சரியாக ஆய்வு செய்ய நேரம் கிடைக்கவில்லை
மேலதிக விளக்கம் பெறுவதற்கு இணையத்தில் நுழைந்து துலாவினீர்கள் என்றால் இந்த பாஷாணங்கள் பற்றி உண்மையான உடலாரோக்கியம், சூழலியல் தாக்கங்கள் பற்றிய முழுமையான விபரங்களை பெறலாம். சரி நமது கேள்விக்கு வருவோம், இப்படிப்பட்ட கொடிய நஞ்சினை மக்களது நோய் தீர்க்கப்பாவித்தனரா? என்றால் நமது சித்த வைத்தியர்கள் கூறுவார்கள் அதற்குத்தான் சுத்திமுறையுள்ளது, சுத்திகரித்தால் சரியாகி விடும் என்று, மற்றைய சித்தர்கள் மேல் பயமுடையவர்கள் கூறுவார்கள் சித்தர்களால் இது முடியும் என்று, இரண்டுமே பொருந்தாத பதில்கள்.

ஏனெனில் சித்தர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தவர்கள், எது நன்மைசெய்யும் எது தீமை செய்யும் என்று நன்கு அறிந்தவர்கள், அதேபோல் அக்காலத்தில் பாஷாணம் சுத்தி செய்தால் இக்காலத்திலும் அது பொருந்தி வர வேண்டும், இரசாயனவியலின் (வேதியலின்) வளர்ச்சியே இரசவாதம் என்ற பெரும் மூடுமந்திரமான கலை ஏற்படுத்திக்கொடுத்ததென்பதை விஞ்ஞான வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். விஞ்ஞான வசதிகள் வளர்ந்த இக்காலத்தில் நீங்கள் கூறும் சுத்தி முறையில் சுத்திகரித்த பாஷாணத்தினை கொண்டு சென்று ஆய்வுகூடத்தில் கொடுத்தால் தெரியும் உண்மை என்னவென்று. துளியளவும் நச்சுத்தன்மை குறைந்திருக்காது. ஆக சித்தர்கள் கூறியதையல்ல தற்காலத்து சித்தவைத்தியர்களும், சித்தர் இலக்கியத்தை கையாள்பவர்களும் பொருள் கொள்ளும் விதம். அப்படியானால் உண்மை என்ன?

இதுபற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்!

5 comments:

  1. ஏற்கனவே ஒருவர் தோழியை அந்த பதிவிலேயே காய்ச்சி இருந்தார். நீங்களுமா?? ஏதோ ஒரு ஆர்வத்தில் அவரும் ரச வாதம் ஒரு குருவின் ஆசியோடு செய்ய முயற்சி செய்கிறார். அதை பாராட்டுவோமே???

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. // Sankar Gurusamy //அவரும் எம் பெருமான் அகஸ்தியமகரிஷியின் மகள்தான், எனது பதிவினை தவறாக விளங்கியுள்ளீர்கள், யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை, உணர்ந்த உண்மையினை எடுத்துக்கூற முயற்சித்தோம். தப்பபிப்ராயம் வந்துவிடக்கூடாது என்பதால் பதிவு திருத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவது அறிவியல் ரீதியான உண்மை. ஒத்து கொள்கிறேன், அப்படி அவை யாவும் சுத்திகரிக்க முடியாதவை என்றால் ஏன் பழனி கோயிலுக்கு இவ்வளவு சிறப்பு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன் போகர் செய்தது ஒரு நவ பாசான சிலை அல்ல இரண்டு சிலை, ஒன்று பழனியில் இருந்த முருகன் சிலை அது விஷமுறிவிற்கு உட்படுத்த பட்டது, மற்றொன்று அய்யனார் வடிவில் உள்ள ஆஞ்சநேயர் சிலை அது சிவகங்கையில் உள்ளது, இது விஷ முறிவு செய்யாத சிலை.இந்த சிலை மீது வடை மாலை அணிந்து 5 நிமிடத்தில் அது நீல நிறம் அடைந்து விடுகிறது. இது ஏன் உங்கள் அறிவியல் இதற்கு விளக்கம் தருமோ, பழையது எல்லாம் பொய் என்றால் இப்போது கண்டு பிடித்திருக்கும் அணுவும் பொய் தானே.

    ReplyDelete
  4. நீங்கள் கூறுவது அறிவியல் ரீதியான உண்மை. ஒத்து கொள்கிறேன், அப்படி அவை யாவும் சுத்திகரிக்க முடியாதவை என்றால் ஏன் பழனி கோயிலுக்கு இவ்வளவு சிறப்பு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன் போகர் செய்தது ஒரு நவ பாசான சிலை அல்ல இரண்டு சிலை, ஒன்று பழனியில் இருந்த முருகன் சிலை அது விஷமுறிவிற்கு உட்படுத்த பட்டது, மற்றொன்று அய்யனார் வடிவில் உள்ள ஆஞ்சநேயர் சிலை அது சிவகங்கையில் உள்ளது, இது விஷ முறிவு செய்யாத சிலை.இந்த சிலை மீது வடை மாலை அணிந்து 5 நிமிடத்தில் அது நீல நிறம் அடைந்து விடுகிறது. இது ஏன் உங்கள் அறிவியல் இதற்கு விளக்கம் தருமோ, பழையது எல்லாம் பொய் என்றால் இப்போது கண்டு பிடித்திருக்கும் அணுவும் பொய் தானே.

    ReplyDelete
  5. நீங்கள் கூறுவது அறிவியல் ரீதியான உண்மை. ஒத்து கொள்கிறேன், அப்படி அவை யாவும் சுத்திகரிக்க முடியாதவை என்றால் ஏன் பழனி கோயிலுக்கு இவ்வளவு சிறப்பு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன் போகர் செய்தது ஒரு நவ பாசான சிலை அல்ல இரண்டு சிலை, ஒன்று பழனியில் இருந்த முருகன் சிலை அது விஷமுறிவிற்கு உட்படுத்த பட்டது, மற்றொன்று அய்யனார் வடிவில் உள்ள ஆஞ்சநேயர் சிலை அது சிவகங்கையில் உள்ளது, இது விஷ முறிவு செய்யாத சிலை.இந்த சிலை மீது வடை மாலை அணிந்து 5 நிமிடத்தில் அது நீல நிறம் அடைந்து விடுகிறது. இது ஏன் உங்கள் அறிவியல் இதற்கு விளக்கம் தருமோ, பழையது எல்லாம் பொய் என்றால் இப்போது கண்டு பிடித்திருக்கும் அணுவும் பொய் தானே.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...