குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 30, 2019

காளமேகத்தின் அம்பாள் உபாசனை

காளமேகப் புலவர் அந்தக் காலத்து ரஜனிகாந்தின் பாபா பட கரெக்டர்! இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் கரக்டெர் எப்படி ஒழுக்கமற்ற பாபாவிற்கு வரம் கிடைத்தது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார், இதைப் போல தான் காளமேகத்தாரின் பாட்டுகளைப் பார்த்தால் வசைபாடலும், நக்கலும், தாசிகளுடனான் தொடர்பு என்று ஏராளமாக!! இவர் எப்படிப்பட்டவர் என்று கேள்விக்கு உள்ளாக்கும் படியானவர்!

இத்தனைக்கும் அம்பாளின் பூரண அனுக்கிரகத்தினால் கவிபாடும் ஆற்றல் பெற்றவர். 

எப்படி என்றால் இவர் ஸ்ரீ ரங்கத்து வைணவர், இவரது காதலி மோகானங்கி திருவானைக்கா சைவர்! 

அக்காலத்தில் வைணவர்களும் சைவர்களும் வேற்று மதத்திற்கு ஒப்பானவர்கள்! வேற்று மதத்தவர்கள் மணம் புரிய சம்மதமில்லை! ஆகவே வரதன் என்ற காளமேகம் சிவதீக்ஷை பெற்று மோகனாங்கியைக் கரம்பிடிக்கிறார். சைவரான காளமேகப்புலவர் திருவானைக்கா கோயிலிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டார். 

இப்படி இருக்க அகிலாண்டேஸ்வரி அம்மையார் சன்னதியில் ஒரு உபாசகர் அம்பாளை நோக்கி தான் கவித்துவம் பெறவேண்டும் என்று தீவிரமாக உபாசனை செய்து வந்தார். ஒரு நாள் மோகனாங்கி தான் வரும் வரை இவரை அம்மன் சன்னதியில் காத்திருக்கும் படி கூற இவரும் அங்கு சென்று பிரகாரத்தில் தூங்கிவிட்டார். இரவாகி விட்டது, மற்றொரு புறத்தில் உபாசகர் தனது தீவிர தவத்தை செய்துக் கொண்டிருக்க அம்பிகை பெண்வடிவத்தில் தனது வாய் நிறைய தாம்பூலத்தை குதப்பிக்கொண்டு உபாசகர் அருகில் வந்து வாயைத் திற எனது தாம்பூல எச்சிலை துப்பி உனக்கு கவித்துவம் தருகிறேன் என்று கூறினாள்.

உபாசகரோ தீவிர ஒழுக்க சீலர், பாபா படத்தில் வரும் டெல்லி கணேஷ் மாதிரி, ஆறு நேரம் குளித்து மூன்று நேரம் பூஜை செய்து அம்பாளைப் பூஜிப்பவர். அவரது ஒழுக்க மனதிற்கு தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருப்பவள் அம்பாள் என்று நம்பாமல் எவளோ தனது தவத்தைக் கெடுக்க வந்த தாசி என்று அவளை விரட்டி விட்டார். அருள்புரிய வந்த அம்பாளோ அருகில் மோகனாங்கி மேல் காதல் கொண்டு காத்திருக்கும் வரதனாரைத் தட்டி வாயைத் திற என்று கூற இவரோ தன் காதலி மோகனாங்கி தான் எழுப்புகிறாள் என்று அரைத் தூக்கத்தில் வாயைத் திறக்க அம்பாள் தனது தாம்பூல எச்சிலை துப்பிவிட்டு சென்றுவிட்டாள்! 

மறு நாள் காலையில் எழுந்த வரதனார் எல்லாவிதக் கவியும் பாடும் காளமேகம் ஆனார்!

தீவிர ஒழுக்கத்துடன் அம்பாளை உபாசித்த தவத்தின் பலன் ஒழுக்கமே அற்று தன் காதலியே கதி என்று கிடைத்த வரதரிற்கு கிடைத்தது! 

அம்பாளை கல்லாக கண்ட உபாசகரிற்கு நேரில் வந்தவளை அறிந்துக் கொள்ள முடியவில்லை! தன் காதலியே உலகம் என்று இருந்த வரதனாருக்கும் அம்பாளைத் தெரியவில்லை! ஆனால் வரதனாருக்கு தனது காதலி மேல் காட்டிய அன்பு அம்பாளின் அருளைப் பெற துணையானது! 

பிரபஞ்சத்தின் அருளும் ஆற்றலும் திறந்த மனதுடன் அன்புடையாருக்கே திறக்குமன்றி தீவிர ஒழுக்கம் மட்டும் இருந்துக் கொண்டு எல்லோரையும் அம்பாளாக பார்க்கும் மனப் பண்பு இல்லார்க்கு இல்லை என்பதற்கு காளமேகத்தாரின் கதை ஒரு நீதி!

நாம் எவ்வளவு முயன்றாலும் அவள் அருள் மட்டுமே சித்திக்கு வழி என்பதும், ஆணவம் உள்ள மனம் அவள் அருள் சுரந்தாலும் ஏற்கமாட்டாது என்பதும், ஆணவமற்று திறந்த மனமுடையாருக்கு அவள் அருள் சுரப்பதில் நிபந்தனை இல்லை என்பதும் காளமேகத்தாரின் கதை சொல்லும் தத்துவம்! 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...