குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 22, 2011

ஞானகுரு - 03: ஆன்மீகப் பாதையில் முன்னேற இல்லறத்திலிருந்து ஓடவேண்டுமா?


ஸ்லோகம் - 01


வாக்கியம் 06: உலக இன்பங்களில் குற்றங்களை விலக்குங்கள்

நீங்கள் அனுபவிக்கும் சுகங்களில் குற்றம் நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நியாய நிலையில் பெரும் பணக்காரனாக முடியாது என அனுபவமாக கூறுகின்றனர். சிறிய இன்பத்தில் திருப்தி அடையாமல் தேவைக்கு அதிகமான அளவு இன்பம் தேவையென அதனை நாடும் பொழுது அதனை பெறுவதற்காக செய்யும் செயல்களால் அனியாயம், குற்றம் நேர்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றவுணர்ச்சி பெறும் மனத்தால் இறைவனை நாட முடியாது. இறையருளைப் பெற வேண்டுமானால் குற்றம் செய்ய வேண்டிய அளவுக்கு போகாமல் நியாயமான உழைப்பினால் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு இன்பமடைந்து வாழ வேண்டும். அப்போதுதான் மனம் கலங்காமல் இறை தியானத்தில் நிலைபெறும். 


வாக்கியம் 07: ஆன்மாவை அறிய முயற்சி செய்யுங்கள்

மனிதர்கள் தமது உடலைப்பற்றியும், பிரபஞ்சத்தைப்பற்றியும் பல விடயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமுடைய மனிதன் "நான் யார்? எத்தகையவன்? என்பது பற்றி மட்டும் தெரிய விளைவதில்லை. விட்டுப்போகும் உடலைப்பற்றி பெற்ற அறிவு உடலைவிட்டு உயிர் பிரியும் போது போகத்தானே போகிறது. உடல் போகும், உற்றார் போய் விடுவர், உலகமே போய்விடும், ஆனால் "நாம்" மட்டும் இருப்போம், நித்தியமாய்! ஆதலால் தன்னைப்பற்றி கொள்ள இச்சிக்க வேண்டும். "தன்னை அறிந்தவனே தலைவனை அறிவான" ஆதலால் இறையருளைப் பெற விரும்புபவர்கள் ஆத்ம விசாரணையில் தன்னை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கேள்வி, விசாரணை, சாதனை இவைகளால் இவ்வறிவு தோன்றும்.


வாக்கியம் 08: இல்லற பந்தத்திலிருந்து விரைவில் வெளியில் வாருங்கள்

இதற்கு யாரும் இறையருளைப் பெறவேண்டுமானால் வீட்டைத்துறந்து காட்டிற்கு போகவேண்டும், துறவறம் பேண வேண்டும் என எண்ணிவிடக் கூடாது.  பிரம்ம ஞானத்தில் மேம்பட்ட ரிஷிகள் அனைவரும் தமது குடும்பத்துடன் வீடுகளில் மனைவி மக்களுடன் வசித்தவர்கள் தான். வசிஷ்ட மகரிஷி 101 புதல்வர்களுடன் அருந்ததியாம் மனைவியுடன் பர்ணசாலையில் வசித்தவர்தான். சீதையின் வளர்ப்பு தந்தையான ஜனகமஹாராஜா ராஜயோகியாக அரச மளிகையில் வசித்தவண்ணமே சாதனை புரிந்து பிரம்ம ஞானம் பெற்றிருந்தார். இல்லற பந்தத்திலிருந்து வெளியில் வாருங்கள் என்றால் மனைவி, மக்கள், சொத்துக்களை விட்டு விலகி ஓடி விடுங்கள் என்பது அல்ல, இவைகளில் பற்று கொள்ளாமல் இருங்கள் என்பதுதான் பொருள். இப்படித்தான் ஞானிகள் அனைவரும் வாழ்ந்திருந்தார்கள். எனேனில் இந்தப் பிறப்பில் நடைபெறும் செயல்கள் நாம் முன்பு சேர்த்த வினையின் படி (பிராப்த கர்மத்தின்படி) நடைபெறுகிறது. அதனை தடுத்தால் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிவரும். ஆனால் இந்தப் பிறப்பில் அடுத்த பிறப்பு எடுக்க வேண்டிய அளவிற்கு கர்மத்தினை சேர்த்து விடக்கூடாது. ஆதலால் அனைத்திலும் இருக்கும் ஆசைகளை விட்டு வெளியேறுங்கள் என்பதே இதற்கு பொருள்.

அடுத்த பதிவில் இந்த ஸ்லோகத்தின் உட்பொருள், பிரம்மவித்யா விளக்கம், உபதேச விளக்கம் பதியப்படும். 

1 comment:

  1. அற்புதமான கருத்துக்கள்... ஒவ்வொரு வரியும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...