குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 06, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞானம் - 01

எமது முன்னோர்கள் அறிந்த அரிய விஞ்ஞானத்தில் ஜோதிடமும் ஒன்று. வானத்தினை உற்று நோக்கினால் நட்சத்திரங்கள் குறித்த ஒழுங்கமைப்பில் பரவிக்காணப்படுகின்றன. அவை எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை, பூமி எவ்வாறு கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ அதுபோல் அவையும் நகர்கின்றன‌.

இதுபோல் சந்திரன், இதுவும் தனது தோற்றத்தில் தேய்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. வியாழன், வெள்ளி கிரகங்கள் வெற்றுக்கண்ணுக்கு தோற்றுகின்றது. இயற்கையுடன் ஒன்றிய எமது முன்னோர்கள் இவற்றின் அசைவு பூமியில் செல்வாக்கு செலுத்துவதை விஞ்ஞான நோக்கில் அறிந்தனர். உதாரணமாக சந்திரன் வளர்ந்து தேய்வதுடன் கடலின் அலைகளது அளவு மாறுபடுகிறது என்ற உண்மையினை அறிந்தனர். பௌர்ணமி தினத்தில் கடலலை அதிகமாகவும் அமாவாசையில் கடல் வற்றுவதனையும் அறிந்தனர். ஆக சந்திரனது அசைவு, பூமியிலிருந்தான தூரம் என்பவற்றிற்க்கும் பூமியின் நீரின் அசைவிற்க்கும் தொடர்பு இருப்பதனை அறிந்தனர். இதுபோல் வியாழன் குறித்த நட்ச்சத்திரக்கூட்டத்திற்கண்மையில் வரும் பொது மழை அதிகம் கிடைப்பதை அவதானித்தனர். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பதைப் அடிப்படையாக‌ பூமியில் செல்வாக்கு செலுத்தும் கிரகங்கள் மனிதனிலும் செல்வாக்குச் செலுத்துவதை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டனர். இவ்வாறு சிறு சிறு அவதானங்களின் முலம் க‌ருதுகோள்களை உருவாக்கிக்கொண்டு தமது உடல், மனம், செயல்கள் இவற்றினை கிரகங்களின் இயக்கம் பாதிப்பதினை கண்டறிந்தனர். இவையனைத்தும் ஒரு விதிமுறையின் கீழ் நடைபெறுவதினை உணர்ந்தனர். அதனை தொகுத்து விதிமுறையாக்கி அதனை ஜோதிடம் எனப்பெயரிட்டனர். பிரபஞ்சத்திற்க்கும் பூமிக்கும், பிரபஞ்சத்திற்க்கும் மனிதனிற்க்கும் இடையிலான இடைத்தொடர்பு விஞ்ஞானம் தான் ஜோதிடம்.


ஐசேக் நியுட்டன் எப்படி பௌதிகவியல் சிந்தனையை தனது சிறுவயதில் ஆப்பிள் விழுவதினை அவதானித்து கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதித்து பௌதிகவியலின் கோட்பாடுகளை (laws) அறியத்தந்தாரோ அதைப்போன்று பல மெய்ஞ்ஞானிகளால் பரிசோதித்து உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் தான் ஜோதிடம்.


இந்த வலைப்பின்னல் பதிவுகளின் நோக்கம் "ஜோதிட தத்துவம்", அதாவது எந்த ஒரு விஞ்ஞானத்திற்க்கும் தத்துவம் அடிப்படைத். தத்துவம் புரிந்தால் பிரயோகம் இலகுவாகும். ஆகவே ஜோதிடத்தின் அடிப்படை தத்துவங்களை திட்ட முகாமைத்துவத்தில் பயன்படுத்தப்படும் "பெரும் பட" (Big picture) முறையின் மூலம் விளங்கிக்கொள்வது தான் நோக்கம். ஆர்வமுடைய அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

1 comment:

  1. நல்ல முயற்சி.. தொடருங்கள்.. கவனிக்கிறோம்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...