குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 01, 2011

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 02


நேற்றைய பதிவில் இரசத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம் இன்றைய பதிவில் பூரம் எனப்படும் பஞ்சசூதங்களில் ஒன்றைப்பற்றி பார்ப்போம். இது Mercury(I) chloride எனப்படும் பதார்த்தமாகும். இதன் இரசாயன தன்மைபற்றி தற்கால விஞ்ஞானம் இவ்வாறு கூறுகிறது. 

Mercury(I) chloride is the chemical compound with the formula Hg2Cl2. Also known as calomel (a mineral form, rarely found in nature) or mercurous chloride, this dense white or yellowish-white,

இதுவும் இரசம் கலந்திருப்பதால் இரசத்திற்குரிய ஆரோக்கிய பாதிப்புகள் கட்டாயம் காணப்படும். இதுபோல் வெள்ளைப்பாஷாணம் என்பது Arsenic எனும் கொடிய விஷம் கலந்தது. 

சரி விடயத்திற்கு வருவோம். இன்றைய சித்த வைத்தியர்கள், சித்தர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள், தங்களுக்கு சித்தர்களது அருளும் ஆசியும் உண்டு எனவும் அதன் மூலம் நவபாஷாணக்கட்டு, இரசமணி செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனை யாரும் பகுத்தறிவுடன் உற்றுப்பார்ப்பதில்லை. ஏனெனில் சித்தர்கள் என்றால் சபிப்பார்கள் என்ற பெரும் பயமும் மாயையும் ஆட்கொண்டுள்ளனர். இவ்வாறு சித்தர்களது பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கூறி கேள்வி கேட்டால் சித்தர்கள் சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற பெரும் பயத்தினை உண்டு பண்ணி மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். 

அப்படியானால் சித்தர்களது நவபாஷாணக்கட்டு, இரசமணியெல்லாம் பொய்யா? என்ற கேள்விக்கு ஆம் இல்லை என்ற இரண்டு பதில்களும் உண்டு. எப்படியெனில் சித்தர் நூற்களை கற்றுவிட்டும் இதுதான் முறை என்பவர்களுக்கு இல்லை என்பதுதான் பதில், ஏனெனில் அவை அனைத்தும் பரிபாஷை - குழூ உக்குறீ, நேர் பொருள் எடுத்தால் ஆபத்து. 

முக்கியமான விடயம் என்னவெனில் சித்தர்கள் ஒருமனிதன் முதலில் ஞானத்தினை பெறுவதற்குரிய சாதனையில் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறித்தியுள்ளார்கள், அதன் பின்பு தான் வாதம் வைத்தியம் எல்லாம் சித்திக்கும். ஆனால் இன்றோ வாதம் வைத்தியம் என்பவற்றை மாத்திரமே கற்க்க ஆவலுடன் இருக்கிறார்களேயொழிய யாரும் ஞானத்தினை பெறுவதற்கான யோகசாதனையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு யோகசாதனையில் ஈடுபட்டு தம் பரிணாமத்தினை உயர்த்திக்கொள்ள இவற்றின் உண்மையெல்லாம் விளங்கும். 

ஆகவே வாசகர்களே நவபாஷாணம், இரசமணி, முப்பு என மனதினைச்செலுத்தி அழியாமல் யோகசாதனையினால் உங்கள் பரிணாமத்தினை உயர்த்தி பராசக்தியினை நெருங்க குருவருள் வேண்டுவேமாக!

1 comment:

  1. குருவருள் துணைநிற்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...