குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 04, 2019

மதங்களும் இன நல்லிணக்கங்களும்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது எப்போது சாத்தியம்! அவரவர் தமது நிலையில் திருப்தியும், மற்ற இனத்தவர்களின் கலாச்சார, சமூகப் பழக்க வழக்கங்களை மதித்து அதனை ஊடறுத்து தமது கலாச்சாரம் பண்பாட்டினை திணித்து மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யாமல் இருக்கும் போது மட்டும் தான். 

ஆனால் பொருளாதாரம், பணம் என்று மட்டுமே உந்தப்பட்ட சமூகம் இந்த விழுமியங்களை மதிக்காது. இன்றைய உலகை பணம் ஆளுகிறது. ஆக மதம், இனம், கலாச்சாரம் என்பது அதற்கு கீழ்ப்பட்ட மதிப்பில் தான் இருக்கிறது என்பது தான் யதார்த்தம். 

இலங்கையைப் பொறுத்த வகையில் பௌத்தம் இந்தப் பூமியில் வந்திறங்கிய நாள் முதல், தேவநம்பிய தீசன் காலம் தொட்டு அரசனால் பாதுக்காக்கப்பட வேண்டிய, அரசனின் முதற் கடமைகளில் ஒன்றாக வரலாற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

வரலாற்றில் மதம் அதிகார வர்க்கத்தின் கைகளுக்குள் செல்லும் போது அது உண்மை பயன்பாட்டினை இழந்து அரசியலுக்காகவே பயன்படுத்தப்படும். 

அடிப்படையில் ஒவ்வொரு மதம் என்று சொல்லப்படுகிற கட்டமைப்பும் ஆரம்பத்தில் ஒருவன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்தி தனது சமூகத்துடனும், உலகத்துடனும் ஒத்திசைந்து வாழ்வதற்காகத் தான் அனுபூதி பெற்ற பெரியவர்களால் நெறிப்படுத்தப்படுகிறது. பின்னர் மனித மனத்தில் ஆழத்தில் இருக்கும் அதிகாரம், ஆசை, ஆணவம் போன்ற அறியாமைகளால் அரசியலாக்கப்படும் போது அவை உண்மை நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து மனிதரிடையே பிளவு உண்டாக்கும் ஸ்தாபனங்களாக மாறுகிறது. 

ஆக மதங்களின் கோட்பாடுகள் புலமைத்துவத்தை நிறுவும் அமைப்புகளாக இல்லாமல் மக்களை பண்படுத்தும் விழுமியத்தை உண்டாக்கும் நிலையங்களாக மதஸ்தாபனம் இருந்தால் மட்டுமே சமூகத்திற்கு மதங்களால் பயன். இல்லாவிட்டால் அவை வெறும் அரசியல் ஸ்தாபனங்களே!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...